Tuesday, September 3, 2019

Donate for veda-Periyavaa

Courtesy: https://www.facebook.com/halasyasundaram.iyer/posts/933681196984953
அடிக்கடி சொல்றதைத்தான் இப்பவும் சொல்றேன்.

வேதம் வாழாமல் நாம் வாழ்ந்து பிரயோஜனமில்லை. 

ஒவ்வொரு பாடசாலை வித்யார்த்தியின் பின்னணியில் ஒவ்வொரு வெளியில் தெரியாத சொல்ல முடியாத சோகங்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறது.

சமையல் வேலை பார்ப்பவரின் குழந்தை, சாப்பாட்டிற்கு கஷ்டமாக இருக்கும் குடும்பத்தில் குழந்தையாவது வேதபாடசாலையில் சேர்ந்து வயிறு நிறைய சாப்பிடட்டும் அப்படியே வேதமும் படிக்கட்டும் என்று மனதை தேற்றிக் கொண்டு பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோர்கள், வேதத்தின் மேல் உள்ள பற்றின் காரணமாக தனக்கு பிறந்த ஒரு குழந்தையை கூட எங்கோ இருக்கும் பாடசாலையில் சேர்த்து வேதம் கற்பிக்க அனுப்பும் பெற்றோர் இப்படி எத்தனை எத்தனையோ. 

ஒவ்வொரு பாடசாலையிலும் இது மாதிரி சூழ்நிலை உள்ள குழந்தைகள் இருப்பார்கள். அறியாத வயதில் பெற்றோர்களை இழந்த குழந்தைகள், உறவினர்களால் கைவிடப்பட்டு பாடசாலைக்கு அனுப்பப்பட்ட குழந்தைகள் இப்படியும் இருக்கின்றன.

என் குழந்தையை வேதம் கற்பிக்க அனுப்புவதா? அதெல்லாம் சமையல்காரனோட பையன் தான் படிப்பான் என்று சொல்லி ஒரு பையனை உதாசீனப்படுத்தி  பல வருடங்களுக்கு பிறகு விதியின் வசத்தால் யாரை சமையல்காரனோட பையன் என்று சொன்னானோ அவனுக்கு அந்த சமையல்காரன் பையனே அபரகாரியம் பண்ணி வைக்க வேண்டிய சூழ்நிலையையும் கூட நான் பார்த்திருக்கிறேன்.

என்னோட நட்பு வட்டத்தில் எத்தனையோ பேர் பாடசாலைக்கு செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ பேர் பிரதி மாதம் நான் சொல்லும் பாடசாலைகளுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னோட வேண்டுகோள் ஒன்னே ஒன்னு தான். நீங்கள் ஆயிரம், பத்தாயிரம்னு அனுப்பணும்னு நான் உங்களை கேட்டுக்கலை. குறைந்த பட்சம் நூறு ரூபாயாவது எதாச்சும் ஒரு பாடசாலைக்கு பிரதிமாதம் அனுப்பினா சந்தோஷப்படுவேன். எத்தனையோ செலவு செய்றோம். அந்த செலவோடு செலவா இதையும் நினைச்சுக்கவும்.

அந்த பாடசாலைக்கு இவ்வளவு பணம் வருது. மடத்தில் இருந்து இவ்வளவு கொடுக்கிறாங்க. பாடசாலைக்கு நாம ஏன் கொடுக்கணும் இப்படியெல்லாம் நினைக்காம மஹாபெரியவா சொல்லியிருக்கிற ஒரே ஒரு வார்த்தைக்கு மட்டுமாவது மரியாதை கொடுத்து இதை பண்ணலாமே.

பெரியவா சொன்னது: 

பணமில்லாத குடும்பத்துப் பசங்கள் வேதவித்யைக்கு வருவதற்காக அவர்களுக்குத் தர வேண்டிய நிதி உதவியானது உங்களில் பணமுள்ளவர்களிடமிருந்துதான் வரவேண்டும். கற்றுக் கொடுக்கும் வாத்தியார் சம்பளம், புஸ்தகச் செலவு, பாடசாலைப் பராமரிப்பு எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும். இதற்காக ரொம்பவும் ஸ்வல்ப அளவிலேயே ஆரம்பித்து காணிக்கைத் திட்டம் வைத்திருக்கிறோம்.

திருப்பதி வேங்கடாசலபதி பேரைச் சொல்லி chain letter என்று போடுகிறார்களே - "இந்த லெட்டரைக் காப்பி பண்ணி இத்தனை பேருக்கு அனுப்பாவிட்டால் கண்போய்விடும், கால் போய்விடும்" என்று மிரட்டி எழுதுகிறார்களே, வேங்கட ரமண ஸ்வாமியின் பேருக்கு பயந்து கொண்டு, அநேகம் பேர் காப்பி பண்ணி அனுப்புகிறார்களே - அந்த மாதிரி ஏதாவது மிரட்டி உருட்டியாவது இந்த வேத தர்மத்துக்கு வசூல் பண்ண முடியுமா என்று எனக்கு இருக்கிறது!

அதிகம் வேண்டாம்! மாஸத்துக்குத் தலைக்கு ஒரு ரூபாய் தான் கேட்கிறேன். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ ஸர்கார் வரி போட்டு விட்டால் கொடுக்கிறீர்களா இல்லையா? அப்படி இதை நான் போட்டிருக்கிற tax என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் நடத்துகிற கடுகத்தனை ஸர்காருக்குத் தர வேண்டிய வரி இது. இதற்காக பீச்சு, சினிமா இத்யாதியில் துளி குறைத்துக் கொண்டால் போதும். உங்கள் கடமை, என் கடமை இரண்டிலும் ஒரு பங்காவது பூர்த்தியானதாக ஆகும்.

No comments:

Post a Comment