Monday, May 28, 2018

Agateeswarar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி*
______________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்பதற்காக..........)
______________________________________
*தேவாரம் தனிப்பாடல் அல்லாத வைப்புத் தல தொடர்எண்: (2)*

*தேவாரம் பாடலுக்குள் அமைந்த வைப்புத் தலம்:*

*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*

*🏜அகத்தீஸ்வரர்   திருக்கோயில், அகத்தீச்சரம்:*

*🌙இறைவன்:* அகத்தீஸ்வரர்.

*💥இறைவி:* அறம்வளர்த்தநாயகி, அமுதவல்லி.

*🌴தல விருட்சம்:* அகத்தி.

*🌊தல தீர்த்தம்:* அகத்திய தீர்த்தம்.

*வழிபட்டோர்:* அகத்தியரும், அவர் துணைவியார் லோபா முத்திரையும்.

*📔தேவார பதிகம் உரைத்தவர்:*
அப்பர்.

ஆறாம் திருமுறையில், எழுபத்தொன்றாம் பதிகத்தில், எட்டாவது பாடல்.

*🛣இருப்பிடம்:*
கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் சென்று, கொட்டாரம் என்னுமிடத்தை அடைந்து, அங்கிருந்து அகத்தீஸ்வரம் செல்லும் சாலையில் ஒரு கி.மி. சென்றால் வழியில் வடுகன்பற்று என்ற இடம் வரும்.

இங்கிருந்து அருகாமையிலுள்ள அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவிலை அடையலாம்.

கன்னியாகுமரியிலிருந்து சுமார் ஆறு கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து சுமார் பதினைந்து கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

*✉ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,
வடுகன்பற்று,
அகத்தீஸ்வரம் அஞ்சல்,
கன்னியாகுமரி மாவட்டம்,
PIN - 622 101

*🌸ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் ஆலயம்  தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், திண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

இத்தலத்தின் இப்பதிகப் பாடலில் *ஈச்சுரம்* என வரும் தலங்களை வகுத்து அப்பர் அருளிச் செய்துள்ளார்.

இத்தலம் வெள்ளிமலை, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் முள்ளிமலை ஆகிய மூன்று மலைகளால் சூழப்பெற்று உள்ளது.

அத்திரி முனிவர் வழிபட்டதால் இறைவனுக்கு அத்திரீசுவரர் என்ற பெயரும் உண்டு.

அம்பாள் பரமகல்யாணி என்று பெயருடன் காட்சி தருகிறாள்.

தீர்த்தம் அத்திரி தீர்த்தம் மற்றும் கடனா நதி.

சிவலிங்கத்தின் பின்பகுதியில் தலைமுடி இருப்பதைப் போன்ற தோற்றம் உள்ளது.

பின்புறக் கருவறைச் சுவரில் உள்ள சிறிய சாளரம் வழியே இதை தரிசிக்கலாம்.

பிருகு, அத்திரி முனிவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு காட்சி கண்டுள்ளனர்.

அத்திரி முனிவரால் உண்டாக்கப்பட்ட கங்கை இன்றும் சிவசைல மலையில் ஆயிரத்து ஐநூறு அடி உயரத்தில் அத்திரி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தீர்த்தத்தின் அருகில் முருகருக்கு ஒரு கோவில் இருககிறது.

அத்திரி முனிவரால் உண்டாக்கப்பட்ட கங்கை கருணையாற்றுடன் கலந்து சிவசைலம் கோவிலுக்கு வடக்குப் பக்கம் ஓடி திருப்படைமருதூர் தாமிரபரணி நதியுடன் கலந்து பாய்ந்தோடுகிறது.

*தல அருமை:*
அகத்தியர் வழிபட்டத் தலமாதலால், இது *'அகத்தீச்சுரம்'* எனப்பட்டது.

கோயில் உள்ள இடம் *வடுகன் பற்று* ஆகும்.

அகத்தியர், தம்முடைய மனைவி லோபாமுத்திரையுடன் வழிபட்ட தலம்.

இக்கோயில் பாண்டிய மன்னன் ஜயச்சந்திர ஸ்ரீ வல்லபன் என்பவனால் கட்டப்பட்டவையாகும்.

*சிறப்புகள்:*
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும்.

கோயில் கருங்கல்லினால் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது.

அழகிய மணவாளப் பெருமாள் சந்நிதி தனியாகவும் உள்ளது.

சோழர்கள் காலத்தில் இக்கோயில் சிறப்புற்று விளங்கியதை இங்குள்ள கல்வெட்டுக்களால் அறியலாம்.

*📣குறிப்பு:*
அகத்தீச்சுரம் என்ற பெயரில் பல தலங்கள் உள்ளன.

திண்டிவனம் - பாண்டிச்சேரி சாலையில் உள்ள கிளியனூரில் உள்ள சிவாலயம் அகத்தீஸ்வரம் என்ற பெயருடைன் உள்ளது.

அகத்தியர் தன் மனைவி லோகமுத்திரையுடன் இத்தல இறைவனை வழிபட்டுள்ளார்.

அகத்தியர் வழிபட்டதால் இத்தலம் அகத்தீச்சரம் என்று பெயர் பெற்றது.

அகத்தியருக்கும், லோபமுத்திரைக்கும் இத்தல இறைவன் தலவிருட்சமான அத்தி மரத்தின் கீழ் திருமணக் கோலம் காட்டி அருளியுள்ளார். 

அழகிய மணவாளப் பெருமாள் சந்நிதியும் தனியாகவுள்ளது.

இந்தக் கோவிலில் உள்ள கல்வெட்டில் *குமரி மங்கலத்துக்குத் திரு அகத்தீஸ்வரமுடைய மாதேவன்"* என வரும் தொடரால் குமரிமங்கலம் என்பது ஊரின் பெயராகவும், அகத்தீஸ்வரம் என்பது ஆலயத்தின் பெயராகும்.

குலோத்துங்க சோழன் அகத்தீச்சுரமுடைய ஈசனார்க்கு வழங்கிய நிவந்தம் இந்தக் கல்வெட்டு சாசனத்தில் இருக்கின்றது.

ஆலயத்தின் பெயரே இன்றைய நாளில் ஊர்ப் பெயராயிற்று என்பதும் தெளிவாகிறது.

🔔நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன் கான கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால் ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண் கானல் ஈடுதிரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி இறைவன் உறை சுரம்பலவும் இயம்புவோமே.

🙏கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக!

     திருச்சிற்றம்பலம்.

தேவாரம் வைப்புதலங்களின் நாளைய பதிவு, *அயவந்தீஸ்வரர் திருக்கோயில், அசோகந்தி.*

____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
____________________________________
இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுர உயர்வதற்க்கு உபயம் அனுப்பி விட்டீர்களா?

நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.

இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாக அமையும்.

*மனம் நினைக்க மகேசன் அருளாவான்!*
*உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!*

இராஜபதியில் கைலாசநாதர் திருக்கோயிலில் திருக்கோபுரம் அமைவதற்கு  கடந்த இரு வாரங்களாக அடியார்களிடம் பதிவுடன் சென்று யாசகம் கேட்கிறேன்.

சிலர் உபயம் அளித்திருக்கிறார்கள். சிலர் அனுப்புவதாய் கூறியிருக்கிறார்கள். 

அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

இப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகைளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.

இத்துடன் இராஜபதி ஆலய காணொலியும், வாசிக்கும் பத்திரிக்கையும் இணைத்தனுப்பி உள்ளோம்.

படித்து, உபயம் அளியுங்கள்.
அடியார்களே!, பக்தர்களே, பொதுஜனங்களே! ஆலய கோபுர வளர்ச்சிக்கு அவசியம் உபயம் அளியுங்கள்!

பணம் அனுப்ப வேண்டிய முகவரி.

*கைலாஷ் டிரஸ்ட்*
*இந்தியன் வங்கி.*
**கோவில்பட்டி கிளை*
*A/Ç no: 934827371*
*IFSC code: IDIBOOOKO51*
*Branch code no: 256*

_____________________________________
*திருக்கோபுரம் அமைய உபயம் அளியுங்கள்!*
*திரும்ப பிறப்பில்லா நிலையெதுங்கள்!!*

No comments:

Post a Comment