Wednesday, May 26, 2021

Narasimha avatar & various narasimha temples with phone numbers

**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
       *தஸாவதாரம்* 

          *ஸ்ரீநரசிம்மாவதாரம்* 

 *பகுதி 01* 

       மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். தேவர்கள் மற்றும் அசுரர்கள் பற்றிய கதைகளை நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அசுரர்கள் மனித குலத்தையும், தேவர்களையும் அவ்வப்போது துன்புறுத்துவதும், பாதிக்கப்பட்டவர்களை காக்கும் நோக்கத்தோடு இறைவன் மற்றும் இறைவி ஒரு அவதாரம் எடுத்து காப்பதும் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அதுபோல் ஒரு அரக்கன் தன் சொந்த மகனை அழிக்க நினைத்து அவனே அழிந்த ஒரு சரித்திரத்தை நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.
 நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார்.

மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல. அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதார மாகும். இதன் காரணமாக மற்ற அவதாரங் களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும். எனவேதான் "நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை" என்பார்கள்.

நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாறு வருமாறு:-

சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதாலும், துவாரபாலகர்கள் ஜெய, விஜயர்களின் சாபத்தின் படி  அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந் தான். 

 *இந்திரனின் செயல்* 

இதற்கிடையில், ஹிரண்யகசிபு தன் மக்களை வழிநடத்தவில்லை என்பதை அறிந்து கொண்டார் இந்திர பகவான். இந்த தருணத்தைப் பயன்படுத்தி, அசுரர்களை முற்றிலும் அழிக்க எண்ணினார் அவர். இதனால் தேவர்களுக்கு ஒருபோதும் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்று நினைத்து அசுரர்களை தாக்கினர் இந்திர பகவான். அசுரர்கள் போரில் தோல்வியைத் தழுவினர். வெற்றியின் மமதையால், ஹிரண்யகசிபுவின் மனைவி கயாதுவைத் தூக்கிச் செல்ல துணிந்தார் இந்திர பகவான். ஆனால் பக்திமானாகிய அவன் மனைவியை நாரத முனிவர் காப்பாற்றினார். அவளுடைய கற்பைக் காக்கவும், வயிற்றில் இருக்கும் அவள் குழந்தையை பாதுகாக்கவும் தன்னுடைய ஆசிரமத்திற்கு அவளை அழைத்துச் சென்றார் நாரதர்.

கயாது ஒரு அதிபுத்திசாலியாக இருப்பதை அறிந்தார் நாரத முனிவர். எதையும் உடனுடக்குடன் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் அவளுக்கு இருந்தது. மாலை வேளைகளில் நாரத முனிவர் ஓய்வெடுக்கும் சமயத்தில், கயாதுவிற்கு பகவான் விஷ்ணுவின் கதைகளைக் கூறினார். இவற்றைக் கேள்விப்பட்ட கயாது , விரைவில் பகவான் விஷ்ணு மீது ஒரு இணைப்பை உணர்ந்தாள். அவள் கருவில் இருக்கும் அந்தக் குழந்தையும் இந்த கதைகளைக் கேட்டபடி இருந்தது. அதனால் அந்தக் குழந்தையும் பகவான் விஷ்ணு மீது தீராத பக்தி கொண்டது.

 *பிரம்மாவின் வரம்* 

இதற்கிடையில் சொர்க்கத்தில் திடீரென்று காற்று அனலாக வீசத் தொடங்கியது. தேவர்கள் மூச்சு விடவும் சிரமப்பட்டனர். என்ன நடக்கிறது என்று அனைவரும் வியந்தனர். இதற்கான காரணம் என்னவென்று தேடித் பார்க்கையில், ஹிரண்யகசிபுவின் தவம் அந்த அளவிற்கு சக்தி மிகுந்ததாக மாறி, சொர்க்கத்தின் காற்றை சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அதனால் ஹிரண்யகசிபுவை சந்திக்க பிரம்ம தேவர் சம்மதித்து, அவனைக் காண பூலோகம் புறப்பட்டார்.

பிரம்ம தேவர் பூலோகத்தில் ஹிரண்யகசிபுவை பார்த்து அதிர்ந்துவிட்டார். அவனுடைய ஆழ்ந்த தவத்தின் காரணமாக அவன் மேல் கொடிகள் மற்றும் செடிகள் படர்ந்து இருந்தன. ஹிரண்யகசிபுவின் தவத்தை மெச்சிய பிரம்ம தேவர் அவருடைய கமண்டலத்தில் இருந்து சிறிது நீரை எடுத்து அவன் மீது தெளித்தார். அசுர அரசன் ஹிரண்யகசிபு தன்னுடைய சுயநினைவிற்கு வந்து பிரம்ம தேவர் அவன் கண்முன் நிற்பதை உணர்ந்தான். பிரம்ம தேவர் அவனிடம் விரும்பும் வரத்தை கேட்கச் சொன்னார். உடனடியாக ஹிரண்யகசிபு தனக்கு சாகாவரம் வேண்டும் என்று கேட்டான். ஆனால் அது இயற்கையுடன் தொடர்பு கொண்ட ஒரு வரம் என்பதால் அதனை அளிக்க பிரம்ம தேவர் மறுத்து விட்டார். அந்த புத்திசாலி அரக்கன் பின்வருமாறு ஒரு வரம் கேட்டான்

 *ஜெய் ஸ்ரீநரசிம்மா....* 

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீநரசிம்மாவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
       *தஸாவதாரம்* 

          *ஸ்ரீநரசிம்மாவதாரம்* 

 *பகுதி 02* 

        இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ, எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது.

எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.

 *பிரஹலாதனின் பிறப்பு* 

அந்த நேரம் கயாது ஒரு ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு பிரஹலாதன் என்று பெயரிடப்பட்டது. பிரஹலாதன் வளர்ந்து பெரியவனாகிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஹிரண்யகசிபு இன்னும் இன்னும் அதிக சக்திசாளியாகி, மக்களுக்கும் தேவர்களுக்கும் பல இன்னல்களைக் கொடுத்தவாறு இருந்தான். ஆனால், பிரஹலாதன் தன் தந்தையிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தான். அவன் தந்தை போல், மற்ற உயிரினங்களை துன்பப்படுத்தும் குணம் அவனுக்கு இல்லை. பகவான் விஷ்ணு மீத அதீத பக்தியுடன் விளங்கினான். அவரை வழிபட அதிகம் விரும்பினான். பிரஹலாதன் மற்றவர்களிடம் மென்மையாகவும் அதிக அன்பு செலுத்துபவனாகவும் இருந்தான். ஹிரன்யகசிபுவைப் பார்த்து மக்கள் அனைவரும் அஞ்சும் அதே வேளையில் பிரஹலாதனை அனைவரும் மிகவும் விரும்பினார்கள்.

ஒரு முறை ஹிரண்யகசிபு தன் மகன் பிரஹலாதனை தன்னுடைய மடியில் வந்து அமருமாறு கூறினான். ஹிரண்யகசிபு தன் மகனின் தலைமுடியை வாஞ்சையுடன் கோதிவிட்டு, "நீ ஒரு அருமையான புதல்வன் , உன்னுடைய பள்ளி வாழ்க்கை எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது? என்று வினவினான்.

தந்தையே, என்று அன்புடன் அழைத்த பிரஹலாதன், கருமை நிறக் கடவுளான பகவான் விஷ்ணு, மூவுலகையும் ஆட்சி செய்யும் ஒரே கடவுள் ஆவார். அவரிடம் நாம் பக்தி கொண்டிருந்தால், அவர் எப்போதும் நம்முடன் இருப்பார் " என்று கூறினான்.

இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான்.

பிரகலாதனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் ஹரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றச் சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.

ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்து செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்றும் செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.

இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்டான். ஏனெனில் அந்த தூண், இரணியனே பார்த்து, பார்த்து கட்டிய தூணாகும். பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான்.

இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.

இரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை. சிவன் உட்பட பிற தெய்வங்களால் அவரைச் சாந்தமடையச் செய்ய முடியவில்லை. அதனால் அவர்கள் விஷ்ணுவின் தேவியான லட்சுமியை நாடினர். ஆனால் லட்சுமியாலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்லை.

பின் பிரம்மாவின் ஆலோசனைப்படி பிரகலாதனை நரசிம்மரின் முன் நிறுத்தினர். அவனது அதீதமான பக்தியாலும் வேண்டுதலாலும் நரசிம்மரின் சினம் அடங்கியது. அப்போது லட்சுமியும், நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதன் பிறகு அவர் பிரகலாதனுக்கு மன்னனாக முடிச்சூட்டி அவனை வாழ்த்தினார்.

நரசிம்மருக்கு யோக, உக்ர, இரணிய நரசிம்மர் போன்ற பல்வேறு உருவங்கள் புகழ்ந்து கூறப்படுகின்றன. அதில் மிகமிக முக்கியமானது லட்சுமி நரசிம்மர் வடிவமாகும். லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தான் இந்த பிறவியானது அனைத்து வகையிலும் பூர்த்தியாகும். இனி பகவான் ஸ்ரீநரசிம்மர் வீற்றிருக்கும் தலங்களை காணலாம்.

 *ஜெய் ஸ்ரீநரசிம்மா....* 

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீநரசிம்மாவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
       *தஸாவதாரம்* 

          *ஸ்ரீநரசிம்மாவதாரம்* 

 *பகுதி 02* 

        இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ, எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது.

எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.

 *பிரஹலாதனின் பிறப்பு* 

அந்த நேரம் கயாது ஒரு ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு பிரஹலாதன் என்று பெயரிடப்பட்டது. பிரஹலாதன் வளர்ந்து பெரியவனாகிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஹிரண்யகசிபு இன்னும் இன்னும் அதிக சக்திசாளியாகி, மக்களுக்கும் தேவர்களுக்கும் பல இன்னல்களைக் கொடுத்தவாறு இருந்தான். ஆனால், பிரஹலாதன் தன் தந்தையிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தான். அவன் தந்தை போல், மற்ற உயிரினங்களை துன்பப்படுத்தும் குணம் அவனுக்கு இல்லை. பகவான் விஷ்ணு மீத அதீத பக்தியுடன் விளங்கினான். அவரை வழிபட அதிகம் விரும்பினான். பிரஹலாதன் மற்றவர்களிடம் மென்மையாகவும் அதிக அன்பு செலுத்துபவனாகவும் இருந்தான். ஹிரன்யகசிபுவைப் பார்த்து மக்கள் அனைவரும் அஞ்சும் அதே வேளையில் பிரஹலாதனை அனைவரும் மிகவும் விரும்பினார்கள்.

ஒரு முறை ஹிரண்யகசிபு தன் மகன் பிரஹலாதனை தன்னுடைய மடியில் வந்து அமருமாறு கூறினான். ஹிரண்யகசிபு தன் மகனின் தலைமுடியை வாஞ்சையுடன் கோதிவிட்டு, "நீ ஒரு அருமையான புதல்வன் , உன்னுடைய பள்ளி வாழ்க்கை எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது? என்று வினவினான்.

தந்தையே, என்று அன்புடன் அழைத்த பிரஹலாதன், கருமை நிறக் கடவுளான பகவான் விஷ்ணு, மூவுலகையும் ஆட்சி செய்யும் ஒரே கடவுள் ஆவார். அவரிடம் நாம் பக்தி கொண்டிருந்தால், அவர் எப்போதும் நம்முடன் இருப்பார் " என்று கூறினான்.

இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான்.

பிரகலாதனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் ஹரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றச் சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.

ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்து செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்றும் செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.

இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்டான். ஏனெனில் அந்த தூண், இரணியனே பார்த்து, பார்த்து கட்டிய தூணாகும். பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான்.

இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.

இரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை. சிவன் உட்பட பிற தெய்வங்களால் அவரைச் சாந்தமடையச் செய்ய முடியவில்லை. அதனால் அவர்கள் விஷ்ணுவின் தேவியான லட்சுமியை நாடினர். ஆனால் லட்சுமியாலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்லை.

பின் பிரம்மாவின் ஆலோசனைப்படி பிரகலாதனை நரசிம்மரின் முன் நிறுத்தினர். அவனது அதீதமான பக்தியாலும் வேண்டுதலாலும் நரசிம்மரின் சினம் அடங்கியது. அப்போது லட்சுமியும், நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதன் பிறகு அவர் பிரகலாதனுக்கு மன்னனாக முடிச்சூட்டி அவனை வாழ்த்தினார்.

நரசிம்மருக்கு யோக, உக்ர, இரணிய நரசிம்மர் போன்ற பல்வேறு உருவங்கள் புகழ்ந்து கூறப்படுகின்றன. அதில் மிகமிக முக்கியமானது லட்சுமி நரசிம்மர் வடிவமாகும். லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தான் இந்த பிறவியானது அனைத்து வகையிலும் பூர்த்தியாகும். இனி பகவான் ஸ்ரீநரசிம்மர் வீற்றிருக்கும் தலங்களை காணலாம்.

 *ஜெய் ஸ்ரீநரசிம்மா....* 

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீநரசிம்மாவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
       *தஸாவதாரம்* 

          *ஸ்ரீநரசிம்மாவதாரம்* 

 *பகுதி 03*

தமிழகத்தில் 8 இடங்களில் காட்சி தந்த நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 8 இடங்களில் காட்சி தந்த நரசிம்மர் கோவில்கள்

இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.

இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.

பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரி கோவில் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த 3 தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நல்லது என்பார்கள். இவையன்றி இன்னும் பல தலங்களில் நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார். நரசிம்ம ஜெயந்தி நாளில், தன் பக்தனுக்காக நொடிப் பொழுதில் தோன்றி காத்து ரட்சித்த அந்த உலக நாயகனை வணங்கிப் பேறு பெறுவோம்.

பூவரசங்குப்பம் :

இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். தட்சிண அகோபிலம் என்ற புராணப்பெயரைக் கொண்டது.
தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர் லட்சுமிநரசிம்மர், உற்சவர் பிரகலாதவரதன், தாயார் அமிர்தவல்லி.

பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் விதமாக பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல, தாயாரின் திருஉருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் சுவாதி தினத்தில் நரசிம்மர் ஜெயந்தி தின விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

கோவில் அலைபேசி எண்: 95851 78444.

சிங்(க)கிரிக்குடி :

பிரகலாதன் வேண்டு கோளுக்கிணங்கி, 16 கரங் களுடன் உக்கிரமூர்த்தியாக காட்சியளித்த தலம் இது. ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம், 5 நிலை ராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கி உள்ளது.

இரண்யகசிபுவை நரசிம்மர் மேற்கு நோக்கி நின்று வதம் செய்ததால், இந்தக் கோவிலும் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. நரசிம்மரின் இடதுபுறம் இரண்ய கசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள், பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். கருவறையின் உள்ளே வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோகநரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது அரிதான காட்சியாகும்.

கடலூர்-புதுச்சேரி சாலையில் தவளகுப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் மடுகரை செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர உள்ளே இருக்கிறது.

கோவில் தொலைபேசி எண்: 04142-224328.

பரிக்கல் :

இதுவும் பிரகலாதனுக்காக நரசிம்மர் காட்சி கொடுத்த தலம் தான். நரசிம்மர் மீது மாறாத பக்திக்கொண்ட விஜயராஜன் என்னும் மன்னன் இங்கு ஆலயம் எழுப்பியுள்ளான். மேலும் ஆலயத்தில் தன் குரு வாமதேவ மகரிஷி உதவியுடன் மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தான்.

யாகத்தில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு தேச அரசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். இந்த நேரத்தில் பரிகாலன் என்னும் அசுரன், வேள்வியை தடுத்து நிறுத்த அங்கு வந்தான். அசுரன் வருவதை அறிந்த குலகுரு, மன்னனை அருகிலுள்ள புதரில் ஒளிந்துக் கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் அசுரன் கோடரியால் மன்னனின் தலையை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், 'உக்கிர நரசிம்மராக' தோன்றி, பரிகாலனை அழித்து மன்னனுக்கு காட்சியளித்தார்.

சென்னை--திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை - விழுப்புரம் நடுவில் நெடுஞ்சாலையிலிருந்து உள்ளே 5கிமீ தொலைவில் உள்ளது.  இந்தக் கோவில்.

இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் வருகிற 17-ந் தேதி நரசிம்மர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையட்டி காலை 6 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படுகிறது. 9 மணிக்கு சாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
10 மணிக்கு சாமிக்கு வைரகிரீடம் சூட்டப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.

மதியம் 1 மணிக்கு நடை சாற்றப்படும். மாலை 4 மணிக்கு மீண்டும் கோவில்நடை திறக்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு சாமி சிம்ம வாகனத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10 மணிக்கு வீதிஉலா நிறைவு பெறுகிறது.

பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் அலைபேசி எண்: 96776 42002.

சோளிங்கர் :

சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி, நரசிம்மர், யோக நிலையில் காட்சியளித்த தலம் இது. மூலவர் யோக நரசிம்மர், உற்சவர் பக்தவச்சலம் சுதாவல்லி, தாயார் அமிர்தவல்லி.

விசுவாமித்திரர் இங்குள்ள நரசிம்மரை வழிபட்டு பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். கடிகாசலம் எனப்படும், 500 அடி உயரமும், 1305 படிக்கட்டுகளும் கொண்ட பெரிய மலையில் மூலவர் அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு மலையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாகவும், உற்சவருக்கு தனியாகவும் கோவில் இருப்பது இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில் 406 படிக்கற்களைக் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.

சிங்கப்பெருமாள் கோவில் :

ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இவர் 'பாடலாத்ரி நரசிம்மர்' என்று அழைக்கப்படுகிறார். (பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை) என்று பொருள். சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடதுகாலை மடித்துவைத்தும், வலதுகாலை தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் வலதுகாலை மடித்துவைத்தும், இடதுகாலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 

நாமக்கல் :

திருமகள், தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை காண வேண்டி, தவம் செய்து தரிசனம் பெற்ற தலம் இது. நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து சாளக்கிராம கல்லை (திருமாலின் அனுக்கிரகம் பெற்றது) எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார். இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார் அனுமன்.

கையிலிருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைக்கமுடியாத நிலையில், என்ன செய்வதென யோசித்தவருக்கு தீர்த்தக் கரையில் தவம் செய்த திருமகள் தெரிந்தார். மகிழ்ச்சியுடன் அவரிடம் அந்த சாளக்கிராமத்தைத் தந்து விட்டு நீராடச் சென்றார். அதை கையில் வாங்கிய திருமகள் குறித்த நேரத்திற்குள் வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினார்.

அதுபோலவே அனுமன் வராதிருக்க திருமகள் அக்கல்லை கீழே வைத்தார். அது பெரியதாக விசுவரூபம் பெற்று பெருமலையானது. அதிலிருந்து நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் காட்சியளித்தார். சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

கோவில் தொடர்பு எண்:04286-233999

சிந்தலவாடி :

ஒரு பக்தனின் கனவில் தோன்றிய நரசிம்மர், தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூறி, அந்த பக்தனுக்கு காட்சியளித்த தலம் இது. ஹரியாச்சார் என்பவர் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் வசித்துவந்தார். அவர் கனவில் ஒருநாள் நரசிம்மர் தோன்றி, தான் கருப்பத்தூர் காவிரிக்கரையில் ஒரு கல்லாக கவிழ்ந்து கிடப்பதாகவும், தன்மீது ஒரு சலவையாளர் அனுதினமும் துணி துவைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இதுகேட்டு வேதனையுற்ற ஹரியாச்சார் கருப்பத்தூர் சென்றார். இதேபோல் சலவையாளரின் கனவிலும் தோன்றி சொல்லியிருக்கவே, இருவரும் சேர்ந்து நரசிம்மரை கண்டுபிடித்து, அதை தூக்கிக் கொண்டு திருக்காம்புலியூர் புறப்பட்டனர். பாரம் அதிகமாக இருக்கவே திருக்காம்புலியூருக்கும், கருப்பத்தூருக்கும் இடைபட்ட சிந்தலவாடியில் இருந்த வெங்கட்ரமண ஆலயத்தில் இறக்கி வைத்தனர். பகவான் அங்கேயே பிரதிஷ்டை ஆனதுடன், ஹரியாச்சாருக்கும், சலவையாளருக்கும் காட்சித் தந்தார்.

திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

அந்திலி :

நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்கு காட்சி தந்த திருத்தலம் இது. பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் தன்னிடம் சொல்லாமல் பகவான் புறப்பட்டுச் சென்றதை அறிந்த கருடன், மிகுந்த வேதனை அடைந்தார். பகவானைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார்.
எங்குச் சென்றாலும் தன்மீது ஏறிச்செல்லும் பகவான், தன்னை மறந்துவிட்டுப் போனதை எண்ணி வருந்தியவர் இந்த தலம் இருக்கும் இடத்திற்கு வந்து தவம் இருந்தார். இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர். கருடனிடம் முன்பாக சென்றார் நாராயணர். அப்போது தனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கருடன் வேண்ட, அவ்வாறே காட்சியளித்தார்.

திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூரை அடுத்திருக்கிறது அந்திலிதிருத்தலம்.

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீநரசிம்மாவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
       *தஸாவதாரம்* 

          *ஸ்ரீநரசிம்மாவதாரம்* 

 *பகுதி 05* 

 *கட்டவாக்கம்* ஸ்ரீவிஸ்வரூப லக்ஷ்மிநரசிம்ம ஸ்வாமி

 *பெருமாளின் அமைப்பு* 

  ஆதாரபீடம், கூர்ம்பீடம், பத்ம்பீடம், அநந்தபீடம், யோகபீடம், ஆகிய ஐந்து  பீணங்களின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கும் பெருமாளுக்கு மேல் இரண்டு கரங்களில் சக்கரமும் வில் அம்பும் தாங்கி மற்றும் அபய வரத ஹஸ்தத்துடன் சதுர்புஜத்துடன் குளிரக் அருளும் பாணியானது வந்தாரை வாழவைக்கும் பெருமாள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

  மகாலட்சுமியுடன் கூடிய இந்த நரசிம்மருக்கு திரிநேத்ரம் (மூன்று கண்கள்) அமைந்துள்ளது. "அருள் விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்ணும் போதாமல் முக்கண்ணனாக தரிசனம் தருகிறார்". மடியில் வீற்றிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய ஹஸ்தத்துடன் மிகவும் அழகான தோற்றத்துடன் அருளும் தோற்றம், திவ்ய தம்பதிகள் இவர்கள் தான் என்பது திண்ணம்.

  இங்கு அருளும் நரசிம்மனுக்கு வஜ்ரதம்ஷ்ட்ரங்கள் (பற்கள்) 12 அமைந்திருக்கின்றன. இது 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 இராசிகளைக் குறிக்கும். திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்கிரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன் வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் மந்தன் ஆக நவகிரகங்களும் பெருமாளுடைய திருமுக மண்டலத்தில் ஐக்கியமாகி இருப்பதால் இது ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

     பெருமாளின் அமைப்பு ஆறு அவதாரங்களையும் நினைவுபடுத்தும். கூர்மம், வராகம், பரசுராம, ராம, கிருஷ்ணாவதாரத்தையும் நினைவுபடுத்துகிறது. மேலும் தாங்கியுள்ள ஆயுதங்களும் ஜய விஜயர்களுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவர்களை வதம் பண்ண பெருமாள் 3 அவதாரங்களில் உபயோகித்த ஆயுதங்கள் யாவற்றையும் இந்த நரசிம்மனே தாங்கியிருப்பது விஷேச அம்சம். (வஜ்ர நகம், வஜ்ரதம்ஷ்ட்ரதம் (பல்), சக்கரம், வில், அம்பு)

தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் வாலாஜாபாத்- சுங்குவார் சத்திரம் செல்லும் வழியில் உள்ளது. 044 27290805,  9443381432.

 *திருவதிகை, பண்ருட்டி* 

     பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கனை தரிசித்துள்ளோம். வக்ராசுரனை சம்ஹாரம் செய்த நரசிம்மமூர்த்தியும் களைத்துப் போய் சயன கோலத்தில் காட்சி அளிப்பதை திருவதிகை (பண்ருட்டி அருகில்) சரநாராயண திருத்தலத்தில் தரிசிக்கலாம். ஸ்ரீ நரசிம்மரின் சயனக் கோலக்காட்சியை இக்கோயிலில் மட்டுமே காணலாம். திருமாலின் திவ்வியத்திருத்தலங்களில் இக்கோயிலில் தான் நரசிம்மர் சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒர் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.

எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர் திருவஹீந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.பிரபஞ்சத்தை ஆளும் மும்மூர்த்திகளும் இந்த அகிலத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் சேர்ந்து போரிட்டு தர்மத்தை நிலைநாட்டுவார்கள். அப்படி மும்மூர்த்திகளும் ஒருங்கிணைந்து நிகழ்த்தியதுதான் திரிபுர சம்ஹாரம். அந்த சம்பவம் நிகழ்ந்த தலமே திருவதிகை. அட்டவீரட்டான ஈசனைத் தவிர பெருமாளுக்கும் சர நாராயணப் பெருமாள் ஆலயம் ஒன்றும் ஸ்ரீரங்கநாதர் கோயிலும் உள்ளது. 

     இந்த திருக்கோயிலில் பெருமாளுக்கு புரட்டாசி மாதம் நடைபெறும் ஏகதின பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அப்போது ஒரேநாளில் பலவகை வாகனங்களில் பெருமாள் சேவை சாதிப்பார். காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். பிறகு 8 மணிக்கு அம்ச வாகனம், 9 மணிக்கு சிம்ம வாகனம், 10 மணிக்கு அனுமந்த வாகனம், 11 மணிக்கு சேஷ வாகனம், மதியம் 12 மணிக்கு கருட வாகனம் மாலை 3 மணிக்கு யானை வாகனம் என்று ஊர்வலம் வரும் பெருமாள், 4 மணிக்கு மஞ்சள் பொடியில் சூர்ணோற்சவம் காண்கிறார். மீண்டும் மாலை 5 மணிக்கு குதிரை வாகனத்திலும், 6.30 மணிக்கு திருத்தேரிலும் சேவை சாதிப்பார். 7.30 மணிக்கு கொடி இறக்கம் நடைபெறும். ஒரேநாளில் சுவாமியை இப்படி பல வாகனங்களில் தரிசிக்கும் அனுபவம் அற்புதமானது.  

இக்கோயிலின் மற்றொரு பிரதான சிறப்பம்சம் இங்கு எழுந்தருளியுள்ள சயன நரசிம்மர்தான். தெற்கு நோக்கி சயனித்துள்ளார் இவர். தாயாரும் உடன் எழுந்தருளியுள்ளதால் இந்த நிலையை போக சயனம் என்கின்றனர், ஆன்றோர்கள். திருவக்கரை வக்ராசுரனை சம்ஹாரம் செய்தபிறகு ஓய்வு எடுக்கும் கோலமாக இப்படி சயனித்துள்ளார் என்றும் ஓர் கருத்து நிலவுகிறது. வேறெந்த தலத்திலும் இப்படி நரசிம்மர் சயனக் கோலத்தில் கிடந்து அருள்வதை காண முடியாது என்கிறார்கள். நரசிம்மர் வேண்டியதை உடனே அருளும் வரப் பிரசாதி. அதிலும் போக சயனத்தில் இருப்பதால் இகலோக சுகங்கள் அனைத்தையும் வேண்டுபவர்களுக்கு உடனே அருள்கிறார் என்கின்றனர்.

பாற்கடலில் மகாவிஷ்ணுவாக பள்ளி கொண்டிருந்தவன், நரசிம்ம உருவில் பள்ளி கொள்ள மாட்டானோ என்று பக்தர்களின் ஆசைக்காக இங்கு சயன கோலத்தில் நரசிம்மர் பள்ளி கொண்டிருக்கிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. சங்கு சக்கரக்கங்களோடு சயனிப்பதை பார்க்கும்போது வியப்பும், அந்த சந்நதியில் நிலவும் சாந்நித்தியமும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன. கோயில் கோபுரத்தில் தேவி, பூதேவி சமேதராக சிங்கப் பெருமாள் காட்சி தருவதைப் பார்க்கும்போது நரசிம்ம ஸ்வாமிக்கான தனிப் பெரும் புகழ் இத்தலத்திற்கு உள்ளது புரிகிறது. பிரதி மாதம் பிரதோஷ காலத்தில் நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மனஅமைதிக்காக நரசிம்மர் இங்கு சயனகோலத்தில் இருப்பதால், இங்கு தரிசித்தவர்க்கு மன அமைதி உண்டாகும். விசேஷமாக பானக ஆராதனம் நடக்கிறது.  சயன நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறுகிறது. இத்தலம், பண்ருட்டியிலிருந்து 5 கி.மீ. தூரத்திலும், கடலூரிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும், உள்ளது.

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீநரசிம்மாவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*

No comments:

Post a Comment