courtesy: Dr.Sengai Podhuvan
https://vaiyan.blogspot.com/2015/11/blog-post_53.html
இரட்டைப்புலவர் தமிழ்மாறனிடம் சென்றது
![]() |
இராமனும் இலக்குவனும் |
தமிழ்மாறன் என்னும் பாண்டிய மன்னனும் அவனது தம்பியும் வீரத்திலும் கொடையிலும் சிறந்தவர்களாக விளங்கினர்.
இரட்டையர் இருவரும் அவர்களைக் காணச் சென்றனர்.
கவி என்னும் சொல் கவிஞரையும் குரங்கையும் குறிக்கும்.
இந்தச் சொல்லை வைத்துக்கொண்டு மாறனின் அமைச்சன் மன்னர் நல்கும் கொடையைத் தடுக்க முயன்று விளையாடினான்.
பாடலாகப் பாடினான்.
பழமையான கவிப்புலவர்களே! அற்பக் குரங்குகளே! மராமரத்தை விடுவிட்டு இங்கே ஏன் வந்தீர்கள் – என்றான். குரங்கினத் தலைவன் வாலி ஏழு மராமரங்களைக் காவல்மரமாகக் கொண்டவன். மராமரத்தை விட்டுவிட்டுக் குரங்குகள் வந்தது என்ன காரணமோ – என்றான்.
''புராதன மான கவிப் புலவீர் இந்தப் புன்குரங்கு
மராமரம் விட்டிங்கு வந்ததென் னோ
தமிழ்மாறனையும் அவன் தம்பியையும் இராமனும் இலக்குவனும் என்று எண்ணிக்கொண்டு வந்தோம் என்று இரட்டையருள் ஒருவர் பாடினார்.
அந்தப் பாடல்
கட்டளைக் கலித்துறை
''புராதன மான கவிப்புல வீரிந்தப் புன்குரங்கு
மராமரம் விட்டிங்கு வந்ததென் னோவந்த வாறுசொல்வேன்
தராதல மன்னுந் தமிழ்மா றனையுந்தன் றம்பியையும்
இராகவ னென்று மிலக்குவ னென்றும்வந் தெய்தியதே''
No comments:
Post a Comment