புருஷசூக்தம் பிரதம அனுவாகம்
1.ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்
ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அதய்திஷ்டத் தசாங்குலம்
புருஷ: - பரமபுருஷரானவர்
ஸஹஸ்ர சீர்ஷா- ஆயிரக்கணக்கான தலைகள்
ஸஹஸ்ராக்ஷ: - ஆயிரக்ககணக்கான கண்கள்
ஸஹஸ்ரபாத்- ஆயிரக்கணக்கான பாதங்கள்
உடையவர்
ஸ- அவர்
பூமிம்- பூமியை
விஸ்வத: - எங்கும்
வ்ருத்வா- வியாபித்து
தசாங்குலம்- பத்துவிரல்களால் எண்ணும் எண்ணிக்கையை
அத்யதிஷ்டத்- கடந்து நிற்கிறார்.
சாதாரணமாக நாம் படங்களில் காட்டப்படும் விஸ்வரூப தரிசனத்தைப் பார்த்திருக்கிறோம். அனேக தலைகள் கைகள் இவ்வாறு.
இது ஒரு உருவகம் அன்றி உண்மை இல்லை. புருஷ: என்பது இறைவனைக் குறிக்கிறது. அவன் எங்கும் சர்வவ்யாபி என்பதையே இவ்வண்ணம் சித்தரிக்கப் படுகிறது. அகில உலகமும் அவன் உருவமே என்ற அர்த்தத்தில் ஆயிரம் தலைகள் கண்கள் இவை சொல்லப்படுகின்றன.
சர்வம் பிரம்ம மயம் என்பதே இதன் பொருள். வர பூமியை எங்கும் வியாபித்து என்பதும் இதைத்தான் குறிக்கிறது.
பத்து விரல்களால் எண்ணும் எண்ணிக்கையை கடந்து நிற்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம் என்று பார்க்கலாம்.
இது கணிதத்தில் அளவு என்ற பொருளைக் குறிக்கும் சொல். எண்ணிக்கைக்கு ஆரம்பம் பத்து விரல்கள் அல்லவா? அதைகடந்து நிற்கிறான் என்றால் இறைவனின் எல்லையில்லாத் தன்மையைக் குறிக்கிறது. அதாவது அனந்தம் infinity.
'அணோரணீயான் மஹதோ மஹீயான் ' அணுவிலும் சிறியன் பெரிதிலும் பெரியன் என்கிறது உபநிஷத்.
இங்கு எல்லாவற்றைக் காட்டிலும் பெரிய வடிவம் சொல்லப்படுகிறது. சாந்தோக்ய உபநிஷத்தில் தஹர வித்யை என்னும் பாகத்தில் அணுவிலும் சிறிய வடிவம் சொல்லப்படுகிறது.
பிரம்ம சூத்ரத்தில் 'விகாராவர்த்தி ச ததா ஹி ஸ்திதிம் ஆஹ' என்ற வாக்கியம் காணப்படுகிறது. (பி. சூ.4.4.19)
இதன் பொருள், பிரம்மம் இந்த வேறுபாடுகள் உடைய ப்ரப்ஞ்சத்தைத் தாண்டி நிற்கிறது.
இதையே பகவானுடைய விஸ்வரூப தரிசனத்தைக் கண்ட அர்ஜுனன் கூறுகிறான்.
அநேக பாஹூதர வக்த்ர நேத்ரம் பச்யாமி த்வாம் சர்வதோ அனந்த ரூபம்
நாந்தம் ந மத்யம் நபுனஸ்தவாதிம் பச்யாமி விஸ்வேஸ்வர விஸ்வரூப
விஸ்வேஸ்வர – பரம்பொருளே
விஸ்வரூப- எல்லாம் ஆனவனே
த்வாம் – உன்னை
அநேகபாஹூதர வக்தர்நேத்ரம் – அநேக கைகள், முகங்கள் உடல், கண்கள் உடையவனாக
\பச்யாமி-காண்கிறேன்
சர்வத: – சர்வ வ்யாபியாக
அனந்த ரூபம் – எல்லையில்லாத உருவமாக
ந அந்தம் – முடிவில்லாத
ந மத்யம் – நடுவும் இல்லாத
ந புன: தவ ஆதிம்- உன் ஆதியும் எது என்று தெரியாமல்
பச்யாமி – பார்க்கிறேன் உன்னை
சினிமாவில் பார்ப்பதுபோல் விஸ்வரூபம் அன்று அர்ஜுனன் பார்த்தது. ஏனென்றால் எவ்வளவு பெரிய உருவம் ஆனாலும் அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருந்தாக வேண்டும்.
மேலும் நடுவும் இல்லாத என்பது அகண்ட ப்ரப்ஞ்சத்தையே குறிக்கும். ஆதலால் இது ப்ரம்ம சாக்ஷாத்காரமேயாகும்.
இதையே நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் என்று நம்மாழ்வார் கூறுகிறார்.
2. புருஷ ஏவ இதம் ஸர்வம் யத் பூதம் யத் ச பவ்யம்
உதாம்ருதத்வஸ்யேசான: யதன்னேனாதிரோஹதி
யத் பூதம்- எது இருந்ததோ
யத் பவ்யம்- எது இருக்கப்போவதோ
இதம் – எது இப்போது இருக்கிறதோ
சர்வம் இது எல்லாம்
புருஷ: ஏவ- பரமபுருஷனே
உத-மேலும் பரமபுருஷனே
அம்ருதத்வஸ்ய – அழிவின்மைக்கும்
ஈசான:-அதிபன்
யத் –எது
அன்னேன- அன்னமயமான் இந்த பிரபஞ்சத்தை
அதிரோஹதி- கடந்து நிற்கிறதோ ( அதுவும் பரம புருஷனே)
எது இப்போது இருக்கிறதோ முன்னால் இருந்ததோ பின்னால் இருக்கப் போவதோ என்ற சொற்களினால் இந்த பிரபஞ்சம் குறிப்பிடப்படுகிறது.
பிரபஞ்சம் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்று இருந்தது இன்று இல்லை . இன்றுள்ளது நாளை இருக்கப்போவதில்லை. ஆனால் மாறுதல் என்பது எப்போதும் உள்ளது, Change is the only permanent thing என்று ஆங்கிலத்தில் சொல்வது போல.
நேற்று மண் இன்று பானை நாளை ஓட்டாஞ்சல்லி. ஆனால் இவை யாவற்றிலும் நிரந்தரமாக உள்ளது எது? எல்லாவிதமான உயிருள்ள வஸ்து ஜடவஸ்து இவைகள் மாறிக்கொண்டே இருந்தாலும் மாறாமல் உள்ள ஒன்றே அவற்றிற்கு ஆதாரமாக உள்ளது. அதுதான் பிரம்மம் அல்லது பரமபுருஷன் என்பது இதன் பொருள்.
இதற்கு ஒருஉதாரணம் பார்க்கலாம். வெள்ளித்திரையில் பல உருவங்களை ப்ரொஜெக்டார் மூலம் விழச்செய்கிறார்கள். இது மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் மாறாமல் இருப்பது எது? வெள்ளித்திரை மட்டுமே.
அதுதான் பிரம்மம் அந்த பிம்பங்கள் தான் பிரபஞ்சம். அப்படி என்றால் ப்ரொஜெக்டார் எது? நம்முடைய அக்ஞானம்.
ஞானி படத்தோடு வெள்ளித்திரையையும் சேர்த்துக் காண்கிறான். அஞ்ஞானி படத்தை மட்டும் காண்கிறான் . இதுதான் வித்தியாசம்.
அம்ருதத்வம் என்பதற்கு வரிக்கு வரி மொழிபெயர்ப்பு (literal translation) சாகா நிலை அதாவது அழிவின்மை.
இது எப்போது ஏற்படும்?பிறப்பிறப்பற்ற நிலை அடைவதற்கும் அந்த பரமபுருஷனே காரண பூதனாக இருக்கிறான் என்பதுதான் அம்ருததத்வஸ்ய ஈசான: என்பதன் பொருள்.
யத் அன்னேன அதிரோஹதி- எது இந்த அன்னமயமான பிரபஞ்சத்தைக் கடந்து நிற்கிறதோ,
'அன்னாத் வை ப்ராஜா: ப்ரஜாயந்தே ' தைத்திரீய உபநிஷத் வாக்கியம்.
அன்னம் என்றால் எல்லாவற்றிற்கும் உண்டாவதற்கும் இருப்பதற்கும் எது முக்கியமோ அதைக் குறிக்கிறது.
இந்த பிரபஞ்சம் அன்னமயமானது என்றால் என்ன?
ஸ்தூலமாகக் காணும் பிரபஞ்சம் பஞ்சபூதங்களால் ஆனது.
ஸ்ருஷ்டிக்ரமத்தைப் பார்த்தால் பிரம்மம் மட்டும் முதலில் இருந்தது என்று உபநிஷத் கூறுகிறது. அதிலிருந்து முதலில் ஆகாசம் பிறகு வாயு, பிறகு அக்னி, பிறகு ஜலம் , கடைசியாக மண் அல்லது பூமி.
ஆகாசத்தில் சப்தம் மட்டுமே உண்டு . வாயுவில் சப்தத்துடன் கூட அதன் தனிக்குணமாகிய தொடு உணர்வு இரண்டும் உண்டு. அக்னிக்கு இவை இரண்டுடன் கூட உருவம் இருக்கிறது. ஜலத்தில் அதனுடைய குணமாகிய ருசியுடன் சேர்ந்து நான்கு குணங்கள். கடைசி ஸ்தூல பூதமாகிய பூமியில் இவற்றுடன் அதன் தனிக்குணமாகிய வாசனையுடன் சேர்ந்து ஐந்து குணங்கள்.
பூமி ஸ்ருஷ்டிக்குப்பிறகுதான் இந்த ஸ்தூல பிரபஞ்சம் முழுமை பெறுகிறது.
பூமியில் தோன்றும் எல்லா ஜீவராசிகளும் ஏதோ ஒன்றை அன்னமாகக்கொண்டு பிறக்கின்றன , வளர்கின்றன. தாவரங்களுக்கு நீர், பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் உணவு இவை பூமி மூலமே கிடைக்கின்றன.
அதனால் தான் 'அன்னாத் பவந்தி பூதானி,' எல்லா உயிர்களும் அன்னத்திலிருந்து உண்டாகின்றன' என்று கீதையிலும் பார்க்கிறோம்.
ஆக, அன்னமயம் பிரபஞ்சம் என்பது உண்மை. அன்னம் ன்ற சொல் இந்த சூக்தத்தில் ப்ரபஞ்சத்தையே குறிக்கிறது.
இந்த பிரபஞ்சம் பிரம்மத்தை ' பரத்தை மறைத்தது பார் முதல் பூதம், ' என்ற வகையில் மறைத்துள்ளது. திரோஹதி என்றால் மறைக்கிறது என்று பொருள். அதிரோஹதி என்றால் அதற்கு அப்பால் சென்றால் காண்பது பிரம்மமே அல்லது பரமபுருஷனே என்பதுதான் இந்த சொல்லுக்கு அர்த்தம்.
3.ஏதாவான் அஸ்ய மஹிமா.| அதோ ஜாயான் ச பூருஷ:
பாதோ அஸ்ய விச்வாபூதானி | த்ரிபாதசஸ்யாம்ருதம் திவி||
ஏதாவான் – இங்கு காணப்படுவதெல்லாம்
அஸ்ய மஹிமா-அந்த பரமபுருஷனின் மகிமையே
அத: அது எல்லாவற்றைக் காட்டிலும்
புருஷ:- பரம புருஷன்
ஜ்யாயான்-அதிகமானவர்
விச்வா பூதானி- சகல சிருஷ்டியும்
அஸ்ய – இவருடைய
பாத: - கால் பாகம்
திரிபாத:- முக்கால் பாகம்
அம்ருதம் – அழிவற்றது
திவி- பரமபதத்தில் உள்ளது.
இதையே கீதையில் 'விஷ்டப்யாஹம் இதம் க்ருத்சஸ்னம் ஏகாம்சேன ஸ்திதோ ஜகத்' என்று கூறப்பட்டிருக்கிறது.
இதன் பொருள் " நான் எல்லாவற்றையும் கடந்து நிற்கிறேன். இந்த பிரபஞ்சத்தை என்னில் ஒரு சிறிய பாகமாகத தாங்கி நிற்கிறேன்." என்பது.
அர்ஜுனன் எந்தெந்த இடத்தில் இறைவனின் வெளிப்பாடாக ( manifestation) என்று கேட்க பகவான் ஐம்பத்துநான்கு உருபொருள்களைச் சொல்லி அங்கே இறைவனைக் காணலாம் என்கிறார்.
அப்படியானால் மற்ற இடத்தில் அவர் இல்லையா என்ற கேள்வி எழும் அல்லவா அதற்கு பதிலாக மேலே சொன்ன சொற்களால் புருஷசூக்தத்தின் இந்த வாக்கியம் குறிக்கும் பொருளை உணர்த்துகிறார்.
இதன் பொருளாவது பரம்பொருளின் ஒரு அம்சமே இவ்வுலகம் என்பது.
இறைவனின் சர்வவ்யாபித்வம் சர்வ அந்தர்யாமித்வம் நமக்குப் புரிந்தாலும் இதில் ஒரு கஷ்டம் உள்ளது.
பிரம்மம் மாயையினால் உலகமாகத் தோன்றுகிறது என்றாலும் பிரம்மம் ஜகத் ஜீவன் எல்லாமே உண்மை . பிரம்மம் உயிர் பிரபஞ்சம் உடல் என்றாலும், நாம் அறிந்த பிரபஞ்சத்திற்கு ஒரு எல்லை உள்ளது
அது எவ்வளவு பெரிதாக கற்பனை செய்யினும் எல்லை என்பது இருக்கிறது. அப்போது பிரம்மமும் ஒரு எல்லைக்குட்பட்டதா என்ற ஐயம் எழும் அல்லவா?
ஆதியில் பரம்பொருள் ஒன்றுதான் அதைத்தவிர வேறு இல்லை என்று கூறுவது உபநிஷத். அதுவே இந்த எல்லைக்குட்பட்ட பிரபஞ்சம் என்பது சரியல்ல. அது பிரம்மத்திற்கும் எல்லை கூறுவதாக ஆகும். இதைக் காட்டுவதே புருஷசூக்தத்தின் இந்த வாக்கியம்.
ஒரு உதாரணம் கூறவேண்டும் என்றால் நாம் தலைக்கு மேல் ஆகாயத்தைப் பார்க்கிறோம். வீட்டுக்குள்இருந்து பார்த்தால் சிறிதளவே தெரிகிறது. வெட்டவெளியில் நின்று பார்த்தால் அதிகமான அளவு தெரிகிறது. ஆனால் அதுதான் ஆகாயமா என்றால், இல்லை, ஆகாயம் அதைக்காட்டிலும் பன் மடங்கு பெரியது எங்கும் வியாபித்துள்ளது அல்லவா?
அதே மாதிரிதான் நாம் காணும் இந்த உலகத்தில் இறைவன் எங்கும்வ்யா பித்துள்ளன் என்றாலும அதற்கும் மேலே அளவிட முடியாத ஒன்றுதான் பரம்பொருள்.
5. தஸ்மாத் விராட் அஜாயத|விராஜோ அதி பூருஷ:|ஸ ஜாதோ அத்யரிச்யத | பச்சாத் பூமிம் அதோ புர:
தஸ்மாத் – அந்த புருஷனிடம் இருந்து
விராட்- பிரம்மாண்டம் அல்லது சூக்ஷ்ம உலகம்
அஜாயத- தோன்றியது.
விராஜோ அதி- அதை ஒட்டி
பூருஷ: - பிரம்மா
ஜாத:- தோன்றினார்
அத்யரிச்யத- அவர் எல்லாவற்றையும் வ்யாபித்தார்
பச்சாத் – பிறகு
பூமிம்- பூமியையும்
அத: அதன் பின்
புர:- சரீரங்களையும் சிருஷ்டித்தார்
'தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய' பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது. ( சாந்தோக்ய உபநிஷத் 'தத் தவம் அஸி' அத்யாயம்)
இங்கு விராட் என்பது பிரபஞ்சம் நாம ரூப ஸ்ருஷ்டிக்கு முந்தைய நிலை. இதைத்தான் சாங்கய சாஸ்திரம் பிரகிருதி என்று கூறுகிறது,.இந்தநிலையில் எல்லாம் சூக்ஷ்ம ரூபத்தில் இருக்கிறது . பரம்பொருளின் ஸ்ருஷ்டிசக்தியே பிரம்மா. இந்த சிருஷ்டி சக்தியானது பிரபஞ்சம் முழுதும் பரவி பூமியை ஸ்ருஷ்டித்தது. பூமி என்ற சொல் பஞ்சபூதங்கலாளான இந்த உலகத்தைக் குறிக்கிறது. அதாவது ஸ்தூல பிரபஞ்சம். அதற்குப்பிறகு சரீரங்களை சிருஷ்டித்தது. அதாவது நாம ரூபம்.
சாந்தோக்யத்தில் தத் தவம் அஸி என்ற பகுதியில் ஆகாயம் முதலான பூதங்களின் சிருஷ்டி சொல்லப்படவில்லை. ஆகாயத்திற்கும் வாயுவிற்கும் உருவம் கிடையாது. ஆதலால் முதல் இரண்டிற்கும் பல உருவம் கிடையாது.
அக்னியிலிருந்து நீர் அதிலிருந்து மண் இப்படி ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப்படுகிறது
அதற்குப்பிறகு பிரம்மம் சங்கல்பித்தது.
'அஹம் இமா: திஸ்ரா: தேவதா: அனேன ஜீவேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி' (சாந்தோக்ய உப.)
இதன் பொருள், 'இந்த மூன்றினுள் அவற்றின் ஜீவனாகப் புகுந்து பெயர் ,உருவம் இவற்றை கற்பிப்பேன்.
இதுதான் இந்த புருஷசூக்த வாக்கியத்தின் பொருள்
6. யத் புருஷேண ஹவிஷா| தேவா யக்ஞம் அதன்வத|வஸந்தோ அஸ்ய ஆஸீத் ஆஜ்யம் \கிரீஷ்ம இத்ம: சரத் ஹவி:
தேவா: தேவர்கள்
புருஷேண- புருஷன் என்ற
ஹவிஷா- ஹவிஸ்ஸினால்
யத் – எந்த
யக்ஞம்- மானஸ யக்ஞத்தை
அதன்வத்- செய்தார்களோ
அஸ்ய – அதற்கு
வஸந்த: - இளவேனிற்காலம்
ஆஜ்யம் – நெய்யாகவும்
கரீஷ்மா- கோடை காலம்
இத்ம:-சமித்தாகவும்
சரத் – சரத்காலம்
ஹவி:- ஹவிஸ் ஆகவும்
ஆஸீத் – ஆயிற்று
இதில் சொல்லப்பட்டிருப்பது ஸ்ருஷ்டியக்ஞம். புருஷன் என்பது பரமபுருஷன். அவன் மட்டும்தான் ஆதியில் இருந்தான். அவனிடமிருந்து சிருஷ்டி தொன்றியது என்று பார்த்தோம்.
தேவர்கள் புருஷன் என்ற ஹவிஸ்ஸினால் மானஸயக்ஞம் செய்தார்கள் என்றால் பொருந்திவரவில்லை. ஏனென்றால் தேவர்களே அவனுடைய ஸ்ருஷ்டிதானே . சிருஷ்டிக்கு முன்னால் அவர்கள் இருக்க முடியாதே.
இதைப் புரிந்துகொள்ள நாம் கீதையின் வாக்கியத்தைப் பார்க்க வேண்டும்.
'ப்ரம்மார்ப்பணம் பிரம்மஹவி: ப்ரம்மாக்நௌ பிரம்மணாஹுதம்' (பகவத்கீதை- 5.24)
இதன் பொருள், பிரம்மமே யாகத்தின் இலக்கு. பிரம்மமே ஹவிஸ். ப்ரம்மத்தினால் பிரம்மமாகிற அக்னியில் அர்ப்பணம் செய்யப்படுகிறது.
அதாவது யக்ஞத்தின் கர்த்தாவும் பிரம்மம் அதாவது பரமபுருஷன் . அவனே ஹவிஸ்ஸை ஏற்கிறான். தேவர்கள் என்பது அவனுடைய உருவகமான இந்திரியங்கள். அவனை அவனே அவனுக்காக அவனிடத்தில் அர்பணிப்பதாக அர்த்தம்.
இது 'ஆத்மனா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி ,' "இந்த பிரபஞ்சத்தின் அந்தராத்மாவாக உல் புகுந்து நாம ரூபங்களை சிருஷ்டிப்பேன்," என்ற உபநிஷத் வாக்கியத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது.
ஆஜ்யம் என்பது அக்னியில் இடப்படும் நெய், இது அக்னி பிரகாசமாக எரிவதற்கு அனுகூலமாகிறது.
வசந்த காலம் என்பது ப்ரஜோற்பத்தியை தூண்டும் காலம் ஆதலால் அது ஆஜ்யம் என்று சொல்லப்படுகிறது.
கோடைகாலத்தில் சூரியனின் ஒளியால் உலகம் செழிக்கிறது,. ஆதலால் கோடையே சமித்து எனப்படுகிறது சமித்துக்களால் அக்னி வளர்வதால்.
சரத் காலம் ஹவிஸ் . அதாவது கடைசியில் அக்னியில் போடப்படும் பொருள்கள். ஏனென்றால் சரத் காலத்தில் மழைபெய்த பின்னர் செழிப்பைக்கான்கிறோம். இது பலன் அளிப்பதைக்குறிக்கிறது.
இவ்வாறாக சிருஷ்டி யக்ஞம் விவரிக்கப்படுகிறது,
தில் சிருஷ்டியின் தொடக்கம் சொல்லப்படுகிறது.
7. ஸப்தஸ்யாஸன் பரிதய:| த்ரி: ஸப்த ஸமித: க்ருதா: |
தேவா யத்யக்ஞம் தன்வானா: அபத்னன்புருஷம் பசும்||
அஸ்ய இதற்கு
ஸப்த- ஏழு
பரிதய: பரிதிகள்
ஆஸன்- இருந்தன
த்ரிஸப்த- இருபத்துஒன்று தத்துவங்கள்
ஸமித: - சமித்துக்களாக
க்ருதா: - செய்யப்பட்டன.
இந்த ஸ்ருஷ்டி யக்ஞத்தில் ஏழு பரிதிகள் உபயோகப் பட்டன. பரிதி என்றால் யாகாக்னியை சுற்றி வைக்கப்படுவது. எதையும் இன்னும் ஸ்ரிஷ்டிக்காததால் இந்த பரிதிகள் எது என்றால் ஏழு சந்தஸ்களையுமே பரிதியாக் கூறியுள்ளது என்று கொள்ளலாம்.
மைத்ராயணி உபநிஷத்தில் பஞ்ச பூதங்கள் அஹங்காரம் புத்தி என்ற ஏழு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றுமே ஸ்ருஷ்டிக்கப்படாததால் இவைகளைப் பற்றிய த்யானமே இங்கு சொல்லப்படுகிறது.
பஞ்ச பூதங்கள் சூக்ஷ்ம ரூபம் , அவைகளின் ஸ்தூல ரூபம் பஞ்ச கர்மேந்த்ரியங்கள் பஞ்ச ஞானேந்த்ரியங்கள் (Senses not sense organs) அந்த;கரணம் ஆக மொத்தம் 21. சமித் என்றால் சிருஷ்டிக்கு காரணப் பொருள்கள் என்று கொள்ளலாம்.
.
தேவா: தேவர்கள்
யக்ஞம்- யக்ஞத்தை செய்பவர்களாகி
யத் புருஷம் – முன்சொன்ன புருஷனை (. தஸ்மாத் விராட் அஜாயத|விராஜோ அதி பூருஷ:|ஸ ஜாதோ அத்யரிச்யத| என்று முன்னம் சொல்லப்பட்ட பரம்புருஷ்னின் ஸ்ருஷ்டிசக்தியான பிரம்மா)
பசும்- யாகப்பசுவாக
அபத்னன்-யூபஸ்தம்பத்தில் கட்டினார்கள்.
அதாவது பிரம்மாவிடம் இருந்துதான் சிருஷ்டி. (ஸ ஜாதோ அத்யரிச்யத | பச்சாத் பூமிம் அதோ புர:- சூக்தம் 5)
யூபஸ்தம்பம் என்பது பிரகிருதி. அதாவது சூக்ஷ்ம பிரபஞ்சம். பிரம்மா முதல் சிருஷ்டி அதன் பிறகு பிரகிருதியின் சம்பந்தத்தால் அவரிடம் இருந்து பிரபஞ்சம் தோன்றியது என்று அர்த்தம்.
'பிரம்மா தேவானாம் பிரதம: சம்பபூவ' _ முண்டகோபனிஷத்.
பிரம்மாதான் தேவர்களுக்கு முன்னே தோன்றியவர்.
8. தம் பர்ஹிஷி ப்ரௌக்ஷன் | புருஷம் ஜாதம் அக்ரத: |
தேன தேவா அயஜந்த| ஸாத்யா ருஷயச்ச யே ||
தம் – அந்த
அக்ரத:- முதலில்
ஜாதம்- தோன்றிய
புருஷம்- புருஷனை (ப்ரம்மா)
பர்ஹிஷி – தர்ப்பைமேல் ( பிரகிருதி)
ப்ரௌக்ஷன் - ப்ரோக்ஷனம் செய்தனர் ( சிருஷ்டிக்குரிய மந்திரங்கள் )
தேன- அதனால்
அயஜந்த- யாகத்தை செய்தார்கள்
ஸாத்யா: தேவா: ருஷய: ச- ஸாத்யர்கள், தேவர்கள் ரிஷிகள் முதலானோர். இவை பிரம்மாவின் சிருஷ்டி சக்தியின் அவயவங்கள்.
பிரம்மா தான் முதல் சிருஷ்டி. பிரக்ருதியின் சம்பந்தம் தர்ப்பை மேல் வைத்ததைக் குறிக்கிறது.
ப்ரோக்ஷண மந்த்ரங்கள் வேத மந்த்ரங்கள் பிரம்மா வேதமந்த்ரங்களில் இருந்து சிருஷ்டியை செய்தார் என்று பொருள்.
வேதம் அபௌருஷேயம் அநாதி . யாராலும் சிருஷ்டிக்கப் பட்டது அல்ல. பரம்பொருளின் மூச்சுக்காற்று.
பூர்வானுவாகத்தின் கடைசி மந்தரத்தில் 'யத்ர பூர்வே ஸாத்யா: சாந்தி தேவா:' என்று காண்கிறோம்
. அதனால் ஸாத்யா: தேவா: ருஷய: என்ற சொல் ஸ்ருஷ்டிக்குட்படாத நித்ய சூரிகள் போன்றவர்களைக் குறிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். (ரங்கநாத முனி)
9. தஸ்மாத் யக்ஞாத் சர்வஹுத: | சம்ப்ருதம் ப்ருஷத் ஆஜ்யம்|
பசூன் தான் சக்ரே வாயவ்யான் |ஆரண்யான் க்ராம்யா:ச யே
ஸர்வஹுத: எல்லாவற்றையும் ஆஹுதியாகக் கொண்ட
தஸ்மாத யக்ஞாத்- அந்த யாகத்தில் இருந்து
ப்ருஷத் ஆஜ்யம் –தயிர் கலந்த நெய்( சிருஷ்டிக்கு வேண்டிய வித்து)
சம்ப்ருதம்- பிரசாதமாக உண்டாயிற்று.
பசூன்- சாகபக்ஷிணிகாளான் மிருகங்கள்'
ஆரண்யான்- காட்டு மிருகங்கள்
வாயவயான்- காற்றில் சஞ்சரிக்கும் அதாவது பறக்கும் ஜீவராசிகள்
தான் அவைகளை
யே கிராம்யா: ச – நாட்டில் வாழும் உயிரினங்களையும்
சக்ரே – பிரம்மா சிருஷ்டித்தார்.
இவ்வாறு ஸ்ருஷ்டிக்ரமம் வர்ணிக்கப்படுகிறது
. 10. தஸ்மாத் யக்ஞாத் ஸர்வஹுத: |ருசஸ்ஸாமானி ஜக்ஞிரே தஸ்மாத்|
ச்சந்தாம்ஸி ஜக்ஞிரே தஸ்மாத்| யஜு: தஸ்மாத் அஜாயத||
தஸ்மாத்- அந்த
ஸர்வஹுத:-எல்லாவற்றையும் ஆஹுதியாகக் கொண்ட
யக்ஞாத் –யாகத்தில் இருந்து
ருச:- ரிக் வேத மந்திரங்களும்
ஸாமானி- சாமவேத மந்திரங்களும்
ஜக்ஞிரே- வெளிவந்தன
தஸ்மாத்-அதிலிருந்தே
ச்ச்சந்தாம்ஸி- காயத்ரி முதலிய சந்தஸ்கள்
ஜக்ஞிரே- வெளிவந்தன
யஜு :- யஜூர்வேதம்
தஸ்மாத்-அதிலிருந்தே
அஜாயத- வெளி வந்தது
பரமபுருஷனிடம் இருந்து பிரம்மா வேதத்தை அறிந்து அதை வெளிப்படுத்தினார் என்று பொருள். ஏனென்றால் வேதம் அபௌருஷேயம் என்பதனால் அது ஸ்ருஷ்டிக்கப்பட்டது என்பது சரியல்ல.
" தஸ்ய ஹ வா மஹதஸ்ய பூதஸ்ய நிச்வஸிதம் ஏதத் ருக்வேதோ யசுர்வேதோ ஸாமவேதோ ---"
அந்த பரமபுருஷனுடைய மூச்சுக் காற்றே வேதங்கள் என்று சொல்லப் பட்டிருப்பதனால் அனாதியான அவற்றை பிரம்மன் வெளிக் கொணர்ந்தார் என்று பொருள்.
பிறகு எல்லாவிதமான சிருஷ்டியும் தொடங்குகிறது. பிரம்மா வேதத்தில் உள்ளபடியே சிருஷ்டி செய்தார்.
அதாவது மனிதன், விலங்குகள், பட்சிகள் , பூச்சிகள் முதலிய எல்லா ஜீவராசிகளின் குணமும் ஸ்ருஷ்டிக்கு ஸ்ருஷ்டி மாறுபடுவதில்லை.
. பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும் எல்லா உயிர்களும் சூக்ஷ்ம ரூபத்தில் இறைவனிடம் ஒடுங்குகின்றன. ஆனால் மறுபடி ஸ்ருஷ்டி தொடங்கும்போது தனித்தன்மைகளுடன்தான் தோன்றுகின்றன.
11. தஸ்மாத் அஸ்வா அஜாயந்த |யே கே சோபயாதத:|
காவோஹ ஜக்ஞிரே தஸ்மாத் | தஸ்மாத் ஜாதா அஜாவய:||
தஸ்மாத்- அந்த யக்ஞத்தில் இருந்து
அஸ்வா: - குதிரைகள்
அஜாயந்த- தோன்றின.
யே கே ச- ஒரு பக்கம் பற்களை உடைய பிராணிகளும் (எருமை முதலியன)
உபயாதத: - இரு பக்கம் பற்களை உடைய பிராணிகளும்( கழுதை முதலியன)
காவோஹ- பசுக்களும்
ஜக்ஞிரே தஸ்மாத்- - அதிலிருந்து தோன்றின.
தஸ்மாத் – அதிலிருந்தே
அஜாவய:- ஆடு முதலியவைகளும்
ஜாதா:-தோன்றின.
இவை எல்லாம் சாதுவான வேத காலத்துச் செல்வம் எனக் கருதப்பட்டவை யாகும்.
இதற்குப்பிறகு மனித சிருஷ்டி சொல்லப் படுகிறது.
12. யத் புருஷம் விதது: | கதிதா வ்யகல்பயன்|
முகம் கிம் அஸ்ய கா பாஹூ| காவூரூ பாதாவுச்யேதே||
யத் – எந்த
புருஷம் – ஹிரண்யகர்பன் – பிரம்மனின் உடல் பிரம்மாண்டமாக அதாவது பிரபஞ்சத்தை உள்ளடக்கியதாக
வித்து:- ஆயிற்றோ அது
கதிதா-எந்தெந்த வடிவாக
வ்யகல்பயன் – செய்யப்பட்டது ?
முகம்- இந்த ஹிரன்யகர்பனுடைய முகம்
கிம் – எதுவாக ஆயிற்று?
அஸ்ய பாஹூ- அவன் கைகளாக
கிம் – எவர்கள் ஆனார்கள்
கா ஊரு – துடைகள் எவர்களாயின
பாதா- பாதங்கள்
கா – எவர்களாக
உச்யேதே- சொல்லப் படுகின்றன
13. பிராம்மணோ அஸ்ய முகம் ஆஸீத்| பாஹூ ராஜன்ய: க்ருத:|
ஊரூ ததஸ்ய வைச்ய:| பத்ப்யாம் சூத்ரோ அஜாயத||
பிராம்மணோ- அந்தண வர்ணம்
அஸ்ய – இந்த புருஷனுடைய
முகம்- முகம்
ஆஸீத்- ஆயிற்று
பாஹூ –கைகள்
ராஜன்ய: - க்ஷத்ரிய வர்ணமாக
க்ருத:- செய்யப்பட்டது
அஸ்ய- அவருடைய
தத் – அந்த
ஊரூ – துடைகள்
வைச்ய:- - வைசிய வர்ணமாகவும்
பத்ப்யாம் – பாதங்களில் இருந்து
சூத்ரோ – நாலாம் வர்ணமும்
அஜாயத- உண்டாயிற்று.
. தஸ்மாத் விராட் அஜாயத|விராஜோ அதி பூருஷ:|ஸ ஜாதோ அத்யரிச்யத | பு. சுக். (5)
மேற்கண்ட மந்த்ரத்தின் படி பரமபுருஷனிடமிருந்து சூக்ஷ்மமான் அப்ரபஞ்சம் தோன்றியது . பிறகு ஸ்தூல வடிவமான ஹிரண்ய கர்பன் பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியவராகத் தோன்றினார் என்று பார்த்தோம்.
இங்கு கேள்வி பதில் மூலமாக மனித சிருஷ்டி சொல்லப்படுகிறது. இந்த புருஷனின் எந்தெந்த பாகங்களில் இருந்து எந்தெந்த சிருஷ்டி என்பது கேள்வி. அதற்கு பதில், முகத்திலிருந்து அந்தணர்கள் கைகளில் இருந்து க்ஷத்ரியர்கள், துடையில் இருந்து வைசியர்கள் பாதத்தில் இருந்து சூத்ரர்கள் என்ற நாலாம் வர்ணத்தாரும் தோன்றினர் என்பது.
இதைப் புரிந்து கொள்வதற்கு முன் பகவத் கீதையின் ஸ்லோக்த்தைப் பார்க்கலாமா?
பகவான் கீதையில் சொல்கிறார்
'சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச:' (ப.கீ 4.13)
'சமூகத்தின் நான்கு பிரிவுகளும் அவரவர் குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்ப என்னால் சிருஷ்டிக்கப் பட்டது.'
வர்ணம் என்பது வேறு, ஜாதி என்பது வேறு. ஜாதி என்பது மனிதனால் உருவாக்கப் பட்டது.
வேதகாலத்தில் யக்ஞம் என்பது பிரம்மஸ்வரூபமாக உள்ளது.
"ஸர்வகதம் பிரம்ம நித்யம் யக்ஞே ப்ரதிஷ்டிதம் " ப.கீ. 3.15
யக்ஞம் என்பது எல்லாரும் சேர்ந்து சமூகத்தின் நலனுக்காக செய்யப்பட்ட முக்கிய கர்மம். இதில் நான்கு வருணத்தாரும் சேர்ந்து பங்கு கொண்டனர். வருணம் என்பது பிறப்பினால் வந்தது அல்ல. அவரவர் குணங்களுக்கும் கர்மங்களுக்கும் ஏற்ப வகுக்கப்பட்டது.
வேதம் அறிந்தவர்கள்
பிரம்மஞானத்தை நாடுபவர்கள் யக்ஞத்தை செய்யும் முறையை அறிந்தவர்கள் பிராம்மணர் அல்லது அந்தணர் எனப் படுவோர்.
பிராமண என்ற சொல்லுக்கு அர்த்தம் பிரம்மத்தை நாடுவோர் என்பது. ப்ரம்ம என்ற சொல் வடமொழியில் பரப்ரம்மம், வேதம், யக்ஞம் என்று பல பொருள் கொண்டது. ஸத்வ குணம் மிகுந்தவர் பிராம்மணர்கள் என்று அழைக்கப் பட்டனர்.
க்ஷத்ரியர்கள் மக்களையும் தேசத்தையும் ரக்ஷிப்பவர்கள் . இதற்கு ரஜோ குணம் அதிகமாக இருக்க வேண்டும். ஒரு யக்ஞத்தை நடத்துபவன் பிராம்மணன் என்றால் அதற்கு எஜமானனாக இருப்பவன் , பொறுப்பு எடுத்துக் கொண்டவன் க்ஷத்ரியன்,.
வைசியர் என்பவர் சமூகத்திற்கு அல்லது யக்ஞத்திற்கு வேண்டிய பொருள்களை வழங்குவோர். அதாவது வர்த்தகர்கள். சூத்திரர் எனப்படுபவர் உழைப்பாளிகள்,(. Manual labourers ).ஆங்கிலத்தில் சொன்னால இந்த நான்கு வருணத்தாரும் சமூகத்தில் ( education, organaisation, commerce and labour என்ற நால்வகை பொறுப்பு உடையவர்கள்
. யக்ஞத்தின் பிரசாதம் எல்லோருக்கும் சமமாக வழங்கப் படுகிறது.
இது பிறப்பு சம்பந்தப்பட்டதல்ல என்பது பாகவதத்தில் காணலாம்.
ஒரு ரிஷபதேவர் என்ற அரசருடைய பிள்ளைகளில் பலர் தவத்தை மேற்கொண்டு பிராமணராகிவிட்டார்கள் என்று வருகிறது,
ஆதலால் பிறப்பைக்கொண்டு வருணம் என்பது பிந்தைய காலத்தில் ஏற்பட்டது. அப்போதும் நான்கு வருணங்களே இருந்தன. இப்போதுள்ள ஜாதிகள் கலி காலத்தின் மாறுதல்கள்.
இப்போது இந்த மேற்கண்ட மந்திரத்தின் பொருளைப் பார்ப்போம். பிராமணன் முகத்தில் இருந்து தோன்றினான் என்பதன் அர்த்தம் முகத்தில இருந்துதானே வாக்கு அல்லது வேதம் தோன்றியது. அதனால அதை அறிந்தவர் முகத்தில் இருந்து தோன்றினர் என்பது பொருத்தம்,
க்ஷத்ரியர்களுக்கு தோள்வலிமை அவசியம் அதனால் கைகளில் இருந்து தோன்றினர் என்று சொல்லப் படுகிறது.
வைசியர்கள் நான்கு திசையிலும் சென்று பொருளீட்டி வர்த்தகம் செய்ய வேண்டுவதால் அவர்கள் துடையிலிருந்து தோன்றினர்.இது தேகபலத்தைக் குறிக்கிறது.
சூத்திரர் பாதங்களில் இருந்து தோன்றினர் என்பது அவர்கள் கால்களினால் செய்யும் உடல் உழைப்பைக் குறிக்கிறது.
நாலாம் வருணத்தார் தவிர மீது மூன்றுபேரும் வேதம் கற்க அதிகாரம் உடையவர்கள். அதாவது அவர்களுக்கு வேதத்தில் சொல்லியுள்ள அவரவர் வருணத்திற்கு ஏற்ற கர்மாக்களை விடாது செய்ய வேண்டும். ஆனால் நாலாம் வருணத்தாருக்கு அது அவசியம் இல்லை.
ஏனென்றால் அவர்கள் பகவானின் பாதத்தில் இருந்து வந்தவர்கள் ஆயிற்றே. பாதத்தைத்தானே எல்லா வேதமும் வணங்குகிறது!அதனால் பக்தி ஒன்றே போதும்.
இதைப் பார்த்தால் இப்போதுள்ள சமூகத்தில் யார் எந்த வர்ணம் என்பது கேள்விக்குறியது.
ஸ்ருஷ்டிக்ரமம் தொடர்கிறது.
14. சந்த்ரமா மனஸோ ஜாத| சக்ஷோ: சூர்யோ அஜாயத|
முகாதிந்த்ரச்சாக்னிச்ச | ப்ராணாத் வாயுரஜயாத ||
15. நாப்யா ஆஸீத் அந்தரிக்ஷம்| சீர்ஷ்ணோ த்யௌ: சமவர்தத|
பத்ப்யாம் பூமிர்திசஸ்:ஸ்ரோத்ராத் |ததா லோகான் அகல்பயன் ||
14. சந்த்ரமா- சந்திரன்
மனஸ: - மனதிலிருந்து
ஜாத:- பிறந்தான்
சக்ஷோ: - கண்களில் இருந்து
சூர்ய:- சூரியன்
அஜாயத – தோன்றினான்.
முகாத்- முகத்தில் இருந்து
இந்திர: ச அக்னி: ச - - அக்னியும் (தோன்றினர்)
ப்ராணாத் - பிராணனில் இருந்து
வாயு: - வாயு
அஜாயத – தோன்றினான்.
15. நாப்யா: - நாபியில் இருந்து
அந்தரிக்ஷம்- வானவெளி
ஆஸீத் – தோன்றிற்று
சீர்ஷ்ணோ: தலையில் இருந்து
த்யௌ: - சுவர்க்கலோகம்
ஸமவர்தத- நன்றாக அமைந்தது.
பத்ப்யாம் பூமி: - பாதங்களில் இருந்து பூமியும்
ச்ரோத்ராத் – காதிலிருந்து
திச: - திக்குகளும் ( தோன்றின.
ததா – இவ்வாறே
லோகான்- எல்லா உலகங்களையும்
அகல்பயத்- சங்கல்பத்தாலேயே சிருஷ்டித்தார்.
தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய
ஐந்தாவது மந்திர விளக்கத்தில் கீழ்கண்டவாறு பார்த்தோம்.
'தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய' பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது. ( சாந்தோக்ய உபநிஷத் 'தத் தவம் அஸி' அத்யாயம்)
இங்கு விராட் என்பது பிரபஞ்சம் நாம ரூப ஸ்ருஷ்டிக்கு முந்தைய நிலை. இந்தநிலையில் எல்லாம் சூக்ஷ்ம ரூபத்தில் இருக்கிறது .
பரம்பொருளின் ஸ்ருஷ்டிசக்தியே பிரம்மா. இந்த சிருஷ்டி சக்தியானது பிரபஞ்சம் முழுதும் பரவி பூமியை ஸ்ருஷ்டித்தது.
பூமி என்ற சொல் பஞ்சபூதங்கலாளான இந்த உலகத்தைக் குறிக்கிறது. அதாவது ஸ்தூல பிரபஞ்சம். அதற்குப்பிறகு சரீரங்களை சிருஷ்டித்தது. அதாவது நாம ரூபம்.
இதை மனதில் கொண்டு மேற்சொன்ன ஸ்ருஷ்டி க்ரம்த்தை புரிந்து கொள்ளவேண்டும்.
அடுத்த மந்திரம் இதை தெளிவுறுத்துகிறது. இதைப் பிறகு பார்க்கலாம்.
பரமபுருஷனின் சிருஷ்டி சக்தி ஹிரண்யகர்பன் அல்லது பிரம்மாவாக ஸ்தூல உருவம் கொள்கிறது. அந்த உடல் சிருஷ்டிக்குக் காரணமாகிறது.
சாயனாசார்யர் சொல்படி எவ்வாறு வேறுபாடில்லாமல் ஒரே மாதிரி உள்ள பாலில் இருந்து வெவேறு இயல்புடைய வெண்ணை தயிர் முதலியவை தோன்றுகின்றனவோ அதுபோல சந்திரன் முதலிய தேவர்கள் புருஷனிடம் இருந்து தோன்றினர் என்கிறார்.
சந்திரன் மனதில் இருந்து தோன்றினான் என்பதற்குப் பொருள், மனது குளிர்ச்சி மகிழ்ச்சி முதலிய நல்ல உணர்வுகளுக்கு இருப்பிடம். எதிர்மறையான உணர்வுகளும் மனதில் தோன்றுகின்றனவே என்றால் அது சிருஷ்டிக்குப் பிறகு உலகப் பற்றினால் வருவது. சந்திரன் அதனால் மனதிற்கு அதிபதி.
சூரியன் கண்களை இருந்து தோன்றினதற்கு பொருள் என்னவென்றால் சூரியன் இருளைப் போக்குபவன். கண்கள் இருந்தால்தான் வெளிச்சத்தைப் பார்க்க முடியும். அக்ஞானமாகிய இருளைப்போக்கும் ஞானம் என்கிற கண்தான் சூரியன் அதனால் கண்களில் இருந்து தோன்றினான் என்று சொல்லப் படுகிறது.
முகம் உடலின் முக்கியமான உறுப்பு. இந்திரன் தேவர்களில் முக்கியமானவன். அக்னி தேவர்களின் வாய் என்று சொல்லப்படுகிறது. "அக்னிமுகா வை தேவதா:' யாகங்களில் தேவர்களின் ஹவிர்பாகம் அக்னிமூலம்தான் அளிக்கப்படுகிறது .
வாயு பிராணனில் இருந்து தோன்றியது என்பதற்கு விளக்கம் தேவை இல்லை.
நாபி என்பது உடலில் மத்திய பாகம் , வான வெளி பூமிக்கும் விண் உலகத்திற்கும் மத்தியில் இருக்கிறது,. பூ: புவ: ஸுவ: , பூலோகம் புவர்லோகம் ஸுவர்லோகம்,.அதனால் நாபியில் இருந்து வானவெளி
அதேபோல தலை உடலின் மேல் இருப்பதால் அதிலிருந்து வானுலகம் தோன்றியது என்ப பொருத்தம். பாதத்தில் இருந்து கீழே உள்ள பூமி .
திக்குகள் காதிலிருந்து தோன்றின என்பது எப்படி என்றால் திசைகள் சப்தத்திற்கு ஆதாரமாக உள்ளன. நமக்கு ஒரு சப்தம் கேட்கிறது என்றால் அது ஏதாவது ஒரு திசையில் இருந்துதானே வர வேண்டும்.
அதனால் சப்த இந்த்ரியமான காது திசைகளை தோற்றுவித்தது என்று உள்ளது.
இவ்வாறே எல்லா உலகங்களையும் பரமபுருஷன் தோற்றுவித்தார் என்று ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப் படுகிறது.
17. தாதா புரஸ்தாத் யமுதாஜஹார |
சக்ர: ப்ரவித்வான் ப்ரதிசஸ்சதஸ்ர:|
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி|
நான்ய: பந்தா அயனாய வித்யதே ||
யம் – எந்த புருஷனை
தாதா – பிரம்மா
புரஸ்தாத்- ஆதியில்
உதாஜஹார – பரமாத்மா என்று கண்டுகொண்டு வெளிப்படுத்தினாரோ
ப்ரதிசஸ்சதஸ்ர:- எல்லா திசைகளிலும்
சக்ர: - இந்திரன்
பிரவித்வான் – நன்றாகக் கண்டறிந்தாரோ
தம்- அவரை
ஏவம் – இவ்வாறு
வித்வான் – அறிபவன்
இஹ- இங்கேயே
அம்ருத;- முக்தனாக
பவதி – ஆகிறான்.
அயனாய – மோக்ஷத்திற்கு
அன்ய: பந்தா- வேறு வழி
ந வித்யதே – இல்லை
பரமபுருஷன் சிருஷ்டியின் பொருட்டு பிரம்மனை ச்ருஷ்டித்தான் என்கிறது வேதம். பிரம்மன் சிருஷ்டி செய்யும் வழி தெரியாது தவம் செய்து அந்த பரமபுருஷனை த்யானித்து சிருஷ்டி செய்யத் தொடங்கினார் என்று அறிகிறோம்.
இந்திரன் வாமதேவரிடம் இருந்து ஞானத்தைப் பெற்று பரமபுருஷனை கண்டறிந்தான்.
சதஸ்ர: என்பது கிழக்கு , மேற்கு, வடக்கு, தெற்கு என்ற திசைகளையும் ப்ரதிச: என்பது மற்ற நான்கு திசைகளையும் குறிக்கும். இதன் மூலம் இந்திரனோடு திக்பாலகர்களையும் குறிப்பிட்டதாக ஆகிறது.
'நாயம் ஆத்மா ப்ரவசநேன லப்ய:ந மேதயா ந பஹுனா ச்ருதேன| யமைவேஷ வ்ருணுதே தேன லப்ய:; என்பது வேத மந்த்ரம்.
இதற்கு
இந்த பரமாத்மா ச்ரவணம் மனனம் முதலியவைகளால் அடையத்தக்கவன் அல்லன். அவன் அருள் இருந்தால் மட்டுமே அவனை அறிய முடியும் என்று பொருள்
. பகவான் கீதையிலும் இதையே 'நாஹம் வேதைர் ந தபஸா ந தானேன ந சேஜ்யயா,' என்ற ஸ்லோகத்தில் வலியுறுத்துகிறார். பிரமன் முதலானவரும் பக்தியின் மூலமே அவனை அறிய முடியும் என்பது இதன் கருத்து.
அவ்வாறு அறிந்த ஒருவன் இங்கேயே முக்தியை அடைகிறான் என்றால் இப்பிறவியிலேயே கர்ம பந்தம் தொலைந்து உடலை நீத்த பின் முக்தி அடைகிறான் என்பது பொருள்.
இதையே கீதையும் " ' 'இஹைவ தை: ஜித: ஸர்க:' , இந்த ஜென்மத்திலேயே ஜனன மரணத்தைக் கடக்கிறான். என்றும்
' கச்சந்தி அபுனராவ்ர்த்திம் ஞானநிர்தூத கல்மஷா:' ஞானத்தினால் கர்ம வினைகளில் இருந்து விடுபட்டு மீண்டும் பிறவியில்லா முக்தி நிலையை அடைகின்றனர் என்று கூறுகிறது.
இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை கீதையில் 'பக்த்யா து அனன்யயா சக்ய: ,' பகவாநனின் அருளைப்பெற பக்தியைத் தவிர் வேறு மார்க்கம் இல்லை என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
18. யக்ஞேன யக்ஞம் அயஜந்த தேவா: |
தானி தர்மானி பிரதமான்யாஸன்|
தே ஹ நாகம் மஹிமான:ஸசந்தே
யத்ர பூர்வே ஸாத்யா: சாந்தி தேவா||
தேவா: தேவர்கள் (பிரம்மாவின்சூக்ஷ்ம இந்த்ரியங்கள்)
யக்ஞேன- இந்த மானஸ யக்ஞத்தினால்
யக்ஞம்- இந்த யக்ஞ புருஷனை
அயஜந்த- பூஜித்தார்கள்
தானி தர்மாணி- அதனுடன் சேர்ந்த தர்மங்கள்
பிரதமானி – முக்கியத்துவம் உடையவையாக
ஆஸன் – ஆகின.
யத்ர – எங்கு
பூர்வே – ஆதியிலிருந்து உள்ள
ஸாத்யா:தேவா: - ஸாத்யர்கள் , , தேவர்கள் ரிஷிகள் முதலானோர். இவை பிரம்மாவின் சிருஷ்டி சக்தியின் அவயவங்கள்
ஸந்தி – இருக்கிறார்களோ
நாகம் – அந்த சுவர்க்க லோகத்தை
தே மஹிமான: - அந்த உபாசனையால் மகிமை பெற்றவர்களும்
ஸசந்தே – அடைகிறார்கள்.
இங்கு ஸ்ருஷ்டிரூபமான் யக்ஞத்தைப் பற்றி சொல்லப்படுகிறது. இந்த யக்ஞ புருஷன் விராட்ரூபமான் பரமபுருஷன்.
வேதத்தின் மூலம்தான் சிருஷ்டி. ஆதலால் இங்கு சொல்லப்பட்ட தர்மங்கள் புருஷார்த்தங்களை ஒட்டி செய்யவேண்டிய செயல்கள்.
மனிதர்களை சிருஷ்டி செய்தபின் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும் அல்லவா? அதுதான் முக்கியமான தர்மங்கள் என்று கூறப் பட்டவை. அதன் பலன் என்ன ?
புருஷார்த்தங்களை உள்ளபடி உணர்ந்தோர் அதன் மூலம் ஞானம் அடைந்து பரமபுருஷனை வழிபாட்டு மேலான பதவியை அடைகிறார்கள் என்று பொருள்.
இங்கு நாகம் என்பது இந்திரன் மற்றும் தேவர்களின் சுவர்க்கம் அல்ல.வைகுண்டத்துக்கும் நாகம் என்று பெயர். ஸாத்யர்கள் முதலியோர் நித்யசூரிகள் என்றும் கொள்ளலாம். அதனால் இங்கு நாகம் என்பது பிறவி ஒழிந்த நிலையையே கூறுகிறது.
அதாவது முக்தி நிலை . அதைவிட பெரிய சுவர்க்கம் ஒன்று உளதோ!
7. ஸப்தஸ்யாஸன் பரிதய:| த்ரி: ஸப்த ஸமித: க்ருதா: |
தேவா யத்யக்ஞம் தன்வானா: அபத்னன்புருஷம் பசும்||
அஸ்ய இதற்கு
ஸப்த- ஏழு
பரிதய: பரிதிகள்
ஆஸன்- இருந்தன
த்ரிஸப்த- இருபத்துஒன்று தத்துவங்கள்
ஸமித: - சமித்துக்களாக
க்ருதா: - செய்யப்பட்டன.
இந்த ஸ்ருஷ்டி யக்ஞத்தில் ஏழு பரிதிகள் உபயோகப் பட்டன. பரிதி என்றால் யாகாக்னியை சுற்றி வைக்கப்படுவது. எதையும் இன்னும் ஸ்ரிஷ்டிக்காததால் இந்த பரிதிகள் எது என்றால் ஏழு சந்தஸ்களையுமே பரிதியாக் கூறியுள்ளது என்று கொள்ளலாம்.
மைத்ராயணி உபநிஷத்தில் பஞ்ச பூதங்கள் அஹங்காரம் புத்தி என்ற ஏழு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றுமே ஸ்ருஷ்டிக்கப்படாததால் இவைகளைப் பற்றிய த்யானமே இங்கு சொல்லப்படுகிறது.
பஞ்ச பூதங்கள் சூக்ஷ்ம ரூபம் , அவைகளின் ஸ்தூல ரூபம் பஞ்ச கர்மேந்த்ரியங்கள் பஞ்ச ஞானேந்த்ரியங்கள் (Senses not sense organs) அந்த;கரணம் ஆக மொத்தம் 21. சமித் என்றால் சிருஷ்டிக்கு காரணப் பொருள்கள் என்று கொள்ளலாம்.
.
தேவா: தேவர்கள்
யக்ஞம்- யக்ஞத்தை செய்பவர்களாகி
யத் புருஷம் – முன்சொன்ன புருஷனை (. தஸ்மாத் விராட் அஜாயத|விராஜோ அதி பூருஷ:|ஸ ஜாதோ அத்யரிச்யத| என்று முன்னம் சொல்லப்பட்ட பரம்புருஷ்னின் ஸ்ருஷ்டிசக்தியான பிரம்மா)
பசும்- யாகப்பசுவாக
அபத்னன்-யூபஸ்தம்பத்தில் கட்டினார்கள்.
அதாவது பிரம்மாவிடம் இருந்துதான் சிருஷ்டி. (ஸ ஜாதோ அத்யரிச்யத | பச்சாத் பூமிம் அதோ புர:- சூக்தம் 5)
யூபஸ்தம்பம் என்பது பிரகிருதி. அதாவது சூக்ஷ்ம பிரபஞ்சம். பிரம்மா முதல் சிருஷ்டி அதன் பிறகு பிரகிருதியின் சம்பந்தத்தால் அவரிடம் இருந்து பிரபஞ்சம் தோன்றியது என்று அர்த்தம்.
'பிரம்மா தேவானாம் பிரதம: சம்பபூவ' _ முண்டகோபனிஷத்.
பிரம்மாதான் தேவர்களுக்கு முன்னே தோன்றியவர்.
புருஷசூக்தம் - பிரதம அனுவாகம்
18. யக்ஞேன யக்ஞம் அயஜந்த தேவா: |
தானி தர்மானி பிரதமான்யாஸன்|
தே ஹ நாகம் மஹிமான:ஸசந்தே
யத்ர பூர்வே ஸாத்யா: சாந்தி தேவா||
தேவா: தேவர்கள் (பிரம்மாவின்சூக்ஷ்ம இந்த்ரியங்கள்)
யக்ஞேன- இந்த மானஸ யக்ஞத்தினால்
யக்ஞம்- இந்த யக்ஞ புருஷனை
அயஜந்த- பூஜித்தார்கள்
தானி தர்மாணி- அதனுடன் சேர்ந்த தர்மங்கள்
பிரதமானி – முக்கியத்துவம் உடையவையாக
ஆஸன் – ஆகின.
யத்ர – எங்கு
பூர்வே – ஆதியிலிருந்து உள்ள
ஸாத்யா:தேவா: - ஸாத்யர்கள் , , தேவர்கள் ரிஷிகள் முதலானோர். இவை பிரம்மாவின் சிருஷ்டி சக்தியின் அவயவங்கள்
ஸந்தி – இருக்கிறார்களோ
நாகம் – அந்த சுவர்க்க லோகத்தை
தே மஹிமான: - அந்த உபாசனையால் மகிமை பெற்றவர்களும்
ஸசந்தே – அடைகிறார்கள்.
இங்கு ஸ்ருஷ்டிரூபமான் யக்ஞத்தைப் பற்றி சொல்லப்படுகிறது. இந்த யக்ஞ புருஷன் விராட்ரூபமான் பரமபுருஷன்.
வேதத்தின் மூலம்தான் சிருஷ்டி. ஆதலால் இங்கு சொல்லப்பட்ட தர்மங்கள் புருஷார்த்தங்களை ஒட்டி செய்யவேண்டிய செயல்கள்.
மனிதர்களை சிருஷ்டி செய்தபின் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும் அல்லவா? அதுதான் முக்கியமான தர்மங்கள் என்று கூறப் பட்டவை. அதன் பலன் என்ன ?
புருஷார்த்தங்களை உள்ளபடி உணர்ந்தோர் அதன் மூலம் ஞானம் அடைந்து பரமபுருஷனை வழிபாட்டு மேலான பதவியை அடைகிறார்கள் என்று பொருள்.
இங்கு நாகம் என்பது இந்திரன் மற்றும் தேவர்களின் சுவர்க்கம் அல்ல.வைகுண்டத்துக்கும் நாகம் என்று பெயர். ஸாத்யர்கள் முதலியோர் நித்யசூரிகள் என்றும் கொள்ளலாம். அதனால் இங்கு நாகம் என்பது பிறவி ஒழிந்த நிலையையே கூறுகிறது.
அதாவது முக்தி நிலை . அதைவிட பெரிய சுவர்க்கம் ஒன்று உளதோ!
புருஷசூக்தம் - த்விதீய அனுவாகம்
3. ப்ரஜாபதி: சரதி கர்பே அந்த: | அஜாயமானோ பஹுதா விஜாயதே|
தஸ்ய தீரா: பரிஜானந்தி யோனிம் | மரீசீனாம் பதம் இச்சந்தி வேதஸ: |
ப்ரஜாபதி: - பிரம்மாண்டத்திற்கு அதிபதியான பரமபுருஷன்
கர்பே அந்த:- பிரபஞ்சத்தின் உள்ளே
சரதி- வசிக்கிறார்
அஜாயமான: - தான் பிறக்காமலேயே
பஹுதா- பலவாக
விஜாயதே – தோன்றுகிறார்
தஸ்ய – அவருடைய
யோனிம் – உண்மையான ஸ்வரூபத்தை
தீரா: – புத்திமான்கள்
விஜானந்தி – அறிகிறார்கள்
வேதஸ: ஸ்ருஷ்டித் தொழிலில் ஏவப்பட்டவர்கள் ( சிருஷ்டி சக்திகள் )
மரீசீனாம் பதம் –மரீசி முதலிய ஞானிகளுடைய
பதம் – பதவியை
இச்சந்தி – அடைய விரும்புகிறார்கள்.
பிரஜாபதி என்பது பரமபுருஷனாகிற பரப்ரம்மம். கர்பே சரதி- பிரபஞ்சத்தின் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிறார். கர்பே என்பது அந்தராத்மாவைக் குறிக்கும்,.
பஹு ஸ்யாம் பிரஜாயேய என்றபடி அஜாயமான: , தான் பிறகாமலேயே அதாவது தன்னிலை மாறாமல் பல வடிவங்கள் தோற்றுவிக்கிறார், பஹுதா விஜாயதே., என்று பொருள்.
கீதையில்
"மமயோனி: மஹத் ப்ரம்ம தஸ்மின் கர்பம் ததாம்யஹம் " என்று காண்கிறோம்
. இதன் பொருள் மூலப்ரக்ரருதி என்னும் சூக்ஷ்ம பிரபஞ்சம் பரம புருஷனின் கர்பத்தை தரிக்கிறது என்று சொல்கிறார்
இங்கு மஹத் என்பது விராட் அல்லது சூகஷ்ம பிரபஞ்சம் என்று எடுத்துக்கொண்டால் பரமபுருஷன் அதற்குள் ஸ்தூல பிரபஞ்சம் என்னும் கருவை உண்டுபண்ணுகிறான்,
இந்த உண்மை ஸ்வரூபத்தை ஞானிகள் அறிவார்கள்.
மரீசி முதலியவர்கள் ப்ரஜாபதிகள் என்று கூறப்படும் முதல் சிருஷ்டிகள். சிருஷ்டி சக்திகளான தேவர்கள், அதாவது ஹிரண்ய கர்பன் அல்லது பிரம்மாவின் இந்த்ரியங்கள் மூலம் ப்ரஜாபதிகள் உற்பத்தி ஏற்படுகிறது.
. 4. யோ தேவேப்ய ஆதபதி| யோ தேவானாம் புரோஹித:|
பூர்வோ யோ தேவேப்யோ ஜாத: | நமோ ருசாய ப்ராம்மயே|
யோ – எவர்
தேவேப்ய: = தேவர்களின் உள்ளே
ஆதபதி- பிரகாசிக்கிறாரோ
யோ – எவர்
தேவானாம்- தேவர்களின்
புரோஹித: - புரோஹிதரான ப்ருஹஸ்பதியாக இருக்கிறாரோ
யோ- எவர்
தேவேப்ய:- தேவர்களுக்கு
பூர்வ: - முன்னால்
ஜா-த: - ஹிரண்யகர்பராக தோன்றினாரோ
ருசாய- அந்த ஸ்வயம்ப்ரகாசரான
ப்ராஹ்மயே- பரப்ரம்மத்திற்கு
நம: - நமஸ்காரம்.
தேவர்களின் உள்ளே பிரகாசிக்கிறார் என்பது பிரம்மத்தையே குறிக்கும். தேவர்களான இந்த்ரியங்கள் ஹிரண்ய கர்பனான பிரம்மாவின் ஸ்தூல வடிவுக்குப் பின் தோன்றியவர்கள்.
அவர்களுக்கு முன் ஹிரண்ய கர்பனாகத் தோன்றியது பிரம்மமே என்பதனால் அந்த பிரம்மத்திற்கு நமஸ்காரம் என்று கூறப்படுகிறது.
தேவார்களின் புரோஹிதரான ப்ரஹஸ்பதி என்பது புத்தியைக் குறிக்கும். இந்த்ரியங்கள் புத்திக்குட்பட்டவை என்பதனால். புரோஹித என்ற சொல் நன்மைக்கு அதாவது முக்திக்கு வழிகாட்டி என்று எடுத்துக்கொண்டால் அது பரமபுருஷனையே குறிக்கும். அதனால் தான் ஸ்வயம்பரகாசமான பிரம்மத்தை வணங்குகிறோம் என்று கூறப் பட்டுள்ளது .
16. வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் | ஆதித்யவர்ணம் தமஸஸ்து பாரே |
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர: நாமானி க்ருத்வா அபிவதன் யதாஸ்தே||
ஸர்வாணி ரூபாணி- எல்லா உருவங்களையும்
விசித்ய – தோற்றுவித்து
நாமானி – பெயர்களை
க்ருத்வா- கற்பித்து
யத் தீர: - எந்த தீரனான புருஷன்
ஆஸ்தே- இருக்கிறாரோ
ஏதம் – அந்த
மஹாந்தம்- மகிமை பொருந்தியவரும்
ஆதித்ய வர்ணம்- சூரியனைப்போல் காந்தி உடையவரும்
தமஸ: து – இருளுக்கு
பாரே- அப்பாற்பட்டவரும் ஆனா
புருஷம் – புருஷனை
அஹம் – நான்
வேத – அறிவேன்
சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லப்பட்ட 'ஆத்மனா அனுப்ரவிச்ய நாம் ரூபே வ்யாகரவாணி' என்றதன் பொருள் இங்கே காணப்படுகிறது.
பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்ததும் அதற்கு உயிர் கொடுக்க பரமபுருஷன் அவற்றின் அந்தராத்மாவாக உள்ளே பிரவேசித்து உருவம் பெயர் இவற்றைக் கொடுத்தான்.
இங்கு நான் அறிவேன் என்று சொல்வது வேதமாகிய புருஷன். பரமபுருஷன் அந்தராத்மாவாக இருக்கிறான் என்பதைக் கூறுவது 'அங்குஷ்டமாத்ர: புருஷோ அந்தராத்மா' என்னும் வேத வாக்கியம்.
மஹாந்தம் என்றால் மிகப்பெரிய , சர்வவ்யாபி , அல்லது பெரும் மகிமை வாய்ந்த என்று பொருள் இருந்தாலும் மஹா+ அந்தம் என்று பிரித்தால் எல்லாவற்றிற்கும் உள்ளே என்று பொருள் கொள்ளலாம்.
'யஸ்மாத் பரம் நாபரம் அஸ்தி கிஞ்சித்' அந்த பிரம்மத்தைக் காட்டிலும் பெரியது அல்லது மேலானது எதுவும் இல்லை என்பது வேத வாக்கியம். மேலும் 'ந தத் ஸம: ச அதிக: ச த்ருச்யதே,' பரம்புருஷனுக்கு சமமாகவோ அல்லது மேலாகவோ எதுவும் இல்லை என்றும் காண்கிறோம்.
இவ்வாறு அணோரணீயான் மஹதோ மஹீயான் ' என்பது விவரிக்கப் பட்டது.
அடுத்து ஆதித்யவர்ணம் என்பது சூரியனைப் போல் பிரகாசம் என்று பொருள் கொண்டால் பரமபுருஷனுடைய தேஜஸினால் பிரகாசிக்கும் சூரியனை உவமையாகச் சொல்லலாமா என்று தோன்றுகிறது.
'தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ' என்பது சுருதி. அதாவது அவனுடைய பிரகாசத்தின் மூலமே எல்லா ஒளி உருவங்களும் பிரகாசிக்கின்றன என்று பொருள்.
ஆனால் இங்கு இன்னொரு வேத வாக்கியத்தைப் பார்த்தால், 'ய:ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய: புருஷ: த்ருச்யதே,' என்னும் வாக்கியத்தில் 'எந்த புருஷன் சூரியனின் உள்ளே பொன்மயமாகக் காணப்படுகிறானோ; என்ற அரத்தத்தை வைத்துப் பார்க்கையில் இங்கே சூரியனைப்போல் அல்ல சூரியனாகப் பிரகாசிக்கிறான் என்று கொள்ள வேண்டும்.
தமஸ; து பாரே – இருளுக்கு அப்பாற்பட்டவன். இங்கு இருள் என்பது தமோ குணத்தினால் ஏற்பட்ட அறியாமை என்னும் இருள். அது ஞானம் என்ற சூரியன் உதிக்க விலகினால் அதறு அப்பால் உள்ள பிரம்மம் புலப்படும்.
புருஷசூக்தம் - த்விதீய அனுவாகம்
த்விதீய அனுவாகம்
1. அத்ப்ய: சம்பூத; ப்ருதிவ்யை ரஸாத் ச | விஸ்வகர்மண: ஸமவர்ததாதி |
தஸ்ய த்வஷ்டா விததத் ரூபமேதி| தத் புருஷஸ்ய விச்வம் ஆஜானம் அக்ரே ||
அத்ப்ய: - நீரிலிருந்தும்
ப்ருதிவ்யை ரஸாத் ச – நிலத்தின் சாரத்திலிருந்தும்
ஸம்பூத:- பிரபஞ்சம் உண்டாயிற்று.
விச்வகர்மண: - ஸ்ருஷ்டிகர்த்தாவான பரமபுருஷனிடம் இருந்து
அதி – நீர் நிலம் முதலியவைகளுக்கும் மேலான விராட்புருஷன்
ஸமவர்தத – தோன்றினான்.
தஸ்ய – அவனுடைய
ரூபம்- வடிவத்தை
த்வஷ்டா- பரமபுருஷன்
விததத்- கல்பித்து
ஏதி- எங்கும் வியாபகமாக செய்கிறார்.
தத் புருஷஸ்ய – அந்த விராட்புருஷனுடைய
விச்வம் – விஸ்வரூபம்
அக்ரே – முதலில்
ஆஜானம் – உண்டாயிற்று.
ஸ்தூலமாகக் காணும் பிரபஞ்சம் பஞ்சபூதங்களால் ஆனது. ஸ்ருஷ்டிக்ரமத்தைப் பார்த்தால் பிரம்மம் மட்டும் முதலில் இருந்தது என்று உபநிஷத் கூறுகிறது. அதிலிருந்து முதலில் ஆகாசம் பிறகு வாயு, பிறகு அக்னி, பிறகு ஜலம் , கடைசியாக மண் அல்லது பூமி. ( இதைப் பற்றி விரிவாக பிரதமானுவாகம் மந்த்ரம் 2ல் காணலாம் )
நீர் நிலம் இவைகளின் சிருஷ்டிக்கு அப்புறம் தான் ஸ்தூல பிரபஞ்சம் நம் கண்முன்னே விரிகிறது. இதைத்தான் 'அத்ப்ய: சம்பூத; ப்ருதிவ்யை ரஸாத் ச' என்பது கூறுகிறது. உலகத்தில் எல்லாமே நீரினாலும் நிலத்தின் சாரத்திலிருந்தும் தானே தோன்றுகின்றன.
விஸ்வகர்மா, த்வஷ்டா என்ற சொற்கள் இங்கே பரமபுருஷனையே குறிப்பிடுகின்றன . 'விச்வகர்மா மனுஸ்த்வஷ்டா' என்ற நாமங்கள் விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் காணப்படுகின்றன.
பரமபுருஷன் முதலில் விராட்புருஷனை
தோற்றுவித்துப் பிறகு அவனுக்கு எங்கும் வியாபித்த விச்வரூபமாகிற ஸ்தூல வடிவம் கற்பிக்கிறார் . என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
2. வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் | ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்| தமேவம் வித்வான் அம்ருதஸ்ய இஹ பவதி| நான்ய: பந்தா வித்யதே அயனாய ||
( இதற்குப் பொருள் பிரதம அனுவாக்த்தில் மந்திரம் 16, 17ல் பார்க்கலாம்.
புருஷசூக்தம் - த்விதீய அனுவாகம்
5. ருசம் ப்ராம்மம் ஜனயந்த்ய| தேவா அக்ரே ததப்ருவன் |
யஸ்த்வைவம் ப்ராம்மணோ வித்யாத்|தஸ்ய தேவா அஸன் வசே|
ப்ராம்மம் ருசம்- பரப்ரம்ம்த்தின் ஸ்வரூபத்தை
ஜனயந்த்ய:-பரப்புகிறவர்களாய்
அக்ரே – ஆதியில்
தேவா: - தேவர்கள்
தத் – அதைப்பற்றி
அப்ருவன் – கூறினார்கள்.
ய:து- எவனொருவன்
ப்ராம்மணோ- பிரம்மத்தில் நாட்டம் உடையவன்
ஏவம்- இவ்வாறு
வித்யாத்- அறிவானோ
தஸ்ய – அவனுக்கு
தேவர்கள் – தேவர்களான இந்த்ரியங்கள்
வசே அசன் – கட்டுப்பட்டு இருப்பார்கள்.
பரப்ரம்ம ஸ்வரூபத்தை இவ்வாறு வர்ணித்திருப்பதையே தேவர்கள் கூறினார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. பரப்ரம்ம ஸ்வரூபத்தை உள்ளது உள்ளபடி அறியும் ப்ரும்மஞானிக்கு தேவர்கள் என்று கூறப்படும் இந்த்ரியங்கள் கட்டுப்படுகின்றன. அதாவது இந்த்ரிய நிக்ரஹம் சாத்யமாகிறது.
6. ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ன்யௌ|அஹோராத்ரே பார்ச்வே |
நக்ஷத்ராணி ரூபம்| அஸ்விநௌ வ்யாத்தம்|
ஹ்ரீஸ்ச – ஹரி தேவியும்
லக்ஷ்மீ: ச – லக்ஷ்மி தேவியும்
தே பத்ன்யௌ- உன்னுடைய பத்தினிகள்
அஹோராத்ரே – இரவும் பகலும்
பார்ச்வே – உன் பக்கங்கள்
நக்ஷத்ராணி-நக்ஷத்ர மண்டலம்
ரூபம் – உனது திருவுருவம்
அஸ்விநௌ- அஸ்வினி தேவர்கள்
வியாத்தம்,- உனது மலர்ந்த திருவாய்
முடிவில் உள்ள ஸ்துதிபரமான மந்த்ரம் இது.
ஹ்ரீ என்பது லஜ்ஜபீமாநீ தேவதா என்று சொல்லப்படும் அடக்கத்தைக் கொடுக்கும் சக்தி. ஸ்ரீ ஐஸ்வர்யாபீமாநீ தேவதா. ஐஸ்வர்யத்தைiக் கொடுக்கும் சக்தி. இவர்கள் உன்னுடைய பத்தினிகள் என்பது புருஷ ஸுக்தத்தின் ஆதி தேவதை நாராயணன் என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது பிரம்மஞானத்தை அடைந்தால் அதனுடன் சேர்ந்தே இருக்கும் அடக்கம் ஈஸ்வரபாவம் இவை இறைவன் அருளால் கிட்டும் என்றும் கொள்ளலாம்
.
இரவும் பகலும் என்பது த்வந்த்வம் எனப்படும் எதிர்ப்பதங்களை குறிக்கிறது. அவை உனது பக்கங்கள் என்றால் இரவும் பகலும் என்பது எவ்வாறு உண்மையில் இரண்டு இல்லையோ , அதாவது இருட்டு என்பது வெளிச்சம் இன்மை . இவை வெவ்வேறு அல்ல., என்பது போல் ப்ரம்மஸ்வரூபத்தில் இரண்டு என்பதே இல்லை என்று பொருள். ஏகமேவ அத்விதீயம்.
நக்ஷத்த்ரங்கள் உன் உருவம் என்பது தேஜோமயமான ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. அஸ்விநீ தேவர்கள் ஸகல நலன்களையும் கொடுக்கும் தேவர்கள். அதைப்போல உன் திருமுகம் மலர்ந்து எல்லா நலங்களையும் அருளுகின்றது என்று பொருள்.
7. இஷ்டம் மனிஷாண| அமும் மனிஷாண| ஸர்வம் மனிஷாண|
இஷ்டம் – நாங்கள் விரும்பும் ஞானத்தை
மனிஷாண- கொடுத்தருளும்
அமும் – இவ்வுலக இன்பத்தை
மனிஷாண- கொடுத்தருளும்
ஸர்வம் –இகபரசுகத்தை
மனிஷாண- கொடுத்தருளும்
கடைசியில் பிரார்த்தனையுடன் இந்த சூக்தம் முடிவடைகிறது. இகம் பரம் இரண்டிற்கும் நலமான ஞானம் பிரார்த்திக்கப் படுகிறது.. இஷ்டம் அமும் சர்வம் என்னும் சொற்கள் சத் சித் ஆனந்தம் இவைகளைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது. பிரம்மத்தை அறிவது ஒன்றே எல்லாவற்றையும் அளிக்கக்கூடியது.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
No comments:
Post a Comment