Wednesday, June 20, 2018

Kudambai sidhar

குதம்பாய், சொல்கிறேன் கேள். -- J.K. SIVAN

இன்று கொஞ்சம் குதம்பை சித்தரின் ரெண்டு அடி எளிய வார்த்தைகளை பாடுவோமா. 
ஒரு அருமையான சித்தர் அவர். அர்த்தமே தேவை இல்லை தான். எனினும் ஒரு வரி கூட இணைத்திருக்கிறேன். ​

தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
நாடி வருவதுண்டோ? குதம்பாய்
நாடி வருவதுண்டோ?102

​(அகட விகட சாமர்த்தியம் செய்து சேர்த்தாயே அந்த செல்வம் கடைசியில் உன்னோடு வந்ததா? எங்கே)​

போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
சாம்போது தான்வருமோ? குதம்பாய்
சாம்போது தான்வருமோ?103

​ (நீயே சாம்பல், நீ அலைந்து தேடியத்து ஒரு துளியாவது உன்னோடு........?)​

காசினிமுற்றாயுன் கைவச மாயினும்
தூசேனும் பின்வருமோ? குதம்பாய்
தூசேனும் பின்வருமோ?104

​(உலகமே ஜெயித்த அலெக்சாண்டர் கூட கையை விரித்து ஒன்றுமில்லை என்று தானே சொல்லி போனான்? ஒரு தூசு கூட ஒட்டிக்கொண்டு வராது )​

உற்றார் உறவின ஊரார் பிறந்தவர்
பெற்றார்துணை யாவரோ? குதம்பாய்
பெற்றார்துணை யாவரோ?105
​(இவ்வளவு பெரிய கும்பல் உன் சொந்தம் உன்னோடு இருந்ததே, அதெல்லாம் எங்கே?)​

மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
பொய்ப்பணி ஏதுக்கடி? குதம்பாய்
பொய்ப்பணி ஏதுக்கடி?106

​(எது சாஸ்வதம், எதை உண்மையாக நம்பவேண்டும் என தெரியாமல் வாழ்வில் நாடியது எல்லாம் பொய் , வீண். அது எதற்கு?)​

விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
மண்ணாசை ஏதுக்கடி? குதம்பாய்
மண்ணாசை ஏதுக்கடி?107
(​இறைவனை தேடாமல் இரையை தேடி, சொத்து சேர்த்து என்ன பயன்?)​

சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்
யானையும் நில்லாதடி! குதம்பாய்
யானையும் நில்லாதடி!108
​(நாலு வித சேனைகள் நிறைய கொண்ட ராஜாவும் கூட பட்டத்து யானை இல்லாமல் நாலு பேர் தூக்க தனியாக தான் போகவேண்டும்)​

செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்காது அழியுமடி! குதம்பாய்
தங்காது அழியுமடி!

​(விரிந்த சாம்ராஜ்யத்துக்கே ராஜா தான், அது நிலையானதா, சாஸ்வதமானதா, பிரியாததா?)​

நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்
செல்வன் நிச்சயமே குதம்பாய்
செல்வன நிச்சயமே.111
​(இப்போது கேள். நல்லது தீயது அறிந்து, நல்லோர் பின் சென்றவன் செய்த நல்வினை தான் அவன் கூட செல்லும் )

செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும்
எய்த வருவனவே குதம்பாய்
எய்த வருவனவே.112

​(ஒருவன் செய்த தவம், அவன் செய்த பாபங்கள், அவன்செய்த தர்மம் இவற்றின் பலன் மட்டுமே அவனோடு செல்பவை) ​

முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய
பத்தியும் பின்வருமே குதம்பாய்
பத்தியும் பின்வருமே.113

(​அடியே பெண்ணே குதம்பா, அந்த கிருஷ்ணனை பக்தியோடு வழிபடு, முக்தி கிடைக்கும்.)​



No comments:

Post a Comment