Courtesy:Smt.Padma Gopal
(என்ன விந்தையோ!...)
பஞ்சுப்பொதி ஒன்றென்னைப்
பாய்ந்தணைத்துக் கொள்ளுது!
நெஞ்சுக்குள்ளே நிறையுமின்பம்
நினைவழிக்கச் செய்யுது!
பிஞ்சுவிரலின் ஸ்பரிசமென்னுள்
பனியின் சிலிர்ப்பைக் கூட்டுது!
அஞ்சுகத்தின் அணுக்கமெந்தன்
அணுவையெல்லாம் மீட்டுது!
குஞ்சுப்பதம் தீண்டும்போது
கோடி இன்பம் பெருகுது!
மஞ்சு பொழியும் மழையாக
மனமும் இங்கே உருகுது!
தஞ்சமென்று மடிஏறி
துஞ்சுகின்ற தங்கமே
மஞ்சமாக என்னைக் கொண்டு
மயக்கியதும் விந்தையே!
No comments:
Post a Comment