COURTESY: SMT.PADMA GOPAL
(நமக்காக...எல்லாம் நமக்காக!...)
(படம் உபயம்:−திரு.Srinivasa Sarma அவர்கள்..)
குட்டிக் கண்ணன் கன்னமிரெண்டும்
கருப்புப் பட்டுதான்!
கிட்ட நம்மை ஈர்க்கும் விழிகள்
குண்டு திராட்சைதான்!
மொட்டுபோல இருக்கும் முகமும்
தொட்டுத் தீண்டத்தான்!
எட்டிச் செல்லும் பேர்களுக்கோ
என்றும் இழப்புதான்!
வில்லைப் போல புருவம் இரண்டும்
வியப்பின் உச்சம்தான்!
எல்லைமீறும் எழிலனுக்கோ
இல்லை உவமைதான்!
சின்னபவளம் சிந்தும் முத்தம்
சேர்த்து வைக்கத்தான்!
இன்னும் கேட்க, இல்லையென்பான்,
இவனின் விருப்பம்தான்!
கைவளையும் கழுத்தாரமும்
கண்டு பொருமத்தான்!
ஐயோயிவை செய்ததென்ன
என்று வினவத்தான்!
மைவண்ணன் குழலிசையோ
மனதை மயக்கத்தான்!
வைகுந்தனின் எல்லாமும்
உயிரை உருக்கத்தான்!...
No comments:
Post a Comment