Wednesday, July 19, 2017

Kan kanda deivame - Ootukadu song with lyrics

ராகம்: பேகட தாளம்: ஆதி ஆ - ஸகரிகமபதபஸ் அ - ஸ்நீதபமாகரிஸ் பல்லவி கண்கண்ட தெய்வமே கண்கண்ட தெய்வமே - இரு கண்கண்ட தெய்வமே கண்கண்ட தெய்வமே - எங்கள் கதி நீயே குருநாதா கழலே துணை என்ன கைமேல் பலன் ஆகுமே இதுவே மெய்மெய் எனலாகுமே கண்கண்ட தெய்வமே - எங்கள் கதி நீயே குருநாதா கழலே துணை என்ன கைமேல் பலன் ஆகுமே இதுவே மெய்மெய் எனலாகுமே பண்கொண்ட குழலூதும் பரமனடி காட்டி பண்கொண்ட குழலூதும் பரமனடி காட்டி பண்கொண்ட குழலூதும் பரமனடி காட்டி பக்தியில் முக்தியில் பாட்டினில் ஆசையூட்டி பண்கொண்ட குழலூதும் பரமனடி காட்டி பக்தியில் முக்தியில் பாட்டினில் ஆசையூட்டி கண் என்ற குரல் காட்டி காலில் சதங்கை மாட்டி எண்ணமெல்லாம் ப்ருந்தாவனத்திடையோட்டும் கண் என்ற குரல் காட்டி காலில் சதங்கை மாட்டி எண்ணமெல்லாம் ப்ருந்தாவனத்திடையோட்டும் கண்கண்ட தெய்வமே - எங்கள் கதி நீயே குருநாதா கழலே துணை என்ன கைமேல் பலன் ஆகுமே இதுவே மெய்மெய் எனலாகுமே சிந்தை கடலாடி விந்தை மிகவான பேரின்ப முத்து ஒன்று பெற்றேனே சிந்தை கடலாடி விந்தை மிகவான பேரின்ப முத்து ஒன்று பெற்றேனே பாடும் பணி செய்ய கற்றேனே - நான் பாடும் பணி செய்ய கற்றேனே நந்தகோபன் மனை வந்து பிறந்தவனை நாதா என்று சொல்ல உற்றேனே நந்தகோபன் மனை வந்து பிறந்தவனை நாதா என்று சொல்ல உற்றேனே ஆதியந்தம் எல்லாம் அற்றேனே - நான் ஆதியந்தம் எல்லாம் அற்றேனே இத்தனைக்கும் யாரென மிகையாகா எங்கள் குருநாதனருள் அல்லவோ - இதை எத்தனையும் சொன்னாலும் அத்தனை அமுதூறும் ஆனந்த நிலை என்று சொல்லவோ. இத்தனைக்கும் யாரென மிகையாகா எங்கள் குருநாதனருளல்லவோ - இதை எத்தனையும் சொன்னாலும் அத்தனை அமுதூறும் ஆனந்த நிலை என்று சொல்லவோ. கண்கண்ட தெய்வமே - எங்கள் கதி நீயே குருநாதா கழலே துணை என்ன கைமேல் பலன் ஆகுமே இதுவே மெய்மெய் எனலாகுமே நன்றி: http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0312.html

No comments:

Post a Comment