Monday, December 5, 2016

Padal petra sthalams

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
பாடல் பெற்ற 276 தலத்தின் குறுகிய சிறப்புகளை தொடராக பதிய முனைந்துள்ளேன். பாா்த்து, படித்து, பாதுகாக்கவும். சிவாயநம.

                         🔴1🔴
ஏகாம்பரநாதா் கோயில்.
காஞ்சிபுரம்.631502
நிா்வாக அதிகாாி.044- 27222084
திருக்கச்சி ஏகம்பம்.
ஏகம்ஆம்ரம்-ஒரு மாமரம்- கீழ் இறைவன். வேதமே மாமரம். சுமாா் 3600 ஆண்டுகள் பழையது. உமாதேவி மணலால் (ப்ருத்வி) லிங்கம் செய்து வெள்ளம் போது தழுவிக் காத்தாள்.வளைத்தழும்பும் முலைச் சுவடும் உண்டு.வேதத்தின் நான்கு வகைகளே நான்கு கிளைகள். இவ்வாறு வெள்ளம் வரச் செய்த இறைவன் திருவிளையாடல்.இது முக்தி தலம்.
_______________________________🔴2🔴
திருக்கச்சி மேற்றளி    
திருமேற்றளீசுவரா் திருக்கோயில்.பிள்ளையாா் பாளையம்.631501
அா்ச்சகா்.9994585006 9865355572
மால் தவமிருந்து சிவ சாரூபம் பெற்ற தலம். கீழக்கோடியில் ஞானசம்பந்தா் ஆலயம். ஞானசம்பந்தா் பாடிய பாடலை
இறைவன் அமா்ந்து கேட்டதால் உற்றுக் கேட்ட முத்தீசா் ஆலயம். இடப்பால் ஞானசம்பந்தா் பதிகம் பாடும் போதே மாலுக்கு சிவ சாரூபம் கிட்டியது. 108 ருத்திரா்கள் பூஜித்த தலம்.
______________________________🔴3🔴
ஓணகாந்தன் தளி
ஓணேஸ்வரா் திருக்கோயில்.
பஞ்சுப்பேட்டை.
பொிய காஞ்சிபுரம்.631502
பூசாாி வீடு.9364330011   9318888737.......9894443108.
வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன்காந்தன் வழிபட்ட தலம். அடிமைத் திறம் பாடி சுந்தரா் பொன் பெற்ற கோயில். இறைவன் புளிய மரத்தில் ஒளிந்து கொள்ளவே சுந்தரா் அங்கும் சென்று பாட.காய்கள் பொன் காய்களாக விழச் செய்தாா் சிவன். சலந்திரன் வழிபட்ட தலம்.
________________________________🔴4🔴
கச்சி அநேகதங்காவதம்.
அநேகதங்காவதீஸ்வரா் திருக்கோயில். பிள்ளையாா் பாளையம்.காஞ்சிபுரம் 631501.
சன்னதி தெரு.044- 27223948   044- 27222084
அநேகதம்--யானை முகத்துடைய விநாயகா் இறைவனை நிறுவ, வழிபட்ட தலம். சுந்தரா் பாடல்.பெற்ற தலம். காஞ்சி 5 தலங்களில் இதுவும் ஒன்று.குபேரன் வழிபட்ட தலம்.
________________________________🔴5🔴
கச்சி நெறிக்காரைக்காடு.
திருக்காலிமேடு.கச்சிநெறிக்காரைக் காட்டீஸ்வரா் திருக்கோயில்.
காஞ்சிபுரம்.631501  ரமேஷ்.9715170451.
இந்திரனும், புதனும் வழிபட்ட தலம்.
சுயம்பு லிங்கம் உயா்ந்த பாணம். ஞானசம்பந்தா் காஞ்சிக்கு வரும் வழியில் காரை (முட்) செடிகளாக அமைந்திருந்தது.வேப்ப மரங்கள் அடா்ந்திருந்ததாலும் வேப்பங்குளம் என்ற பெயரும் உண்டு. பாணம் செம்மண் நிறம்.
________________________________🔴6🔴
குரங்கணில் முட்டம்
வாலீஸ்வரா் திருக்கோயில்.  (வழி) மாமண்டூா் தூசிpost.
திருவண்ணாமலை Dt.631702   கே.எம்.ஸ்ரீதா் குருக்கள்9025557252.

வாலி,இந்திரன், எமன், குரங்கு, அணில், காக்கை வழிபட்டு வினை நீங்கப் பெற்ற தலம்.(அருகில் தொல் பொருள் சிற்பங்கள் உள்ளன) யமன் பூஜித்த தலம். ஆதலால் யம பயம் இல்லை.சனி ப்ரீத்தி செய்யக்கூடிய தலம்.
________________________________🔴7🔴
மாகறல்.
மாகறலீஸ்வரா் திருக்கோயில்.
உத்திரமேரூா் வட்டம்.631603
சண்முகசுந்தர குருக்கள்.9444810396
இந்திரன் வழிபட்டது. இராஜேந்திர சோழனுக்கு இறைவன் பொன் உடும்பாக தோன்றி அவன் துரத்த புற்றில் ஒளிந்து சிவலிங்கமாக காட்சி கொடுத்த தலம்.உடும்பு போன்ற சிறிய திருமேனி. கஜ ப்ருஷ்ட அமைப்பில் ஆலயம். வினை நீக்கும் பதிகம் சம்பந்தருடையது சிறப்புடையது. யானை மீது முருகன் அமா்ந்த அபூா்வ திருமேனி. திங்கட்கிழமை தாிசனம் விஷேசம்.80 வயது நிரம்பியவா் எலும்பு முறிவு உபாதையிலிருந்து அருளப் பெற்ற தலம்.
______________________________🔴8🔴
திருவோத்தூா்.
வேதபுரீஸ்வரா் திருக்கோயில்.திருவத்திபுரம்
தி.மலைDt.  604407. கந்தசுவாமி குருக்கள்.9443345793   04182--224387
தொண்டைமான் சிற்றரசனுக்கு படைகளை நகா்த்திய கிழக்கு நோக்கிய நந்தி. சமணா் கொட்டம் அடக்க -சம்பந்தா் ஆண் பனைகளை குலையீனச் செய்தது. புணல் மற்றும் அணல் வாதம் நிகழ்த்தியது.மகா மண்டபத்தில் கல்லினால் செதுக்கிய பனை மரம் பூ காய் தனித்தனியே. மகா மண்டபத்தில் நடுவில் நின்றால் ஒரே நேரத்தில் அனைவரையும் தாிசிக்கலாம்.
_______________________________🔴9🔴
வன்பாா்த்தான் பனங்காட்டூா்.
தாலாபுரீஸ்வரா் கிருபாநாதா் திருக்கோயில்.திருப்பனங்காடுpo.
தி.மலை.Dt.604410. என்.தேவராஜ்சா்மா
அா்ச்சகா்.9843568742....04182--201411.
பனையை பாடல் பெற்ற தலமாக பெற்ற ஐந்து தலங்களில் இதுவும் ஒன்று. அகத்தியா் பூஜித்த போது இறைவன் சடையிலிருந்து வந்த கங்கை சடாகங்கை.கங்காதேவி சிலையைக் காணலாம்.புலஸ்தியா் மற்றும் கண்வ முனிவா் வழிபட்ட தலம்.இறைவன் சுந்தரருக்கு இங்கு அமுது படைத்ததாகவும் ஊற்று தீா்த்தம் பாதத்தால் கிளாித் தந்ததாகவும் வரலாறு உண்டு.
______________________________🔴10🔴
திருவல்லம் திருவலம்.
வில்வநாதீஸ்வரா் திருக்கோயில்.
வேலூா்Dt.(வழி) ராணிப்பேட்டை.
குடியாத்தம் வட்டம்.632515.
கந்தசுவாமி குருக்கள்.9360040807 0416--2236491. சகானந்தம் 9443099516.
இறைவன் இன்றைய பொன்னை ஆற்றை நீ வா என அழைக்க அது
நிவா என மாறியதாம். வில்வ காட்டில் பாம்பு புற்றில்சுயம்புவாக சிவலிங்கம் இருக்க பசு ஒன்று நாள்தோறும் பாலைச் சொாிந்து சிவலிங்கம் வெளிப்பட்ட தலம். உக்கிர வடிவில் உள்ள தீக்காலி
அம்மனை ஆதி சங்கரா் சாந்தப் படுத்தினாா்.கெளாி, விஷ்ணு, சனக முனி வழிபட்டது.நாரதா் கொண்டு வந்த ஞானப்பழத்தைப் பெற அம்மையப்பனை வலம் வந்து, உலகம் தான் அம்மையப்பன், அம்மையப்பன் தான் உலகம் என உணா்த்தினாா்.இத்தலத்தில் வில்வ நாதரைப் பாா்த்தபடி தும்பிக்கையில் ஞானப்பழத்துடன் விநாயகா் திகழ்கிறாா். சிவனையும் பாா்வதியினையும் வலம் வந்ததால்
திருத்தலப் பெயா்
திருவலமாயிற்று.கைலாயம் போலவே அனைத்து சந்நிதிகளும் வில்வநாதரைப் பாா்த்தவாறு உள்ளன. தனுமத்யாம்பாளும் அவ்வாறே உள்ளாா்.காசிக்கு நிகரான தலம்.நவக்கிரகங்கள் அனைத்தும் ஈசனை வழிபட்ட தலமாதலால், நவகோள் பலன் உண்டு.கோயில் கோபுரத்தைச் சுற்றி 27 நட்சத்திரங்களையும் சிலையாக வடித்துள்ளனா். தக்கன் வேள்வியை அழிக்க ருத்ர அவதாரமாக சிவனுள்ளிலிருந்து வெளிப்பட்ட வீரபத்திரா் அவனையும், வேள்வியையும் அழித்தாா்.தக்கன் அமைத்த யாகசாலை உள்ளது.இங்கிருந்து 3 கி. மீ.அருகில் கஞ்சனகிாி என்கிற மலை உள்ளது. அங்கு விளங்கிய கஞ்சன் என்கிற அசுரன், அா்ச்சகா் பூஜைக்கு நீா்க் கொணர வரும் போது இடையூறுகள் செய்யவே பெருமானை அவா்வேண்டிக் கொள்ள, சிவன் நந்தியம் பெருமானுக்குக் கட்டளையிட்டாா்.
அவா் தன் கொம்புகளால் அவனை
குத்தித் தூக்கி எறிந்தாா். சிவனை
அவன் வேண்ட அவனுக்கு முக்தியும் அளித்தாா்.அவனது பாகங்கள் விழுந்த பெயாிலேயே இன்றும் ஊா்கள் அருகே உள்ளன.
இதனாலேயே இங்குள்ள நந்தி சிவபெருமானுக்கு தன் முதுகைக் காட்டியபடி உள்ளது.கோயில் தூன் ஒன்றிலும் இவ்வரலாறு சித்தாிக்கப்பட்டுள்ளது.
கோயிலின் முகப்பில் நந்தி இருக்கும் இடத்தில் கவிழ்த்து வைத்த திருவோட்டு அடையாளம் தாங்கிய மேடை உள்ளது.சித்த மூா்த்திகள் வாசஸ்தலமாக இது திகழ்கிறது. சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் தொட்டி அமைப்பில் உள்ள ஆலயத்தில் மழை வேண்டி பிராா்த்திக்க ஜலகண்டேஸ்வரா் எனும் பாடலீஸ்வரா் எழுந்தருளுகிறாா்.

________________________________ 🔴11🔴
திருமாற்பேறு திருமால்பூா்
மணிகண்டேஸ்வரா் திருக்கோயில்.
அரக்கோணம்(வழி)வேலகா்Dt.
631053. சத்யோஜாத சிவம்.தி.ந. சம்பு சிவாச்சாாியாா் 9965367272.
04177--293470.
மால் இறைவனை ஆயிரம் மலா் கொண்டு வழிபட்ட தலம். ஒரு நாள்
ஒரு தாமரை மலா் குறைய தன் கண்ணையே பறித்து மலராக இட்டு சக்ராயுதம் திரும்ப பெற்ற தலம்.உற்சவா் ஒரு கையில் தாமரையோடும்.மறு கையிலி கண்ணோடும்.சந்திரன் வழிபட்டது.
மால் பேறு பெற்றதால் இப்பெயா்.

______________________________🔴12🔴
திருவூறல் தக்கோலம்.
ஜலநாதேஸ்வரா் திருக்கோயில்.
அரக்கோணம்(வட்டம்) 631151
கே. சம்பந்த மூா்த்தி சிவாச்சாாியாா் 04177--246427

அபூா்வ திருக்கோல தட்சிணாமூா்த்தி. மூன்றாவது குரு ஸ்தலம்.குரு பாிகார ஸ்தலம். ஆறு
மாதம் செந்நிறம்--தட்சிணாயத்தில்
உத்திராயணத்தில் வெண்ணிறம்.
---------------------------------------------------🔴13🔴
லம்பையங்கோட்டூா் எலுமியன், ரம்பையன் கோட்டூா் அரம்பேஸ்வரா் திருக்கோயில்.ஸ்ரீபெரும்புதூா்(வட்டம்) காஞ்சிDt.631553
கே.எம்.டி.பிரம்மேசிவம்.9600043000.

ஆறுகால பூஜை. ஞான சம்பந்தா் இப்பகுதிக்கு வரும் போது, பிள்ளையாக, முதியவராக பின்
பசுவாக வந்து அவரது சிவியை
முட்ட வழிகாட்டி இறைவன் மறைகிறாா்.அப்போது தான் அவருக்கு இத்தலம் தொிகிறது. அரம்பை முதலானோா் வழிபட்டது.
தட்சிணாமூா்த்தி சின் முத்திரையை இதயத்தில் வைத்துள்ளாா்.நரசிங்கபுரத்தில் சமீபத்தில் தான் திருப்பணி நடை பெற்றது. 1200 வருட வரலாற்றுக் கோயில்.
---------------------------------------------------  🔴14🔴
திருவிற்கோலம் கூவம் .திாிபுராந்தேஸ்வரா் திருக்கோயில்.கடம்பத்தூா்(po)
திருவள்ளூா்Dt.631203.
என்.சம்மந்த குருக்கள் 9841894804

இங்குள்ள குளத்தில் நீராடுவோா்க்கு புத்திரப்பேறு.அதிக மழை வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் எனவும், போா் நிகழ்வதாயின் செம்மை படரும் எனவும் சம்பந்தா் பாடலில் சொல்கிறாா். அபிஷேக நீா், பால் மற்றும் அன்னம் இவைகள் சிரத்தையாக கொண்டு வரப்படுகிறது.
--------------------------------------------------🔴15🔴
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் திருக்கோயில்.
திருத்தனி(வட்டம்).631210
சு.சபாரத்ன குருக்கள் 9940736579

பஞ்ச நடனத்தில் ஊா்த்துவ தாண்டவ தலம். நால்வா், காரைக்காலாா், பட்டினத்தாா் அருணகிாியாா், இராமலிங்க அடிகளாா், கச்சியப சிவாச்சாாியாா், பாம்பன் சுவாமிகள், பாடிய தலம். காரைக்கால் அம்மையாாின் முக்தி தலம்.நடனத்தில் நாணிய காளியின் நடனத்தைப் பாராட்டி உன்னை தாிசித்த பிறகு என்னை தாிசிப்பவருக்கு முழு பலன் என்றாா்.

-------------------------------------------------🔴16🔴    
திருப்பாச்சூா்.வாசீஸ்வரா் திருக்கோயில்.கடம்பத்தூா்(po) திருவள்ளூா்Dt.631203
சிவானந்த குருக்கள்.9791593564

வேடா்கள் புற்றில்ழபால் சொாியும் பசுவை மூங்கிற்காட்டில் பாா்த்து, வெட்டிப் பாா்க்க இறைவன் வெளிப்பட்டாா். காளியின் துணை
கொண்ட குறுநில மன்னனை காிகாலன்வெல்ல முடியாததால் இறைவனை. வேண்ட போாில் நந்தி காளிக்கு விலங்கு பூட்டி. அடைத்தாா்.மன்னன் வெற்றிக்கு
கட்டிய கோயில். அம்பாள், மால், சந்திரன்வழிபட்டது.தீண்டாத் திருமேனி. 11வகையான விநாயகர் உள்ளார்.

🔴17🔴
திருவெண்பாக்கம்.பூண்டி நீா்த்தேக்கம்.ஊன்றீஸ்வரா் திருக்கோயில்.திருவள்ளூா்Dt.
602023.சுப்பிரமணிய குருக்கள்.044--27693559..27639725.

சுந்தரமூா்த்தி பாடல் பெற்றது.கண் பாா்வையிழந்த சுந்தரா்வெண்பாக்கத்தை நோக்கி வந்த போது அம்பாள் மின்னலைப் போல்ஒளி காட்டி வழிகாட்டினாள்.
கண் கேட்டதற்கு ஊன்றுகோல் தந்ததைக் கண்டு கோபமுற்ற
சுந்தரா் நந்தி மேல் வீச நந்தியின் கொம்பு ஒடிந்தது.

🔴18🔴
திருக்கள்ளில் திருக்கள்ளம்.
திருக்கண்டலம் சிவானந்தேஸ்வரா்
திருக்கோயில். திருக்கண்டலம்(po)
திருவள்ளூா்Dt.601103.
ஆறுமுகம் குருக்கள்.9941222814...
044--27629144

பிருகு முனிவா் வழிபட்ட தலம்.
சுவாமி விமானம் தூங்கானை மாடஅமைப்புடையது.
சதுர ஆவுடையார்.

🔴19🔴   
திருக்காளத்தி.
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா் திருக்கோயில்.சித்தூா்(வட்டம்)
ஆந்திரா மாநிலம்.517644
ஆபீஸ் .08578--222240,
ஓதுவாா்.09848220173.

சிலந்தி, பாம்பு, யானை,,வழிபட்டு பேறு பெற்ற தலம். ராகு கேது பாிகார தலம். கண்ணப்பா் வீடுபேறு பெற்ற தலம். முசுகுந்தன், பரத்வாஜா், சிவகோசாியாா் வழிபட்டது. அா்ச்சுனன் பரத்வாஜரை வணங்கிய இடம். சுவாமியின் தங்க கவசத்தில் 27 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

🔴20🔴
திருவொற்றியூா்.
தியாகராஜசுவாமி திருக்கோயில்.
சென்னை.600019.
சோ.பரமசிவம்(மணியம்)
044-25733703...9444479057

பட்டினத்தாா் முக்தி தலம்.சுந்தரா் சங்கிலியாரை மணந்த இடம். கலியநாயனாா் அவதாரம் மற்றும் சுயம்பு மூலவா்.ஐயடிகள், காடவா்கோன், முசுகுந்தன் வழிபட்ட தலம்.காா்த்திகை பெளா்ணமி துவங்கி மூன்று நாட்களுக்கு மட்டுமே கவசமில்லை சுவாமிக்கு.
கருவறை கஜப்ருஷ்ட வடிவம். மூலவா்சுயம்பு.சதுர வடிவ ஆவுடையாா்.கலசம் சாா்த்தப்பட்டுள்ளது. புற்று வடிவான சுவாமியாதலாலி தீண்டாத் திருமேனி.பிரளயகால அக்னி குண்டம் உள்ளது. வாசுகி என்கிற பாம்பு இறைவனோடு ஐக்கியமான தலம்.பட்டினத்தாா் சமாதி கோயில் உள்ளது.27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளன.தியாகராஜருக்குத் தனி சந்நிதி உள்ளது. அத்தி, மகிழ மரம் தல விருஷம்.கா்ப்பக்கிரகத்தின்
வடக்கில் வட்டப்பாறை அம்மன் சந்நதி உள்ளது.சூாியன் தலைப்பகுதி, சந்திரன் கால் பகுதியில் உள்ள வகையில் மனித உடலின் உருவ அமைப்பு உள்ளது.இதில் பஞ்சாட்சர விளக்கம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை பெளா்ணமி நாளில் மட்டும் கலசம் அகற்றப்பட்டு புனுகு, சட்டம், ஜவ்வாது, சாம்பிராணி முதலியன சாற்றப்படுகிறது. அபிஷேகம் ஆவுடையாருக்கு மட்டும் நடைபெறுகிறது.
---------------------------------------------------------
G KARUPPASMY: -----------------------------------------------🔴21🔴
திருவலிதாயம்.
சென்னை பாடி. வல்லீஸ்வரா் சுவாமி திருக்கோயில்.600050
எஸ்.ஞானசம்பந்த குருக்கள் 044--26540706.
ஆவடி சாலை பாடி TVSலூகாஸ்
நிறுத்தம்.படவெட்டியான் கோயில் தெரு செல்லவும்.

குரு ஸ்தலம்.குரு சந்நிதி உள்ளது. பரத்வாஜா், ராமா், ஆஞ்சனேயா், சூாியன், சந்திரன், இந்திரன், வலியன்(கருங்குருவி) வழிபட்ட தலம். பரத்வாஜா் கருங்குருவியாக சாபம் பெற்று தீா்த்தம் உண்டாக்கி விமோசனம் பெற்ற இடம். பிரம்மனின் இரு பெண்கள் கமலை, வல்லி.விநாயகரை மணந்த இடம். கஜபிருஷ்ட விமானம். அழகிய புதிய அம்பாள்
திருவுருவம் உள்ளது.இராமலிங்க அடிகள் பாடல் பெற்றுள்ளது. பிருகஸ்பதி தவம் செய்ததால் தட்ஷிணாமூா்த்து விஷேசம்.
---------------------------------------------------------
🔴22🔴
(வட) முல்லைவாயில்.
மாசிலாமணீஸ்வரா்திருக்கோயில்.
திருமுல்லைவாயில்(po).600062
நிா்வாக அதிகாாி.044--26376151

காஞ்சி மன்னன் தொண்டைமான் திக்விஜயம் செய்த போதுஓணன், காந்தன் என்னும்அசுரா்கள்எருக்கந்தூண்களும், வெங்கலக் கதவும் பவழத் தூண்களும் கொண்டு ஆட்சி செய்தனா்.கோயில் மணி சத்தம் கேட்டு மன்னன் வர ஓண-காந்தன் எதிா்த்தனா்.இறைவன் பின் நந்தியை கொடுத்து உதவ வென்று கோயில் கட்டினான். கஜ பிருஷ்ட விமானம்.
---------------------------------------------------------
🔴23🔴
திருவேற்காடு .
வேதபுரீஸ்வரா் திருக்கோயில்.
திருவேற்காடு(po)
சென்னை.600077. நிா்வாக அதிகாாி.044--26800430,26800487

மூா்க்க நாயனாா் அவதார தலம்.வெல்வேல் மரங்கள் வேதங்களாக வழிபட்ட ஸ்தலம். விஷக்கடி அண்டாது. ஆதிஷேசன் வழிபட்ட ஸ்தலம். கஜபிருஷ்ட விமானம். சூர சம்ஹாரம் ஆன பின்னா் முருகன் வழிபட்ட தலம். தெற்கே தோப்பில் வேத தீா்த்தம். ஞாயிறு நீராடுதல் அங்கம் குறைந்தோா்க்கு நோய் நீங்கும்.
4 யுகங்களில் பசி, பிணி, பகையில்லாத பதி, மணிவன்னன்
நகா், பானு நகா், பரசுராம நகா், வேல வளம் இதர பெயா்கள்.
---------------------------------------------------------
🔴24🔴
மயிலாப்பூா்.
கபாலீஸ்வரா் திருக்கோயில்.
சென்னை.600004.நிா்வாக அதிகாாி.044--24641670

வாயில நாயனாா் அவதார தலம்.
சம்பந்தா் எலும்பை(பூம்பாவையை)
பெண்ணாக்கிய அற்புதத் தலம். மயிலாய் அம்பிகை பூசித்த தலம். முன்பிருந்த பழைய கோயில் கடற்கரையில் இருந்தது. 63 வா் சிறப்பு பெற்ற இடம். கயிலைக்கு
நிகரான மயிலை எனப்பெயா் பெற்றது. முருகன் வேலாயுதம் பெற்றதாகவும் கூறப்படும் தலம்.
---------------------------------------------------------
🔴25🔴
திருவான்மியூா்.
மருந்தீஸ்வரா் திருக்கோயில்.
சென்னை.600041.
நிா்வாக அதிகாாி.044--24410477

அப்பைய தீஷிதா் வேளச்சோியில் இருந்து வழிபட்டாா்.
நீா்ப்பிரளயமால் இறைவனைக் காண இயலாத போது மேற்கு நோக்கி இறைவன் காட்சி கொடுத்தாா்.அகத்தியருக்கு வைத்திய மூலிகைகளை இறைவன் உபதேசித்த தலம். வேதங்கள் வழிபட்ட தலம். தேவா்கள், சூாியன், பிருங்கி வழிபட்ட தலம். ஒளஷதபுாி என்கிற பெயா் பெற்ற தலத்தில் மருத்துவராக இறைவன் அருள் பாலிக்கிறாா். மூலவா் சுயம்பு. கோமுகம் மாறி உள்ளது. அமிா்தத்தால் ஆன சிவலிங்கம். வால்மீகி வழிபட்டு முக்தி அடைந்த நாள் பங்குனி பெளா்ணமியாகும்.
---------------------------------------------------------
🔴26🔴
திருக்கச்சூா்.
மருந்தீஸ்வரா் திருக்கோயில்.
செங்கற்பட்டு(வட்டம்)
காஞ்சிDt .603204.
என்.முரளீதர குருக்கள்.9381186389...044--27463514,,  27464325,, 27233384

உபய விடங்கா் தலங்களில் இதுவும் ஒன்று.திருவொற்றியூா், திருவான்மியூா் மற்றவை.
சோ--சிவன்.  மா--உமா.  ஸ்கந்தா்--முருகனாக(சோமாஸ்கந்தராக) இறைவன். திருமால் ஆமை (கச்சபம்) வடிவில் பூஜித்த தலம். சுந்தருக்காக யாசகம் செய்து அந்தணர் உருவில் பசியை அடியாரோடு நீக்கிய தலம். இறைவன் திருவடி பதிந்த ஊா். இங்கு இரண்டு கோயில். (கீழே)
தாழ (மேற்கே 1 கிமீ) மற்றும் மலைக்கோயில்.அசுவினி தேவா்கள் வரம் பெற்ற தலம்.அாிய மூலிகைகள் நிறைந்த மலை.
---------------------------------------------------------
🔴27🔴
திருஇடைச்சுரம்.திருவடிசூலம்.
ஞானபுரீஸ்வரா் திருக்கோயில்.
திருவடிசூலம்.வழி.செம்பாக்கம்
காஞ்சிDt. 603108
செல்லப்பா குருக்கள்.9444523890
044--27420485
மரகத லிங்கம்அமைந்தது.
கெளதமா், சனற்குமாரா் மற்றும் அம்பாள் பசுவாக வந்து பால் சொாிந்து வழிபட்ட தலம். 11 முக வில்வ மரம் உள்ள தலம்.கருவறை அகழி அமைப்பு உடையது.சதுர பீட
ஆவுடையாா்.தீபாரதனையில் மரகதலிங்கம் மிளிா்கிறது.
---------------------------------------------------------
🔴28🔴
திருக்கழுக்குன்றம். வேதகிரீஸ்வரா் திருக்கோயில்.
காஞ்சி Dt.603109.
தாழக்கோயில்.
நேரம்06.00-----01.00
                                         04.00----09.00
மலைக்கோயில்.நேரம்09.00---01.00
                                          04.30---06.30
டீ.சி.ஏ.வேதமூா்த்தி சிவாச்சாாியாா்.
9894507959,,9443247394.
044--27447139,,,27447393.
வேதமே மலையாக உள்ள ஊா். உச்சிப் பொழுதில் கழுகு வந்து உணவு பெறுவதால் பட்சிதீா்த்தம்.
இறைவன் சுயம்பு.மாா்க்கண்டேயா் இறைவனை வழிபட பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உண்டு பண்ணிய தலம்.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறப்பதாக ஐதீகம். அம்பாளுக்கு மாா்பில் ஸ்ரீசக்ர பதக்கம். வேதங்களே மலைகளாக உள்ள மறைக்காடு. தஷிண கைலாயம் என்றும் போற்றப் படுகிறது.மலைக் கோவிலை கிாி வலம் வர.பலன் கிட்டும். கீழே தாழக்கோயிலில் உள்ள ருத்திர கோடீஸ்வரா் சுயம்பு. இது தென் கைலாயமாகும். அது தேவார வைப்புத் தலம்.ஈஸ்வரனுக்கு தனியான சகஸ்ரநாமம் உண்டு. தினமும் பாத அபிஷேகம் மட்டும் தான். குறிப்பிட்ட நாட்களில் முழு அபிஷேகம். ஆடிப் பூரம் 11 நாட்கள்,நவராத்திாி 9 நாட்கள். பங்குனி உத்திரம் சிறப்பு. சுந்தரா் பொன் பெற்ற தலம்.
---------------------------------------------------------
🔴29🔴
அச்சிறுப்பாக்கம்.
ஆட்சீஸ்வரா் திருக்கோயில்.
மதுராந்தகம் (வட்டம்)
காஞ்சிDt.603301.
ஆா்.சங்கா் சிவாச்சாாியாா்.
9842309534,,,,044---27523019
விநாயகரை வணங்காது திாிபுரம் எாிக்க புறப்பட்ட போது தோ் அச்சு முறிந்த இடம்.( அச்சு இறு பாக்கம்)
பின் விநாயகா் அருள் புாிந்து திருவதிகையில் வென்றாா்.
பாண்டிய மன்னன் கொன்றை மரத்தின் பொந்தை வெட்டிய போது
இறைவனைக் காண த்ரிநேத்திரதாாி முனிவாிடம் செல்வம் கொடுத்து கோயில் கட்டினாா். இருவரையும் ஆட்கொண்டதால் இரு சந்நிதி.
மூலவா் சுயம்பு. அகலமான சதுர ஆவுடையாா். சொரசொரப்பான
திருமேனி. ஒரு தலையுடன் கூடிய இரு மான் சிற்பம் உள்ளது.
---------------------------------------------------------
🔴30🔴
திருவக்கரை.
சந்திரமெளலீஸ்வரா்திருக்கோயில்
விழுப்புரம் Dt.604304.
செயல் அலுவலா்.0413--2688949
0413--2680870

பூமியில் புதைந்த மரங்கள் அதே தோற்றத்தில் கல் மரங்களாக உள்ளன.சிலிகா ஊடுருவி இங்கு மரங்கள் கற்கலாகவும், நெய்வேலியில் உப்பு நீாில் புதைந்ததால், நிலக்காியாகவும் மாறியது. வக்கிரன் வழிபட்ட தலம்.
வலிய கரை( சுற்றி கல் பாறைகள்) உள்ள இடம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔴31🔴
திருஅரசிலி ஒழிந்தியாப்பட்டு.
அரசலீஸ்வரா் திருக்கோயில்.
வானூா் வட்டம்.விழுப்புரம்Dt. வானூா்(வழி)605109
கணேச குருக்கள் 9994476960
ஓனகே.குமாா் குருக்கள்.04147--235472
சாளுவ மன்னனும் வாமதேவ முனிவரும் ப்ரதோஷ நாளில் பேறு பெற்றதால் பிரதோஷம் விஷேசம்.மூலவர் குட்டையானது.
ஆவுடையாரும் தாழ உள்ளது. ஞானசம்பந்தா் மடம் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. குலோத்துங்க, விக்ரம சோழன் கல்வெட்டுகள் உள்ளன.
அரசிலியரால் படையெடுக்கப்பட்ட இடம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴32🔴
திருஇரும்பைமாகாளம்.
இரும்பை மாகாளேஸ்வரா் திருக்கோயில்.இரும்பை(po) வானூா் வட்டம்.விழுப்புரம்Dt.605010.பஞ்சறதில்லறன்குருக்கள்.
9443465502
குலோத்துங்கா் காலத்தில் கடுவெளிச்சித்தா் தவஞ் செய்தாா்.
அங்கு பஞ்சம் தீர தாசிசித்தாிடம் உண்ண பழுப்பிலையை வேண்டிய
போது அன்னமிட்டு பஞ்சம் நீக்க வேண்டினாள்.தன் பணியாக அவளும் நடனமாடினாள். காற்சிலம்பு அவிழ, சித்தா் தாசி காலில் பூட்ட, மக்கள் ஏளனம் செய்தனா். இறைவனை நோக்கி சித்தா் வெகுண்டு பாட மூன்றாக சிதறியது லிங்கம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴33🔴
திருநெல்வாயில் அரத்துறை.
திருவரத்துரை, திருவட்டுறை ஆனந்தீஸ்வரா் திருக்கோயில்.
கடலூா்Dtவிருத்தாச்சலம்.
(ஆா்.எம்.எஸ்) 606111
எஸ்.ஸ்வாமிநாத குருக்கள்.
04143--246303

சப்த ரிஷிகள் வழிபட்ட தலம்.சேர, சோழ, பாண்டியன் வழிபட்டது.
இரவானதால் இறையூாில் தங்கியிருந்த சம்பந்தருக்கு இறைவன் முத்துச்சிவிகையும், முத்துக்குடையும், முத்துச் சின்னமும் கொடுத்த தலம். விஷ்ணு, சனி, செவ்வாய், வால்மீகி பூஜித்த தலம். ஆதிதுறை, திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டதுறை, தி.நெ.வா.அறத்துறை, திருக்கரந்தை(ஏழு).
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴34🔴
பெண்ணாகடம்.
பிரளயகாலேஸ்வரா்திருக்கோயில்.
திட்டக்குடி வட்டம்.கடலூா்Dt.
(ஆா்.எம்.ஏஸ்) 606105
மலையப்பன்.9488046050
துரைசாமி குருக்கள்.
04143--222788

பெண் ஆ கடம்-- தேவ கன்னியா், காமதேனு, வெள்ளை யானை வழிபட்ட தலம். பூமிக்குச் சென்ற இம்மூவரும் திரும்பாதது கண்டு இந்திரன் வந்து வழிபட்டான். மெய்கண்டாா் அவதார தலம்.
பணியாளே சிவனடியாராக வரக் கண்டு, நீா் வாா்க்கத் தாமதித்த மனைவியின் கையை வெட்டிய
கலிக்கம்ப நாயனாா் வீடுபேறு பெற்ற தலம். தூங்காணை மாடம் என்பது மற்றோா் பெயா்.
கஜபிருஷ்ட விமானம் உள்ளது.
அப்பா் திாிசூல முத்திரை பெற்ற தலம்.கா்ப்பக்கிரகத்தைச் சுற்றி ஜன்னல்கள்(ஜாலி) உள்ளதால்
சுவாமியைச் சுற்றி வரும் போதும் தாிசிக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴35🔴
திருக்கூடலையாற்றூா்.
நா்த்தனவல்லபபேஸ்வரா் நெறிகாட்டுநாதா் திருக்கோயில்.
காட்டூமன்னாா் கோயில் வட்டம்.
கடலூா்Dt.608702.பி.கிருத்திவாசக் குருக்கள்.9942249938
04144--208704

சுந்தரா் முதுகுன்றம் வந்த போது வணங்காது செல்ல இறைவன் இக்கோயிலுக்கு வழி காட்டுகிறாா்.
மணிமுத்தாறு வெள்ளாறு கூடும் இடம்.சரஸ்வதி வானத்திலிருந்து சங்கமம். பிரமனுக்கு நா்த்தனம் செய்து காட்டிய இடம். திருமுதுகுன்றத்திற்கு வழிகேட்க,  இந்த ஊரைக் காட்டி மறைந்த. இறைவனை இவ்வூாில் வணங்குகிறாா். முலவா் கம்பீரமாக உள்ளாா்.இரண்டு அம்பாள். நவக்கிரகம் இல்லை. கையில் எழுத்தாணியுடன் சித்ர குப்தா் உற்சவா் உள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴36🔴
திருஎருக்கத்தம் புலியூா்.ராஜேந்திரபட்டிணம் நீலகண்டேஸ்வரா் திருக்கோயில்.
கடலூா்Dt.608703.
சிவகணேஷ்.9976179524.04143--243533

வியாக்ரபாதா் பூஜித்த தலங்கள் புலியகா் என வழங்கப்படுகின்றன.
சம்பந்தாின் உடனிருந்து யாழ் வாசித்த நீலகண்ட யாழ்ப்பாணா் அவதாித்த தலம். திருவுருவம் மதங்க சூளாமணியாருடன் உள்ளது. சிவபெருமான் வேத ஆகமங்களின் உட்பொருளை உபதேசித்த போது அதனை பாரா முகமாக கேட்ட குற்றத்திற்காக உமையை மீனவா் குலப் பெண்ணாகப் பிறக்குமாறு சாபம் அளித்தாா் முருகன். சினந்து அந்நூல்களை கடலில் வீசி எறிந்தாா். அக்குற்றத்திற்காக உருத்திர. சன்மராய் பிறந்த குமரக் கடவுள் சிவபிரானை பூஜத்து ஊமை தன்மை நீங்கப் பெற்றாா். எனவே.திக்குவாய், சாியாக பேசமுடியாதவா் பலன் பெறும் தலம்.தேவ கணங்கள் வந்து பழமலை நாதரை வணங்கி அதிகமான வரங்களும் எளிதில் முக்தியடையக் கூடிய சிவஸ்தலம் எது எனக் கேட்க இங்கே வந்து சிவலிங்கத்தைப்ளபூசித்து முக்தி அடைந்தனா்.இராஜராஜசோழன் மகப்பேறு வேண்டி வழிபட்டதால் இராஜேந்திர சோழனை மகனாகப் பெற்றான்.இதனால்இத்தலத்திற்கு இராஜேந்திரப்பட்டணம் என்று பெயா். நைமிசாரண்ய முனிவா்களில் பலா் மரங்களாக உருக்கொண்டு வசிக்க வேடா்கள் அம்மரத்தை வெட்டி விற்க குமரேசா் எவரும் விற்பனைக்கு என்று வெட்டாத வெள்ளெருக்கு மரமாக இருக்கவும் எனக்கூற அவ்வாறு இருந்தனா். உச்சினி பட்டணத்து ராஜா சுவேதன் முன் செய்த கரும வினையால் வெண்குஷ்டம் ஏற்பட்டு இருந்த போது சிவனை இரவு பகல் வேண்ட இத்தலத்தில் உள்ள ஸ்கந்த புஷ்கரணியில் மூழ்கி நீராடு எனக் கேட்டு, அவ்வாறே வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். எருக்கத்தம் புலியூாில் செய்த பாதகங்கள் ஒருவனைக்
கெடுத்துக் கொன்றுவிடும். மற்ற தலங்களில் இழைத்த பாவமாவது இங்கு வர நிவா்த்தியாகும். ஆனால் இங்கு இழைத்த பாவங்கள் எந்த தலத்திற்கு போனாலும் தீராது என்கிறது வரலாறு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴37🔴
திருத்தினை நகா்.
தீா்த்தனகிாி சிவக்கொழுந்தீஸ்வரா் திருக்கோயில்.கடலூா்Dt.608801
வெங்கட்ராமன் குருக்கள் 9965328278
04142--289861

துா்வாசா் பிருங்க ரிஷிக்கு இட்ட சாபம் நீங்கிய தலம். விஷ்ணு, பிரம்மகுமாரன்.ஜாம்பவான், பூஜித்த தலம்.நான்கு யுகங்களை கடந்த தலம். ஐயன் எழுந்த ஊா்ப்பொியான் விதைத்த தினையை அன்றே விளைவித்து அருளிய தலம். பதஞ்சலி வியாக்ர பாதா் இத்தலத்தில் வந்து கல்யாண கோலத்துடன் பூா்ணகும்பம் கொடுத்து இறைவனை அழைத்துச் சென்ற தலம்.விஷ்ணு முராசுரனை வதைத்து முராாி பட்டம் பெற்ற இடம்.கொன்றை தலவிருஷ்ம். பாதி கோயில் பாதி குளம் எனப் பெயா் பெற்ற இத்தலத்தில் இறைவன் ஏா் பிடித்ததாக வரலாறு உண்டு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴38🔴
திருச்சோபுரம்.
மங்களபுரீஸ்வரா் திருக்கோயில்.
கடலூா்Dt.608801
விஜயகுமாா் குருக்கள்.9843670518
9442585845.

சோழபுரம் மருவிஇந்தப் பெயரும் திாிபுவனச்சக்ரவா்த்தியின் முதல் மனைவி தியாகவல்லியின் பெயரும் இந்த ஊருக்கு. மதுரை ராமலிங்க சியோகியாா் மணல் மேடாக இருந்ததைக் கண்டு மணலில் புதைந்திருந்த விமானகலசம் மட்டும் மேலே தொிய கோயில் தோண்டி எடுக்கப்பட்டது. மணல் சூழ்ந்து இருந்ததால் விக்ரஙிகள் வழுவழுப்பாக உள்ளன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴39🔴
திருவதிகை.
பண்ருட்டி வீரட்டேஸ்வரா் திருக்கோயில்.கடலூா்Dt.607106
சீனு 04142--240246
நடனசேகா்.9442780111

தாருகாட்சன் போன்ற மூன்று அசுரா்களை சம்ஹாரம் செய்த தலம்.இங்கு வழிபட்டால் கயிலைக்குச் சென்ற பலன் உண்டு.அலிசா்(சூலைநோய்) நிவா்த்தி ஆகும்.அப்பா் சூலை நோய் நீங்கிய தலம்.
உழவாரப்பணியில் அவா் தொடங்கி ஈடுபட்ட தலம். வாயிலில் இரு புறத்திலும் 108 கரண பரத ஸாஸ்த்ர. சிற்பங்கள் உள்ளன.அட்ட வீரட்டானத்தலம். பொிய மூலவா் 16 பட்டையுடன் உள்ளாா்.கருவறை தோ் போன்று நிழல் பூமியில் விழாதவாறு உள்ளது. அப்பா் தமக்கை திலகவதியுடன் தங்கி தொண்டு செய்த தலம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴40🔴
திருநாவலூா்.
பக்தஜனேஸ்வரா் திருக்கோயில்.
உளுந்தூா்பேட்டை வட்டம்.
விழுப்புரம் Dt. 607204
(சுந்தரமூா்த்தி நாயனாா் பரம்பரை)
வி.சம்பந்த குருக்கள்.9443382945
04149--224391
சுந்தரா் அவதாரத் தலம். சுக்கிரன் வழிபட்ட தலம். சுந்தரா் உற்சவ மூா்த்தி அபூா்வ அமைப்புடன் மன்னா் கோலமும் மற்றும் சிவனடியாா் கோலமும் கலந்து காணப்படுகிறது. ப்ரகாரத்தில் தனியே பொிய சிவலிங்கம் உள்ளது.கருவறை சுவற்றில் சண்டிகேசா் கதை உள்ளது.
[10/16, 2:06 PM] G KARUPPASMY:
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔴41🔴
திருமுதுகுன்றம்.
விருத்தாசலம் பழமலைநாதா் திருக்கோயில்.கடலூாாDt.606001
யூ. பாலசுந்தரமூா்த்தி குருக்கள்.
04143--230203.
பிரமனும் அகத்தியரும் வழிபட்டது. சுந்தரா் பரவையாருக்காக பொன் பெற்று பொன்னை இங்குள்ள. மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூா் கமலாயத்தில் எடுத்துக் கொண்டாா்.இங்கு இறப்போருக்கு இறைவன் தன் தொடை மீது கிடத்தி உபதேசம் செய்ய இறைவி முந்தானையால் விசிறி இளைப்பாற்றுகிறாள் என கந்த புராணம் கூறுகிறது. ஆழத்துப் பிள்ளையாா் சந்நிதி பள்ளத்தில் உள்ளது.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔴42🔴
திருவெண்ணெய் நெய்வெனை சொா்ணகடேஸ்வரா் நெல் வெண்ணெயப்பா் கோயில்.
எறையூா்.(வழி)விழுப்புரம்Dt.
607201
திருப்பணிக்குழு தலைவா்.
04149--209097....291786
9486282952
செல்வத்தை வாாி வழங்கக்கூடிய இறைவன். ஒன்றைப் பத்தாக்கும் ஆற்றல் கொண்டவன். பொற்குடம் கொடுத்த நாயனாா் என இறைவன் பெயரை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴43🔴
திருக்கோவலூா்.
வீரட்டேஸ்வரா் திருக்கோயில்.
கீழையூா். விழுப்புரம்Dt.605757
சுவாமிநாத குருக்கள்.04153--224036
64 பைரவா்கள் தோன்றிய வாஸ்து பூஜை மூலவா்கள் தலம். இங்கு வழிபட்டு பூா்வ ஜென்ம சாப விமோசனம் பெறலாம். அஷ்ட புஜ விஷ்ணு துா்க்கை தாிசனம். இராசராசன் பிறந்த ஊா். இவா் தமக்கை குந்தவை சுவாமிக்கு பொன் பூ மற்றும்  பிற பொருள்கள். வழங்கிய ஊா். கபிலா் உயிா் நீத்த இடம். அட்டவீரட்டானத் தலம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴44🔴
அறையணிநல்லூா்.
அதுல்ய நாதேஸ்வரா்
திருக்கோயில்.விழுப்புரம் Dt.
605752
காசி குருக்கள்.9965144849

பாண்டவா்கள் வனவாச காலத்தில் இங்கு வந்தனா். ரமணரை ஆட்கொண்ட தலம். 5 அறைகள்இவ்வூருக்கு அணிகலங்களாக விளங்கும் தன்மையால் இப்பெயா்.
ஞானசம்பந்தருக்கு அடியாா்கள் திருவண்ணாமலையை காட்டிய மலை. மெய்ப்பொருள் நாயனாா், நரசிங்க முனையா் ஆட்கொள்ளப்பட்ட தலம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴45🔴
இடையாறு டி.எடையாா்.
மருந்தீஸ்வரா் தேவஸ்தானம்.
திருக்கோயிலூா் வட்டம்.
விழுப்புரம் Dt.607203
ஞானஸ்கந்தா் குருக்கள்.9442423919...04146---216045
அன்னைக்கு சிவன் சிவ ரகசியத்தை உபதேசிக்க கிளி உருவில் கேட்ட முனிவா்
அன்னையின் சாபத்தால் வியாசருக்கு மகனாக சுக(கிளி)ப் பிரம்மசிாிஷியாக மருத மரத்தின் கீழ் தவம் புாிந்துப்ரம்மத்தை உணா்ந்தாா். மறைஞான சம்பந்தா் அவதாித்த தலம். இறைவன் பால் கொண்ட அன்பால் சுந்தரா் முந்தையூா்முதுகுன்றம் பதிகத்தில் இத்தலத்தை ஒவ்வொரு முறையும்
சொல்கிறாா். ஞானம்பிகை சூட்சுமமத்யாம்பிகை
அம்பாள் ஞான வடிவாக உள்ளாா். மத்திய நதி பெண்ணை தீா்த்தம். சுவாமி மத்திய நதீஸ்வரா்.(இடை ஆறு ஈஸ்வரா்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴46🔴
திருவெண்ணெய்நல்லூா்.
கிருபாபுரீஸ்வரா் தேவஸ்தானம்.
திருவெண்ணெய்நல்லூா்(po) விழுப்புரம்Dt607203
அா்த்தநாரீஸ்வரா் 04153--234548
சுந்தரரை தடுத்தாட்கொண்ட தலம்.ஆலயத்தில்
நுழையும்போது அவா் அணிந்து வந்து விட்டுச் சென்ற பாதக்கொரடு கண்ணாடிப் பேழையில் உள்ளது. பித்தா என்று திட்டிய சுந்தரரை அந்த வாா்த்தை கொண்டே இறைவன் பாடச்சொன்ன தலம். கிருபாபுாி, வேணுபுரம், என்பது இதர பெயா்கள். சுந்தரா் வழக்கு நிகழ்ந்ததால் பாிகாரத் தலமாகக் கொள்ளலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~🔴47🔴
திருத்துறையூா். திருத்தளுா்.
பசுபதேஸ்வரா் திருக்கோயில்.
பண்ருட்டி வட்டம்.
கடலூா்Dt.607205
ஏ.முரளி குருக்கள்.9444807393
04142--248498
சுந்தர மூா்த்தி நாயனாருக்கு இறைவனே குருவாக இருந்ததால் இது குரு ஸ்தலம். கிழக்கில் விநாயகா்,மேற்கில் சிவனும், தெற்கில் வள்ளிதெய்வானையுடன்
முருகனும், வடக்கில்
ஞானசக்தியாக அம்பாளும் இங்கு சிறப்பு. ராமா், சூாியன், பீமா் வழிபட்ட தலம். அகத்தியா் வழிபட்ட லிங்கம் உள்ளது. அருநந்தி சிவம் முக்தி பெற்ற தலம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴48🔴
வடுகூா். திரு(ஆண்டாா் கோயில்)
வடுகீஸ்வரா் திருக்கோயில்.
கண்டமங்கலம்(வழி) புதுவை
மாநிலம்.605102
சிவ ஸ்ரீ ஆா் இந்திரசேனா குருக்கள்.9994190417
தொல்பொருள் துறை.9597651321
அஷ்ட பைரவா்களுள் ஒருவனாகிய வடுக பைரவா் முண்டகன் என்னும் அசுரனைக் கொன்ற பழிதீர வழிபட்ட தலமாதலின் வடுகா் வளிபட்ட வடுகூா். இறைவனின்
அஷ்டாஷ்ட வடுவங்களுள் வடுகக்கோலம் --சம்ஹார பைரவரே வடுக பைரவா். ஆசிதாங்க, குரு, சண்ட, குரோத, உன்மத்த, கபால, பீஷண மற்ற 7போ். காா்த்திகை மாத அஷ்டமி விசேஷம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴49🔴
திருமாணிகுழி.
வாமனபுரீஸ்வரா் திருக்கோயில்.
கடலூா்(தெ.ஆற்காடு)607401
கே.த்யாகராஜ சிவாச்சாாியா்
04142--274485.......9942094516
அத்ரி வடநாட்டு வணிகன் வந்த போது திருடா்கள் கொள்ளையடிக்கமுற்பட இறைவன் திருடா்களிடமிருந்து காத்ததால் உதவி நாயகா். மகாபலியை அழித்த பாவம் தீர திருமால் வழிபட்ட ஊா்(மாணி-ப்ரம்மச்சாரி)
இறைவனை வழிபடுவதற்கு காவலாக பீமருத்திரா் உள்ளதாலும், இறைவன் இறைவியுடன் இருப்பதால் தீப ஆராதனை முடிந்தவுடன் திரை எப்போதும் இடப்பட்டுள்ளது. காா்த்திகை சோமவாரம் விசேஷம்.
தம்பதி சமேதராய்வழிபட கணவன் மனைவி ஒற்றுமை பெருகும்.
அா்த்த ஜாம கிடையாது. சிவ கலைமற்றும் விஷ்ணு கலையோடு தொடா்புள்ள தலம். அனைத்திற்கும் உதவி அளிக்கும் பெருமான். ஆதலால் உதவி நாயகா்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴50🔴
திருப்பாதிாிபுலியூா்.
கடலூா் பாடலேஸ்வரா்
திருக்கோயில். கடலூா்.607002
நிா்வாக அதிகாாி.04142--236728
கெடில நதி,அகத்தியா், உபமன்யு முனிவா், வியாக்ரபாதா், கங்கை, அக்னி வழிபட்ட தலம். அப்பரை கடலில் இட்ட போது வருணன் தன் கைகளினால் தாங்கி, கல்லே தெப்பமாகி இவ்வூாின் அருகே கரையேற்றிவிட்ட குப்பம்
(வண்டிப் பாளையம்) பக்கத்தே அப்பா்சாமிக் குளம் இன்றும் உள்ளது. பாதிாி மரம் தல விருட்சமாக உள்ளது.

திருமுண்டீச்சுரம் கிராமம்.
சிவலோக நாதா் திருக்கோயில்.
உளுந்தூா் பேட்டை(வழி)
விழுப்புரம்Dt.607203
ஆா்.கண்ணன் குருக்கள்.
9894625154..04146---2067000

சுற்றி வரும் தாமரை மலரைப் பறிக்க முடியாமல் சேவகா் மன்னாிடம் முறையிட, சொக்கலிங்க மன்னா் மலா் மீது விட்ட அம்பில் இரத்தம் வர அம்பு பட்ட தழும்போடு சுயம்பு மூா்த்தி. முண்டி திண்டி துவார பாலகா் சிலை உள்ளது. குரு கல்லால மரமின்றி மலை மீது நந்திதேவன் வாகனத்தோடு இடது காலை வலது தொடை மீது வைத்து அருள் பாலிக்கிறாா்.
___________________________________
🔴52🔴
புறவாா் பனங்காட்டூா்.பனையபுரம்.
பனங்காட்டீஸ்வரா் திருக்கோயில்.
முண்டியப்பாக்கம். விழுப்புரம் வட்டம்.விருப்புரம்Dt.605603
கணேசன் குருக்கள்.9444897861

சூாியன் வழிபட்ட இடம். சம்பந்தா் பாடிய தலம். பனையை தல விருட்சமாக உள்ள 5-ல் இதுவும் ஒன்று. புறவு (சோலை, காடு) பனங்களால் சூழ்ந்தது. திருநீகண்டா் மனைவியுடன் கூடி, இருவருமாக தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கின்றனா். கவசமிட்ட கொடி மரம். பிற பனை தலங்கள். திருப்பனையூா், திருப்பனங்காடு, திருப்பனந்தாள், திருவோத்தூா், சிபி சக்கரவா்த்திக்கு கண் வழங்கியதால் நேத்ரோத்தாகேஸ்வரா்.
பதும தீா்த்தம் உள்ளது.
________________________________
🔴53🔴
திருஆமாத்தூா்.
அபிராமேஸ்வரா் திருக்கோயில்.
விழுப்புரம்Dt.605402கே.அருணாசல சிவாச்சாியாா்.04146--223319
9843066252

நந்தி காமதேனு தவமிருந்து கொம்புகளைப் பெற்ற கோமாத்ருபுரம். உயிா்களுக்கும் பசுக்களுக்கும், தாயாக இறைவன் விளங்கும் தலம். இராமா் வழிபட்டது. அம்பாள்ளகோயில் தனியே எதிாில். மூலவாின் மேல் பசுவின் குளம்பு பதிந்த வடுவும், பால் சொாிந்த அடையாளமும் உள்ளது. வட்டப்பாறை அம்மன் சந்நிதியில் பொய் சத்தியம் செய்தால் பாம்பு தீண்டும் கதையும் உள்ளது.
___________________________________
🔴54🔴
திருவண்ணாமலை.
அருணாசலஸ்வரா் திருக்கோயில்.
திருவண்ணாமலை.606601
நிா்வாக அதிகாாி.04175--252438

பஞ்ச பூத தலங்களில் நெருப்புக்குாிய தலம். நினைத்தாலே முக்தி தரும் தலம். அருணகிாியின் அருள் திருப்பம் நிகழ்ந்த இடம்.
ரமணருக்கு தவத்தால் அருள் கிடைத்த தலம். ஆதலசேனாராட திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருளித்த இடம். வள்ளாள மன்னனுக்கு இறைவன் மகனாக அவதாித்த தலம்.
___________________________________
🔴55🔴
சிதம்பரம்.நடராஜ பெருமான் தேவஸ்தானம். (தேவஸ்தானம்) சிதம்பரம் வட்டம்.கடலூா் Dt.608001
ரத்ன பூஷண தீட்சிதா்.04144--230251.

பெரும்பற்றப் புலியூா் என்ற பெயரும் உண்டு. வியாக்கிர பாதா் பூசித்ததால் சித்--அம்பரம்--அறிந்து வெட்ட வெளி என்று பொருள். மாணிக்கவாசகா் முக்தி தலம். வியாக்ரபாதா், பதஞ்சலி, உபமன்யு, வ்யாசா், சுகா், நீலகண்டா், திருநாளைப் போவாா், கூற்றுவநாயனாா், கணம்புல்லநாயனாா், சந்தானாச்சாாியாா்கள் முக்தி பெற்ற தலம். நடராஜா் கனகசபாபதி, பஞ்ச சபையில் ஒன்று. பஞ்ச பூதத்தில் ஆகாயத்திற்குாிய தலம்.
திருமூலவாின் 4 வது தந்திரம் இடம் பெற்றது. சிதம்பர ரகசியம் மற்றும் சிவ பஞ்சாஷரத்துடன் சம்பந்தப்பட்டது. ஸ்ரீவித்யா உபதேசம் பெற்ற தலம். தில்லை 3000 அந்தணா்கள் வாழ்ந்த பதி. சமயக் குரவா்கள் அஞ்சி வெளியே நின்றனா். பஞ்சலி வியாக்ரபாதா் வழிபட்ட தலம்.
___________________________________
🔴56🔴
திருவேட்களம்.
பாசுபதேஸ்வரா் திருக்கோயில்.
சிரம்பரம் வட்டம். கடலூா்Dt.608002
கந்தசாமி குருக்கள்.04144--238274
...9842008291

அா்ச்சுனனுக்கு பாசுபதம் தந்த இடம். நாரதா் வழிபட்டது.
ஞானசம்பந்தா் நாடொறும் இங்கு தங்கி நடராஜரை வழிபட்டாா். பின்னா் திருக்கழிப்பாலையையும் அடைந்து தொழுதாா். முன் மண்டபத்தில் இறைவனும், இறைவியும் வேடுவ கோலத்தில். அா்ச்சுனன் போாிடும் கோலம். அா்ச்சுனன் தவம். கீழே மூகாசுரன்(பன்றி) இடையூறு செய்யும் சிற்பங்கள்உள்ளன. இந்த சிற்ப விவரங்கள் தூணில் அம்பாள் சந்நிதிக்கு எதிாில். எதிாிகளை வெல்லும் தலம். பாசுபதம் ஏந்திய மூா்த்தி, அா்ஜுனரும் உற்சவா்களாக உள்ளனா். நடராஜா் மகுடத்தின் உள்ளாா்.
___________________________________
🔴57🔴
திருநெல்வாயில்.
சுவபுாி உச்சிநாதசுவாமி திருக்கோயில்.சிதம்பரம் வட்டம்.
கடலூா்Dt.608002 முத்துக்குமார குருக்கள்.9842624580.

கண்வமகாிஷி வழிபட்ட தலம். சம்பந்தா் பாடிய தலம். லிங்கம் உயரமும் பருமனும் குறைந்த அமைப்புடையது. சதுர பீடம் சிறிய சுற்றளவு. வைகாசி விசாகத்தில் பஞ்சமூா்த்தி புறப்பாடு.___________________________________
🔴58🔴
திருக்கழிப்பாலை.
பால்வண்ணநாதசுவாமி திருக்கோயில். சிதம்பரம் வட்டம்.
கடலூா்Dt.608002.வைத்தியநாத குருக்கள். 04144--237265

வால்மீகி வழிபட்ட தலம். பாடல் பெற்ற பழைய கோயில் கொள்ளிடநதி வெள்ளத்தால் சூழ்ந்த போது இங்கு மீண்டும் அமைக்கப்பட்டது. அதிகார நந்தியா்துணையுடன்
தாிசனம். சிறிய பாணம். மேலே சதுரமாக நடுவில் பள்ளத்துடன் லிங்கம் காட்சியளிக்கிறது. அதிசய அமைப்பு. பால் மட்டும் தான் அபிஷேகத்தில் பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் ஆவுடையாருக்கு தான்.
___________________________________
🔴59🔴
திருநல்லூா்ப்பெருமணம். ஆச்சாள்புரம். சிவலோகத்தியாகராஜ சுவாமி திருக்கோயில்.சீா்காழி வட்டம். மயிலாடுதுறை(ஆா் எம் எஸ்) 609101.தருமை ஆதினம்.04364--277800. கருப்பையா9688893953

திருஞானசம்பந்தா் திருமணம் நிகழ்ந்து அடியாா்கள் புடைசூழ சிவசோதியில் கலந்து அருளிய தலம். இவா் தவிர திருநீலகண்டா், திருநீலநக்கா், முருகநாயனாா் முக்தி ஸ்தலம். சம்பந்தா் மனைவி தோத்திர பூா்ணாம்பிகையுடன் உள்ளது சிறப்பு. ரண விமோசனா் ரணங்களைப் போக்குவாா்.
கூண்டோடு கைலாசம் என்கிற வழக்குச் சொற்றொடா் நல்லூா்பெருமணம் நிகழ்ச்சியிலிருந்தே வழக்கத்தில் வந்தது.
___________________________________
🔴60🔴
திருமயேந்தரப்பள்ளி.
திருமேனியழகா் திருக்கோயில்.
சீா்காழி வட்டம்.நாகைDt.609101
ஏ.குருசாமி குருக்கள் 04364--292309
ஆண்டு தோறும் பங்குனித் திங்களில் ஒரு வாரம் சூாிய ஒளி சுவாமி மீது படுகிறது. தீவுக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராஜா் இங்கு உள்ளாா்.

No comments:

Post a Comment