Monday, March 19, 2018

Aditya hrudayam in tamil part 10 to 13

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

ஆதித்ய ஹ்ருதயம் 1௦.

ப்ர்ம்மேசானாச்யுதேசாய சூர்யாயாதித்ய வர்ச்சஸே
பாஸ்வதே சர்வபக்ஷாய ரௌத்ராய் வபுஷே நம:

ப்ர்ம்மேசானாச்யுதேசாய –சூரியனை பரமாத்மாவாகப பார்த்தால்தான் இந்த சொல் பொருளுடையதாகும்.வேதத்தில் சூரியன், அக்னி முதலிய தேவதாஸ்வ்ரூபங்களை பிரம்மமாக உபாசிக்கும் மந்திரங்கள் காணப்படுகின்றன. 
பிரமன், ஈசன் அச்யுதன் என்ற மும்மூர்த்திகளுக்கும் ஈசன் என்பது இந்த சொல்லின் பொருள்.

அதாவது பரமாத்மா.நாராயணனின் 12 நாமங்களுக்குள் கேசவன் என்ற நாமத்தின் பொருள் பின்வருமாறு விளக்கப்படுகிறது. க என்றால் விஷ்ணு, ஈச என்றால் சிவன் . ஒரு சொல்லும் சேர்த்து கூட்டு எழுத்தாக எழுதினால் கேச என்று வரும்.வ என்றால் வசத்தில் கொண்டவன் அதாவது பரம்பொருளாகிய நாராயணன்.

சூர்யாய- சூதே சர்வம் இதி சூர்ய: .எல்லாவற்றையும் தோற்றுவிப்பவன். இதன் பொருள் முன்பே கூறப்பட்டுள்ளது. ஆதித்யஸ்ஸவிதாசூர்ய: என்ற ஸ்லோகத்தில்.

ஆதித்ய வர்ச்சஸே-சூரியனின் ஒளிஸ்வரூபத்திற்கு- ஒளி பரமாத்மாவின் ஒளியிலிருந்து வருவது ஆகையால் சூரியனின் ` ஒளி பரம்பொருளின் ஒளியே. சஹஸ்ரநாமத்தில் பாஸ்கரத்யுதி: என்று ஒரு நாமம். இதற்கு சூரியன் ஒளியாக இருப்பவன் என்று பொருள்.

பாஸ்வதே-பிரகாசிப்பவனுக்கு, பா என்றால் ஒளி தஸ்ய பாஸா ஸர்வம் இதம் பிபாதி , பரம்பொருளின் ஒளியால் எல்லாம் பிரகாசிக்கிறது என்றதனால் பாஸ்வான் பிரகாசிப்பவன் என்ற சொல் பொருந்தும்.

ஸர்வபக்ஷாய – எல்லாவற்றையும் உண்பவனுக்கு 
ரௌத்ராய் வபுஷே நம:- சூரியனின் வெப்பம் அதிகமானால் எல்லாம் அழிந்துவிடும் ஆதலால் ஸர்வ பக்ஷி . பகவான் சூரியன் அக்னி இதன் மூலம் எல்லாவற்றையும்ம் உட்கொள்கிறார்.

விச்வரூபத்தில் அர்ஜுனன் பார்த்தது இதுதான்.கண்ணன் வாயில்இருந்து நெருப்பு வர எல்லாரும் அதனுள்ளே போவதைப் பார்க்கிறான். அப்போது,

காலோ அஸ்மி லோகக்ஷயக்ருத் ப்ரவ்ருத்தோ
லோகாம் ஸமாஹர்த்தும் இஹ ப்ரவ்ருத்த: என்று பகவான் கூறுகிறார். இதன் பொருள்.நான்தான் காலன் அல்லது காலம்.,இந்த உலகத்தை அழிக்க முற்படுகிறேன் என்று சம்ஹார மூர்த்தியாக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளுகிறார்.

ரௌத்ராய் வபுஷே நம:-ருத்ரஸ்வரூப்த்திற்கு நமஸ்காரம்., மேற் சொன்ன நாமத்தின் விரிவாக்கம். ருத்ரன் உருவில் சம்ஹாரம் செய்பவர் என்று பொருள்.


ஆதித்ய ஹ்ருதயம் 11

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாய அமிதாத்மனே 
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

தமோக்னாய- இருட்டை போக்குபவருக்கு, இறைவன் அறியாமை என்ற இருளைப் போக்கி உள்ளத்தில் சூரியன் போல் பிரகாசிக்கிறார். கீதையில் கண்ணன் கூறுகிறான்,'தேஷாம் ஆதித்யவத் ஞானம் பிரகாசயதி தத்பரம்,' யாருக்கு அறியாமை அகன்றுவிடுகிறதோ அவர்களுக்கு ஞானம் சூரியனைப்ப்போல் பிரகாசிக்கிறது..

ஹிமக்னாய- பனியைப் போக்குகிறவருக்கு. பனி என்பது ஆங்கிலத்தில் cold hearted என்று சொல்வதைப்போல் பக்தியில்லாத அல்லது அன்பில்லாத ஹ்ருதயம். ஞானம் என்பது சூரியனைப்போல அந்தப்பனியைப் போக்குகிறது. அதைக் கொடுப்பவன் பகவான்.

சத்ருக்னாய –சத்ருக்களை அழிப்பவருக்கு. இது பகவானுக்கே பொருந்தும் அடைமொழி. இந்த இடத்தில் சூரியனை பரமாத்மாவாக வழிபட்டால் சத்ருவான் ராவணனை அழிக்கலாம என்பது பொருள்.

அமிதாத்மனே –எல்லையில்லாத ஆளுமை படைத்தவருக்கு, பரமாத்மாவின் சர்வவ்யாபித்வம், சர்வ சக்தித்வம் இதில் கூறப்படுகிறது.

க்ருதக்னக்னாய –நன்றி மறந்தவரை அழிப்பவருக்கு. நன்றி மறத்தல் என்பது இங்கு எல்லாம் வல்ல இறைவனின் கருணையால் நமக்குக் கிடைத்தவற்றை மறந்து நன்றியில்லாமல் அஹங்காரத்தில்மூழ்கி அவனை மறப்பதாகும். இந்த நம் அறியாமையை அழிப்பதால இறைவன் க்ருதக்னக்னனாகிறான்.

தேவாய – தேவனுக்கு. தீவ்யதே இதி தேவ: தீவ்யதே என்றால் பிரகாசிப்பவன் என்று பொருள்.சூரியனின் ஒளியாய் பிரகாசிப்பவன்.

ஜ்யோதிஷாம் பதயே நம:- ஒளிகளுக்கெல்லாம் தலைவனுக்கு நமஸ்காரம். எல்லா ஒளி வடிவங்களுக்கும் தலைவன் பரமாத்மா அவன் ஒளியாலேயே இந்த பிரபஞ்சமே பிரகாசிப்பதால்.

தப்தசாமீகராபாய வஹ்னயே விச்வ்கர்மணே
நம: தமோபிநிக்னாய ருசயே லோக சாக்ஷிணே

தப்தசாமீகராபாய- பொன்னொளி படைத்தவன். ஸஹஸ்ர நாமத்தில் ஸுவர்ண வர்ண: ஹேமாங்க:என்ற நாமம் காண்கிறோம்.' ய ஏஷ அந்த்ராதித்யே ஹிரண்மய: புருஷ: த்ருச்யதே ,' என்ற உபநிஷத் வாக்கியப்படி சூரியனுள் காணப்படும் பொன் மயமான புருஷனான பரமாத்மாவைக் குறிப்பவை இந்த நாமங்கள்.

வஹ்னயே –நெருப்பானவன். வஹ்னி என்றால் அக்னி. இந்த நாமம் ஸஹஸ்ர நாமத்தில் வஹநாத் வஹ்னி: என்று விளக்கப்படுகிறது. அதாவது எல்லாவற்றையும் அந்தராத்மாவாக இருந்து நிர்வஹிப்பதால் என்று பொருள். அக்னி என்று கூறினாலும் கீதையில் அவன் சொல்வதைப்போல் 'மந்த்ரோ அஹம் அஹமேவ ஆஜ்யம் அஹம் அக்னி: அஹம் ஹுதம் ,' " நானே மந்திரம், நானே யாகத்தில் விடும் நெய், நானே அக்னி நானே ஹவிஸ்." என்று பரப்ரம்மமே கூறப்படுகிறது.

விச்வகர்மணே- உலகத்தில் எல்லா செயல்களுக்கும் காரணமானவன் சூரியன் . இந்த நாமம் ஸஹஸ்ரநாமத்தில் பின வருமாறு விளக்கப் படுகிறது '.பிரம்மஸ்ருஷ்டே: பூர்வம் ஊர்த்வம் ச வித்யமானம்.' ஜகத்வ்யாபார: அஸ்ய ஏவ இதி." இதன் பொருள், எவன் ஒருவன் பிரம்மா சிருஷ்டிக்கும் முன்பே இருந்தானோ இவனிடமிருந்து இந்த சிருஷ்டி தொடங்கியதோ, இந்த பிரபஞ்சத்தின் செய்கை எல்லாம் அவனுடையதே .

. தமோபிநிக்னாய –இருளைப போக்குபவன். இது முன் கூறியதே .

ருசயே –பிரகாசம் பொருந்தியவன். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஸுருசி: சிறந்த ஒளியானவன் என்று காண்கிறோம்.

லோக சாக்ஷிணே- உலகத்திற்கு சாக்ஷியாய் உள்ளவன். சூரியன் ஒளியில் நல்லதும் நிகழ்கிறது தீமையும் நிகழ்கிறது அவன் எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருக்கிறான். பரமாத்மா ஸர்வஸாக்ஷி. எல்லா உயிர்களுக்கும் அந்தராத்மாவாக இருப்பதாலும் எங்கும் நிறைந்து இருப்பதாலும்.

ஆதித்யஹ்ருதயம் 12

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ர்ஜதி பிரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கப்ஸ்திபி:

ஏஷ;பிரபு:-இந்த இறைவன்
பூதம்-எல்லாஉயிரகளையும்
நாசயதி-அழிக்கிறார்
ததேவ – அவைகளையே
ஸ்ருஜதி-மீண்டும் ஸ்ருஷ்டிககிறார்
ஏஷ;-இவர் 
பாயதி-மீண்டும் தன்னுள் அடக்கிக் கொள்கிறார்
தபதி – உஷ்ணம் கொடுக்கிறார்
கபஸ்திபி:- தன் கிரணங்களால் 
வர்ஷதி- மழையை வர்ஷிக்கிறார்

பிரபு என்பது எல்லோருக்கும் பிரபுவான இறைவன். சம்ஹாரம் சிருஷ்டி மறுபடி சம்ஹாரம் என்பது இறைவன் செயல்.

கீதையில், தபாமி அஹம் அஹம் வர்ஷம் நிக்ரருண்ணாமி உத்ஸ்ருஜாமி ச, நானே வெப்பத்தை உண்டு பண்ணுகிறேன், அதை உள் வாங்குகிறேன் , மழையை உண்டுபண்ணுகிறேன் என்று சூரியனின் இந்தச் செயல் உண்மையில் இறைவனுடைய தே என்று காண்கிறோம். அதாவது சூரியனின் சக்தி என்பது பரம்பொருளின் ஆணையால்தான் என்பது பொருள்.

ஏஷ சஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்டித:
ஏஷ ஏவ அக்னிஹோத்ரம் ச பலம் சைவ அக்னிஹோத்ரிணாம்

வேதா: ச க்ரதவ: சைவ க்ரதூனாம் பலமேவ ச 
யானி க்ருத்யானி லோகேஷு சர்வ ஏஷ ரவி: பிரபு:

ஏஷ- இவர் 
பூதேஷு- உயிர்கள் 
சுப்தேஷு- உறங்குகையில் 
பரிநிஷ்டித: - அவைகளுள் நிலைபெற்றவராக 
ஜாகர்தி –விழித்துக்கொண்டு இருக்கிறார்

சூரியன் உறங்குவதில்லை அவனுள் இருக்கும் இறைவனும் உறங்குவதில்லை.பாற்கடலில் பள்ளிகொண்டு உறங்குவது போல் விழித்திருக்கிறான். கீதையில் கண்ணன் சொல்கிறான்,

உத்ஸேது: இமே லோகா: ந குர்யாம் கர்ம சேத் அஹம்
நான் செயற்படவில்லை என்றால் இந்த உலகம் அழிந்துவிடும்.( என் இசை நின்றால் அடங்கும் உலகே )

ஸஹஸ்ர நாமம் பூதாத்மா, எல்லாஉயிர்களுக்கும் அந்தராத்மா என்று பகவானை சொல்கிறது. 
கீதையிலும் 'ஸர்வஸ்ய் சாஹம் ஹ்ருது ஸந்நிவிஷ்டோ ,' "எல்லா உயிரிலும் நானே இருக்கிறேன் "என்று கூறுகிறார் 
.
ஏஷ ஏவ – இவரே 
அக்னிஹோத்ரம் ச –யாக நெருப்பாகவும்
அக்னிஹோத்ரிணாம் – யாகம் செய்பவர்களுக்கு
பலம் சைவ –அதன் பலனாகவும் இருக்கிறார்.
வேதா: ச- வேதங்களும் 
க்ரதவ: ச- யாகங்களும் 
க்ரதூனாம் பலமேவ ச – அந்த யாகங்களின் பலன்களும் 
யானி க்ருத்யானிஎல்லாசெயல்களும் லோகேஷு - உலகில் நடக்கும் 
ஸர்வ- அந்த எல்லாவற்றிற்கும்
ஏஷ - இந்த ரவிதான் 
பிரபு:-பிரபுவாக இருக்கிறார்.

ரவி என்பதன் பொருள் 'ஹிரன்யகர்பா: சிசிர: என்ற ஸ்லோகத்தில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது.

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ,
யக்ஞப்ருத் யக்ஞகருத் யக்ஞீ யக்ஞபுக் யக்ஞஸாதன:
யக்ஞாந்தக்ருத் யக்ஞகுஹ்யம் அன்னம் அன்னாத ஏவ ச என்றஸ்லோக்த்தின் பொருள், 
யாகங்களை பிறப்பிப்பதும் அவன், அவன் பொருட்டே அவை செய்யப்படுகின்றன, அதை அங்கீகரிப்பவனும் அவன் , அதன் சாதனங்களும் அவனே , அதை முடிவுறச்செய்பவனும் அவனே. அதன் பொருளும் அவனே .
அன்னம் என்பது இங்கு அதன் பலனைக்குறிக்கிறது. அனாதத என்றால் அது அவனுக்கே போய்ச்சேருகிறது என்று பொருள்
. 
கீதையிலும்' ப்ரம்மார்ப்பணம் ப்ரம்ம ஹவி: ப்ரம்மாக்நௌ பிரம்மணா ஹுதம்,'
அக்னி, அதில் போடப்படும் ஹவிஸ் , அதன் கர்த்தா எல்லாம் பிரம்மமே என்று கூறுகிறார்.



ஆதித்யஹ்ருதயம் -13

இனி வரும் ஸ்லோகங்கள் இந்த ஸ்தோத்திரத்தின் பலனைக் கூறுவதாகும். அதாவது பலஸ்ருதி.

ஏனம் ஆபத்ஸு க்ருச்றேஷு காந்தாரேஷு பயேஷு ச 
கீர்த்தயன் புருஷ: கஸ்சித் நாவஸீததி ராகவ

ராகவ- ராமா
கஸ்சித்- எவன் ஒருவன் 
ஏனம்- இவரை
ஆபத்ஸு- ஆபத்திலும்
க்ருச்றேஷு – கஷ்டத்திலும்
பயேஷு- பயங்கரமான
காந்தாரேஷு- காடுகளிலும்
கீர்த்தயன் – துதிக்கிறானோ
ந அவஸீததி- அவன் வருத்தம் அடைவதில்லை.

கீதையில் பகவான், 
கௌந்தேய பிரதிஜாநீஹி ந மே பக்த: ப்ரணச்யதி-அர்ஜுனா என் பக்தன் ஒருபோதும் அழிவது இல்லை என்று கூறுகிறார். 
விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பலஸ்ருதியில், இந்த ஸ்தோத்திரத்தை தினம் கூறுபவர் எல்லாவித பயத்திலிருந்தும் ஆபத்திலிருந்தும் விடுபடுகிறார்,
பயாத்முச்யேத பீதஸ்து முச்யேத்ஆபன்ன ஆபத: என்று காண்கிறோம்.

பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி
அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் தம் வதிஷ்யஸி
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்ய:ஜகாம ச யதாகதம்

விவஸ்வந்தம் –விவஸ்வான் எனப்படும் 
பாஸ்கரம் பாஸ்கரனாகிய 
புவனேஸ்வரம்- இந்த ப்ரஞ்சத்துக்கு அதிபதியை 
பூஜயஸ்வ-துதிப்பாயாக

ஏதத்- இந்த ஸ்தோத்திரத்தை 
த்ரிகுணிதம்- மூன்றுமுறை 
ஜப்த்வா-ஜபித்து 
யுத்தேஷு –யுத்தத்தில் 
விஜயிஷ்யஸி- வெற்றி பெறுவாயாக

அஸ்மின் க்ஷணே- இந்தக்கணத்தில் 
மஹாபாஹோ-மஹாவீரனாகிய நீ
ராவணம் தம் –ராவணனை
வதிஷ்யஸி- வதம் செய்வாய்

ஏவம் உக்த்வா –இவ்வாறு சொல்லிவிட்டு 
ததா அகஸ்த்ய:- அப்போது அகஸ்தியர் 
ஜகாம ச யதாகதம் – வந்த வழியே சென்றார்


ஆதித்ய ஹ்ருதயம் -14

ஏதத் ச்ருத்வா மஹாதேஜா: நஷ்டசோகோ அபவத் ததா 
தாரயாமாஸ சுப்ரீத: ராகவோ ப்ரயதாத்மவான்

மஹாதேஜா:- மகாதேஜச்வியானவரும்
ப்ரயதாத்மவான் – மனதை அடக்கியவரும் 
ராகவ: -ராமன்
ஏதத் ச்ருத்வா-அதைக் கேட்டு 
நஷ்டசோக: -கவலை நீங்கியவராக 
அபவத்- ஆனார்.
ஸுப்ரீத: - சந்தோஷத்துடன் 
தாரயாமாஸ – அதை ஏற்றுக்கொண்டார்

ஆதித்யம் ப்ரேக்ஷய ஜப்த்வா து பரம் ஹர்ஷம் அவாப்தவான் 
த்ரிராச்சம்ய சுசிர்பூத்வா தனுராதாய வீர்யவான்

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வ யத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ அபவத்

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய – சூரியனைப் பார்த்து
ஜப்த்வா து – இந்த ஸ்தோத்திரத்தை துதித்து
பரம் ஹர்ஷம் – மிகுந்த மகிழ்ச்சியை
அவாப்தவான் – அடைந்தார்

த்ரிராசம்ய – மூன்று முறை ஆசமனம் செய்து
சுசிர்பூத்வா- சுத்தியுடன்
வீர்யவான் –வீரத்துடன் 
தனு: ஆதாய – வில்லை ஏந்தினார்

ராவணம் ப்ரேக்ஷ்ய – ராவணனைப் பார்த்து
ஹ்ருஷ்டாத்மா- உவகையுடன் 
யுத்தாய ஸமுபாகமத்- யுத்தத்திற்கு சென்றார் 
தஸ்ய வதே- அவனைக் கொல்வதில் 
சர்வ யத்னேன – முழு முயற்சியுடன் 
மஹதா த்ருத: : -மிகக் உறுதியாக
அபவத்-ஆனார்

: அத ரவி: அவதத் நிரீக்ஷ்ய ராமம் 
முதிதமனா: பரமம் ப்ரஹ்ர்ஷ்யமாண:
நிசிசர பத்தி சம்க்ஷயம் விதித்வா 
ஸுரகணமத்யகத: வச: த்வர இதி

அத- அதன் பின் 
ரவி:-சூரியபகவான்
முதிதமனா: -சந்தோஷம் அடைந்து 
ஸுரகணமத்யகத:- தேவர்கள் நடுவில் இருந்து
ராமம் நிரீக்ஷ்ய – ராமனைப் பார்த்து
நிசிசரபதிஸம்க்ஷயம்- - அரக்கர்தலைவனின் அழிவை 
விதித்வா-அறிந்து 
பரமம் ப்ர்ஹ்ருஷ்யமாண: - மிகவும் மகிழ்ச்சியுடன் 
த்வர – விரைவில் ஆகட்டும் 
இதி – என்ற
வச: அவோசத் – வார்த்தையைக் கூறினான்


இத்துடன் ஆதித்ய ஹ்ருதயம் முடிவுறுகிறது


No comments:

Post a Comment