Monday, July 24, 2017

Star & shivaratri

சிவ பித்தர்கள் சொன்ன சிவராத்திரி ரகசியங்கள்-3

நமது பிறந்த நட்சத்திரமும்,சிவராத்திரியும் சேர்ந்து வரும் நாளில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தாலே போதும்;கலியுகத்தில் மானுடப் பிறவி எடுத்தமைக்கான லட்சியத்தை அடைந்துவிட்டதாக அர்த்தம்;

ஒருவேளை பிறந்த நட்சத்திரமும் சிவராத்திரியும் இணைந்து வராவிட்டாலும் கூட,பிறந்த கிழமையும் சிவராத்திரியும் இணைந்து வரும் நாளில் கூட சிவராத்திரி விரதம் இருந்து சிவபூஜை செய்வது மிகுந்த புண்ணியம் தரும் என்கிறார் அகத்தியர் பெருமானார்...

நட்சத்திரமும் சிவராத்திரியும்
-------------------------------------------------

அசுவினியும் சிவராத்திரியும்:

 இந்த நாளில் சிவராத்திரி பூஜை செய்தால்,அற்புதமான வேலை கிடைக்கும்;(உங்களுக்குப் பிடித்தமான வேலை கிடைக்கும்)

பரணியும் சிவராத்திரியும்:

பெற்ற தாய்க்கு உத்தமமாய் கர்மம் செய்த பலன் களைக் கொடுக்கும்;

கார்த்திகையும் சிவராத்திரியும்:

முருகக் கடவுளுடன் சேர்ந்து ஈசனைக் கண்ட பலனைக் கொடுக்கும்;

ரோகிணியும் சிவராத்திரியும்: 

திருமாலே நமக்கு வெண்சாமரம் வீசுவார்;

மிருகசீரிடமும் சிவராத்திரியும்: 

பசுவிற்கு உணவு இட்ட பலன் கிட்டும்;கோ பூஜை செய்த பலன் கிட்டும்;

புனர்பூசமும் சிவராத்திரியும்:

 மறுபிறவி(புனர் ஜன்மம்) எடுத்த பலன் கிட்டும்;

பூசமும் சிவராத்திரியும்: 

ஈசன் அருகே இருக்கக் கூடிய அனுக்கிரகம் கிட்டும்;

ஆயில்யமும் சிவராத்திரியும்:

எவ்வளவு வேதனைகள் ஏற்பட்டாலும்,அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஈசனுக்கு திருப்பாதத் தொண்டு செய்யக் கூடிய மன நிலை கிட்டும்;

பூரமும் சிவராத்திரியும்:

நோய்கள் அணுகாது;

உத்திரமும் சிவராத்திரியும்:

லோபியாக(கஞ்சனாக) இருந்தாலும்,சாந்த நிலை அடைவார்;

சித்திரையும் சிவராத்திரியும்:

தேவப் பிறவி கிட்டும்;

பூராடமும் சிவராத்திரியும்:

யாரோடும் தேவையில்லாமல் நட்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்;

சதயமும் சிவராத்திரியும்:

சாத்திரமாய் இருப்பார்;

பூரட்டாதியும் சிவராத்திரியும்:

தேவர்களே வணங்குவர்;

உத்திரட்டாதியும் சிவராத்திரியும்:

கர்ப்பவாசத்தில் உழல மாட்டார்கள்;

ரேவதியும் சிவராத்திரியும்:

இனி பிறவியே எடுக்க மாட்டார்கள்:

கிழமையும் சிவராத்திரியும்
****************************

திங்கள்:சோம்பேறியாகத் திரியும் பிறவி எடுக்க மாட்டார்கள்.சுறுசுறுப்பாக இருப்பார்கள்.கோவில் கட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கும்;

செவ்வாய்:அரசாங்க வேலை கிடைக்கும்;சட்டமன்ற உறுப்பினர்,பாரா
ளுமன்ற உறுப்பினர்,மாநில அரசின் மந்திரி அல்லது மத்திய அரசின் மந்திரி பதவி கிடைக்கும்;(இப்பிறவியில் இப்பதவிகளில் இருப்பவர்கள் கடந்த ஐந்து பிறவிகளாக தொடர்ந்து இந்தக் கிழமையில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தவர்களே!!!)

புதன்:திருமாலை பார்த்த பலன் கிட்டும்;அதாவது,திருமால் சங்கு சக்கரத்துடன் சாம கானம் ஓத, காட்சி அளித்து ஆசி கொடுப்பார்;

வியாழன்: குரு கிட்டுவார்;குருவுடன் சேர்ந்து திருப்பணி செய்ய வாய்ப்பு கிட்டும்;சித்தர்கள் அனைவரும் ஆசி கூறுவார்கள்.

வெள்ளி;ஆத்மவிசாரம் செய்வார்கள்;தான் யார் என்பதை உணர வெள்ளிக்கிழமைகளில் வரும் சிவராத்திரியன்று பூஜை+விரதம் இருக்க வேண்டும்;
தான் யார்? என்பதை உணர்ந்தவர் ரமண மகரிஷி!
தான் என்பது எங்கே இருக்கின்றது? மனதிற்குள் இருக்கின்றது;தான் எங்கிருந்து வருகின்றது? இருதயத்தில் இருந்துதான் வருகின்றது.

வெள்ளிக்கிழமையும் சிவராத்திரியும் வரும் இரவில் தனியாக அண்ணாமலை கிரிவலம் வந்தால் ஆத்மவிசாரம்(நான் யார்? என்பதற்கான விடை) கிட்டும்;

சனி: சனிபகவானால் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும்;ஆமாம்! சனிக்கிழமையன்று வரும் சிவராத்திரி விரதம்+பூஜை செய்தால் ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்ச
னியால் வரும் துயரம் சிறிதும் வராது;நெருங்காது;

ஞாயிறு: சூரியதேவனாகப் பிறக்கலாம்;சூரியப் பதவி கிடைப்பது என்பது மிகவும் அரிதிலும் அரிதான அதிசயம்; என்று எல்லாம் ஒரு பெரிய பட்டியலே கொடுக்கிறார் அகத்தியர் பெருமானார்..... தொடர்வோம்...

ஓம் அகத்தீசாய நமஹ

ஷிவோகம்

No comments:

Post a Comment