Tuesday, January 12, 2016

Poetic beauty in Kamba ramayanam

Courtesy: Smt.Uma Balasubramanian

  கம்பராமாயணத்தில் கவி நயம்

நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது
வஞ்சம் அன்று; மனு வழக்கு ஆதலால்,
அஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ, நிறுத்துவாய்.
 
நஞ்சம் = நஞ்சு போல்
அன்னவரை = குணம் உள்ளவரை (நஞ்சு உண்டவர்களைக் கொல்லும்)
நலிந்தால், = தண்டித்தால்
அது = அது
வஞ்சம் அன்று; = பழிக்குப் பழி வாங்கும் செயல் அன்று
மனு வழக்கு = அது மனு நீதியின் முறை ஆகும்
ஆதலால், = ஆதலால்
அஞ்சில், = அஞ்சில்
ஐம்பதில், = ஐம்பதில்
ஒன்று அறியாதவன் = ஒன்றும் அறியாத (சுக்ரீவன்)
நெஞ்சில் = மனதில்
நின்று நிலாவ, = பதியும் படி
நிறுத்துவாய். = நிலை நிறுத்துவாய்
இதில் என்ன வார்த்தை நயம் என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா??
அஞ்சில் ம்பதில் ஒன்று அறியாதவன் என்ற சொற்றொடர்...
முதல் பொருள் - அஞ்சில் + ம்பதில் + ஒன்று + அறியாதவன் = ஐந்து  வயதில், ம்பது வயதில் ஒன்றும் அறியாதவன் 
இரண்டாவது பொருள் - அஞ்சு + இல் + அம்பு + அது + ஒன்று + அறியாதவன் = அஞ்சுதல் இல்லாத அம்புகள் என்னிடம் உள்ளன. அதில் ஒன்றைக் கூட அவன் அறியாதவன்
மூன்றாவது  பொருள்  = அஞ் + சிலம்பதில் + ஒன்று + அறியாதவன் = அந்த மலையில் (சிலம்பு என்றால் மலை) உள்ள அவன் ஒன்றும் அறியாதவன்
நான்காவது = அஞ்சு + ம்பது + ஒன்று = ஐம்பத்துஆறாவது , ஐம்பத்தாறாவது வருடம் துந்துபி வருடம்ஆகும் . இலக்குவன் துந்துபி என்ற அரக்கனின் எலும்புக் கூட்டைக் கால் கட்டை விரலால் உந்தித் தள்ளினான். அதை சுக்ரீவன் அறியமாட்டான் அதை அவன் நெஞ்சில் நின்று உலாவ நிறுத்துவாய்.
ஐந்தாவது = அஞ்சிலம் + பதில் + ஒன்று + அறியாதவன் = அச்சமும் இல்லை, எனக்குத் தருவதற்கு அவனிடம் ஒரு பதிலும் இல்லை, ஆதலால்  விழிக்கும் அவன் ஒன்றும் அறியாதவன் 
நாமும் கம்பன் போல சொல் விளையாட்டைத் தெரிந்து கொண்டால் தமிழில் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கலாம்.!---

No comments:

Post a Comment