Monday, August 27, 2018

Srimad bhagavatam skanda 1 adhyaya 9 in tamil - Bheeshma stuthi

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 1- அத்தியாயம் 9 (CONTINUED)

இப்போது பீஷ்மரின் ஸ்துதியைப் பார்க்கலாம்.

இதி மதி: உபகல்பிதா வித்ருஷ்ணாபகவதி ஸாத்வதபுங்கவே விபூம்னி
ஸ்வஸுகமுபகதே க்வசித் விஹர்த்தும் ப்ரக்ருதிமுபேயுஷி யத்பவப்ரவாஹ:

ஸாத்வதபுங்கவே-யதுகுல திலகனான
விபூம்னி- பரமாத்மாவான 
ஸ்வசுகம் உபகதே – தன்னில் முழுமையானவனாயினும்
கவசித் – சில நேரங்களில்
விஹர்த்தும் – லீலையின் பொருட்டு 
ப்ரக்ருதிம் உபேயுஷி- ப்ரக்ருதி என்னும் மாயையை கைக்கொண்டு
யத் பவப்ரவாஹ: - இந்த சிருஷ்டியை தோற்றுவிப்பவனும் ஆன
பகவதி-பகவானிடத்தில் 
வித்ருஷ்ணா மதி: -என் ஆசையற்ற மனம் 
இதி உபகல்பிதா – ஈடுபடட்டும்

த்ரிபுவனகமநம் தமால வர்ணம் ரவிகரகௌரவராம்பரம் ததானே 
வபுரலககுலாவ்ருதானனாப்ஜம் விஜயஸகே மதிரஸ்து மே அனவத்யா

த்ரிபுவனகமனம்-மூவுலகையும் கவர்பவரும், 
தமால வர்ணம் –தமால மரம் போன்று கருநீல நிறம் கொண்டவரும்
ரவிகரகௌரவராம்பரம்- சூரியனைப்போல் ஒளிவிடும் பீதாம்பரத்தை தரித்தவரும்
வபுரலககுலாவ்ருதானனாப்ஜம்-சுருட்டை மயிரால் சூழப்பட்ட முகாரவிந்தத்தை உடைய உருவம் கொண்டவரும் 
விஜயஸகே- அர்ஜுனனின் நண்பரும் ஆன கிருஷ்ணரிடத்தில் 
மே மதி: என் புத்தியானது
அனவத்யா-நிர்மலமாக
அஸ்து- இருக்கட்டும்

யுதி துரகரஜோவிதூம்ரவிஷ்வக் கசலுலிதஸ்ரமவார்யலம்க்ருதாஸ்யே
மம நிசித சரை: விபித்யமானத்வசி விலஸத்கவசே அஸ்து 
கிருஷ்ண ஆத்மா

யுதி- யுத்தத்தில் 
துரகரஜோ விதூம்ர விஷ்வக் கச- குதிரைகளின் குழம்பில் இருந்து எழுந்த தூசிநிறைந்த கேசமுடைய 
ஸ்ரமவாரி அலம்க்ருத ஆஸ்யே –வியர்வைத்துளிகள் நிரம்பிய முகத்துடன் 
மம நிசித சரை: -நான் விட்ட கூரிய அம்புகளால் 
விபித்யமானத்வசி- துளைக்கப்பட்ட சருமத்தின் மேல்
விலசத்கவசே – ஒளிவிடும் கவசத்துடன் கூடிய 
க்ருஷ்ணே- கிருஷ்ணனிடத்தில் 
ஆத்மா அஸ்து – என் உயிர் நிலைக்கட்டும்

ஸபதி ஸகிவசோ நிசம்ய மத்யே நிஜபரயோ: பலயோ: ரதம் நிவேச்ய
ஸ்திதவதி பரசை(सैநிகாயுரக்ஷ்ணா ஹ்ருதவதி பார்த்தஸகே ரதிர்மமாஸ்த

ஸகிவசோ-தோழனின் வார்த்தையைக்
நிசம்ய- கேட்டு
நிஜபரயோ: பலயோ:- தமது சேனைக்கும் எதிரி சேனைக்கும்
மத்யே – நடுவில் 
ரதம் – தேரை 
ஸபதி- விரைவில்
நிவேச்ய – நிறுத்தி
ஸ்திதவதி – நின்று
பரசைநிகாயு: - எதிரிப் படையில் உள்ளவர்களின் ஆயுளை 
அக்ஷ்ணா – பார்வையாலேயே 
ஹ்ருதவதி- அபகரித்த 
பார்த்த ஸகே – அர்ஜுனனின் நண்பனான பார்த்த சாரதியினிடத்தில் 
ரதி மம –எனக்கு பக்தி 
ஆஸ்த- இருக்கட்டும்

வ்யவஹிதப்ருதனாமுகம் நிரீக்ஷ்ய ஸ்வஜனவதாத் விமுகஸ்ய
தோஷபுத்த்யா
குமதிம் அஹரத் ஆத்மவித்யயா யஸ்சரண ரதி: பரமஸ்ய தஸ்ய மே அஸ்து

வ்யவஹிதப்ருதனாமுகம் – அணிவகுத்த சேனையை
நிரீக்ஷ்ய – பார்த்து 
ஸ்வஜனவதாத் – தன் பந்துக்களைக் கொல்வது 
தோஷபுத்த்யா – பாபம் என்ற எண்ணத்தால் 
விமுகஸ்ய – போரிடுவதில் வெறுப்புற்ற அர்ஜுனனின்
குமதிம்- அறியாமையை 
ஆத்மவித்யயா – ஆத்மஞானத்தால்
ய: அஹரத்- எவர் அகற்றினாரோ
பரமஸ்ய தஸ்ய- அந்த பரமாத்மாவின்
சரணரதி: - சரணங்களில் பற்று 
மே அஸ்து-எனக்கு உண்டாகட்டும்

ஸ்வநிகமம் அபஹாய மத்ப்ரதிக்ஞாம் ருதம் அதிகர்த்தும் அவப்லுதோ ரதஸ்ய 
த்ருதரதசரண: அப்யயாத்சலத்கு: ஹரிரிவ ஹந்தும் இபம் கதோத்தரீய:

மத்பிரதிக்ஞாம் – கருஷ்ணனை ஆயுதம் எடுக்க வைக்கிறேன் என்ற என் பிரதிக்ஞையை 
ருதம் அதிகர்த்தும் – மெய்யாக்குவதற்காக 
ஸ்வநிகமம்- ஆயுதம் எடுக்கமாட்டேன் என்ற தன் பிரதிக்ஞையை
அபஹாய – கைவிட்டு
ரதஸ்ய- தேரிலிருந்து 
அவப்லுத: - கீழே குதித்து 
இபம் ஹந்தும்- ஒரு யானையைக் கொல்லவரும்
ஹரிரிவ- சிங்கத்தைப்போன்று 
கதோத்த்ரீய: - தன் மேலாடை பறக்க 
த்ருதரதசரண: - தேர்ச்சக்கரத்தை கையில் எடுத்துக்கொண்டு 
சலத்கு: - பூமி நடுங்க 
அப்யயாத்:- விரைவாக ஓடி வந்தாரே !

சிதவிசிக ஹதோ விசீர்ண்தம்ச: க்ஷதஜ பரிப்லுத ஆததாயின: மே
பிரஸபம் அபிஸஸார மத்வதார்த்தம் ஸ பவது மே கதிர்மஹான் முகுந்த:

ஆததாயின: -கொடிய எதிரி ஆகிய 
மே – என்னுடைய 
சிதவிசிகஹத: சரங்களால் அடிக்கப்பட்டு
விசீர்ணதம்ச: - துளைக்கப்பட்ட கவசத்துடன்
க்ஷதஜபரிப்லுத:- உதிரம் பெருக 
மத்வதார்த்தம் – என்னைக் கொல்லும் பொருட்டு
பிரசபம் – விரைவாக 
அபிஸஸார- ஓடி வந்தாரே 
ஸ: முகுந்த: -அந்த முகுந்தன் 
மே மஹான் கதி: என் மேலான கதியாக 
பவது- ஆகட்டும்

விஜயரதகுடும்ப ஆததோத்ரே த்ருதஹயரச்மினி தத் ஸ்ரியேக்ஷணாயே
பகவதி ரதிரஸ்து மே முமூர்ஷோ: யமிஹ நிரீக்ஷ்ய ஹதா: கதா: ஸரூபம்

விஜயரதகுடும்ப- அர்ஜுனனின் தேரில் வாசம் செய்யும் 
ஆததோத்ரே- சாட்டையை கையில் பிடித்துள்ள 
த்ருதஹயரச்மினி- குதிரைக்கக்டிவாளத்தை இன்னொரு கையில் பிடித்துள்ள 
தத் ஸ்ரியேக்ஷணாயே- பார்க்க அழகியவராயுள்ள
யம்- எவரை 
இஹ- இங்கு 
நிரீக்ஷ்ய –பார்த்து 
ஹதா: உயிர் விட்டவர்கள் 
ஸரூபம் – சாரூப்ய முக்தியை 
கதா: -அடைந்தார்களோ 
பகவதி- அந்த பகவானிடத்தில் 
முமூர்ஷோ:- இறக்கும் தருவாயிலுள்ள
மே- எனக்கு 
ரதி: அஸ்து- பக்தி இருக்கட்டும்

லலிதகதிவிலாஸ வல்குஹாஸ ப்ரணயநிரீக்ஷண கல்பிதோருமானா: 
க்ருதமனுக்ருதவத்ய: உன்மதாந்தா: ப்ரகருதிமகமன் கில யஸ்ய கோபவத்வ:

கோபவத்வ: - கோபியர் 
லலிதகதிவிலாஸ – அழகிய நடை 
வல்குஹாஸ – மலர்ந்த 
ப்ரணயநிரீக்ஷண சிரிப்பு- காதல் பார்வை 
கல்பிதோருமானா: - இவைகளால் ஈர்க்கப்பட்டு 
யஸ்ய – எவருடைய 
க்ருதமனுக்ருதவத்ய:-செயல்களை பின்ப்றி
: உன்மதாந்தா: - காதல் வயப்பட்டவர்களாக 
ப்ரகருதிமகமன் கில – அவருடன் இரண்டறக் கலந்தார்களோ

முனிகணந்ருபவர்யஸம்குலே அந்த:ஸதஸி யுதிஷ்டிரராஜசூய ஏஷாம்
அர்ஹணம் உபபேத ஈக்ஷணீயோ மம த்ருசிகோசர ஏஷ ஆவிராத்மா

முனிகணந்ருபவர்யஸம்குலே – முனிவர்கள் அரசர்கள் கூட்டத்தில் 
அந்த:ஸதஸி – சபையின் நடுவே 
யுதிஷ்டிரராஜசூயே – யுதிஷ்டிரரின் ராஜசூயயாகத்தின்போது
ஏஷாம் அர்ஹணம்- அவர்கள் எல்லோருடைய பூஜையை 
உபபேத – ஏற்றுக்கொண்ட
ஈக்ஷணீய: - தரிசனத்திற்குகந்த 
ஆவிராத்மா- ஆத்மாவின் ஆத்மாவான அவர் 
மமத்ருசிகோசர: - என் கண்முன் நிற்கிறார்

தம் இமம் அஹம் அஜம் சரீரபாஜாம் ஹ்ருதி ஹ்ருதி 
திஷ்டிதம் ஆத்மகல்பிதானாம் 
பிரதித்ருசம் இவ நைகதாஅர்கம் ஏகம் 
ஸமதிகதோ அஸ்மி விதூதபேத மோஹ: 
.
அஜம்- பிறவியற்றவராய்
ஆத்மகல்பிதானாம் – தான் சிருஷ்டித்த 
சரீரபாஜாம் - சரீரம் உள்ளவர்களின் 
ஹ்ருதி ஹ்ருதி- இதயம் தோறும்
திஷ்டிதம் – உறைந்து 
அர்கம் ஏகம் – ஒரே சூரியன் 
ப்ரதித்ருசம் – ஒவ்வொரு கண்ணிலும்
ந ஏகதா இவ-பலவாகத் தோன்றுவது போல உள்ள 
தம் இமம் இந்த பகவானை 
அஹம்- நான் 
விதூதபேத மோஹ: - வேற்றுமை மயக்கம் நீங்கியவனாக 
ஸமதிகதோ அஸ்மி-நன்கு அடைந்தவன் ஆகிறேன்

இவ்விதம் கூறிய பீஷ்மர் க்ருஷ்ணனிடம் தன்னை ஒடுக்கி மூச்சை நிறுத்தி பிரம்மத்தில் கலந்தார்.




No comments:

Post a Comment