Tuesday, June 5, 2018

Ashtapadi part 10 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி 10

அஷ்டபதி 10
ராதையின் நிலையை அறிந்ததும் கண்ணன் தான் அங்கேயே இருப்பதாகச சொல்லி ராதையை அங்கு அழைத்து வரும்படி சகியிடம் கூறுகிறான். சகி ராதையிடம் சென்று கண்ணனும் அவள் நினைவாகவே இருப்பதாகக் கூறுகிறாள்.

1. வஹதி மலய ஸமீரே மதனம் உபநிதாய 
ஸ்புடதி குஸுமநிகரே விரஹிஹ்ருதய தளனாய 
மலயஸமீரே – மந்தமாருதம் 
மதனம் –காமதேவனை 
உபநிதாய- உடன் கொண்டுவருவதுபோல 
வஹதி – வீசும்போது
குஸும நிகரே –மலர்க் கூட்டங்கள்
விரஹிஹ்ருதய தலனாய- பிரிவுற்றிருக்கும் மனதை பிளப்பது போல 
ஸ்புடதி – இதழ் விரியும்போது

தவ விரஹே வனமாலீ சகி ஸீததி (த்ருவபதம்)
வனமாலீ- கண்ணன் 
தவ விரஹே- உன் பிரிவினால் 
ஸீததி- வருந்திக்கொண்டிருக்கிறான்

2. தஹதி சிசிர மயூகே மரணம் அனுகரோதி
பததி மதனவிசிகே விலபதி விகலதரோ அதி( தவ விரஹே)

சிசிரமயூகே – குளிர்ந்த சந்திரகிரணம் 
தஹதி- நெருப்பாக எரிக்கும்போது
மரணம் அனுகரோதி-மரணத் தருவாயில் இருப்பதாக நினைக்கிறான். 
மதனவிசிகே – மன்மதனின் பாணங்களான மலர்கள் 
பததி – தன்மீது விழும்போது 
அதி விகலதர: மிகவும் துன்புற்று 
விலபதி-புலம்புகிறான்

3. த்வனதி மதுபஸமூஹே ச்ரவணம் அபிததாதி 
மனஸி வலித விரஹே நிசி நிசி ருஜம் 
உபயாதி(தவவிரஹே)

மதுபஸமூஹே- வண்டுகளின் கூட்டங்கள் 
த்வனதி- ரீங்காரம் செய்யும்போது 
ச்ரவணம் - காதை 
அபிததாதி- மூடிக் கொள்கிறான் 
நிசி நிசி – இரவுதோறும் 
வலிதவிரஹே-விரகத்தினால் 
மனஸி- மனதில்
ருஜம்- துன்பம்
உபயாதி- அடைகிறான்

4. வஸதி விபின விதானே த்யஜதி லலித தாம 
லுடதி தரணி சயனே பஹு விலபதி தவ நாம(தவ விரஹே)

லலிததாம- வசதியான இருப்பிடத்தை 
த்யஜதி- விட்டு
தரணி சயனே – மண்ணில் சயனித்தவனாக 
லுடதி- அமைதியின்றி புரள்கிறான்.
தவ நாம- உன் பெயரை
பஹு விலபதி-பலமுறை கூறி வருந்துகிறான்.

5. பணதி கவி ஜெயதேவே விரஹவிலஸிதேன 
மனஸி ரபஸவிபவே ஹரிருதயது ஸுக்ருதேன (தவவிரஹே)

கவிஜயதேவே- ஜெயதேவ கவி 
விரஹா விலஸிதேன – பகவான் பக்தனைப் பிரிந்து துயருறுவதைப்பற்றி 
பணதி- கூறியதை
மனஸி- கேட்டவர் மனதில் 
ஸுக்ருதேன –நல்வினைப்பயனாக 
ரபஸவிபவே – பகவானிடத்தில் அன்பு உண்டாகி 
ஹரி: - ஹரியானவன் 
உதயது- தோன்றட்டும்

இதைக் கேட்டவுடன் ராதை மயக்கமுறுகிறாள் . அதனால் தான் இந்த அஷ்டபதி ஐந்து சுலோகங்களுடன் நின்று விடுகிறது.
.




No comments:

Post a Comment