நோயை விரட்டும் யமதீபம் 5-11-18 திங்கள்
आश्विनस्याऽसिते पक्षे त्रयोदश्यां निशामुखे ।
यमदीपं बहिर्दद्यात् अपमृत्युर्विनश्यति ।।
ஆஶ்வினஸ்யாஸிதே பக்ஷே த்ரயோதஶ்யாம் நிஶாமுகே ।
யம தீபம் பஹிர் தத்யாத் அபம்ருத்யுர் விநஶ்யதி ।।
ஆஶ்வின மாதம் கிருஷ்ணபக்ஷ (தீபாவளிக்கு முன்பு வரும்) த்ரயோதசி நாளுக்கு யமதீப தரயோதஶி எனப் பெயர். அன்று மாலை யமதர்மராஜாவைக் குறித்து, வீட்டுக்கு வெளியில், மண் அகலில் நல்லெண்ணைவிட்டு விளக்குகள் ஏற்றிவைத்தால் அழியாமல் செய்த பாபங்களையும் யம (ம்ருத்யு) பயத்தையும் போக்கடிக்கும்,
அதாவது இன்று மாலை ஸூர்ய அஸ்தமனத்திற்குப் பின்
मम सर्वारिष्ट निवृत्ति पूर्वकं अपमृत्यु निवारण द्वारा यमराज प्रीत्यर्थ दीपदानं करिष्ये
மம ஸர்வாரிஷ்ட நிவ்ருத்தி பூர்வகம் அபம்ருத்யு நிவாரண த்வாரா யமராஜ பரீத்யர்த்தம் தீபதானம் கரிஷ்யே
என்று ஸங்கல்பம் சொல்லி,
தனது குழந்தைகள் என வீட்டில் எவ்வுளவு நபர்கள் வாஸிக்கின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் தலா ஒவ்வொரு மண்விளக்கு வீதம் அவர்களை கொண்டே அகல் தீபங்களை தனது வீட்டிலோ அல்லது அருகில் இருக்கும் ஆலயங்களிலோ, ஏற்றி வைக்கச்சொல்ல வேண்டும். தீபங்களை ஏற்றி வைத்துவிட்டு தீபத்தை நோக்கி நமஸ்காரம் செய்து விட்டு ஒவ்வொருவரும் அவரவர் தீபத்தை நோக்கி கீழ்கண்ட ஶ்லோகம் சொல்லி பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.
मृत्युना पाश दण्डाभ्यां कालेन श्यामया सह ।
त्रयोदश्यां दीपदानात् सूर्यज: प्रीयतां मम ।।
ம்ருத்யுநா பாஶ தண்டாப்யாம் காலேந ஶ்யாமயா ஸஹ ।
த்ரயோதஶ்யாம் தீபதாநாத் ஸூர்யஜ: ப்ரீயதாம் மம ।।
பாசம் தண்டம் இவைகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு ஸ்யாமாதேவி மற்றும் காலதேவனுடன் பிரகாசிக்கும் ஸூர்யனின் புத்ரரான யம தர்ம ராஜாவானவர் நான் செய்யும் இந்த த்ரயோதசி தீப தானத்தால்
ஸந்தோஷமடையட்டும் என்றும் பொருளையுடைய இறுதி ஶ்லோகத்தை
சொல்லி ப்ரார்த்தித்துக் கொள்ளவேண்டும். இது அபம்ருத்யு என்னும் தோஷத்தை போக்கி வியாதியற்ற நீண்ட ஆயுளைத்தரும் என்கிறது ஸ்கந்த புராணம்
No comments:
Post a Comment