*இந்த வருடம் 24/1/18/புதன் அன்று.. ரத ஸப்தமியும்,அன்றே பீஷ்மாஷ்டமியும் சேர்ந்து.. ஒரே நாளில் வருகிறது..*
(ரதசப்தமி அர்க்ய மந்ரங்கள் ஏற்கனவே பதிவிட்டாகிறது.)
பீஷ்மாஷ்டமி தர்பணம்
*பீஷ்ம:* என்றால் பயங்கரம் எனப்பொருள்.
யாரும் செய்ய இயலாததான, தான் இறுதிவரை விவாஹமே செய்து கொள்ள மாட்டேன் என்று (தனது தந்தை சந்தனு மஹாராஜாவுக்காக) பயங்கரமான உறுதிமொழியை ஏற்றதால் *தேவவ்ரதர்* என்னும் இவருக்கு பீஷ்மர் என்னும் பெயர் ஏற்பட்டது.
சிறந்த தர்மாத்மாவும், சிறந்த வில்லாளியுமான பீஷ்மர் இறுதிவரை நைஷ்டிக ப்ருஹ்மசாரியாகவே வாழ்ந்து குருக்ஷேத்ரப்போரில் போரிட்டு,
உத்தராயணம் (தை மாதம்) பிறந்து பிறகு அஷ்டமி திதியில் மோக்ஷத்தை அடைந்தார்.
இந்த நன்நாள் தான் பீஷ்மாஷ்டமீ.
மிகச்சிறந்த மஹாபுருஷரான பீஷ்மாசாரியருக்கு இவ்வுலகில் பிறந்த அனைவரும் இன்று ஜலத்தால் அர்க்யம் தரவேண்டும் எனப்படுகிறது.
ஆகவே விவாஹமானவர்கள், மற்றும் ப்ருஹ்மசாரிகள் ஆகிய அனைவரும் *(தந்தைதாயுள்ளவரும் கூட)* காலை முறையாக ஸ்னானம் மற்றும் நித்ய கர்மாக்களை முடித்துவிட்டு (காலைக்குள்) பீஷ்மருக்கு கீழ்கண்டவாறு அர்க்யம் தர வேண்டும்.
கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு யதாவிதியுக்தமாய் செய்ய வேண்டும்.
அர்க்ய ஸங்கல்பம்
ஸ்ரீ ……… நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே, ஹேமந்தருதௌ, மகர மாஸே, சுக்லபக்ஷே, அஷ்டம்யாம் புண்யதிதௌ, …வாஸரயுக்தாயாம், …………… நக்ஷத்ரயுக்தாயாம் | பீஷ்ம தர்ப்பணம் கரிஷ்யே || என்றுஸங்கல்பம் செய்து கொள்ளவும்.
பிறகு பூணூலை நிவீதியாக (மாலையாக) போட்டுக் கொண்டு, சுத்த ஜலத்தால் (எள்ளு கலக்காமல்) இரண்டு கைகள் நிறைய ஜலம் எடுத்துக்கொண்டு (அஞ்சலியால்) கீழ்கண்ட ச்லோகம் (भीष्माष्टमी तर्पणं) சொல்லி பீஷ்மருக்கு அர்க்யம் தரவேண்டும்.
(1) भीष्मश्शान्तनवोभीमः सत्यवादी जितेन्द्रियः। आभिरद्भिःअवाप्नोतु पुत्रपुत्रोचितां क्रियाम्।। भीष्मामनमः- इदमर्घ्यं 3।।
பீஷ்மச்சாந்தநவோ பீமஸ் ஸத்யவதீ ஜிதேந்த்ரிய: |
ஆபிரத்பிரவாப்நோது புத்ர பௌத்ரோசிதாம் க்ரியாம் ||
பீஷ்மாய நம: இதம்ர்க்யம் இதம்ர்க்யம் இதம்ர்க்யம்.
சந்தனு மஹாராஜாவின் புதல்வரும், மிகச்சிறந்த வீரரும், எப்பொழுதும் ஸத்யத்தையே பேசுபவரும், ஐந்து இந்த்ரியங்களையும் (புலன்களை) ஜயித்தவருமான பீஷ்மர், இந்த அர்க்யஜலங்களால், புத்ரன் பௌத்ரன் (மகன் பேரன்) ஆகியவர்களால் முறைப்படி செய்யப்பட்ட ச்ராத்தம் தர்பணம் ஆகிய பித்ருகார்யங்களால் ஏற்படும் த்ருப்தியை அடையட்டும்.
(2) वैयाघ्रपाद गोत्राय शंतनोस्तनयायच। अपुत्राय ददाम्यर्घ्यं सलिलं भीष्म वर्मणे । भीष्मायनमः - इदमर्घ्यं 3 ।
வ்யாக்ரபாத கோத்ராய சந்தநோஸ்தநயாயச |
அபுத்ராய ததாமயாக்யம் ஸலிலம் பீஷ்மவர்மனே ||
பீஷ்மாய நம: இதம்ர்க்யம் இதம்ர்க்யம் இதம்ர்க்யம்.
வ்யாக்ரபாத மஹர்ஷியின் குலத்தில் பிறந்தவரும், ஸங்க்ருதி மஹர்ஷியின் வழி வந்தவரும், (தந்தைக்காக விவாஹமே செய்துகொள்ளாமல் இருந்ததால்) புத்ரனில்லாதவருமான, பீஷ்ம வர்ம மஹாராஜாவுக்கு இந்த அர்க்ய ஜலத்தைத் தருகிறேன்
(3) गंगापुत्राय शान्ताय शंतनोरात्मजायच। अपुत्राय ददाम्यर्घ्यं सलिलं भीष्म वर्मणे। भीष्मायनमः। इदमर्घ्यं 3 ।
கங்காபுத்ராய சாந்தாய சந்தநோராத்மஜாயச |
அபுத்ராய ததாமயாக்யம் ஸலிலம் பீஷ்மவர்மனே ||
பீஷ்மாய நம: இதம்ர்க்யம் இதம்ர்க்யம் இதம்ர்க்யம்.
கங்காதேவியின் புதல்வரும், சாந்த வடிவானவரும், ஸந்தனு மஹாராஜாவின் தவப் புதல்வரும், அபுத்ரருமான பீஷ்மாசார்யருக்கு இந்த தூய ஜலத்தால் அர்க்யத்தை ஸமர்பிக்கிறேன், என்னால் தரப்பட்ட இந்த மூன்று அர்க்ய ஜலத்தால் பீஷ்ம மஹாராஜா த்ருப்தியை அடையட்டும்.
இவ்வாறு முறையாக பீஷ்மருக்கு அர்க்யம் தருவதால் பீஷ்மாசார்யரின் அருளால் அனைத்து நோயும் விலகி நீண்ட ஆயுளும், ஆரோக்யமும், நல்ல ஸந்ததியும், ஸத்யத்தில் பிடிப்பும் ஏற்படும் எனப்படுகிறது,
ஆகவே இந்த நன்நாளில் நாமும் பீஷ்மரை மனதால் நினைத்து அவருக்கு அர்க்யம் தந்து நன்மையடைவோம்.
சுபம்
No comments:
Post a Comment