Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
முந்தை வினைகள் சூழ
விந்தை உலகில் பிறந்து
பந்தச்சூழல் புகுந்து
பந்தெனச்சுழன்று இன்று
சொந்தபந்தங்கள் நீங்கி
நொந்தென் உடலம் ஓய்ந்து
அந்திப்பொழுதில் வந்து
சந்தியில் நிற்கின்றேன்
எந்தை உன் திருவடிசேர
எந்த வழி போவதென்று
சிந்தை கலங்கி நின்றேன்
வந்தெனக்கருள வேண்டும்
No comments:
Post a Comment