உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
பிரபஞ்ச நாதனே போற்றி!
பிறவாவரமருளு நாயகா போற்றி!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*101*
🙏🏾 *பாடல் பெற்ற சிவ தலங்கள் தொடர்.*🙏🏾
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
🙏🏾 *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*🙏🏾
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌺 *சிக்கல்.*🌺
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*வெண்ணைப்பிரான் கோவில், சிக்கல்*
தேவாரம் பாடல் பெற்ற திருத்தலங்களுள் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் எழுபத்து மூன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* வெண்ணைப்பிராண், நவநீதேஸ்வரர்.
*இறைவி:*
வேல்நெடுங்கண்ணி.
*தல விருட்சம்:* மல்லிகை.
*தல தீர்த்தம்:*க்ஷீர புஷ்கரிணி நான்கும்.
*திருமேனி:* சுயம்புவானவர்.
*புராணப் பெயர்:* மல்லிகாரண்யம், திருசிக்கல்.
*பதிகம்:*
திருஞானசம்பந்தர்.
*இருப்பிடம்:*
நாகப்பட்டினத்தில் இருந்து ஐந்து கி.மி. தொலைவில் திருவாரூர் செல்லும் சாலை வழியில் சிக்கல் தலம் உள்ளது.
*அஞ்சல் முகவரி:* அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில்,
சிக்கல்.
சிக்கல் அஞ்சல்,
வழிநாகப்பட்டிணம்,
நாகப்பட்டினம் வட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம்.
PIN - 611 108
*ஆலய திறப்பு காலம்:*
தினந்தோறும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*தொடர்புக்கு:*
91 - 4365 - 245 452
91 - 4365 - 245 350
*கோவிலின் அமைப்பு:*
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலமும் ஒன்றாகும்.
கோவிலின் ராஜகோபுரம் சுமார் என்பது அடி உயரத்துடன் ஏழு நிலைகளுடன் காட்சியானது.
இராஜகோபுரத்திறகு முன்னால் இரும்புத் தூண்கள் தாங்கும் ஒரு பெரிய கல்யாண மண்டபமும் இருக்கிறது.
கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தோம். முதலாவதாக கார்த்திகை மண்டபம் இருக்கிறது.
அடுத்த வாசலில் தெற்கே விநாயகர் இருந்தார். அவரிடம் நம் வணக்கத்தை தெரிவித்து நல்வன செழிப்புற வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்து, வடக்கே தண்டபானியும் காட்சி தந்தார்.
இரண்டவது சுற்றில் சனீஸ்வரர், தட்சினாமூர்த்தி, திருமகள், துர்க்கை, சண்டீசர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் இருக்கின்றனர்.
கோவிலின் மையத்தில் பன்னிரண்டு படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் நவநீத நாதர் லிங்க வடிவில் அருள் புரிந்து கொண்டிருந்தார்.
மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டோம்.
சிக்கல் சிங்காரவேலர் என்ற பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் இவருகாக இருந்தன. பணிந்து வணங்கித் தரிசித்ததைக் கொண்டோம்.
கீழ்ப்படிக்குப் பக்கத்திலுள்ள சுந்தர கணபதியை தரிசித்தோம். அதன் பிறகே கட்டுமலை மேலே செல்ல வேண்டும் என்பது வழக்கம்.
மேலே சென்று மண்டபத்தை அடைந்ததும் நேரே தியாகராஜ சந்நிதி உள்ளது. இது சப்தவிடங்கத்தலங்களுள் அடங்காது.
இங்குள்ள மரகதலிங்கம் மிகவும் சிறப்புள்ளது.
உள்ளே வெண்ணைப் பிராண் இருக்கும் கருவறை உள்ளது.
சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
ஐப்பசி மாத விழாவில் வியர்வை சிந்தும் வேலவர் இவர்தான்.
கட்டுமலயின் கீழ்பக்கம் இறைவி வேல் நெடுங்கண்ணியின் சந்நிதி அமைந்துள்ளது.
இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது.
பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
வடமேற்கு மூலையில் ஆஞ்சனேயர் சந்நிதி அமைந்திருக்கிறது.
*தல அருமை:*
புராணகாலத்தில் மல்லிகைவனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இத்தலத்து சிவபெருமானை வழிபட்டு வந்தார்.
அக்கால கட்டத்தில் தேவலோகத்துப் பசுவான காமதேனு தான் செய்த ஒரு சிறு பிழையின் காரணமாக சாபம் பெற்று இத்தலத்திற்கு வந்தது.
தற்போதுள்ள ஆலயத்தின் மேற்குப் பக்கம் உள்ள பாற்குளம் என்றும் க்ஷீரபுஷ்கரணி என்றும் சொல்லப்படும் தீர்த்தத்தில் தன் பாவம் தீர நீராடியது.
காமதேனு குளித்தபோது அதனுடைய பால் பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார்.
பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது.
அதனாலேயே இத்தலம்
*சிக்கல்* என்ற பெயருடன் விளங்குகிறது என்று புராண வரலாறு கூறுகின்றது.
வெண்ணெய் லிங்கத் திருமேனியான இறைவன் வெண்ணைப் பிராண் என்றும், நவநீத நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஒருமுறை மழை பொய்த்துப் போனது. அந்த சமயத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. காலத்தில் பசியின் கொடுமையால், பஞ்சத்தில் பிடியில் சிக்கிய தேவலோகப் பசு காமதேனு , நாயின் ஊனைத் தின்றதால் ஏற்பட்ட சாபம் தீர்த்த தலம் சிக்கல்.
பாவம் பற்றியதால், புலியின் முகத்தைப் பெற்றது. பிறகு, தவற்றை உணர்ந்து சிவனாரை வழிபட்டு, தனது புலிமுகம் நீங்குவதற்காக வழி கோரியது. 'பூலோகத்தில், மல்லிகாவனத்துக்குச் சென்று தங்கி வழிபட்டால், புலி முகம் நீங்கும்' என்று அருளினார் சிவபெருமான்.
அதன்படி, மல்லிகை வனமாக விளங்கிய இந்தத் தலத்தை அடைந்து, சிவனாரை வேண்டி, வணங்கியது.
ஈசனின் கருணையால் புலிமுகம் நீங்கியது. மனதில் பொங்கிய மகிழ்ச்சியால், காமதேனு பாலைப் பொழிய, அந்த இடத்தில் பால் குளம் உருவானது.
இதனால், *காமதேனு தீர்த்தம் என்றும், தேனு தீர்த்தம்* என்றும், பால் குளமானதால் *க்ஷீர புஷ்கரிணி* என்றும் இங்கேயுள்ள தீர்த்தக்குளம் பெயர் பெற்றது.
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம் வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும் ...
பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல்.
சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது ஒரு பழமொழி. இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார்.
அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்று.
கந்தசஷ்டி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடியுள்ளார்.
கோச்செங்கட் சோழன் கட்டிய எழுபத்திரண்டு மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.
*தல பெருமை:*
இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் தெய்வமாக உள்ளதால் சிக்கல் தலத்திற்கு சிக்கல் எனப் பெயர்.
அன்னை, முருகனிடம் வேல் கொடுத்து ஆசிகள் வழங்குகிறாள். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சஷ்டித் திருவிழா நடைபெறும்போது வேல்வாங்கும் விழாவில் தாயிடம் வேல் வாங்கிக் கொண்டு முருகப் பெருமான் தன் கோயிலுக்கு வந்து அமர்ந்த பின்னால், வேலின் வீரியம் தாங்காமல் சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய்ப் பெருகும் காட்சி இன்றளவும் நடைபெறுகிறது.
பட்டுத் துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை பெருக்கெடுக்கும் என்று சொல்கின்றார்கள்.
சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்ற வழக்குச் சொல்லும் இருக்கிறது.
*சிக்கலுக்கு அருகிலுள்ள தேவார வைப்புத் தலம் பற்றிய விபரம்:*
ஆழியூர்: நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் கீழ்வேளூருக்கும் சிக்கலுக்கும் இடையே உள்ள ஆழியூர் ஒரு தேவார வைப்புத் தலம். இறைவன் பெயர் கங்காளநாதர். இறைவி பெயர் கற்பகவல்லி. சாலை ஓரத்திலேயே ஊர் உள்ளது. ஆழியூரிலிருந்து இரண்டு கி.மி. தொலைவில் திருக்கண்ணங்குடி திவ்யதேசம் வைணவத் தலமும் உள்ளது.
*தேவாரம்:*
திருஞானசம்பந்தர்.
🍁1. வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை தேன் உலாவும் மலர்ச்சோலை மல்கும் திகழ் சிக்கலுள் வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருன் அடி ஞானம் ஆக நினைவார் வினை ஆயின நையுமே.
🍁2. மடம் கொள் வாளை குதிகொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ் திடம் கொள் மாமறையோர் அவர் மல்கிய சிக்கலுள் விடம் கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெருமான் அடி மேவியே அடைந்து வாழும் அடியார் அவர் அல்லல் அறுப்பரே.
🍁3. நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள் வேலொண் கண்ணியினாளை ஓர்பாகன் வெண்ணெய்ப்பிரான் பாலவண்ணன் கழல் ஏத்த நம் பாவம் மறையுமே.
🍁4. கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில் செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் வெந்தவெண்ணீற்று அண்ணல் வெண்ணெய்ப்பிரான் விரையார் கழல் சிந்தை செய்வார் வினையாயின தேய்வது திண்ணமே.
🍁5. மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு தெங்கு துங்கப் பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள் வெங்கண் வெள்ளேறு உடை வெண்ணெய்ப்பிரான் அடி மேவவே தங்கும் மேனமை சரதநம் திரு நாளும் தகையுமே.
🍁6. வண்டு இரைத்து மது விம்மிய மா மலர்ப் பொய்கை சூழ் தெண் திரைக் கொள்புனல் வந்தொழுகும் வயல் சிக்கலுள் விண்டு இரைத்து அம்மலராறல் திகழ் வெண்ணெய்ப்பிரான் அடி கண்டு இரைத்து மனமே மதியாய் கதி யாகவே.
🍁7. முன்னு மாடம் மதில் மூன்று உட னே எரியாய் விழத் துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான் செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி உன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே.
🍁8. தெற்றல் ஆகிய தென் இலங்கைக்கு இறைவன் மலை பற்றினான் முடி பத்தொடு தோள்கள் நெரியவே செற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி உற்று நீ நினைவாய் வினையாயின ஓயவே.
🍁9. மாலினோடு அரு மாமறை வல்ல முனிவனும் கோலினார் குறுகச் சிவன் சேவடி கோலியும் சீலந் தாம் அறியார் திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான் பாலும் பன்மலர் தூவப் பறையும் நம் பாவமே.
🍁10. பட்டை நற்றுவன் ஆடையினாரொடும் பாங்கிலாக் கட்டடு அமண் கழுக்கள் சொல்லினைக் கருதாது நீர் சிட்டன் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் செழு மாமறைப் பட்டன் சேவடியே பணிமின் பிணி போகவே.
🍁11. கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் செந்தண் பூம்பொழில் சிக்கல் வெண்ணெய்ப்பெருமா ன் அடிச் சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை வெந்த நீறு அணியும் பெருமான் அடி மேவரே.
திருச்சிற்றம்பலம்.
*நாளைய தலம் திருகேடிலியப்பர் திருக்கோயில் கீழ்வேளூர் வ(ள)ரும்.*
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment