Wednesday, July 22, 2015

when in grief....

courtesy:Sri.GS.Dattatreyan

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? 
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா?

எப்படி எப்படி? மாட்டாயா? - ஓஹோ! - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - ஓஹோ! - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம்

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே
அல்லல்

ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம் 
கண்ணே கண்ணே, சரி தானா கண்ணே?

கண்ணே கண்ணேன்னு என் முகத்தை ஏன்
இது இல்லை, பாடு,, கண்ணே சரிதானான்னு கேட்டேன்

பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா?

அறாமிகுந்தும் யாம் மறமிகுந்துமே 
அருகிலாத போதும் - யாம்
அருகிலாத போதும் - தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? - கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?



OS Arun -Thumbam Nergayil- Desh - Aadhi - Bharathidhasan
OS Arun -Thumbam Nergayil- Desh - Aadhi - Bharathidhasan Vocal: OS Arun Violin: Embar Kannan Mridangam: Srimushnam Raja Rao Morsing: Srirangam Kannan
youtube.com

No comments:

Post a Comment