Friday, June 9, 2017

Karuvoorar sidhar

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                    *(19)*
🍁 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🍁
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🍁 *கருவூரார் சித்தர்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சோழர் மன்னர்களின் ஐந்து தலைநகரங்களில் ஒன்றான கருவூரில் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர் இவர்.

ஆரம்ப வயதிலேயே ஆர்வமாக ஞானநூல்களைப் பயின்று வந்தார்.

கருவூராரின் பெற்றோர்களின் பணியானது, ஊர் ஊராகப் போய் அங்கிருக்கும் கோவில்களின் பஞ்சலோக விக்கிரகங்களைச் செப்பனிட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்து வாழ்க்கைப் பயணத்தைக் கழித்தனர்.

ஒரு சமயம் போகர்சித்தர் திருவாடுதுறைக்கு வந்திருந்தார். இதைக் கேள்வுற்ற கருவூரர் திருவாடுதுறை சென்று போகர் சித்தரை முன் வந்து வணங்கி நின்றார்.

போகர் சித்தர் கருவூரருக்கு அருள் புரிந்து, *"கருவூரா! உன் குலதெய்வமான அம்பாளை நீ தினந்தோறும்  வணங்குவாயாக! அவள் உனக்கு வழி காட்டக் காத்திருக்கிறாள்"* என்று உபதேசித்தருளினார். 

அதன்படியே கருவூராரும் குலதெய்வ அம்பாளை வழிபடத் தொடங்கினார்.

ஞானியைப் போல ஞான விஷயங்களைத் தெரிந்துணர ஏங்கினார். உள்ளமுருகி அம்பாளை வழிபட்டார்.  போகர் சொன்ன மாதிரியே கருவூரர் சித்துக்கள் புரியும் ஞானமூர்த்தியாக உயரந்தார்.

சித்தராய் காட்சியளிக்க ஆரம்பித்தார். பல தலங்களுக்கும் போய் அங்குள்ள சிவாலய சிவலிங்கத் திருமேனிகளைப் பொன்னை உருவாக்கிப் போர்த்தினார்.

இவரின் பொன்னுருக்கும் ரசவாத வித்தையால் உருவாக்கப்பட்ட சிவலிங்கத் திருமேனிகள் பார்வைக்கு நேரத்திற்கு ஒரு மாதிரி விசித்திரமாக காட்சி தரும். 

ஒருமுறை பார்த்தால் செம்பு போல காட்சியளிக்கும். மீண்டும் மற்றொருமுறை பார்க்கும் போது தங்கம் போல ஒளிரும். 

கருவூரார் காசித் தலத்திற்கும் சென்று அங்கிருக்கும் விசுவநாதர் ஆலயத்தில் தாமிரத்தாலான வேதை செய்து தங்கத்தால் லிங்கத்தை உருவாக்கி வைத்தார்.

திருமாளிகைத் தேவர் ஆலயங்கள் தோறும் சென்று சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தார்.

கருவூராரோ அம்பாள் வழிபாட்டிலேயே மூழ்கியொழுகினார். 

இவர்களின் இருவருக்குள் அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை, நடுவிலிருந்து போகர் தீர்த்து வைப்பராக இருந்து வந்தார்.

ஒருநாள், திருமாளிகைத் தேவர் வழிபாட்டை முடித்து விட்டு, நிர்மால்யத்தைக் கருவூராருக்கு அன்புடன் கொடுக்க, அதை பணிவோடு ஏற்று உண்ட கருவூராருக்கு உள்ளத்தில் மேலும் ஞானம் பிறந்தது.

அவரின் கண்களில் சக்தியுமாய், கருத்தில் சிவபெருமானுமாக அம்பிகையின் திருவருள் இடமர்ந்து பொதிந்துணர்ந்தன.

ஒரு சமயம் வடதேசத்தே ஆண்ட இரணியவர்மன் என்னும் மன்னன் தீர்த்த யார்த்திரை செய்து வந்தான். யாத்திரையில் காணப்பெற்ற பல நதிகளிலும் நீராடி ஈசனைத் தொழுது கொண்டு, பின் தில்லையை வந்தடைந்தான்.

தில்லையிலுள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் தலையை மூழ்கச் செய்த போது..............................

*தீர்த்தத்தினுள்ளிருந்து.........ஓம்......ஓம்.....ஓம்.....ஓம் எனும் ஓங்காரம் ஒளி கேட்டது.* தீர்த்தத்தினுள் பழையபடியும் தலையை மூழ்க வைத்துக் கண்களைத் திறந்து பார்த்து ஒலியின் நாதத்தைத் தேடினார்.

அங்கே சிவபெருமான் திருநடனம் நடமாடிக் கொண்டிருந்த நிகழ்வு மன்னரின் கண்களுக்குத் தெரிந்தன.

அக்காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார் மன்னர். அப்படியே கைகளை தலைமேலாக தூக்கி குவித்து வணங்கிப் பரவசமானார்.

அரண்மனை திரும்பிய மன்னனின் எண்ணவோட்டமெல்லாம்...........சிவகங்கைத் தீர்த்தத்தில் காணப்பெற்ற நடனத்திருவுருவே கண்களில் நிழலாடி மறைய மறுத்து நடனக் கோலத்தை லயித்தவாறே இருந்தார். 

வேறேதுச் சிந்தனைக்கும் அவர்  மனம் செல்லாது ஈசன் திருநடனக் கோலச் சிந்தனை யோடிருந்தார்.

மன்னனின் மனதில் அந்தக் காட்சி ஆழமாக வேரூன்றியது. அதைச் செயல்வடிவமாகப் பெற அவர் மனம் ஏங்கியது.

தன் மனத்தில் பதிந்த அந்தச் சிவபெருமானின் நடனக் கோலழகை அப்படியே ஓவியமாகவரைந்து சுத்தமான பொன்னால் விக்கிரமாக இழைத்து, ஆலயம் வைத்து வழிபாட்டிற்கு வைக்க வேண்டுமென்று பேரார்வம் கொண்டான்.

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த சிற்பிகளையெல்லாம் வரவழைத்தான். ஒருமண்டலகாலத்துக்குள் இவ்வடிவத்தை உருவாக்ஙித் தரும்படி அன்புடன் அச்சிற்பிகளைக் கேட்டுக் கொண்டான்.

எல்லாவகையானவனலிலும், அனுபவத்திலும் முதிர்ந்திருந்த அச்சிற்பிகளால் எவ்வளவோ முயன்றும் அச்சிற்பிகளால் ஓவியத்தால் வரையப்பற்றிருந்த நடனக் கோலச் சிற்பத்தை வடித்தெடுக்க முடியவில்லை.

ஒவ்வொன்றாக வடித்தெடுத்து வரும்போது பொருத்தும் இணைப்புக்கு இணங்காது, ஏதேனும் ஒருவகையில் விக்கிரகத்தில் குறை ஏற்பட்டு வந்து கொண்டிருந்தது.

நாட்கள் விரைந்தன. ஒரு மண்டல கால நேரமும் கரைந்தொழிந்து போயிருந்தன. விக்கிரகம் முழுமையடையவில்லை.

சிலை வடிவம் பெற மறுக்கிறது. இதை எப்படி மன்னரிடம் போய் எப்படிச் சொல்வது? அப்படிச் சொன்னால் நம்மை மன்னன் விட்டு வைப்பானா? என.கவலை கொண்டிருந்தனர்.

விக்கிரகம் செய்யும் விவகாரம் போகரின் சீடர்களுக்கு எப்படியோ எட்டியது. இச்செய்தியினை சீடர்கள் போகரிடம் தெரிவித்தனர்.

சீடர்கள் சொன்னதைக் கேட்ட போகர்,  தம் சீடன் கருவூராரை அழைத்து வரும்படி சீடர்களிடம் கூறினார்.

குரு அழைத்ததும், கருவூரார் உடனே  வந்து குருவான போகரை வணங்கிப் பணிந்தார்.

*கருவூரா?*  இவர்கள் காட்டும் இடம் சென்று, அவர்கள் காட்டும் சித்திரத்தை வடித்தெடுத்துக் கொடுத்து வருவாயாக! என்றார்.

கருவின் கட்டளையை பணித்தே வந்தததினால், என்னவென்றும், ஏதுவென்றும் கேட்காமலே குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து இடம் அகன்று சென்றார்.

சிறிது தூரம் தள்ளி நடந்து வந்த பிறகுதான் கருவூரார் யோசனை செய்தார். 

சிலையை எப்படி வடிப்பது? 

எந்த அமைப்பில் உருவாக்குவது?

முடிய முடியாததை நம்மைக் கொண்டு முடித்து வரச் சொன்னது எதனால்?

நம்மாலும் அது முடியுமா?

தம்மைத்தானே கேள்வியைத் தொடுத்துக் கொண்டு உணரப்பெறும் சித்தத்தோடு நடந்தார்.............

*மன்னன் நினைத்த நடனக் கோல சிற்பம் நாளை வார்த்து வ(ள)ரும்.*

             திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                    *(20)*
🌸 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🌸
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
🌸 *கருவூரார் சித்தர்.* 🌸
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
குருவான போகர் சித்தர் தன் சீடரான கருவூராரிடம், நீ சென்று  மன்னனின் ஓவிய நகலுக்குண்டான சிற்பத்தை வடிவத்தெடுத்துக் கொடுத்து வா!" என ஆணையிட்டார்.

மன்னர் ஏற்கனவே ஏற்பாடு செய்த சிற்பிகளால் விக்கிரகம் வார்த்தெடுக்க முனைந்திருந்த அச்சிற்பிகளால் சிற்பத்தை வடித்தெடுக்க முடியாமல், விக்கிரகத்தின் பொழிவு மருகி ஒழுகி குறை குறையாக வரவே, கடைசி நாளான 48-வது நாளான இன்றுடன் தவனைக் காலம் முடியவே....என்ன செய்வதென தெரியாமல் பயந்து விழித்தனர்.

அந்த வேளையில் அந்த சிற்பிகளின் முன் வந்த கருவூரார் *" கவலைப் படாதீர்கள்"* விக்கிரகத்தை நான் உருவாக்கித் தருகிறேன் என்றார்.

கருவூராரைப் பார்த்த அச் சிற்பிகள் எல்லோருமாகச் சேர்ந்து...கை தேர்ந்த எங்களால் இவ்வுருவச் சிற்பத்தைப் புணைவதில்  குறைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது!,.....அப்படியிருக்க உங்களால் சிற்பத்தை எப்படி உருவாக்குவீர்கள்?" என்றனர்.

சிலையை உருப்பெருக்க முடியவில்லையே என்று கலக்க பயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்......உங்கள் கலக்கத்தை விட்டொழியுங்கள். அதுவும் அவ்வுருவச் சிற்பத்தை ஒரு மணி நேரத்தில் முடித்துத் தருகிறேன். எனச் சொல்லி தைரியமூட்டி விட்டு விக்கிரகம் செய்ய ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று கதவை ச் சாத்திக் கொண்டார்.

ஒரு மணி நேரம் கூட கடக்கவில்லை. கதவு திறந்தது. வெளியே கருவூரார் வந்தார். சிற்பிகளைப் பார்த்து *"விக்கிரகம் முழுமை பெற்று விட்டது"* போய்ப் பாருங்கள். எனச் சொன்னார் கருவூரார்.

சிற்பிகள் கூடத்திற்குள் உள் வந்து பார்த்தனர். சிற்பிகள் அத்தனை பேரும் வியந்து திகைப்பிலாழ்ந்தனர். மன்னனின் ஓவியத்திலுள்ள ஆடல் வல்லானின் நடனக் கோலம், அப்படியே உருவச்சிலையிலும் விக்கிரகமாக பிரதியாயிருந்தது. 

வெளியே வந்த சிற்பிகள் கருவூராரை வணங்கிப் பணிந்தெழுந்தனர். அதோடு மட்டுமல்லாது.....தங்களை அலட்சியப்படுத்தியமைக்கு மன்னிப்பும் கேட்டனர். 

அச் சிற்பிகளுடன் இரவுப் பொழுதை அவர்களுடன் பேசி உறவாடிவிட்டு, மேலும் பல சிற்ப சாஸ்திர நுணுக்கங்களையும் அவர்களைனைவருக்கும் உபதேசித்துவிட்டு பின்பு மடம் ஒன்றைத் தேடிப் போனார்.

இவ்வளவான நிகழ்வேதும் தெரியாத மன்னன், மண்டலக் கெடு முடிந்ததை கணக்கிட்டு சிலையைக் காண தன் பரிவாரங்களை கூட்டிக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்கும் ஆட்டங்களுடன் சிற்பக்கூடம் வந்து சேர்ந்தான்.

கூடம் புகுந்து பார்த்த மன்னனும் விக்கிரகத்தைப் பார்த்து ஆனந்தப்பட்டாலும் பிரமித்துப் போனான். ஓவியத்தைக் கொடுத்து சிற்பம் வடிக்கச் சொன்னால் , ஓவியத்திலுள்ளதைக் காட்டிலும் மேன்மையான சிற்பம் அமைந்துள்ளதே! எனக்கூறி கூறி மேலும் மகிந்தான். சிற்பத்தின் முன்பாக  அப்படியே கைகளைத்தூக்கி குவித்து விழுந்து வணங்கினான்.

சிற்பிகளுக்குண்டான சன்மானத்தைக் கொக்க சிலை செய்த சிற்பிகளை அரண்மனைக்கு வந்து சேருமாறு கூறிவிட்டு, தன் பரிவாரங்களைத் திருப்பி அவனும் அரண்மனை வந்தடைந்தான்.

அரண்மனையில் சிற்பிகளுக்கு சன்மானத்தைக் கொடுக்கும் போது,   அதை தடுத்துக் குறிக்கிட்ட மந்திரி.......................

"மன்னா! *பொன்னைச் சோதித்த பின்* இவர்களின் சன்மானத்தைக் கொடுக்கலாமே!...... என்றான்.

அதைக் கேட்ட மன்னனும் கொடுக்க இருந்த  சன்மானத்தை நிறுத்தி வைத்து..... *சிற்பிகளே!* விக்கிரகம் வார்க்கும்போது பிதறியத் தங்கத்துகள்கள் மீதமாகியிருக்குமே! அந்தத் துகள்கள் எங்கே என மன்னன் கேட்டார்.

ஏற்கனவே கூடத்தில் எடுத்து வைத்திருந்த பிதறியத் தங்கத் துகள்களை மன்னனிடம் கொடுத்தனர்.

தங்கத் துகள்களை எடுத்துச் சென்ற மந்திரி, அதை த் தரம் சோதித்துப் பார்த்து விட்டு  ஓடோடி வந்து மன்னனின் காதில் விஷயத்தைக் கூறினான்.

மன்னன்  இருக்கையை சட்டென விட்டெழுந்தான். கண்களும் கோபத்தை உமிழ்ந்தன...............
*சுத்தத் தங்கத்தில் உருக்கச் சொன்னால் அதில் செம்பையும் சேர்த்து இணைத்திருக்கிறீர்களே!* என வெகுண்டான்.

மன்னா!... மன்னா!!....சிற்பிகள் அத்தனை பேரும் மன்னனின் காலில் விழுந்தார்கள். அழுதார்கள்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                *(21)*
🌤 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🌤
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
🌤 *கருவூரார் சித்தர்.* 🌤
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
தூயத் தங்கத்தை முறையான செயலில் செய்யாது மாற்றுச் செய்திருக்கிறீர்களே என்று சிற்பிகளைப் பார்த்துக் கோபப்பட்டார் மன்னர் பெருமான்.

சிற்பிகள் அனைவரும் மன்னிக்க வேண்டும் எனக்கூறி மன்னர் காலில் விழுந்தார்கள்.

மன்னா சிற்பத்தை உருவாக்க நாங்கள் எவ்வளவோ சிரத்தை எடுத்து முயச்சித்தோம். அது கூடி வரவில்லை. அனுதினமும் பூஜை புணர்மானம் செய்துதான் விக்கிரகக் குடிலுக்குச் செல்வோம். ஆயினும் உருப்பெறுவதில் குறைகளே தொடர்ந்த வண்ணம் இருந்தன. இப்படியே மண்டலநாளான 47 வது நாள் வரையும் வடிவம் பெறவில்லை.

 மண்டல நாளான 48- வது நாள் விடிந்தது. நாங்கள் என்ன செய்வதென தெரியாமல் விழித்தோம். அப்போதுதான்.......

அம்பலவாணனின் அடியார் ஒருவர் வந்து, விக்கிரகத்தைத் தானே உருவாக்கித் தருகிறேன் எனச் சொல்லி ஒரு மணி காலப் பொழுதுக்குள்ளும் இதனை உருவாக்கிக் கொடுத்துச் சென்று விட்டார். அவர் உருவாக்கியதுதான் இந்த விக்கிரகமும் அதில் பிதறிய தங்கத்துகள்தான் இது!வேறெதுவும் நாங்கள் கண்கூடாகப் பார்க்கவில்லை.  இதுதான்  நடந்தது மன்னா!என்று பயந்து நடுங்கியபடியே சிற்பிகள் கூறினார்கள்.

*"யாரவன்! அந்த அடியான் எங்கிருக்கிறான்!, அவன் எங்கிருந்தாலும்,சென்று அவனை இழுத்து வாருங்கள்!* என அரண்மனைச் சேவகர்களுக்கு உத்தரவிட்டான்.

அவ்வளவுதான் படைவீர்கள் பலரும் நாலா திசைகளிலும் தேடி கருவூராரைக் கண்டு பிடித்து அரண்மனைக்கு இழுத்து வந்தார்கள்.

கருவூராரை,மன்னன் மேலும் கீழுவுமாக எகத்தாளமாகப் பார்த்தான். எந்த தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்துச் சொல்கிறேன். எனக்கு யோசனை புலப்படும் வரை இவனை சிறைக்குள்ளேயே வைத்திருங்கள் எனக் கூறிவிட்டு அரண்மனை உள்புகுந்து சென்றான் மன்னன்.

அரண்மனைக்குள்ளிருந்தவாறாக  நடராஜ விக்கிரகத்தையே மாறி மாறி உற்று பார்த்தான் மன்னன். அந்த நிகழ்வில் நடராஜத் திருமேனி முன் ஓர் உருவம் பிரசன்னமாகி நின்றிருப்பதைக் கண்டு வியந்து நிர்ந்து நோக்க..............

அவர் முன்னால் போகர் சித்தர்  நின்று கொண்டிருந்தார். அவர்க்குப் பின்புறம் ஐந்து சீடர்களும் நின்று கொண்டிருந்தனர். அவ்வைர்வில் ஒருவரிடம் துலாக் கோல் ( தராசு) ஒன்றும் மற்ற நால்வர் சீடர்கள் தலையில் தங்கப் பொதியுடன் தாங்கி நின்றிருந்தனர்.

போகரையும், அவர்தம் சீடர்களையும் பார்த்த மன்னன், அவர்களைப் பார்த்து எழுந்து நின்று கைகளைக் குவித்து வணங்கினான்.

மன்னா! நீ சிறையில் அடைத்து வைத்திருக்கிறாயே, அவன் என் மாணவன். என்னுடைய சீடன்.. இவ்விதம் செயல்படுவதுதான் உன்னுடைய ஆட்சி முறையோ?", சுத்தமான தனித்தங்கத்தில் விக்கிரகம் இழைக்க முடியாதென்பது உனக்குத் தெரியாதா?  நான்தான் சிறுவளவு செம்பைக் கலக்கச் சொல்லியிருந்தேன். அதற்கான காரணங்களும் உள்ளன. 

*அறிதாதும் தெரியாதுமான ஆயினேன் நானே!"* சுவாமி! தாங்களே விளக்கியருளுங்கள் சுவாமி!!....என்றான் மன்னன்.

தூய்மைத் தங்கத்தில் விக்கிரகம் செய்தோமானால் அதிலிருந்து வெளிப்படும் ஒளியினை, அதனைப் பலமுறைகள் திரும்பத் திரும்பக் காணப்பெறுவோமின், பார்ப்பவரின் கண்களைக் குருட்டு நிலைக்குக் கொண்டு செல்லும். இந்த விஞ்ஞானம் உனக்குத் தெரியாமலா போய் விட்டது!,  இது போக மற்றொரு காரணத்தையும் கேள்......செம்பு இணையாத தங்கத்தில் விக்கிரகம் செய்தோமானால் அதை பார்ப்பவரின் மனநிலையில், அதன் மீது அளவில்லா ஆசையுண்டாகும். அதனால் அத்தெய்வத் திருமேனியின் மீது பக்தி மார்க்கம் குறைந்து போகும். மாறாக, அந்த தங்கத்திற்குண்டான பக்திதான் மேலோங்கும்!  அதிலும் ஒருசிலர் அத்தங்கத்தின் மீது களவுக் கண் பதிப்பார்கள்! எனவேதான் என் மாணவனான கருவூரானை பலவித மூலிகைச் சாறுகளுடன் தங்கத்தையும் செம்பையும்  இணைத்தான். இதை அறியாது கேட்காது அவனை சிறைபடுத்தி விட்டாயே! என்றார் போகர்.

சுவாமி! இனி நான் என்ன செய்ய வேண்டும்? மன்னன் கேட்க..............

செய்தன செய்தனதான்! போகட்டும். இதோ பெற்றுக் கொள் நீ தந்த மாற்றுத் தங்கத்தை!" நீ தந்த அளவே தந்து விடுகிறோம்!" என போகர் சொல்லவும்........

அவ்வைந்து சீடர்களில் ஒருவனாவன்,  துலாக்கோலை விட்டத்தில் தொங்கச்செய்து ஒரு தட்டில் நடராசத் திருமேனியை தூக்கியெடுத்து வைத்தான். 

கூடவேயிருந்த மற்ற நான்கு சீடர்களும் தலைச்சுமையில் தாங்கி வந்திருந்த தங்கத்தை மற்றொரு தட்டில் ஒருவர் பின் ஒருவராக கொட்டினார்கள்.

கொட்டக் கொட்ட தங்கம் தங்கம் தாங்கிய தட்டு தாழ்ந்து போயிற்று! நடராசத் திருமேனியிருந்த தட்டு மேலே வந்தது.

மன்னா!," உயர்ந்தன எது?"........ தாழ்ந்தன எது?"........நீ யே பார்..உன் தங்கத்தை நீயே எடுத்துக் கொள்!, ....என் மாணவன் உருவாக்கிய நடராசப் பெருமானை நாம் எடுத்துச் செல்கிறோம் என்று சொன்னதோடு, தட்டிலிருந்த நடராசத் திருவுருவத்தைக் கையிலெடுத்துக் கொண்டு ப் புறப்பட ஆயத்தமானார்.

அவ்வளவுதான்.....மன்னர் தடாலென போகரின் கால்களில் முன் வீழ்ந்தார். மேலும் சுவாமி! அடியேனை மன்னித்துப் பொறுத்தருள வேண்டும்!", அனைத்தையும் புரியாது தவறு செய்து விட்டேன்!. தங்களின் மாணவனான கருவூராரின் பெருமைகளை உணரப் பெறாமல் அறிவிழந்து நடந்து கொண்டேன்! பிழை பொறுப்பீர் சுவாமியே!..பிழை பொறுப்பீராக!!...மன்னரின் கண்களில் கண்ணீரருவி வழிய மன்றாடினார்.

போகரின் மனம் கனிந்தது.

மன்னனே! நடராசத் திருவுருவை உனக்கேத் தருகிறேன்!", இந்தா வாங்கிக் கொள்....எனக்கு என் மாணவனைத் திருப்பிக் கொடு!"

உடனே தன் சேவகர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான் மன்னன்.  கருவூராரை மரியாதை செய்து அழைத்து வாருங்கள்!

கருவூராரை சிறை வைத்த இடத்திற்கு, ஓடோடிப் போனார்கள் சேவகர்கள்!

*போன வேகத்திலேயே சேவகர்கள் திரும்பி ஓடி வந்தார்கள்.* 

*ஏன் ஓடி வருகிறீர்கள்!" கருவூராரை எங்கே? மன்னன் படபடத்தான்.*

*பதறினான்!*

*பயத்தில் அலறினான்!*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(22)*
☘ *சிவமய அருளான சித்தர்கள்.* ☘
*********************************************
☘ *கருவூரார் சித்தர்.* ☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
மன்னனின் சேவகர்கள் ஓடிச் சென்ற வேகத்திலேயே திரும்பி ஓடி வந்தார்கள். 

மன்னா! அங்கே கருவூராராரைக் காணேம்!". நடுங்கியபடியே பதில் கூறினார்கள் காவலர்கள்.

மன்னனர் கையை உயர்த்தி ஏதோ கூற முற்பட்டார் அதற்குள் போகர் குறுக்கிட்டார்...........

*"என் மாணவன் என் உத்தரவு பெறாமல் எங்கும் செல்ல மாட்டான்"* *சிறைக்குள்தான் இருப்பான்* எனச் சொன்னதோடு கருவூரார் அடைக்கப்பட்டிருந்த சிறையைப் பார்த்து *"கருவூரா!* என குரல் கொடுத்தார்.

*குருநாதா!* நான் இங்கேதான் இருக்கிறேன். சிறைக்குள்ளிருந்து கருவூராரின் குரல் மட்டுமே வந்தது. கருவூராரை காணோம்.

சிறையின் முன் பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தில் வாய்பிளந்து நின்றனர்.

*கருவூரா!* எல்லோருக்கும் தெரியும்படியாக வெளியே வருவாயாக! என்றார் போகர்.

அனைவரின் கண்களுக்குப் புலப்படும்படியாக கருவூரார் வெளியே வந்தார். *"சித்தர்களின் ஜோதி மகிமையின் சக்தி இது.* 

உலகத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டவன் தான் என் சீடன் கருவூரான்.

மக்கள் அவன் வாயிலாக இறைவனை உணர்ந்து கொள்வார்கள் என்று போகர் போகர் நடராஜப் பெருமானை மன்னனிடத்தில் ஒப்படைத்து, மேலும் கோயில் அமையப் பெற வேண்டிய முறையையும், அங்கே நடராஜப் பெருமானை நிறுவப் பெறும் முறைகளையும் அவற்றுக்கான பூஜை முறைகளையும் மன்னருக்குச் சொல்லி விட்டுக் கருவூராரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து மறைந்து போனார்.

ஒரு சமயம் தஞ்சை மன்னன் சிவபாத சேகரர் தஞ்சையில் மிகப் பெரிய கோவிலைக் கட்டினான். முடிவில் கருவறைக்குள் சிவலிங்கத்தை நிர்மாணிக்க முடியாமல் கவலைப் பட்டான். சிவலிங்கத்தை நிர்மானிக்க முடியாத செயலை எண்ணி எண்ணி கண்ணீர் விட்டுக் கதறியழுதான்.

கருவூரார் பல திருத்தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு, கங்கை கொண்ட சோனேஸ்வரம் என்னும் திருத்தலத்தில் இருந்த போது, ஒரு காகம் ஒன்று ஒரு ஓலைச் சுவடியை அவர் முன் போட்டது. கருவூரார் அவ்வோலையை எடுத்து வாசித்துப் பார்த்தார் ..............

*கருவூரா!" ......"உடனே வா!.....*என எழுதப் பட்டிருந்தது.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                  *(23)*
🌾 *சிவமய அருளான சித்தர்கள்.* 🌾
*********************************************
🌾 *கருவூரார் சித்தர்.*🌾
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
கருவூரார் இறைவனை மனமுருகி வேண்டவும்.............

*அவ்வளவுதான்......*

அந்த உச்சிவெயில்  சூரியன் தகதகக்கும் நேரத்தில், திடீரென வானம் கப்பி கும்மிருட்டானது.

மேகங்களை யாவும் கருமை படலத்தை வாங்கிக் கொண்டு தங்கள் மீது போர்த்திக் கொண்டன.

அம்மேகக் கூட்டங்களை அந்த நிலையில் பார்க்கும் போது , வர்னம் பூசுபவனை அழைத்துப் போய் அவன் கையில் கருமைநிற மையைக் கொடுத்து பூசச் செய்தது போலிருந்தது. 

அதனால் பூமிக்கு வெளிச்சம் தடைபட்டுப் போனது. அதோடு அம்மேகங்கள் யாவும் சும்மாயிராது, கலைந்து குலைந்து இடம் நகர்ந்தன. இடம் பெயரப்படும் போது அம்மேகங்கள் ஒன்றோடொன்று  சண்டையிட்டன. 

அந்தச் சண்டையில் செவிப்பாறைகள் பிளந்து போகும் அளவுக்கு பேரொலியான இடியதிர்வுகள் பூமிக்கு வந்து எதிரொலித்தன. அப்பேரொலிகளுக்கு  இணையாக மின்னலொளி பிறந்து பளீரென ஒளிர்ந்து ஒளிர்ந்து மறைந்தன. அவ்வொளியில் இருள் நீங்கவும் மறுபடியும் இருள் கவ்வவுமுமாக இருந்தன. கணமழை பிடித்துப் பெய்தது.

தாழிடப்பட்டிருக்கின்ற ஆலயக் கதவுகள், தாமாகவே திறந்தன. மணிமண்டபத்திலிருந்த ஆலயத்தின் மணிகள் தன்னாலே சுழன்று கணீரென்று கணீரென்றது.

இந்நிகழ்வுகளை கண்ட ஊர்மக்கள் கருவூராரை நம்பாது இதெல்லாம் இவரோட சித்து விளையாட்டு எனச் சொல்லி மறுபடியும் கேலி பேசினர். இதைக் கண்டு வருந்திய கருவூரார் எதுவும் பேசாமல் அந்த ஊரை விட்டு அகழ்ந்து போனார்.

பல தலங்களுக்கும் சென்று தரிசித்து திருக்குருகூர் என்னும் திருத்தலத்தை அடைந்தார். அவ்வூர் பக்தர்கள் கூட்டம் கருவூராரை மாலைகள் அணிவித்து வரவேற்றார்கள்.

"என்னை ஏன் என்னை வரவேற்கிறீர்கள்? என கருவூராரிடம் அவர் கேட்க, அதற்கு அம்மக்கள்........"சுவாமி!, எம்பெருமான் எங்கள் கனவில் வந்து இப்படிச் செய்யச் சொல்லி ஆணையிட்டார். 

ஏற்கனவே வருந்தத்திலிருந்த கருவூராரின் மனம், இப்போது ஆனந்தமானது. இறைவனின் கருணையை என்னி வியந்து பயணத்தைத் தொடர்ந்தார்.

ஒருநாள், விஷ்ணுவின் ஆலயத்தை அடைந்து அங்குள்ள பெருமாளைக் கூவியழைத்தார். கூவியழைத்ததற்கு பெருமாள் வரவில்லை. 

உடனே அக்கோவிலில் பூஜை இல்லாமல் இருக்கக் கடவது என்று கருவூரார் சபித்து விட்டுச் சென்று திருக்குற்றாலத்துக்கு வந்து சேர்ந்து, அங்குள்ள பொதிகையில் தங்கியிருந்தார்.

பின், திருநெல்வேலி சென்று கோயிலுக்குள் நுழைந்து *"நெல்லையப்பா! நெல்லையப்பா!!* என்று பலமுறை கூவினார். எவ்வித பதில் சமிக்ஞையும் உணரக் கிடைக்கவில்லை.

"ஓ ஹோ!" இங்கும் சுவாமி இல்லையா?.....இங்கு நல்லவர்கள் யாரும் இல்லையோ? அதனால்தான் கூக்குரலிக்கு பதிலில்லையோ?" *நல்லவர்கள் இல்லா இவ்விடம் எருக்கஞ் செடிகளே முளைக்கக்கக் கடவன!"* எனச் சொல்லி முடித்து அவ்விடத்தை விட்டு அவர் வெளியேற, அதற்கு முன்னதாகவே எருக்குகள் முளைத்து உயர்ந்திருந்தது.

அவ்விடம் அகன்று திருநெல்வேலியிலிருந்து ஆலங்குளம் வழியிலுள்ள மானூரை அடையும் பொழுது, இறைவன் நெல்லையப்பர் அவரை முன் காட்சி தந்தார். பின் அடியொன்றுக்கு ஒரு பொன் கொடுத்து திருநெல்வேலிக்கு வரச் செய்து அங்கே காட்சி தந்தார். 

இச்சம்பவத்தால் அங்கு முளைத்தெழுந்திருந்த  எருக்குகள் தகாத பூண்டுகளாகி ஒழிந்தன. *"செந்நெல் இங்கு,எருக்கு அங்கு"* எனக்கூற ஆலயம் செழித்தோங்கியது. அதன்பின் கருவூரார் தமது யாத்திரையை மீண்டும் தொடர்ந்தார்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(24)*
☘ *சிவமய அருளான சித்தர்கள் தொடர்..* ☘
●●●●●●●●●●●●◆◆◆◆●●●●●●●●●●●●●●
☘ *கருவூரார் சித்தர்.* ☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திருநெல்வேலியை விட்டு அகழ்ந்த கருவூரார் மருதூர் என்னும் தலத்தை அடைந்தார்.

இடையில் தாமிரபரணி ஆற்று குறுக்கிட்டு, அதில் வெள்ளம் பெருகி ஓடியது.

அதைக் கடந்து அவ்விடம் அகழ்ந்து போக முடியாமல் திகைத்து, அங்கு திருக்கோயில் கொண்டு எழுந்த நாரம்பூ நாதசுவாமியை நோக்கி நின்றவாறு, *நாரம்பூநாதா* என கூவியழைத்தார்.

கருவூராரின் அழைப்புக் குரல் கேட்டு , நாரம்பூநாதர் தன் தலையை சாய்த்து பதில் குரலும் கொடுத்தார்.

(அன்று தலையைச் சாய்த்துப் பார்த்த நாரம்பூநாதர் இன்றும் அப்படியே தலை சாய்ந்த நிலையிலேயே உள்ளார்.)

அவ்வளவுதான், உடனே வெள்ளம் வடிந்து குறுகியது. பின் அவ்விடம் அகழ்ந்து சென்று இறைவனை தரிசித்துவிட்டு அவரிடம் திருவடி தீட்சை பெற்றார். பின்பு அங்கிருந்து மேலும் தலயாத்திரையைத் தொடர்ந்தார்.

திருவிடை மருதூரில் சுவாமி தரிசனம் முடித்து கஜேந்திரனுக்குப் பெருமான் முக்தி கொடுத்த *"கஜேந்திர மோட்சம்"* எனும் தலம் வந்து சேர்ந்தார்.

இங்கு பெருமானை தரிசித்து விட்டு முன்றீசர் கோயில் வந்து சுவாமியை வணங்கினார்.

அங்கிருந்து கொஞ்சம் தொலைவிலிருந்த காளிகோட்டம் ஒன்றை கடந்தார். அப்போது அவ்விடத்தில் கருமயோகிகள் பலர் இருப்பதைக் கண்டார். 

தூய்மை என்பது இல்லாது இருந்த அவர்களுக்கு புத்தி கற்பிக்க எண்ணினார் கருவூரார்.

கருமயோகிகள் அவரை எதிர்கொண்டு வரவேற்று வணங்கினார்.

கருவூரார் அவர்களிடம் கர்மயோகத்தில் ஈடுபட்ட நீங்கள் இதுவரை அடைந்த பயன் என்ன என்று வினவினார்.

*"குண்டலினி சக்தியை எழுப்பி அதை பிரம்ம மந்திரத்தில் கொண்டு சேர்த்தோம்* என சொன்னார்கள்.

நீங்கள் முதலீடு செய்யாது வியாபாரம் செய்யலாமென நினைக்கிறீர்கள். நீங்கள் அம்பிகையை வழிபட்டு பின்பு செயலை ஆரம்பித்தீர்களானால், நன்றாக இருந்திருக்கும்!. மேலும் கூடுதலாக பல சித்திகள் உங்களுக்கு கிடைத்திருக்குமே!," என்றார் கருவூரார்.

புளித்த கள்ளும், நல்ல மீனையும் காளிதேவிக்கு படைத்திருக்கிறோமே! என கர்மயோகிகள் கூறினார்கள்.

இவைகளை நீண்ட நேரமாய் முயற்சி செய்து தேடிப் பிடிப்பீர்கள். பிறகு அதனைக் காளிக்குப் படைத்துவிட்டு மூக்கு முட்ட உண்பீர்கள் இதைத்தானே செய்வீர்கள் என்றார் போகர்.

மீனும் தேனும் முயற்சி செய்யாவிட்டால், தானே இங்கே வருமா?" என பதிலிட்டனர் கர்மயோகிகள்.

கருவூரார் புன்னகைத்துக் கொண்டே அங்கே தன் எதிரில் இருந்த வன்னிமரத்தை ஒரு சில விநாடிகள் உற்றுப் பார்த்தார். 

வன்னி மரத்திலிருந்து மீன்கள் மழை போல் கீழே விழுந்தன.."அம்மா....காளி! கள் கொடு" என்றார்.

காளி தேவி உடனே மதுக்குடம் ஒன்றை நீட்டினாள். அவ்வளவு நேரம் வாதம் செய்து கேலி பேசிய கர்மயோகிகள் கருவூராரின் செயலைக் கண்டு பயந்தார்கள். திமிரான அகம்பாவங்கள் அவர்களை விட்டு அகன்றன. பணிவு வந்து அவர்களிடம் குடி கொண்டது. அறிவில் தெளிவு பிறந்தது.

கருவூராரின் கால்களில் விழுந்து....."சுவாமி....எங்களை மன்னியுங்கள். வீடு பேற்றை அடையும் வழிமுறைகளை எங்களுக்கு உபதேசியுங்கள்...என வேண்டினார்கள்.

அவர்களது வேண்டுதலுக்கு மனமிரங்கிய கருவூரார், *"நீங்கள் இந்நொடிப் பொழுதே பொதிகை மலைக்குச் செல்லுங்கள், வைத்த கண் அகழ்த்தாமல் ஆகாயத்தை நோக்குங்கள். 

நீல வண்ணமாகத் தெரியும் ஆகாயம் தான் அம்பிகையின் வடிவம். தவழும் வெண்ணிற மேகங்கள் ஒன்றோடொன்று கலந்து பிறகு கடல் அம்பிகையின் வண்ணத்தைப் பெறும். 

முதலில் இதேபோல் நினையுங்கள். மட்டமான அபிமானங்கள் எல்லாம் போய்விடும். உடம்பின் மீதுள்ள அபிமானமும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். இந்த நிலை வந்த பிறகுதான் ஞான உபதேசம் பலிக்கும்" என்றார்.

கருவூராரின் கட்டளையின்படி யோகிகள் அனைவரும் பொதிகை மலைக்குப் போய் அவரது உபதேசத்தைக் கடைபிடித்தனர்.

அதன் பிறகு தன் தலயாத்திரையைத் தொடங்கிய கருவூரார் குற்றாலம் முதலாக தான் சென்ற கோயில்களில் எல்லாம் தெய்வீக சக்தியை அதிகப்படுத்தி விட்டு பொதிகை மலையை அடைந்தார்.

பொதிகை மலையிலிருந்த அந்த யோகிகளைக் கண்டு இவர்கள் பக்குவ நிலையை அடைந்து விட்டதை கண்டுவிட்டார்.

நாம் ஏற்கனவே சொன்னபடி இப்போது இவர்களுக்கு உபதேசிக்கலாம் என தீர்மானித்து அவர்களுக்கு ஞான உபதேசம் செய்து வைத்து நல்வழி காட்டி அருள் புரிந்தார்.


பிறகு கருவூரார் பொதிகை மலையிலிருந்து கிளம்பி *ஜம்புகேஸ்வரம்* என்ற திருவானைக்காவை அடைந்து அங்கே ஜம்புகேஸ்வரரை வழிபட்டு விட்டு அருகிலே உள்ள திருவரங்கத்தை அடைந்து அங்கே பள்ளி கொண்ட பெருமாளை பக்தியோடு வழிபட்டார்.

அப்போது அபரஞ்சி என்னும் பெயர் கொண்ட தாசி ஒருத்தி (இவள் தவ சாதனையில் அனுபவம் நிறைந்தவள்) கருவூராரைக் கண்டு ழணங்கி, தவ சாதனையில் தான் இன்னும் அறிந்து கொள்ள வேண்டியவைகளை அறிந்து கொள்ள கருவூராரைப் பணிவோடு தன் இல்லத்திற்கு அழைத்தாள்.

அவளது அன்புக்கு இரங்கிய கருவூராரும் அவளோடு அவள் வீட்டிற்குச் சென்றார்.

அபரஞ்சி ஓர் உயர்ந்த ஆசனத்தில் கருவூராரை உட்கார வைத்து அவர் திருவடிகளை முறைப்படி வணங்கி ஞானசாதனையில் தனக்குள்ள சந்தேகங்களைச் சொல்லி அவற்றுக்கான விளக்கங்களை கேட்டுப் பெற்றாள். 

மகிழ்வுடன் அவளது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார் கருவூரார். "இன்றைய நிலையில் இது போன்ற பொது மகளிரைப் பார்ப்பது மிகவும் கடினம். 

"இந்தா!"....இதைப்பிடி. உனது தெளிந்த உள்ளத்திற்கு உலகளந்த பெருமாள் உளம் மகிழ்ந்து தந்த பரிசு இது!, என சொல்லி நவரத்தின மாலை ஒன்றை அபரஞ்சியிடம் கொடுத்து,  *"நீ என்னை நினைத்தபோதெல்லாம் நான் உன் எதிரில் தோன்றுவேன்"* என்று வாக்களித்து விட்டு மறைந்தார்.

மறுநாள் திருவரங்கன் கோயிலில் வழிபாடு தொடங்கியது. அபரஞ்சியும் வழிபாட்டுக்காக ஆலயத்திற்கு வந்து இருந்தாள்.

திருவரங்கனுக்குப் பூஜை செய்த அர்ச்சகர், அவரின் திருமேனியைக் கண்டு அதிர்ந்தார்........

திருவரங்கன் திருமேனியிலிருந்த நவரத்தின மாலையைக் காணவில்லை.

உடனே வழிபாட்டை நிறுத்தி விட்டு கருவறையை விட்டு வெளியே வந்தார்.....

ஊர் கூட்டத்தாரிடம் போய் முறையிட்டார்......

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                 *(25)*
🌞 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🌞
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🌞 *கருவூரர் சித்தர்.* 🌞
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
திருவரங்கன் திருமேனியிலிருந்த  நவரத்தினமாலையைக் காணவில்லை என்பதைக் கண்டவுடன், அர்ச்சகர் உடனடியாகப் புறப்பட்டுப் போய் ஊர் கூட்டத்தாரிடம் முறையிட்டார்.

வெளியேறிப்போன அர்ச்சகர் திரும்ப வருவார் என எதிர்பார்த்து பக்தர்கள் அனைவரும் திருவரங்கன் சன்னதி முன் காத்திருந்தனர். அக்கூட்டத்தோடு அபரஞ்சியும் நின்றிருந்தாள்.

ஊர்கூட்டத்தாருடன் அர்ச்சகரும் திருவரங்கன் சன்னதிக்கு வந்து சேர்ந்தனர். திருவங்கரின் திருமேனியிலிருந்த நவரத்தின மாலையைக் காணாத களேபரம் அறியாத பக்த கூட்டமும் அபரஞ்சியும் நின்றிருந்தனர்.

கூட்டத்தை விலக்கி அர்ச்சகர் கருவறை படியேறவும், பெண்கள் நின்றிருக்கும் வரிசையில் அபரஞ்சி நின்றிருப்பதையும், அவள் கழுத்திலே நவரத்தினமாலை ஒன்று  இருப்பதையும் கண்டார்.

அர்ச்சகர் கண்கள் வியப்பால் விரிய *இதோ!, நவரத்தினமாலை!, இங்கே இருக்கிறது!.* என அர்ச்சகர் பலமாக கத்தினார். தரிசனத்துக்கு நின்றிருந்த அனைவரின் பார்வைகளும் அபரஞ்சியின் கழுத்தில் பதிந்தன.

மாலையை திருடியவள் இங்கேயே இருக்கிறாளே!,.........

திருவரங்கத் திருமேனியருகில் இவள் எப்படி செல்ல முடிந்தது?",.................

கருவறைக்குள் உள்புகுந்த வேறேயாயினும் ஒருவர் மாலையை அபகரிக்கப்பட்டு இவளிடம் கொடுத்திருப்பர்..........

இப்படி பலவிதமான விமர்சனங்கள் எழவும்.....ஊர்கூட்டத் தலைவர் அவளை நெருங்கி... *இந்த நகை உனக்கு எப்படிக் கிடைத்தது?"* என கேட்டார்.

"இந்த மாலை களவாடப் பட்டதோ...என்னவோ...அது எனக்குத் தெரியாது! ஆனால்,  இந்தபள்ளி கொண்டான் சார்பாக சத்தியம் செய்து சொல்கிறேன். இந்த நவரத்தின மாலையை கருவூரார் சித்தர்தான் எனக்குக் கொடுத்தார். இது உண்மை. என்றாள் அபரஞ்சி.

சரி! எங்கே அந்த கருவூரார்!?, 

இன்று இரவு இங்கே வருவார்-- எனச் சொன்னாள் அபரஞ்சி.

அபரஞ்சி இவ்விதம் கூறவதைக் கேட்ட ஊர் ஜனங்கள் அனைவரும்  *"சே...இந்த கருவூரான் ஒரு பெண்பித்து பிடித்த பேயன் போல.....இவனெல்லாம் ஒரு சித்தனா? என ஆத்திரமாக வசை பொழிந்தார்கள்.

ஊர்த்தலைவனோ, கோபத்துடன் அபரஞ்சியின் கழுத்திலிருந்த நவரத்தின மாலையைப் இழுத்துப் பிடிங்கிக் கொண்டு.... *"நீ" போ* என ஆலயத்தை விட்டு வெளியேற்றிவிட்டார்.

நவரத்தினமாலைத் தனக்குக் கிடைத்தபோது,  அபரஞ்சி கிடைத்ததையென்னி மகிழ்ச்சி கொண்டது கிடையாது. இப்போது அம்மாலை தன்னிவிட்டு பறிபோனதை எண்ணி துன்பம் கொள்ளவுமில்லை. பக்குவான நிலையைக் கொண்ட சாதுவைப் போலவே நடந்து கொண்டாள் அபரஞ்சி.

அபரஞ்சியிடமிருந்து மாலையை பறித்த ஊர்கூட்டத் தலைவன் அதோடு சும்மாயிராது,....அவளின் வீட்டைச் சுற்றி ஆட்களைக் காவலுக்கு நிறுத்தி வேவு செய்ய வைத்தான்.

மனையினுள்.இருந்த அபரஞ்சி.....கருவூராரை மனதார நினைத்தாள்!.

அபரஞ்சியிடம் வாக்கு கொடுத்தபடி, அவளின் நினைப்புக்கு ஏற்றபடி அவள் முன்னே வந்து நின்றார். அப்போது கருவூராரிடம் நடந்துவிட்டவைகள் அனைத்தையும் முழுவதும் கூறினாள்.

இதுதான் சமயம் என... வேவுக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள் அனைவரும், கருவூரார் உள் புகுந்ததை பார்த்து சடுதியில் உள் ளே நுழைந்து, கருவூராரின் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு போய், ஆலயத்து அதிகாரி முன்பு கொண்டு வந்து நிறுத்தினார்கள். இவர்களின் பின்னாடியே அபரஞ்சியும் தொடர்ந்தாள்.

ஆலயத்து அதிகாரிக்குக் கருவூராரைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும்!, அவரை விசாரிப்பதற்கு வருக்குத் தர்மசங்கடமாக இருந்தது. இருப்பினும் ஊர்த்தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்ட அவர் விசாரணை செய்துதான் ஆகவேண்டும்.........ஆதலால், ஆலயத்து அதிகாரி விசாரணையைத் துவங்கினார்.
*"கருவூராரே!, சுவாமியின் நகை திருடு போயிருக்கிறதே? அந்த நகை அபரஞ்சியிடம் உள்ளதே? அபரஞ்சிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?"* சொல்லுங்கள், என்றார் ஆலயத்து அதிகாரி.

நீங்கள் தவறான கோணத்தில் நினைக்கிறீர்கள் என நான் எண்ணுகிறேன்! அபரஞ்சி என் மாணவி. அவளை இழிவாக நினைப்பதும் பேசுவதும் தவறு!, திருவரங்கத்தான் தான் தன் திருமேனியிலுள்ள நவரத்தின மாலையை பரிசாக அமரஞ்சிக்கு அளிக்கும்படிச் சொல்லி என்னிடம் தந்தார் இதுதான் உண்மை என்றார். 

*என்ன! நவரத்தின மாலையை திருவரங்கன் உங்களிடம் தந்தாரா?"* *இதை திருவரங்கன் முன் வந்து உங்களால் சொல்ல முடியுமா?*

*"தாராளமாக!.. திருவரங்கன் முன் வந்து கூறுவோம்!"* நான் ஆலயம் புறப்படுகிறேன். நீங்களும் என் பின்னே திருவரங்கன் ஆலயத்துக்கு வாருங்கள்! எனக்கூறி அழைத்துச் சென்றார் கருவூரார். 

விஷயம் ஊர் முழுமைக்கும் பரவி, நடக்கப் போகும் விசாரணையைத் தெரிந்து கொள்ள ஆலயத்துக்குள் மொத்த ஊரார்களும் குழுமியிருந்தனர்.

ஆலயத்துக்குள் பிரவேசித்த கருவூரார்........

*"அரங்கா!"*

*"திருவரங்கா!*

*என்னிடம் நீதானே? நவரத்தின மாலையைக் கொடுத்தாய்!*

*அபரஞ்சியிடம் கொடுக்கச் சொன்னதும் நீதானே!*

*நீரே வந்து சாட்சி சொல்லும்!*
*"வாரும்!*

*வாரும்!.. வாரும்!!..*

*"வாரும் ..வாரும்.. வெளியே வாரும்.*


*கூறும்!...கூறும்...வெளியே வந்து கூறும்!"* என்றார் கருவூரார்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(26)*
🌤 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🌤
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🌤 *கருவூரார் சித்தர்.* 🌤
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
கருவறை நோக்கி, அரங்கா என கருவூரார் அழைக்கவும்,..........

அப்போது ஒரு அசரீரி கேட்டது. *"நீங்கள் அனைவரும் எனக்கு அலங்காரம் செய்து அழகு பார்க்க நினைக்கிறீர்கள்"* நானோ....என் அடியார்களை அலங்காரம் செய்து அழகு பார்க்க நினைத்தேன். அதனால்தான் அபரஞ்சிக்கு இந்த நவரத்தின மாலையைக் கருவூரார் மூலம் அளித்தேன்" என அரங்கனார் அசரீரி கூறியது.

அவ்வளவுதான். அனைவரும் திடுக்கிட்டு அதிசயித்துப் போனார்கள். உண்மையை உணர்ந்த ஊரார், கருவூராரையும் அபரஞ்சியையும் வணங்கி மன்னிப்புக் கேட்டதோடு அந்த நவரத்தின மாலையை அரபஞ்சியிடமே கொடுத்தார்கள். அதனை வாங்க அபரஞ்சி மறுத்து விட்டாள்.

மேலும் அவள், "இது என் குருநாதரும் அரங்கநாதரும் சேர்ந்து விளையாடிய விளையாட்டு. இந்த மாலை அரங்கனுக்கே உரியது என சொல்லி விட்டாள்.

அப்போது , அபரஞ்சியின் பக்தியையும் அன்பையும் கண்டு அனைவரும் வியப்படைந்தனர்.

தெருமகள் என்று இகழப்பட்டவள் இன்று திருமகள் எனப் போற்றப்பட்டாள். விலைமகள் என்று அழைக்கப் பட்டவள் இப்போது குலமகள் ஆகிவிட்டாள்.

கருவூரார் அங்கிருந்து கிளம்பி ஙருவூரை அடைந்தார்.ஏற்கனவே கருவூரார் மேல் பொறாமை கொண்டிருந்த அந்த ஊர்க்காரர்களில் (கருவூராருக்கே உபதேசம் சொன்னார்கள்.) சிலர் அவரைப் பார்த்ததும் பொறாமையால் குதித்தார்கள்.

கருவூராருக்கு இருக்கும் அரசர் செல்வாக்கையும், ஊரார் செல்வாக்கையும் கண்டு பொறாமை கொண்ட அவர்கள் கருவூராரை எப்படியாவது ஏதாவது வம்பு வழக்கில் மாட்டி விட வேண்டும் என்று எண்ணினார்.

அவ்வூர் மன்னனிடம் போய், "மன்னா! இந்தக் கருவூரான் வாம மார்க்கத்தைச் சேர்ந்தவன். அவன் வீட்டில் மதுவும் மாமிசமும் பயன்படுத்தி அநாசாரங்களைத் தொடர்ந்து செய்து வருகிறான். இவனால் வைதீக நெறியே அழிந்து போகிறது. முதலில் இவனை இங்கிருந்து விரட்டுங்கள்"என்று முறையிட்டனர்.

மன்னன் உடனே காவலாளிகளை அனுப்பி கருவூராரின் வீட்டைக் கடுமையாக சோதனை செய்தான். ஆனால் அங்கே காவலாளிகள் கண்டதோ?.....

பூஜைக்குண்டான பொருள்களும், யாகத்திற்கு உண்டான பொருள்களும்தான்!.

மன்னன் கருவூராரிடம் மன்னிப்புக் கேட்டான். 

கருவூராரோ!, "அரசே! என்னிடம் மன்னிப்புக் கேட்பது இருக்கட்டும். என் வீட்டை சோதனையிடச் சொன்னவர்களின் வீடுகளை சோதனை செய்யுங்கள்" என்றார்.

அவர்களின் வீடுகளில் சோதனை செய்தபோது, அங்கே மதுவும் மாமிசமுமாக இருந்தது.

மன்னனுக்குக் கடுங்கோபம் வந்து விட்டது. கருவூரார் அவனை சமாதானப்படுத்தி,.......

"மன்னா! அவர்கள் மேல் தவறில்லை. என் வீட்டில் அவர்கள் மறைத்து வைத்திருந்த மதுவும், மாமிசமுமே அவர்கள் வீட்டில் காட்சி அளித்தது.

என்மேல் சுமத்திய பழியால் உண்டான, அவர்களின் பாவம் தீர என்னால் உண்டாக்கப்பட்ட சங்கல்பம் இது. நீங்கள் கோபித்ததால் அவர்கள் பாவம் தீர்ந்தது. கோபத்தை விடுவியுங்கள்"என மன்னனை அமைதிப் படுத்தினார்.

ஆனால் பழி சொன்னவர்களோ கருவூரான் நம்மை அவமானப் படுத்திவிட்டான் என்ற ஆத்திரத்தில் இனி வேறு வழியில்லை, இனி கருவூரானைக் கொலை செய்து விடவேண்டியதுதான் என தீர்மானித்தார்கள்.

ஒரு நாள்.....கருவூரார் குளிப்பதற்காக ஆற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.  அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி, இதுதான் சரியான தருனம் என நினைத்து அவரைக் கொல்ல நெருங்கினார்கள்.

அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட கருவூரார் 'சரி! இவர்கள் பாவத்தை இவர்களே அனுபவிக்கட்டும். இனிமேல் இந்த உலகம் நமக்கு வேண்டாம்' என்று அவர்களுக்கு பயந்து ஓடுவதுபோல் திரு ஆனிலையப்பர் கோவிலுக்குள் ஓடினார்.

இது கோயிலாயிற்றே....இதற்குள் கொலை பாதகம் செய்யலாமா?.... என்கிற நினைப்புத் துளி கூட இல்லாமல் அந்தக் கொலை பாதகர்கள் இன்னும் வேகத்தோடு கருவூராரைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தார்கள்.

கோயிலுக்குள் ஓடிய கருவூரார், *"ஆனிலையப்பா!*  *பசுபதீஸ்வரா?* எனக் கூவியழைத்து அங்கிருந்த சிவலிங்கத் திருமேனியைத் தழுவினார். 

எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டார்.

கருவூராரைத் துரத்தி வந்தவர்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்துப் போய் நின்று விட்டனர். இந்த தெய்வீகக் காட்சியைக் கண்ட, கொலை செய்யவந்த பாதகர்கள் மனம் திருந்தி தங்கள் தவறை உணர்ந்தனர்.

அதற்குப் பரிகாரமாகக் கோயிலில் கருவூராருக்கு ஒரு தனி சன்னதி அமைத்து அதில் கருவூராரின் வடிவத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர்.

எல்லாம் உணர்ந்த மிகப் பெரிய ஞானியாகத் திகழ்ந்ததால் கருவூரார் மகா சித்தர் என்று அழைக்கப்படுகிறார்.

இவரது நூல்கள்; 
கருவூரார் வைத்தியம் 500,
கருவூரார் வாத காவியம் 700,
கருவூரார் யோக ஞானம் 500,
கருவூரார் பல திரட்டு 300,
கருவூரார் குரு நூல் சூத்திரம் 105,
கருவூரார் பூரண ஞானம் 100,
கருவூரார் மெய்ச் சுருக்கம் 52,
கருவூரார் சிவ ஞான போதம் 42,
கருவூரார் கற்ப விதி 39,
கருவூரார் முப்பு சூத்திரம் 32,
கருவூரார் அஷ்டமா சித்து (மாந்திரகம்) கருவூரார் பூஜா விதி 30.

கருவூரார் சித்தர் வேறு, கருவூரார் வேறு என்று இந்தச் சித்தர்கள் குறித்து ஓர் ஆராய்ச்சிக் கருத்து ஒன்று நிலவி வருகிறது.

கருவூர் தேவர் இயற்றிய திருவிசைப்பா, பக்திப் பெருக்கால் விளைந்த அற்புதப் பாடல்களைக் கொண்டது. 

கருவூர் சித்தரின் பாடல்களோ எளிய சந்த நடையைக் கொண்டது.

கருவூரார் கன்னார வகுப்பைச் சேர்ந்தவர் (பஞ்சலோகச் சிலைகளைச் செப்பம் செய்யும் தொழில் புரியும் குலம்) என அகத்தியர் தமது பன்னிரெண்டாயிரம் என்னும் பெரு நூல் காவியத்துள் கூறுகிறார்.

கருவூர் தேவரோ அந்தண வகுப்பைச் சேர்ந்தவர் என்று திருவிசைப்பா கூறுகிறது. எனவே இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்க முடியாதென ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

*அற்ப மென்ற தேகமது வாழ்க்கை தன்னை*

*அக் கணமே தான் வெறுத்து மதியம் பூண்டு*

*விற்பனன் போற் சொற் சொரூப மிக வுண்டாகி*

*விண்ணுலகில் கருவூரார் சித்தானாரே"*

--(அகத்திய பன்னிரெண்டாயிரம் 454.)

*இத்துடன் கருவூரார் சித்தர் தொடர் மகிழ்ந்து நிறைந்தது.*

No comments:

Post a Comment