Wednesday, March 7, 2018

Judge -nine

#இப்டித்தான்ஒருஊர்ல 
#ஒரு ஜட்ஜ் இருந்தாராம் 
அன்னைக்கு கோர்ட்ல புதுமையான வழக்க சந்திக்கப்போறோம்னோ
தலைய பிச்சிட்டு ஓடபோறோம்னோ தெரியாம கம்பீரமா போய்ருக்காரு..
**
*விசாரணைக் கூண்டில் நின்ன அப்பெண்ணிடம் குறுக்கு விசாரணை வக்கீல் கேட்ருக்காரு,*

*"உங்கள் பெயர் என்ன?''*

"கமலம்''

*"ஏன் உங்கள் கணவரை விவாகரத்து செய்கிறீர்கள்?'' வக்கீல்.

அந்த பொண்ணு சொல்லுச்சாம் "தூக்கத்தில் அவர் அடிக்கடி வேலைக்காரியின் பெயரைச் சொல்றார்''னு

*"அவள் பெயர் என்ன?''

*"அவள் பெயரும் கமலம் தான்"

*வக்கீலுக்கு ஆர்வம் தொற்றிக் கொள்ள சீரியஸாக கேட்டார்,*

*"உங்கள் பெயரும் கமலம். வேலைக்காரி பெயரும் கமலம். அப்படியிருக்க உங்கள் கணவர் தூக்கத்தில் உங்கள் பெயரையே சொல்லியிருக்கலாமல்லவா?''*

*அந்தப் பெண் வேகமாக தலையாட்டி மறுத்து சொன்னாள்.*

*"நிச்சயமாக அந்த ஆள் என் பெயரைச் சொல்லியிருக்கமாட்டார்"*

*இப்போது நீதிபதி குறுக்கிட்டு கேட்டார்,*

*"ஏன் அப்படி உறுதியாக சொல்கிறாய்?"*

*நீதிமன்றத்திலுள்ள அனைவரையும் ஒருமுறை பார்த்து சத்தமாக சொன்னாள்,*

*என் பெயரைச் சொல்லும் அளவுக்கு அந்தாளுக்குத் தைரியம் ஏது?'
இது வரை நாம அடிக்கடி படிச்சு புளிச்சு போன கதை 
••
#இப்ப_க்ளைமேக்ஸ் 
**
ஜஜ்ஜய்யா கேக்றாரு 
வேலைக்காரம்மா கிட்ட 
••
அதெப்படி.. அவர் உன் பெயரை ‌சொல்லலனு அவ்ளோ உறுதியா சொல்றேனு..?*

அந்தம்மாவோட பதில பாருங்கய்யா

என்னை‌ அவர் எப்பவுமே டார்லிங் ‌னு‌ தான் கூப்பிடுவார்.. என் பேரைச் சொல்லி கூப்பிடுங்க ரொம்ப ஆசையா இருக்குன்னு பல முறை சொல்லியிருக்கேன்.. அந்தச் சனியனை நினைவு படுத்தாதே.. அப்புறம் நான் ‌மனுஷனா இருக்க மாட்டேன்னு ரொம்ப கோபப்படுவாருங்க, எஜமான்..*

இப்பவே நீதிபதி தலைல கைய வெச்சுட்டாரு...
••

#இப்போ

அந்த க்ளைமேக்ஸ்க்குள்ள ஒரு க்ளைமேக்ஸ தான் 
பாக்க போறோம்

*நீதிபதி : அப்டினா இவர் மீதான குற்றம் சந்தேகமற நிரூபிக்கப்படவில்லை என கேஸை தள்ளுபடி செய்கிறேன்..*னு சொன்னாரா..
••
*மனைவி & வேலைக்காரம்மாவும் கோரஸா

*அதெப்படீங்க எசமான்..*
*அப்படீன்னா, அந்த மூணாவது கமலம் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்க..*
••
#ஜஜ்ஜய்யா_ஓடாதீங்க நல்ல தீர்ப்பா சொல்லிட்டு போங்க Judge          

No comments:

Post a Comment