Tuesday, December 19, 2017

Pray to chandi for caturvidha purushaartham

ஜயசக்தி!
*ஆரோக்யார்த்தே அர்ச்சயேத் ஸூர்யம் தர்மமோக்ஷாய மாதவம்
சிவம் தர்மார்த்தமோக்ஷாய சதுர் வர்காய சண்டிகாம்*
நமக்கு உடல் குன்றும்போது நலம்வேண்டி கண்ணுக்கு தெரிந்த ஸ்ரீஸுர்யபகவானை வேண்டவேண்டும். ஸ்ரீஸுர்யநமஸ்காரம் செய்தல் வேண்டும். நாம் தர்மப்படி வாழவும், மோக்ஷம்இன்பம் கிட்டவும் ஸ்ரீமாதவனான விஷ்ணுவை வேண்டவேண்டும். தர்மம், அர்த்தம், மோக்ஷம் என்ற மூன்று புருஷார்த்தங்க ளையும் அடைய வேண்டி ஸ்ரீசிவபெருமானை வேண்டவேண்டும். ஆனால் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு அடைவுகளையும் *ஸ்ரீசண்டிகாதேவி* ஒருவளே கொடுத்து விடுகிறாள் என பத்ம புராணம் சொல்கிறது. பூர்வ ஜன்ம புண்ணியத்தாலோ ஸ்ரீகுருகடாக்ஷத்தாலோ இந்த ஜன்மாவில் சண்டியை போற்றவும், பூஜிக்கவும், படிக்கவும் என ஒரு அற்புதமான அருள் கிடைத்துள்ளது. அவள் எத்தனைவிதமான பூலோக காமனைகளை வேடுமானாலும்  நமக்கு அருளட்டும். அதற்குமேல் மிகப்பெரிய பலனான மீண்டும் பிறவா நிலையை அருளும் தன்மையில் அல்லவா சண்டி நம்மை அமைந்து அருள் பாலிக்கிறாள். புரிந்து செயல்பட அந்த புண்ணியள் அருளட்டும்!

This verse is found in Padmapurana 1.49.65 (srishti Khanda, chapter named Sadachara Varnana)

आरोग्यार्थंचसूर्यंचधर्ममोक्षामाधवम् 
शिवंचकृत्यकामार्थंसर्वकामायचंडिकाम् ६५

Bhaskararaya has quoted this verse in his commentary on Lalita Sahasranama Phalasruti.

No comments:

Post a Comment