Wednesday, March 29, 2017

Durga sooktam & its meaning

Courtesy: ramanan50.tumblr.com/post/.../த-ர-க-க-ஸ-க-தம-அர-த-தம

துர்கா சூக்தம் - தமிழ் விளக்கம்...

ஜாத வேதஸே -அனைத்தையும் அறிபவரான அக்னியே !

ஸோமம் -சோமத்தை ,

ஸுனவாம -பிழிந்து உமக்கு அளிக்கிறோம் .

வேத :அக்னி தேவன் ,

அராதீயதே -தடைகளை , இடர்ப்பாடுகளை ,

நிதஹாதி -சுட்டு எரிக்கட்டும் .

நாவா -படகு ,

ஸிந்தும் இவ -கடலைக் கடக்க உதவுவது போல் ,

ந -எங்களை ,

துர்காணி -துன்பங்களில் இருந்து,

பர்ஷததி -காக்கட்டும் .

துரிதா -நாம் செய்யும் தவறுகளில் இருந்து நம்மை ,

அக்னி -அக்னி ,

அதி -நம்மைக் காக்கட்டும் .

அக்னியே !

சோமத்தைப் பிழிந்து அதன் ரசத்தை உனக்கு அளிக்கிறோம் .

வாழ்வில் வரும் இடையூறுகளை அக்னி அழிக்கட்டும் .

படகின் வழியே கடலைக் கடத்துவித்தல் போல், அக்னி தேவன் , எங்களை எல்லாத் துன்பங்களிலும்

தவறுகளிலும் இருந்து காக்கட்டும் .

2.தாமக்னிவ'ர்ணாம் தப'ஸா ஜ்வலம்தீம் வை'ரோசனீம் க'ர்மபலேஷுஜுஷ்டா"ம் |
துர்காம் தேவீக்‍ம் ஶர'ணமஹம் ப்ரப'த்யே ஸுதர'ஸி தரஸே' னமஃ' ||

அக்னி வர்ணாம் -செஞ்சுடர் வண்ணம் கொண்டவளும் ,

தபஸா -மேன்மையான தவத்தினால் ,

ஜ்வலந்தீம் -ஒளிர்பவளும் ,

வைரோசனீம் -ஈசருக்கு உரியவளும் ,

கர்ம பலேஷு -செய்யப்படும் செயல்களுக்கு மற்றும் அதன் பலன்களுக்கு ,

ஜுஷ்டாம் -ஆற்றலாக இருப்பவளும் ,

(ஆகிய ),

துர்காம் தேவீம் -துர்கா தேவியை ,

சரணம் ப்ரபத்யே -நான் சரணடைகிறேன் .

தரஸே -கரை சேர்ப்பவளே !

ஸுதரஸி -கரை சேர்ப்பாய் ,

நம :-நமஸ்காரம் .

செஞ்சுடர் வண்ணம் கொண்டவளும் ,மேலான தவத்தினால் ஒளிர்பவளும் ,இறைவனுக்கு உரியவளும்

,செயல்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் இவற்றின் ஆற்றலாக இருப்பவளும் ஆனா துர்கா தேவியை ,

நான் சரணடைகிறேன் .

துன்பக் கடலில் இருந்து கரி சேர்ப்பவளே !

எங்களைக் காப்பாய் .

உனக்கு நமஸ்காரம் .

3.அக்னே த்வம் பா'ரயா னவ்யோ' அஸ்மாம்த்-ஸ்வஸ்திபிரதி' துர்காணிவிஶ்வா" |
பூஶ்ச' ப்றுத்வீ ப'ஹுலா ன' உர்வீ பவா' தோகாய தன'யாய ஶம்யோஃ ||

அக்னே -அக்னியே !

த்வம் -நீவிர் ,

நவ்ய ;-போற்றுதலுக்கு உரியவர் ,

ஸ்வஸ்திபி -மகிழ்ச்சியான பாதைகளின் மூலம், வழியாக ,

அஸ்மான் -எங்களை ,

விஸ்வா -அனைத்து ,

துர்காணி -இன்னல்களுக்கும்

அதிபராய -அப்பால் எடுத்துச் செல்வாய் ..

ந -எங்கள் ,

பூ : -ஊரும் ,

ப்ருத்வீ ,-நாடும் ,

உர்வீ ச -உலகும் ,

பஹுலா -செழித்து ஓங்கட்டும் .

தோகாய -பிள்ளைகளுக்கும் ,

சம்யோ :இன்பம் தருபவனாக ,

பவா -இருப்பாய் .
அக்னியே !

நீ போற்றுதலுக்கு உரியவன் .

இன்பம் நிறைந்த பாதகளின் வழியே எங்களை எல்லாத் துன்பங்களுக்கும் அப்பால் எடுத்துச் செல்வாய் .

எங்கள் ஊரும் நாடும் உலகும் செழிக்கச் செய்வாய் .

எங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் மகிழ்வைத் தருவாய் .

4.விஶ்வா'னி னோ துர்கஹா' ஜாதவேதஃ ஸிம்துன்ன னாவா து'ரிதா‌உதி'பர்-ஷி |
அக்னே' அத்ரிவன்மன'ஸா க்றுணானோ"‌உஸ்மாகம்' போத்யவிதாதனூனா"ம் ||

ஜாத வேத: -அக்னியே !

விஸ்வானி -அணைத்து ,

துர்கஹா -துன்பங்களையும் அழிப்பவனே ,
ஸிந்தும் நாவா -கடலில் படகின் மூலம் ,

துரிதா -இன்னல்களிருந்து ,
ந -எங்களை ,

அதி பர்ஷி -காப்பாய் .
அக்னே -அக்னே !

அஸ்மாகம்-எங்கள் ,

தனுனாம் -உடல்களை ,

அவிதா -காப்பவனே !

மனஸா -மனத்தால் ,

க்ருணான -மீண்டும் ,மீண்டும் சொல்கின்ற ,

அத்ரிவத் -அத்ரி முனிவரைப் போல் ,

போதி -மனதில் கொள்வாய் .

அக்னியே !

எல்லாத் துன்பங்களிலிருந்தும் எங்களைக் காப்பவனே !

கடலில் கஷ்டப்படவடுவனைப் படகின் மூலம் காப்பது போல் ,இன்னல்களிருந்து எங்களைக் காப்பாய் .

எங்கள் உடல்களைக் காப்பவனே !

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனத்தால் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்ற

அத்ரி முனிவரைப் போல் எங்கள் நலனை மனதில் கொள்வாய் .

5. ப்றுதனா ஜிதக்ம் ஸஹ'மானமுக்ரமக்னிக்‍ம் ஹு'வேம பரமாத்-ஸதஸ்தா"த் |
ஸ னஃ' பர்-ஷததி' துர்காணி விஶ்வா க்ஷாம'த்தேவோ அதி' துரிதா‌உத்யக்னிஃ

ப்ருதனாஜிதகும் -எதிரிகளின் படையை அழிப்பவனும் ,

ஸகமானம் -தாக்குபவனும் ,

உகரம்-உக்ரமானவனுமான ,

அக்னிம் -அக்னி தேவனை ,

பரமத் சதஸ்யாத் -மன்றத்தின் உயர்ந்த இடத்தில் இருந்து ,

ஹுவேம -அழைக்கிறோம் .

ஸ -அந்த ,

அக்னி -அக்னி ,

தேவ -தேவன் ,

ந -எங்களை ,

விஸ்வா -அணைத்து ,

துர்காணி -துன்பங்களுக்கும் ,

ஷாமத் -அழியக் கூடியவற்றிற்கும்,

துரிதாத் -தவறுகளுக்கும் ,

அதி -அப்பால் ,

பர்ஷாத் -காக்கட்டும் .
எதிரிகளின் படைகளைத் தாக்கி அழிப்பவனும் ,உக்ரமானவனும் ஆகிய அக்னி தேவனை உயர்ந்த

இடத்திலிருந்து இங்கே எழுந்து அருளுமாறு வேண்டுகிறோம் .

அவன் , எங்களை அனைத்துத் துன்பங்களுக்கும் ,மற்றும் அழியக் கூடியவற்றிர்க்கும் தவறுகளுக்கும்

அப்பால் எடுத்துச் செல்லட்டும் .

எங்களைக் காக்கட்டும் .

6.ப்ரத்னோஷி' கமீட்யோ' அத்வரேஷு' ஸனாச்ச ஹோதா னவ்ய'ஶ்ச ஸத்ஸி' |
ஸ்வாம்சா"‌உக்னே தனுவம்' பிப்ரய'ஸ்வாஸ்மப்யம்' ச ஸௌப'கமாய'ஜஸ்வ II
அக்னே -அக்னியே !

அத்வரேஷு வேள்விகளில் ,

ஈட்ய – புகழப்படுகின்ற ,

கம் -ஆனந்தத்தை ,

ப்ரத்னோஷி -அதிகரிக்கிறாய் .

ஹோதா -வேள்வி செய்பவர்களுள் ,

ஸனாத் ச -தொன்மையானதும் ,

நவ்ய ச -புதியனாகவும் ,

ஸத்ஸி -இருக்கிறாய்.

ஸ்வாம்- உனது ,

தனுவம் ச -வடிவாக இருக்கின்ற ,

அஸ்மப்யம் -எங்களுக்கு ,

பிப்ரஸ்ய -மகிழ்ச்சியைத் தருவாய் .

ச -மேலும் ,

ஸௌபகம் -நன்மையை ,

அயுஜஸ்ய -எல்லாப் புறங்களில் இருந்தும் கொண்டு வருவாய் .

அக்னியே !

வேள்விகளில் புகழ்ச்சியால் சிறப்பிடப் படுகின்ற நீ எங்களின் சந்தோஷத்தை அதிகரிக்கின்றாய் .

வேள்வி ஆற்றுபவர்களுள் நீ தொன்மையானவனும் மற்றும் புத்யவனும் ஆக விளங்குகிறாய் .

உனது வடிவவி இருக்கின்ற எங்களுக்கு இன்பத்தைத் தருவாய் .

அனைத்துப் புறங்களிலிருந்தும் எங்களுக்கு நன்மையைக் கொண்டு வருவாய் .

7.கோபிர்ஜுஷ்ட'மயுஜோ னிஷி'க்தம் தவேம்"த்ர விஷ்ணோரனுஸம்ச'ரேம |
னாக'ஸ்ய ப்றுஷ்டமபி ஸம்வஸா'னோ வைஷ்ண'வீம் லோக இஹ மா'தயம்தாம் ||

இந்த்ர -தேவர்களின் தலைவனே !

அயுஜ – பாவக் கலப்பில்லாதவன் ,

விஷ்ணோ -எங்கும் நிறைந்தவன் ,

கோபி :-பசுக்களுடன் ,

ஜுஷ்டம்-மேலான ஆனந்தம் ,

நிஷிக்தம் -மிகுதியாகப் பெற ,

தவ -உன்னை ,

அனு சஞ்சரேம-பின் தொடர்கிறோம் .

பிருஷ்டம் அபி -உயர்ந்த ,

நாகஸ்ய 'தேவர்கள் உலகில் ,

ஸம்வஸான -உறைகின்ற ,

வைஷ்ணவீம் -விஷ்ணு உருவான தேவியிடம் ,

இஹ -இந்த ,

லோகே -உலகம் ,

மாதயந்தாம் -இன்பத்தைத் தரட்டும் .

இறையே !

நீ பாவக் கலப்பிலாதவன் .
எங்கும் நிறைந்தவன் .

ஏராளமான பசுக்களுடன் நிறைந்த செல்வம் பெற்று இன்புறுவதர்க்காக உன்னைத் தொடர்கிறோம் .

விஷ்ணு வடிவினளான தேவியிடம் நான் கொண்ட பக்திக்காக ,உயர்ந்த தேவருலகில் வாழுகின்ற தேவர்கள்

இந்த உலகில் எனக்கு மகிழ்வைத் தரட்டும்.

ஓம் காத்யாயனாய' வித்மஹே' கன்யகுமாரி' தீமஹி | தன்னோ' துர்கிஃ ப்ரசோதயா"த் ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ' ||

காத்யயனாய -காத்யாயனி தேவியை ,

வித்மஹே -அறிவோமாக .

கன்யாகுமாரி . -கன்யா குமாரியை ,

தீ மஹி -த்யானிப்போம் .

தத் துர்கி -அந்த துர்கா தேவி ,

ந -நம்மை ,

ப்ரசோதயாத் -தூண்டட்டும் .
காத்யாயனி தேவியை அறிவோமாக .

அதன் பொருட்டு , அந்த கன்னியாகுமரி தேவியை த்யாநிப்போம் .

அந்த துர்கா தேவி நம்மைத் துண்டுவாளாக .





No comments:

Post a Comment