Monday, April 16, 2018

Paduka - The holy sandals of 'Rama - Sanskrit

पादुका सहस्रं 939  பாதுகை யாரை காப்பாற்றுகிறது ?


पादपा पादपा पादपा पादपा पादपा पादपा पादपा पादपा 
पादपा पादपा पादपा पादपा पादपा पादपा पादपा पादपा 

சிறப்பு : ஒரே சொல் 16 முறை வருகிறது 
இரண்டே எழுத்துகள் (பா த )
ஒரு சொல் - பல பொருள் (பாத)

1 2 3 4 5 6 
पादप-अपादप-आपाद-पाप, अत्-अपा, 

7 8 9 10 11 12 13 14 
पाद-पा, पाद-पा-अ- पादप अपाद-,पा,

15 16 17 18 19 
पाद-पापात् अपापात् अपापात् अपापात्,

20 21 22 23 24 25 26 27
अ-पापा- द पापा आद-पा-पाद-पा


1 पादप தாவரங்கள் 
2 अपादप ஜங்கமங்கள் இவைகளை 
3 आपाद அடைந்திருக்கிற 
4 पाप பாபங்களை 
5 अत् சாப்பிடுகிற 
6 अपा ஜலத்தை உடையது ,
7 पाद பிரகிருதி மண்டலத்தை 
8 पा காப்பாற்றுகிறது ,
9 पाद இந்திரன் முதலிய அதிகாரிகளை 
10 पा காப்பாற்றும் 
11 अ பெருமாளுடைய 
12 पादपा திருவடியை காப்பாற்றும் பாதுகை 
13 अपाद வைகுண்டத்தை 
14 पा காப்பாற்றுகிறது ,
15 पाद காப்பற்ற வேண்டியவர்களை 
16 पापात् காப்பாற்றுபவர்களுக்கு
17 अपापात् தீமைகளை அழிக்கிறது , 
18 अपापात् காப்பற்றாதவர்களுக்கு
19 अपापात् நன்மைகளை அழிக்கிறது ,
20 अ பெருமாளை 
21 पापा அநுபவிப்பவர்களது 
22 द இந்திரியங்களை 
23 पापा காப்பாற்றுகிறது ,
24 आद அண்டீயவர்களது சத்ருக்களை 
25 पा உலர்த்துகின்ற 
26 पाद தனது கிரணங்களை 
27 पा காப்பாற்றுகிறது

எனறுபிரித்து படிக்கப் பட வேண்டும்.  அதன் பொருள் என்னவெனில் , மரம் போன்ற தாவரங்களையும் , பிராணிகளையும் , அடைந்திருக்கும் பாபத்தை உணடழிக்கக் கூடிய அபிஷேக நீரை சொந்தமாக்கிக் கொண்டுள்ளதும் , முறையே நியமிக்கப் பட்டு , பதவிகளில் இருக்கும் தேவர்களை காக்கின்ற ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை காத்திடுவதுமான பாதுகை , பெற்றோர்களை நன்கு பார்த்துக் கொள்வோர் விஷயத்திலும் , நன்கு காப்பாற்றாதவர்கள் விஷயத்திலும் முறையே பாப புண்ணியத்தை நோக்குவதும் , ஸ்ரீ விஷ்ணுவை அனுபவிக்கின்றவற்கு சரணாகதிக்கு வழி வகுப்பதும் , நிந்திக்கும் விரோதிகளை அழிக்கக் கூடிய பெருமாளின் ஒளிகளை காப்பதும் பாதுகையே ... 
என்று பாடுகிறார் ,.,,,,

No comments:

Post a Comment