முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை, மூவா
மூவுலகம் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
அந்தணணை அந்தணர்தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தை திருத்தண்காவில்
வெஃகாவில் திருமாலைப் பாடக்கேட்டு
வளர்த்தனால் பயன் பெற்றேன் வருகவென்று
மடக்கிளியை கை கூப்பி வணங்கினாளே.
பொருள்: கிளி ஆபத்தில் உதவி செய்த திரு நாமங்களை சொல்லிற்றாம். இதனால் தலைவிக்கு மோகம் பெருகியது. நாம் முன்பு தெளிந்த காலத்தில் கற்பித்த திரு நாமங்களை சொல்லுவோம் என்று கிளி சொல்ல இவள் அதற்கு அஞ்சலி செய்து வணங்கினாள். வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்கிறாள்.
உதிக்கின்ற இளஞ்சூரியனைப் போன்றவன். திருக்குருக் குறுங்குடியில் கார் முகில் போல் விளங்குபவன். மூவுலகுக்கும் அப்பாற்பட்டு பரமபதத்தில் முதல்வனாய் எழுந்தருளியிருப்பவனும், அருமையான ஆரமுதைப் போன்றவனும் ஆவான். திருவரங்கத்தில் திருக்கண் வளரும் பரிசுத்தமானவன். வைதிகர்களின் உள்ளத்தை இருப்பிடமாகக் கொண்டவன். திருத்தண்காவில் விளக்கொளிப் பெருமாளாக சேவை சாதிப்பவன். மரகதம் போன்று குளிர்ந்து திருவெஃக்காவில் கண் வளர்ந்து அருள்பவன். திருமகள் கேள்வன். இத்தனை நாமங்களையும் கிளி அன்புடன் பாடக் கேட்ட தலைவி "பயன் பெற்றேன் வருகவென்று மடக்கிளியை கை கூப்பி வணங்கினாளே".
சிறப்புப் பொருள்:
.விளக்கொளியை – ஈஸ்வரனுடைய தன்மை, பெருமானை அடையும் வழி, அதற்குள்ள தடைகள், உபாயம் ஆகிய அர்த்த பஞ்சக ஞானத்தை விளக்குபவன்
100 வது திவ்யதேசம் திருத்தாண்கால். (திருத்தண்காலூர்)
ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்தும் விருதுநகரிலிருந்தும் பஸ்ஸில் வரலாம்.
மூலவர்- நின்ற நாராயணன். நின்ற
திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.
உத்ஸவர்- திருத்தண்காலப்பபன்
தாயார்- செங்கமலத்தாயார்.
அன்ன நாயகி.
அனந்த நாயகி, அம்ருதநாயகி, ஜாம்பவதி.
தீர்த்தம்- பாபவிநாச தீர்த்தம்.
தேவசந்த்ர விமானம்.
மங்களாசாஸனம்
திருமங்கையாழ்வார்- 1399, 2065, 2673, 2674
பூதத்தாழ்வார்- 2251
மொத்தம் - 5 பாசுரங்கள்
No comments:
Post a Comment