கடைசி சுவாசம் விடும்போது இறைவன் பெயரைச் சொல்லிக் கொள்ளலாம் . இப்போதென்ன அவசரம் என்று நினையாதே.
நீ வாகனம் ஓட்டிக்கொண்டு செல்லும்போது திடீரென ஒருவர் சைக்கிளில் குறுக்கிட்டால் உன் நாவில் என்ன வருகிறதென கவனி..
எதிர்பாராத நேரத்தில் வீட்டில் யாராவது கைதவறி எதையாவது கீழே போட்டால் உன் நாவில் என்ன வருகிறதென கவனி.
அதுதான் கடைசி சுவாசத்தில் வரும்..
எனவே,
ராம நாமம் சொல்லிப் பழகு
ஆனந்ததை அள்ளிப் பருகு
நாணமின்றி சொல்லிப் பழகு
ஆக்கை விடுமுன்னே பாடிப் பழகு
நாவே இது உனக்கழகு
- மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்களின் உபன்யாசத்தில் கேட்டது
No comments:
Post a Comment