*ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
*தஸாவதாரம்*
*மத்ஸயாவதாரம்*
*பகுதி 03*
*மன்வந்திரங்கள்*
பிரம்மனுடைய ஒரு நாள் ஒரு கல்பம் எனப்படும். அவருடைய ஒரு நாளில் இந்த உலகைப் பொருத்தவரையில் பதினான்கு மன்வந்திரங்கள் வந்து போகின்றன. ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும், இப்பூமி இல்லாமல், அண்டம் முழுவதும் அழிக்கப்படுகிறது. அழிக்கப்பட்ட பிறகு புதிய உற்பத்தி தொடங்குகிறது.
இப்பொழுது நடைபெறுகின்றது ஏழாவது மன்வந்திரம் ஆகும். ஆறு மன்வந்திரங்கள் முன்னரே வந்து போய்விட்டன. இந்த அண்டம் மறுபடியும் அழிவை எய்துவதற்கு இப் பொழுது நடைபெறுகின்ற மன்வந்திரம் போக இன்னும் ஏழு மன்வந்திரங்கள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு மன்வந்திரத்திலும் தெய்வங்களும், சப்த ரிஷிகளும், இந்திரர்களாக மாறுகின்றனர்.
1. முதல் மன்வந்திரம் சுவயம்பு மனு-தேவர்கள்; யமன்கள்.
2. இரண்டாவது ஸ்வரோசிஷா மன்வந்திரம்-தூத்ரஸ், முனிவர்கள் : தத்தோலி சாயாவனா, ஸ்தம்பா, ப்ரனா, காசிப, ஒளர்வா, பிரஹஸ்பதி.
3. மூன்றாவது - ஒளத்தமாவே மூன்றாவது மனு. தேவர்களுக்குப் பாவனர்கள் என்று பெயர். கெளகுருந்தி, டால்பியா, சங்கா, பிரவாஹனா, சிவா, சீதா, சஸ்மிதா ஆகியோர் சப்த ரிஷிகளாவர்.
4. நான்காவது தாமசமே நான்காவது மனு. ஏழு முனிவர்கள் - கவி, பிருத்து, அக்னி, அகபி, கபி, ஜல்பா திமனா தேவர்களுக்கு சாத்யாஸ் என்று பெயர்.
5. ஐந்தாவது ரெய்வதாவே ஐந்தாவது மனு, தேவர்கள் அபுதரஜஸ் எனப்பட்டனர். தேவவாஹீ. சுவாஹீ, பார்ஜன்ய, சோமபாமுனி, ஹிரண்ய ரோமா, சப்தஷ்வா ஆகிய சப்த ரிஷிகள்.
6. ஆறாவது - சக்ஷீஸாவ ஆறாவது மனு. தேவர்கள் லேகாஸ் எனப்பட்டனர். சப்தரிஷிகள், பிருகு, சுதாமா, விரஜா, சஹிஷீனு, நதா வைவஸ்வன், அடினமா.
7. ஏழாவது - இப்பொழுது நடைபெறும் மன்வந்திரம். வைவஸ்வத மனு என்று பெயர். அத்ரி, வசிட்டர், காசிபர், கெளதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்கினி ஆகிய ஏழு ரிஷிகள். தேவர்கள் சத்யாஸ் எனப்பட்டனர்.
8. எட்டாவது - சாவர்ணி எட்டாவது மனு, அஸ்வதாமா, சரத்வன, கெளசிகா, காலவ, விடானந்த, காசிடர், ராமா ஆகியோர் சப்த ரிஷிகளாவர்.
9. ஒன்பதாவது மனு ரெளக்யா, பத்தாவது மனு பெளத்யா, பதினோராவது மனு மேருசாவரணி, பன்னிரண்டாவது மனு ரிதா, பதின்மூன்றாவது மனு ரித்தமா, பதினான்காவது மனு விஸ்வகேசனா ஆகியவர் ஆகும். இதன் பின்பு பிருத்துவின் தோற்றம் விவரிக்கப்படுகிறது.
சூரிய வம்சம் காசியப முனிவன் அதிதி மூலம் பெற்ற மகன் வைவஸ்வத மனு ஆவான். இவனே சூரியனும் ஆவான். இவனுக்கு மூன்று மனைவியர் இருந்தனர். இவருள் சம்ஜனா என்பவருக்கு வைவஸ்வத மனு என்ற பிள்ளையும், யமன், யமுனா என்ற இரட்டைப் பிள்ளைகளும் பிறந்தனர். இரண்டாவது மனைவியாகிய ரஜனிக்கு ரேவதா என்ற மகனும், மூன்றாவது மனைவியான பிரபா என்பவருக்கு பிரபதா என்ற மகனும் தோன்றினர்.
சூரியனின் மிகுதியான ஆற்றலைத் தாங்க முடியாத சம்ஜனா தன்னைப் போலவே ஒரு பெண்ணைத் தன் உடம்பிலிருந்து உண்டாக்கினாள். அந்த வடிவத்திற்குச் சாயா என்று பெயர்
சாயாவிற்கும் அவள் மூலமான சம்ஜனாவிற்கும் வேறுபாடு அறியாத சூரியன் சாயா மூலம் சாவர்ணி மனு, சனி என்ற பிள்ளைகளையும், தப்தி, விஷ்தி என்ற பெண்களையும் பெற்றான்.
சாயாவிற்கும், சம்ஜனாவின் மகன் யமனுக்கும் சண்டை வர, யமன் அவளை உதைக்க காலைத் தூக்கினான். உடனே சாயா, 'என்னை உதைக்கத் துக்கிய காலில் புழு மண்டுவதாக என்று சாபமிட்டாள். உடனே சூரியனிடம் சென்று யமன் பேசினான். தந்தையே, ஏதோ முன்கோபத்தால் நான் என் தாயை உதைப்பேன்' என்று காலைத் துக்கினேன். உடனே என் தாய் உன் கால் புழுத்து ஒழிவதாக என்று சாபமிட்டாள். இது விந்தையிலும் விந்தை. எந்தத் தாயும் தன் மகனுக்கு இவ்வாறு சாபமிடமாட்டாள். ஆகவே இவள் என் தாய் அல்ல என்று கூறியவுடன் சூரியன் சாயாவைக் கேட்க அவளும் உண்மையை ஒப்புக் கொண்டாள். உடனே சூரியன் தன் மாமனார் ஆகிய விஸ்வகர்மாவிடம் சென்று கேட்க, விஸ்வகர்மா உன்னிடம் இருந்து வந்த அன்றைக்கே சம்ஜனா பெண் குதிரை வடிவில் காட்டில் வாழ்கிறாள் என்றான். சூரியனைப் பார்த்து விஸ்வகர்மா "எல்லை மீறிய தேஜஸ் உன்னிடம் இருப்பதால்தான் யாரும் உன்னை நெருங்க முடிவதில்லை. அந்தத் தேஜஸில் ஒரு பகுதியை வெட்டி எடுத்து விடுகிறேன். அதன் பிறகு அனைவரும் உன்னுடன் சகஜமாகப் பழகுவார்கள்" என்று கூறிவிட்டு, சூரியனின் தேஜஸில் ஒரு பகுதியை வெட்டிவிட்டான். வெட்டப்பட்ட இப்பகுதியிலிருந்த தேஜஸை மூலப்பொருளாக வைத்து சுதர்சன சக்கரம், சிவனுக்குரிய திரிசூலம், இந்திரனின் வஜ்ராயுதம் என்பவற்றை விஸ்வகர்மா உண்டாக்கினார்.
தன் தேஜஸைக் குறைத்துக் கொண்ட சூரியன் சம்ஜனாவைத் தேடிச் சென்றான். அவள் பெண் குதிரை வடிவுடன் இருந்ததால், தான் ஒரு ஆண்குதிரை வடிவெடுத்து அவளுடன் வாழ்ந்தான். இவர்களுக்கு அஸ்வினிகள் என்ற பெயரில் இருவர் தோன்றினர். இதன் பிறகு சம்ஜனாவும், சூரியனும் தம் பழைய வடிவை ஏற்றுக் கொண்டனர். சனியின் உடன் பிறந்த சாவர்ணி மனு சுமேரு மலைக்குச் சென்று தவம் செய்தான். பின் ஒரு மனுவாகப் பிறக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றான். சனி நவகோள்களில் ஒருவனாகிறான். யமுனா, தப்தி இருவரும் இரண்டு ஆறுகளாக ஆயினர். யமன் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து, மரண தேவனாக ஆகும் வரம் பெற்றான்.
லோமஹர்ஷனரிடம் புராணம் கேட்டுக் கொண்டிருந்த முனிவர்கள், அவரிடம் "சுக்கிராச்சாரிக்கு மிருத்யுசஞ்சீவினி மந்திரம் தெரியும் என்று சொன்னீர்கள். ஆனால் அவர் எப்படி, எப்பொழுது அந்த மந்திரத்தைத் தெரிந்துகொண்டார் என்பதைக் கூறவில்லையே" என்று கேட்க, லோமஹர்ஷனர் சொல்ல ஆரம்பித்தார்.
*ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
*வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
நாளையும் தஸாவதாரம் காணலாம் ....
🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏
No comments:
Post a Comment