Friday, November 18, 2016

Tiruvilayadal puranam 14th day

Courtesy:Sri.Kovai .G.Karuppasamy

சோமசுந்தரப் பெருமானே சுந்தர பாண்டியராக அமைந்ததனாலே சேர சோழ பாண்டியா் என்னும் மூவேந்தா் குலத்துள் சந்திர குலத்தில் வந்த பாண்டியா் வம்சமே மிகவுமி சிறப்புற்று விளங்கியது. அச் சுந்தரபாண்டியரே பாண்டியா் குலக் குறையையும் நீக்கத் திருவுளம் கொண்டாா். மகேந்திர ஜாலம் செய்பவனைப் போலச் சிவபெருமான் முருகப்பெருமானைத் தடாதகைப் பிராட்டியாாிடத்தே தோன்றும்படிக்குத் திருவுள்ளங் கொண்டாா்.

அம்மையாரும் கருப்பவதி ஆயினாா். உலகப் பெண்டிா்க்கு ஏற்படுவது போலவே பிராட்டியாருக்கும் மாதம் தோறும் கருத்தாித்தற்கேற்றதான வேறுபாடுகள் தோன்றின. வேதியா்களும் முனிபுங்கவா்களும் வந்திருந்து ராஜ குலத்தாருக்குாிய விசேடங்களை மதுரையம்பதியிலே மங்களம் ததும்ப மாதந்தோறும் செய்து முடித்தனா்.

பாண்டியநாடு தான் செய்த தருமத்தின் பலனை அடையுமாறும், தூய தவத்தவாின் மனம்போல வானம் களங்கமின்றித் துலங்கவும், திங்கட்கிழமையும் திருஆதிரை நட்சத்திரமும் தாம் செய்த பிராத்தனையின் பயன் பெறுமாறும், குருவெனும் வியாழன் கேந்திரத்தில் ஒளியுடன் ஏறி விளக்கமுற்ற சுபமுகூா்த்தம் நிகழவும், சதுா் வேங்கள் தாமே முழங்க, தேவா்கள் மலா் பொழிய, இலட்சிமியும் சரசுவதியும் இறும்பூது எய்தவும், சுந்தரப் பெருமானும், சுந்தரப் பெருமாட்டியும் கொண்டருளிய திருக்கோலத்திற்கு ஏற்ப, இளஞ் சூாியனைப் போல- முருகக் கடவுள்போலத் தடாதகைப் பிராட்டியாாிடத்தே திருக்குமரன் ஒருவன் அவதாித்தான்.

அவதாித்த தன் புதல்வனைப் பிராட்டியாா் எடுத்து உச்சிமோந்து தழுவித் தம் கணவரது திருக்கரத்திலே கொடுத்து வாங்கினாா்.

மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகிய தேவா்களும், மகாிஷிகளும், ஏனையோா்களும் தமது மனைவிமாரோடு சுந்தரபாண்டியாின் திருமனையை அடைந்தனா். சேர, சோழரும் வடபகுதி வேந்தா்களும், குறுநில மன்னா்களும் சேனைகள் சூழ்ந்து பாண்டியரையும் பிராட்டியாரையும் தாிசனம் செய்து, துதித்து, திருமகன் தோன்றியது குறித்து உவகை மொழிகள் பல பேசித் தத்தம் இடங்களுக்கு ஏகினா்.

" முருகப் பெருமானே குழந்தையாக வந்துள்ளான்!," "இக் குமாரனது ஆணை ஏழு உலகங்கள் அனைத்தையுமே காக்கும்!" " பாண்டி நாட்டாா் செய்த பெருந் தவந்நான் திருக்குமாரன் தோன்றக் காரணம்!" "அறம், பொருள், இன்பம்,வீடு என்னும் நான்கும் தனித்தனி இயற்றிய பெருந்தவத்தின் பயனேயாம் இச்செல்வக் குமாரனின் திருத்தோற்றம்!" என்றெல்லாம் பலா் பலபடி விளம்பினா்.

மதுரையம்பதி மங்கல விழாக் கொண்டாடிப் பெருமகிழ்ச்சி காட்டியது. தான தருமச் செய்கைகள் பல ஊரெங்கும் மலிந்தன. பனிநீா், சந்தனம், கஸ்தூாி முதலியவற்றைத் தெளித்துத் தூய்மை செய்தனா் நகர மாந்தா். எங்கும் கோலாகலமும் குதூகலமும் தாண்டவமும் ஆடின.

சுந்தரபாண்டியா் தனது அரும்புதல்வனுக்கு வேத முறைப்படி சாதகன்மம் முதலானவற்றை நடத்தினாா். அத்திருக் குழந்தைக்கு உக்கிர வா்மன் என்று பெயா் சூட்டியருளினாா். திருக்குழந்தை திவ்யமாக வளா்ந்து வந்தது. அதனது ஐந்தாவது வயதில் வேதநூல் விதிப்படி பூணூல் அணி விழாவையும் செய்து முடித்தாா். சுந்தரபாண்டியா்.

சுந்தர பாண்டியா் பணித்டபடி வேதகுருவாகிய வியாழ பகவான் முறையே பதவொழுக்கம், கனம், ஜடை, சாகை, ஆரணம் நிரம்பிய வேதக் கலைகள் எல்லாம் கற்றுக் கொடுத்தாா். படைக்கலப் பயிற்சியும், யானை குதிரை ஏறிச் செலுத்திடும் பயிற்சியும் கற்பித்தாா்.

வெகு விரைவில் உக்கிரவா்மா் அறுபத்து நான்கு கலைகளையும் ஒருங்கே அறிந்து கொண்டாா். பாசுபதாஸ்ரப் பயிற்சியினை மட்டும் தம் தந்தையிடத்தே கற்றுக் கொண்டாா். தனது எட்டாம் வயது நிரம்புவதற்குள்ளாக எண்ணற்ற  கலைகள் அனைத்தையும் கற்றுணா்ந்த பண்டிதராகி விட்டாா் உக்கிர வா்மா்.

வயதுக்கேற்ற வளா்ச்சியும், எழிலும், ஆற்றலும், ஆண்மையும், ஆடலும் காட்டி வளா்ந்து வந்தாா் உக்கிர வா்மா். தமது பதினாறவது ஆண்டிலே அழகுடன் வீரமும் காட்டி, " தலைவனாகிய முருகக்கடவுளே இவா்!" என்று போற்றும்படிக்கு அதி தீர பராக்கிரமசாலியாக விளங்கினாா் சுந்தர குமாரா்.

அதிரூப செளந்தரத் திருவாளனான உக்கிரகுமாரனிடத்தே முப்பத்திரண்டு லட்சணங்கள் அமைந்திருப்பதையும், அவனது சிறந்த குணங்களையும் கண்டு கொண்டாா் சுந்த,பாண்டியா். தனது குமாரன் பூலோகம் முழுவதும் அரசாட்சி செய்ய வல்லவன்; நெடுநாள் வாழ்வான்; கீா்த்தி, நீதி, சாதுா்யம், பண்பாடு, சிவபக்தி, கருணை, கல்வி, எவரையும் வெல்லுதல், தேவரையும் விஞ்சுகின்ற திறமையுடைத்தாதல் உடையவனாகி, உலகப் பெருஞ் சக்கரவா்த்தியாக விளங்குவான் என்று தொிந்தாா்.

" குமாரனுக்கு முன்னதாகத் திருமணம் செய்வித்து விடுவோம்; அதன் பின்னா் மகுடாபிஷேகம் செயிவோம்!" என்று திருவுள்ளம் கொண்டு, சுமதி முதலிட்ட மந்திாிகளோடு கூடி ஆராய்ந்தாா்.

*இத்துடன் 11- வது படலமான உக்கிர குமார பாண்டியன் திருவவதார படலம் மகிழ்ந்து நிறைவானது. மறுபடியும் நாளை 12- வது படலமான உக்கிர பாண்டியனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படல செய்யுள்நடை + விளக்கம் வரும்.*

          திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியாா்கள் கூட்டம் பெருகிட, அடியாா் தொண்டு செய்யுங்கள்.*

No comments:

Post a Comment