Friday, January 24, 2020

Vyasaraya's eulogy on Purandara dasa

Courtesy:Sri.V.Rangaprasad

குருவே பாராட்டிய சிஷ்யர் புரந்தர தாசர்.
இன்று ஸ்ரீ புரந்தரதாசரின் ஆராதனை தினம். (24:1:2020 தை அமாவாசை)

புரந்தர தாசர்.

விஜய நகர சாம்ராஜ்யத்தில் முக்கிய பதவியில் இருந்தவரும், திருப்பதி வேங்கடவனின் ஆலயத்தில் பல காலங்கள் சேவை புரிந்தவரும், மத்வ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானவருமான ஸ்ரீ வியாசராஜர், புரந்தர தாசரின் குருவாவார். அப்பேற்பட்ட அந்த குரு, தன் சிஷ்யரை பாராட்டி ஒரு பாடலே பாடியிருக்கிறார் என்றால் அது எப்பேற்பட்ட பெருமைக்குரிய விஷயம்? அவர்கள் இருவரையும் வணங்கி, அந்த சிறப்புமிக்க பாடலை இங்கு பார்ப்போம்.

மேலும் பாகவதம் மற்றும் உபநிஷத்களின் சாரமாகக் கருதப்படும் ஸ்ரீ புரந்தரதாசரின் பாடல்களை தொகுத்து அவற்றிற்கு 'புரந்தரோபநிஷத்' என்று பெயரிட்டார் ஸ்ரீ வியாசராஜர்.

ஸ்ரீ வியாசராஜர்

ஸ்ரீ புரந்தரதாசரின் காலம்: 1480 to 1564 AD

ஸ்ரீ வியாசராயரின் காலம்: 1460 to 1539 AD

தாசரெந்தரே புரந்தர தாசரய்யா
வாசுதேவ கிருஷ்ணன சூசி பூஜிசுவ (தாசரெந்தரெ)

தாசரென்றால் அது புரந்தரதாசர்தான்
வாசுதேவ கிருஷ்ணனை வேண்டி பூஜை செய்யும்

க்ராஸகில்லதே போகி பரர மனெகள பொக்கு
தாசனெந்து துளசி மாலே தரிசி
பேசரில்லதே அவர காடி பேடி பளலிசுத
காசு கடிசுவ புருஷ ஹரிதாஸனே? (தாசரெந்தரெ)

பிக்ஷை எடுக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று
தாசர் என்று சொல்லி துளசி மாலைகள் அணிந்து
காசு மற்றும் பொருட்களை பிக்ஷை கேட்டு
அவர்களை துன்புறுத்தும் தாசன் ஹரிதாசனா? (இல்லை)

யாயிவாரவ மாடி விப்ரரிகே ம்ரிஷ்டான்ன
ப்ரியதலி தாநொந்து கொடத லோபி
மாயா சம்சாரதல்லி மமதே ஹெச்சாகித்து
காயனவ மாடலவ ஹரிதாசனே? (தாசரெந்தரெ)


லாபம் தரும் வியாபாரத்தை செய்துகொண்டு,
தேவைப்படுவர்களுக்கு அன்னதானம் செய்யாமல்
உதவி செய்யாத கஞ்சன் சம்சார சாகரத்தில் மதி மயங்கி
(இறைவனைக் குறித்து) பாடல்கள் பாடாதவன் ஹரிதாசனா? (இல்லை)

நீதியெல்லவனரிது நிகமவேத்யன நித்ய
வாதசுதநல்லிஹன வர்ணிசுதலி
கீதா நர்த்தனதிந்தா கிருஷ்னன பூஜிசுவ
பூதாத்ம புரந்தர தாசரிவய்யா (தாசரெந்தரெ)

அனைத்து நீதிகளையும் அறிந்து வேதங்களை காப்பாற்றுபவனை (ஸ்ரீ கிருஷ்ணனை),
வாயு புத்திரனின் இதயகமலத்தில் இருப்பவனை
வர்ணித்தபடி ஆடல் பாடல்களுடன்
பூஜிக்கும் தாசரே புரந்தர தாசர் ஆவார்

No comments:

Post a Comment