*இன்று* *செய்தித்தாளில்* *படித்த* *செய்தி* .
👌👌👌👌👌👌👌👌👌
*நாம் எல்லோரும் லலிதா ஜூவல்லரி ஓனரை முகநூல் பக்கத்திலும்*
*வாட்ஸ் அப்பிலும் கலாய்த்து கொண்டு இருக்கிறோம்.*
*ஆனால் அவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் பிடிபட்ட குற்றவாளியிடம் அரை மணி நேரம் பேச அனுமதி கேட்டிருந்தார்.*
*ஆனால் குற்றவாளியிடம் தனியாக பேச அனுமதி மறுக்கப்பட்டது.*
*உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 15 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு தரப்பட்டது..*
*பேசியது பதிவு செய்யப்பட்டது.*
*அதில் அந்த குற்றவாளியிடம் கேட்டது ;*
*எனது கிளைகள் நிறைய இருக்கிறது.*
*குறிப்பாக திருச்சியில் மட்டும் வந்து திருட என்ன காரணம்,*
*அதே நேரத்தில் எந்த சுவற்றில் ஓட்டை போட்டால் நகை உள்ள இடத்திற்கு வர முடியும் என்பது எப்படி தெரியும், என்று கேட்டார்.*
*குற்றவாளி சொன்ன பதில்*
*நானும் எனது மனைவியும் பத்து முறைக்கு மேல் இங்கு நகை வாங்க வந்துள்ளோம்*
*நகையை அவள் பார்த்து கொண்டு இருக்கும் போது நான் கடையை கவனித்து எப்படி வர முடியும் என்று பார்த்து பின் பிளான் போட்டு உள்ளே வந்தோம் என்றான்..*
*சரி குழப்பம் தீர்ந்தது நன்றி என்றார்..*
*குற்றவாளி ஏன் சார் எனக்கு நன்றி சொல்றீங்க என்று கேட்ட போது?!!!*
*அவர் சொன்ன பதில் உண்மையிலே நெகிழ வைத்தது..*
*இல்லை எனக்கு திருடு போன நகையை பற்றி கவலை இல்லை.*
*இன்சூரன்ஸ் செய்துள்ளேன்.*
*அதைவிட அதிகமாக சம்பாதிக்க என்னிடம் தைரியம் உள்ளது..*
*எனது கவலை எல்லாம் இவ்வளவு பெரிய கடையில் காவலாளிகள் இருக்கும் இடத்தில் ஓட்டை போட்டு உள்ளே வர உனக்கு தைரியம் எப்படி வந்தது*
*நிச்சயமாக கடையில் இருக்கும் யாராவது உதவி இருக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை குழப்பியது.*
*அதை விட எனது கவலை எல்லாம் எனது கடையில் வேலை பார்ப்பவன் திருடும் அளவிற்கு செல்கிறான் என்றால் என் மீது என்ன குறை இருக்கிறது*
*அதை நான் உடனே சரி செய்ய வேண்டும்.*
*அந்த ஊழியனின் பணத் தேவை எனக்கு ஏன் தெரியவில்லை*
*அவர்களை நான் சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்*
*அதை உடனே சரி செய்ய வேண்டும் என்று நினைத்து கவலையாக இருந்தேன்*
*அதனால் தான் அதை தெளிவு படுத்த பல முயற்சிகள் செய்து உன்னை சந்தித்தேன் என்றார்.*
*இதை ஒரு காவல் அதிகாரி "ராயல் சல்யூட் சார்" என்று கூறி பகிர்ந்துள்ளார்.*
*எப்படி இவர்கள் மட்டும் இப்படி கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் என்றால் இதுவும் ஒரு முக்கிய காரணம்..*
*தன்னுடைய தொழிலாளி மன நிறைவு தான் முக்கியம் அவனுக்கு அதை நான் சரியாக செய்தால் தான் நான் முதலாளி என்ற தகுதியை பெறுவேன் என்ற உயர்ந்த சிந்தனைகள் தான் இவர்களை போன்றவர்களை முதலாளிகளாக உயர்த்தி அழகு பார்க்கிறது இவர்களின் வாழ்க்கை👍🏻.*
No comments:
Post a Comment