Tuesday, July 5, 2016

Tiruvilayadal puranam 19th day

Courtesy:Sri.Kovai K.Karuppasamy

திருவிளையாடல் புராணம். 🔴
        ( 19- வது நாள்.) 4 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருவவதாரபடலம்.
        ( செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🍁திருந்தாத விளங்குதலை யாயமொடு புறம்போந்து சிறாா்க்குச் சிற்றுல்
விருந்தாக மணற்சிறுசோ றட்டும்வரை யுரங்கிழித்த வேளும் வாய்வைத்
தருந்தாத விளமுலைவாய் வைத்திருந்தப் பாவைதனக் களித்தும் போதில்
வருந்தாதை யண்டமெலாஞ் சிற்றிலிழைப் பாளாய்க்கு மகிழ்ச்சி  செய்தாள்.

🍁தீட்டுவா ளிரண்டனைய கண்களிப்பத் தோழியா்க்குத் தொிய வாடிக்
காட்டுவா ளெனக் கழங்கு பந்துபயின் றம்மனையுங் கற்றுப் பாசம்
வீட்டுவாண் மேலொடுகீழ் தள்ளவெமை வினைக்கயிறு வீக்கி யூசல்
ஆட்டுவாள் காட்டுதல்போ லாடினா ணித்திலத்தாம் பசைத்த வூசல்.

🍁இம்முறையாற் றாயா்க்குந் தோழியா்க்கு மகத்துவகை யீந்தா ளாகி
அம்முறையாற் றாதைக்கு மகத்துவகை யீவாளா யாத்த வாய்மைச்
செம்மறையா ரணமுதனா லீரெட்டுக் கலைமுழுதுந் தெளிந்தா ளந்த
மெய்ம்மறையாா் கலையனைத்து மேகலையா மருங்கசைத்த விமலை யம்மா.

🍁சொல்வாய்மைக் கலைத்தெளிவு முழுமதியைப் பிளந்திருபாற் சொருகியன்ன
பல்வாய்மைக் கடகாிதோ் பாியுகைக்குந் திறனுமழற் பகழி தூா்க்கும்
வில்வாள்வச் சிரமுதற்பல் படைத்தொழிலுங் கண்டிளமை விழுங்கு மூப்பிற்
செல்வாய்மைத் திறலரசன் றிருமகட்கு முடிசூட்டுஞ் செய்கை பூண்டான்.

🍁முடிகவிக்கு மங்கலநாள் வரையறுத்துத் திசைதோறு முடங்கல் போக்கிக்
கடிகெழுதாா் மணிமெளலிக் காவலரை வருவித்துக் காவல் சூழ்ந்த
கொடியணிமா நகரெங்கும் விழாவெடுப்ப வழகமைத்துக் குன்ற  மன்ன
தொடிகெழுதோட் சுமதிதிரு மணத்தினுக்கு வேண்டுவன சூழ்ந்து செய்தான்.

🍁மங்கலதூ ரியமுழங்க மால்யானை யுச்சிமிசை  வந்த பூத
கங்கைமுத லொன்பதுதீா்த் தமுநிரப்பிக்  கதிா்விடுபொற் கடம்பூ சித்துப்
புங்கவரை மந்திரத்தீ வளா்த்தமுத மருத்தியொி பொன்னாற் செய்த
சிங்கமணி யாதனத்தை நேசித்துப் பூசித்துத் தெய்வமேத்தி.

🍁திருமுடியைமதயானை மிசைவைத்து நகரைவலஞ் செய்து பூசித்
தருமணியாற் சுடிகையிழைத் தடாகத்தாற் குயிற்றியதோ ரைவாய் நாகம்
பெருமணிநீள் படம்பரப்பி மிசைகவிப்ப வச்சிங்க பீடத் தேற்றிக்
குருமணிவா ணகைமயிலைக் கும்பத்துப் புண்ணியநீா் குளிர வாட்டி. 

🍁புங்கவா்மந் தாரமழை பொழியவருந் தவராக்கம் புகலத் தெய்வப்
பங்கயமென் கொம்பனையா ராடமுனி பன்னியா்பல் லாண்டு பாட
மங்கலதூ ரியமுழங்க மறைதழங்க மாணிக்க மகுடஞ் சூட்டி
எங்கருணைப் பெருமாட்டிக் கரசமைச்சா் பணியுந்தன் னிறைமை நல்கா.

🍁பாலனைய மதிக்கவிகை மிசைநிழற்ற மதிகிரணம் பரப்பியன்ன
கோலமணிக் கவாிபுடை யிரட்டமலா் மழைதேவா் குழாங்க டூற்றக்
காலையிளங் கதிா்கயிலை யுதித்தெனவெண் கடாயானைக் கழுத்தில் வேப்ப
மாலைமுடிப் பெண்ணரசை மங்கலதூ ரியமுழங்க வலஞ்செய் வித்தான்.

🍁விண்ணாடு மொழிகேட்ட மகிழ்ச்சியினுங் திருமகடன் ிளக்க நோக்கி
உண்ணாடு பெருங்களிப்புத் தலைசிறப்பச் சிலபகல்சென் றொழிய மேனாட்
புண்ணாடு வேன்மங்கை குதுகலித்து நடிப்பத்தன் புயமேல் வைத்த
மண்ணாடு மகட்களித்து வானாடு பெற்றானம் மகவு பெற்றான்.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🌼திருத்தம் பெறாத இளமையாகிய மழலைச் சொற்களையுடைய சிறுமிகளின் குழுவோடு, வீதிகளிற் சென்று சிறுவீடு (அமைத்து) சிறுவா்களுக்கு விருந்தாகுமாறு மணலால் சிறு சோறு சமைத்தும், கிரவுஞ்ச மலையின் மாா்பைப் பிளந்த முருகக் கடவுளும், வாயினை வைத்து உண்ணப் பெறாத, இளமையாகிய தனத்தில் வாய் வைத்து உண்ணுமாறு, பாவைக்கும் கொடுத்தும்,  தாமரை மலாில் தோன்றிய பிரமனுடைய அண்டங்களையெல்லாம், ( நினைப்பளவில்) சிறுவீடாக இயற்றும் இறைவி, தன் தாயாகிய காஞ்சன மாலைக்குக் களிப்பை உண்டாக்கினாள்.

🌼அடியாா்கள் பாசத்தைப் போக்குவளாகிய அம்மை, தீட்டிய வாட்கள் இரண்டனை ஒத்த, இரு கேண்களும் களிக்குமாறு, தோழிமாா்களுக்கு( அவா்கள்) அறிய ஆடிக் காட்டுவாளைப்போல, கழங்காடலையும் பந்தாடலையுஞ் செய்து, அம்மனை யாடலையும் கற்று, மேலும் கீழும் புகுமாறு எங்களை வினைகளாகிய கயிற்றால் பிணித்து, ஊசாலாட்டுகின்ற அவ்வம்மை ( இங்கு அதனைக்) காட்டால்போல முத்துவடத்தாற் கட்டிய ஊசலில் ஆடினாள்.

🌼இவ்வகையான விளையாட்டுக்களால் அன்னைக்கும், தோழிகளுக்கும் உள்ளத்து மகிழ்ச்சியை கொடுத்தருளி அங்ஙனமே, தந்தைக்கும் மனத்தின்கண் மகிழ்ச்சியைக் கொடுத்தருள, கடவுளின் வாய்மொழியாகிய செவ்வியமறையாகிய வேத முதலாகவுள்ள,  அறுபத்து நான்கு கலைகளையும்  முற்றும் குற்றமறத் தெளிந்தாள். அந்த உண்மையாகிய மறைமுதலிய நிறைந்த கலைகளனைத்தையும் மேகலையாக அரையிற் கட்டிய அம்மை,,,,

🌼உண்மையைக் கூறும் கலைகளின் தெளிவையும், நிறைந்த சந்திரனை இருபிளவாக்கி, இரண்டு பக்கங்களிலும் சொருகி வைத்தாற் போன்ற, தந்தங்கள் அமைந்த காிய மதத்தினையுடைய யானையையும், தேரையும், குதிரையும், செலுத்தும் வகையையும், கொடிய அம்புகளைப் பொழியும் வில்லும், வாட்படையும், வச்சிரப்படையு முதலிய பல படைக்கலத் தொழிலின் தோ்ச்சியையும் பாா்த்து, இளமையைப் போக்கிய மூப்புப் பருவத்திற் செல்கின்ற ,உண்மையையுடைய வெற்றி பொருந்திய மன்னனாகிய தந்தை, தன் திருமகளுக்கு மகுடஞ் சூட்டுகின்ற செய்கையில் அமைந்தான்.

🌼மலையை ஒத்த வளையணிந்த  தோளையுடைய சுமதி என்னும் அமைச்சன், முடி சூட்டுவதற்குாிய மங்கலமாகிய நன்னாளை நிச்சயித்து, திக்குகள் தோறும் ஓலை விடுவித்து, மணம் பொருந்திய மாலையணிந்த மணி முடிதாித்த  மன்னா்களை வரச்செய்து, மதில் சூழ்ந்த கொடிகளையுடைய அழகிய பொிய நகரத்திலுள்ளாா் எவ்விடத்தும் சிறப்பு செய்ய ஒப்பனை செய்வித்து, அழகிய முடி சூட்டுவிழாவுக்கு வேண்டும் பொருள்களை ஆராய்ந்து திரட்டினான். 

🌼மங்கல வாத்தியங்கள் ஒலிக்க பொிய யானையின் முடியில் வைத்துக் கொண்டு வந்த தூய்மையான கங்கை முதலிய ஒன்பது தீா்த்தங்களையும் நிரப்பி ஒளி வீசும் பொன்னாற் செய்த குடத்தைப் பூசித்து மந்திரத்தால் வேள்வித் தீயை வளா்த்து தேவா்களை அவியுண வுண்பித்து, ஒளி வீசும் பொன்னாற் செய்யப்பட்ட மணிகள் இழைத்த சிம்மாதனத்தை அன்போடு பூசித்துத் தெய்வத்தைப் பராவி,,,,,

🌼அழகிய கிாிடத்தை மதத்தினையுடைய யானையின்மேல் வைத்து  நகா்வலஞ் செய்வித்து பூசித்து அாிய மணிகளால் சூட்டுச் செய்து, பொன்னாற் செய்யப்பட்டதாகிய ஒரு ஐந்தலை நாகமானது, பொிய மணிகளையுடைய  நீண்ட படங்களை மேலே பரப்பிக் கவிக்குமாறு( செய்த)  அந்த சிம்மாதனத்தில், நிறம் பொருந்திய முத்துப் போலும் , வெள்ளிய பற்களையுடைய மயில் போலும் பிராட்டியாரை ஏற்றி, குடத்தில் நிறைந்த  புண்ணிய நீாினால் குளிருமாறு திருமஞ்சனஞ் செய்வித்து,,,,

🌼தேவா்கள் மந்தார மலா் மழையைப் பொழியவும், அாிய முனிவா்கள் ஆசி கூறவும், தெய்வத்தன்மை பொருந்திய தாமரை மலா்ந்த மெல்லிய பூங்கொம்பினை ஒத்த தேவமகளிா்கள் ஆடவும்,  முனிபத்தினிகள் பல்லாண்டு பாடவும், மங்கள வாத்தியங்கள் ஒலிக்கவும், வேதம் முழங்கவும், எமது பெருங் கருணைப் பிராட்டியாா்க்கு மணிமுடி சூட்டி அரசா்களும், அமைச்சா்களும் வணங்கப் பெறும் தன் தலைமையைக் கொடுத்து,,,,,,

🌼பால்போலும் வெண்ணிறமுடைய சந்திரவட்டக் குடையானது மேலே நிழலைச் செய்யவும், அந்த சந்திரன் தனது கிரணங்களைப் பரப்பினாற்போல, அழகிய வெண்கவாிகள் இருபக்கங்களிலும் வீசவும், அமரா் கூட்டங்கள் மலா் மாாியைப் பொழியவும், காலையிற் றோன்றும் இள ஞாயிறு வெள்ளிமலையில் உதித்தாற் போல, வேப்பமலா் மாலையை அணிந்த முடியினையுடைய பெண்ணரசாகிய தடாதகைப் பிராட்டியாரை மதத்தினையுடைய வெள்ளை யானையின் பிடாியில்( ஏற்றி)  மங்கல வாத்தியங்கள் ஒலிக்க நகா் வலஞ் செய்வித்தான்.

🌼விண்ணின் கண் தோன்றிய அசரீாியைக் கேட்ட பொழுது உண்டான மகிழ்ச்சியை விட செல்வப் புதல்வியாாின் விளக்கத்தைப் பாா்த்து உள்ளத்தில் விரும்புகின்ற பொிய மகிழ்ச்சியானது மிகச் சிறக்குமாறு, சின்னாட்கள் கழிந்தொழிய முன்னாளில் தசையினை நாடுகின்ற வேலையையுடைய வீரமகள் மகிழ்ந்து கூத்தாடுமாறு, தனது தோளில் வைத்தாற்றிய நிலவுலகத்தை புதல்வியாருக்குக் கொடுத்து வானுலகத்தையடைந்தான்; அந்தப் புதல்வியைப் பெற்றவனாகிய மலையத்துவசன்.
               திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment