*மஹாளய பக்ஷம் 02-09-20 முதல் 17-09-20 வரை*
*मार्कण्डेयः*
*कन्यागते सवितरि दिनानि दश पञ्च च ।*
*पार्वणेनैव विधिना तत्र श्राद्धं विधीयते ।*
*கந்யாகதே ஸவிதரி திநாநி தஶ பஞ்ச ச |*
*பார்வணேநைவ விதிநா தத்ர ஶ்ராத்தம் விதீயதே ||*
மார்க்கண்டேயர்:- ஸூர்யன் கன்யா ராசியை அடைந்திருக்கும் பொழுது பதினைந்து நாட்களிலும் பார்வண
விதானமாக ஶ்ராத்தம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
*आषाढ्याः पश्चमेपक्षे कन्यासंस्थे दिवाकरे।*
*यो वै श्राद्धं नरः कुर्यादेकस्मिन्नपि वासरे।*
*तस्य संवत्सरं यावत् तृप्तास्स्युः पितरो ध्रुवम्*
*ஆஷாட்யா: பஞ்சமேபக்ஷே கந்யாஸம்ஸ்தே திவாகரே |*
*யோ வை ஶ்ராத்தம் நர: குர்யாதேகஸ்மிந்நபி வாஸரே |*
*தஸ்ய ஸம்வத்ஸரம் யாவத் த்ருப்தாஸ்யு: பிதரோ த்ருவம் ||*
ஆஷாட பூர்ணிமையிலிருந்து ஐந்தாவது பக்ஷத்தில் ஸுர்யன் கன்யாராசியில் இருக்கும் பொழுது, எந்த மனிதன் ஒரு
தினத்திலாவது ச்ராத்தத்தைச் செய்வானோ, அவனது பித்ருக்கள் ஒரு வர்ஷம் முடியும் வரையில் த்ருப்தியை அடைந்தவர்களாக ஆகின்றனர்.
முடியாதவர்கள் பக்ஷத்தில் முக்கியமான மஹாபரணி, மத்யாஷ்டமி, மஹாவ்யதீபாதம் கஜச்சாயா போன்ற புண்ணிய தினங்களில் ஸக்ருன் (ஒருநாள் மட்டும் செய்யும்) மஹாளய ஶ்ராதத்தை செய்ய முயற்சிக்கலாம்.
ஸ்ரீக்ருஷ்ண ஶர்மா வேலூர் 9566649716
*வைத்யநாத தீக்ஷிதீயம்*
No comments:
Post a Comment