Monday, July 29, 2019

Inter caste marriage & Bhagavad gita

*"பிராமணப் பெண்ணோ, பிள்ளையோ வேறு வர்ணத்தவரான க்ஷத்திரிய, வைசிய பிள்ளையையோ, பெண்ணையோ கல்யாணம் செய்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி அர்ஜுனன் வாக்கு*".
*ஶ்ரீமத் பகவத் கீதை*
*அத்தியாயம்----1*
*ஸ்லோகம்----40 to 44*. 

*குல நாசத்தினால் தொன்றுதொட்டு வருகின்ற குலதர்மங்கள் அழிந்து விடுகின்றன*.
*தர்மம் அழிந்த பிறகு குலம் முழுவதிலும் அதர்மம் வெகுவாகப் பரவுகிறது*. 
*குலதர்மம் அழிந்து விட்டால் குலத்தில் உள்ள ஸ்த்ரீ---புருஷர்கள் குல மரியாதைக்கும், சமூக மரியாதைக்கும் கட்டுப்படாமல் நடத்தை கெட்டு விடுவார்கள்*. 
*அவர்களுடைய எல்லாச் செயல்களிலும் அதர்மங்கள் நிறைந்தே இருக்கும்*. 
*இதனால் பாவம் மேலும் வளர்ந்து சமுதாயம் முழுவதும் பரவி விடும்*. 
*எங்கும் பாவம் பரவி விடுவதால் சமுதாயத்தில் உள்ள ஸ்த்ரீ---புருஷர்கள் கருத்தில், எந்தக் கட்டுப்பாட்டிற்கும் மதிப்பு இருக்காது*. 
*அவற்றைப் பாதுகாப்பது இருக்கட்டும்*. 
*அவற்றை அறிவதற்குக்கூட முயற்சி செய்யமாட்டார்கள்*.
*யாராவது எடுத்துச் சொன்னாலும் அவர்களைப் பரிகாஸம் செய்வார்கள் அல்லது வெறுப்பார்கள்*. 
*இந்த நிலையில் சமுதாய தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு ஆதாரம் புனிதமான ஸதி தர்மம்தான்*. 
*அதுவும் அழிந்து விடும்*. 
*ஸதி தர்மத்தின் பெருமையை இழந்தபிறகு, பரிசுத்தமான குடும்பத்து ஸ்த்ரீகள் வெறுக்கத்தக்க விபசார தோஷத்திற்கு ஆளாவார்கள்*. 
*பல வகுப்பினரிடமும் பழக்கம் ஏற்பட்டு விடும்*. 
*தாய்----தந்தையர் மாறுபட்ட வர்ணத்தினர் ஆவதால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் குலக்கலப்புக்கு ஆளாகி விடுகிறார்கள்*. 
*இப்படி குலத்தில் பரம்பரையாக வந்த புனிதத் தன்மை முழுவதும் எளிதாக நாசமாகிவிடும்*.

*வர்ணக்கலப்பு குலநாசம் செய்தவர்களையும், குலத்தையும் நரகத்திற்கே அழைத்துச் செல்லக்கூடியது*. 
*இவர்களுடைய முன்னோர்கள்கூட ச்ராத்தம்,தர்ப்பணம்---இவற்றை இழந்து வீழ்ச்சி அடைவார்கள்*. 
*(ச்ராத்தத்தில் பிண்டம் வைப்பதும், பித்ருக்களை உத்தேசித்து பிராமணர்களுக்கு அனனமிடுவதும்தான்"பிண்டக்ரியை"*.
*தர்ப்பணத்தில் எள்ளும், தண்ணீரும் விடுவதுதான்" உதகக்ரியை"*. 
*இரண்டும் சேர்ந்து"பிண்டோதகக்ரியை"*. 
*அதாவது"ச்ராத்த----தர்ப்பணங்கள்)*.

*சாஸ்திர முறை மீறப்பட்டு விட்டபடியால், அது பித்ருக்களுக்குப் போய்ச் சேருவதில்லை*. 
*இவ்வாறு சந்ததிகள் மூலம் கிடைக்க வேண்டிய பிண்டம் ஜலம் ஆகியவைக் கிடைக்காததால் முன்னோர்கள் வீழ்கிறார்கள்*. 
*குலநாசம் செய்பவர்களின் இந்த வர்ணக்கலப்பு ஏற்படுத்துகின்ற குறறங்களினால், தொன்றுதொட்டு வருகின்ற குலதர்மங்களும், ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன*. 
*வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவை வர்ண தர்மங்கள்*. 
*அவையே ஜாதி தர்மங்கள்*. 
*எவர்களுடைய குலதர்மமும், ஜாதி தர்மமும் அழிக்கப்பட்டு விட்டனவோ, அதர்மத்தில் வீழ்ந்துவிட்ட அத்தகைய மனிதர்கள் பாவங்களின் பயனாக வெகுகாலம்" கும்பீபாகம், ரௌரவம் ஆகிய பயங்கரமான நரகங்களில் வீழ்ந்து பற்பலவிதமான யமதண்டனைகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்*. 
*ஆகவே குலநாசத்திற்குரிய செயலை ஒருபோதும் செய்யக் கூடாது*. 
ஆதாரம் :
ஶ்ரீமத் பகவத் கீதா
(தத்வவிவேசனீ)
பக்கம் :  79 to 82.
Gita Press,
Gorakhpur publication.

No comments:

Post a Comment