Courtesy: https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0ahUKEwjlpsOl7ZnVAhXETrwKHeoVDY8QFggnMAA&url=https%3A%2F%2Fthiruvonum.wordpress.com%2F2014%2F12%2F17%2F%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%2580-%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B7%25E0%25AF%258D%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%2580-p-b-a-%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%2F&usg=AFQjCNFpd1zAtpfox_Wfk8ug2Q7yD5FTvQ
ஸ்ரீ பாஷ்யம் –ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்திர சாஸ்திரம் –
நான்கு அத்யாயங்கள்
பதினாறு பாதங்கள்
நூற்று ஐம்பத்து ஆறு அதிகரணங்கள்
ஐநூற்று நாற்பத்து ஐந்து சூத்தரங்கள்
தத்வ ஹித புருஷார்த்தங்களை சம்சய விபர்யயம் அற நிஷ்கரிஷித்து விளக்கக் கூடியது ஸ்ரீ பாஷ்யம் -நமக்கு ஜீவாது-
ஜிஜ்ஞாச அதிகரணம்
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாச
அத -அதற்குப் பிறகு -கர்மம் விசாரம் செய்து முடிந்த பிறகு
அத -கர்ம விசாரம் முடிந்த காரணத்தினாலேயே
ப்ரஹ்ம ஜிஜ்ஞாச-இச்சைக்கு இலக்கான ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கது
கர்மங்களின் அல்ப அஸ்த்ர பலன்களில் நசை ஒழிந்து
மோஷ புருஷார்த்தம் விரும்புவர்கள் ஆதலால்
அந்த ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் இப்படிப் பட்டது
அதனை பெற உபாயம் இன்னது
பெற்று அனுபவிக்கும் பலன் இப்படிப் பட்டது
சாதன சம்பத்தியின் ஆனந்தரயமே அத சப்தார்தம் என்பர் சங்கரர் -இத்தை மறுத்து ஸ்ரீ பாஷ்யம்
ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் பற்றியும் கூறுவதை மறுக்க வேண்டுமே
-லகு பூர்வ பஷம்
கர்ம மீமாம்சை -அர்த்த வாத அதிகரணம்
ஆம்நா யஸ்ய க்ரியார்த்தத்வாத்
ஆநர்த்தக்யம் அததர்த்தாநாம்
தஸ்மாத் அநித்யமுச்யதே
வாயவ்ய்ம் ஸ்வேத மால பேத பூதிகாம -கருமம் கர்தவ்யமாக சொல்லும் வேத வாக்கியம்
அடுத்த வாக்கியம் வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா -முன் சொன்ன வேத வாக்ய ஆராத்யமான தேவதை வாயு வின் பெருமையை சொல்லும் வாக்கியம்
சீக்கிரமாக பலன் அளிக்க வல்ல தேவதை
இப்படிப் பட்ட வாக்கியம் அர்த்த வாத வாக்கியம்
விதி வாக்யங்கள் இல்லை
விதி நாது ஏக வாக்யத்வாத் ஸ்துத்யர்த்தேன விதீ நாமஸ்யு -என்ற சூத்ரம் பரிகாரம்
விதி வாக்யதுடன் ஏக வாக்யமாகக் கொண்டு பிராமாண்யம் பெறத் தட்டில்லை
சக்தி கிரஹணம்-சிறுவர்கள் கேட்டு அறிவது
ஆநய
காம் நய
அஸ்வம் ஆநய
எல்லா பதங்களும் யத் கிஞ்சித் கர்த்தவ்யார்த்த பரங்களே
கார்ய பரங்க ளான வாக்யங்களுக்கு பிரமாண்யம் உண்டு
ஏவஞ்ச கார்ய ரூபம் இல்லாத பர ப்ரஹ்மத்தின் இடத்தில்
வேதாந்த வாக்யங்களுக்கு தாத்பர்யம் இருக்க முடியாமையாலே
வேதாந்த விசார ரூபமான ப்ரஹ்ம விசார சாஸ்திரம்
ஆரம்பிக்கத் தக்கது அன்று -பூர்வ பஷம் ப்ராப்தம்
இனி பூர்வ சித்தாந்தம்
விருத்த வ்யவஹாரத்தினாலேயே சிறுவர் களுக்கு முதல் வியுத்பத்தி உண்டாகிறது என்பது தவறு
இதோ சந்தரன் இதோ கிளி இதோ குதிரை இதோ மாமா காட்டி பூர்வ ஜன்ம வாசனையாலே
பதங்களுக்கும் அர்த்தங்களுக்கும் உள்ள சம்பந்தம்
ஒரு கார்யத்திலும் அன்வயியாத வஸ்துவிலேயே சக்தி கிரஹணம் உண்டாகின்றது என்று மூதலிக்கப் பட்டது
கார்ய பரமான வாக்யத்தில் இருந்து தான் சக்தி கிரஹணம் உண்டாகிறது என்பதும் தவறு
தேவ தத்தா உனக்கு பிள்ளை பிறந்தது
ப்ரபாகரர்கள் சகல பதங்களும் கார்யார்த்த பரங்கள் என்று கூறுவது உக்தி அற்றது
சித்த பரமான வாக்யத்தில் இருந்தும் சக்தி கிரஹணம் உண்டாகும்
கர்ம விசாரம் செய்த அளவிலே கர்ம பலன்கள் அஸ்திரம் என்று உணர்ந்து
கர்ம விசார இச்சை தொலைந்து
கர்ம விசார இச்சையே ப்ரஹ்ம விசார இச்சைக்கு விரோதியாக இருந்ததால்
இந்த பிரதி பந்தம் தொலையவே
ப்ரஹ்ம விசாரத்தில் இச்சையும்
அதில் பிரவ்ருத்தியும் அடுத்த படியாக உண்டாகிறது
எனவே ப்ரஹ்ம விசாரத்தை குறித்து
கர்ம விசாரம் நியமேன அபெஷிதம் என்றது ஆகிறது
————————————————————————————
இரண்டாவது -ஜனமாத்யதிகரணம்
சூத்ரம் ஜன்மாத் யஸ்ய யத
ஜென்மாதி –அஸ்ய -யத மூன்று பதங்கள்
ஜென்மாதி உத்பத்தி ஸ்திதி பிரளயங்கள்
அஸ்ய -கண்ணால் காணப்படும் இந்த சேதன மிஸ்ரமான பிரபஞ்சத்துக்கு
யத -எந்த வஸ்து வின் இடத்தின் இருந்து ஆகின்றனவோ அதுவே பர ப்ரஹ்மம்
தைத்ரியம் பிருகு வல்லி –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம
யதோவா இமானி பூதானி
யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி
தத் விஜிஜ்ஞா சஸ்வ
தத் ப்ரஹ்மேதி
கார்ணத்வ ரூபமான லஷணம்
பூர்வ பஷம்
வ்யாவர்த்தாக லஷணங்கள் மூன்று ப்ரஹ்மம்
சித்தாந்தம்
தேவ தத்தன் கறுத்து பருத்து யுவாவாயும் செந்தாமரைக் கண்ணன் ஆயும்
யுவா நீலோ வாமன பங்குச்ச தேவதத்த –
விசேஷணம் உப லஷணம் இவை
விருத்த தர்மங்கள் கால பேதத்தால் ஒரே வ்யக்தி இடம் இருக்கக் குறை இல்லையே
—————————————————————————————–
மூன்றாவது அதிகரணம்
சாஸ்திர யோநித்வாத்
யோனி காரணம்
பிரத்யஷம் அனுமானம் கொண்டு அறிய முடியாத்
அப்பஷோ வாயு பஷ
தீர்த்தம் ஒன்றையே குடிப்பவன்
வாயுவை மாதரம் பஷிப்பவன் போலே
சாஸ்திரம் ஒன்றையே பிரமாணமாக கொண்ட படியாலே
சாஸ்திரம் ஏவ யோனி
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவித்
பர ப்ரஹ்மம் அனுமானத்தால் சித்திக்க கூடியதாக இருப்பதால் அனுமானம் ஈஸ்வர சதானத்தில் சக்தி உடையது அன்று
வேதாந்த சாஸ்திரமே பிரபல பிரமாணம்
சாஸ்திர யோநித்வாத் –
யஸ்ய தத் -சாஸ்திர யோனி -தஸ்ய பாவ -சாஸ்திர யோநித்வம் -தஸ்மாத் சாஸ்திர யோநித்வாத் -சாஸ்திரம் ஒன்றையே
-பிரமாணமாக கொண்டது ஆகையினால் வேதாந்த சாச்த்ரத்தினாலே ப்ரஹ்ம விசாரம் செய்ய வேணும் என்றதாயிற்று
————————————————————————————–
நான்காவது சமன்வ்யாதிகரணம்
சூத்ரம்
தத் து ச்மன்வயாத்
தத் கீழ் சூத்ரத்தில் சொல்லப் பட்ட சாஸ்திர பிரமாண கதவம்
சமன்வயாத் நன்றாக புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியினால்
புருஷார்த்தத்வேன சம்பந்தமே சமன்வயமாவது
ஸ்வயம் பிரயோஜனம் பரம புருஷார்த்தம்
தத் து சமன்வயாத் -இதில் ப்ரஹ்மண-என்ற ஒரு பதமும் -சாஸ்தரேண -என்ற ஒரு பதமும் தருவித்துக் கொள்ள வேணும்
வேதாந்த சாஸ்திரங்கள் -மூலம் விசாரித்து அடையும் -ப்ரஹ்ம ஞானம் ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம் -என்றதாயிற்று –
அத்ராஸ்தே நிதிரிதிவத் –ரங்கேச த்வயி சகலாஸ் சமன்வயந்தே –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-21-
————————————————————————————–
இந்த நான்கும் சதுஸ் சூத்ரி
—————————————————————————————
அடுத்து ஈஷத்யதிகரணம்
ஈஷதேர் நா சப்தம் –1-1-5-
ஈஷதே ந அசப்தம் -அசப்தம் பிரதானம் -சாஸ்திர பிரமாணமாக உடையது அல்லாமையால் அனுமான கம்யமானது பிரதானம்
ந -சத் வித்யையில் உள்ளதாய் -ஜகத் காரணத்தை சொல்லுமதான சச் சப்தத்தால் வாச்யம் அன்று
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-சச் சப்த நிர்திஷ்ட
வஸ்து ப்ரஹ்மமே ஒழிய பிரதானம் இல்லை
வஸ்துவுக்கு ஈஷணம் சங்கல்ப கர்த்ருத்வம்
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6- என்று பிரச்துதமான சத்துக்கு சேதனத்வம் சொல்லி இருக்கையாலே
ஈஷணம் சேதனனுக்கு அசாதாரணமாய் முக்கியமான ஈஷணம் என்பதே விவஷிதம்
மேலே -6-14-2- தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே -என்று சச் சப்த வாச்யத்தை உபாசிப்பவனுக்கு
தேகத்தில் நின்று விடும் அளவே தாமதம் -உபாசனத்து லஷ்யம் பிரதானமாய் இருக்க ஒண்ணாதே
தொடக்கத்தில் யேநாஸ்ருதம் ஸ்ருதம் -என்று ஒன்றைத் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்த படி ஆகுமேஎன்று சொல்லி
ஸ்தூல சூஷ்ம சேதனங்களை சரீரமாக கொண்ட ப்ரஹ்மமே விவஷிதம்
சதா சோம்யே ததா சம்பன்னோ பவதி -6-8-1-லயம் சொல்லி ஸ்வ மவபீதோ பவதி என்கையாலே சச் சப்த வாக்கியம் பரமாத்மாவாகவே இருக்க வேணும் என்றதாயிற்று
இந்த அதிகரணத்தில் இது தலையான சூத்ரம்
கௌணச்சேத் நாத்தம சப்தாத்
தந் நிஷ்டஸ்ய மோஷோபதேசாத்
ஹேயத் வாவச நாச்ச
பிரதிஜ்ஞ்ஞா விரோதாத்
ஸ்வா ப்யயாத்
கதி சாமான்யாத்
ஸ்ருத்வாச்ச –1-1-12-
என்கிற ஏழு சூத்ரங்களும் உள்ளன
இவற்றின் பொருள் கீழே பார்த்தோம்
——————————-
ஆனந்தமயாதிகரணம் -1-1-6
ஆனந்தமய அப்யாசாத் -1-1-13-அளவு கடந்த ஆனந்தம் ஜீவாத்மாவுக்கு பொருந்தாது பரமாத்மாவுக்கே பொருந்தும்
ஆனந்த மய அப்யாசாத் –1-1-13-
அந்ய பதம் மேலே உள்ள -அந்தரதிகரணம் இரண்டாம் சூத்ரம் -பேத வ்யபதேசாச்ச அந்ய -வருவித்துக் கொள்ள வேண்டும்
ஆனந்த மய -சப்தத்தினால் சொல்லப் படும் புருஷன் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவனாக இருக்க வேண்டும்
–அளவு கடந்தததாக ஓதப்படுவதால் என்றபடி
ஆனந்த வல்லி-ஆனந்த மயா வித்யா
தைத்ரிய ஆனந்த வல்லி
தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞானமயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்று
ஆத்மாவை பிரஸ்தாபித்து -அதற்கு மேல்
சைஷா ஆனந்தச்ய மீமாம்ஸா பவதி -என்று தொடங்கி
தே யே சதம் பிரஜாபதரா நந்தா ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்யச அகா மகாதச்ய -அகா மகாதச்ய மகா விரக்த்ன்
ச்ரோத்ரியன் வேதாந்தம் சரவணம் பண்ணினவன்
உபாசன பிரியனான பகவானால் -நிருபாதிகம் இல்லை சோபாதிகம்
ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -இயற்க்கை யாக இவன் ஒருவனே பர ப்ரஹ்மம்
கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் பிரக்ருதமான ஆனந்தம் அடைய முடியும்
கோ வா பராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தம் அடைய முடியும்
ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மா வன்றோ
ஆனந்தயதி- எல்லா வித ஆனந்தத்தையும் விளைவிக்கின்றது
கோஹ்யேவான்யாத் க பராண்யாத் எதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹ்யே வா நந்தயாதி
உத்தர நாராயண அனுவாகம் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய
பந்தா வித்யதே அயநாயா -என்பதாலும்
ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக மகா புருஷனை உபாசிப்பவன்
அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தம் பெற்றவன் ஆகிறான்
அயனாய -மோஷ ஆனந்தம் அடையும் பொருட்டு
அந்யா பந்தா ந வித்யதே -அந்த மகா புருஷனைத் தவிர வேறு உபாயம் இல்லை
அன்வய வ்யதிரேக முகேன இரண்டு ஸ்ருதிகளும் சொல்லி
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
-ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது
————————————————————————————
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -என்று ஆனந்த வல்லியில் ப்ரஹ்மத்தை பிரஸ்தாபித்து
சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம என்று லஷணம் சொல்லி
தஸ்மாத்வா ஏதஸ் மாதாத்மன ஆகாசாஸ் சம்பூத -என்று
அந்த ப்ரஹ்மா ஆத்மா என்றும் அதில் நின்றும் ஆகாசாதி பதார்த்தங்கள் உண்டாவதும்
அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு
தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -சரீர சம்பந்தம் உண்டாவது சொல்வதால்
இந்த ஆனந்தமயனான ஆத்மா ஜீவாத்மா -இது பூர்வ பஷம்
நிருபாதிகமான ஆனந்தம் அந்த பர பிரமம் ஒருவனுக்கே
சகல சராசரங்களையும் சரீரமாக கொண்டவன் என்பதால்
ஆனந்த மயா -விகாரம் இல்லை ஆனந்தம் மலிந்த பரமாத்மா
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன
வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத அப்ரமேய ஆனந்த மயன் பரமாத்மாவே
விகார சப்தான் நேதி சேன்ன ப்ராசுர்யாத் -இரண்டாவது சூத்ரம் இந்த அதிகரணம்
யதுக்தம் –ஆனந்த ப்ராசுர்யம் அல்ப துக்க சத்பாவம் அவகமயதீதி -தத் அசத்
தயை குணத்தால் ஆஸ்ரிதர் துக்கம் அனுசந்தித்து தானும் துக்கிப்பது குணப் பிரசுர்யம் தான்
ஆனந்த மயன் என்றால் சிறிது துக்கம் கலாசி இருக்குமோ என்னில்
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக-சுருதி அகில ஹேய பிரத்ய நீகத்வம் சொல்லும்
——————————————————————————————
பிரக்ருதியில்
ஜன்ம காரணத்வம்
ஸ்திதி காரணத்வம்
லய காரணத்வம்
கால பேதத்தினால் ஒரே வ்யக்தியினிடம் ஓன்று சேர்ந்து இருக்கக் கூடியவை என்பதால்
அவை வருத்தங்கள் ஆகாதே
இதனால் ப்ரஹ்மத்துக்கு பஹூத்வாபத்தி எனபது இல்லை
உழவன் ஒருவனே விதை விதைப்பதும் பயிர் விளைப்பதும் அறுப்பதும் போலே
லஷ்மி பதித்வம் அசாதாராண சிஹ்னம்
—————————————————————————————
இனி மூன்றாவது அதிகரணம் -சாஸ்திர யோநித்வா அதிகரணம்
ஸூத்த்ரம் -சாஸ்திர யோநித்வாத் –
யோநி யாவது -காரணம் -சாஸ்த்ரத்தை பிரமாணமாகக் கொண்ட படி என்கை
அப்பஷோ வாயு பஷோ -தீர்த்தம் ஒன்றையே குடிப்பவன்
வாயுவை மாதரம் பஷிப்பவன் போலே
சாஸ்திரம் ஒன்றையே பிரமாணமாக கொண்டது -என்கை –
இங்கு பூர்வ பஷம் –
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -வேறு எந்த பிரமானத்தாலும் ஏற்படாத விஷயத்தில் தான்
சாஸ்திரம் பிரவர்த்திப்பது -என்றும்
பர ப்ரஹ்மம் -அனுமான பிரமாணத்தால் சித்திக்க கூடியதாக இருப்பதாலும்
பூம் யங்குராதிகம் ச கர்த்ருகம் கார்யத்வாத் கடவத் –எனபது அனுமான சரீரம்
கர்த்தாவை முன்னிட்டு -வீடு பானை போலே —
சித்தாந்தம்
விஸ்வாமித்ரர் சிருஷ்டி அறிவோம் -விசித்திர ஜகத் சிருஷ்டி ஜீவா கோடியில் ஒருவர் பண்ண -அந்ய மிந்த்ரம் கரிஷ்யாமி –
ஆகவே சாஸ்திரமே பர ப்ரஹ்ம சித்தியில் பல பிரமாணம்
அப்படிப் பட்ட வேதாந்த சாஸ்திரம் ஒன்றாலே பர ப்ரஹ்ம விசாரம் செய்வது நன்றாக பொருந்தும்
—————————————————————————————–
இனி -நான்காவது சமன்வயாதிகரணம் –
ஸூத்த்ரம் -தத் து சமன்வயாத்
தத் -கீழ் சொல்லப்பட்ட சாஸ்திர பிரமாணகதவம்
சமன்வயாத் -நன்றாக புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியில் –
பூர்வபஷம் –
தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் உண்டாக வேணுமே
பிரயோஜனத்வத்தில் தான் அந்த விருப்பம் உண்டாகும்
இஷ்ட பிராப்தி -பிரவர்த்தியாலும் –யாகம் -ஸ்வர்க்கம் கொடுப்பது போலே –
அநிஷ்ட பரிகாரம் -நிவ்ருத்தி யாலும்
வஸ்துவே கண்ணுக்கு தெரியாமையால் பிரயோஜனத்வம் சொல்ல முடியாதே –
சித்தாந்தம் –
வேதாந்த வாக்யங்கள் பலவும்
அது தான் ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம் -என்று சொல்வதால்
பட்டர் ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் உத்தர சதகம் -21-
அத்ராச்தே நிதிரிதிவத் –ரங்கேச த்வயி சகலாஸ் சமன்வயந்தே –ஸ்லோகம் -அனுசந்தேயம்
————————————————————————————–
இந்த நான்கு அதிகரண்ங்களும் -நான்கு ஸூ த்த்ரங்கள்
சதுஸ் ஸூத்ரி -என்று வழங்கப்படும்
சாஸ்திரம் ஆரம்பிக்க அவசியம் இல்லை என்பதை நிரசித்து
இனி மேல் சாஸ்திரம் ஆரம்பிக்கிறது –
———————————————————————————–
ஈஷத் அதிகரணம் -1-1-5–இதில் ஜகத் காரண வஸ்துவுக்கு
சங்கல்ப விசேஷம் ஓதப்பட்டு உள்ளது
அந்த சங்கல்பம் கௌணம் அன்றிக்கே முக்கியமாக நிர்வகிக்க வேண்டி இருப்பதால்
அப்படிப் பட்ட சங்கல்பத்துக்கு ஆஸ்ரய பூதமான ஜகத் காரண வஸ்து
அசேதனமான பிரதானமாய் இருக்க முடியாது என்று நிரூபிக்கப் படுகிறது
அசேதனம் இல்லாமல் ஜீவனே ஜகத் காரணம் என்றால் என்ன -என்பதற்கு
பரிகாரமாக
அடுத்த அதிகரணம் அவதரிக்கின்றது –
———————————————————————————
ஆனந்த மய அதிகரணம்
இதில் தலையான ஸூத்த்ரம் -ஆனந்த மயோப்யாசாத் -1-1-13-
இதற்கு மேல் உள்ள அந்தர் அதிகரணத்தில் இரண்டாவது ஸூ த்ரம்-பேத வ்யபதே சாச்சான்ய-என்கிற ஸூத்த்ரத்திலே
இருந்து அத்ய -பதம் எடுத்துஆனந்த மய அத்ய அப்யாசாத் -என்றதாயிற்று
ஆனந்த மய -ஆனந்த மய சப்தத்தால் குறிக்கப் பட்ட புருஷன்
அத்ய -ஜீவாத்மாவில் காட்டிலும் வேறு பட்ட பரமாத்வாகவே ஆகக் கடவன்
ஏன் என்னில்–அப்யாசாத் -அளவு கடந்ததாக ஓதப்பட்ட ஆனந்தம் உடைமை -என்பதாலே
தைத்திர உபநிஷத் ஆனந்த வல்லி-
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்கிற வாக்யத்தினால்
ஆனந்தமயமான ஆத்மாவை பிரஸ்தாபித்து –
அதுக்கு மேலே –
சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி -என்று தொடங்கி
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய -என்னும் அளவாக
ஆனந்த மயமான ஆத்மாவுக்கு உள்ள ஆனந்த அளவு கூறும் அடைவில்
ச்ரோத்ரியன் -வேதாந்த சரவணம் பண்ணினவன் -முக்தன் -அவனுக்கும் அப்படிப் பட்ட 100 மடங்கு நான் முகனை விட -ஆனந்தம்
அகாமஹத –விஷய விரக்தன் -என்றபடி
முக்தானந்தம் சோபாதிகம்-நிருபாதிகம் அன்று
ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -காரணம் ஒன்றும் சொல்லப் பட வில்லை
நிருபாதிகமான ஆனந்தம் பர ப்ரஹ்மத்துக்கு மட்டுமே -என்றதாயிற்று–
ஆனந்த வல்லியை -ஆனந்த மய வித்யா -என்பர் வேதாந்திகள் -அந்த வித்தையில் –
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது –
இதன் பொருளாவது
கீழே சொல்லப் பட்ட ஆகாச சப்த வாச்யமான வஸ்து
நிருபாதிகமாயும் அபரிச்சின்ன ஆனந்தம் உடையதாய் அல்லாமல் இருக்குமானால்
கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் –
ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ
உத்தர நாராயண அனுவாகத்திலும் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதனாலும்
இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகின்றது
ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக அம மகா புருஷனை உபாசிக்கிறவன்
அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தத்தைப் பெற்றவன் ஆகிறான்
அயனாய -அந்த மோஷ ஆனந்த பிராப்தியின் பொருட்டு
அந்ய பந்தா ந விந்த்யதே -அந்த மகா புருஷனைத் தவிர்ந்து வேறு ஒரு உபாயம் இல்லை –
ஏஷஹயே வா நந்தயாதி -என்கிற சுருதி வாக்யத்தில் அன்வயன முகேன தெரிவிக்கப் பட்ட அர்த்தமே
நான்ய பந்தா வித்யதே அயனாய -என்று வ்யதிரேக முகத்தாலே தெரிவிக்கப் பட்டது
உபய ஸ்ருதிகளும் ஏக அர்த்தம்
லஷ்மி பதியே விஷய பூதன் –
இன்னமும் ஆனந்த மய வித்யையில்-
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்கிற வாக்யத்தினாலே
ஆனந்த மயனையும் ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உள்ள
புண்டரீ காஷனையும் ஒன்றாக சொல்லி இருப்பதால்
ஆனந்த மய வித்யாவேத்யனும் புண்டரீ காஷனும் ஆனவன்
பரம புருஷனே -என்ற அர்த்தம் தேறிய படி-
பூர்வ பஷம்-
ஆனந்த வல்லியில் -ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்று ப்ரஹ்மத்தை பிரஸ்தாபித்து
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்று அந்த ப்ரஹ்மம் லஷணம் கூறி
தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மன ஆகாசஸ் சம்பூத -இத்யாதி
வாக்யத்தினால் அந்த ப்ரஹ்மம் ஆத்மா என்னும் இடத்தையும்
அதில் நின்றும் ஆகாசாதி பதார்த்தங்களின் உத்பத்தியும் சொல்லி
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் –அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்ற அளவால்
உபாக்ராந்தமான ஆத்மா உபதேச பரம்பரை யானது ஆனந்தமயனில் சமாப்தி செய்யப் பட்டு இருக்கிறது –
ஆகையால் உபக்ரமித்த ப்ரஹ்மம் ஆனந்தமயமான ஆத்மாவே என்று நிச்சயிக்கப் படுகிறது –
அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு -தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -என்ற உத்தர வாக்யத்தில்
சரீர சம்பந்தித்வம் ஆகிற சாரீரத்வம் சொல்லப் பட்டு இருக்கிறது
கர்ம பரவசனான ஜீவாத்மாவுக்க்கே கர்மபல அனுவர்த்தமாக சரீர சம்பந்தம் சம்பவிக்கும்
அகரமா வச்யனான பரம புருஷனுக்கு சம்பவிக்க நியாயம் இல்லை
ஆகவே ஆனந்தமயனான ஆத்மா ஜீவாத்மா தான் என்னும் இடம் சித்தம் –
சித்தாந்தம் –
நிருபாதிக ஆனந்தம் உடைமை பரமாத்வுக்கு மட்டுமே –
சகல சராசரங்களையும் சரீரமாக கொண்டவன் அவன் என்று ஒத்தப் படுவதாலும்
ஆனந்தமயம் -மய பிரத்யகம் விகாரம் அர்த்தம் ஆகையாலே
விகாரம் அற்றவன் -பரமாத்வாவுக்கே
அன்ன மய யஞ்ஞா -இங்கே மயம்-ப்ராசுர்யம் -மலிவு என்றே பொருள்
அன்னம் மலிந்த வேள்வி
இங்கும் ஆனந்தம் மலிந்த பரமாத்மா -என்பதால் விகார வாதம் அப்ரசித்தம் –
அடுத்த படியாக
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நிபிபேதி குதச்சன-என்று
வாக்குக்கும் நெஞ்சுக்கும் எட்டாதபடி அப்ரமேயமான ஆனந்தம்
உடையவனாக ஓதப்பட்ட பரமாத்மாவின் இடத்தில் அன்றோ
மலிந்த ஆனந்தம் உடைமை தேறக் கடவது –
மேலும் ஒரு வாதம்
ஆனந்த பிராசுர்யம் -என்றால் துக்கம் சிறிது உண்டு என்றும் தோற்றும் இல்லையா
எத்தைக் காட்டிலும் ஆதிக்யம் என்னும் பொழுது
ஏவஞ்ச அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதானம் -என்னப் படுகிற
பர ப்ரஹ்மம் இடத்தில் ப்ரசுர்ய ஆனந்த சாலித்வம் என்று
பரிஷ்கரிக்கப் பட்ட ஆனந்த மயத்வம் சொல்லுவதற்கு இல்லை என்பதாக –
இதுவும் பிசகு –
அந்த ஆனந்த ப்ரசுர்யத்தை விவரிக்கப் புகுந்த
சைஷா ஆனந்தச்ய மீமாம்சா பவதி -இத்யாதி ஆனந்த மீமாம்சையில்
தே ஏ சதம் பிரஜாபதிர் ஆனந்தா -என்னும் அளவாக பிரஸ்தாபிக்கப் பட்ட
சதுர்முக பரிந்த சகல ஜீவர்கள் ஆனந்தத்தைக் காட்டிலும்
நூறு மடங்கு அதிகமாய் இருக்கை யாகிற ஆனந்தமய பிரசுர்யமே
விவஷிதமாக விவரித்து இருக்கையாலே
துக்க சம்பந்தம் பிரசங்கிக்க விரகு இல்லை-
தயாளு
அடியார் துக்கம் கண்டு தானும் துக்கிப்பது தயாளுத்வம்
இப்படி துக்கம் உண்டு என்றால் ஆனந்த மயத்வம் கொள்ள இடம் இல்லையே என்ற சங்கை தோன்ற
இந்த அதிகரணத்தில் இரண்டாவது ஸூ த்த்ரத்தில்
விகார சப்தான் நேதி சேனன ப்ராசுர்யாத் –
இதற்க்கு
ஸ்ரீ பாஷ்யத்தில்
அபஹதபாப்மா -விஜரோ விம்ருத்யுர் விசோக- ஸ்ருதி வாக்யத்தை எடுத்துக் காட்டி
பாபம் செய்தாலும் கூட அதன் பலனாக ஹேய ஸ்பர்சம் உண்டாக பெறாதவன்
அதே போலே சோகம் உண்டானாலும் அதன் பலனான ஹேய ஸ்பர்சம் உண்டாகப் பெறாதவன்
குணங்களில் சிறந்ததான சோகம் என்பதே ஆகும்
—————————————————————————————
7-அந்தரதிகரணம் –
அந்தஸ் தத்தர்மோ பதேசாத் –1-1-21-
இதில் மேல் உள்ள -பேத வ்யபேதேசாச்ச அந்ய-என்கிற சூத்ரத்தில் இருந்து அந்ய பதம் தருவித்திக் கொண்டு
அந்த -ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உறையும் புருஷன்
அந்ய -ஜீவனைக் காட்டிலும் வேறுபட்ட பரம புருஷன்
தத்தர்மோ பதேசாத் -அந்த பரம புருஷனுக்கு உள்ள அசாதாராணமான தர்மங்களை ஓதி இருப்பதனாலே –
சாந்தோக்யம் -அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே –என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
ஸூ பால உபநிஷத் –ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண –
புருஷ சூக்தம் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி –
இவற்றால் ஆதித்ய மண்டலத்தின் உள்ளுறையும் புருஷன் பரம புருஷன் என்று நிர்ணயிக்கப் படுகிறது –
சாரீர சப்தம் பரம புருஷனுக்கு சம்பவிக்காதே பூர்வ பாஷம்
சித்தாந்தம் -தஹர வித்யா பிரகரணம் -ந ஸூ கருத்தும் ந துஷ்க்ருதம் சர்வே பாபமா நோ நோ நிவர்த்தந்தே அபஹதபாப்மா
ஹ்யேஷ ப்ரஹ்ம லோக -என்று சொன்னதையே இங்கு -ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித -என்பதால் கர்மம் சம்பந்தம் இல்லாத
வியக்தியே ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உள்ளதாக ஸ்பஷ்டம்
ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் -என்கிற படி ஸ்வ இச்சியினால் பரிக்ரஹிக்கப் பட்ட அப்ராக்ருதமான சரீஎரம் உடையவன் என்றதாயிற்று
சாது பரித்ரானம் ஏவ உத்தேச்யம் -ஆநு ஷங்கி கஸ்து துஷ்க்ருதாம் வி நாச -சங்கல்ப மாத்ரேணாபி ததுபபத்தே –
மழுங்காத வை நுதிய –தொழும் காதல் களிறு அளிப்பான் —-இத்யாதி கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் உடைய இந்த ஸ்ரீ ஸூக்திகள்-
அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ய ஆதித்யே திஷ்டன் யஸ்ய ஆதித்யச் சரீரம் யா –ஆதித்ய மாந்தரோ யமயதி -என்றும்
யஸ் சர்வேஷூ தேஷு திஷ்டன் -என்றும் அனைவரையும் நியமிப்பவனாக சொல்லி இருப்பதால்
இது ஆத்மாவைக் குறிக்காது பரம புருஷனை தான் குறிக்கும் என்றதாயிற்று
————————-
ஜ்யோதிர் அதிகரண சித்தாந்தம்
சாந்தோக்யம் -அத யத்த பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே -என்ற இடத்துக்கு முன்னர் -பாதோச்ய சர்வா பூதானி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி
-என்பதால் பர ப்ரஹ்மமே இந்த ஜ்யோதிஸ் ஆகும் –
சாந்தோக்யத்தில் காயத்ரீ வா இதம் சர்வம் —என்று பிரஸ்தாபித்து -ததேதத் ருசாப் யுக்தம் -என்றதால் -பூதம் பிருத்வி சரீரம் ஹிருதயம்
நான்கையும் நான்கு பாதங்களாக உடையவாக சொல்லிருப்பதால் காயத்ரீக்கு சமானமான பர ப்ரஹ்மமே சொல்லப் பட்டது –
நான்கு பாதங்கள் என்பதாலே சாம்யம்
இதே போலே -தேவா ஏதே பஞ்சான்யே பஞ்சான்யே -என்று தொடங்கி சைஷா விராட் -என்று –
அக்னி சூர்ய ஜல சந்திர வாயு வாக் சஷூஸ் ச்ரோத்ர மனஸ் பிராணன்கள் ஆகிற பத்து வஸ்துக்களின் –
பத்து அஷரங்கள் கொண்ட சந்தஸ்க்கு வாசகமான விராட் சப்த பிரயோகம் போலே –
திவா பரோ ஜ்யோதி -தயு லோகத்துக்கு அப்பால் பட்டது த்யுலோக சம்பந்தியும் ஒன்றாக இருக்கக் கூடுமோ -என்னில்
-மரத்தின் நுனியில் பறவை -நுனிக்கு அப்பால் பறவை இரண்டும் சொல்வது போலே
——————————————————————
8-ஆகாசாதி கரணம்
ஆகாசஸ் தல் லிங்காத்–1-1-23-
இதிலும் பேத வ்யபதேச்ச அந்ய -இருந்து அந்ய சப்தம் தருவித்துக் கொள்ள வேண்டும்
சர்வாணி ஹ வா இமானி பூதாதி ஆகாசா தேவ சமுத் பத்யந்தே -என்கிற இடத்தில் ஆகாச சப்தத்தினால் சொல்லப் படுபவன்
அந்ய -பூத ஆகாசத்தில் காட்டிலும் வேறு பட்டவன் -ஏன் என்னில்
தல் லிங்காத் -அசாதாரணமான லிங்கம் ஸ்ருதமாய் இருப்பதினால் என்றவாறு
சர்வாணி ஹ வா இமானி பூதாதி ஆகாசா தேவ சமுத் பத்யந்தே ஆகாசம் பிரத்யச்தம் யந்தி ஆகாசோ ஹ்யேவ ஏப்யோ ஜ்யாயாத் ஆகாச பராயணம் -என்று
ஆகாசம் சர்வ பூத உத்பத்தி லய காரனத்வமும் சர்வ ஸ்மாத் ஜ்யேஷ்டத்வமும் பராயணத்வம் சொல்லப் படுகின்றன
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே –விஸ்வத பரமம் நித்யம் விச்வம் நாராயணம் ஹரிம் -நாராயணம் மஹாஜ் ஞேயம்
விச்ச்வாத்மானம் பராயணம் –என்பதால் பரம புருஷனையே குறிக்கும்
————————————-
இந்திர பிராண அதிகரணம்
பிராணஸ் தத் அநு கமாத் -1-1-29-
பிராண சப்தம் இந்த்ரனுக்கும் உப லஷணம்
கௌஷீ தகி உபநிஷத் – பிராணோச்மி பிரஜ்ஞாத்மா தம் மாம் ஆயுரம்ருதம் இதி உபாஸ்வ -என்று
தன்னையே உபாசிக்க ப்ரதர்னனுக்கு உபதேசித்து
ச ஏஷ பிரஜ்ஞாத்மா ஆனந்தோ ஜரோம்ருத -ச ன் சாதுநா கர்மணா பூயான்னோ எவாசாதுனா கர்மணா கநீயான் -என்றவை
பர ப்ரஹ்மம் இடமே சம்பவிக்கும்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயநாய வித்யதே -என்றும் ஏஷ ஹ்யேவ சாது கர்ம காரயதி தம் -என்றும்
யமாத்மா நமந்தரோ யமயதி -என்றும் அந்தர்யாமி ப்ராஹ்மண ஸ்ருதியின் படி இந்திர பிராண சாரீரகனான பரமாத்மாகவே இருக்கத் தக்கது
———————————————————-
தேவதாதிகரணம் –
பரம புருஷன் உபாசனத்தில் தேவர்களுக்கும் மனுஷ்யர் போலே அதிகாரம் தடை அற்றது என்கிறது
தத் உபர்யபி பாதராயணஸ் சம்பவத் –1-3-25
அர்த்தித்வ சாமர்த்தியங்கள் -வேணும் என்னும் அபேஷையும் அதற்கு உண்ட ஆற்றலும்
இதில் ஸூத்ரனுக்கு அதிகாரம் உண்டோ என்னும் சங்கை தீர்க்க
அபசூத்ராதிகரணம் -பிறந்தது
சு கஸ்ய தத நாதர ச்ரவணாத் ததாத்ரவணாத் ஸூ ச்யதே ஹி –1-3-33-
தஸ்மாத் சூத்ரோ யஜ்ஞ்ஞே அனவகல்ப்த-என்று யஜ்ஞ்ஞாத்தில் ஸூத்ரனுக்கு அதிகாரம் இல்லை என்றது வேதம் –
ஆனால் கர்ம அனுஷ்டானங்கள் ஸ்ரவண மானச உபாசனங்கள் உண்டே -அது இல்லை என்று மறுக்கப் படுகிறது இந்த அதிகரணத்தில் –
அபேஷை இருந்தாலும் சாமர்த்தியம் இல்லாததால் -என்கிறது
சு கஸ்ய ஸூ ச்யதே ஹி-
இந்த ஜ்ஞானஸ்ருதி என்னும் சத்ரியனுக்கு சோகம் உள்ளமை ஸூ சிதமாகிறது -எதனால் என்னில்
தத நாதர ச்ரவணாத் -தத் அநாதர ச்ரவணாத் -அந்த ஹம்ச பஷியின் இழிவுரையைக் கேட்டதனால்
ததாத்ரவணாத்-அப்பொழுதே ரைக்ருவர் இடம் விரைந்தோடி வருகையால்
ஆக ஸூ த்ரனுக்கு ப்ரஹ்ம விதியை அதிகாரம் இல்லை என்று முடிந்தது
வாக்ய அந்வயாதிகரணம்
ப்ருஹதாரனண்யத்தில் மைத்ரேயி ப்ராஹ்மணம் -யாஜ்ஞ வல்க்யர் மைத்ரேயி இடம் ஆத்மா வா ஆர் த்ரஷ்டவ்ய
-ஆத்மா சப்தம் பரமாத்மாவே -கார்ய காரண பாவம் உண்டு என்பதாலும் முக்தி தசையில் சாம்யாபத்தி என்பதாலும்
-சரீராத்மா -அந்தராத்மா பாவத்தாலும் என்று காட்ட மேலே மூன்று சூத்ரங்கள்
————————
முதல் அத்யாயம் -இரண்டாம் பாதம்
முதல் அதிகரணம் -சர்வத்ர பிரசித்தி அதிகரணம்
பரம புருஷன் உபாசகர் சரீரத்தின் உள்ளே இருந்தாலும் கரும பலன்களை அனுபவிக்காது –
இரண்டாம் அதிகரணம் -அத்த்ரதிகரணம் —
அத்தா சராசரக் ரஹணாத்–1-2-9-
அத்தா -போக்தா என்று ஓதப்பட்டவன் -ச -அந்த பரம புருஷனே யாவன் –
சராசரக் ரஹணாத்-சகல பிரபஞ்சமும் போஜ்ய வஸ்துவாக ஸ்ருதியில் க்ரஹிக்கப் படுவதால்
யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதன ம்ருத்யுர் யச்யோவ பசே சனம் க இத்தா வேத யத்ர ச
உபாசகன் ரதி -சரீரம் முதலானவற்றை தேர் -சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பரம் –
————————————–
அந்தர உபபத்தே –1-2-13-
அந்தர -கண்களின் உள்ளே இருப்பவன்
ச -அந்த பரம புருஷன்
உபபத்தே -அங்குச் சொல்லப்படும் அபயத்வம் அம்ருதத்வம் -முதலானவை அப் பரம புருஷன் இடத்திலேயே பொருந்தக் கூடியவை யாதலால்
ய ஏஷோஷிணி புருஷோ த்ருச்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏத தம்ருதம் ஏததபயம் ஏதத் ப்ரஹ்ம – என்பதில்
அஷிணி புருஷோ த்ருச்யதே -கண்ணில் உள்ளவனாக ஒரு புருஷன் எற்படுகிறான்
யச் சஷூஷி திஷ்டன் சஷூ ஷோந்தர-கண்ணில் உள்ளவனாகவும் நியாமகனாகவும் ஓதப்பட்ட பரம புருஷன் அந்த
–ய ஏஷ –இத்யாதி வாக்யத்தினால் நினைப்பூட்டப் படுகிறான் ஆகவே அஷி புருஷன் பரம புருஷனாகவே இருக்கத் தக்கவன் –
—————————————————-
முதல் அத்யாயம் நான்காம் பாதம் -வாக்யான்வயதிகரணம்-நான்கு ஸூத்ரங்கள்
வாக்ய அந்வயாத் -முதல் ஸூ த்ரம்-இத்தால் ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -என்ற இடத்தில்
ஆத்மா பரமாத்மாவைக் குறிக்கும் என்கிறது
மேலே மூன்று ஸூத்ரங்களாலே ஆச்மரதத்ய மதம் -ஔடுலோமி மதம் காசக்ருத்சன மதங்கள் காட்டப்படுகின்றன
இதில் முதல் ஸூத்ரத்தாலே -பிரதிஜ்ஞா சித்தேர் லிங்க மாச்மரத்த்ய -ஆச்மரத்த்ய மதம் -கார்ய காரண பாவம் ஸ்ருதியில் சொல்லப் பட்டு
இருக்கையாலே அவற்றுக்குள் பேதம் உண்டு என்றவாறு -இவ்வபேதத்தை தெரிவிக்க பரமாத்மா ஜீவாத்மாக்களுக்கு ஐகய உக்தி உள்ளது என்கிறார் –
உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் யௌடுலொமி –முக்தி தசையில் ஜீவாத்மா பரமாத்மா அபெதித்து அவலம்பித்து ஔடுலொமி நிர்வஹித்தார்
அவஸ்திதே ரிதி காசக்ருத்சன -அந்தராத்மாவாக இருப்பதாலும் சரீர பரிந்த வாசகத்வம் சித்தம் ஆகையாலும் ஆத்மா சப்தத்தை
பரமாத்மா பர்யந்த வாசாகமாக நிர்வஹிப்பது உசிதம் என்கிறார் -காசக்ருத்ச்னர்
————————————–
சம்ருத்யதிகரணம் –
2-1-1-
கீழ் முதல் அத்யாயத்தில் வேதாந்த பிரதிபாதிதமான
ஜகத் காரண வஸ்து
சேதன அசேதன விலஷணமான பர ப்ரஹ்மம் என்று அறுதி இடப்பட்டது
ஜகத் காரணத்வம் நன்கு திருடி கரிக்கப் படுகிறது
கம்பம் நட்டு ஆட்டிப் பார்ப்பது போலே
முதல் பாதத்தில் சாங்க்யர் தோஷங்கள் பரிஹரிக்கப் படுகின்றன
முன் அத்யாயத்தில் நிரீச்வர சாங்க்யர்களும் சேஸ்வர சாங்க்யர்களும் நிரசிக்கப் பட்டனர்
அதில் நிரீச்வர சாங்க்யன்-கபில ஸ்ம்ருதி விரோதத்தைக் காட்டி
ப்ரஹ்மம் ஜகத் காரணம் அன்று என்று வாதிப்பது ஓன்று உண்டு
அத்தை நிராகரிக்க இந்த அதிகரணம் –
சம்ருத்ய நவகாச தோஷ பிரசங்க இதி சேத்-
சேதன அசேதன விலஷணமான ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்று கொண்டால்
பிரதானம் காரணம் என்று சொல்கிற கபில ஸ்ம்ருதி அப்ரதானமாய் விடுமே என்னில்
ந-அப்படி சொல்லக் கூடாது
அந்ய ஸ்ம்ருத்ய நவகாச தோஷ பிரசங்காத்- ப்ரஹ்ம காரணத்வத்தை சொல்லுகிற
மற்ற ஸ்ம்ருதிகள் அப்ரமாணமாய் விடும் ஆதலால் -எனபது சூத்ரத்தின் பொருள்
பரசராதி மகரிஷிகள் ஸ்ம்ருதிகள் எல்லாம் அப்ரமாணமாய் விடுவது விட
கபிலர் ஒருவர் ஸ்ம்ருதி ஒன்றை அப்படி ஆக்குவதே யுக்தம் –
இங்கே பூர்வ பஷம் –
சதேவ சோமய இதமக்ர ஆஸீத் -ஸ்வ தந்திர பிரதான காரணத்வத்தில் தாத்பர்யமா
ப்ரஹ்ம காரணத்வத்தில் தாத்பர்யமா
கபில காண்டம் ஞான மார்கத்தில் தத்தவங்களை விசதீகரிக்க தோன்றது
மனு பரசாராதி உக்திகளுக்கு பிரதானம் -இவை பலிஷ்டம் ஆகையாலே –
ப்ருஹஸ்பதியையும் ஸ்ருதிகள் கொண்டாடி இருக்கையாலே
அவர் இயற்றிய லோகாயுதத்தை கொண்டு ஸ்ருதியின் பொருளை நிர்ணயிப்பார் உண்டோ-இல்லையே
——————————————————————————————
இனி
க்ருத்ஸ் ந ப்ரசக்தி அதிகரணத்தின் பிரமேயம் -விளக்கப் படுகிறது
பூர்வ பஷம்-
ப்ரஹ்மமே ஜகத் காரணம் -ஜகத்தாக பரிணமித்தால்
நிரவயவம் சுருதி விரோதிக்குமே
ஆகையாலே ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்ன ஒண்ணாது –
மேல் சித்தாந்தம் –
ஸூத்திரம் – ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –
து -சப்தம் பூர்வ பஷததை வ்யாவர்த்திக்கிறது –
ப்ரஹ்மம் நிரவவயம் என்றும்
கார்யப் பொருளாக பரிணமிக்கிறது-பஹூ பவனத்வம் – என்றும் இரண்டு சுருதி சித்தமான அர்த்தங்கள்
பிரமத்தின் அநிர்வசநீயமான சக்தி விசேஷம்
கண்ணில்லாதவன் காண்கிறான்
செவி இல்லாதான் கேட்கிறான்
என்றும் ஓதப்படுகிறது
இத்தால் லௌகிக நியாயம் கொண்டு ப்ரஹ்மத்தின் இடத்தில் சோத்யம் செய்வது கூடாது
ப்ரஹ்ம வ்யாப்தி பரிஷ்க்ரியா -அத்புத சக்தி -உண்டே-
——————————————————————————————
அடுத்த அதிகரணம்
பிரயோஜனவத்த்வாதிகரணம்
பரம புருஷன் சர்வ சக்தி யுக்தன் ஆகையாலும்
சத்ய சங்கல்பன் ஆகையாலும்
அவன் சங்கல்ப மாத்ரத்திலே ஜகத்தை சிருஷ்டிக்கும் விஷயம் சம்பாவிதம் அன்று
அவன் ஜகத்தை சிருஷ்டிக்கும் போதே ஏதேனும் ஒரு பிரயோஜனம் இருந்தாக வேணும்
அவாப்த சமஸ்த காமனுக்கு சிருஷ்டியினால் பிரயோஜனம் உண்டாக விரகு இல்லை
நம் போன்றவர்களுக்கும் பிரயோஜனம் என்று சொல்லப் போகாது
ஆத்யாத்மிக துக்காதிகளுக்கே ஹேது
பகவானுக்கு பஷபாதித்வம் நிர்தயத்வம் தோஷங்களை சங்கிக்கப் பண்ணுவதையும் இருக்கும்
ஆகவே பகவான் சிருஷ்டி கர்த்தாவாக இருக்க முடியாது -எனபது பூர்வ பஷம்
இந்த பூர்வ பஷ ஸூத்த்ரம் -ந பிரயோஜனவத்வாத் –
இங்கே ஸ்ருஷ்டே-பதம் தருவித்துக் கொள்ள வேண்டும்
இந்தன் மேல் சித்தாந்த ஸூத்த்ரம் -லோகவத் து லீலா கைவல்யம்
இத்தால் அவாப்த சமஸ்த காமத்வத்துக்கு கொத்தை இல்லை
மன் பல் உயிர்களுமாகிப் பல பல மாய மயக்குகளால்
இன்புறும் இவ்விளையாட்டு யுடையவன் –நம் ஆழ்வார்
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஆண்டாள்
விஷம சிருஷ்டி கான்பதாலே பகவானுக்கு பஷபாதத்வமும் நிர்தயத்வமும் சங்கிக்க நேர்கின்றதே என்னில்
அந்த சங்கை –
வைஷம்ய நைர்குண்யே ந சாபேஷ்வாத் ததா ஹி தர்சயதி
என்கிற அடுத்த ஸூத்த்ரத்தால் பரிஹரிக்கப் படுகிறது
கருமங்களுக்குத் தக்கபடி நீச்ச உச்ச சிருஷ்டிகள்
இதன் மேலும் தோன்றுகிற சங்கைக்கு
அடுத்த ஸூத்த்ரம் பரிஹாரம் உணர்த்துகின்றமை
கண்டு கொள்வது –
——————————————————————————————
2-2-சர்வதா அனுபபத்தி அதிகரணம்
இதில் சர்வ சூன்யவாதிகளான பௌத்த ஏக தேசிகள் பஷம் நிரசிக்கப் படுகிறது
பர பிரமமே ஜகத் காரனத்வம் என்று நன்று நிலை நாட்டிய பின்
இதில் இத்தை ஸ்ருளிச் செய்ய என்ன பிரசங்கம் எனில்
ஜகத் காரண வஸ்து பிரதானமா -பரம அணுவா -பர ப்ரஹ்மமா-எப்போது
பொருந்தும் என்னில்
ஜகத் உத்பத்தி என்று ஓன்று நிரூபிக்க முடியுமானால் அப்போது பொருந்தும்
ஜகத் உத்பத்தியே நிரூபிக்க முடியாததாய் இருக்க எது ஜகத் காரணம் என்கிற சர்ச்சை எதற்கு
உத்பத்தி பாவத்தில் இருந்து அங்கீ கரிக்கப் படுகிறதா
அபாவத்தில் இருந்து அங்கீ கரிக்கப் படுகிறதா
பாவத்தில் இருந்து எனபது சேராது
மண் பிண்டத்தில் இருந்து குடம் –மண் பிண்டம் உபமர்த்தித்துக் கொண்டு தானே உண்டாகின்றன –
காரண ஆகாரத்தின் விநாசமே தானே உபமர்த்தம் -அது தான் அபாவம்
ஆக பாவத்தில் இருந்து உத்பத்தி இல்லை
அபாவத்தில் இருந்து பாவ உத்பத்தி சம்பவிக்க மாட்டாது அன்றோ
ஆக உத்பத்தியே நிரூபிக்க முடியாததால்
உத்பத்திக்கு பிற்பட்டனவான விகாரங்கள் எதுவுமே கிடையாது எனபது சித்தம்
ஆக லோக விவகாரம் எல்லாம் பிரமை
ஆக சூன்யமே தான் தத்வம்
நிரசிக்கும் ஸூத்த்ரம் -சர்வத அநு பபத்தேச்ச -2-2-30-
பிரமேயங்களோ பிரமாணங்களோ எதுவும் உண்டாகிலுமாம் இல்லையாகிலுமாம்
பூர்வ பஷிக்கு அபிமதமான சூன்யத்வம் தேறாது ஆகையாலே
மாத்யமிக தர்சனம் அசமஞ்சசம் என்றபடி –
சர்வம் சூன்யம் என்று சொல்பவர்கள்
தங்களுக்கு அபிமதமான இவ்வர்த்தத்தை சாதித்துத் தருபடியான
பிரமாணம் உண்டு என்று இசையும் பஷத்தில்
பரமான சத் பாவத்தை இசைந்த போதே சர்வ சூன்ய வாதம் தொலைந்தது
பிரமாணம் இல்லை என்னும் பஷத்தில் -பிரமாணம் இல்லாமையினாலே
தங்களுக்கு அபிமதமான அர்த்தம் அசித்தம் என்று முடிந்தது
மேலும் -சர்வ சூன்ய -வாதத்தாலே நாஸ்தித்வம் தானே விவஷிதமாக வேணும்
ஒரு ரூபத்தை விட்டு மற்று ஒரு ரூபத்தை அடைவதே நாஸ்தித்வம்
ரூபாந்தரத்திலே அஸ்தித்வம் சொல்லப் பட்டதாக முடிகிறது
மண் உண்டை ஓன்று இருந்தது
அது நசித்த அளவில் ம்ருத் பிண்டோ நாஸ்தி -என்று சொல்லுகிறான்
இந்த விவகாரத்தில் பானை என்கிற அவஸ்தை தானே விஷயம் ஆகிறது –
அஸ்தி நாஸ்தித்வங்கள்
இப்போது மண் உண்டை இருந்தது இப்போது மண் உண்டை இல்லை
இங்கு இருக்கிறது இங்கு இல்லை
கால இடம் உட்படுத்தியே வ்யவஹாரம்
பிண்டத்வ அவஸ்தை மாறி கடத்தவ அவஸ்தை பிறந்தால்
நாஸ்தித்வ வ்யவஹாரம் பண்ணினாலும்
வேறு ஒரு ஆகாரத்திலே அஸ்தித்வம் தேறி இருக்கும்
ஆக ஒரு படியாலும் சூன்ய வாதம் சித்தியாது
ஆக –
சூத்ரத்தின் மேல் பொருள்
சர்வதா –
சர்வ பிரகாரத்தாலும்
அநு பபத்தே –
ஸ்வ அபிமதமான சர்வ சூன்ய வாதம் உப பன்னம் ஆகைமையினாலே -என்றபடி
ஸ்ரீ பாஷ்யகாரம் அருளிய பொருள் சமஞ்சசம் ஆன பொருள்
இவர் –
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவும் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையின்
உளன் இரு தகைமையினோடு ஒழிவிலன் பறந்தே -திருவாய் மொழி –1-1-9-
எனபது கொண்டு சூத்ரத்தின் பொருளை ஒருங்க விட்டு அருளிச் செய்கிறார்-
ஆறாயிரப்படியில் அங்கு அருளிச் செய்த தமிழ் அர்த்தமே
இங்கு ஸ்ரீ பாஷ்யத்தில் வட மொழியில் அருளிச் செய்யப் பட்டது –
————————————————————————————–
இனி மூன்றாம் அத்யாயம் –
முதல் அத்யாயத்தில்
பர ப்ரஹ்மமே ஜகத் ஜென்மாதி காரணமாய் -சர்வ சேஷியானவன் -என்றும்
தன்னுடைய லீலைக்காக -நான்முகன் சிவன் இந்த்ரன் முதலானவர்கள்
சிருஷ்டிக்கப் பட்டு உப சம்ஹரிக்கப் படுகிறார்கள் -என்றும்
அந்த பரம புருஷன் பிரகிருதி மண்டலத்துக்கு புறம்பாய்
நிதர சூரி சேவிதமான ஸ்தான விசேஷத்திலே
ஸ்வ இச்சையினாலே சுடர் ஒளி மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை பரிக்ரஹித்து
அப்ரமேயமான ஆனந்தத்தை யுடையனாய்
தன்னடி பணிந்தார்க்கும் அபரிமித ஆனந்தத்தை அளிப்பவனாய்
சம்சார பந்தத்தில் நின்றும் விடுபட்ட முக்த புருஷர்களினால் அனுபவிக்கப் பட்டுக் கொண்டு
இரா நின்றான் என்று தெரிவிக்கும் முகத்தாலே
சம்சாரிகளுக்கு பகவத் அனுபவ குதூஹலத்தை உண்டாக்குவதற்காக
பரம புருஷார்த்தமான பகவத் ஸ்வரூப ஸ்வ பாவாதிகள் நிரூபிக்கப் பட்டன-
பிறகு இரண்டாம் அத்யாயம் செய்தது என் என்னில்
முதல் அத்யாயத்தினால் நிரூபிக்கப் பட்ட அர்த்தம்
சர்வாத்மனா அசைக்க முடியாதது என்று
பிரதி பஷ பிரதி ஷேப பூர்வகமாக சாதிதததுடன்
ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்கிற பகவத் பரணீத சாஸ்திர விசேஷத்தினாலே தேறிய பொருள் என்றும் நிரூபித்து
சகல சேதன அசேதன பொருள்கள் பரம புருஷ கார்ய பூதங்களே என்பதை
நன்கு சோதிக்கும் முகத்தாலே
கார்ய சாமான்யமும் பர ப்ரஹ்ம கார்யமே என்பதும் ஸ்தாபிக்கப் பட்டது –
ஆக –
இரண்டு அத்யாயங்களால் –
புருஷார்த்த ஸ்வ ரூபம் நிச்சயிக்கப் பட்டதாக தேறிற்று
இப்படி புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப் பட்டாலும்
அநாதி வாசனா பலத்தாலே
சூத்திர புருஷார்த்தங்களையே நச்சிக் கிடக்கும் சம்சாரிகளுக்கு
பரம புருஷ பிராப்தியில் பதற்றம் உண்டாகாமைக்கு காரணம்
தாங்கள் விரும்பிய புருஷார்த்தங்கள் அல்பம் அஸ்தரம்
என்பதை ஆராய்ந்து உணராமையே என்று கருதிய சாஸ்திர காரர்
அந்த சம்சாரிகளுக்கு 'இதர விஷயங்களில் வைராக்யத்தையும்
பரம புருஷார்த்தத்தில் மிக்க ருசியையும் உண்டாக்குவதற்காக
கர்ம பலன்கள் எல்லாம் ஷயிஷ்ணுக்கள் என்றும்
பரம புருஷ உபாசன பலமான அப வர்க்கம் ஒன்றே நித்ய புருஷார்த்தம் என்றும் -தெரிவித்து
இவ் வழியாலே –
பரம புருஷ பிராப்தியில் த்வர அதிசயத்தை உண்டாக்கவே
பின்னிரண்டு அத்யாயங்களை அவதரிப்பிகின்றார்-
ஆக –
ஏற்கனவே கர்ம விசாரம் செய்து
அதன் பலன்களை நஸ்வரம் என்று அறிந்து வைராக்கியம் பெற்றவனுக்கே ப்ரஹ்ம மீமாம்சையில் அதிகாரம் என்று
ஜிஞ்ஞாசா சூத்ரத்திலே நிரூபிக்கப் பட்டு இருப்பதனால்
மறுபடியும் வைராக்யத்தை உண்டாக்குவதற்காக –
இந்த பிரயத்னம் வீண் அல்லவோ என்று சங்கை வரலாம்
பஞ்சாக்னி வித்யா நிரூபணத்தாலே விஷயங்களில் எப்படிப் பட்ட வைராக்கியம் உண்டாகுமோ
அது கர்ம விசாரத்தினால் -உண்டாக மாட்டாது என்று கருதி
இங்கு புநர் பிரயத்னம் கொள்ளப் படுகிறது
ஆகவே இது நிஷ் பலம் அற்று -ச பலமே
இந்த மூன்றாம் அத்யாயத்தின் முதல் பாதத்தில்
பஞ்சாக்னி வித்யா நிரூபணம் செய்து
கர்ம பலன்கள் எல்லாம் நஸ்ரவங்கள் என்றும் நரக துல்யங்கள் என்றும் தெரிவிக்கப் படுகிறது
அசுத்தமிதி சேந் ந சப்தாத் -மூன்றாம் அத்யாயம் முதல் பாதம் –முடிவில் உள்ள -அந்யா திஷ்டிதாத கரணம் -இரண்டாது சூத்ரம்
ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி -ஸ்ரீ கீதை -சவர்க்க லோக அனுபவம் பண்ணி கீழே வருபவர்களுக்கு
சாந்தோக்யம் -த இஹ வ்ரீஹியவா ஔ ஷதி வனச்பதயச் தில மாஷா ஜாயந்தே –நெல் முதலனவ்வாகப் பிறப்பது சொல்கிறது
மனு ஸ்ம்ருதி -சரீரஜை கர்ம தோஷைர் யாதி ஸ்தாவரதாம் நர -ஸ்தாவர ஜன்மம் பாப பலம் –ஸ்வர்க்கத்தில் இருந்து
இறங்குபவனுக்கு பாபம் இருக்குமா — அக்நீஷோமீயம் கருமம் பாப மிஸ்ரம் ஆகையாலே
உபபத்தேச்ச -ஸ்ரீ பாஷ்யம் –3-2-4-
ப்ராப் யஸ்ய பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தௌ ஸ்வஸ்யைவ உபாயத்வோ பபத்தே
-நாயமாத்மா பரவச நேன லப்ய தநும் ஸ்வாம் -என்றும்
அம்ருதஸ் யைஷ சேது -இதி அம்ரு தஸ்ய ஸ்வஸ்ய ஸ்வ யமேவ பிராபக இதி சேதுத்வவ்
யபதேசோ பபத்தேச்ச –என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ கதிகள்
பலமத உபபத்தே –3-2-37-
ச ஏவ ஹி சர்வஜ்ஞஸ் சர்வ சக்திர் மஹோ தாரோ யாகதான ஹோமாதிபிருபாசா நன்ச ஆராதிதா
ஐஹிக ஆமுஷ்மிக போக ஜாதம் ஸ்வ ஸ்வரூப அவாப்திரூபம் அபவர்க்கஞ்ச தாது மீஷ்டே
நஹி அசேதனம் கர்ம ஷணத் வம்சி காலான் தர பாவிபபல சாதனம் பவிது மர்ஹதி -என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ கதிகள்
மூன்றாம் அத்யாயம் -பரம புருஷ ப்ராப்திக்கு உபாயத்வத்தை தெரிவிப்பது என்றும்
நான்காம் அத்யாயம் எனபது உபாய பலமான உபேயத்தை தெரிவிப்பது என்றும் நெஞ்சில் கொள்க –
உபய லிங்காதி கரணத்தின் பிரமேயம் -பார்ப்போம் –
மூன்றாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் –
ஜீவாத்மா வானவன்
ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி மூர்ச்சாதி அவஸ்தைகளுக்கு
ஹேதுவான நாநா வித சரீரங்களை
ஏற்றுக் கொண்டு -அவ்வவச்தைகளிலே சுக துக்கங்களை அனுபவிக்கிறான்
என்னும் இடம் கீழே நிரூபிக்கப் பட்டது
அப்படிப் பட்ட சரீரத்தில் பரமாத்மாவும் சம்பந்தப் பட்டு இருந்தாலும்
தத் பிரயுக்தமான சுக துக்காதி அபுருஷார்த்த லேசமும் தன்னிடத்தில் ஓட்டப் படாமல் இருக்கிறான் என்றதையும்
கல்யாண குண கடலாய் இருக்கிறான் என்றதையும்
நிரூபிக்க இந்த அதிகரணம் தோன்றியது –
ந ஸ்தான தோபி பரஸ்யோ பய லிங்கம் சர்வத்ர ஹி -இந்த அதிகரணத்தில் தலையான சூத்தரம்
பரஸ்ய -பரம புருஷனுக்கு
ஸ்தா ந்த அபி -ஜீவாதிஷ்டித நாநா சரீரங்களில் இருப்பு இருந்தாலும்
ந -அபுருஷார்த்த சுக துக்க சம்பந்தம் கிடையாது –
இதற்கு ஹேது என் என்னில்
சர்வத்ர ஹி உபய லிங்கம் –
பரம புருஷன் சர்வ சுருதி ஸ்ம்ருதிகளிலும்
ஹேய ப்ரத்ய நீகத்வம்
கல்யாணை கதா நத்வம்
என்கிற இரண்டு அசாதாரண தர்மங்களோடு கூடியவனாக
பிரதி பாதிக்கப் படுகையாலே
எனபது சூத்ரத்தின் பொருள்-
அபஹதபாப்மத்வம் -அதாவது
புண்ய பாப ரூப கர்மங்களின் பலன் ஸ்பரசியாத -இதுவே ஹேய பிரத்ய நீகத்வம்
மேலும் ஒரு சங்கை தோன்றக் கூடும்
ஹேய சம்பத்வம் வஸ்து ஸ்வ பாவத்தாலே அபுருஷார்த்த பாதகமாயே தீரும் அன்றோ
மாம்சாஸ்ருக்பூய விண் மூத்த வெள்ளத்தில் ஒருவன் ஸ்வ இச்சையால் அமிழ்ந்தாலும்
ஹேய சம்பந்தம் உண்டாக்கித் தானே தீரும் -சங்கை வருமே –
ஹேயத்வம் கர்ம க்ருத்யுமே ஒழிய வஸ்து ஸ்வ பாவ பிரயுக்தம் அன்று –
சம்சார தசையிலே அனுகூலமாக தோன்றுவதும் பிரதிகூலமாக தோன்றுவதும்
வஸ்து ஸ்வ பாவத்தாலே அன்று
கால மாற ஒன்றே அனுகூலமாயும் அதுவே பிரதிகூலமாயும் தோன்ற காணலாம்
அகர்மவச்யனான பரமபுருஷனுக்கு
சர்வ வஸ்துக்களும் தன விபூதியாய்க் கொண்டு அனுகூலமாவேயாய் இருக்கும் என்று கொள்ளக் கடவது-
——————————————————————————————
இனி மூன்றாம் அத்யாயம் கடைசி பாதம் –
சர்வாந்த அனுமத் யதிகரணம் –
இதற்கு முந்திய அதிகரணத்தில்
ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு சமம் ஆவச்யகம் என்று சொல்லிற்று
போஜன நியமம் ஆகிற சம விஷயம் ப்ரஹ்ம வித்துக்கு உண்டா இல்லையா என்பதை விசாரித்து நிர்ணயிக்க
இந்த அதிகரணம் தோன்றிற்று –
ஸூத்ரம் –
சர்வான் அன்னம் அநு மதிச்ச ப்ராணாத்யயே தத் தர்ச நாத் –
ப்ராணா வித்யா நிஷ்டன் எந்த அன்னத்தையும் புஜிக்கலாம் என்று அனுமதிப்பது
பிரணாபத் தசையைப் பற்றியதேயாம்
ப்ரஹ்ம வித்தான அதிகாரி விஷயத்தில் ப்ராணாபத் விஷயமாக வே காங்கையாலே -என்று சூத்த்ரார்த்தம் –
பூர்வ பஷம் –
சாந்தோகத்தில் ஐந்தாம் பிரபாடகத்தில்
பிராண வித்யா பிரகரணத்திலே
பிராண வித்யா நிஷ்டனுக்கு அன்னம் ஆகாதது எதுவும் இல்லை –
நிஷித்த அன்ன போஜனமும் சர்வதா கூடும் என்றும்
வித்யா மகாத்மியத்தினால் இதில் தவறு இல்லை -என்றும் சொல்லுவதாக தெரிகிறது
அல்ப சக்திகனான பிராண வித்யா நிஷ்டனுக்கே நிஷித்த அன்ன போஜனம் அனுமதிக்கப் படுமானால்
ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு அந்த அனுமதி கைமுதிக நியாய சித்தமே -என்று பூர்வ பஷம்
-சித்தாந்தம் –
ப்ரஹ்ம வித்யா நிஷ்டனான உஷஸ்தன்
பிராணாபத் தசையிலே –
ஒரு யானைப் பாகன் உண்டு மிகுந்த காறா மணியை புசித்து
அதனால் உயிர் தரிக்கப் பெற்றான் என்றும்
பிறகு அந்த ஆணைப் பாகன் கொடுத்த பானத்தை அந்த உஷஸ்தன் ஏற்றுக் கொள்ள வில்லை என்றும்
சாந்தோக்யம் முதல் பிரபாடகம் -காண்டம் -9-
உஷச்த வ்ருத்தாந்த பிரகரணத்தில் காண்கிறது
இதனால் மகா மகிமை சாலியான ப்ரஹ்ம வித்துக்களுக்கும்
நிஷித்த அன்ன பஷணம் ஆபத் விஷயம் என்று தெரிவதனாலும்
ஆகார சுத்தி ஆவச்யகம் என்று தெரிவதனாலும்
ப்ராஹ்மண சாமான்யத்திற்கும் ஆபத் காலத்தில் சர்வ அன்னமும் அனுமதிக்கப் படுவதாய் காண்கையாலும்
ப்ரஹ்ம வித்தான அதிகாரி விசேஷத்துக்கும் சர்வ அன்ன அனுமதியானது ஆபத் காலத்தில் மாத்திர விஷயகம்
என்று சித்திக்கும் போது
அல்ப சக்திகனான பிராண உபாசகனுக்கு காணும் சர்வ அன்ன அனுமதியும்
ஆபத் விஷயகாந்தன் என்னுமது பற்றிச் சொல்ல வேணுமோ –
——————————————————————————————
இனி நான்காவது அத்யாயம் –
உபாசனபரமாகச் சென்றது மூன்றாவது அதிகாரம்
உபாசன பலனை நிரூபிக்க அவதரிக்கின்றது நான்காவது அத்யாயம்
இதில் முதல் அதிகரணம் -ஆவ்த்த்யதிகரணம்
மோஷத்துக்கு உபாய பூதமான பகவத் உபாசனம் அசக்ருதவ்ருத்தி ரூபம்
அதாவது –
தைலதாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம் –
விதிக்கப்பட்ட வேதனமானது
அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபத்யாநத்வா வஸ்தையை யுடையது என்று
சாஸ்திரம் சொல்லுகையாலே என்னும் பொருளான ஸூத்த்ரம்
ஆவ்ருத்தி ரசக்ருது பதேசாத் –எனபது முதல் சூத்ரம் -4-3-1-
இங்கு பூர்வ பஷம் –
ஸ்வர்க்க சாதனமாக விதிக்கப் பட்ட யாகாதிகள்
சக்ருத் காரணத்திலேயாய் எப்படி ஸ்வர்க்காதி பல சாதனம் ஆகிறதோ
அப்படியே இங்கும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -இத்யாதிகளாலே மோஷ சாதனமாக விதிக்கப் பட்ட
பகவத் அவிச்சின்ன ரூபமான வேதனமும்
சக்ருத் அனுஷ்டானத்திலே மோஷ சாதனமாய் கூடும் ஆகையாலே
அது ஒரு காலே செய்யப் பட வேண்டும் என்று –
சித்தாந்தம் –
வேதாந்த சாஸ்த்ரங்களில் மோஷ சாதனமாக சொல்லி வரும் அடைவுகளில்
வேதனம் -உபாசனம் -த்யானம்= தருவா ஸ்ம்ருதி- சாஷாத்காரம் -பக்தி –
என்கிற சப்தங்கள் காணப் படுகின்றன –
இவை எல்லாம் பர்யாய பதங்கள் என்று நிச்சயிக்கப் படும் இடத்து
தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்
ஆனது என்றே அறுதி இட வேண்டி இருக்கிறது
ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-91-ஸ்லோகங்களும்
கீதை -பக்த்யா த்வத் அன்யயா சக்ய அஹம் ஏவம் விதோர்ஜூன -இத்யாதி ஸ்லோகங்களும்
இதையே உறுதி படுத்துகின்றன
மேலே ஆறாவதாக ஆபரயாணாதிகரணம்-உள்ளது –
ஆபரயாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -எனபது சூத்ரம்
மோஷ சாதனமான ப்ரஹ்ம உபாசனம் ஆனது
மரணாந்தமாக அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்று
அதில் நிகமிக்கப் படும்.
——————————————————————————————
இனி
தததிகமாதிகரணத்தின் பிரமேயம் –
சூத்ரம் –
தத்திகம உத்தர பூர்வாக யோரச்லேஷ விநாசௌ தத்வ்யபதேசாத் –
ப்ரஹ்மா வித்யா நிஷ்டனுக்கு சாஷாத் கார அவஸ்தையை அடைந்த ப்ரஹ்ம வித்யா நிஷ்பத்தி உண்டாகும் அளவில்
ப்ரஹ்ம வித்யா மகிமையினாலே
பூர்வ பாவங்களுக்கு வி நாசமும்
உத்தர பாபங்களுக்கு அச்லேஷமும் ஆகும்
ஸ்ருதிகளிலே அப்படி சொல்லி இருப்பதனாலே -எனபது சூத்தரார்த்தம்
ப்ரஹ்ம ஞானத்துக்கு முன்பு செய்த பாபங்கள் நசித்துப் போய் விடும்
பிறகு அபுத்தி பூர்வகமாக நேரும் பாபங்கள் தாமரை இலையிலே தண்ணீர் போல ஓட்ட மாட்டா -என்றபடி
சந்தோக்ய சுருதியிலே உபகோசல வித்யா பிரகரணத்திலேயும்
அவ்விடத்திலேயே வைச்வா நர வித்யா பிரகர்ணத்திலேயும்
ப்ரஹ்ம வித்யையின் பலன் சொல்லப் பட்டு இருக்கின்றது –
ஆகையால் உத்தர பாபங்களுக்கு அச்லேஷமும்
பூர்வ பாவங்களுக்கு விநாசமும் சொல்லப் படுகிறது -என்கை
இங்கு பூர்வ பஷம் –
ந புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -என்று
பலனை அனுபவித்தே கருமங்களை தொலைக்க வேணும் என்று ப்ரஹ்ம வைவர்த்தத்தில்
சொல்லி இருக்கையாலே கர்ம பலன்களை அனுபவித்தே தீர வேணும்
ப்ரஹ்ம விதயையினாலேயே கர்மங்கள் தீர்ந்து போவதாகச் சொல்வது பிரசம்சாபரமான வார்த்தையாம் இத்தனை என்று-
சித்தாந்தம் –
பூர்வ பாபங்களுக்கு விநாசமும்
உத்தர பாபங்களுக்கு அச்லேஷமும்
ப்ரஹ்ம வித்யா பிரபாவத்தாலே நேருவதாக பல உபநிஷத்துக்கள் கூறி இருப்பது அப லபிக்க முடியாதது –
நா புக்தம் ஷீயதே கர்ம –என்ற வசனமும் உக்தமானதே
அது ப்ரஹ்ம வித்துக்கள் அல்லாத சாமான்யர் விஷயமாக ஒதுக்கத் தகும்
ஆகவே பரஸ்பரம் அவிருத்தங்களான வசனங்களேயாம்
நெருப்பு வீட்டைக் கொளுத்தியே தீரும் -என்று ஒருவன் சொல்லுகிறான்
பற்றி ஏற்கிற நெருப்பை தண்ணீர் அணைத்தே தீரும் -என்று மற்று ஒருவன் சொல்லுகிறான்
இவற்றில் பரஸ்பர விரோதம் சிறிது ஏதேனும் உண்டோ
தண்ணீர் இல்லையானால் படர்ந்து எரிகிற தண்ணீர் வீட்டை கொளுத்தியே தீரும் -என்றும்
தண்ணீரை இட்டு அணைத்தால் நெருப்பு ஓய்ந்து விடும் என்றும் அர்த்தமாக வில்லையோ
அது போலே
ப்ரஹ்ம வித்யை இல்லாத அளவில் கர்மங்கள் பலனைக் கொடுத்தே தீரும் என்றும்
ப்ரஹ்ம வித்யை உண்டாகில் கருமங்களின் சக்தி பிரதிஹதமாய் விடும் என்றும்
எளிதாக அர்த்தம் ஆகும் அன்றோ —
——————————————————————————————
இனி
நிசாதி கரணத்தைப் பற்றி பேசுவோம்
ஒரே சூத்தரம் கொண்டது இந்த அதிகரணம்
இரவில் இறப்பதற்கு ப்ரஹ்ம பிராப்தி உண்டா இல்லையா என்று விசாரிக்கப் படுகிறது
நிசி மரணத்தைப் பற்றி சாஸ்த்ரங்களில் இழிவாக சொல்லப் பட்டு இருக்கையாலே
பரம புருஷார்த்தமான மோஷமானது சம்பவிக்க மாட்டாது
பகலில் மரணமே சாஸ்த்ரங்களில் பிரசச்தமாக காண்கிறது
நிசா மரணம் இதுக்கு விபரீதமானது
ஸ்பஷ்டமாக சாஸ்திரம் சொல்லி இருப்பதால் அதமகதிக்கே ஹேதுவாகும்
இரவில் இறப்பதற்கு ப்ரஹ்ம பிராப்தி சம்பவிக்க மாட்டாது -இது பூர்வ பஷம்
சித்தாந்தம் –
ப்ரஹ்ம வித்துக்களுக்கு கர்ம சம்பந்தம் தேகம் உள்ள வரைக்குமே யாதலால்
நிசி மரணம் ப்ரஹ்ம வித்துக்களுக்கு பாதகம் ஆகமாட்டாது –
பாக கர்மங்கள்
ஆரப்த கார்யங்கள் என்றும்
அநாரப்த கார்யங்கள் என்றும்
இரு வகைப்படும்
இன்னமும்
பூர்வ பாபங்கள் என்றும்
உத்தர பாபங்கள் என்றும்
இருவகைப்படும்
பலன் கொடுக்கத் தொடக்கி விட்ட கருமங்கள் ஆரப்த கார்யங்கள் -இவையே பிராரப்த கர்மம் எனப்படும்
பலன் கொடுக்கத் தொடங்காத தீ வினைகள் அநாரப்த கார்யங்கள் –சஞ்சித கர்மமும் இதுவே
ப்ரஹ்ம வித்யை சம்பாதிப்பதற்கு முன்னே செய்யப் படும்
பாபங்கள் பூர்வ பாபங்கள்
அதற்க்கு பின்பு புத்தி பூர்வகமான பாபங்கள் நேருவதற்கு பிரசக்தி இல்லாமையாலே
அபுத்தி பூர்வகமாகவும் அகதிகதமாகவும் நெருமாவை உத்தர பாபம்
இவற்றுள்
அநாரப்த கார்யங்களான கர்மங்கள் ப்ரஹ்ம வித்யை சம்பந்தம் உண்டான அன்றே தொலைந்து போயின வாதலாலும்
உத்தர பாபங்கள் ப்ரஹ்ம வித்துக்களின் இடத்தில் ஓட்ட மாட்டா என்று சொல்லப் படுகையாலும்
பிராரப்த கர்மம் ஒன்றே செஷித்து நிற்கிறது
அக்கர்மம் கர்ம தேகத்தோடு கழியும் ஆதலால் பந்த ஹேது வாக மாட்டாது
ஆகவே ப்ரஹ்ம வித்துக்களுக்கு நிசி மரணம் நேர்ந்தாலும்
பரம புருஷார்த்தமான
ப்ரஹ்ம பிராப்திக்கு குறை இல்லை என்றதாயிற்று
திவா ச சுக்ல பஷ ச -என்று கீழே காட்டின வசனம்
ப்ரஹ்ம வித்துக்கள் அல்லாதார் விஷயம் என்றதாயிற்று-
——————————————————————————————
-இனி
தஷிணாயநாதி கரணம் –
இதிலும் ஒரே சூத்திரம்
நிதி மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம பிராப்திக்கு குறை இல்லை என்று
முதிய அதிகரணத்தில் சொன்ன ஹேது
அந்த ஹேதுவினாலேயே தஷிணாயனத்தில் மரணம் அடைந்ததற்கும் குறை இல்லை என்ற தாயிற்று
ஆனாலும் இதில் அதிகப் படியான சங்கை –
தைத்ரிய உபநிஷத்தில் தஷிணாய னத்தில் மரணம் அடைந்ததற்கு சந்திர பிராப்தி சொல்லப் படுகிறது
சந்திர பிராப்தி பெற்றவர்களுக்கு புனராவ்ருத்தியும் சொல்லப் படுகிறது
பீஷ்மர் முதலான சில ப்ரஹ்ம வித்துக்களும் உத்தராயண ப்ரதீஷை பண்ணினதாகத் தெரிய வருகிறது
இதற்க்கு பரிஹாரம் ஆவது
சந்திர பிராப்தியினால் புநரா வ்ருத்தி எனபது ப்ரஹ்ம வித்துக்கள் அல்லாதார்க்கு ஒழிய
ப்ரஹ்ம வித்துக்களுக்கு அன்று
ப்ரஹ்ம வித்துக்களுக்கு சந்திர பிராப்தி இளைப்பாறும் ஸ்தானம் அத்தனை
ப்ரஹ்ம பிராப்தி அவர்ஜநீயமாகவே தேறும்
பீஷ்மர் மது வித்யா நிஷ்டர்
மது வித்யா ப்ரபாவத்தினால் ஸ்வ சந்த மரணத்வம் உள்ளது
ஆனாலும் உத்தரயாணத்தின் மேன்மையைக் காட்ட வேண்டியும்
அவர் உத்தராயண தீஷிதை பண்ணின அளவில்
தஷிணாயத்தினில் மரணம் அடைந்தவர்களுக்கு ப்ரஹ்ம பிராப்தியில் கண் அழிவு சொல்ல முடியாது
ஆக
இவ்வளவால்
ப்ரஹ்ம வித்துக்களுக்கு
நிசி மரணமோ
கிருஷ்ண பஷ மரணமோ
தஷிணாய மரணமோ
நேர்ந்தாலும் கூட பர புருஷ பிராப்தியில் குறை இல்லை என்றதாயிற்று –
——————————————————————————————
இனி முடிவான அதிகரணத்தில் -ஜகத் வியாபார வர்ஜ அதிகரணம் –
முக்த புருஷனுக்கு ஜகத் சிருஷ்டியில் அதிகாரம் இல்லை என்பதும்
பரமபதத்தின் நின்றும் மீட்சி இல்லை என்பதும்
இவ் வதிகரணத்தில் தெரிவிக்கப் படுகின்றன –
முக்தன் உடைய ஐஸ்வர்யம் ஜகன் நியமனத்தை தவிர்த்தேயாம்
ஏன் என்னில்
பர ப்ரஹ்மத்தை குறித்துச் சொல்லும் பிரகரணங்களிலேயே
ஜகத் சிருஷ்டி முதலானவற்றை சொல்லி இருக்கிற படியாலும்
அவற்றைச் சொல்லும் பிரகரணங்களிலே ஜீவன் ப்ரஸ்துதம் இல்லாமையாலும் -என்பதாம் –
பூர்வ பஷம் –
முண்டக உபநிஷத்தில் முக்தனுக்கு பர ப்ரஹ்மத்தோடு சாம்யம் ஓதப்படுகிறது –
சாந்தோக்ய உபநிஷத்தில் முக்த புருஷனுக்கு சத்யா சங்கல்பத்வமும் ஒத்தப் படுகிறது
இவ்விரண்டும் முக்தனுக்கு ஜகத் நியாமகத்வ ரூபமான ஜகத் ஈச்வரத்வம் இருந்தால் ஒழிய பொருந்த மாட்டாது
முக்தனைப் பற்றி ஓதும் இடங்களில்
சர்வ லோக சஞ்சாரமும் காமான் நித்வமும் காம ரூபித்வமும் பொருந்துகின்றன
சர்வ லோக சஞ்சாரம் எனபது -சர்வ லோக நியமனத்தக்கு தானே
அது தவிர மற்ற ஒரு பலனும் தருகின்றது இல்லை யாகையாலே ஜகன் நியமனம் முக்தனுக்கு சித்தித்தே தீரும்
காமான் நித்வாதிகள் சொன்ன போதே லோகங்கள் அவனுக்கு ஆதீனம் எனபது தேறி நிற்கும்
முக்தனுக்கு சர்வ லோக சஞ்சாரம் அங்கு உள்ள போகங்களை அனுபவிக்க தான்
உலகங்களை நியமிக்க இல்லை என்றால்
அதுவும் சொல்ல முடியாது
விகாராச்பதங்கள் ஆகையாலே ஹேயங்களாய் இருக்கும் லோகங்களையும்
அவற்றில் உள்ள பொருள்களையும் போகங்களாக கொள்ள பிரசக்தி இல்லை
அவை ஹேயங்கள் ஆனாலும் பரம புருஷன் விபூதி யாகையாலே அவற்றில் போக்யதா புத்தி சம்பவிக்கலாம் ஆகையாலே
அவற்றை புஜிக்கைகாகவே சஞ்சாரம் பிராப்தம் என்னும் வாதமும் ஒவ்வாது –
சாந்தோக்யத்தில் – ஸ ஸ்வராட் பவதி -என்று ஸ்பஷ்டமாக சொல்லி இருக்கையாலே
முதனுக்கு வேறு யாரும் அதிபதி அல்ல
அதனால் பர ப்ரஹ்ம விபூதிகளை அனுபவிக்க சஞ்சாரம் என்பதும் பொருந்தாது
அது நியமன அர்த்தமாக்கத் தான்
ஆகவே முக்தனுக்கு ஜகத் வியாபாரமும் உண்டு -இது பூர்வ பஷம்
இனி சித்தாந்தம் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -இத்யாதி சுருதியால்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ரூபமான நியாமகத்வத்தை
பர ப்ரஹ்ம லஷணமாக சொல்லி இருக்கையாலே
அது பர ப்ரஹ்மத்துக்கு அசாதாராணம் ஆனது -எனபது விளங்குகிறது
அசாதாராணமான தர்மமே லஷணமாக இருக்க முடியும்
ஆகவு இது முக்தனுக்கு சம்பவிக்க மாட்டாது
மற்றையோர்க்கு நியாமகத்வம் இல்லை என்று ஸ்ருதிகள் ஸ்பஷ்டமாக சொல்லுமே
பரமம் சாம்யம் உபைதி -என்று
வெறும் சாம்யம் இல்லாமல் பரம சாம்யா பத்தி சொல்லி இருக்கையாலே
இவனுக்கு உள்ளது எல்லாம் இவனுக்கும் பிராப்தம் ஆனால் ஒழிய பரம சாம்யா பத்தி வாராது என்னில்
வித்வான் புண்யே பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்ற சொல் செறிவால் கிடைப்பது
வித்யா சாத்தியமான யாதொரு புண்ய பாப விது நனம் உண்டோ அதனால் ஆகும் பலனில் சாம்யம் என்றதாயிற்று
வித்யை எனபது ப்ரஹ்ம பிராப்தி பிரதிபந்தகமான
புண்ணிய பாப கர்மத்துக்கு பிராயச் சித்தம் ஆனது –
ஏவஞ்ச புண்ய பாப கர்ம விதூ நன சாத்திய மான பலன் ப்ரஹ்ம அனுபவமே என்று தேறிற்று
அதில் தான் சாம்யம் விவஷிதம் ஆகும்
முன்னே பரம புருஷ பிரஸ்தாபம் இருக்கையாலே அவனோடு தான் சாம்யம் என்று நிச்சயிக்கப் படுகிறது
இந்த சாம்யத்தில் பாரம்யமாவது ப்ரஹ்ம அனுபவம் செய்யும் இடத்து
தத் குணங்களிலும்
தத் விபூதிகளிலும்
ஏக தேசத்தையும் விடாமல் பூர்த்தியாக அனுபவிப்பதே யாம்
ஆக
சமஸ்த கல்யாண குண விபூதி விசிஷ்ட ப்ரஹ்ம அனுபவத்தில் சாம்யம் -என்னும் இடம் தேறுகிறது
ஆக முக்தனுக்கு பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் சித்தித்த போது ஆனந்த சாம்யமும் இந்த ஸ்ருதியினாலே சித்தம்
ஸ ஸ்வராட் பவதி -என்றதும்
கர்ம வச்யத்தை இல்லாமையைச் சொல்லிற்று
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -இத்யாதிகளாலே
முக்தனுடைய சத்தா ஸ்திதி பிரவ்ருதிகள் எல்லாம் பரம புருஷ அதீனம் என்று தேறுகையாலும்
முக்தனுக்கு சத்ய சங்கல்பத்வம் இயற்கையாய் இருந்தாலும்
கருமங்களினால் மறைந்து இருந்த அது
பரம புருஷனுடைய அனுக்ரஹத்தாலேயே ஆவிர்பவிப்பதாக ஒதுகையாலும்
முக்த ஐஸ்வர்யம் முழுவதும் பகவத் இச்சா அதீனமாய் அறுகையால்
பரம புருஷனுடைய அசாதாரண ஜகன் நியமன ரூப ஐஸ்வர்யம் முக்தனுக்கு இல்லை என்று முடிந்தது-
——————————————————————————————
இப்படி முக்தன் உடைய ஐஸ்வர்யம் பரம புருஷன் அதீனம் ஆகில்
அவன் ஸ்வ தச்ந்த்ரன் ஆகையாலே தன சங்கல்பத்தாலே
ஒரு சமயம் முக்தனை
பரம பதத்தில் நின்றும் திருப்பி அனுப்ப கூடும் ஆகையாலே
மோஷ புருஷார்த்தமும் அநித்தியமாக வேண்டி வரும் சங்கையில்
அநாவ்ருத்திச் சப்தாத் அநாவ்ருத்திச் சப்தாத்-சரம சூத்தரம் அவதரிக்கிறது
அனந்யா சித்தமான சுருதி வாக்யங்களைக் கொண்டே அறியக் கடவதான பொருளை
சாஸ்திரம் சொன்ன படியே தான் அறிய வேண்டும்
பரம புருஷன் உளன் என்பதை எதை கொண்டு அறிகிறோமே அதே சாஸ்திரம் முக்தர்களுக்கு மீட்சி இல்லை என்பதையும் அறிவிகின்றது
அவனோ ஸ்வ தந்த்ரன்
சாஸ்திரம் மீறியும் கார்யம் செய்ய வல்லவன்
அசக்தன் அல்லன்
அவன் செய்யப் புக்கால் சாஸ்திரம் குறுக்கே நிற்குமோ
ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூ கத்திகளைக் கொண்டே இங்கும் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்கிறார்
அவன் ஸ்வ தந்த்ரன் ஆகிலும்
உன்மத்தன் அல்லன்
மூர்க்கன் அல்லன்
அரசிகன் அல்லன்
சத்ய சங்கல்பன் என்று பேர் பெற்றவன்
தன்னுடைய மநோ ரத்தத்துக்கு மாறுபாடாக நடந்து கொள்பவன் அல்லன்
ஒரு சேதனனை பெறுகைக்கு எப்பாடு பட்டான்
எவ்வளவு கிருஷி பண்ணுகிறான்
அவன் சிருஷ்டி பண்ணுவதும் அவதரிப்பதும் சேதனர்களை லபிக்கைக்கு அன்றோ
தவப் பயனாக லபித்த பின்பும் இழப்பனோ –
பரம புருஷம் ஜ்ஞாநினம் லப்த்வா -என்ற ஸ்ரீ ஸூ கதி
யானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன்
தானொட்டி வந்து என் தனி நெஞ்சு வஞ்சித்து
ஊனொட்டி நின்று என் உயிருள் கலந்து இயல்
வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே-என்றும்
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து
தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் '
காட்கரை அப்பன் கடியனே –
இந்த திவ்யார்த்த சௌரபத்தோடு ஸ்ரீ பாஷ்யம் தலைக் கட்டி அருளுகிறார் –
——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
No comments:
Post a Comment