Tuesday, July 7, 2015

Kasi kandam

முன்னுரை ஸ்ரீ குருவின் அருளினால் ஸகல காரியங்களும் ஸித்தியாகின்றன. ஸத்குருவின் கடாக்ஷம் ஒன்றுதான் கிடைத்தற்கரியது. நமது நாட்டில்தான் பாதுகையை வணங்குவதும் ஸாஷ்டாங்க நமஸ்காரமும் கைக் கொள்ளப்பட்டு வருகிறது. அப்படியே நமது நாட்டில் மட்டும்தான் நதியை புண்ணிய நதியாகக்கருதி பாபங்களைப் போக்கி மனிதனைத் தூய்மைப்படுத்துவதற்குச் சான்றாக கங்கை, யமுனை, காவேரி ஸ்நானம் என்று விசேஷமாகச் சொல்லி வருகிறோம். இன்றும் செய்து வருவதைப் பார்க்கிறோம். நமது ஆசார்யபுருஷர்களான ஸ்ரீ சந்திரஶேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தமது அருளுறையில் ஒரு ஸமயம், "மேல் நாடுகளில் கடவுளை அடைய மதத்தைக் கொள்கிறான். இந்தியாவில் தான் தத்துவப் பாதையைக் கைக் கொள்கிறோம். இக்கடினமான ப்ரயாணத்திற்கு நமது சடங்குகள், விழாக்கள் வ்ரதங்கள் எல்லாம் வழிகாட்டிகளாக திகழ்கின்றன. மெய்ஞானத்தைக் தேடும் உணர்வில் என்று பக்தனின் மனம் ஈடுபடுகிறதோ அப்பொழுதே அவனது காரியமும் ஸித்தியடைந்து விடுகிறது" என்று, கூறியிருக்கிறார்கள். கடினமான ப்ரயாணமான தத்துவப் பாதையில் ஆன்மீக முன்னேற்றம் காண, க்ரியைகளும் சடங்குகளும் வழிகாட்டியாக விளங்குகின்றன என்று அருளியதுபோல் நமது காசி யாத்திரையும் ஒரு புனிதச் சடங்காகவும், கடினமான யாத்திரையாகவும் இருந்து வருகிறது. காசீபாபம் ஶ‚தாபம் தைன்யம் கல்பதருஸ்ததா । பாபம் தாபம் ச தைன்யம் ச கரோதி குருதர்சனம் ॥ கங்கையின் ஸ்மரணமே பாபங்களைப் போக்கவல்லது. ஸகல லோகத்துக்கும் குருவாகவும் பிதாவாகவும் உள்ள ஸ்ரீ விச்வேச்வரரின் தரிசனம் ஸமஸ்த காசீ காண்டம் ஜீவர்களுடைய மனதில் சாந்தியையும், ஆனந்தத்தையும் தருகிறது என்பதை இன்றும் கண் கூடாகக் காணலாம். 1979ம் ஆண்டு நான் இலங்கைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டி வந்தது. அப்போது பல இடங்களுக்குச் சென்று வந்தோம். திரும்பி வரும்போது என்னோடு வந்த எனது தாயார், 'காசிக்குப் போய் ஸ்நானம் செய்தால் தேவலீ' என்று கூறினார்கள். அதற்கேற்றாற்போல் ஒரு மாதத்திற்குள்ளேயே காசியாத்திரை பாக்கியம் திடீரென்று கிட்டியது. சென்று வந்த அப்ப்ரயாணம் முதன் முறையாக 1963ல் செய்த யாத்திரையைவிடப் பலமடங்கு மன நிறைவையும் நிம்மதியையும் அளித்தது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் காலஞ்சென்ற ஸ்ரீ ஸுப்ரமண்ய வாஜபேயியின் க்ருஹத்தில் தங்க ஏற்பாடு செய்திருந்தான் கருணையே வடிவான கந்தன். நான் தங்கியிருந்த அந்த அறையிலிருந்து ஜன்னல் வழியே பார்த்தால் காமகோடியின் கோவில் கருவறை தெரியும். அப்போதுதான் எமது குரு சரணம் என்ற நூலுக்கு அவரிடம் முன்னுரை எழுதும்படிக் கூறியிருந்தேன். அவரும் மிக அழகாக எழுதினார். என்னுடன் பேசும்போது காசியின் மஹிமையை யமயாதனையுங்கூட இல்லாத பெருமையான புண்ணிய க்ஷேத்திரம் இது. இதனது புராணங்களை வெளியிடவேண்டும் என்று கூறினார். இறைவனின் கருணையினால் ஏற்கனவே தெரிந்த முகமான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த காலஞ்சென்ற வக்கீல் ராஜாங்கமய்யர் மனைவி ஸ்ரீமதி கோமதி ராஜாங்கத்தை அங்கே கேதார் கட்டத்தில் ஸ்நானம் செய்யும்போது தற்செயலாகச் சந்தித்தேன். காசியிலேயே வசித்துவரும் அம்மையார் கோமதி ராஜாங்கம். ஆரம்பத்திலேயே ஸத் கைங்கர்யங்களில் ஈச்வர பஜநம் முதலியனவற்றிலும் ராமக்ருஷ்ண மடத்து யதீச்வரர்களால் யாத்திரை விதி வழி வகுத்துக் கொடுக்கப்பட்டு ஸ்ரீ சிருங்கேரி மஹா ஸந்நிதானத்தின் மடத்தில் தங்கியிருக்கிறார். 'சங்கரக்ருபா' என்ற மடத்து பத்திரிகைளில் தொடர்ந்து பக்திக் கட்டுரைகள் கதைகள் அவர் எழுதி வந்திருப்பதை யாவரும் அறிவர். தனது மன நிம்மதியின் பொருட்டு, படிக்கும் விஷயங்களைப் பிறருக்கும் பயன்பட அவ்வப்போது தமது முதுமையின் பிடியிலும் அவ்வம்மையார் காசீ கண்டம் என்ற இந்தப் புனித நூலை சிரமப்பட்டு மொழி பெயர்த்து எழுதி வைத்திருந்தார். 'பொருளிலார்க்கு இவ்வுலகமில்லீ' என்ற உலகமாயிற்றே! அச்சிடப் பொருள் பலம் படைத்த பலரை, அணுகிப் பார்த்தார். ஏழைச் சொல் அம்பலம் ஏறுமா? காலம்தான் சென்றதே தவிர ஒருவரும் உதவ முன்வரவில்லீ. கடைசியில் இப்பொறுப்பை என்னை ஏற்குமாறு என் தாய் கேட்டபோது, ஆம் என்பதற்கும், இல்லை, முடியாது என்பதற்கும் 'நான்' இல்லீ என்பதால், ஆகட்டும் செய்யலாம் என்றேன். சிறிது சிறிதாக எறும்புபோல் பலரிடம் சேர்த்த பொருளையும், கைப்ப்ரதியையும் ஒரு பெட்டி நிறைய 100 அத்தியாயங்கள் என்னிடம் ஒப்புவித்தாள் அந்த அம்மா. அவள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்காக ஏற்ற இப்பணி தொடங்கி ஒன்றரை ஆண்டு 'எறும்பூறக் கல் தேயும்' என்று 50 அத்தியாயங்கள் பூர்த்தியாகி இன்று உங்கள் கரங்களில் உங்கள் உள்ளத்தையும் தூய்மைப்படுத்த இந்நூல் உருவாகியது. இது முதற்பாகமே. தமிழ் மக்கள் ராமாயணம் போல் இப்புனித நூலையும் வீட்டில் வைத்திருந்து ஸந்ததிகளுக்குப் பாதுகாத்துக் கொடுக்கப் பெரும் அஸ்திவாரமாக இருந்த ஸ்ரீமதி கோமதி ராஜாங்கத்தின் பணி சிறப்பானது என்பதில் ஸந்தேஹமே இல்லீ. காசீ காண்டம் 'கீதா கங்கா ச காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதி ஸ்திதே । சதுஶ்சகார ஸம்யுக்தே புனர்ஜன்ம ந வித்யதே ॥ என்பது ப்ரமாணம்; கீதா, கங்கை, காயத்ரீ, கோவிந்தன் என்று இந்த நான்கு 'க' கார சப்தங்களும் மநத்தில் பதிந்தால் மீண்டும் ஓர் வினைப் பிறவி சாராமல் வாழலாம் என்பது கருத்து. எல்லாம் வல்ல இறைவன் திருச்செந்திலதிபன் கருணையினாலும் எனது குருவின் அருளினாலும் இந்நூல் அழகாக மலர்ந்து தங்கள் கரங்களில் உள்ளது. வாழ்க குரு அருளும். திருவருளும். செந்தில்துறவி யாத்திரை விதி ˆ கணபதி துணை கடவுள் வணக்கம் (காப்பு) பிள்ளையார் டுண்டி ராஜ்ஞ: ப்ரிய: புத்ரோ பவாநீ ஶங்கரஸ்ய ச । தஸ்ய பூஜன மாத்ரேண த்ரயோபி வரதா ஸ்ஸதா ஸ்ரவன் மத கடாஸக்த: ஸங்குஜ தலிச்ங்குல: லஸத் ஸிந்தூர பூரோஸௌ ஜயதி ஸ்ரீகணாதிப: ॥ மஹாதேவ ஸ்தோத்ரம் க்ரஹமேத்யத்ர விஸ்வேஸோ, பவான்யேதத் குடும்பினீ ஸர்வேப்ய: காசிஸம்பத்ப்ய: மோக்ஷபிக்ஷாம் ப்ரயச்சதி । ஶாந்திகந்தாலஸத் கண்டௌ, மனஸ்தாலி மிலத்கர: த்ரிபுராரி: புரத்வாரி ஹதாஸ்யாம் மோக்ஷபிக்ஷக: ॥ துர்க்கா ஸ்தோத்ரம் புஷ்ப வ்ருஷ்டிம் ப்ரகுர்வந்த: ப்ராப்தாதேவ மஹர்ஷிபி: துஷ்டுவுஸ்ச மஹாதேவீம் மஹாஸ்துதிபி: ஆதராத்: ॥ அத்ய ப்ரப்ருதி மே நாம துர்கேதி க்யாதிம் ஏஷ்யதி துர்க்க தைத்யஸ்ச ஸமரே பாதநாத் அதிதுர்கமாத் ॥ துருவனுக்கு விஷ்ணு பகவானுடைய தரிசனம் ப்ரோத்யத் காதம்பினீ மத்ய வித்யுத்தாம ஸமான ருக் । புர: பீதாம்பர: க்ருஷ்ண: தேன நேத்ராதிதி: க்ருத: ॥ நபோ நிகஷ பாஷாணோ மேருகாஞ்சன ரேகித: । யதா ததா த்ருவேணௌஷிததா கருடவாஹன: ॥ ஸுநீல ககனம் யத்தத் பூஷிதம் து கலாவத: । பீதேன வாஸஸா யுக்தம் ஸ ததர்ஶ ஹரிம் ததா ॥ காசீ காண்டம் விஸ்வநாதரின் ஸ்வர்ண மந்திரம் மோக்ஷலக்ஷ்மீ விலாஸஸ்ய கலசோ யைர் நிரீக்ஷித: । நிதான கலசஸ்தந்து ந முஞ்சதி பதேபதே ॥ தூரதோபி பதாகாபி, மம ப்ராஸாத மூர்த்தஜா நேத்ராதிதி க்ருதாயாஸ்து நித்யம் தேஹி தயாம்மம ॥ தசாஸ்வமேதத்துறை (கட்டம்) ததோ பகீரதேனைவ ஆநீதாம் நந்தகானனே । கங்கா தேவீ ததோ ஜாதா காச்யாம் உத்தரவாஹினீ । ததைவ சூலடங்கஸ்ய தக்ஷிணே யமுனாநதீ । பூர்வாபிவாஹிணி ஜாதா தத்ர குப்தா ஸரஸ்வதீ । பூர்வே கங்கா பரம் பாரம் தக்ஷிணே தசஹரேஸ்வராத் ॥ பஸ்சிமே அகஸ்த்ய குண்டஸ்ச உத்தரே ஸோமநாதகாத் । । (சிவரஹஸ்யத்திலிருந்து) பஞ்ச கங்கா கட்டம் கிரணா தூத பாபா ச புண்ய தோயா ஸரஸ்வதீ கங்கா ச யமுனா சைவ பஞ்சநத்யோத்ர கீர்த்திதா: ॥ அத: பஞ்சநதம் நாம தீர்த்தம் த்ரைலோக்யவிஶ்ருதம் தத்ரா புலதோ ந க்ருஹ்ண்ணீயாத் - தேஹம் ந பாஞ்சபௌதிகம் (காசி கண்டத்திலிருந்து) மணிகர்ணிகாகட்டம் கிமு நிர்வாண பதஸ்ய பத்ரபீடம் ம்ருதுலம் தல்ப மதோ நு மோக்ஷலக்ஷ்ம்யா: । அதவா மணிகர்ணிகாஸ்தலீ பரமானந்த ஸுகந்த ஜன்மபூ: । சராசரேஷு ஸர்வேஷு யாவந்தஸ்ச ஸசேதனா: । யாத்திரை விதி தாவந்த: ஸ்ராத்தி மாத்யான்னே மணிகர்ணீ ஜலேமயே ஆங்கங்கா கேசவாஶ்சைவ ஆஹரிஶ்சந்த்ரமண்டபாத் । ஆ மத்யாத் தேவசரித: ஸ்வர்த்வாரான் மணிகர்ணிகா । (காசீ கண்டத்திலிருந்து) ("மஹாராஜாவைப்பற்றி") 52 வது அத்யாயம் 50வது ஸ்லோகம் விஸ்வேசானுக்ரஹேணைவ த்வயைஷா பால்யதே புரீ । ஏகஸ்யாபயவனாத் காஶ்யாம் த்ரைலோக்ய மவிதம்பவேத் । ஸ்ரீமன் மஹாராஜாதி ராஜத்விராஜ காசீராஜ! மஹாராஜ! பஹதூர் ஸர் ஸ்ரீப்ரபு நாரயணஸின்ஹா நமஸ்காரம் விஸ்வேசம் மாதவம் டுண்டிராஜௌ ஸ்ரீதண்டபாணிம் ஸபைரவேண । காசீம் குஹாம் தேவதுனீம் க்ரஹேசம் வந்தே பவானீம் மணிகர்ணிகாம் ச ॥ குருவந்தனம் கங்கா பாபம் சசீதாபம் தைன்யம் கல்பதருஸ்ததா । பாபம் தாபம் ச தைன்யம் ச ஹரதி குருதர்சனம் ॥ காசீ காண்டம் மொழிபெயர்ப்பாளரின் (மன்னிப்பு கோறுதல்) விநயம் காசி யாத்திரையை சாஸ்திர ப்ரகாரம் பூர்த்தி செய்வதுதென்பது கடினமான விஷயம். அதுபோலவே அதனுடைய முழு விதியையும் எழுதுவதும் கடினம். நான் எனது அல்ப புத்தியையனுஸரித்து அன்ய க்ரந்தங்களிலிருந்தும் செவி வழியே கேட்டவைகளிலிருந்தும் முக்கியமானவைகளைச் சேகரித்து இதை எழுதியிருக்கிறேன். இது கடினமான அனுபவம். ஆதலால் இதை எழுதும்பொழுது கவனக் குறைவில்லாமல் எழுதிய போதும் முக்யமான விஷயங்களை விட்டு விட்டு வேண்டாத விவரங்கள் வந்திருந்தாலும், அது ஆச்சர்யப்படக்கூடிய விஷயமல்ல. அதனால் அறிவுமிக்க ஸஹோதர ஸஹோதரிகளிடம் விநயத்துடன் வேண்டிக்கொள்வது என்னவென்றால் யதாதத்தே தோஷாத் குணமகிலம் அத்ப்ய: பய இவ என்ற வாக்கியப்படி நீரை நீக்கிப் பாலீ மட்டும் பருகும் அன்னப்பக்ஷி போல் குற்றம் நீக்கிக் குணத்தைக் கொள்ளவேண்டும் என்பதே என் ப்ரார்த்தனை - கோமதி ராஜாங்கம் யாத்திரை விதி காசியாத்திரை விதி காசீ கண்டத்தில், காசியில் செய்யவேண்டிய அநேக யாத்திரைகளைக் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது. அந்நிய புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. காசியின் விளம்பரப் புத்தகங்களிலும் இவைகளைப்பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் முழுமையான யாத்திரைவிதி என்று கூற முடியாது. அதனால் யாத்ரிகர்களின் ஸௌகர்யத்திற்காகச் சுருக்கமாக இங்கு கூறப்பட்டிருக்கிறது. அதனால் யாத்திரையை விரும்புகிற ஜனங்கள் இதைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அந்நிய ப்ரதேசங்களிலிருந்து வருகிறவர்களுக்கு காசி யாத்திரையைப் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுக்கு வருகின்ற வழிகாட்டிகளும் படிப்பில்லாதவர்களாகவோ, விவரம் அறியாதவர்களாகவோ பணத்திற்கு ஆசைப்பட்டவர்களாகவோ இருக்கலாம். அதனால் எல்லோரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்றே இந்த யாத்திரைச் சுருக்கம் எழுதப்பட்டிருக்கிறது. காசீகண்டம் கூறுகிறது:- காசியில் ஒருநாள் கூட யாத்திரையில்லாமல் கழிக்காதே என்றும் அப்படிக் கழித்தால், அவர்களுடைய பூர்வ புருஷர்கள் வருந்துகிறார்களென்றும் காசீகண்டம் கூறுகிறது. அந்நிய ப்ரதேசங்களிலிருந்து காசீயாத்திரைக்குப் புறப்படும் முன்னால், விதிப்ப்ரகாரம் யாத்திரை செய்யவேண்டுமென்றால், தங்கள் வீடுகளில் கணேசாதி பூஜைகளை முடித்துக் கொண்டு, ஹவிஸ், நெய் இவைகளினால் ஸ்ராத்தம் செய்து, ஸ்ராத்தசேஷமான நெய்யை ஆசமனம் பண்ணிவிட்டு, தன்னுடைய கிராமத்தைவிட்டுப் புறப்படவேண்டும். பிறகு காசியை அடைந்து உபவாஸம், முண்டனம், ஸ்நானம், ஸ்ராத்தம், தானம் இவைகளை முடித்துக்கொண்டு, தீர்த்த காசீ காண்டம் யாத்திரையைத் தொடங்க வேண்டும். யாத்திரைக்கு வாஹனங்களோ, வண்டியோ, குடையோ, செருப்போ, உபயோகப்படுத்தக் கூடாது. ஸ்த்ரீகளுக்கு முண்டனம் விதிவிலக்கு. தலீமுடியில் மூன்றங்குலம் முன்வகிட்டின் பக்கத்திலிருந்து கத்தரித்துவிட்டால் போதுமானது. காசி ரஹஸ்யம் கூறுகிறது:- இஷ்டமித்ரபந்துக்களுக்கு தர்ப்பையைப் போட்டு முடிபோட்டு அதில் ஆவாஹனம் பண்ணி தீர்த்தாபிஷேகம் செய்வித்தால் அவர்களுக்கு எட்டில் ஒரு பங்கு பலன் (புண்ணியம்) கிடைக்கும். தனக்கு வரசௌகரியப்படாதவர்கள் கர்மானுஷ்ட ப்ராம்மணனான ஒருவரைக் காசியில் வசிப்பதற்காகப் பொருளுதவி செய்தால் அதைவிடப் புண்ணியம் ஸித்திக்கும். காசியில் வாஸம் செய்பவர்களைவிட அங்கு வசிப்பதற்காக அனுப்பியவர் அவருக்குக் கோடிப் புண்ணியம் அதிகமாகக் கிடைக்கிறது.காசியில் வாஸம் செய்கிறவன், தான் மாத்திரம் கடைத்தேறுகிறான்.ஆனால் அவனால் காசியில் வஸிக்க நேர்ந்தவர்கள் தாங்களும் கடைத்தேறித் தங்களுக்கு உதவினவனையும் கரையேற்றுகிறார்கள். இதனால் உதவினவனுக்கு இரண்டு பங்கு புண்ணியம் கிடைக்கிறது. இது யாத்திரை விஷயத்திலும் ஒக்கும். காசிகங்கையில் உள்ள மண்ணை அந்நிய இடங்களுக்கு எடுத்துக்கொண்டு போகக் கூடாது. காசியின் மண்ணை வெளியில் எடுத்துக்கொண்டு போக விரும்புகிறவன் (ரௌரவாதி) நரகில் வீழ்கிறான். இதைப்பற்றி 'விஷ்ணு தர்மோத்தர' புராணம் 'சௌபரி ஸம்ஹிதை' இவைகளில் கூறப்பட்டிருக்கின்றன. யாத்ரிகர்கள் தினந்தோறும் நித்ய கர்மங்களை முடித்துக்கொண்டே யாத்திரைக்குச் செல்ல வேண்டும். யாத்திரை செய்யும் பொழுது இஷ்டதேவதையை மனதில் நினைத்துக் கொண்டு (தியானித்து) மௌனமாகச் செல்ல வேண்டும் அல்லது கூட்டமாகச் செல்ல நேர்ந்தால் 'ஹரஹரமஹாதேவ சம்போ, காசீ விஸ்வநாத! கங்கே! என்று கோஷித்துக் கொண்டு செல்ல வேண்டும். யாத்திரை விதி ஏனென்றால் கோஷ்டியுடன் செல்லும் போது, பேசாமல் செல்ல முடியாது; அதனால் மந்த்ரம் மாதிரி இந்த பஜனையை உச்சரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது காசி வழக்கம். யாத்திரையில் எங்கெங்கு ஸ்னானம், ஆசமனம், தர்ப்பணம், தேவபூஜை, தானம் இவைகளை விதித்திருக்கிறதோ அவைகளைத் தங்கள் சக்திக்கு உகந்தவாறு செய்ய வேண்டும். கங்கா, விஸ்வநாதர் இவர்களுடைய யாத்திரையைப் ப்ரதி தினமும் செய்ய வேண்டும். யாத்திரையென்றால் தவறாமல் சென்று தரிசனம் செய்வதேயாகும். இவைகளில் முக்கியமானது இரண்டு யாத்திரை:- முதலாவது கங்காஸ்னானம்; இரண்டாவது விஸ்வநாதர் தரிசனம். இதை நித்ய கர்மா என்றே கூறலாம். ப்ரதி தினமும் மணிகர்ணிகையில் சென்று ஸ்னானம் செய்ய வேண்டும்; ப்ரதி தினமும், பூ, பழம், ஜலம், வில்வபத்ரம் இவைகளினால் விஸ்வநாதரைப் பூஜிக்கவேண்டும். ஸனத் குமார ஸம்ஹிதை இதைப்பற்றிக் கூறுகிறது:- அதாவது, கங்காதேவியின் இதய ரூபமும் பகவானுடைய முகரூபமான மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்பவன் சிவரூபமாகவே! ஆகிறான். அவனுக்குப் பிறகு ஜன்மம் இல்லீ யென்று பார்வதிக்கு சிவபிரான் கூறுகிறார். 'மணிகர்ணிகா குண்டம்' என்பது கங்கையின் மேற்குக் கரையில் இருக்கிறது. அதிலிருந்து ஜலம் ப்ரம்மநாளத்திலிருந்து உருகி, கங்கையில் கலக்கிறது. அதையே 'மணிகர்ணிகைத் துறை' என்று கூறுகிறோம்; அதைப் போலவே 'தசாஸ்வமேத கட்டத்தில்' தர்மஹ்ரதா என்ற ஸரஸ்ஸின் தீர்த்தமும் கங்கையில் கலக்கிறது. அவைகளிரண்டும் மறைந்திருப்பதால் கங்காஸ்னானமே இவைகளில் ஸ்னானம் செய்வதற் கொப்பாகும் என்று கூறப்படுகிறது. 'காலீயில் பஞ்சகங்கா' கட்டத்திலும் மத்யான்னம் மணிகர்ணிகையிலும்' ஸ்னானம் செய்வது மகத்வடைந்தது. அல்லது காலீயில் 'தசாஸ்வமேத கட்டத்திலும் மத்யானனம் 'மணிகர்ணிகா' கட்டத்திலும் காசீ காண்டம் ஸ்னானம் செய்வது நல்லது. 'மணிகர்ணிகாஸ்நாநத்தை ஒரு தீர்த்த யாத்திரை யென்றும், பஞ்ச கங்கையிலும், மணிகர்ணிகையிலும் ஸ்னானம் செய்வதை - இரு தீர்த்தயாத்திரையென்றும், பஞ்சகங்கா, தசாஸ்வமேதம், மணிகர்ணிகை இம்மூன்றிலும் ஸ்னானம் செய்வது மூன்று தீர்த்த யாத்திரை (த்ரிதீர்த்தயாத்திரை) என்றும் சொல்வார்கள். கங்கையின் தீர்த்த கட்டங்களிலேயே இம்மூன்றும் மிக முக்யத்வம் வாய்ந்தவை. 'காசீ தர்பணம்' என்னும் க்ரந்தம் நான்கு தீர்த்த யாத்திரையைப்பற்றிச் சொல்கிறது. கங்கை, யமுனை, ஸரஸ்வதீ அல்லது நர்மதை இவைகள் கலந்த புண்யமயமான த்ரிலோசனா காட்டில் (ஞ்டச்ணா) இருக்கும் பிப்பிலா தீர்த்தத்தில் க்ருஹ்ய சூத்திரத்தைச் சொல்லிக் கொண்டு, விதிப்படிக்கு ஸ்னானம் செய்து பித்ருதர்ப்பணங்களை முடித்துக் கொண்டு, பஞ்ச கங்கை, மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து, அதன் பிறகு ஞானவாபியில் ஸ்னானம் செய்து விஸ்வநாதரைப் பூஜிக்க வேண்டும். இந்த யாத்திரை பாபங்களைச் சுத்தம் செய்யும் ப்ராயச் சித்தமாகக் கூறப்படுகிறது. காசீகண்டம் எண்பத்திநாலாவது அத்யாயத்தில் பஞ்சபூதங்களின் சேர்க்கையினால் ஆன சரீர சுத்தியின் பொருட்டு, பஞ்சதீர்த்த யாத்திரை என்று கூறப்படுகிறது. ஸமஸ்த தீர்த்தங்களிலும் அஸி ஸங்கமமும் எல்லா தீர்த்தங்களினால் ஸேவிக்கப்படுவது - (தசாஶ்வமேதமும்) ஆகும். வருணைஸங்கமத்து ஆதிகேசவருக்குப் பக்கத்தில் பாதோதகதீர்த்தம் இருக்கிறது. ஸ்னானமாத்திரத்திலேயே பாபச் சுமைகளை நீக்கி பவித்திரமாக்கும் பஞ்சநதீ தீர்த்தம் இருக்கிறது. இந்த நான்கு தீர்த்தங்களிலும் மிகவும் உத்தமமானது மணிகர்ணிகா தீர்த்தம். இது மனம், வாக்கு காயங்களை சுத்தப்படுத்துகிறது. ஒருவன் இந்த ஐந்து தீர்த்தங்களிலும் ஸ்னானம் செய்தால் பிறகு பஞ்ச பூதங்களின் சேர்க்கையினாலான சரீரம் எடுக்க மாட்டான். யாத்திரை விதி பஞ்சமுகத்தையுடைய சிவபிரானாகவே ஆவான். இந்த பஞ்சகங்கா யாத்திரை - காசியில் மிகவும் உத்தமம். பர்வ காலங்களில் படகுகளில் ஏறிச் சென்று இந்த யாத்திரையை முடித்துக் கொள்கிறார்கள். இத்துடன் 'கேதார காட்' - கௌரி குண்டத்தையும், 'த்ரிலோசனா காட்' டிலுள்ள தப்பிலா தீர்த்தத்தையும் சேர்த்துக் கொண்டால் ஸப்த - தீர்த்த - யாத்திரை ஆகிறது. ஆயதன யாத்திரை என்னவென்றால்:- கங்கையில் ஏதாவது ஒரு துறையில் (காட்) ஸ்னானம் செய்வது, விஸ்வேஸ்வரரைப் பூஜிப்பது, இது ஒரு ஏகாயதன யாத்திரை. நந்தி புராணத்தில் கூறியிருப்பதுபோல, இரண்டாவது யாத்திரையின் விதி :- மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து மணிகர்ணிகேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு, பிறகு ஞானவாபியில் ஸ்னானம் செய்து விஶ்வநாதரை தரிசனம் செய்து, பூஜிப்பது; இது இரண்டாவது யாத்திரை; இந்த யாத்திரை ப்ரம்ம ஸ்ரூபத்தையளிக்கிறது. மூன்றாவது ஆயதன யாத்திரை பற்றி லிங்கபுராணம் கூறுகிறது. ஹே! தேவி:- அவிமுக்தேஸ்வரர், ஸீவர்லீனேஸ்வரர், மத்யமேஸ்வரர், இவர்களைத் தரிசித்துப் பாபத்தைப் போக்கிக் கொள்வது மூன்றாவது யாத்திரையாகும். நான்காவது யாத்திரையைப்பற்றியும், ஐந்தாவது யாத்திரையைப் பற்றியும் கூட லிங்கபுராணத்திலும் கூறப்படுகிறது. அதாவது øஶலேச்வரர், ஸங்கமேச்வரர், ஸுவர்லீனேச்வரர், மத்யமேச்வரர் இந்த நான்கு லிங்கங்களையும் தர்சித்தால் ஒருவன் துக்க ஸாகரமான ஸம்ஸாரத்தில் பிறக்க மாட்டான். ஐந்தாவது ஆயதன யாத்திரை என்னவென்றால் க்ருத்திவாஸேஶ்வரர், மத்யமேஶ்வரர், ஓங்காரேஶ்வரர், கபர்தீஶ்வரர், விஶ்வேஶ்வரர் இவர்களைத்தரிசிப்பது உத்தமமான பஞ்சாயதன யாத்திரையென்று அறிய வேண்டும். இவர்களோடு கேதாரேஶ்வரரையும், த்ரிலோசனரையும் காசீ காண்டம் சேர்த்துக் கொண்டால் ஸப்தாயதன யாத்திரையாகும். அநேகம் யாத்திரைகளுக்கு திதி, வாரம், நக்ஷத்ரம் இவைகளின் கணக்கு உண்டு; இவைகளைப் பின்னால் கூறுவோம். ஆனால் எப்போது ஶ்ரத்தை ஏற்படுகிறதோ அப்பொழுது உடனே யாத்திரை முடிப்பது நல்லது; பர்வங்கள், திதி, வாரம், நக்ஷத்ரம், இவைகளை யனுசரித்து யாத்ரைகள் செய்வோமாயின் புண்யபலன்கள் ஏற்படும். பஞ்ச தீர்த்த யாத்ரைக்கு திதி, வாரம், நக்ஷத்ரம், பர்வம் இவையொன்றும் பார்க்க வேண்டிய அவசியமில்லீ. அதனால் எல்லோரும் எப்பொழுதும் செய்யலாம். இப்பொழுது - வருஷம், பர்வம், மாதம், ருது, பக்ஷம், திதி, வாரம், நக்ஷத்திரம் இவைகளுடன் கூடிய யாத்திரைகளைக் க்ரமமாகக் கூறுகிறோம். இந்த யாத்திரைகளில் முதலாவது - சித்திரை மாதம் சுக்ல பக்ஷத்து (வருக்ஷ) ஆரம்பத்தில் பகல் பொழுது ஸ்நானத்திற்குப் பிறகு செய்யவேண்டியது. பங்குனி, ஶ்ராவணம் முதலிய மாதங்களில் பெரும்பாலும் விச்வேச்வரர் முதலிய தேவஸ்தானங்களில் ஶ்ருங்கார உற்சவம் நடக்கும். அப்பொழுது இரவு சென்று தரிசிக்க வேண்டும். இவைகள் ‡ஷ்டாசாரத்தையனுசரித்து நடக்கிறது. அதனால் வார்ஷிக யாத்திரைகளில் இந்த வர்ணனைகள் விடப்படுகின்றன. ஆதனால் தனிப்பட்ட முறையில் கொஞ்சம் எடுத்துக் கூறப்படுகிறது. சித்திரை மாதம் 1. துர்க்கா தேவீ துர்க்காகுண்ட யாத்திரை:- சித்திரை மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் ஒன்றிலிருந்து ஒன்பது தேதி வரையில்:- (நந்தி புராணம் இதற்கு ப்ரமாணம்)) 2. மங்களா கௌரி - லக்ஷ்மண பாலாகட்டம்: சித்திரைமாதத்து சுக்லபக்ஷத்ருதீயை யாத்திரை விதி 3. சித்ரகண்டா - சௌக்கிலிருந்து கிழக்கில் (சந்தூக்கி கல்வி) என்னும் சந்தில் இருக்கிறது. இதுவும் சித்திரைமாதத்து சுக்லபக்ஷத்து த்ருதியை; 4. பார்வதீச்வரர் - த்ரிலோசனருக்கு ஸமீபம்; அதுவும் சித்திரைமாதம் சுக்லபக்ஷத்து த்ரிதியை; 5. அன்னபூர்ணாதேவீ, வி ச்வநாதருக்கு ஸமீபம் - சித்திரைமாதம் சுக்லாஷ்டமி. 6. மஹாமுண்டா ஜேத்புராவுக்கு ஸமீபம் சித்திரைமாதம் சுக்லாஷ்டமி 7. மத்யமேஶ்வரர், கணேஶகஞ்ச் - (கம்பனிபாக்) அதுவும் சித்திரைமாதத்து - சுக்லாஷ்டமி) 8. சுபத்ராதே - சந்திர கூபத்திற்கு ஸமீபத்தில் - சித்திரை மாதம் சுக்லாஷ்டமி; 9. ராமநவமி - ராமாகாட் சித்திரைமாதம் சுக்லநவமீ 10.காமேச்வரர் - மச்சோதரிக்கு ஸமீபம் - (சந்தில்) சித்திரைமாதம் சுக்லபக்ஷம் (பதிமூன்றாம் நாள் சனி ப்ரதோஷம்) 11.பசுபதீஶ்வரர் - இதே பெயருடைய மஹாவில் - சித்திரைமாதம் சுக்லபக்ஷ பதினாலாவது நாள்- 12.க்ருத்திவாஸேச்வரர், ஹரதீர்த்தம் - விருத்தகாலம் என்னுமிடத்தில் சித்திரா பௌர்ணமியன்று. 13.சந்த்ரேஶ்வரர் - ஸித்தேஸ்வரி, சந்திரகூபத்தில்; சித்திரா பௌர்ணமியன்று. வைகாசிமாதம் 1. பஞ்ச முத்ரா தேவீ, பஞ்ச கங்கா கட்டத்தில், வைகாசி மாதத்து க்ருஷ்ணாஷ்டமி. 2. த்ரிலோசனர் - த்ரிலோசன கட்டம் - வைசாக சுக்ல அக்ஷயத்ருதீயை; காசீ காண்டம் 3. பரசுராமேச்வரர் - நந்தனசாகு, வைசாக - சுக்ல அக்ஷயத்ருதீயை; 4. ஓங்காரேச்வர் - மத்ஸ்யோதரிக்கு வடக்கில் - மஹால் ஹுக்காலேசன் என்னுமிடத்தில் வைகாச சுக்ல சதுர்தசி 5. நரஸிம்மன் - ப்ரஹ்லாத கட்டம் - வைசாக சுக்ல சதுர்த்தி ஜ்யேஷ்டமாதம் (ஆனி) 6. ஜ்யேஷ்ட வினாயகர்:- காசிபுரா - கர்ணகண்டா - ஆனி மாதத்து - சுக்ல சதுர்த்தி 7. ஜ்யேஷ்டா கௌரி காசிபுரா - கர்ணகண்டா - ஜ்யேஷ்ட சுக்லாஷ்டமி 8. தசாஶ்வமேதேஶ்வரர்:- தஶாஶ்வமேதகட்டம் - ஆனிமாத சுக்லபக்ஷ - ப்ரதமையிலிருந்து தஶமிவரையில்- 9. கங்கேஶ்வரர் :- ஞான - வாபிக்குக் கிழக்கில் (அரசுக்கு அடியில்) ஜ்யேஷ்ட ஶúக்ல தஶமி. 10.ஜ்யேஷ்டேஶ்வரர் :- காசீபுரா - கர்ணகண்ட - ஜ்யேஷ்ட ஶúக்ல சதுர்த‡. 11.ரதயாத்திரை - ராஜா தாலாப் கரையில் ஒன்று -வேணிராம் என்னுமிடத்தில் இரண்டு. காபகீச்சா ஸூர்யகுண்டத்தில் மூன்று. ஆடிமாதம் (ஆஷாடா) ஆடிமாதம் ஶúக்லபக்ஷ த்விதீயையிலிருந்து சதுர்த்தி வரையில் - 12.ஆஷாடேஶ்வரர் :- காசீபுரா - ராஜபேந்தியா வளைவில் - ‡வாலயத்திற்குப் பின்னால் ஆஷாடசதுர்தசியன்றோ; அல்லது பௌர்ணமியன்றோ - 13.வ்யாஸேஶ்வரர் :- கர்ண கண்டாவில் ஆடிபௌர்ணமியன்று. யாத்திரை விதி ஆவணிமாதம் (ஶ்ராவணம்) 14.வ்ருத்தகாலர் :- தாரா நகரத்தில், ப்ரஸித்தம். ஶ்ராவண மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும். 15.கேதாரேஶ்வரர் :- கேதார கட்டம் - ஶ்ராவணஸோமவாரம் தோறும் 16.ஸாரநாத்தில் ஸாரநாதேஶ்வரர் :- ப்ரஸித்தம் ஶ்ராவண மாதம் ஸோமவாரம்தோறும். 17.துர்க்காதேவி - துர்க்காகுண்டம் :- ஶ்ராவணமாதம் நான்கு செவ்வாய்க்கிழமைகளும். 18.நாமயாத்ரா - வாஸுகீஶ்வரர், நாகக்குண்டம் அல்லது கார்கோடகவாபி - ஶ்ராவணமாத ஶúக்ல நாகபஞ்சமி. 19.ஆதிமஹாதேவர் த்ரிலோசனருக்குப் பக்கத்தில் :- ஶ்ராவண மாதத்து. ஶúக்லபக்ஷத்து சதுர்தசி. புரட்டாசிமாதம் 20.விஶாலாக்ஷி - தர்ம கூபத்திற்கு ஸமீபத்தில் புரட்டாசி மாதத்து க்ருஷ்ண - பக்ஷத்து - த்ருதீயையன்று. 21.ஆக்னேந்திரேஶ்வரர், இஸ்ரசிங்கியில் - ப்ரசித்தமான ஜாகீஶ்வாத்தில் புரட்டாசிமாதத்து - க்ருஷ்ணபக்ஷத்து ஷஷ்டி - (க்ருஷ்ணஜந்மாஷ்டமி) ஆதிகேஶவரிலிருந்து, பிந்துமாதவர், கோபாலமந்திர் வரையில் புரட்டாசிமாத க்ருஷ்ணாஷ்டமி. 22.ருணமோசனம் - அனுமானபாடக் புரட்டாசிமாத அமாவாஸ்யை. 23.மங்களா கௌரி - லக்ஷ்மண பாலாகாட் - புரட்டாசிமாதம் ஶúக்லபக்ஷ த்ருதியை. 24.படாகணேஷ் :- புரட்டாசி மாதம் ஶúக்லபக்ஷ சதுர்த்தி; 25.லோலார்க்கர் :- பதைனியில் ப்ரசித்தம் - புரட்டாசிமாத சுக்லபக்ஷ ஷஷ்டி. காசீ காசீகாசீ காண்டம் காண்டம்காண்டம் 26.மஹாலக்ஷ்மி : லக்ஷ்மீகுண்டம் :- புரட்டாசி மாதம் ஶúக்லபக்ஷ அஷ்டமியிலிருந்து ஆரம்பித்து, ஐப்பசிமாதம் க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி வரையில். 27.குலஸ்தம்பம் - லாட்டுபைரவரில் - புரட்டாசி மாதம் பௌர்ணமி. ஐப்பசிமாதம் 28.லலிதாதேவி - லலிதாகாட், ஐப்பசிமாதம் க்ருஷ்ணபக்ஷத்விதியை. 29.லக்ஷ்மீ கோபா- லக்ஷ்மீ குண்டத்திற்கு வடக்கில் -கீஹட்டா -என்னும் இடத்தில் ஐப்பசிமாதம் க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி இதை 'சோரஹியா மேளா' என்று கூறுவார்கள். 30.மாத்ருதேவி லாலாபூர் மாதா குண்டம் ஐப்பசிமாதம் க்ருஷ்ணபக்ஷ நவமி. 31.பித்ரீஸ்வரர் :- பித்ருகுண்டம், பித்ருபக்ஷத்தில் - பிதாவினுடைய மரணதிதியில். 32.விஸ்வபுஜா :- கௌரி - தர்மகூபத்திற்கு பக்கத்தில் ஐப்பசிமாதம் ஶúக்லபக்ஷ -ப்ரதமையிலிருந்து நவமி வரையில் நவராத்ரியாக. 33.துர்க்காதேவி :- துர்க்காகுண்ட் :- புரட்டாசி மாத க்ருஷ்ணபக்ஷத்ருதியை (நவதுர்க்கையில் ஒன்று) ஒன்பது வெவ்வேறு ஸ்தானங்களில் அதுவும் புரட்டாசிமாதம் க்ருஷ்ணபக்ஷ த்ரிதியை (2) சதுஷ் ஷஷ்டிதேவீ சௌசுடி (காட்டிலும்) வேறு சில ஸ்தலங்களிலும் புரட்டாசிமாத க்ருஷ்ணபக்ஷத்ருதீயை. கார்த்திகைமாதம் 34.ஹனுமான் காட் :- கார்த்திகைமாதத்து க்ருஷ்ணபக்ஷ சதுர்தசி. யமேச்வரர் - யமகாட் கார்த்திகைமாத சுக்லபக்ஷத்விதீயை. யாத்திரை விதி யாத்திரை விதியாத்திரை விதி 35.தர்மேஸ்வரா :- தர்மகூபத்தில் கார்த்திகைமாத சுக்லபக்ஷ அஷ்டமி. 36.பிந்துமாதவர் :- பஞ்சகங்கா = கார்த்திகைமாத ஶúக்லபக்ஷ துவாத‡யிலிருந்து பௌர்ணமி வரை = பீஷ்மபஞ்சகம் முழுவதும். 37.விஸ்வேஶ்வரர் 'காசியில் (எப்பொழுதும்) ப்ரஸித்தம் கார்த்திகை மாதத்து. சுக்லபக்ஷத்து (வைகுண்ட) 'சதுர்த‡. கா‡மஹா யாத்திரை - கா‡ முழுவதும் எங்கிலும் கார்த்திகை பௌர்ணிமயன்று ஸ்வாமி கார்த்திக் கேதார கட்டத்தில் - கார்த்திகை பௌர்ணமியன்று. காசீ காண்டம் மார்கழிமாதம் 39.காலபைரவர் - பைரவநாத் - மார்கழிமாதத்து க்ருஷ்ணாஷ்டமியன்று. 40.மாலதீச்வரர் :- வ்ருத்த காலருக்கு அருகில் வளைவில்; மார்கழி மாதத்து சுக்லபக்ஷ ஷஷ்டி. (40) காலமாதவர் :- பைரவநாத்துக்கு அருகில்; மார்கழி மாதத்து சுக்லபக்ஷ ஏகாதசி. 41.பாதோதக தீர்த்தம் :- வருணா ஸங்கமத்துக்கருகில்; மார்கழி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியிலிருந்து பௌர்ணமி வரையில்; 42.கபர்தீஸ்வரர் :- பிசாசமோசனகாட் :- மார்கழி மாதத்து சுக்லபக்ஷத்து சதுர்தசி, கோபீகோவிந்தம்; லால்காட்; மார்கழி மாதத்து சுக்லபக்ஷபௌர்ணமி. 43.நகர்ப்ரதக்ஷிணம் :- வருணையில் - சௌகாகாட்டில்; மார்கழி மாதம் சுக்லபக்ஷ பௌர்ணமி; தைமாதம் 44.உத்தரார்க்கம் :- அலீப்பூர், தைமாதத்து ஞாயிற்றுகிழமை தோறும். 45.விதீச்வரர் :- அகஸ்திய குண்டத்தின் அருகில் தைமாதம் ஸப்தமி- 46.நரநாராயணர் :- மகதாகாட் - தைமாத பௌர்ணமி மாசிமாதம் 47.கணேஷ் :- ப்ரசித்தமான படேகணேஷ் மாசிமாத க்ருஷ்ண பக்ஷசதுர்த்தி 48.டுண்டிராஜ் :- விச்வேச்வரருக்கு அருகில் ப்ரசித்தமானது. மாசிமாதத்து சுக்லபக்ஷ சதுர்த்தி. 49.முகப்ரேக்ஷணிவை :- மங்கள கௌரிக்கு மேற்குபக்கத்தில் மாசிமாதம் சுக்லபக்ஷ சதுர்த்தி. யாத்திரை விதி 50.லோலார்கர் :- மதைனியில் ப்ரசித்தமானது. மாசி மாதத்து சுக்லபக்ஷ ஸப்தமியில். 51.கேசவாதித்யர் :- வருணைஸங்கமத்தில் மாசிமாத சுக்லபக்ஷ பானு வாரமும், ஸப்தமியும் சேர்ந்திருக்கும் போது. 52.துவாதசாதித்யர் :- வெவ்வேறு பன்னிரண்டு ஸ்தானங்களில் சிவ ரஹஸ்யத்தில் கூறப்பட்டிருக்கும் (ரவிவார யாத்திரையைப் பார்க்கவும்) 53.ப்ரயாகைதீர்த்தம் :- தசாஸ்வமேதம் மாசிமாதம் முழுவதும். 54.அவிமுக்தேச்வரர் :- விச்வநாதருக்கருகில் :- மாசியும் பங்குனியும் கூடிய க்ருஷ்ணபக்ஷத்து சதுர்தசியில். 55.க்ருத்திவாஸேச்வரர் :- ஹரதீர்த்தத்தில் மாசிமாதம் சிவராத்ரியன்று. 56.ப்ரீதிகேச்வரர் :- ஸாக்ஷி விநாயகருக்குப் பக்கத்தில், சிவராத்ரியன்று; பங்குனிமாதம் 57.தாலபேஸ்வரர் :- (மாஸைமந்திர் காட்) பங்குனி மாத பௌர்ணமி. 58.*சதுஷ்ஷஷ்டி :- சௌசட்டி காட் (சித்திரை மாதத்து க்ருஷ்ணபக்ஷ ப்ரதமை) * (குறிப்பு - இந்த 64 யோகினியர்களின் பெயர்கள் காசீகண்டம் 45வது அத்யாயத்தில் 34வது ஸ்லோகத்திலிருந்து 44வது ஸ்லோகம் வரையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அறுபது யோகினிகளின் இருப்பிடம் சௌசட்டி காட்டிற்கு மேலே ராணாமஹாலில் இருக்கிறது. மேலும் வாராஹியினுடைய மானமந்திர், மயூரியின் லக்ஷ்மிகுண்டம், சுகியினுடைய டௌடியா வீரம், காசீ காண்டம் கமச்சாவில் காமாக்ஷி இவர்களடங்கியது அறுபத்திநாலு யோகினிகள். ஆனால் இவர்களின் யாத்திரை சௌசட்டி காட்டில் பண்ணிணால் போதும்.) 59.வாருணிஸ்னானம் :- வருணை சங்கமத்தில் சித்திரை மாதத்து க்ருஷ்ணபக்ஷ - த்ரயோதசி. 60.கேதாரேச்வரர் :- கேதாரகட்டம் சித்திரைமாதம் க்ருஷ்ணபக்ஷ சதுர்தசியன்றாவது; சித்ரா பௌர்ணமியன்றாவது. 61.ஸாம்பாதித்யர் :- சூரியகுண்டம் சித்திரைமாதம் ஏதாவது ஒரு ரவிவாரம். 62.வார்ஷிக ச்ருங்கார உற்சவம் :- இந்த எல்லா ச்ருங்கார உற்சவங்களும் வருஷந்தோறும் குறிப்பிட்ட திதிவாரத்தில் இருக்கிறது. எத்தனையோ இடங்களில் ந்ருத்யங்களும் கீதங்களும் நடைபெறுகின்றன. பெரும்பாலும் ஸாயங்காலத்தில் ஆரம்பித்து இரவு முழுவதும் அலங்காரம் செய்து, பாட்டுகளுடனும் வாத்யங்களுடனுமாக உற்சவம் கொண்டாடுகிறார்கள். அது மறுநாள் மத்யானம் வரை நீடிக்கிறது. அதைப்பார்த்து ஆனந்திக்க வேண்டுமே தவிர எழுதுவதற்கு ஸாத்தியமில்லீ. (உற்சவங்கள்) 1. எல்லாவற்றிலும் முக்யமாக விச்வநாதருடைய ச்ருங்கார உற்சவம் பங்குனிமாதத்து சுக்ல ஏகாதசியன்று நடக்கிறது. அதேநாளில் அன்னபூர்ணாதேவி, டுண்டிராஜ் கணேசர், ஹனுமான், ஞானவாபி முதலிய எல்லா இடங்களிலும் ச்ருங்கார உற்சவம் பார்த்து பரவசப்படக் கூடியதாக இருக்கும். 2. இந்தப் பங்குனிமாதத்து சுக்கில த்ருதியையன்று ஸங்கடா தேவிக்கு ஸமீபத்தில் பஹுளாமுகி தேவியின் (பகுளா தேவி) அலங்காரம் மிக அழகாக இருக்கும். யாத்திரை விதி 3. இந்தப் பங்குனி மாதத்து சுக்லபக்ஷத்து சுக்ரவாரம் லக்ஷ்மீகுண்டத்து லக்ஷ்மீதேவியின் அலங்காரம் விமரிசையாக இருக்கும். இதே ரீதியில் ச்ராவண மாதத்து சுக்லபக்ஷத்து சுக்ர வாரத்திலும் நடக்கும். 4. சித்திரைமாதத்து சுக்லபக்ஷத்து ஏகாதசியன்று சித்ர கூடத்தின் பக்கத்தில் தூமாவதி தூபசண்டி என்னும் தேவிகளுக்கு அலங்காரம் மனோஹரமாக இருக்கும். 5. வைகாசி மாதம் சுக்லபக்ஷ கங்கா ஸப்தமியன்று அநேக இடங்களில் அலங்காரமும் கானமும் நடக்கின்றன. 6. ச்ராவண மாதத்து சுக்லபக்ஷத்து மங்களவாரம் கமாச்சா பக்கத்தில் இருக்கும் வடுக பைரவருக்கு அலங்காரம் செய்து பஜனையும் நடக்கும். 7. ஜன்மாஷ்டமி உற்சவம் : அநேக இடங்களில் நடக்கும், சில இடங்களில் ஜன்ம ஷஷ்டியும் நடக்கும் 8. ஜன்மாஷ்டமி ஆறாவது தினத்தன்று துர்க்கா குண்டத்தில் துர்க்காதேவியை ச்ருங்காரித்து ந்ருத்ய கீதங்களினால் ஸேவிக்கிறார்கள். 9. கார்த்திகை மாதத்து சுக்லபக்ஷத்து ஏகாதசியிலிருந்து பௌர்ணமிவரையிலும் பஞ்சகங்கா கட்டத்தில் விசேஷ ச்ருங்காராதி அலங்காரங்கள் நடக்கும். 10.ம்ருத்யுஞ்ஜய மஹாதேவர், ஸங்கடாதேவி, ஹனுமான் முதலிய ஸ்தானங்களில் பங்குனி மாதமே ச்ருங்கார உற்சவம் நடக்கிறது. கூறத் தொடங்கினால் விரியும் என்று விடப்படுகிறது. காசீகண்டத்தில் ப ஞ்ச (க்ரோச) கோச யாத்திரையைப்பற்றி விஸ்தாரமாக வர்ணிக்கப்படவில்லீ. அயனம் :- ஆனால் காசீ ரஹஸ்யம் என்னும் க்ரந்தத்தில் பஞ்சகோச யாத்திரையைப்பற்றி விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. காசீ க்ஷேத்திரத்து ப ஞ்சகோச யாத்திரை சரீரசுத்திக்காக மிகவும் வழக்கத்திலிருந்து காசீ காண்டம் வருகிறது. காசியில் எல்லா யாத்திரையையும் விட இது மிகவும் மேலானது. இந்த யாத்திரையை அயன யாத்திரையென்றும் கூறுவார்கள். ஸனத் குமார ஸம்ஹிதையில் கூறப்படுகிறது:- தக்ஷிணே சோத்தரே-சைவஜி அயனே சைவதாமயா; க்ரியதே க்ஷேத்ர தாக்ஷண்யம் பைரவஸ்ய பயாதபி । மஹாதேவர் கூறுகிறார் :- நாம் பைரவரிடம் பயத்தினால் தக்ஷிணாயனத்திலும், உத்தராயணத்திலும் காசீக்ஷேத்திரத்தை வலம் வருவதான 'பஞ்ச கோச' யாத்திரை செய்கிறோம். காசிவாசிகள் மார்கழியிலும், பங்குனியிலும் இந்த யாத்திரையைச் செய்கிறார்கள். இதைத் தவிர வெவ்வேறு இடங்களில் ராமன்லீலீ, க்ருஷ்ணலீலீ, கானம், வாத்யம் இவைகள் நடக்கின்றன. பெரும்பாலும் அதிமாஸங்களில் வெளிஇடங்களிலிருந்தும் யாத்ரிகர்கள் வருகிறார்கள், ஆனாலும் எந்த மாதமானாலும் பஞ்சகோச யாத்திரை நடக்கிறது. ஆனால் உண்மையைக் கூறுமிடத்து எப்பொழுது மனம் வருகிறதோ அப்பொழுது யாத்திரை செய்யவேண்டும். காசீரஹஸ்யத்தில் இதைப்பற்றிக் கூறியிருக்கிறது; பஞ்சகோசயாத்திரை செய்பவர்கள் காலம், மாதம் இவைகளைப்பற்றிக் கவலீப்படவேண்டாம். சித்தத்தில் எப்பொழுது சிரத்தை ஏற்படுகிறதோ அப்பொழுது உடனே செய்ய வேண்டும். காசி ரஹஸ்யத்தில் இதைப்பற்றி அதிகமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. நாரத புராணத்தில் பஞ்சகோச யாத்திரையின் பலன் கூறப்பட்டிருக்கிறது, அதாவது மூன்று லோகங்களுக்கு பாவனமான காசீபுரியை எவன் ஒருவன் ப்ரதக்ஷிணம் செய்கிறானோ, அவன் ஸப்த த்வீபமும், ஏழு ஸமுத்ரம் பர்வதங்களுடன்கூடிய பூமண்டலம் இவைகளை ப்ரதக்ஷிணம் செய்ததற்கு ஒப்பாகும். காசீ ரஹஸ்யத்தில் ஒன்று , இரண்டு, மூன்று யாத்திரை விதி நான்கு நாட்கள் பஞ்சகோசயாத்ரை மார்க்கத்தில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. சிவ ரஹஸ்யத்தில் ஏழு நாட்கள் வரைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ஜனங்கள் மூன்று அல்லது ஐந்து தினங்களில் முடித்துக் கொள்கிறார்கள்.இந்த யாத்திரையில் யாத்ரா மார்க்கத்திலிருந்து சற்று விலகியிருக்கும் கோவில்களுக்குத் தரிசனம் செய்யச் சென்றாலும் யாத்திரையை விட்டு அடியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். (முதலிலிருந்து) எள்ளத்தனை பூமி கூட பாதம்படாமல் இருக்கக் கூடாது. பஞ்ச கோச யாத்திரை செய்பவர்கள் ப்ரும்மசர்யம் அனுஷ்டிக்க வேண்டும். யாத்திரைக்கு விதிக்கப்பட்டிருக்கும் எல்லீக்கு வெளியில் காலீக்கடன்களைக் கழிக்க வேண்டும். இதைப்பற்றி விசேஷமாக காசீரஹஸ்யம் 10வது அத்யாயத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சகோச யாத்திரை விதி :- பஞ்சகோசத்துக்குச் செல்வதற்கு முன்னால் யாத்ரிகர்கள் கங்கா ஸ்னானம், நித்யயாத்ரையை முடித்துக் கொண்டு, முக்தி மண்டலத்திலும், ஞானவாபியிலும் ஸங்கல்ப பூர்வமாக டுண்டிராஜனைப் பூஜித்து அன்றே 'அந்தர் க்ருஹ யாத்திரையை' முடித்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஹவிஸ் வைத்து உண்ண வேண்டும். இரண்டாவது நாள் ஸ்னானம் செய்து நித்ய நியமங்களை முடித்துக் கொண்டு முக்தி மண்டபத்திற்குச் சென்று இவ்விதம் ப்ரதிக்ஞை செய்து கொண்டு, மனஸா, வாசா, க்ரியயா - அறிந்தோ, அறியாமலோ, பாபசுத்திக்காகவும், புண்ணிய லாபத்திற்காகவும் - பஞ்ச க்ரோசத்திற்குள்ளிருக்கும் ஜ்யோதிர் லிங்கஸ்வரூபமான விச்வநாதர், அன்னபூரணி, லக்ஷ்மீ நாராயணர், டுண்டிராஜர், ஐம்பத்தைந்து விநாயகர்கள், பன்னிரண்டு ஆதித்யர்கள், மூன்று நரஸிம்ம கேசவர்கள், இராமக்ருஷ்ண, கூர்ம, மத்ஸ்யாதி அவதாரங்களுடன் கூடின விஷ்ணு, (அநேக தேவதைகள் உள்ளடங்கிய) அநேக சிவ லிங்கங்கள், கௌரீ முதலிய காசீ காண்டம் அநேக தேவதைகள் உள்ளடங்கிய இந்த க்ஷேத்திரத்தை நாங்கள் ப்ரதக்ஷிணம் செய்கிறோம், இவ்வாறு ஸங்கல்பித்துக் கொண்டு, 'ஹே மஹாதேவா! தங்களுடைய மகிழ்ச்சிக்காகவும், ஸமஸ்த பாப ஸமூஹங்களின் சாந்தியின் பொருட்டும் விதிப்படிக்கு பஞ்ச க்ரோச யாத்திரையைச் செய்கிறோம்; இவ்விதம் ப்ரார்த்தித்துக் கொண்டு திரும்பவும் டுண்டிராஜரைப் பூஜித்து, ஹே டுண்டிராஜகணேசா, தாங்கள் மிகப் பெரிய விக்ன ஸமூஹங்களை நாசம் செய்பவர், அதனால் தாங்கள் தயவு செய்து கருணையுடன் எங்களுக்குப் பஞ்சக்ரோச யாத்திரை செய்ய உத்திரவு கொடுக்க வேண்டும். என்று வேண்டிக் கொண்டு பிறகு விஸ்வேச்வரரை மூன்று ப்ரதக்ஷிணங்கள் செய்து ஸாஷ்டாங்கமாக வணங்கி எழுந்து, மோதகர் முதலிய ஐந்து விநாயகர்களையும், தண்டபாணி, காலபைரவர் இவர்களையும் பூஜித்துத் திரும்பவும் விஸ்வேச்வரரைப் பூஜிக்க வேண்டும். திரும்பவும் மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து விட்டு ப்ரதக்ஷிணத்திற்குப் போக வேண்டும். பிறகு வழியில் இருக்கும் ஸ்தல தேவதைகளையும் தரிசனம் செய்து பூஜிப்பது உசிதம். தேவதைகளின் பெயர்கள்; இடங்கள் 1. மணிகர்ணிகேச்வரர்,ஸித்திவிநாயகர் =மணிகர்ணிகாகாட் 2. கங்காகேசவர் = லலிதாகாட் 3. ஜராஸந்தேச்வரர் =மீர்காட் 4. ஸோமநாதர் 5. தாலபேச்வரர் =மானமந்திர்காட் 6. சூலடங்கேச்வரர் 7. ஆதிவராஹேச்வரர் = தசாஸ்வமேதகாட் தசாஸ்வமேதேச்வரரை தசாஸ்வமேதத்திலுள்ள சீதளா கோவிலிலும், ப்ரயாகேச்வரர் கோவிலிலும் 8. ஸர்வேச்வரர் = பாண்டேகாட் பக்கத்திலும் 9. கேதாரேச்வரர் =கேதார கட்டத்திலும் யாத்திரை விதி 10.ஹனுமந்தேச்வரர் = ஹனுமான் கட்டத்தில் 11.ஸங்கமேஸ்வரர் =அஸி சங்கமத்தில் 12.அர்க்க விநாயகர் = லோலார்ககரின் ஸமீபத்தில் 13.லோலார்க்கர் = பதைனியில் 14.துர்க்கா குண்டம். இதுமுதலாவது தங்குமிடமாக முன்பு இருந்தது. ஆனால் இப்போது அங்கு தங்குவதில்லீ. கந்தாவில் தங்குகிறார்கள். அங்கு ஸமீபத்தில் நகவாவில் தர்மசாலீயிருக்கிறது. துர்க்கா விநாயகர் = துர்கா குண்டம். துர்க்காதேவி =ப்ரசித்தமான இந்தக் கோவிலில் ப்ராமணர்களுக்கு பாயஸமும் லட்டும் அளிக்கவேண்டும். துதிக்கவேண்டும். ஜய துர்க்காதேவி ஜயகாசீநிவாஸிநீ। க்ஷேத்ரவிக்ன ஹரே தேவி புனர்தர்சன மஸ்துதே (அதாவது,) ஹேமாதா! தேவிதுர்க்கே! ஜெய ஹே! காசிவாசினி! நீயே க்ஷேத்ரத்தில் விளையும் இடையூறுகளை விலக்குகிறாய். நான் திரும்பவும் வந்து உன்னை தரிசிப்பதற்கு அனுக்ரஹிக்க வேண்டும். இவ்விதம் ப்ரார்த்தித்து விட்டு மேலே செல்ல வேண்டும். விஷ்வக்னேஸ்வரர் வழியில் காமைதாபுரம் கிராமத்தில்; கர்தமேச்வரர் கதவாம்காம் - அங்கு அக்ஷதையும் எள்ளும் ஸமர்ப்பிக்கவேண்டும். கர்தமதீர்த்தம் - கதவாம் கிராமத்துக் குட்டையில் குளிக்கவேண்டும்; கர்தமகூபம் -அதில் தன்னுடைய முகத்தைப் பார்க்கவேண்டும். ஸோமநாத் - விரூபாக்ஷர், நீல கண்டேச்வரர், கந்தவாவில், முதலாவது யாத்திரை தங்குமிடம். கந்தவாவில் - அநேகம் தர்மசாலீகளும் உள்ளன. கடைத்தெருவும் இருக்கிறது. காசீ காண்டம் கர்தமேச்வரரிடத்தில் 'கர்தமேச மஹாதேவ! காசீவாஸ! ஜனப்ரிய! உன்னுடைய பூஜையினால் ஹே மஹாதேவ, புனதர்சனமஸ்து தே' என்று ப்ரார்த்திக்க வேண்டும். நாகநாதர் - அமராகிராமத்தில், சாமுண்டாதேவீ அவடா கிராமத்தில்; மோக்ஷேஸ்வரர், கருணேஸ்வரர் - அவடாவிலேயே; வீரபத்ரேச்வரர் - தேல்ஹனா கிராமத்தில்; விகடதுர்க்கா - அங்கேயே, உன்மத்தபைரவர் - தேவுகிராமத்தில்; அதைச் சேர்ந்தது நீலகணன், கூடகணன் விமலதுர்க்கா, மஹாதேவா, நந்திகேஸ்வரர், ப்ருங்கிரிஷி கணம் கணப்ரியர்; விரூபாக்ஷர் - கௌரா க்ரமத்தில், யக்ஞேச்வரர், சக்கமாதல தேவீ = விமலேச்வரர், பயாநகபுரம் மோக்ஷதேஸ்வரர், ஞானதீஸ்வரர், அம்ருதேஸ்வரர் - அஸவாரி கிராமத்தில், கந்தர்வ ஸாகரம் - பீமசண்டி கிராமம், பாலாபோக்ர தடாகம், பீமசண்டிதேவீ- அங்கு இரண்டாவது தங்குமிடம். அநேக சாலீகளும் உண்டு. பீமசண்டி விநாயகர் - தாலூகா ஜக்கினியில், ரவிரக்தாக்ஷ கந்தர்வர் அதைச் சேர்ந்தது; நரகார்ணவதாரணசிவா - பீமசண்டியின் ப்ராத்தனை; பீமசண்டி ப்ரசண்டானி, மம விக்னானி நாசய । நமஸ்தேஸ்து கமிஷ்யாமி புனர்தர்சனமஸ்து தே ॥ ஏகபாதகணர் - கசநார் கிராமத்தில், இங்கு எள்ளும் அக்ஷதையும் ஸமர்பிக்கவேண்டும். மஹாபீமர் - ஹரேம்காதாலாப் - ஹரபுர கிராமம். பைரவநாத் - ஹரஸோஸ கிராமத்தில், பைரவிதேவி- அங்கேயே, பூதநாதேஸ்வரர் - தீனதாஸபுரம். ப்ரசித்தமான ஸோமநாதேஸ்வரர், அங்கேதான் - லங்கோடிய ஹனுமான்ஜி -சிந்துரோதஸதீர்த்தம் சிந்துஸாகரகுளம் - மிகவும் ப்ரசித்தமானது. இங்கும் தர்மசாலீயிருக்கிறது. யாத்திரை விதி காலநாதர் - ஜனஸா கிராமத்தில்; கபர்தீஸ்வரர் -அங்கேயேதான். காமேஸ்வரர் - சௌகண்டி கிராமத்தில், -அங்கேயே கணேஸ்வரர், வீரபத்ரகணர், சதுர்முகர்கணர்; கணநாதேஸ்வரர், -படோலி கிராமம். தேஹலிவிநாயகர் - மிகவும் ப்ரசித்தம்; இவருக்கு லட்டு, பொரிமாவு, சத்துமாவு, கரும்பு இவைகளை ஸமர்பிக்க வேண்டும். ஏழுதினங்கள் யாத்திரை போகிறவர்கள் இங்கு தங்குவார்கள்; ஒரு தர்மசாலீயும் இருக்கிறது. ஷோடச விநாயகர் - பேவடியா விநாயகருக்கு அருகில் - உத்தண்ட விநாயகர், புயிலிகிராமம் - உத்கலேஸ்வரர் - ஸ்ரீ ராமபுரகிராமம் - ருத்ராணிதேவி, போகும் மார்க்கத்திலேயே இருக்கிறது. தபோபூமி; (ருத்ராணிதேவியின் தபோபூமி) - வழியிலேயே இருக்கிறது. வருணாநதி - ராமேஸ்வர கிராமத்தில் - அங்கு ஸ்னானம் தர்ப்பணம் செய்யவேண்டும். ராமேஸ்வர் மிகவும் ப்ரசித்தம். வெள்ளை எள்ளும், வில்வபத்ரமும் கொண்டு அவரை அர்ச்சிக்க வேண்டும்; ஸோமேஸ்வரர், பரதேஸ்வரர், லக்ஷ்மணேஸ்வரர், சத்ருக்னேஸ்வரர், த்யாவா பூமீஸ்வரர், ராமேஸ்வரருக்கு அருகிலேயே இருக்கிறார். அங்கேயே நஹுஷேஸ்வரர் இருக்கிறார். ராமேஸ்வரர், இது ஒரு ப்ரதானதங்குமிடம். ஒரே நாளில் யாத்திரை முடிப்பவர்கள் கூட இங்கு தங்கிவிட்டுத்தான் செல்வார்கள். இங்கு அநேக தர்மசாலீகள் இருக்கின்றன. ராமேஸ்வரருடைய ப்ராத்தனை பின்வருமாறு :- 'ஸ்ரீ ராமேஸ்வர! ராமேண பூஜிதஸ்த்வம் ஸனாதந! ஆக்ஞாம்தேஹி மஹாதேவ! புனர்தர்சனமஸ்து தே ॥ அஸங்க்யாத தீர்த்தலிங்கம் - வரனாபாக் (புல்னிவாரி)க்குப் பக்கத்தில் தேவஸங்கேஸ்வரர் கரோமாபாக் - விசேஷமாக துர்க்கா குண்டத்தை விட்டதுபோல், சிவபுரத்தில் திரௌபதீகுண்டத்துக்கு காசீ காண்டம் ஸமீபத்தில் பஞ்ச பாண்டவர்களுடைய பெயரில் 5 லிங்கங்கள் இருக்கின்றன. இது நாலாவது தங்குமிடம். ஆனால் நகரத்திலிருந்து செல்லுபவர்கள் தங்களது சொந்தக்காரர்களை ஸந்திக்கும் பொருட்டு, சிவபுரம் போய்விடுகிறார்கள். அதற்காகவே இங்கு அநேக தர்மசாலீகளும் குளங்களும் இருக்கின்றன. ஆனால் இந்த இடத்தைப் பற்றி காசி ரஹஸ்யத்தில் குறிப்பிட்டிருக்கவில்லீ. பிகுன்சியிலிருந்து சற்று முன்னால் போய் ஸாரங்கதாலால் என்னுமிடத்தில் ஒரு தினம் தங்குவார்கள். பாசபாணிகணேசர் - முக்கியக்கடை வீதிக்குப்பக்கம். ப்ருத்வீச்வரர் - குஜரிகிராமம் - பின்காரியாவின் கிணற்றுப் பக்கம், ஸ்வர்கபூமி; இதற்கு முன்னால் பிகுன்ஜியின் 5 வது தங்குமிடம் ஸாரங்க குளக்கரையில் ஆகும். அங்கு ஒரு சிறு தர்மசாலீயும் உள்ளது. இங்கு யாத்திரிகர்கள் தங்குவதில்லீ; நேரே சிவபுரத்திலிருந்து கபிலதாராவிற்குச் சென்று விடுகிறார்கள். யூபஸரோவரதீர்த்தம் = தீனதயாபுரத்தில்; கபிலதாரா தீர்த்தம் = இதுதான் தற்சமயத்துக்கு தங்குமிடம்; அநேகம் தர்ம சாலீகளும் கடைத்தெருக்களும் இருக்கின்றன. காசீகண்டம் 62 வது அத்யாயத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. வ்ருஷபத்வஜேஸ்வரர் =கபிலதாரா - ப்ரசித்த ஸ்தலம், கடைசி தங்குமிடம் - ப்ராத்தனாமந்திரம் விருஷபத்வஜதேவேச! பித்ரூணாம் முக்திதாயக ! । ஆக்ஞாம் தேஹி மஹாதேவ! புனர்தர்சனம், அஸ்து தே! இது பித்ருக்களுக்கு முக்தியளிக்கும் ப்ரசித்தமான இடம். காசியில் எல்லாத் தீர்த்தங்களிலும் இருப்பதுபோல் யாத்திரை விதி இங்கும் கயாதீர்த்தம் இருக்கிறது. அதனால் இதற்கு சிவகயா எனப்பெயர் வந்தது. இங்கு தர்பணம், ச்ராத்தம், ப்ராம்மண போஜனம் சக்தி அனுஸாரம் செய்யவேண்டும்: ஜ்வாலா ந்ருஸிம்ஹம் = கோட்வாம் கிராமம்; (வருணாசங்கமம் - புட்கிகோட்;) வருணாஸங்கமம் - புட்கிகோட்; நதி அணைகட்டு இருப்பதால் எப்பொழுதும் தண்ணீர் இருக்கும். தோணியில் அக்கரைக்குப் போகலாம். ஸங்கமத்தில் ஸ்னானமோ, ப்ரதக்ஷிணமோ செய்து கொள்ளவேண்டும். ஆதிகேசவர் - வருணா ஸங்கம ஸமீபத்தில் புட்கிகோட்டின் முனையில் - ஸங்கமேஸ்வரர். ஆதிகேசவருக்குக் கீழுள்ள கோவிலில் -கர்வவிநாயகர்; புட்கிகோட்டைக்குள்ளே. இங்கிருந்து கங்கைக்கரையிலே ஜலத்தைத் தெளிப்பது வழக்கம். ப்ரஹ்லாதேஸ்வரர் - ப்ரஹ்லாத்காட். த்ரிலோசன மஹாதேவர் -த்ரிலோசனகாட்; பஞ்சகங்கா தீர்த்தம் (கட்டம்) பிந்து மாதவர், வேணிமாதவர், மாதவராய், ப்ரஸித்தமானது, கபஸ்தீஸ்வரர், லக்ஷ்மணபாலாகட்டம் மங்கள கௌரீ. அதே கோவிலில் ப்ரசித்தமான தேவி. வஸிஷ்டேஸ்வரர் -சங்கடாதேவீ துறை (கட்டம்) வாமதேச்வரர் அதுவும் அங்கேயே, பர்வதேஸ்வரர், ஆத்மவீரேச்வரருக்கு ஸமீபத்தில். மஹேச்வரர் - மணிகர்ணிகா கட்டத்தில் -ஸித்தி விநாயகர் ப்ரஸித்தம் - ஸப்தாவரண விநாயகர். ப்ரம்ம நாளத்தில் ஜபவிநாயகர் ப்ரஸித்தம் = இத்துடன் யாத்திரை பூர்த்தி. இங்கு ஸ்னானம் செய்து விட்டு விச்வேஸ்வரரைப் காசீ காண்டம் பூஜிக்க வேண்டும். பிறகு அடிக்கடி ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, பிறகு அன்னபூர்னா, விஷ்ணு தண்டபாணி, டுண்டிராஜர், பைரவர், ஆதித்யர், மோதகாதிபஞ்ச விநாயகர் இவர்களைத் திரும்பவும் பூஜை செய்ய வேண்டும். பிறகு பஞ்சகோச ப்ரதக்ஷிணத்தை நினைத்துக்கொண்டு, எல்லா தேவதைகளையும் நினைத்துக் கொண்டு அக்ஷதை போடவேண்டும். பிறகு, திரும்பவும் விச்வேஸ்வர பகவானிடம் போய் ப்ரார்த்தனை செய்யவேண்டும். ஜய விஶ்வேஸ்வர! விஶ்வாத்மன்! காசீநாத! ஜகத்குரோ! த்வத் ப்ரஸாதாத் மஹாதேவ! - க்ருதா க்ஷேத்ர ப்ரக்ஷிணா ॥ அநேகஜன்ம பாபானி க்ருதானி மம சங்கர! கதானி பஞ்சகோசாத்மா லிங்கஸ்யாஸ்ய ப்ரதக்ஷிணாத்॥ த்வத்பக்தி காசி வாஸாப்யாம் ஸஹைவ பாபகர்மணா; ஸத்ஸங்க ச்ரவணாத்யைஶ்ச யா லோகச்ச து ந : ஸதா ஹர சம்போ! மஹாதேவ! ஸர்வஞ! ஸுகதாயக! ப்ராயஶ்சித்தம் ச நிர்வ்ருத்தம் பாபாநாம் த்வத்ப்ராஸதத; புன:பாபரதிர்மாஸ்து தர்மபுத்தி: ஸதாஸ்து மே ॥ அர்த்தம் :- ஹே! காசிநாதா! ஹே ஜகத் குரோ! விஸ்வாத்மன்! விஸ்வேஸ்வரா! ஜெய ஹே! மஹாதேவா! தங்களுடைய க்ருபையினாலே நான் இந்த க்ஷேத்திரத்தைப் ப்ரதக்ஷிணம் செய்து வந்தேன். அநேக தினங்களாக நான் செய்து வந்த பாபங்களெல்லாம் இந்த பஞ்சகோசாத்மக லிங்கத்தைப் ப்ரதக்ஷிணம் - செய்ததினால் போய்விட்டன. தங்களிடம் பக்தியும், காசீவாசமும், பாபமில்லாத கர்மாக்களும் ஸத்ஸங்க ச்ரவணங்களுமாக எங்களுடைய காலம் எப்பொழுதும் சென்று கொண்டேயிருக்கட்டும்; ஹேராஜன், சம்போ மஹாதேவா, ஸர்வக்ஞ! ஸுகதாயக! தங்களுடைய க்ருபையினால் எங்களுடைய பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் செய்து முடித்து விட்டோம். திரும்பவும் யாத்திரை விதி பாபங்களில் எனக்கு ருசி ஏற்படாமல் இருக்கட்டும், தர்மபுத்தி எப்பொழுதும் திடமாக இருக்கட்டும். இந்த விதமாகப் ப்ரார்த்தித்து விட்டு, ப்ராம்மணர்களுக்கு யதாசக்தி - தக்ஷிணைக் கொடுத்துவிட்டு, கையைக் கூப்பிக் கொண்டு, பின்வரும் மந்திரத்தைக் கூறவேண்டும். பஞ்ச கோசஸ்ய யாத்ரீயம் யதாவத் யா மயா க்ருதா! ந்யூனம் -ஸம்பூர்ணதாம் யாது -த்வத்ப்ரஸாதாத் உமாபதே! - உமாபதியே - நான் விதிபூர்வமாக பஞ்சகோச யாத்திரையைச் செய்து முடித்து விட்டேன்; அதில் ஏதாவது குறைகள் இருந்தால் அது, தங்களுடைய அனுக்கிரஹத்தினால் ஸம்பூர்ணமாகட்டும். இந்த விதமாகப் ப்ராத்தனை செய்து விட்டுத் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று ப்ராம்மணர்களுக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் போஜனம் செய்து வைத்துவிட்டுப் பிறகு தான் உண்ண வேண்டும். இந்த விதமான ஸாதாரண பஞ்ச கோச யாத்திரையின் விதியை எனக்குத் தெரிந்த மட்டிலும் 'காசீரஹஸ்யம்' 'காசீதர்பணம்' என்ற கிரந்தங்களின் ஆதாரத்திலிருந்து எடுத்து எழுதியிருக்கிறேன். இந்த பஞ்சக்ரோச யாத்திரை மணிகர்ணிகையில் அல்லது முக்தி மண்டபத்தில் ஆரம்பமாகிறது. அங்கேயே வந்து ஸமாப்தியாகிறது. காசீகண்டத்தில் இந்த யாத்ராவிதி காசீரஹஸ்யத்தில் இருப்பதுபோல விஸ்தாரமாக இருப்பதில்லீ. ஆனால் இந்த தேவஸ்தானங்களின் வர்ணனையும் மஹாத்மியமும் விசேஷமாகக் கூறப்பட்டிருக்கிறது. மணிகர்ணிகாவில் இருந்து கர்தமேஸ்வரம் மூன்று க்ரோசம்; கபிலதாரா; 22 க்ரோசம் ; அங்கிருந்து மணிகர்ணிகை 23 1/2 க்ரோசம்) பிறகு 1 1/2 க்ரோசம் அன்னிய தேவதரிசனங்களுக்கு வேண்டி மார்க்கத்திலிருந்து பிறகு வந்துசேர வேண்டும். இந்த விதமான பஞ்சக்ரோச யாத்திரையெல்லாம் சேர்ந்து மொத்தம் 92 க்ரோசம் யாத்திரையாகிறது. காசீ காண்டம் தொடக்கத்தில் மணிகர்ணிகையிலிருந்து அஸிஸங்கமம் வரையில்; பிறகு திரும்பி வரும்போது வருணாஸங்கமத்திலிருந்து மணிகர்ணிகை வரும்போது கங்கைக் கரை வழியாகவே செல்லவேண்டும். மழைக்காலத்தில் கங்கையில் வெள்ளம் வந்த ஸமயம் தோணியில் செல்லலாம்; தோணியில் செல்வதினால் தோஷமில்லை. பிறகு எங்கும் நல்ல சாலீ செல்கிறது. சாலீயின் வலது பக்கத்தில் கோவில்களும் பெரிய பெரிய தோப்புகளும் கிணறுகளும் வஸதியாக இருக்கின்றன. ஒவ்வொரு தங்குமிடங்களிலும் தர்ம சாலீகளும் உணவுப் பொருள்கள் வாங்குவதற்கான வஸதியான கடைகளும் இருக்கின்றன. இந்தவிதமாக வருஷத்திற்கு ஒருமுறை - சரத்காலத்து நவராத்திரியின்போது துர்க்கா யாத்திரையும், புரட்டாசி மாதம், மாசி - சதுர்த்தியில் - கணேச யாத்திரையும், அயன யாத்திரையாகவே எண்ண வேண்டும். இரண்டு அயனங்களிலும் யாத்திரை போக முடியாவிட்டாலும்கூட, வருஷத்தில் ஒரு தடவை - இந்த யாத்திரை அவசியம் செய்ய வேண்டும். ஏனென்றால் க்ஷேத்திரங்களில் அதிகமாக பாபங்கள் சேருவதினால் அதற்கு ப்ராயசித்தமாக பஞ்சக்ரோச யாத்திரை - வருஷம் ஒருமுறை செய்வது காசி வாஸிகளின் கடமையாகும். அந்தர் கிரஹயாத்திரை: அந்தர் கிரஹயாத்திரை என்று கூறப்படும் -காசி நகரத்துக்குள்ளே செய்யப்படும் யாத்திரையை -அவகாசம் இருக்கிறவர்கள் தினமும் செய்யவேண்டும். பிரதி தினம் போக முடியாவிட்டாலும், ஒவ்வொரு சதுர்தசியும் செல்வது உசிதம். அதுவும் முடியாவிட்டால் அயனத்திலோ, வருஷத்திலோ - ஒருதடவை சென்று வந்தால் அது அநேகப் பிரகாரமான பாபங்களுக்கு சாந்தியாகும். முதலாவது ப்ராதஸ்ஸ்னானம் செய்து, (1) மோதகர், (2) ப்ரமோதகர், (3) துர்முகர், (4) ஸுமுகர், (5) கணநாயகர் - இந்த ஐந்து விநாயகர்களையும் நமஸ்கரித்து விட்டு முக்தி மண்டபத்துக்குச் சென்று பகவான் யாத்திரை விதி விஸ்வேஸ்வரரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விட்டு, பிறகு எல்லா பாபங்களும் சாந்தியடையும் பொருட்டு, அந்தர் க்ருஹ யாத்திரை செய்கிறேன் என்று ஸங்கல்பித்துக் கொண்டு, மௌனமாக மணிகர்ணிகைக்கு வரவேண்டும் - அங்கு ஸ்னானம் செய்து, மணிகர்ணிகேஸ்வரரைப் பூஜிக்க வேண்டும். மணிகர்ணிகா தீர்த்தம் ப்ரஸித்தம். மணிகர்ணிகேஸ்வரர் = கோமடத்துக்கு ஸமீபம் - பர்த்வான் கோட்டில் - ஸித்தி விநாயகர் -இங்கு தரிசனம் செய்ய வேண்டும்; கம்பலாஸ்வரதேஸ்வரர் - கோமடத்திற்கு ஸமீபம்; வ ாகீஸ்வரர், பர்வதேஸ்வரர் -சங்கடா க ாட் ஸமீபம். கங்காகேசவர் லலிதா தேவி - லலிதாகாட்- ஜராஸந்தேஸ்வரர் - மீர்காட்; ஸோமநாதர் மான்மந்திர்காட் ஆதிவராஹேஸ்வரர் அங்கேயே - தாலஸேஸ்வரர் - வழியில் இருக்கிறார், அதனால் தரிசனம் செய்ய வேண்டும். ப்ரும்மேஸ்வரர் - பாலமுகுந்தருடைய மண்டபத்தில் அகஸ்தீஸ்வரர் அகஸ்திய குண்டம் (கோதோலியாவின் ஸமீபம்) கஸ்யபேஸ்வரர் ஹரிகேசவனேஸ்வரர், ஜங்கம்பாடி வைத்யநாத் -வைத்யேஸ்வரர் - ஓதை சௌக்கி துர்வேஸ்வரர் - இந்த பெயருடன் கூடிய பிரஸித்த மஹால் இருக்கிறது. கோகர்ணேஸ்வரர் - ஓதை சௌக்கிக்கு பக்கத்தில் -பாடகேஸ்வரர் , கடஹா, இந்த இடம் இப்பொழுது மறைந்துபோய் விட்டது. அஸ்திக்ஷேபதடாகம் (தேனியா) இந்த இடமும் அநேகமாக மறைந்து விட்டது. காசீ காண்டம் கீக்கஸேஸ்வரர் - ராஜர தர்வாஜாவின் உள்ளே பாரபூதேஸ்வரர் - கோவிந்தபுரா, மச்சர் கட்டாவிற்குப் பக்கத்தில்; சித்ரகுப்தேஸ்வரர் -மச்சர் கட்டர் வில் -; சித்ரகண்டாதேவி- சௌக்கிற்கு முன்னால் - சந்தூக்கி கல்லி- பசுபதீஸ்வரர் - பிரசித்தமான பசுபதீஸ்வரமஹாலில் - பிதாமஹேஸ்வரர் - சீதனா கல்லியில் ஒரு இருண்ட பள்ளத்தில் இருக்கிறது. வருஷத்தில் ஒரு நாள் சிவராத்ரியன்று தான் தரிசனம் செய்ய முடியும். கலசேஸ்வரர் - ப்ரும்மபுரி கலஸேஸ்வரியில் சந்த்ரேஸ்வரர் - சந்த்கூபத்தில் - ஸித்தேஸ்வரிகோவில் - சந்த்ரகூப கிணறும்- வீரேஸ்வரர் - வீர தீர்த்தம் - ஸிந்தியாகாட்டில் -இந்த ஆத்ம வீரேஸ்வரர் பிரஸித்தமானவர்; இங்கு பின்னும் அநேக தேவதைகள் இருக்கிறார்கள்; வித்யேஸ்வரர் நீமவாளி, ப்ரும்மபுரி -; அக்னேஸ்வரர் - அக்னேஸ்வரகாட்டில் - உபசாந்தேஸ்வரர் கோவிலில் மற்றொரு கோவிலில் இருக்கிறார்; நாகேஸ்வரர் - போன்ஸ்லாகாட்டில் சமீபத்தில் அதை ஒட்டினால் போல் இருக்கிறார் - அரிச்சந்த்ரேஸ்வர், சிந்தாமணி விநாயகர் சேனா விநாயகர், வஸிஷ்டேஸ்வரர், காம தேவஸ்வரர், சீமாவிநாயகர் இவர்கள் எல்லாரும் சங்கடா காட்டில் (துறை) இருக்கிறார்கள். யாத்திரை விதி கருணேஸ்வரர், திருசந்தேஸ்வரர் - இவர்கள் லஹாவுரிடோவில்லா ஒரு ஹாலில் பிரசித்தம் விசாலாக்ஷி - பி ரசித்தம்; தர்மேஸ்வரர், விஸ்வபுஜாதேவி தர்மகூபத்தில்; ஆசாவிநாயகர், விருத்தாதித்யர், மீர்காட்டுக்குப் பக்கத்தில். சதுர்வக்த்ரேஸ்வரர், பிராமேஸ்வரர், சகர்கந்தகல்லியில் மனப்ரகாமேஸ்வரர், சாக்ஷிவினாயகர் பக்கத்தில். ஈசானேஸ்வரர், கோத்தவால் புராவில். சண்டிகா தேவியும் சண்டீஸ்வரரும் காளிகா கல்லியில். பவானி சங்கர் சுக்ர கூபத்திற்கு சமீபத்தில். அன்னபூரணி பிரஸித்தம்; டுண்டிராஜ்க்ணேஷ்; பிரசித்த மஹால் ராஜாராஜேஸ்வரர், ஜப வினாயகருக்கு சமீபத்தில். லாங்கலீஸ்வரர், - கோவாபஜாரில் நகுலீஸ்வரர் - விஸ்வேஸ்வரருக்கு பக்கத்தில் அனுமான்ஜீக்கு பின்னால் வரான்னேஸ்வரர்; பரத்யேஸ்வரர், பிரதிக்ரகேஸ்வரர், நிஷ்களங்கேஸ்வரர்; மார்க்கண்டேஸ்வரர் இவர்கள் தண்டபாணிக்கு முன்னால்; ஞானவாபிக்குப் பின்னால். அப்ரஸரேஸ்வரர் வடக்கு வாசலுக்குப் பக்கத்தில். கங்கேஸ்வரர் - அரசடியில் மசூதிக்கு முன்னால் மூர்த்தி மறைந்திருக்கிறது. ஞானவாபி - இதில் ஸ்னானம் செய்யவோ, ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்ளவோ செய்யலாம். நந்திகேஸ்வரர் - ஞானவாபிக்குப் பக்கத்தில், தாரகேஸ்வரா, கௌரிசங்கர் மூர்த்திக்கு கீழே; காசீ காண்டம் மஹாகாலேஸ்வரர் - மேற்கூறிய இடத்திற்குப் பக்கத்தில்; தண்டபாணி - ஞானவாபியின் மேற்குபக்கத்தில் - வெளியில், மஹேஸ்வரர் அரசின் கீழே, நிருருதி கோணத்தில். மோக்ஷேஸ்வரர் - அங்கேயே; வீரபத்ரேஸ்வரர் வாயு கோணத்தில் அவிமுக்தேஸ்வரர் - இப்பொழுது விஸ்வேஸ்வரருடைய கோவிலுக்குள் இருக்கிறது; ஆனால் பழைய ஸ்தானம் - ஞானவாபிக்கு வடக்கு வாசலில் இருந்தது -, மோதாதி பஞ்ச விநாயகர் - ஞானவாபிக்குப் பக்கத்தில் ஔரங்கசீப் கோவில்களை இடித்தபோது அநேகம் தேவதாமூர்த்திகள் மறைந்து விட்டன. ஆனால் மசூதிக்குக் கீழே நான்கு பக்கமும் பழைமையான தேவஸ்தானங்களில் பூஜை முதலியவைகள் செய்கிறார்கள். பிறகு விஸ்வநாதர் கோவிலுக்குள் வந்து தரிசித்துப் பூஜை செய்து மௌன வ்ரதத்தை முடித்துக் கொண்டு, இந்த மந்திரத்தைக் கூறவேண்டும், "அந்தர் கிரஹஸ்ய யாத்ராயாம் - யதாவத் யா மயா க்ருதா, ந்யூனானி ரிக்தயா சம்பூஹா; ப்ரியதாம் அனயா விபு:" (அர்த்தம்) அதாவது விதிப்படிக்கு என்னால் முடிக்கப்பட்ட இந்த அந்தர் கிரஹ யாத்ரையில் ஏதாவது அதிகமோ - குறைவோ ஏற்பட்டிருந்தால் அதை க்ஷமித்து பகவான், மகிழ்ச்சியடைய வேண்டும். இப்படி பிரார்த்தித்துக் கொண்டு முக்தி மண்டபத்திற்கு வந்து சற்று இளைப்பாறிவிட்டுத் தங்கள் தங்கள் கிரஹத்திற்குச் செல்லலாம். சக்தியையும் பக்தியையும் அனுசரித்துப் பிராமணர்களுக்குப் போஜனம் செய்வித்து தக்ஷிணையைக் கொடுக்க வேண்டும், யாத்திரையின் பூராபலமும் பெறவும் இந்த விதமாக அந்தர் கிரஹ யாத்திரையைப் பூர்த்தி செய்தால் பாபம் நீங்கி புண்ணியத்திற்குப் பாத்திரவானாகிறான். யாத்திரை விதி ருதுயாத்திரை ;- (1) வருஷருது :- துவாரகாபுரி சங்கூதாதா. 2. சரத்ருது :- விஷ்ணுகாஞ்சிபுரி - பஞ்சகங்கா பிராந்தியம். 3. வசந்தருது :- மதுராபுரி - இது அலீப்புரத்தில் உத்தரார்த்தத்திலிருந்து ஆரம்பித்து, வருணா தீரத்திலே நக்கீகாட் வரையில். 4. கிரீஷ்மருது :- அயோத்யாபுரி ராமேஸ்வரம் - பஞ்சக்ரோசத்தினுடைய ராமேஸ்வரம் வருணா நதிக்கரையில். 5. ஹேமந்தருது :- அவந்திகாபுரி - ஹரதீர்த்தத்தில் வ்ருத்த காலேஸ்வரரிடமிருந்து, கிருத்திவாஸேஸ்வரர் வரையில். 6. சிசிரருது :- மாயாபுரி - அஸ்ஸி சங்கமத்தில். ஒவ்வொரு ருதுவிலும் காசீபுரி லலிதா காட்டில் :- இவைகள் ஏழும் மோக்ஷபுரி யாத்திரைகள். இவைகளில் யதாசக்தி ஸ்னானம், பூஜை, சிராத்தம், தானாதி கர்மங்களை செய்வதினால் முன்கூறிய ஏழுபுரியின் பலன்களும் கிடைக்கிறது. காசீகண்டத்தில் ஏழாவது அத்யாயத்தில் இந்தப் புரிகளின் மகாத்மியம் விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. காசியில் இப்பொழுதும் எல்லாத் தீர்த்தங்களும், எல்லா தேவதைகளும் வசிக்கிறார்கள். அதனால் காசிவாசிகளுக்கு இந்த ஏழு புரிகளும் இங்கேயே இருக்கின்றன. இதை ருதுயாத்திரை அல்லது ஸப்தபுரியாத்திரை என்று கூறுகிறார்கள். மாதயாத்திரை :- சித்திரைமாதம் :- காமகுண்டத்தில் ஸ்னானம், காலேஸ்வரருக்குப் பூஜை; இந்த யாத்திரை தேவதைகள் செய்திருக்கிறார்கள். இப்பொழுது காமகுண்டம் மறைந்து விட்டது, மஹாத்ரிலோச்சனம் இருக்கிறது. காசீ காண்டம் வைகாசிமாதம் :- விமலகுண்டத்தில் ஸ்னானம் - விமலேஸ்வரர் பூஜை, இந்த யாத்திரையை தைத்யர்கள் செய்திருக்கிறார்கள். விமலகுண்டம் ஜங்கம்பாடியில் இருந்தது - மறைந்து விட்டது. ஆனிமாதம் :- ருத்ராவாஸதீர்த்தம், ருத்ராவாஸேஸ்வரர் பூஜை - தேவதைகள் -இந்த யாத்திரையைச் செய்திருக்கிறார்கள். தீர்த்தம், கங்கை, மணிகர்ணிகைதான். ஆடிமாதம் :- லக்ஷ்மிகுண்டம், லக்ஷ்மிதேவி இங்கு கந்தர்வர்கள் யாத்திரை செய்திருக்கிறார்கள். ஆவணிமாதம் :- காமாக்ஷிகுண்டம், காமாக்ஷிதேவி. இப்பொழுது இதை கமச்சா என்று கூறப்படுகிறது. வித்யாதரர்கள் இந்த யாத்திரையைச் செய்திருக்கிறார்கள். புரட்டாசிமாதம்:- கபால மோசனதீர்த்தம், குலஸ்தம்பம் ஹோல் ஹரவாலாட்ட பைரவர் தரிசனம், கின்னரர்கள் இந்த யாத்திரையைச் செய்திருக்கிறார்கள். லாட்ட பைரவர் பிரசித்தி வாய்ந்தவர். ஐப்பசிமாதம் :- மார்க்கண்டேய தீர்த்தம், மார்க்கண்டேயேஸ்வரர் - பித்ருக்கள் இந்த யாத்திரையை செய்திருக்கிறார்கள். இது ஞானவாபிக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஆனால் மறைந்து விட்டது. கார்த்திகைமாதம் :- பஞ்ச கங்கா தீர்த்தம் - பிந்துமாதவம் - ரிஷிகள் இந்த யாத்திரையைச் செய்திருக்கிறார்கள். மார்கழிமாதம் :- பிசாசமோசனம் - கபர்தீஸ்வரர், வித்யாதரர்கள் இந்த யாத்திரையைச் செய்திருக்கிறார்கள். தைமாதம் :- தனதகுண்டம் - தனதேஸ்வரர் - குஹ்யர்கள் இந்த யாத்திரையைச் செய்திருக்கிறார்கள் - குண்டம் மறைந்துவிட்டது. அன்னபூரணி கோவிலில் குபேரேஸ்வரர் இருக்கிறார். யாத்திரை விதி மாசிமாதம் :- கோடி தீர்த்தம் கோடிலிங்ககேஸ்வரர் - யக்ஷர்கள் இந்த யாத்திரையைச் செய்திருக்கிறார்கள். தீர்த்தம் மறைந்திருக்கிறது. சாக்ஷிவினாயகருக்குப் பக்கத்தில். பங்குனிமாதம் :- கோகர்ணகுண்டம், கோகர்ணேஸ்வரர்; பைசாசர்கள் இந்த யாத்திரையைச் செய்திருக்கிறார்கள். இங்கிருக்கும் கோகர்ணகூபத்தைத்தான் குண்டம் என்கிறார்கள். இடம் கோதைசௌக்கி. இந்த மாதயாத்திரையைப் பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. தீர்த்தஸ்னானம், அதிஷ்டான தேவதைகளின் பூஜை, தரிசனம்; லிங்க புராணத்தில் மாதம் முப்பதுநாளும் இந்த யாத்திரையைச் செய்யச் சொல்லியிருக்கிறது. பூராமாதம் முடியா விட்டாலும் யதாசக்தி செய்ய வேண்டியது. காசி கண்டத்தில் இந்த யாத்திரையைப்பற்றிக் கூறியிருக்கவில்லீ. ஆனால் அந்தந்த மகாத்மியத்தையும், தேவதைகளின் வர்ணனைகளையும் கூறியிருக்கிறது. மாதம்தோறும் செய்யும் யாத்திரையை அநேகம்பேர்கள் செய்வதில்லீ. ஆனால் வைகாசி மாதம் மணிகர்ணிகைஸ்னானம், கார்த்திகைமாதம் பஞ்ச கங்காஸ்னானம், மாசி மாதம் தசாஸ்வமேதஸ்னானம் இவைகளைச் செய்கிறார்கள். பக்தர்கள் யோசித்து, உசிதம்போல் செய்யவேண்டியது. இதுபோல்தான் பக்ஷயாத்திரையும்; ஆனால் எங்கு கொஞ்சம் அதிகமாக இருக்கிறதோ அதைக் குறிப்பிட்டிருக்கிறது. "ஜேஷ்டேமாஸே, சிதே பக்ஷே பக்ஷம் ருத்ரசரோவர: குருவன்வை வார்ஷிகீம் யாத்ராம் ந விக்னே ரபிஸியதே" ஆனிமாதத்து சுக்லபக்ஷம் முழுவதும் தசாஸ்வமேகத்தில் ருத்ர சரோவருக்கு வருஷம் தோறும் யாத்திரை செய்பவன் விக்னங்களைத் தாண்டிவிடுகிறான். காசீ காண்டம் அதனால் ஆனிமாதத்து சுக்லபக்ஷ முழுவதும் தசாஸ்வமேதத்திற்கு யாத்திரையாகச் செல்ல வேண்டியது. அதே போல் ஆவணிமாத சுக்லபக்ஷத்தில் துர்க்காகுண்டத்தில் ஸ்ரீ துர்க்கா தேவி தரிசனத்துக்கும், பூஜைக்கும் (யாத்திரை) செல்ல வேண்டும். வைஷ்ணவ ஸ்தலங்களாகிய கோபாலமந்திர், ராம்நகர், ராம்பாக் இந்த இடங்களில் டோலோத்ஸவம் நடக்கும் . அப்பொழுது சந்தியா காலத்தில் மேளாவும், தரிசனமும் கோலாகலமாக நடக்கும்; அதேபோல் ஐப்பசி மாதத்தில் கிருஷ்ணபஷத்தில் கங்கா தேவியின் கரை -; அல்லது பித்ருகுண்டம் ஆகிய பவித்ர தீர்த்தங்களில் ஸ்னானம், தர்பணம், யாத்ரா காரியங்களைச் செய்து கொண்டு பித்ருபக்ஷத்து யாத்திரையைக் கொண்டாடுகிறார்கள். காசீ கண்டத்தில் அத்தியாயம் தெண்ணூற்றேழில் 235, 236 ஸ்லோகங்களில் இந்த மாகாத்மியம் எழுதப்பட்டுள்ளது. பிறகு கார்த்திகைமாதம் சுக்லபக்ஷம் முழுவதும் ஞாயிறு செவ்வாய் நீங்கலாக பெரும்பாலும் தோட்டங்களில் குடும்பத்துடன் சென்று நெல்லி விருஷத்தைப் பூஜைசெய்து, பிராம்மண போஜனம் செய்வித்து இஷ்டமித்ர பந்து ஜனங்களுடன் போஜனம் செய்து கொண்டாடுகிறார்கள். யோகிராஜர் பர்த்ரு ஹரி தன்னுடைய பிரசித்தி பெற்ற வைராக்ய சதகத்தில் இந்த அர்த்தம் தொனிக்கும்படி எழுதியிருக்கிறார். அதாவது எங்கு தோட்டங்களில் நாலு விதமான உணவு வகைகளைத் தயாரித்துச் சாப்பிடுவதே குடும்பம் நடத்துவதாக இருக்கிறதோ, கடினத்திலும் கடினம் தபஸ் எங்கு செய்யப்படுகிறதோ, கௌபீனம் மாத்திரம் அணிவது வஸ்திர அலங்காரமாகக் கருதப்படுகிறதோ, பிக்ஷையெடுத்து சாப்பிடுவதே பூஷணமாகக் நினைக்கப்படுகிறதோ, மரணத்தையே மங்களமாகக் கொண்டாடப்படுகிறதோ அந்தக் காசீபுரியை விட்டுக் பண்டிதர்கள் ஏன் வேறு இடங்களுக்கு செல்லுகிறார்கள் என்பது அதிசயமாக இருக்கிறது . இதுபோல் மார்கழிமாதம் யாத்திரை விதி சுக்லபக்ஷம் தோட்டங்களில் கடம்ப விருக்ஷங்களுக்கு அடியில் பூஜை செய்து உணவு சமைத்துச் சாப்பிடுகிறார்கள், மாசிமாதத்தில் சுக்லபக்ஷம் முழுவதும் கங்கா தேவியின் மறுகரையில் வியாஸபுறா என்று அழைக்கப்படும் ஸ்ரீமான் காசி ராஜாவின் கோட்டையில் "வியாஸ யாத்திரையை" கொண்டாடுகிறாகள். அங்கு சிவலிங்கத்தின் உருவில் இருக்கும் வியாஸரை தரிசிக்கிறார்கள் பிறகு ராமநகரில் இருக்கும் தடாகத்திற்குச் சென்று உணவு சமைத்துச் சாப்பிட்டுவிட்டு சாயங்காலம் தங்கள் தங்கள் கிருஹத்திற்குச் செல்லுகிறார்கள். வியாஸருடையத் தரிசனம் முக்யமாகக் கருதப்படுகிறது. தக்ஷிண தேசத்திலிருந்து வரும் யாத்ரிகர்கள் கூடவியாஸகாசிக்குச் சென்று வியாஸரைத் தரிசிக்கிறார்கள். இந்த யாத்திரையெல்லாம் பக்ஷம் முழுவதும் நடக்கும் என்று சொல்ல முடியாது. பிதுர் பக்ஷத்தில் கூட எல்லாரும் தசாஸ்வமேதத்திற்குப் பூரி யாத்திரை செல்வதாக நினைத்துக் கொண்டு சென்று தர்ப்பணம் முதலியவைகள் செய்கிறார்கள். மற்றும் ஆவணி, கார்த்திகை,மார்கழி, மாசி, சுக்லபக்ஷ முழுவதும் யாத்திரை போவதாகத்தான் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்பொழுது ஜனங்கள் மேளா (திருவிழா) கொண்டாடுவதற்குச் செல்கிறார்களே தவிர யாத்திரைக்கல்ல. இதன் ஆதாரம் யாத்திரையாகும். "திதியாத்திரை" வருஷ முழுவதும் செய்யப்படுகிற திதியாத்திரையைப் பற்றி காசீ கண்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதையும் இங்கு கூறுகிறோம். ஒவ்வொரு சுக்லபக்ஷ திருதியையிலும், "கௌரி யாத்திரை" செய்யவேண்டும். சுக்லபக்ஷ திருதியையன்று பரம உத்தமமான கௌரி யாத்திரை செய்வதால் மிகவும் செழிப்பு உண்டாகும். தீர்த்தங்கள் ஸஹிதம் நவகௌரிகள் இருக்கும் இடம்கீழே குறிப்பிட்டிருக்கிறது. காசீ காண்டம் கௌரியாத்திரை :- முகநிர்மாலிககௌரி :- காய்காட், (கட்டத்திற்கு காட்) - கட்டம் துறை மேல் ஹனுமான்ஜியின் கோவில்; ஜேஷ்டா கௌரி :- ஜேஷ்டா வாபி என்ற ஒரு கிணறு இருந்தது. அது இப்பொழுது மறைந்து விட்டது. கர்ணகர்டா மஹாலில் ஜேஷ்டேஸ்வரருக்குப் பக்கத்தில் "சௌ பாக்ய கௌரி", ஞானவாபி விஸ்வநாதர் கோவிலில் வாயு கோணத்தில் இருக்கும் பார்வதிஜி. சிருங்காரகௌரி:- ஞானவாபியில் விஸ்வேஸ்வரருடைய ஈசான கோணத்தில் இருக்கும் அன்ன பூர்ணாதேவி; விசாலாக்ஷிதேவி :- மீர்காட்டில் விசால தீர்த்தம்; பிரசித்திமான லலிதாதேவி :- லலிதா தீர்த்தம் லலிதா காட்டில் பிரசித்தம். பவானிகௌரி :- பவானி தீர்த்தம் காளிகா கல்லி = சுக்ரேஸ்வரருடைய பக்கத்தில்; மங்களா கௌரி :- பிந்து தீர்த்தம்; பஞ்ச கங்கா காட் பிரசித்தமான கவர்தீஸ்வரர் கோவில் இருக்கிறது. மஹாலக்ஷ்மிகௌரி :- லக்ஷ்மிகுண்டம் = லக்ஷ்மி மஹால் பிரசித்தமானது. "விநாயக யாத்திரை" ஒவ்வொரு கிருஷ்ண பக்ஷ சதுர்த்தியன்று விநாயகர் யாத்திரை சொல்லப்பட்டிருக்கிறது. அந்தத் திதியும் செவ்வாய்க் கிழமை வந்தால் மிகவும் விசேஷம். ஒவ்வொரு சதுர்த்தியும் கணேசயாத்திரை செய்ய வேண்டும். அவரை உத்தேசித்து பிராம்மணர்களுக்கு லட்டு கொடுக்க வேண்டும். ஒரே தினம் ஐம்பத்து ஆறு கோவில்களுக்கும் யாத்திரை செய்ய முடியாது. அதனால் ஒவ்வொரு சதுர்த்திக்கும் ஒவ்வொரு கோவிலுக்குப் போவது உசிதம். ஒவ்வொரு சுற்றளவிற்கும் எட்டு எட்டு விநாயகர் வீதம் யாத்திரை விதி ஐம்பத்தாறு விநாயகர்களின் பெயர் காசீ கண்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. 1. அர்க்க விநாயகர் :- லோலார்க்க குண்டத்திற்கு சமீபத்தில் கங்கைக் கரையில். 2. துர்க விநாயகர் :- துர்கா குண்டத்தில், 3. பீமசண்ட விநாயகர் :- பீமசண்டிகிராமம், பஞ்சக்ரோச வழியில். 4. தேகலி விநாயகர் :- பிரசித்தபஞ்சக்ரோசத்தில், 5. உத்தண்ட விநாயகர் :- புயலி கிராமத்தில் ராமேஸ்வரருக்கு சமீபம். 6. பாசபாணி விநாயகர் :- மஹால் சதர் பஜார் லீனில். 7. கர்வ விநாயகர் :- வர்ணா சங்கமத்தில் ஆதிகேசவருக்கு மேற்கு பக்கத்தில். 8. ஸித்தி விநாயகர் :- மணிகர்ணிகா காட்டில் அமேட்டி சிவாலயத்தின் சமீபத்தில். 9. லம்போதர விநாயகர் :- கேதாரத்திற்கு சமீபத்தில் சிந்தாமணி என்று பெயரில் பிரசித்தமானவர். 10. கூடதந்த விநாயகர் :- கிருமிகுண்ட மஹாலில், 11. சாலகண்ட விநாயகர் :- மடுவாடி பஜார், 12. கூஷ்மாண்ட விநாயகர் :- குல்வாரியா கிராமம்; சண்டிகேஸ்வரருக்குப் பக்கத்தில். 13. முண்ட விநாயகர் :- த்ரிலோசனருக்குப் பக்கத்தில் வாராணஸி தேவி கோவிலில். 14. விகடதந்த விநாயகர் :- தூபச்சண்டியின் பின்பக்கத்தில், 15. ராஜபுத்ர விநாயகர் :- ராஜகாட்டில் குடக்கிகோட்டையில், காசீ காண்டம் 16. ப்ரணவ விநாயகர் :- த்ரிலோசனகாட்: ஹிரண்ய கர்மேஸ்வரருக்குப் பக்கத்தில்; இத்துடன் இரண்டாவது சுற்று முடிகிறது. 17. வக்ரதுண்ட விநாயகர் :- செனசட்டிகாட், ராணாமஹாலில், இவரை ஸரஸ்வதி விநாயகர் என்று கூறுவார்கள். 18. ஏகதந்த விநாயகர் :- பங்காலி தோலாவில் புஷ்பதந்தேஸ்வரருக்குப் பக்கத்தில். 19. த்ரிமுக விநாயகர் :- சிகராவில் இவருக்கு வானரன், சிம்மம், யானை மூன்றுமுகம் உண்டு. 20. பஞ்சாசி விநாயகர் :- பிசாச மோசன தீர்த்தத்தில். 21. ஹேரம்ப விநாயகர் :- பிசாச மோசனத்தின் பக்கத்தில் வால்மீகக்குன்று. 22. விக்னராஜ விநாயகர் :-சித்ரகூடகுளம் இருக்கும் தோட்டத்தில். 23. வரத விநாயகர் :- ராஜகாட்டிலிருந்து பிரஹலாத காட்டுக்குச் செல்லும் ரோட்டில். 24. மோதகப்ரிய விநாயகர் :- த்ரிலோசனத்தில் ஆதிமஹா தேவர் கோவிலில் - இத்துடன் மூன்றாவது சுற்று முடிவு. 25. அபயத விநாயகர் :- தசாஸ்வமேத காட்டில் சூலடங்கேஸ்வரர் கோவிலில். 26. சிம்ஹ துண்ட விநாயகர் :- பாலமுகுந்த சௌக்கட்டாவிற்குப் பக்கத்தில் ப்ரும்மேஸ்வரர் கோவிலில். 27. கூனிதக்ஷ விநாயகர் :- லக்ஷ்மி குண்டத்தில், 28. க்ஷிப்ர ப்ரஸாதன விநாயகர் :- பித்தர குண்டத்தில். 29. சிந்தாமணி விநாயகர் :- இஸ்ரகங்கியில், யாத்திரை விதி 30. சுத்தஹஸ்த விநாயகர் :- படேகணேசர் பிரதக்ஷிணத்தில் இவரை ஹஸ்த தந்த விநாயகர் என்று கூறுவார்கள். 31. பிச்சண்டில் விநாயகர் :- பிரஹ்லாத காட்டில். 32. உத்தண்ட முண்ட விநாயகர் :- த்ரிலோசனரின் பிரதக்ஷிணத்தில் வாராணசி தேவிகோவிலில், இத்துடன் நான்காவது சுற்று முடிவு. 33. ஸ்தூல தந்த விநாயகர் :- மானஸ மந்திர் காட் சோமேன்வரரின் வாசலில். 34. கலிமிய விநாயகர்:- சாக்ஷிவிநாயகரில் மனப்ரகாமேச கோவிலில். 35. சதுர்த்த விநாயகர் :- துருவேஸ்வரர் கோவிலில், ஓதை சௌக்கி பக்கத்தில். 36. த்விதுண்ட விநாயகர் :- சூர்ய குண்டம் சாம்பாதித்ய கோவில் ப்ராகாரத்தில் இவரை இரட்டை முக விநாயகர் என்றும் கூறுவார்கள். 37. ஜேஷ்ட விநாயகர் :- காசிபுரமஹாலில் கர்ணகண்டருக்குப் பக்கத்தில் ஜேஷ்டவரருக்கு பக்கத்தில். 38. கஜ விநாயகர் :- மச்சர்கட்டாவில் பாரபூதேஸ்வரர் கோவிலில் ராஜவிநாயகர் என்றும் பிரசித்தம். 39. பால விநாயகர் :- ராம்காட்டில். 40. நாகேஸ்வர விநாயகர் :- போன்ஸ்லாகாட், நாகேஸ்வர கோவிலில்; இத்துடன் ஐந்தாவது பிரதக்ஷிணம் முடிவு. 41. மணிகர்ணிகா விநாயகர் :- மணிகர்ணிகை சௌக்கிற்குக் பக்கத்தில் 42. ஆசாவிநாயகர் மீர்காட் :- அனுமான் கோவிலில். 43. சிருஷ்டி விநாயகர் :- காளிகா கல்லியில். காசீ காசீகாசீ காண்டம் காண்டம்காண்டம் 44. யக்ஷ விநாயகர் :- டுண்டிராஜருக்குப் பக்கத்தில், மேற்கு வாயிலில். 45. கஜ கர்ண விநாயகர் :- பான்ஸ்கேபாடல், கொத்தவாலக புரத்தில் ஈசானேஸ்வரருக்கு சமீபத்தில். 46. சித்ரகண்ட விநாயகர், சாந்தினி சௌக் கிழக்கு வாயிலில். 46. ஸ்தூல ஜங்க விநாயகர், பஞ்சகங்காவில் மங்கள கௌரி பக்கத்தில், இவரை மித்ர விநாயகர் என்று கூறுகிறார்கள். 47. ஸ்தூல ஜங்க விநாயகர், பஞ்சகங்காவில் மங்கள கௌரி பக்கத்தில், இவரை மித்ர விநாயகர் என்று கூறுகிறார்கள். 48. மங்கள விநாயகர் :- கார்த்த வீரேஸ்வரர் கோவிலில் - இத்துடன் ஆறாவது பிரதக்ஷிணம் முடிவு. 49. மோதக விநாயகர் :- ஞானவாபிக்குத் தெற்கு பக்கத்தில். 50. பிரமோத விநாயகர் :-விஸ்வநாதரின் கச்சேரியில். 51. ஸுமுக விநாயகர், 52. துர்முக விநாயகர், 53,கணநாத விநாயகர் அதிலேயே இருக்கிறது. 54. ஞான விநாயகர் :- ஞானவாபியில். 55. துவாரவிநாயகர்:- கோவில் வாசலுக்கு அருகில். 56. அவிமுக்த விநாயகர் :- அவிமுக்தேஸ்ரருக்குப் பக்கத்தில் இத்துடன் ஏழாவது ஆவரணம் முடிந்தது. "ஸப்தரிஷி யாத்திரை" ஒவ்வொரு பஞ்சமி திதிக்கும் யாத்ரா பிறவிகள் ஸப்தரிஷி யாத்திரை செய்கிறார்கள். இவருடைய பெயர்கள் காசீகண்டத்தில் யாத்ராவிதியை அனுசரித்து எழுதப்பட்டிருக்கிறது. யாத்திரை யாத்திரையாத்திரை விதி விதிவிதி கஸ்யபேஸ்வரர் :- ஜங்கம்பாடி ரோடில் - காசீகண்டத்தில் இந்த ஸ்தானத்தில் ஆங்கிரஸேஸ்வரருடைய பெயர் - பதினெட்டாவது அத்யாயத்தில் கூறப்பட்டிருக்கிறது. அத்ரீஸ்வரர்- ஓதைக் சௌக்கில் மேற்கு பக்கத்தில் இருக்கிறது. இப்பொழுது மறைந்திருக்கிறது. மரீசீஸ்வரர் :- நாககூபத்தில்; கௌதமேஸ்வரர் கதோலியாவில்; மஹாராஜா காசீ நரேஸ்வரருடைய சிவாலயத்தின் பிரதக்ஷிணத்தில். காசீகண்டத்தில் பதினெட்டாவது அத்யாயத்தில் இருபத்தோறாவது ஸ்லோகத்தில் கேளதமேஸ்வரரை க்ருத்வீஸ்வரர் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. புலகீஸ்வரர் :- புலஸ்தீஸ்வரர் - மணிகர்ணிகையில் ஸொர்க்கத்வாரத்தில் மேற்கில் வஸிஷ்டேஸ்வரர் :- சங்கடாகாட்டில்; இங்கேயே குருந்ததீஸ்வரரும் இருக்கிறார் - ஆனால் காசீகண்டத்தில் வருணைக்கரை என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த யாத்திரையை ஸப்தரிஷி யாத்திரை என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு அஷ்டமிக்கும் பைரவயாத்திரை, துர்க்கா யாத்திரை, அஷ்டாயதன யாத்திரை, த்ரிலோசன யாத்திரை, ஸ்வப்னேஸ்வரி யாத்திரை, மஸ்ச்சோதரியாத்திரை, ஞானவாபியாத்திரை, என்றெல்லாம் யாத்திரை செய்யவேண்டுமென்று காசீகண்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அஷ்டாயனயாத்திரையைத்தான் விசேஷமாகச் செய்கிறார்கள். பைரவ யாத்திரையையும், துர்க்கா யாத்திரையையும் ஜனங்கள் செவ்வாய்கிழமையில் செய்கிறார்கள். அதனால் அவற்றைப் பற்றி வாரயாத்திரையில் கூறப்பட்டிருக்கிறது. அதில் பார்த்துக் கொள்ளவும். த்ரிலோசன மகாத்மியம் - காசீகண்டத்தில் 75 - 76 வது அத்யாயத்தில் இருக்கிறது. ஸ்வப்னேஸ்வரியின் வர்ணனை எழுபதாவது அத்யாயத்தின் கடைசியில் காசீ காண்டம் இருக்கிறது. மஸ்ச்சோதரியின் கதை - ஓங்காரேஸ்வரருடைய வர்ணனையில் 73 வது அத்யாயத்தில் இருக்கிறது. அதேபோல் ஞானவாபியின் மகாத்மியம் 33 -34 வது அத்யாயத்தில் பார்த்துக் கொள்ளலாம். அஷ்டமியில் செய்யவேண்டிய யாத்திரைகளெல்லாம் காசீகண்டத்தில் சதுர்த்தசி என்று குறிக்கப்பட்டிருக்கிறது. அதனால் யாத்ரிகர்கள் தங்கள் சௌகரியப்படி அஷ்டமியிலோ, சதுர்தசியிலோ செய்துகொள்ளலாம். காசீகண்டத்தில் நூறாவது அத்யாயத்தில் அஷ்டாயதன யாத்திரை குறிக்கப்பட்டிருக்கிறது. தக்ஷேஸ்வரர் :- வ்ருத்திகால கூபத்திற்கு வடக்கே பெரிய சிவாலயத்தில்; பார்வதீஸ்வரர் :- த்ரிலோசனத்தில் ஆதிமஹாதேவருக்குப் பக்கத்தில், பசுபதீஸ்வரர் :- பிரசித்தமான பசுபதி மஹாலில். கங்கேஸ்வரர் :- ஞானவாபிக்குக் கிழக்கில் அரசமரத்தடியில். நர்மதேஸ்வரர் :- த்ரிலோசனர் கோவிலுக்கு முன்னால் சிவாலயத்தில். கபஸ்த்தீஸ்வரர் :- மங்களகௌரியின் கோவிலில். சதீஸ்வரர் :- வ்ருத்த காலருக்குப் போகும் ரோடில், ரத்னேஸ்வரருக்கு சமீபத்தில். தாரகேஸ்வரர் :- ஞானவாபிக்கு கிழக்கில், கௌரிசங்கருக்கு கீழே, ஆனால் இப்பொழுது மூர்த்தி மறைந்திருக்கிறது. ஒவ்வொரு நவமிக்கும், நவதுர்கா என்னும் நவசண்டி யாத்திரையைப் பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. திதி அஷ்டமியிலோ, நவமியிலோ சுபத்தைக் கொடுக்கும் சண்டிகையின் யாத்திரை செய்ய வேண்டும். யாத்திரை விதி நவசண்டிகளின் பெயரும் எழுதியிருக்கிறது. தக்ஷிணதிசையில், துர்க்கை, நிர்ருதி கோணத்தில் மஹாமுண்டா, கிழக்கு திக்கில் சங்கரி அக்னி கோணத்தில் ஊர்த்வகேசி, காசிபுரியின் நடுமத்தியில் சித்ரகண்டா, இந்த யாத்திரை அநேகமாக வழக்கத்தில் இல்லீ. ஆனால் இரண்டு நவராத்ரியிலும் நவமியன்று அல்லது பிரதமையிலிருந்து நவமி வரையில் ஒன்பது தினங்களுக்கு நவதுர்க்காயாத்திரை செய்கிறார்கள். நவதுர்க்கைகளின் பெயர்கள் வராஹ புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. "தேவிகளுடைய பெயர்கள்" 1. சைலபுத்ரிதுர்க்கா - வர்ணா தடத்தில் மடியா காட்பக்கத்தில் சைலேஸ்வரருடைய கோவில் இருக்கிறது. 2. ப்ரும்மசாரிணீ துர்க்கா - பஞ்ச கங்கைக்கு அடுத்துள்ள துர்க்கா காட் என்ற இடத்தில் பிரசித்தியாகவுள்ளது. 3. சித்ரகண்டா துர்க்கை - சௌக்கிற்கு முன்னால் சந்தூகி கல்லியில். 4. கூஷ்மாண்ட துர்க்கா - துர்க்கா குண்டத்திலுள்ள துர்க்கா தேவியே. 5. ஸ்கந்தமாதா - ஜெய்த்பூனா ம ஹாலிலுள்ள பிரசித்தமான வாகீஸ்வரி தேவியை÷ய் ஸ்கந்தமாதா என்கிறார்கள். 6. காத்யாயிநீதுர்க்கா :-ஆத்மவீரேஸ்வரருடைய கோவிலில் இருக்கிறது. 7. காளராத்ரிதுர்க்கா :- காளிகாகல்லில் காளிகாமாதா வைத்தான் காளராத்ரி என்று கூறுகிறார்கள். 8. மஹாகௌரி துர்க்கா :- பஞ்சகங்காவிலுள்ள அன்னபூர்ணா, மங்களகௌரி, சங்கடா - தேவி, இம்மூன்று தேவிகளையும் அவரவர்களுடைய இஷ்டபிரகாரம் பூஜிக்க வேண்டியது. முக்யமாக அன்னபூரணி கோவிலில் தான் கூட்டமிருக்கிறது. காசீ காண்டம் 9. ஸித்திதாத்ரீ :- புலானாலாவின் மஹாலில் ஸித்திமாதாவின் கல்லில் இருக்கிறது. சிலர் சந்தரகூபத்திற்கு வளைவில் இருக்கும் ஸித்தேஸ்வரி மஹாலில் இருக்கும் ஸித்தேஸ்வரியை தரிசிக்கிறார்கள். இது நவராத்ரி யாத்திரை; ஆனால் காசீகண்டத்தில் நூறாவது அத்தியாயத்தில் 76 வது ஸ்லோகத்தில் ஒவ்வொரு அஷ்டமிக்கும், நவமிக்கும் துர்கா யாத்திரை செல்லவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. (அஷ்டமிக்காவது, நவமிக்காவது) காசீகண்டம் 79 வது அத்யாயம் 90, 91 ஸ்லோகங்களில் எட்டு திக்குகளில் உள்ள துர்க்கையும் நகரத்தின் மத்தியில் ஒரு துர்க்கையுமாக ஒன்பது அதிஷ்டாத்ரீ தேவிகளாகக் கூறப்பட்டிருக்கிறது. ஸனத்குமார ஸம்ஹிதையில் வியாஸேஸ்வரரின் யாத்திரையைக்குறிப்பிட்டிருக்கிறது; கர்ணகண்டாவில் நவமி அல்லது பௌர்ணமியன்று வியாஸபுரியை தரிசனம் செய்துவிட்டு உபவாஸம் இருந்து வியாஸேஸ்வரரை ஆராதித்துக்கொண்டு அவருக்கு ஸமீபத்திலேயே இரவு கண்விழித்துக் கொண்டு இருந்துவிட்டு மறுநாள் காலீ வியாஸேஸ்வரரைப் பூஜித்து தரிசனம் செய்தால் ஸர்வபாபங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். இந்த வியாஸபுரி கங்கைக்கு அக்கரையிலுள்ள வியாஸபுரா என்னும் கிராமம் என்று சிலர் கூறுகிறார்கள். அதுதான் வியாஸேஸ்வரரின் இருப்பிடமென்னும் பழைய கோவிலும் அங்குதான் இருக்கிறதென்று கூறப்படுகிறது. ஆனால் காசீகண்டத்தில் 95 வது அத்தியாயத்தில் வியாஸேஸ்வரர் கர்ண -கண்டாவில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. விஷ்ணு புராணம் யாத்திரை :- ஒவ்வொரு ஏகாதசி திதிக்கும் விஷ்ணுவை முன்னிட்டு தீர்த்தங்களுக்கு யாத்திரை செய்வது உசிதம். காசீகண்டத்தில் 61 வது அத்யாயத்தில் விஷ்ணு தீர்த்தவர்ணணை இருக்கிறது. இதுவே வாயு புராணத்தில் லக்ஷ்மீஸம்ஹிதையில் யாத்திரை விதி சொல்லப்பட்டிருக்கிறது. காசியில் அநேக தீர்த்தங்களும், அநேக லிங்கங்களும் இருக்கின்றன. எங்கெங்கே தீர்த்தங்களும் லிங்கங்களும் இருக்கின்றனவோ - அங்கங்கே மோக்ஷம் அளிக்கும் விஷ்ணு மூர்த்தியும் எழுந்தளியிருக்கிறார். பஞ்சக்ரோசத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எங்குமே அந்தந்த தீர்த்தங்களுடன் பெயருடன் ஸனாதனரான விஷ்ணுமூர்த்தியும் எழுந்தருளியிருக்கிறார். காசி சிவ புரியானாலும் ஹரிக்கும், ஹரனுக்கும் பிரியமானது. இங்கு இருவருக்கும் பேதமில்லீ. விஷ்ணுவாஸரமான ஏகாதசி திதியில் முன்குறிப்பிட்டது போல எல்லா விஷ்ணுதீர்த்தங்களிலும் ஸகல பலன்களும் கிடைப்பதற்காக யாத்திரை செல்ல வேண்டும். பஞ்சகங்கா கட்டத்தில் பிந்து மாதவர், கோபாலமந்திர் இவைகள் இருக்கின்றன. முழுவதும் பரவியிருக்கின்றன. யாத்ரிகர்கள் தங்கள் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். காசிகண்டத்தில் 79 வது ஸ்லோகத்தில சங்குதாரா தீர்த்தத்தின் ஸ்னானமாகாத்மியம் சொல்லப்படிருக்கிறது. ஒவ்வொரு துவாதசிக்கும் காசிதேவியின் யாத்திரை சொல்லப்பட்டிருக்கிறது. காலீவேளையில் லலிதா காட்டில் ஸ்னானமும் காசிதேவியின் பூஜையும், எந்த அறிவாளி செய்கிறானோ, அவனுடைய புத்தி பாபவழியில் செல்லாது. தர்ம வழியில் செல்லும். மேற்கூறிய ஏகாதசியன்று ஞானவாபி செல்வதும் மிகவும் புண்ணியமானது என்று காசீகண்டம் 33 வது அத்யாயத்தில் சொல்லியிருக்கிறது, ஒவ்வொரு திரயோதசிக்கும் பிரதோஷ விரதம் இருந்து ஸாயங்கால வேளையில் மஹாதேவரைப் பூஜை செய்வது பற்றி பிரும்மோத்தர காண்டத்தில் கூறியிருக்கிறது. அதாவது சுக்லபக்ஷத்து இரண்டு திரயோதசிகளிலும் பகலில் ஆகாரம் இல்லாமல் இருந்து,சூரியன் அஸ்தமிக்க மூன்று நாழி பொழுது முன்னால் ஸ்னானம் செய்து காசீ காண்டம் சுத்தவஸ்த்ரம் உடுத்து, மௌனத்துடன்கூட தினம் செய்ய வேண்டிய சந்தியா ஜபம் முதலியவைகளைச் செய்து முடித்து விட்டு, சாயங்காலத்தில் மஹா தேவரைப் பூஜைசெய்த பிற்பாடு இரவில் ஆகாரம் பண்ணலாம். சனிவாரத்தில் அல்லது ஸோமவாரத்திலாவது பிரதோஷம் வந்தால் அது மிகவும் விசேஷமானது என்று கூறப்பட்டிருக்கிறது. சனிப் பிரதோஷத்திற்கு த்ரிலோசனத்திலுள்ள காமேஸ்வரர் கோவிலுக்குப் பிரதான யாத்திரை செல்ல வேண்டும் என்று காசீகண்டம் 35 வது அத்யாயத்தில் 75 வது, 76 வது ஸ்லோகங்களில் வர்ணித்திருக்கிறது. பதினாலாவது அத்யாயத்தில் 49 வது ஸ்லோகத்தில் சந்திரசேகரையும் பூஜிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ஸோமப்பிரதோஷத்தன்றுதான் சந்திரசேகரர் என்று சொல்லும் ஸோமேச்வரரைப் பூஜிக்கிறார்கள். இந்த விரதத்தினால் ஸந்தானபாக்யம் கிடைக்கும் என்பது பிரசித்தம். காசியிலிருக்கும் ஜனங்கள் (பெண்மணிகள்) இந்த பிரதோஷத்தை (விரதம்) கருத்துடன் அனுசரிக்கிறார்கள். சதுர்த்தசியில் செய்யக் கூடிய அநேக யாத்திரையைப் பற்றியும் காசீகண்டத்தில் அஷ்டமி யாத்திரையையும் சேர்த்துக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரதமையில் ஆரம்பித்து சதுர்த்தசி பரியந்தம் அல்லது ஒவ்வொரு சதுர்தசியும் செய்யக்கூடிய மூன்று யாத்திரைகளைப் பற்றி வர்ணிக்கப் பட்டிருக்கிறது; மூன்று சதுர்த்தசி யாத்திரைகளும் வேறு வேறாகச் செய்ய முடியாத பக்ஷத்தில் ஒரு சதுர்த்தசி யாத்திரையாவது அவசியம் செய்ய வேண்டும். காசி கண்டத்தில் 100 வது அத்யாயத்தில் 42 - 66 வது ஸ்லோகம் வரையில் இந்த யாத்திரையைப் பற்றி எழுதி இருக்கிறது. அந்த யாத்திரை செய்ய விருப்பமுள்ளவர்கள் புஸ்தகத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அது விசேஷ வாக்கியமானதினால் இங்கு வேறாக எடுத்து எழுதவில்லீ. யாத்திரை விதி "சதுர்தச லிங்கங்கள்" 1. ஓங்காரேஸ்வரர் :- மச்சோதரிக்கு வடக்கில், கொய்லா பஜாருக்கு சமீபத்தில் ஹீக்காலேசன் மஹாலில்; 2. த்ரிலோசனர் - த்ரிலோசனகாட்டில்; 3. ஆதிமஹாதேவர் -த்ரிலோசன கோவிலுக்குக் கிழக்கு பக்கத்தில். 4. க்ருத்திவாஸேஸ்வரர் - வ் ருத்த காலருக்குப் பக்கத்தில் ஹர தீர்த்தத்தில்; 5. ரத்னேஸ்வரர் -வ்ருத்த காலருக்குச் செல்லும் பாதையில், 6. சந்த்ரேஸ்வரர் - ஸித்தேஸ்வரியின் கோவிலில்; 7. கேதாரேஸ்வரர் - கேதார்காட்; 8. தர்மேஸ்வரர் - மீர்காட் - தர்ம கூபத்தில்; 9. வீரேஸ்வரர் - சங்கடா காட்டில் இருக்கும் ஆத்மவீரேஸ்வரர்; 10. காமேஸ்வரர் - மச்சோதரியிலிருந்து தெற்கு செல்லும் பாதையில்; 11. விஸ்வகாமேஸ்வரர் - அனுமான்பாடக் பக்கத்தில் -குவாலகட்டாவில்; 12. மணிகர்ணிகேஸ்வரர் - மணிகர்ணிகை கட்டத்தில், மேலே கோமடத்துக்கு முன்னால் காகார ராமச்சந்தில் பரத்வான் கோப் சுற்று வளைவில் கீழே; 13. அவிமுக்தேஸ்வரர் - விஸ்வநாதர் கோவிலில்; 14. விஸ்வேஸ்வரர் - காசிக்கு அதிபதியான விஸ்வநாத பாபாவே. இந்த ஓம்காரரேஸ்வரத்திலிருந்து - விஸ்வநாத்வரை (விஸ்வேஸ்வரர்) பதினான்கு லிங்கங்கள் காசியில் சதுர்தச யாத்திரையென்று சொல்லப்படுகிறது. காசீ காண்டம் "இரண்டாவது பதினான்கு லிங்கங்கள்" 1. அமிர்தேஸ்வரர் :- சொர்க்க துவாரத்திலிருந்தும் முன்னால்; குஞ்சவிஹாரிஜிகங்காபுத்திரர் வீட்டில். 2. தாரகேஸ்வரர் :- ஞானவாபிக்குக் கிழக்கில் - ஆனால் லிங்கம் இப்பொழுது மறைந்திருக்கிறது. 3. ஞானேஸ்வரர் :- லாஹௌரி தோலாவில் - தனிராம்கத்ரியினுடைய வீட்டு முற்றத்தில்; 4. கருணேஸ்வரர் :- லலிதா காட்டிற்குமேல்; பண்டிட் ரமாபதி - திவாரிஜினுடைய மாளிகையின் சமீபத்தில் 5. மோக்ஷத்வாரேஸ்வரர்- இதுவும் அங்கேயே; 6. சொர்க்கத்வாரேஸ்வரர் :- ப்ரும்ம நாளத்திற்குப் பக்கத்தில் பச்சா சிங் வீட்டில். 7. ப்ரும்மேஸ்வரர் :- பாலமுகுந்த சௌகட்டில், 8. லாங்கலீஸ்வரர் :- பஞ்சபாண்டவருக்கு அருகில் கோவா பஜாரின் முனையில்; 9. விருத்தகாலேஸ்வரர் : - தாரா நகரத்தின் பிரசித்தமான லிங்கம், 10. விருக்ஷேஸ்வரர் :- கோரக்டீலாவில் மஹாலமதாக்கின் என்ற இடத்தில்; 11. சண்டீஸ்வரர் :- வருணையில் மலியா காட்டிற்குப் பக்கத்தில் 12. நந்திகேஸ்வரர் :- ஞானவாபியில்; 13. மஹேஸ்வரர் :- மணிகர்ணிகா மண்டியில்; 14. ஜோதிரூபேஸ்வரர் :- மணிகர்ணிகேஸ்வரருக்கு சமீபத்தில் ஒரு வீட்டின் முற்றத்தில்; இது அம்ருதேஸ்வரர் முதலிய 14 லிங்கங்கங்களுடைய இரண்டாவது சதுர்த்தச யாத்திரை முதலியன. யாத்திரை விதி "மற்ற14 லிங்கங்களின் பெயர்" 1. சைலேஸ்வரர் :- வருணையில் மடியா காட்டில்; 2. சங்கமேஸ்வரர் :- வருணாசங்கமத்தில் ஆதிகேசவருக்கு சமீபத்தில்; 3. ஸ்வலீயனீஸ்வரர் :- ராஜா காட்டிற்கும் - ப்ரஹலாத காட்டிற்கும் மத்தியில் கங்கைக் கரையில், 4. மத்யமேஸ்வரர் :- மதாக்கின் என்னும் இடத்தில் கணேஸ் கஞ்சில். 5. ஹிரண்யகர்ப்பேஸ்வரர் :- த்ரிலோசன காட்டிற்கு வடக்கு பக்கத்தின் மண்டியில், 6. ஈசானேஸ்வரர் :- பான்ஸ் பாடக் என்னும் இடத்தில் கொத்தவால்புறாவில், 7. கோப்ரேக்ஷேஸ்வரர் :- லால்காட்டில் கோபீ கோவிந்தஜியின் கோவிலில் கௌரீசங்கர் என்ற பெயரில் பிரசித்தமாயிருக்கிறார். 8. வ்ருஷபத்வஜேஸ்வரர் :- கபிலதாராவில் பிரசித்தியானவர், 9. உபசாந்தசிவம் :- அக்னீஸ்வரருடைய புதுப்படித்துறைக்கு மேல் சந்தில். 10. ஜேஷ்டேஸ்வரர் :- காசிபுரியில் கர்ணகண்டாவிற்குப் பக்கத்தில் 11. நிவாஸேஸ்வரர் :- காசிபுரியில் பூதபைரவருக்கு மேற்குப் பக்கத்தில்; காசீகண்டத்தில் இதை சதுஸ்ஸமுத்ரேஸ்வரர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 12. சுக்ரேஸ்வரர் :- காளிகாகல்லியில்; 13. வியாக்ரேஸ்வரர் :- காசீபுரியில் பூதபைரவருக்கு நிர்ருதி கோணத்தில், காசீ காண்டம் 14. ஜம்புகேஸ்வரர் :- படாகணேசருக்குப் பக்கத்தில்; இப்பொழுது கூறிய இந்த 14 லிங்கங்களும் மூன்றாவது யாத்திரைக்குரிய தேவதைகள். இந்த விதமாக மூன்று சதுர்த்தச யாத்திரைகளும் சேர்ந்து மொத்தம் 42லிங்கங்கள். ஏகாதச ருத்திரர்கள் 1. அக்னீந்த்ரேஸ்வரர் :- இஸர கங்கையில் ஜாகேஸ்வரர் என்னும் பெயரில் பிரசித்தமானவர்; 2. ஊர்வசீஸ்வரர் :- ஔசானகஞ்சில் - கோலாபாகில், 3. நகுலீஸ்வரர் :- விச்வநாதருக்கருகில் மஹாவீரருடைய கோவிலில் அக்ஷயவடத்திற்குக் கீழே; 4. ஆஷாடீஸ்வரர் :- காசீபுறாவில் ராஜபேந்தியாவின் காம்பௌண்டின் பெரிய கோவிலுக்குப் பின்பக்கத்தில்; 5. பாரபூதேஸ்வரர் :- ராஜா தர்வாஜா கோவிந்தபுராவில், சிவகுமார் சாஸ்திரிஜியின் வீட்டிற்குப் பக்கத்தில்; 6. லாங்கலீஸ்வரர் :- பஞ்சபாண்டவருக்கு முன்னால் கோவா பஜாரில்; 7. திரிபுராந்தகேஸ்வரர் :- சிகாரா டீலாவில், 8. மனப்ரகாமேஸ்வரர் :- சாக்ஷி விநாயகர் கோவில் மிகப் பிரஸித்தமானவர், 9. ப்ரீதிகேஸ்வரர் - காளிகாகல்லி பாடாவில், 10. மதாலேஸ்வரர் :- காளிகாகல்லிக்கு முன்னால், 11. திலபர்ணேஸ்வரர் :- துர்க்கா குண்டத்தில், இது ஏகாதச ருத்ரர்களின் யாத்திரை, சிலயாத்ரா ப்ரேமிகள் ஏகாதசியன்றும் இந்த யாத்திரையைச் செய்கிறார்கள். ஆனால் காசீகண்டத்தில் ஏகாதசிக்கு விதியொன்றும் கூறப்படவில்லீ. யாத்திரை விதி இனிமேல் த்ரிகுணயாத்திரை முதலாவது துர்க்கா குண்டத்தில் ஸ்னானம் செய்து துர்க்கா தேவியைப் பூஜிக்க வேண்டும்; அங்கிருந்து லக்ஷ்மீ குண்டத்திற்குச் சென்று, ஜலத்தைப்ரோக்ஷித்துக்கொண்டு, மஹாலக்ஷ்மியைப் பூஜிக்க வேண்டும். அங்கிருந்து ஜெயத்புராவுக்குச் சென்று வாகேஸ்வரியைப் பூஜிக்க வேண்டும். முன்பு வாகேஸ்வரி இருக்கும் இடத்தில் குண்டம் இருந்தது. இப்பொழுது உலர்ந்து விட்டது. காசியில் இம்மூன்று ஸ்தானங்களும் மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹாஸரஸ்வதி இவர்களுடையதாம். இம்மூன்றும் காசியில் மூன்று முக்கில் இருக்கிறது. அதாவது தக்ஷிணதிசை பதைனி கிராமத்தில் துர்க்கா தேவியும் மேற்குதிசை ராமாபுரி கிராமத்தில் லக்ஷ்மி தேவியும், வடக்குதிசை ஜெயத்புறா கிராமத்தில் வாகீஸ்வரியும் இருக்கிறார்கள். இம்மூன்று தேவிகளின் கிராமத்தில் புராதனமான பிராம்மணர்களின் கிராமங்கள் இருக்கின்றன. காசி நகரம் பூராவும் புரோகிதத்தொழில் இந்த பிராம்மணர்கள் கையில் இருக்கிறது. காலக்ரமத்தில் முகமதியர்கள் இந்த ஸ்தானங்களுக்கருகில் வசிக்கத் தொடங்கி விட்டார்கள். இப்பொழுது மதன்புறா, லலாபுறா, அலீப்புறா என்ற பெயரில் பிரசித்தமான இடங்களில் முகமதியர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் இங்கு பிரசித்தமான காசீப்பட்டு, புடவைகள், துப்பட்டா முதலிய பட்டு வஸ்திரங்கள் நெசவு செய்கிறார்கள். தேவிபக்தர்கள் இந்தத்ரிகோண யாத்திரைக்கு செவ்வாய்க்கிழமைகளிலும் முக்யமாக சதுர்தசியுடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளிலும் செல்லுகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் காசீகண்டத்தில் பதினாலாவது அத்யாயத்தில் 42 - 43 ஸ்லோகங்களில் சொல்லியிருக்கிறபடி ஸித்தேஸ்வரி கோவிலிலுள்ள சந்த்ரேஸ்வரரை ஸேவிக்க வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் காசீகண்டத்தில் 62 வது. அத்யாயத்தில் 66 வது ஸ்லோகத்தில் கூறியபடி காசீ காண்டம் வ்ருஷபத்வஜர் தரிசனமும், கபிலதாராவில் சிராத்த தர்ப்பணமும் செய்வது மகத்வம் வாய்ந்ததாகும். இந்த விதமாக திதி (த்ரிகுண) யாத்திரை கூறப்பட்டிருக்கிறது. ஜனங்கள் அவரவர்கள் ஸௌகரியப்படி யாத்திரை செய்து கொள்ளலாம். வார யாத்திரை ஒவ்வொரு ரவி வாரத்தன்றும் ஸூர்ய நாராயணர் கோவிலுக்கு யாத்திரையாகச் செல்லவேண்டும்; காசியில் 12 ஆதித்யர்கள் பற்றியும் பிரமாணத்துடன் காசீகண்டத்தில் எழுதப்பட்டிருந்தது. ரவி வாரத்தில் பைரவரையும் சென்று தரிசிக்கிறார்கள்; இதைப் பற்றி ஸோமவார யாத்திரையில் எழுதியிருக்கிறது, அதைப் பார்த்துக் கொள்ளவும். சூர்ய யாத்திரை 1. லோலார்க் :- பதைனியில் அஸ்ஸிசங்கமத்திற்கு அருகில் பிரசித்த லோலார்க்க குண்டம் இருக்கிறது. 2. உத்தரார்க்கர் :- அலீப்புரத்தில் பக்ரியா குண்டத்தில், 3. ஸாம்பாதித்யர் :- சூரிய குண்டத்தில் பிரஸித்தமானது. 4. திரௌபதியாதித்யர் :- விச்வநாதருடைய சமீபத்தில் ஹநுமாரின் கோவிலில் அக்ஷய வடத்திற்குக் கீழே. 5. மயூகாதித்யர் :- பஞ்சகங்காவிற்கு ஸமீபத்தில் மங்கள கௌரியின் கோவிலில். 6. ககோல்காத்தியர் :- த்ரிலோசனத்தில் காமேஸ்வரருடைய கோவில் ப்ராகாரத்தில், இவரை வினதாதித்யர் என்றும் கூறுவார்கள். 7. அருணாதித்யர் :- த்ரிலோசனருடைய கோவிலில், 8. விருத்தாதித்யர் :- மீர்காட்டில் அனுமாருடைய கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு வீட்டில். யாத்திரை விதி 9. கேசவாதித்யர் :- வருணாஸங்கமத்தில் ஆதிகேசவருடைய கோவிலில், 10. விமலாதித்யர் :- கதோலியாவிற்குப் பக்கத்தில் ஜங்கம் பாடியில், 11. கங்காதித்யர் :- லலிதாகாட்டில்; 12. யமாதித்யர் :- சங்கடா கட்டில் இதுவே துவாதசாதித்ய யாத்திரை. ரவி வாரத்தன்று ஷஷ்டி, ஸப்தமி திதி இருந்தால் அதை பானுஷஷ்டி என்றும், பானுஸப்தமி என்றும் கூறுகிறார்கள். இது பத்மயோகம் என்று சொல்லப்படுகிறுது; அன்று இந்த ஆதித்யர்களின் யாத்திரை மிகவும் பலனை அளிக்க கூடியது. ஏனென்றால் இந்த பத்மயோகம் ஆயிரம் சூரியகிரணங்களுக்கு சமமானது. ஸோமவார யாத்திரை காசீகண்டத்தில் 14 வது அத்யாயத்தில் கூறியபிரகாரம் ஸோமவாரத்தில் சந்திரேஸ்வரர் தரிசனம். 33 வது அத்யாயத்தில் கூறியபிரகாரம் ஞானவாபியின் யாத்திரை; 62 வது அத்யாயத்தில் கூறியபடி ஸோமவாரத்து அமாவாஸையுடன் கூடியதினத்தில் கபிலதாரா தீர்தத்தில் சிராத்தம் 84 வது அத்யாயத்தில் 20 வது 28 வது சுலோகம் வரைக்கும் கருணேஸ்வரரின் யாத்திரை பற்றி கூறியிருக்கிறது. ஆனால் இந்த எல்லா யாத்திரைகளிலும் பிரதானமானது விச்வநாத தரிசனம். தினமும் சென்று தரிசனம் செய்யமுடியாதவர்கள் ஸோமவாரத்தன்று செய்ய வேண்டும். ஸோமவாரத்தன்று பிரதோஷம் வந்தால் வ்ரதமிருந்து சாயங்காலம் ஸ்னானம் செய்து சிவபூஜை செய்ய வேண்டும். எந்த இடத்தில் சௌகரியப்படுகிறதோ அங்கே பூஜை செய்யலாம். நகரத்திலிருந்து 3 க்ரோசதூரத்தில் ஸாரநாத் என்ற கிராமம் இருக்கிறது. அங்கு பகவான் விஷ்ணு பௌத்த தர்மத்தைப்பற்றி உபதேசித்தார். அங்கு ஸோமவாரம் தோறும் மேளா நடக்கிறது. நகரத்தில் கேதார கட்டத்தில் ஸ்னானத்திற்கு காசீ காண்டம் ஸோமவாரம் தோறும் ஜனங்கள் கூட்டமாக வருகிறார்கள். காசியில் கேதாரகண்டம் என்பது விஸ்வேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது (கண்டம்) ஸ்தானம் ச்ராவணமாதம் ஸோமவாரம் கேதாரேஸ்வரருக்கு அநேக விதமான புனித பூஜா சாமக்ரிகளால் பூஜை விசேஷமாகச் செய்ய வேண்டும். காசீகண்டத்தில் 72 வது அத்யாயத்தில் 82 வது சுலோகத்தில் செவ்வாய் கிழமையன்று துர்க்கா தரிசனம் செய்யவேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. 31 வது அத்யாயத்தில் 155 சுலோகத்தில் மங்கள வாரத்தில் பைரவயாத்திரை கூறப்பட்டிருக்கிறது. 70 வது அத்யாயத்தில் 48 வது சுலோகத்தில் மங்கள வாரத்தன்று வந்தி தேவியின் யாத்திரைக் கூறப்பட்டிருக்கிறது. 17 வது அத்யாயத்தில் முதலிலிருந்து 21 வது சுலோகம் வரைக்கும் செவ்வாய்க்கிழமையன்று சதுர்த்தசி வந்தால் மிகவும் உத்தமம் என்றும் அங்காரகேஸ்வர யாத்திரை செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. இவைகளெல்லாவற்றிலும் வேறாக தற்காலத்தின் நாகரீகப்படி ஹனுமான்ஜியின் தரிசனம் விசேஷயாத்திரையாக பிரசித்தமாயிருக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று அமாவாசையோ பிரதோஷமோ வந்தால் கேதாரத்திற்கு யாத்திரையாக சென்று, சிராத்தாதிகள் செய்வதுபற்றி காசீகண்டத்தில் 77 வது அத்யாயத்தில் 59 வது சுலோகத்தில் விசேஷமாக எழுதப்பட்டிருக்கிறது. சதுர்த்தியன்று செவ்வாய்கிழமையும் சேர்ந்திருந்தால் கணேசருடைய யாத்திரை செய்ய வேண்டும். அதுபோல் சதுர்தசியும் செவ்வாய்க் கிழமையும் கூடினால் கவஸேஸ்வரரைச் சென்று தரிசிக்க வேண்டும். இத்துடன் பரணிநக்ஷத்ரம் கூடினால் யமகாட்டிற்குச் சென்று ஸ்னானம், தர்பணம் சிராத்தாதிகள் செய்வது உசிதம். சிலாக்யம் ச்ரவணமாதத்தில் ஒவ்வொரு மங்கள வாரத்திலும் துர்க்கா குண்டத்தில் துர்கா தரிசனம் முதலியவை செய்வதற்காக பெரிய திருவிழாக் கூட்டமே சேருகிறது. கமாச்சாவிலும் யாத்திரை விதி காமாக்ஷி தேவியை இந்நாளில் பூஜிப்பது மிகவும் ச்ரேஷ்டம் என்று சிவ ரகஸ்யத்தில் கூறியிருக்கிறது. அஷ்டபைரவர் 1. ருரு பைரவர் - அனுமான் காட்டுக்குப் பக்கத்தில், 2. சண்ட பைரவர் - துர்கா குண்டத்தில் துர்க்கா கோவிலின் பிரதக்ஷிணத்தில் 3. அஸித்தாங்க பைரவர் - விருத்த காலேஸ்வரருடைய ப்ராகாரத்தில், காளி கோவிலில் அமிர்த குண்டத்திற்கு முன்னால். 4. கபால பைரவர் - பிரஸித்தமான லாட்டு பைரவத்தில் இருப்பவர் இவரேதான். 5. க்ரோதன பைரவர் - கமாச்சாவில் இருக்கும் வடுகபைரவர் இவரேதான். 6. உன்மத்த பைரவர் - பஞ்ச கோசத்தில் பீமசண்டிக்குச் செல்லும் பாதையில் தேவராகிராமத்தில். 7. ஸம்ஹார பைரவர் - த்ரிலோசன கஞ்சில்;- பாட்டன் தர்வாஜாவிற்கு பக்கத்தில் 8. பீஷ்மபைரவர் - காசிபுராவில் பூதைபைரவர் என்னும்பெயரில் பிரசித்தமாக இருக்கிறார். அப்பெயரில் ஒரு மஹாலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இவர்கள் எல்லோரையும் காவல் காப்பது கால பைரவரேயாகும். அதனால் ப்ரதானபைரவயாத்திரையாக காலபைரவர் கோவிலுக்குச் செல்லுகிறார்கள். இதைத் தவிர இன்னும் அநேக பைரவ ஸ் தானம் இருக்கிறது ராம் காட்டுக்கு மேலே ஆனந்த பைரவ சௌக்கிற்கு முன்னால் நீச்சி பாக் என்னும் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் மோகன பைரவர் விச்வநாதருடைய மேற்கு வாசலில் துவார பைரவர் இப்படியாக இருக்கிறார்கள். ஒவ்வொரு புதன் கிழமையன்றும் காசீகண்டத்தின் 15 வது அத்யாயத்தில் கூறியபடி புதேஸ்வரருக்கு யாத்திரை செல்ல காசீ காண்டம் வேண்டும். இது ஆத்ம வீரேஸ்வரருக்குச் சுற்று ப்ராகாரத்தில் உள்ளது. புதவாரத்தன்று அஷ்டமி இருந்தால் அது பர்வ தினமாகும் புதாஷ்டமியில் ஸ்னான தானத்திற்கு விசேஷ பலன் சொல்லியிருக்கிறது. புத வாரத்தன்று துவாதசி திதியும், ச்ரவண நக்ஷத்ரமும் இருந்தால் வருணா ஸங்கமத்தில் ஸ்னானம், தானம், சிராத்தம் முதலியவைகள் செய்தால் விசேஷ பலன் கிடைக்கும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆத்ம வீரேஸ்வரருக்குப் பக்கத்தில் இருக்கும் ப்ருஹஸ்பதீஸ்வரரைக் தரிசிக்க யாத்திரை செல்ல வேண்டும். வியாழக்கிழமை புஷ்ய நக்ஷத்ரமும் சேர்ந்திருந்தால், அந்த குருபுஷ்ய யோகத்தில் அங்கு யாத்திரை செல்வது அதிகபலனை அளிப்பதாகும். குருபுஷ்ய யோகத்தில் சுக்லாக்ஷ்டமியும் வ்யதீபாத யோகமும் ஒன்று சேரும் போது ஞானவாபியில் ச்ராத்தம் செய்வது, கயாச்ராத்தத்தை விடக் கோடிமடங்கு அதிக விசேஷமுள்ளது. காசீ கண்டத்தில் 16 வது அத்யாயத்தில் கூறியிருக்கிறபடி வெள்ளிக் கிழமை தோறும் காளிகா கல்லியில் இருக்கும் சுக்ரேஸ்வரரைத் தரிசிக்க யாத்திரை செல்ல வேண்டும். ஆனால் இந்தக்கால சிஷ்டாசாரத்தையொட்டி வெள்ளிக் கிழமையன்று லக்ஷ்மீ குண்டத்தில் இருக்கும் லக்ஷ்மியையும், சங்கடா காட்டில் இருக்கும் சங்கடா தேவியையும் ஜயத்புறாவில் இருக்கும் வாகீஸ்வரி தேவியையும் தரிசனம் செய்யச் சொல்லுகிறார்கள். ஆனால் காசீகண்டத்தில் இதற்குப் ப்ரமாணம் ஒன்றும் கூறப்படவில்லீ. ச்ராவண சுக்ரவாரத்தில் இவ்விடங்களைத்தவிர துர்க்கா குண்டத்திலிருக்கும் துர்க்காதேவிக்கு விசேஷ அலங்கார ஆராதனை செய்து கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு சனிவாரத்தன்றும் விச்வநாதருடைய தென்மேற்கு ப்ராகாரத்தில் இருக்கும் சனீஸ்வரரைத் தரிசிக்க வேண்டுமென்று காசீகண்டம் 16 வது அத்யாயத்தில் கூறப்பட்டுள்ளது. சனிவாரத்தில் ப்ரதோஷம் வந்தால் த்ரிலோசனத்திலுள்ள காமேச்வரரைப் யாத்திரை விதி பூஜிக்க வேண்டும். மேலும் சனிவாரத்தில் மீர்காட் சிவாலாகாட், ஹனுமான்காட், ஸங்கடமோசன் ஆகிய இடங்களில் இருக்கும் ஹனுமான் கோவில்களுக்கு யாத்திரை செல்லுகிறார்கள். இது வார யாத்திரை என்று கூறப்படுகிறது. இதைப் போல நட்சத்திர யாத்திரை செய்ய விரும்புகிறவர்கள் காசீகண்டத்தில் 15 வது அத்யாயத்தில் முதலிலிருந்து 19 வது சுலோகம் பர்யந்தம் நட்சத்ரேஸ்வரரின் கதையைப் படித்துப் பார்த்துக் கொள்ளவேண்டும். நட்க்ஷத்ரேஸ்வரர் வருணா ஸங்கமத்தின் பக்கத்தில் ஆதிகேசவரின் கோவிலின் ப்ராகாரத்திற்கு வெளியில் தெற்கு பக்கத்துக் கோவிலில் இருக்கிறார். நக்ஷத்திர சாந்தியை உத்தேசித்து இவ்விடம் பூஜை, தரிசனம் முதலியவைகள் செய்வது நலம். அதுபோல் நவக்ரகங்களின் சாந்தியின் பொருட்டு கால பைரவருக்குக் கிழக்கில் இருக்கும் தெருவில் காலதண்டத்திற்கு ஸமீபம் இருக்கும் நவக்ரஹேஸ்வரரின் பூஜை அவசியம் செய்ய வேண்டும். வ்யதீபாதம் முதலிய துஷ்ட யோகங்களின் சாந்தியின் பொருட்டு அங்கேயே இருக்கும் வ்யதீபாதரைத் தரிசிக்க வேண்டும். ஜெத்புறாவில் இருக்கும் மஹாலில் பிரசித்தமான வாகதீஸ்வரிக்கு சமீபத்தில் ஸித்தேஸ்வரர் கோவிலிலிருந்து சற்றே விலகினாற்போல இருக்கும் சிவாலயத்தில் ஜ்வரஹரேஸ்வரர் என்னும் லிங்கம் இருக்கிறது. அங்கு பால் அபிஷேகம் செய்வதினால் ஜ்வரம் சாந்தியடையும். மேலும் காசீகண்டத்தில் 97 வது அத்தியாயத்தில் 13 - 14 சுலோகங்களில் விஜ்வரேஸ்வரரின் மாஹாத்மியம் கூறப்பட்டிருக்கிறது. விருத்த காலரின் கோவிலில் ம்ருத்யுஞ்ஜய மஹாதேவர் (பத்க்கௌவா) மிகவும் பிரசித்தமானது. அதைப்பற்றி காசீகண்டத்தில் 97 வது அத்தியாயத்தில் 129 வது சுலோகத்தில் ப்ருத்வீஸ்வரரை ஆராதிப்பது, இது ஜனங்களுக்கு மிகவும் உபகாரமாக இருக்கிறது. அநேகம் பேர்களுக்காக மஹா ம்ருத்யுஞ்ஜய ஜபம் செய்வதற்காகப் பிராம்மணர்கள் இந்த காசீ காண்டம் சின்ன கோவிலில் கூடுகிறார்கள். விருத்த காலத்தில் இருக்கும் அம்ருத குண்டத்தில் ஸ்னானம் செய்வதினால் எத்தனையோ கடினமான வியாதிகள், குஷ்டம் கூட குணமாகி இருக்கின்றன. அதைப்போலவே லோலார்க்கரும், சூரியகுண்டமும் இவ்விஷயத்திற் காகவே சேவிக்கப்படுகின்றன. இவர்களை ஆராதிப்பவர்களின் மனோரதங்கள் பெரும்பாலும் நிறைவேறியிருக்கின்றன. இந்த எல்லா யாத்திரைகளும் காம்யம் என்றும், நைமித்திகம் என்றும் கூறப்படுகின்றன. அதாவது ஒரு விருப்பம் நிறைவேற வேண்டி செய்யப்படுகிறது. ஆனால் காசீகண்டத்தில் அநேகம் யாத்திரைகள் நைமித்திகமாகவும் வருங்காலத்தைக் குறித்தும் எழுதப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து சில உதாஹரணங்கள் கொடுக்கிறோம். க்ரஹணத்தின் போது காசியில் நிறைய கூட்டம் சேருகிறது. சூரிய க்ரஹணத்தின் போது அதிகமானக் கூட்டம் குருக்ஷேத்ரத்தில் தான் சேரும். ஆனால் சந்திரகிரகணத்தில் யாத்ரீகர் தேசதேசாந்திரங்களிலிருந்தும் காசிக்கு வருகிறார்கள். பவிஷ்ய புராணத்தில் காசீக்ஷேத்திரத்தில் ஓடும் கங்கையின் மாஹாத்மியம் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. கங்கையில் கங்கோத்ரியிலிருந்து ஸமுத்ரபர்யந்தம் ஸ்னானம் செய்வதினால் குருக்ஷேத்ரத்தில் ஸ்னானம் செய்த பலன் கிடைக்கிறது. பிறகு விந்த்யாசலத்தில் கங்கையில் ஸ்னானம் செய்வதினால் குருக்ஷேத்திரத்தைவிட 100 மடங்கு அதிக புண்ய பலன் கிடைக்கிறது. எங்கெல்லாம் கங்கை மேற்கு நோக்கி ஓடுகின்றதோ அங்கு 100 பங்கு அதிக புண்ய பலன் கிடைக்கும். காசியில் கங்கை உத்தர வாஹினியாக ஓடுவதினால் ஆயிரம் மடங்கு பலனை அதிகம் தருகிறாள் என்று சொல்லுகிறார்கள். இதனால் கிரஹணேஷு காசீ என்று சொல்லும் பழமொழி சரியானதே. சௌர புராணம் முதலியவைகளில் ஸமுத்திர ஸ்னானம் விசேஷம் என்று எழுதியிருக்கிறது. யாத்திரை விதி வியாஸஸ்ம்ருதியில் கூறியிருக்கிறது;- ஸாதாரண நதியானாலும் வெறும் ஸ்னானத்தை விட சந்திர கிரஹணஸ்னானம் லக்ஷம் - பங்கு புண்ணியம் அளிக்கிறதென்று. சூரிய கிரஹண ஸ்னானம் 10 லக்ஷம் பங்கு புண்ணியம். ஆனால் கங்கா ஜலத்தில் க்ரஹண ஸமயத்தில் ஸ்னானம் செய்யக் கிடைத்தால் சந்திரகிரஹணம் கோடி பங்கு புண்ணிய பலத்தையும், சூரிய கிரஹணம் பத்து கோடி பங்கு புண்ணிய பலத்தையும் அளிக்கிறது. அது எப்படியானாலும் சரி, கிரஹண காலத்தில் காசியில் அதிகக் கூட்டம் சேருவதினால் தங்குவதற்குக் கூட இடம் கிடைக்காமல் போய் விடுகிறது. சூரியகிரஹண காலத்தில் காசியிலுள்ள துர்க்கா குண்டத்திற்கு சமீபத்தில் இருக்கும் குருக்ஷேத்திரம் என்னும் குளத்தில் ஸ்னானம் செய்து விட்டு பிறகு கங்காஸனானத்திற்கு வருகிறார்கள். காசியில் தசாஸ்வமேத கட்டத்தில் சூரிய கிரஹணத்தின் பொழுது ஸ்னானம் செய்வதால் குருக்ஷேத்திரத்தை விடப் பத்துமடங்கு அதிகபலன் கிடைக்குமென்று காசீ கண்டத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. அதனால் கிரஹண காலத்தில் காசியில் விசேஷமாக யாத்திரைக்கு ஜனங்கள் வந்து கூடுகிறார்கள். அதுவும் மணிகர்ணிகாவில் அபாரமான கூட்டம் வருகிறது. கிரஹணகாலத்தில் கோவில்களைஎல்லாம் மூடிவிடுகிறார்கள் அச்சமயம் தரிசனம், பூஜை ஒன்றும் கிடையாது. இந்தப் பிரகாரம் வாருணி முதலிய சிறிதும், பெரிதுமான பர்வகாலங்களிலும் காசியில் விசேஷக் கூட்டம் ஏற்படுகிறது. பக்கத்து மாகாணங்களிலிருந்தும் தேசவெளிங்களிலிருந்தும் யாத்ரிகர்கள் வருகிறார்கள். அவைகளை எழுதுவதானால் புஸ்தகம் பெரிதாகும் என்று விட்டுவிட்டோம், அதை ஜனங்கள் கற்பனையில் பார்த்துக் கொள்ள வேண்டியது தான். அது - இருக்கட்டும். காசீகண்டத்திலேயே கூறியிருக்கும் அநேக யாத்திரைகள் இப்பொழுது வழக்கத்தில் இல்லீ. பௌர்ணமியில் பாத்ரபதநக்ஷத்ரம் சேரும் பொழுது பத்ரஹ்ருதம் என்னும் யாத்திரை, ஆர்த்ரா நக்ஷத்ரம் கூடும் சதுர்த்தசியில் செய்யும் காசீ காண்டம் யாத்திரை, ருத்ரகுண்டத்திற்குச் செல்லும் யாத்திரை, இவைகள் நின்றுவிட்டன. இன்னும் காசீ கண்டத்தில் எழுதியிருக்கும் குளங்களும் குட்டைகளும் தேவஸ்தானங்களும், தேவமூர்த்திகளும் காலக்ரமத்தில் சிதிலமாகப் போயும், மிலேச்ச ராஜாக்களின் கொடுமையினால் அழிக்கப்பட்டும் தூர்க்கப்பட்டும் மறைந்து போயின. அதனால் கிரந்தத்தில் கூறியிருக்கும் அநேகயாத்திரைகளின் பவித்ரதன்மை மறைந்துபோய் கேவலம் தமாஷாகப் பார்க்கும் கூட்டங்களாகப் போயின. அதனால் யாத்திரையை விரும்பும் பவித்ர ஜனங்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லீ. அதனால் இந்த விஷயத்தைப் பற்றி விஸ்தரித்து எழுதவேண்டிய அவசியம் இல்லீ என்று நினைக்கிறோம். மேலும் காசீ கண்டத்தில் வர்ணித்து இருக்கும் ஊற்றுகளும், ஓடைகளும் கூட இப்பொழுது மறைந்திருக்கின்றன. தசாஸ்வ மேதத்தை வர்ணித்து 61 வது அத்யாயத்தில் 33 வது சுலோகத்தில் யமுனை பூர்வவாஹினியாக வந்து கங்கையில் கலக்கிறதென்றும் எழுதியிருக்கிறது. அது இப்பொழுது இல்லீ. சூலடங்கேஸ்வரருக்குத் தெற்குப் பக்கத்தில் 'கோட்டியாகாட்டை' ஒட்டி கோதோலியா ஓடை என்று ஒன்று வந்து கொண்டிருந்தது. அதற்கு மேல் ரோடு போட்டுவிட்டார்கள். ஆனால் யமுனா ஸங்கமம் என்பது பொய்யாகாமல் படித்துறை கற்களிலிருந்து வருடம் பன்னிரண்டு மாதங்களிலும் ஜலம் பெருகிக் கொண்டிருக்கிறது. யமுனை பூர்வ வாஹினியாகக் கலக்கிறது என்பதற்கு ஒப்ப அந்தத் தண்ணீர் கங்கையில் வந்துவிழுகிறது. இது கங்கா யமுனை ஸங்கமம் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதுபோல மணிகர்ணிகா குண்டத்தில் ப்ரும்மநாளம் என்று சொல்லப்படுகிற ஊற்று கோமுகி வழியாகப் பெருகுகிறது, காசீ கண்டம் 61 வது அத்யாயம் 151 வது சுலோகத்தில் கூறப்பட்டுள்ளது; இந்த ஊற்றினால் யாத்திரை விதி மணிகர்ணிகைக்கு வடக்கில் வீரத் தீர்த்தம் என்று கூறப்படும் சேந்தியகாட் படித்துறை அமுங்கிவிட்டது. படித்துறை கட்டுகிறவர்கள் தெரியாமல் ப்ரும்மநாள ஊற்றின் வாயை அடைத்து விட்டார்கள். அதனால் அந்தப் படித்துறை அமுங்கி விட்டது. ஆனாலும் அங்கிருந்து ஒரு ஊற்று ஓடிவந்து தத்தாத்ரேயக் கோவிலுக்கு கீழே வந்து கங்கையில் சேருகிறது. இதே மாதிரி பஞ்ச கங்கா காட்டில் ஜடார்கே மந்திர்: லக்ஷ்மண பாலாஜி கே மந்திர்" என்று கூறப்படும் இரு கோவில்களுக்கு மத்தியில் ஒருபாதை இருக்கிறது. அங்கு கபஸ்தீஸ்வரர் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலுக்குக் கீழேயிருந்து ஒரு ஊற்று பெருகுகிறது. அந்த ஊற்றை காசீ கண்டத்தில் 59 வது அத்யாயத்தில் 109 சுலோகத்தில் கிரணாநதி என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்த ஊற்று இப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதே போல பஞ்ச கங்கா கட்டத்தில் அநேக ஊற்றுகள் ஓடுகின்றன. அதனால் அதற்கு பஞ்ச கங்கையென்று பெயர் ஏற்பட்டது. அது உசிதமே. இந்த விதமாக காசீகண்டம் 97 வது அத்யாயத்தில் 255 வது சுலோகத்தில் அஸிநதியை உலர்ந்த நதி என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்பொழுதும் வருஷருது கழிந்ததும் அது உலர்ந்து போய்விடும். இதனால் தெரிவது என்னவென்றால் காசீகண்டம் சொல்லிய படிக்கு இங்குள்ள தேவஸ்தானங்களும் மற்றவைகளும் இடித்து சிதைந்து, சிதிலமாய் நஷ்டமாகப் போனாலும் மேற்கூறிய ஊற்றுகளும் அஸிவருணை நதிகளும் காசீ கண்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி அதனதன் ஸ்தானத்தில் இருந்து கொண்டு காசீ கண்டத்தில் இருக்கும் உண்மையை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில் காசீயாத்திரையைப்பற்றி பூர்ணமாக அறிந்து எழுதுவது மிகவும் கடினம். சிவரஹஸ்யத்தில் ஒரு கதையிருக்கிறது. ஒரு ஸமயம் ப்ரம்மா விஷ்ணு முதலியவர்கள் காசியில் பஞ்சகோச யாத்திரை பண்ணவேண்டுமென்று ஸங்கல்பம் செய்து கொண்டு கிளம்பி பீமசண்டியின் அருகில் வரும் காசீ காண்டம் பொழுது இருபதுவருஷங்கள் கழிந்து விட்டன. இத்தனை வருஷம் சென்ற பிறகும் கூட யாத்திரையை முடித்துக் கொண்டோம் என்ற பெயராக்கி விட்டு தங்கள் தங்கள் இருப்பிடத்திற்குச் சென்றார்கள். பஞ்ச கோச யாத்திரையைப் பூர்ணமாக முடித்தவர்கள் - நந்தி கணேசர், பைரவர் இவர்களாவார்கள்: தேவதைகளுக்கே இந்த கதியென்றால் காமாதி ஆறு குணங்களில் மூழ்கி அமுங்கி அடிபட்டிருக்கும் மனிதன் இந்த யாத்திரையை எப்படிச் செய்யமுடியும்? ஆகையினால் யாதாசக்தி பக்தி பாவத்துடன் முடிந்த இடங்களுக்குச் சென்று யாத்திரையைப் பூர்ணமாகச் செய்ததாக ஸந்தோஷப்பட வேண்டும். இப்பொழுது நாம் கூறியிருக்கும் இந்த யாத்திரை ஸாதாரண ரீதியாக எளிதாக அனுஷ்டிக்கக் கூடியது. இதைத் தவிர எத்தனையோ யாத்திரைகள் சாஸ்திரப்படியும், சாஸ்திர விரோதமாகவும் தற்காலத்துக்குரிய நாகரிக மனப்பான்மையுடனும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இன்னும் எத்தனையோ இதர வர்ணத்தாருக்கும் அன்னியமதஸ்தர்களுக்குக்கூட யாத்திரைகள் இருக்கின்றன. மேலும் ப்ரம்மோத்ஸவங்களும் சிருங்கார உற்சவங்களும், மேளாவும் (திருவிழாக்களும்) ராம லீலாவும் கிருஷ்ணலீலாவும் கூட எத்தனையோ நடக்கின்றன. அதனால் காசீ வாஸிகள் ஒரு நாள் கூட வீணாகக் கழிக்க வேண்டாம். அவைகளையெல்லாம் இங்கு எழுதுவோமானால் புஸ்தகம் இரண்டு கைகளால் தூக்க முடியாமல் போய்விடும், முடிந்தஅளவு சுருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. காசீ ஒரு முக்கியமான தீர்த்தஸ்தானம். ஆனால் இதனுடைய உருவம் ஒரு நாகரிகப் பட்டணம்போல் தோற்ற மளித்தாலும் இது வாஸ்தவமாக ஒரு புண்ணிய ஸ்தலமாகும் என்பதில் ஸந்தேஹமில்லீ. இங்கிருக்கும் தேவ தரிசனங்களும் கோவிலின் அமைப்பும், படித் துறைகளின் அழகும் பார்க்க வேண்டிய விஷயங்களாகும். மேல் நாட்டுக்காரர்கள் கூடக் யாத்திரை விதி காணவேண்டிய உத்தமோத்தமான காக்ஷிகள் இங்கு இருக்கின்றன. அத்தகைய இடங்களை இங்கு சுருக்கிஎழுதுவது அனாவசியமாகாது என்று தோன்றுகிறது. 1. அஸ்ஸியிலிருந்து ராஜகாட் வரையில் படித்துறையின் அழகும், அதன்மேல் கோவில்களும் ஸ்தூபிகளும், கட்டிடங்களும் கங்கையில் படகுவழியாகச் சென்று பார்க்க வேண்டியவைகளாகும். 2. துர்க்கா குண்டத்தில் இருக்கும் துர்க்கா தேவியின் கோவில், 3. பேலுபுராவில் நகரத்திற்கு ஜல சப்ளை செய்யும் பம்பிங் ஸ்டேஷன், 4. கமாச்சாவில் இருக்கும் ஸென்ட்ரல் ஹிண்டு காலேஜ், 5. கதோலியாவிலுள்ள பனாரஸ் மஹாராஜாவின் சிவாலயம், 6. விஸ்வநாதருடைய ஸ்வர்ணத்தினாலேயும், வெள்ளியாலும் மூடப்பட்ட கோவில், 7. அன்னபூர்ணா தேவியின் கோவில், 8. கோத்வாலியிலிருக்கும் டவுன் ஹால், இது இப்பொழுது பைரவ நாத் மஹாலில் இருக்கிறது. 9. கம்பெனித் தோட்டம், கம்பனிபாக் இது மந்தாகிநீ தீர்த்தம். இப்பொழுது ப்ரஸித்தமாக மதாக்கின் என்று கூறுகிறார்கள். இதற்குத் தென்கிழக்கு மூலையில் காசி நகரணியின் பிரசாரணை கட்டிடமும் புஸ்தகசாலீயும் இருக்கிறது. 10.பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ஆஸ்பத்திரி அதன் பக்கத்தில் பெண்களுக்கான ஈஸ்வரி ஆஸ்பத்திரி இருக்கிறது. 11.கவர்மெண்ட் காலேஜ்- இக்கட்டிடம் கட்டுவதற்கு காசீ காண்டம் கட்டிட நன்கொடை அளித்தவர்களுடைய பெயர்கள், இக்கட்டிடத்தின் கற்களில் அந்தந்த தேச பாஷைகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. 12.விக்டோரியா பார்க் :- இதை பினியாபார்க் என்று கூறுகிறார்கள், இங்கு அஸதிக்ஷேப தடாக தீர்த்தம் இருக்கிறது. இவ்விடத்தில் காலம் சென்ற விக்டோரியா சிலீ அவருக்குப் பின்னால் இங்கிலாந்திற்கு அரசராக வரப்போகிற வேல்ஸ் அரசரால் ஸ்தாபிக்கப்பட்டது. 13.மாதவராயின் சமாதி :- இது ஔரங்கசீப்பால் கட்டப்பட்ட மசூதி, இதற்கு உயரவரைச் செல்லுவதற்குப் படிக்கட்டுகள் இருக்கின்றன. 14.ஸாரநாத் :- இதை தமேஷ் என்று கூறுகிறார்கள். இங்கு பௌத்த காலத்தில் வழக்கில் இருந்துவந்த அநேக பழமையான பொருள்களை சர்க்காரின் புராதான இலாகா கண்டெடுத்து வைத்திருக்கிறது. 15.ராமநகர் அரண்மனை :- இது வ்யாஸகாசி என்று கூறப்படும் கங்கையின் அக்கரையில் உள்ள காசிராஜாவின் அரண்மனை. இதன் ஸ்தூபிகளுக்குள் வேதவ்யாஸரின் கோவில் இருக்கிறது. இன்னும் அநேகம் காணவேண்டிய ஸ்தலங்கள் இருந்தாலும் விரிவாகும் என்றதனால் விடப்பட்டிருக்கின்றன; கடைசி பிராத்தனை, காசி மாஹாத்மியம், காசீகண்டம் முதலிய அநேககிரந்தங்களில் நிறைந்திருக்கின்றன. அநேகம் துறைகளும் கோவில்களும் பழுது பட்டுக் கிடக்கின்றன. இவைகளைச் செப்பனிடுவதற்கு ஜனங்களுக்கு விருப்பமும் இல்லீ, தனமும் இல்லீ. அநேக ராஜாக்கள், மஹாராஜாக்கள் உயர்ந்த வம்சத்தினர்களாலும் கட்டப்பட்ட அநேக கோவில்களும் துறைகளும் இப்பொழுதும் இருக்கின்றன. அனால் அவர்களுடைய வம்சத்தினர் இதில் கருத்தைச் செலுத்தாதது கவலீக்குரிய விஷயம். அவர்களிடம் உதார குணமுடைய தான சீலர்களிடம் காசிவாசிகளாகிய நாங்கள் விண்ணப்பித்துக் கொள்வது என்னவென்றால் அநேகம் யாத்திரை விதி படித்துறைகள் ஸௌகரியமாக ஸ்னானம் செய்ய முடியாதபடி இடிந்து போய் கிடக்கின்றன. பரிசயமில்லாத அயல் நாட்டு யாத்ரிகர்கள் அவைகளில் ஸ்னானம்செய்ய் இறங்கி காயமடைவதும், மரணமடைவதும் ஸஹஜமாகியிருக்கின்றன, படித்துறைகளுக்குக் கீழே கிடுகிடு பள்ளங்கள் இருக்கின்றன, தவறி அவற்றில் விழுந்து விட்டால் வெளியில் வருவது முடியாத கார்யம், அப்படியே மரணணமடைய வேண்டியதுதான். கிரஹண முதலிய காலங்களில் மூங்கில்களினால் தடுப்புகள் கட்டி இயன்றமட்டும் பாதுகாக்கின்றனர். அநேகம் கோவில்களின் கதியும் இப்படியே. எத்தனையோ பழமையான கோவில்கள் ஜனங்கள் வசிக்கும் வீடாகப் போய் விட்டது. எத்தனையோ தேவதைகள் இரண்டு புருஷ உயரத்திற்குக் கீழே போய்விட்டன. எத்தனையோ? கோவில்கள் இடிந்து தரை மட்டமாக ஆகிவிட்டன. எத்தனையோ கோவில்கள் பூஜைகள் முதலியவைகள் ஒன்றுமில்லாமல் நாதியற்றுக் கிடக்கின்றன. அதனால் காசிக்கு வரும் தானசீலர்களிடம் எங்கள் பிராத்தனையென்ன வென்றால் உங்கள் முன்னோர்களின் கீர்த்தியை ஜீர்ணோத்தாரணம் செய்து புண்ணியத்தை ஸம்பாத்திதுக் கொள்ளுங்கள் என்பதுதான். புதுப்புதுகோவில்கள் கட்டி கும்பாபிஷேகம் பண்ணுவதையெல்லாம் நிறுத்தி விட்டுப் பழைய கோவில்களை எல்லாம் ஜீர்ணோத்தாரணம் செய்ய வேண்டும். காசிரஹஸ்யத்தில் புதியகோவில்களைக் கட்டுவதை விடப் பழமையான கோவில்களை ஜீர்ணோத்தாரணம், செய்வதே விசேஷ புண்யம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதையே கூறுகிறது: "காலேன பங்க மாபன்னம் ஜீர்ணோத்தாரம் கரோதிய: இஹ தஸ்ய பலஸ்யாந்த :- ப்ரளயேபி ந ஜாயதே" காசியில் இப்பொழுது ஜீர்ணோத்தாரணஸபை என்று ஒன்று கூடி ஜீர்ணோத்தாரண காரியம் கொஞ்சம் கொஞ்சம் காசீ காண்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்பொழுதும் பாக்கி இருக்கிறது. தர்மபுத்தியுடைய உதாரசீலர்கள் கொஞ்சம் உதவி செய்தால் ஒரு புண்ய கார்யம் ஸித்தியாகும். பாஷா டீக்கா சஹிதம் காசீகண்டத்தின் முகவுரை காசீகண்டம் ஸ்காந்த மஹா புராணத்தில் நான்காவது கண்டமாகும். ஸத்வம், ரஸஸ், தமஸ் என்ற மூன்று குணங்களுக்கப்பால் துரீயம் இருப்பதைப்போல், அயோத்யா, மதுரா, மாயா, காசீ, காஞ்சீ, அவந்திகா, த்வாரவதீ இந்த ஏழும் மோக்ஷபுரிகள் என்று கூறப்படுகின்றன. அதுபோல ஏழு கண்டங்கள் கொண்ட ஸ்காந்த புராணத்தில் காசீகண்டம் மத்யஸ்தாநம் வஹிக்கிறது. இந்த கிரந்தத்தில் புராணங்களில் கூறியிருக்கும் எல்லாநீதிகளும் அடங்கியுள்ளன. பதினெட்டு புராணங்களுக்கு கர்த்தாவான வேதவ்யாஸர் இந்த கிரந்தத்தை எழுதியுள்ளார். இந்த உவமை கூறமுடியாத நடை அமிர்தத்தைவர்ஷிப்பது - இதில் வரும் மதுரமான கவிதைகளோ ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது, ப்ராசீனமான கவிதைகளானாலும் சரி, நவீன கவிதைகளானாலும் சரி இதற்கு உவமை கூறமுடியாது; ஸம்ஸ்க்ருத கவிகளான ஸ்ரீஹர்ஷன், மாகன் முதலிய மஹாகவிகள் கூட இதன் பாவங்களை (ஆடச்) எடுத்தும் கூறுவது இருக்கட்டும், இதன் சுலோகங்களையே தங்களுடைய மஹாகாவியங்களில் சந்தஸை மாத்திரம் மாற்றி, அப்படியே எழுதியிருக்கிறார்கள். நைஷத சரித்திரத்தில் ஐந்தாவது ஸர்கத்தில் எட்டாவது சுலோகத்திலும் இதைக் கையாண்டு இருக்கிறார். இதுபோல் மகாகவியும் தன்னுடைய சிசுபாலவதம் என்னும் பிரசித்த காவியத்தில் மூன்றாவது ஸர்கத்தில் 38 வது சுலோகத்தில் இதிலிருந்தே எடுத்து எழுதியிருக்கிறார்கள். இதுபோல் எத்தனையோ உதாஹரணங்கள் இருக்கின்றன. இந்த கிரந்தத்தின் கவிதைகளின் ஆனந்தத்தை ரஸிக ஜனங்கள் ஏகாந்தமாக அமர்ந்து, சுவைத்து, சுவைத்து ரஸிக்க வேண்டியது யாத்திரை விதி ஒன்றாகும். இந்த அலோக்ய கிரந்தத்தில் கதைகளும், உபாக்யானங்களும் பரவிக்கிடக்கின்றன, என்பது மட்டுமல்ல, வேத வசனங்களின் பிரமாணங்கள் மனுஸ்ம்ருதி முதலியவைகள் கூறிய ஆசார விஷயங்கள் நிர்ணயம், வேதாந்த தத்வதர்சன சாஸ்திரங்களின் அதிரஹஸ்யமான தத்வங்கள், வேதாந்தஸாரங்களின் முழுமை, ஸாமுத்ரிகா சாஸ்திரத்தைக் கசக்கிப் பிழிந்த ரஸம், ஆசார சீலர்களான புருஷர்களுடையவும், பதிவ்ரதா ஸ்த்ரீகளுடையவும் கடமைகள்; பௌத்த தர்மத்தின் ஸாரம், - மேலும் காசீபுரியின் அதிபதி விச்வநாதர், கலிதோஷத்தை அபஹரிக்கும் கங்கா தேவியின் சரித்திர மாஹாத்மியம், ரகஸ்யஸ்தானங்கள், இவைகளெல்லாம் விஸ்தார பூர்வமாக வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த காசீகண்டம் ஸாதாரணப் புராணமல்ல. தர்ம சாஸ்திரங்களில் இது மிகவும் பிராமாணிகமானது. ப்ரமாணங்களை நிர்ணயிக்கும் நிர்ணயஸிந்து என்ற கிரந்தங்களில் இதிலுள்ள அநேக வசனங்கள் ப்ரமாண ரூபமாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. விரதங்களை அனுஷ்டிக்கும் முறைகளும் இதில் காட்டப்பட்டிருக்கின்றன. காசியின் வர்ணனையும் மஹாத்மியமும் யஜுர்வேதம், ஜாபாலி உபநிஷத்து, ராமதாபன், உபநிஷத், லிகிதஸ்ம்ருதி பராசரஸ்ம்ருதி இவைகளிலும் மஹாபாரதத்தில் வனபர்வத்தில் 64 வது அத்யாயம், பீஷ்ம பர்வம் 24 வது அத்யாயம், கர்ணபர்வம் 5 வது அத்யாயம் அனுசாஸனபர்வம் 30 வது அத்யாயம் இவைகளில் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுபோலவே சிவபுராணம், ப்ரும்மவைவர்த்த புராணம், இவைகளில் இருக்கும் காசீ வர்ணனையைப் பார்த்தால் சிறிய காசீ கண்டத்திற்கு ஸமானமாகவே இருக்கும். நாரதீயபுராணம், ஆதிப்ரம்ம புராணம், கூர்மபுராணம், அக்னி புராணம், மார்க்கண்டேயபுராணம், வாயுபுராணம், ஸௌரபுராணம், மத்ஸ்யபுராணம் பத்மபுராணம், வாமனபுராணம், அக்னிபுராணம், காசீ காண்டம் பவிஷ்யத்புராணம், சிவரஹஸ்யம், ராமாயணம், பாகவதம், ஸனத்குமாரஸம்ஹிதை; நைஷதசரித்ரம் இவைகளெல்லாவற்றிலும் இருக்கும் காசீ வர்ணனையை எழுதினால் இரண்டு மூன்று காசீ கண்டங்களத்தனை பெரிதாக ஆகிவிடும், இதைத்தவிர; 'காசீரஹஸ்யப்' பிராசீன ப்ரம்மவைவர்த்த புராணத்திலும், மத்ஸயபுராணத்திலும் ரஸமய சித்த கிருதியிலும், எடுத்து ஈஸ்வரிதத்தர் என்னும் பண்டிதரால் எழுதப்பட்டது. இதைத்தவிர கிருஷ்ண சந்திரரால் எழுதப்பட்ட காசீ தர்ப்பணம், 'காசீபிரகாஸ்', 'பூர்வார்த்தம்', 'உத்தரார்த்தம்' என்ற இரண்டு பாகங்கள், 'காசீக்ருதி, என்னும் பழமையான கிரந்தம், காசிமுக்தி, விவேகம் இதுவும் பழமையான கிரந்தமே. காசிதத்வ விவேகம் அதுவும் பழமையான கிரந்தம்: காசீவினோதம் இது நவீன கிரந்தம்; காசியாத்ராபிரகாசம் அது நவீனம். பண்டிட் ராமானந்தா த்ரிபாடி எழுதியது. காசி குதூகலம், இத்தகைய சிறியதும் பெரியதுமான கிரந்தங்கள் காசியின் பெருமையைப் பாடுகின்றன. இதைத்தவிர நித்யயாத்திரை பஞ்சகோச யாத்திரை இவைகளைப் பற்றி விவரம் தெரிவிக்கும் தனி புஸ்தகம் இருக்கின்றன. சரித்திர ரீதியான ஆதாரத்தின் மேல் ஸம்ஸ்க்ருதம், ஹிந்தி, ஆங்கிலம் முதலிய பாஷைகளிலும் புஸ்தகங்கள் வெளிவந்துள்ளன. இவைகளுக்கெல்லாம் அஸ்திவாரம் காசீ கண்டமே; உண்மையில் காசியைப்பற்றி மிக விரிவாகவுள்ள புஸ்தகம் காசீகண்டம் ஒன்றும்தான். மேலும் காசீகண்டத்தில் காசியின் எல்லீயை நிர்ணயித்திருக்கிறது. அந்த காசீகண்டத்தை எழுதியுள்ள காலத்தை மந்த புத்தியுள்ள என்னால் நிர்ணயிக்க முடியவில்லை. ஆனால் ஒன்று மாத்திரம் கூறுவேன். இதில் காசி மாஹாத்மியம் மாத்திரமல்ல. காசியின் விரிவானசரித்திரமும் அடங்கியுள்ளது. இங்கே எத்தனை படித்துறைகள், எத்தனை குளம் குட்டைகள் எத்தனை? கிணறுகள் எத்தனை? கோவில்கள் எத்தனை? சிவலிங்கங்கள் எத்தனை ராமர்கள், யாத்திரை விதி எத்தனை கிருஷ்ணர்கள், எத்தனை? நரசிம்மர்கள், என்பதும் காசியில் எத்தனை பிராம்மணர்கள் இருந்தார்கள் என்ற எண்ணிக்கையும், ஒவ்வொரு தீர்த்தத்தின் ஸ்னானங்களின் வர்ணனைகளும் இதில் அடங்கியுள்ளது. மேலும் காசி விஸ்வநாதரின் ஸ்வர்ணமயமான கோவிலின் கம்பங்களில் புதிப்பித்திருக்கும் மாணிக்கமயமான பதுமைகளின் வர்ணனைகளும், கலாவதியின் கதை ரூபமாக அக்காலத்திய சிற்பக்கலீ, சித்திரகலீ எந்த நிலீயில் இருந்தது என்ற வர்ணனையும் இருக்கிறது. இந்தக் காலத்திலுள்ள சரித்திரங்களைப் போல் வருஷம், மாதம், தேதி இவைகளுடன் இது எழுதப்படவில்லீதான். ஆனால் இது பழைய காலத்து சரித்திரமாகும். இந்தச் சரித்திரம் எழுதிய காலம் எது, அதன் நிலீமை என்ன, இது எந்த வருஷத்தில் எழுதப்பட்டது இங்கு எந்த ராஜாக்கள் ஆண்டு வந்தார்கள், என்றெல்லாம் யாரால் கூறமுடியும்? இதில் திரௌபதியாதித்யர் முதலியவர்களுடைய கதை வருங்காலத்தியது என்று எழுதப்பட்டிருக்கிறது. அதிலிருந்து தர்மபுத்திரர் ஆட்சிக்கும் முந்தியகாலத்தியது என்று தெரிய வருகிறது. ஆனால் குறிப்பாக எத்தனைக் காலத்திற்கும் எழுதியது. எழுதி பிரசுரித்து எத்தனை காலமாகிறது என்று யாரால் சொல்ல முடியும்? இந்த க்ரந்தத்தில் எல்லாவற்றையும் விட முக்யமானது சைவர்களின் சிவபுராணமும், வைஷ்ணவர்களின் (விஷ்ணு) பாகவதம், சாக்தர்களின் தேவீ - பாகவதமும் எப்படித் தங்கள் கதாநாயகர்களை வர்ணிதிருக்கின்றதோ - அதுபோல் இந்தக் க்ரந்தமும் காசியை ஸர்வச்ரேஷ்டம் என்று ஸித்தம் செய்கிறது. ஆனால் இப்புராணம் சிவ - விஷ்ணு இவர்களை பேதமில்லாமல் வர்ணிக்கிறது என்று கூர்மபுராணம் கூறுகிறது. இந்தச் காசீகண்டம் சைவர்களின் கிரந்தமென்று கூறமுடியாது. இதுபஞ்ச பூதங்களிலான சரீரத்தை சுத்தம் செய்யும் ஐந்து தேவதைகளின் ஆராதனையைப்பற்றி காசீ காண்டம் உபதேசித்திருக்கிறது. ஆனால் நாம் மார்தட்டிக் கொண்டு பெருமைப்படும் விஷயம் ஒன்று இருக்கிறது. காசியில் இருக்கும் ஆஸ்திக ஜனங்களும் காசிவாஸம் செய்ய விரும்புகிறவர்களும், வேறு ஊர்களில் வசிப்பவர்களில் காசி விஸ்வநாதர், கங்கை இவர்களின் தத்வத்தை அறிய விரும்புகிறவர்களும் முக்தி அடைவதற்கு உபாயம் தேடுகிறவர்களும், உத்தமோத்தமான உபாக்யானங்களில் இருந்து உபதேசமாக சாரத்தை க்ரஹிக்க விரும்புகிறவர்களும் காசியை முக்திக்ஷேத்திரம் என்று ஏன் கூறவேண்டும்? அந்த மோக்ஷமும் அங்கு எப்படிப் பெற வேண்டும் என்பதை அறிய விரும்புகிறவர்களும், சிவவிஷ்ணு பேதத்தை மதிக்கிறவர்களும் கொஞ்சம் சிரமப்பட்டு தங்கள் விலீயுயர்ந்த நேரத்தில் கொஞ்சம் மீதப்படுத்திக்கொண்டு, மனதை ஒருமைப் படுத்திக்கொண்டு பக்ஷபாதரகிதராய் ஆக்ரஹத்தை விட்டுவிட்டு காசீகண்டத்தை முதலிலிருந்து கடைசிவரையில் ஒருமுறை படித்துப்பார்க்க வேண்டிக் கொள்ளுகிறேன். நான் சொல்லுவது சரியா, இல்லீயா என்பது பிறகு அவர்களுக்குத் தெரியும். இந்தப் புஸ்தகத்திலிருக்கும் கிரந்தத்திலிருந்தும் விசித்ரம் என்னவென்றால் இந்த க்ஷேத்திரத்தை 'அன்னபூர்ணா க்ஷேத்ரம்' என்றுதான் கூறுவார்கள். காசியில் அன்னபூரணிதான் எல்லோருக்கும் உணவளிக்கிறாள். ஒருவன் கூடப் பட்டினி இருக்க ஸஹிக்கமாட்டாள் என்பது பொது ஜனவாக்கு; ஆனால் ஜகஜ்ஜனனீ அன்னபூர்ணா மஹாராணியின் பெயர் ஒரு இடத்தில்கூட வரவில்லீ. எப்பொழுது சிவபிரான் காசியில் விஸ்வநாதர் என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறாரோ, அப்பொழுது பகவதி அன்னபூரணியின் உருவமாக எழுந்தருளியிருப்பது அவசியமாகும். ஏனென்றால் அன்னத்தினால் திருப்தியடையாத உலகம் எப்படிச் செயல்பட முடியும்? ஒரு பழமையான சுலோகம் இதைப்பற்றி வேடிக்கையாகக் குறிக்கிறது. அதன் அர்த்தம் பின்வருமாறு :- தான் ஐந்து யாத்திரை விதி முகங்களையுடையவன், புத்திரர்களில் ஒருவன் யானை முகத்தவன், இன்னோருவன் ஆறுமுகத்தவன்; இப்படி நிர்மால்யத்துடன் இருக்கும் ஐந்து முகத்தவனும் அவனுடைய புத்திரர்களும் வீட்டில் அன்னபூரணி இல்லாவிட்டால் எப்படி ஜீவிப்பார்கள்" என்று. இந்த காசீ கண்டத்தில் அன்னபூர்ணா என்ற சப்தத்தின் ஸ்தானத்தில் பவானி என்றேயிருக்கிறது. 61 வது அத்தியாயத்தில் 37 வது சுலோகத்தில் பவானீ என்ற சுலோகம் மத்திரரூபமாக எழுதப்பட்டிருக்கிறது. வ்யாஸ தேவராலேயே எழுதப்பட்ட காசீகண்டத்திற்கு ஜோடியான காசீ ரஹஸ்யத்தில் மாதாவிசாலாக்ஷி, பவானி, சுந்தரி த்வாம் அன்னபூர்னே சரணம் பிரவர்தயே என்றும் ஜெயஜெய அன்னபூர்ணா என்றும், அன்ன்ப் பிரதானநிரதே என்றும், அன்னார்த்தி சங்க்ரகப் ப்ரதே, இத்யாதி எல்லாம் எழுதியிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் என்ன என்றே எனக்குத் தெரியாது. பெரிய பெரிய புராணங்களிலும் கூட ஸங்கேதமாக அநேகம் பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன. அல்லது மிக்கப் பழக்கத்திலிருக்கும் சொற்களையே உபயோகப்படுத்துகிறார்கள். பாகவதத்தில் ராதை என்னும் சப்தம் ஓரிடத்தில் கூடவரவில்லீ. அதுபோல் என்னவோ, காசீகண்டத்தில் அன்னபூர்ணாவின் சப்தம் எழுதவில்லைபோலும். ஆனால் ப்ரம்மவைவர்த்த புராணத்தில் பக்கத்திற்கு ஒரு ராதை வருகிறாள். வியாஸர்தான் இப்படி செய்திருக்கிறார் என்பதற்கில்லீ, வால்மீகியும் ராமாயணத்தில் ராமசந்திரன் என்னும் பதத்தை ஒரு இடத்திலும் உபயோகிக்கவில்லீ. ஆனால் ஒவ்வொரு ஆயிரம் சுலோகங்களுக்குப் பிறகு காயத்ரியின் அக்ஷரங்களை ஒவ்வொன்றாகப் பிரயோகப்படுத்தி யிருக்கிறார்கள். இதுபோல் வேறுகவிகளும் கிரந்தகர்த்தாக்களும் கூட இதுபோன்ற முக்யமான பெயர்களை விட்டு விட்டு மறை பொருளாக எழுதியிருக்கின்றார்கள். வ்யாஸபகவான் காசீகண்டத்தில் காசீ காண்டம் அன்னபூர்ணா என்னும் பெயர் எக்காரணம் கொண்டும் எழுதாவிட்டாலும் சரி, ஆனால் நாம் இந்த பஞ்சகாலத்தில் அன்னபூரணியின் நினைவுடனேயே (உயிர் வாழ்வதற்கு துணையாக) இருக்கவேண்டும். நாம் எல்லோரும் ஒரு மனதுடனே அவளைப் பிரார்த்திக்க வேண்டும். அன்னையே ! இந்தப் பசிப்பிணியினால் வாடும் பாரத மக்களை வெறுத்துவிட்டு வேறு அன்னிய தேசங்களுக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தைவிட்டு இந்த தேசத்தையும் மக்களையும் அன்னத்தினால் பூர்ணமாக்கிவை அம்மா என்று பிரார்த்திக்க வேண்டும். ஸகலபுராணங்களும் ஸம்ஸ்க்ருத பாஷையிலிருந்தே பிறந்தது. அதனால் இக்காலத்திய ஸம்ஸ்க்ருத பாஷை படிக்காத பாரதமக்களுக்கு தர்மவிஷயமாகவும் சரித்திரவிஷயமாகவும், பழக்கவழக்கங்கள் பேசும் பண்பு இவைகள் நன்றாகத் தெரிய வருவதில்லீ. அதனால் நம்முடைய சொந்த பழக்கவழக்கங்களை விட்டுவிட்டு அந்நிய நாட்டு பழக்கவழங்களின்படி நடக்கிறார்கள். புராணக் கதைகளெல்லாம் பொய்யும், வம்பும் நிறைந்திருக்கின்றன. இத்தகைய கதைகளைப் படிப்பது நம் விலீயுயர்ந்த நேரத்தை வீணாக்குவது எனக் கருதி துப்பறியும் நாவல்களையும் காதல் நவீனங்களையும் படிப்பதே ஜன்மம் அடைந்த ஸாபல்யம் என்றெண்ணுகிறார்கள். மந்த புத்தியுடைய என்னுடைய எண்ணம் என்னவென்றால் எந்த விஷயத்தையும் மேலெழுந்தவாரியாகப் பாராமல் அதன் மர்மத்தை அறிந்தால் அதன் ரஸம் உண்டாகும் என்பது. சற்றுப் பொறுமையுடன் சிரமப்பட்டு இப்புராணங்களைப் எத்தனை கண்யமானது என்பது தெரியவரும். இங்குள்ள பலவேத விற்பன்னர்களுக்கு இதை மொழிபெயர்ப்பது சரியில்லீ என்பது அபிப்பிராயம். ஏனென்றால் இவைகளில் வேத மந்திரங்களில் உள்ள அநேக ரகஸ்யங்களும் மர்மங்களும் வருகின்றன. இதைப் யாத்திரை விதி படிப்பதற்கும், வேதத்தில் அதிகாரம் இருந்தால்தான் முடியும் என்பது அவர்களின் அபிப்ராயம். ஆனால் ஈஸ்வரனைப் பற்றியும் அவருடைய லீலாவினோதங்களைப் பற்றியும், நினைக்கவும் படிக்கவும் அவனிடமிருந்து வந்த நம் எல்லோருக்கும் அதிகாரமுள்ளது. ஹரியை பஜிப்பதற்கு ஜாதி, ரீதி ஒன்றும் தேவையில்லீ. எவன்ஹரியைபஜிக்கிறானோ அவனே ஹரியாகிறான். மற்றொரு விஷயம். பக்தியும், சிரத்தையும் கூடின ஜனங்களுக்குப் பரமகோப்யமான விஷயங்களை அவர்களிடமிருந்து மறைத்து வைப்பதே அபராதமாகும். காசியைப் பற்றியும் அதன் புராண வரலாறுகளைப் பற்றியும் தெரிய விரும்பும் சிரத்தா பக்திமான்களில் என்னுடைய மொழிபெயர்ப்பிலிருந்து சிறிதேனும் லாபமடைந்தார்களானால் அதுவே நான் புராண ரகஸ்யங்களை வெளியிட்ட குற்றத்திற்கு பிராயச்சித்தமாகும். இந்த காசி கண்டத்தை மஹாராஷ்ட்ரம், குஜராத்தி, பெங்காலி,தெலுங்கு ஏன் பாரசீக பாஷையில்கூட மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. காசியிலும் பிராசீனமான பாஷையிலோ இதுவரையிலும் வெளிவந்ததாகத் தெரியவில்லீ என்று நான் தமிழ்படுத்தியஹிந்து அனுவாதி கர்த்தரான நாராயணபதி சர்மா த்ருபாடி அவர்கள் கூறுகிறார்கள். மேலும் என்னுடைய ஹிந்தி மொழி பெயர்ப்பிலும் சரியான ஸம்ஸ்க்ருத மூலத்தின் சரியான கருத்துக்கள் வந்திருக்கின்றனவோ, என்னவோ நான் அறியேன் என்று கூறுகிறார், அப்படியிருக்கும் பொழுது ஸம்ஸ்க்ருதத்திலும், ஹிந்தியிலும், மிக்க சொற்ப அறிவுள்ள நான் தமிழில் மொழி பெயர்க்கத் துணிந்தது என்னுடைய அஹங்காரமோ அல்லது பாஷா கர்வமா, அல்லது மூடதைரியமா -எனக்கே புரியலில்லீ - அன்னபூரணியே அறிவாள் (எல்லாரும் எளிதாகப் படிக்கவேண்டும் என்ற ஒரே ஆர்வமேதவிர வேறொன்றுமில்லீ) காசீ காண்டம் தமிழிலும்கூட வேறு ஒரு மொழிபெயர்ப்பு இதுவரை வந்ததோ என்னவோ சரியாகத் தெரியவில்லீ தஞ்சாவூர் ஸரஸ்வதி மஹாலில் தமிழ்ச் செய்யுள் வடிவில் ஒரு மொழி பெயர்ப்பு இருந்தாகத் தெரியவந்தது. மற்றபடி ஒன்றும் தெரியவில்லீ. காசியிலேயே காசிவாசத்திற்காக வந்த தமிழ்ப் பெரியவர்கள் மொழிபெயர்க்க முயற்சித்துப் பாதியிலேயே எந்தக் காரணத்தைக் கொண்டோ நிறுத்தி விட்டார்கள் என்று தெரியவருகிறது. அதனால் எனது தமிழ்நாட்டு ஸஹோதர ஸஹோதரிகளிடம் நான் தலீவணங்கி கைகூப்பி விண்ணப்பித்துக் கொள்வது என்ன வென்றால் ஒரு வேளை ஏதாவது தமிழ் மொழிபெயர்ப்புகள் தமது அக்ஞானத்தினால் தெரியாமல் இருக்கலாம். இந்த மொழிபெயர்ப்பைவிட அவைகள் மேன்மை யாகவும் அமைந்திருக்கலாம். ஆனால் நம்முடையக் குழந்தைகளின் மழலீச் சொற்களைக் கேட்டுவிட்டு நாம் ஆனந்தப்படுவது போல இந்த மொழிபெயர்ப்பையும் இதை எழுதியது நமது ஸகோதரிகளில் ஒருத்தி என்று கருதி இதன் குற்றம் குறைகளை (எழுதியதில்) மன்னித்து ஏற்று என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். இந்தப் புஸ்தகத்தைப்பற்றிய மற்றொரு விஷயம் என்னவென்றால் இதற்கு அவிமுக்த க்ஷேத்ரம், ஆனந்தவனம், மஹாஸ்மசானம், வாராணஸி என்ற பெயரே ஆங்கிலேயர்களால் 'பனாரஸ்' என்று அழைக்கப்பட்டது மேலும் முகம்மதியர்களின் படையெடுப்பால் அநேகம் தேவஸ்தானங்களும் இடங்களும் இடிந்து மறைந்தும், பெயர் மாறிமாறி - உருத்தெரியாமல் போயிருக்கின்றன. மற்றவைகள் இருக்கட்டும். ஸ்வயம் பகவான் விஸ்வேஸ்வரர் கோவிலே ஞானவாபிக்கு வடக்குபக்கத்தில் இருந்தது. ஆனால் இப்பொழுது பகவான் எழுந்தளியிருக்குமிடம் ஞானவாபிக்குத் தெற்குபக்கத்தில் உள்ளது. இதைப்போல இடம் மாறியதும் மறைந்ததுமான ஸ்தானங்களை முடிந்தமட்டிலும் இந்த மொழிபெயர்ப்பில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. இப்பொழுது காசியில் யாத்திரை விதி புராதான தத்வ விசாரணைக் கமிட்டியினால் இவ்விஷயங்களை அறிந்து ஆராய்ந்து தெளிவாக்க முயலுகிறது. அவைகளைச் சேகரித்தும் அதை உத்தரகாசி அல்லது குப்தகாசி என்று வெளியிட எண்ணியிருக்கிறார்கள். ஆனால் அவைகளுக்கும் காசீ கண்டத்திற்கும் ஒரு ஸம்பந்தமும் கிடையாது. கடைசியில் மிகப் பழமையான ஒரு ஸம்ஸ்க்ருத வித்வான் ஹிந்தியில் எழுதிய சுலோகத்தின் ஒரு வரியையும் அதன் தமிழாக்கத்தையும் கீழே எழுதித் தங்களிடருந்து பிரியா விடைபெற்றுக் கொள்ளுகிறேன்:- சுலோகம் - அஸாரே கலு ஸம்ஸாரே ஸாரமேதத் சதுஷ்டயம் । காச்யாம் வாஸ: ஸதாம் ஸங்க:॥ கங்காம்ப: சிவபூஜனம் தமிழாக்கம்;- ஸாரமற்ற சக்கையாகிய இந்த ஸம்ஸாரத்தில் ஸாரமாயுள்ள ரஸம் நான்கு :- அது என்ன வென்றால் காசீ வாஸம்; ஸத்ஸங்கம்; கங்காஸ்னானம், சிவபூஜனம். யாத்திரை விதி காசீ கண்டம் அத்யாயம் 1 1. இந்தக்காசி பூமியில் இருக்கிறது. ஆனால் அது பூமியைச் சேர்ந்ததில்லீ. கீழான பாகத்தில் இருந்தாலும் இது ஸ்வர்க்கத்துக்கும் உயரே இருக்கிறது. இது பூமண்டலத்துடன் ஸம்பந்தப்பட்டிருந்தாலும் முக்திதானத்தை அளிக்கிறது. இந்த பூமியில் மரணமடையும் பிராணிகள் அம்ருதபதத்தின் அதிகாரிகள் ஆகிறார்கள். 2. அவர்களை த்ரிபதகாமிநீயான கங்கைக் கரையில் எப்பொழுதும் தேவகணங்கள் ஸேவிக்கிறார்கள். இந்த த்ரிபுராந்தகனுடைய ராஜதானியான ஸ்ரீ காசி அக்ஞானமாகிய ஆபத்திலிருந்து ஜகத்தை ரக்ஷிக்கட்டும் எந்த பரமாத்மாவின் 3. ஸ்ருஷ்டி, ஸ்திதி, ப்ரளயம் என்கிற வியாஜ மூலமான ஸந்தியில் த்ரைலோக்யாதிபதியிடம் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரர் எப்பொழுதும் போவதும் வருவதுமாக (அதாவது ஜனன மரணம்) இருக்கிறார்களோ, அந்த மஹேஸ்வரனுக்கு நமஸ்காரம். 4. பதினெட்டு புராணங்களையும் இயற்றியவரான ஸத்யவதியின் புத்ரர் வ்யாஸர் ஸுத முனிவருக்கு முன்னால் எல்லா பாபங்களையும் போக்கடிக்கும் காசீகண்டத்தின் கதையைச் சொல்லத் தொடங்கினார். வ்யாஸ பகவான் கூறினார். ஒருசமயம் நாரதமுனி நிர்மலமான நர்மதா நதியில் ஸ்நானம் செய்து சரீரம் எடுத்தவர்களுக்கெல்லாம் ஸமஸ்த ஐஸ்வர்யங்களையும் அளிக்கின்ற (அமரகண்டக அதிஷ்டாதா) ஸ்ரீ ஓங்காரேஸ்வரரைப் பூஜித்தபிறகு ஸத்முனிகளான- 5. ஸம்ஸார தேஹதாரிகளுக்கு, ஸம்ஸார ஸந்தாப ஸம்ஹாரியான நர்மதாவின் ஜலத்தினால் தூய்மையான விந்த்யாசலம் என்னும் பர்வதத்தைச் அத்யாயம்–1 6. சுற்றிப்பார்க்கக் கிளம்பினார். அந்தபர்வதம் சோபையுடன் கூடிய ஸ்தாவரம், ஜங்கமம் ஆகிய இரண்டு விதமான தன்னுடைய பூமிரூபமான ரஸத்தை, வாயுமய ரூபமான 7. ப்ருத்வீ என்னும் நாமத்தை அர்த்தமுடையதாக ஆக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து ரஸித்தார். அது (ரஸால) மரங்களினால் ரஸமயமாகவும், அசோக வ்ருக்ஷத்தினால் சோகத்தைப் போக்கக்கூடியதாகவும், பனை, மூங்கில்களாலும், தமாலகம், ஹிந்தாலம் முதலிய மரங்களினாலும் நிறைந்ததாகவும், 8. பெரிய பெரிய (ஸோபாடி) என்னும் வ்ருக்ஷங்களால் ஆகாயத்தை மறைப்பதாகவும், கொடிகள், ஸ்ரீ பலம் முதலியவைகளால் அழகுபடுத்தப்பட்டதும், அகர் (ஸாம்பிராணி) வ்ருக்ஷங்களால் வாஸனை நிறைந்தும், தாழை வனப்புதர்களால் வானரங்களைப்போல், 9. பிங்களவர்ணமுள்ளதாகவும் இருந்தது. அந்தப் பர்வதம் வனதேவியினுடைய குசங்களைப் போன்ற லகுசா மரங்களால் (சீமைச்சக்கை) மனோஹரமாயும். அம்ருதமயமாயும் இருக்கிறது. அந்தப் பர்வதம் பிளந்துவிட்ட மாதுளைப்பழங்களால் தன்னுடைய அன்பு 10.நிறைந்த இதயத்தைக்காட்டிக் கொண்டு, காட்டரசன் மாதிரி, மாதவிக்கொடியைத் தழுவிக்கொண்டு நிற்கிறது. 11.இந்த விந்த்யாசலம் விதவிதமான அநேக பழங்களை மாலீயாக அணிந்து 12.வானளாவிய வடவிருக்ஷங்களினால் நான்கு பக்கங்களிலும் கோடிக்கணக்கான ப்ரம்மாண்டங்களைத் தாங்கிக் கொண்டு, அநேக உருவெடுத்த பகவானைப்போல் இருக்கின்றது. வனத்தலத்தின் நாபீபாகம் போன்ற பலாவினுடையவும், அமுதமயமான பழங்களையுடைய வாழைமரங்களாலும் சூழப்பட்டிருக்கின்றது. அழகான யாத்திரை விதி ஆரஞ்சு, எலுமிச்சை, இலந்தை, நாரத்தை முதலியவைகள் மண்டபம்போல் அதை அலங்கரிக்கின்றன. 13 மந்த வாயு கங்கோலிப் பழத்தின் கொடியை மெதுவாக அசைந்து ராஸக்ரீடை செய்வதைப் போலும், விந்த்யாசலத்தின் இளங்கொடிகள் பெரிய கொடிகளைக்கூடச் சிறிய சிறிய விளையாட்டினால் நர்த்தன மண்டபம்போல் ஆக்கிக்கொண்டிருக்கின்றன. 14.மேலும் அந்தப் பர்வதம் மந்தமாக அசைகின்ற கற்பூர வாழை இலைகளினால் சைகைக் காட்டி வழிப் போக்கர்களை இளைப்பாற அழைக்கின்றதுபோல் உள்ளது. 15.பின்னும் அது நாகரிகர்கள் போல் நாககேஸர மரத்தின் இலீகளால் தன்னில் படரும் முல்லீக் கொடியின் புஷ்பக் கொத்துகளை இளம் பெண்ணின் ஸ்தனங்களைத் தொடுவதுபோல் வருடிக் கொண்டிருக்கின்றது. 16.பலாவினுடைய பழங்களைத் தனது ப்ரேமையினால் விரஹ தாபத்தை அடைந்த பெண்ணின் மாம்ஸத்தை சாப்பிடுவது போலும் அதனால் துக்கமடைந்து, இலீகளை யுதிர்த்து நிற்கும் பலரசரமரங்கள் சுகக் கூட்டங்களைப் போல் சூழப்பட்டிருக்கின்றன. 17.தங்களைக் கதம்பமரம் என்று ஆடம்பரப் படுத்திக் காட்டும் வேப்பமரங்களைப் பார்த்தவுடனேயே ரோமங்கள் குத்திட்டு நிற்பதைப்போல் அநேக கதம்பமரங்கள் வேப்ப மரங்களை நான்கு புறமும் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. 18.ஸுமேரு பர்வதத்தின் உயர்ந்த சிகரங்களைப் போல் உயர்ந்த ருத்ராக்ஷ மரங்களும், தத்தூரவிருக்ஷங்களும் காமிகளுடைய லீலாக்ருஹம்போல் பரவி இருக்கின்றன. 19 சில சில இடங்களில் வடவிருக்ஷங்களினால் கூடாரம் அடித்தாற்போல சூ ழப்பட்டிருக்கின்றது. குடம்போல் பூத்திருக்கும் குடஜவிருக்ஷத்தின் மேல் உட்கார்ந்திருக்கும் கொக்குகள் போல விளங்குகின்றன. அத்யாயம்–1 20.காம்தா கரீரம், காஞ்சம் இவைகளின் இலீகள் யாசகர்களுக்கு ஆயிரம் ஆயிரம் கைகளினால் வாரி வழங்குவதைப்போல் அசைந்தாடி அழைக்கின்றன. 21.மஞ்சள் மல்லிகைகளுடைய மொட்டுகள் தீப ஹாரத்தி செய்வதுபோல் இருக்கிறது. புஷ்பங்கள் நிறைந்த ஸேமா விருக்ஷங்கள் பத்மங்கள் நிறைந்த ஸாரஸத்தின் சோபையைக்கூட ஜயிக்கின்ற மாதிரி இருக்கிறது. 22.சில இடங்களில் அரசும் ஸ்வர்ண கேதகியும் நக்தமாலாவும் அதன் சோபையை அதிகப்படுத்துகின்றன. 23.காஞ்சன கேதகி முதலிய புதர்கள் அடர்ந்திருப்பது கருணையைத் தூண்டுகிற மாதிரியுள்ளது. 24.உதிர்ந்த மதுரக புஷ்பங்களினால் சில இடங்களில் பூமியில் சயனித்திருக்கும் மகேசுவரனுக்கு முத்தினால் அர்ச்சனைப் பண்ணியிருப்பது போல் தோன்றுகிறது. 25.அர்ஜுனம் முதலிய வ்ருக்ஷங்கள் அந்த பர்வதத்திற்கு விசிறியால் வீசுவதுபோல் அமைந்துள்ளது. 26.பேரீச்சைத் தென்னை முதலியவைகள் ஆகாயத்திற்கே குடைபிடிப்பதுபோல் உள்ளன. 27.அநேக வ்ருக்ஷங்கள் அம்மலீக்கே திலகமிட்டதுபோல் அமைந்து உள்ளன. 28.மேலும் அம்மலீ தேவதாருவைப் போன்ற அநேக மரங்களாலும் கொடிகளாலும் சூழப்பட்டிருக்கின்றது. 29.நாகமரம் போன்ற அநேக வர்ணப் பழங்கள் பழுக்கும் மரங்களினாலும் அநேகம் கொடிகளாலும் சூழப்பட்டிருக்கின்றன. 30.(கிராம்பு- லவங்கம்) இவைகளாலும் நெருங்கப்பட்டிருக்கின்றன. சங்கவிருக்ஷம், சந்தனம், ரக்தசந்தனம் ஆகிய மரங்களும் நெருங்கிச் சூழ்ந்துள்ளன. 31.திராக்ஷை வெற்றிலீ ஆகிய கொடிகளாலும், யாத்திரை விதி மல்லிகை முல்லை ஆகியக் கொடிகளாலும் சிறந்து விளங்குகின்றன. 32.மாலதீ புஷ்பங்களில் அமர்ந்த வண்டுகள் கோபியருடன் அநேக ரூபம் எடுத்துக் கொண்டு க்ரீடை செய்யும் க்ருஷ்ணனைப் போல் இருக்கிறது. 33.மான் முதலிய மிருகங்களாலும் நானாவித பக்ஷிகளின் நாதத்தாலும் நதி, அருவி குளங்கள் தடாகங்கள் ஆகியவைகளினாலும் மனோரமணீயமாக விளங்குகிறது. 34. அநேக தேவகணங்கள் ஸ்வர்க பூமியைத் துச்சமாகக் கருதி போகத்தில் இச்சைக் கொண்டவர்களாக இந்தப் பர்வதத்தில் ரமிக்கின்றனர். 35.அந்த பர்வதம் இங்கும் அங்கும் சிதறிக் கிடக்கும் இலீ, புஷ்பம் முதலியவற்றாலும் அர்க்யம் கொடுப்பது போலவும், மயில்களுடைய இனிய நாதத்தால் வரவு கூறுவது போலவும் இருக்கிறது. 36. அதன்பிறகு அந்த விந்த்யாசலம் நூற்றுக்கணக்கான கதிரவர்களுடைய பிரகாசம் பொருந்திய ஜ்வலிக்கிற வஸ்திரத்தைக் தரித்தவருமாகிய நாரத மஹரிஷியைக் கண்டு தூரத்தில் வரும் போதே எதிர் கொண்டழைக்கக் கிளம்பியது. 37.ப்ரம்ம புத்திரர் நாரத முனியினுடைய வருகையால் அவருடைய தேஜஸ் பட்டதும் மலீகளிலுள்ள குகைகளிலிருந்த இருட்டு பட்டென்று விலகியது. அதுபோல் பர்வதராஜனுடைய மாநஸிக அந்தகாரமும் விலகியது. 38.நாரத முனிவருடைய ப்ரம்ம தேஜஸ்ஸால் ப்ரமையடைந்த போதிலும் அந்தப் பர்வதராஜன் அவருடைய ஸத்காரத்தில் தத்பரனாகித் தன்னுடைய ஜடத்தனமான பாஷாண ஸ்வபாவத்தையும் விட்டு விட்டான். அத்யாயம்–1 39.அப்பொழுது நாரதமுனிவர் பர்வதராஜனுடைய சிலா ரூபத்திலும் மூர்த்திரூபத்திலும் ம்ருதுஸ்வபாவத்தைக் கண்டு ஆனந்தமடைந்தார். ஸாதுக்களுடைய ஹ்ருதயம் விநயத்தினால் வசியமாகிறதன்றோ! 40.எவன் ஒருவன் குலத்திலேயோ, பணத்திலேயோ உயர்ந்தவனாக இருந்தபோதிலும் தனது வீடு தேடி வந்த அதிதிக்கு விநயத்துடன் ஸேவை செய்கிறானோ, அவனே மஹான். அவன் பெரிய குலத்தவனானாலும் அவனிடம் பெருமையிருப்பதில்லீ. 41.அந்த உயர்ந்த கிரி, அரசன் உன்னதமான சிகரங்களையுடையவனாக இருந்தாலும் முனிவரைக்கண்டு சிரம் தாழ்த்தி வணங்கினான். 42.அப்பொழுது நாரதமுனிவர் அவரைத்தன் கைகளால் தூக்கி நிறுத்தினார். 43.ஆசீர்வாதத்தினால் அவரை ஸந்தோஷிக்கச் செய்து அவருடைய மனதைவிட உயரமாகிய ஸிம்மாஸனத்தில் அமர்ந்தார். பிறகு விந்த்ய அரசன் தயிர், தேன், ஜலம் அக்ஷதை, அருகு, எள்ளு, தர்ப்பை, புஷ்பம் இந்த எட்டுவித அர்க்கியங்களினால் நாரத முனிக்குப் பூஜை செய்தார். 44.முனிவரும் அர்க்கியத்தைக் க்ரஹித்துக் கொண்டார், பிறகு விந்த்யராஜன் நாரத முனிவரின் சிரமம் தீரக் கைகால்களை பிடித்துவிட்ட பிறகு கூறினான்- 45.முனிவரே ! உங்களுடைய வருகையினால் எனது ரஜோகுணமும் ஒழிந்தது- தங்கள் ஸேவையினால் ஆந்த்ரிக தமோ குணமும் என்னை விட்டு நீங்கியது. இன்று நான் பூர்ணமானேன். 46.இன்று எனது ஸுதினம். வெகு காலமாகக் பிரார்த்தித்தது இன்று பலன் கிடைத்தது. 47.இன்றுமுதல் எங்கள் பர்வத ஜாதியில் நாங்கள் பூமியைத் தாங்கிய கௌரவத்தில் நானும் தந்யனானேன் யாத்திரை விதி என்றான். இதைக் கேட்ட நாரதர் ஒரு நெடுமூச்சுவிட்டு விட்டுப் பேசாமல் இருந்தார். 48.அப்பொழுது அந்த பர்வராதஜன் திகிலடைந்தான். ஸ்வாமி! தாங்கள் ஏன் நெடுமூச்செறிந்தீர்கள்! அதைச் சொல்ல வேண்டுமென்றார். 49.மூன்று உலகில் பிரார்த்தனையினால் அடையவேண்டியதெல்லாம் நான் தங்கள் வருகையினால் அடைந்து துவிட்டேன். ஒரு பொருள் கூட பாக்கியில்லீ. தங்கள் காலீப் பிடிக்கிறேன். எனது பேரில் க்ருபை வைத்துக் காரணத்தைக் கூறுங்கள் ஸ்வாமீ. 50.தங்கள் வருகையினால் நான் புளகாங்கிதமடைந்தேன். ஆனந்த மிகுதியினால் பேசும்பொழுது நாக்குக்குளறுகிறது. அதனால் மனதிலுள்ள எண்ணங்கள் முழுவதும் வெளிவிட முடியவில்லீ, ஆனால் ஒரு விஷயம் சொல்லாமல் இருக்கமுடியவில்லீ. 51.நமது முன்னோர்கள் ஸுமேரு முதலாகிய பர்வதங்கள் பூமியைத் தாங்குகிறார்கள் என்று பெருமையுடன் வர்ணிக்கிறார்கள்; பெரியவர்கள் ஸமுதாயம் இப்படிக் கூறுகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் தனியாகவே இப்பூமியைத் தாங்குவேன். 52.அந்த ஹிமாலயம் இருக்கிறதே, அவனையும் விச்வ புருஷர்கள் சிலாகித்துப் பேசுகிறார்கள். 53.ஏனென்றால் அவன் பார்வதிதேவியின் பிதா அல்லவா? அரசன் மஹாதேவனுடைய மாமனார் அந்தத் தங்கமயமான ரத்ந சிகரங்களுடன் கூடிய தேவதைகள் வசிக்கும் ஸ்தானமான அந்த ஸுமேருவைக்கூட நான் மதிப்பதில்லீ. 54.இந்த உலகில் நூற்றுக்கணக்கான பர்வதங்கள் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. அவைகளைப் பற்றிப் பெரியவர்கள் ஒருவார்த்தைகூடக் கூறுவதில்லீ. அத்யாயம்–1 ஆனால் இவைகள்கூட தங்கள் ஸ்தானங்களில் மதிப்பு வாய்ந்தவைகளே. 55. மந்தேந என்னும் ராக்ஷஸக் கூட்டத்தைப் பற்றி ஸந்தேஹப்படுவதால் உதயாசலபர்வதம் தயைக்குரியதாகிறது; நிஷத பர்வதத்தில் ஓஷதிகள் மருந்துக்குக்கூட இல்லீ. அஸ்தாசலத்தின் கீர்த்தி அஸ்தமித்தே இருக்கிறது. 56. நீலகிழி மறைத்துக் கொண்டிருக்கிறது. மந்த்ராசலத்தினுடைய ப்ரகாசம் மங்கிவிட்டது; மலயாசலத்தில் கேவலம் பாம்புகள் மட்டுமே வஸிக்கின்றன. ரைவத பர்வதத்தின் செல்வத்தைப் பற்றி ஒருவரும் புரிந்த கொள்ளவேயில்லீ. 57.பிறகு ஹேமகூடம் த்ரிகூடம் முதலிய பர்வதங்களில் குப்பை கூளங்களே உள்ளன. கிஷ்கிந்தை, க்ரௌஞ்சம், ஸஹ்யம் இவைகள் ஆதியிலிருந்தே பூமிபாரம் வஹிக்க யோக்யதை இல்லாதவைகளே; என்றான். 58.இந்த விதமான விந்த்யராஜனுடைய வார்த்தைகளைக் கேட்டு நாரதர் மனதில் சிந்தனை எழுந்தது. இத்தனை அஹங்காரம் உள்ளவனுக்கு பெருமையடைய முடியாது. என்ன, 59.இதே பூமியில் ஸ்ரீ சைலம் பர்வதங்கள் இல்லீயா? அவைகளுடைய சிகர தரிசனமே மனிதர்களுக்கு முக்தி அளிக்கிறதே; 60.இன்று இந்த பர்வதத்தினுடைய பலத்தைப் பார்த்துவிட வேண்டும்: என்று மனதில் யோஜித்த நாரதர் கூறத் தொடங்கினார்:- பர்வதங்களுடைய ஸாமர்த்தியங்களைப் பற்றி நீ கூறியவைஅனைத்தும் உண்மையே. 61 ஆனால் எல்லா பர்வதங்களினுடையவும் அரசனான ஸுமேரு உன்னை அவமானம் செய்கிறான். அதை நினைத்தே யாத்திரை விதி மூபெருச்செறிந்தேன். அதை உன்னிடம் சொல்லிவிட்டேன். 62.இல்லாவிட்டால் என்னை ஒத்த ஸாது மஹாத்மாக்களுக்கு இவ்விஷயங்களெல்லாம் எதற்கு? உனக்கு ஷேமம் உண்டாகட்டும் என்று கூறி நாரதர் ஆகாய மார்க்கமாகக் கிளம்பினார். 63 நாரத முனிவர் போனபிறகு மிகவும் சிந்தா- குலனாக விந்த்யன் தன்னைத்தானே இகழ்ந்து கொள்ளத் தொடங்கிகினான். 64.சாஸ்திர ஞானம் இல்லாத ஜீவனும் ஒரு ஜீவனா?; இளப்பம், இளப்பம். ஒரு வேலீயுமில்லாமல் ஜீவித்திருப்பது அதை விட இளப்பம்; சொந்த ஜாதிபந்துக்களிடம் அவமானப்படுவது அதைவிட இளப்பம்; வீணான ஆகாயக் கோட்டை கட்டுவது, அதை விட இளப்பம். 65.ஆச்சர்யம், அவன் எப்படிப் பகலில் சாப்பிட்டுக் கொண்டும் இரவில் நித்திரை செய்து கொண்டும், சொந்தத்தில் ஸுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். 66.ஜ்வாலாமுகி அக்னிகூட இத்தனை வேதனை கொடுக்காது எனக்கு. இந்த சிந்தா ஸமூகங்கள் கொடுக்கிற வேதனைக்கு அது எத்தனையோ தேவலீ. 67.பெரியவர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கிறது. சிந்தை பயங்கரமான வியாதி; இந்த வியாதி உபவாஸம், ஔஷதம் இவைகளால் சாந்தி அடையாது. 68.இந்த சிந்தா ரூபமான ஜ்வரம், பசி, நித்திரை, பலம், ரூபம், புத்தி, சோபை ஏன் உயிரைக்கூடக் கவர்ந்து விடுகிறது. ஜ்வரம்கூட ஒரு வாரத்தில் சமனமாகிவிடும். 69.ஆனால் இந்தச் சிந்தை என்னும் ஜ்வரம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாக இருக்கும். அத்யாயம்–1 70.இந்தச் சிந்தா ஜ்வரத்துக்குத் தன்வந்தரியிடம் கூட மருந்தில்லீ. சாக்ரிஷிகூடத் தோற்றவிடுவார் என்றால் அஸ்வினி குமாரர்களால் என்ன முடியும்? 71.போகிறது; என்ன செய்வது? எங்கு போவது? எப்படி ஸுமேருவை ஜயிப்பது? நான் ஒரு குதி குதித்தால் அவனுடைய சிகரத்தின்மேல் உட்கார்ந்து விடுவேன். 72.ஆனால் ஒரு காரணத்தால் குதிக்க முடியவில்லீ. அதாவது பூர்வ காலத்தில் எங்கள் ஜாதியைச் சேர்ந்த ஒருவரே, இந்திரனுக்குக் கோபம் மூட்டிவிட்டு எங்களுக்கு இருந்த சிறகுகளையும் கொய்யச் செய்தார். அதனால் சிறகில்லாத நான் என்ன பண்ண முடியும்? இளப்பம், இளப்பம். 73.ஆனாலும் தான் அந்த ஸுமேரு உயரமாக இருந்து கொண்டு என் மேல் ஏன் பொறாமைப் படுகிறான்? பூமியின் பாரம் தாங்கும் சுமைதாங்கியாகத்தான் அவனிருக்கிறான். 74.இல்லாவிட்டால் ஸத்யலோகவாஸி ப்ரம்ம புத்ரர், ப்ரம்மசாரி நாரதர், - ஏன் பொய்சொல்லுகிறார்? என்னைப்போல் உள்ளவர்கள் தகுதி தராதரம் அறிய முடியுமா? 75.அதனால் தானே மனம் விசாரஸாகரத்தில் முழுகுகிறது. எனக்கு பராக்ரமம் இருந்தால் தானே நல்லது. இந்த வீண் சிந்தையினால் என்ன லாபம்? 76.நான் விசுவரக்ஷகர், ஸ்ரீ பகவான் விஸ்வநாதரை ஏன் சரணமடையச்கூடாது? அவர் எனக்கு புத்தி கூறுவார். 77.ஏனென்றால் விச்வநாதரே அநாதநாதன், என்று கூறப்படுகிறார்; இப்படி யோசித்து விந்த்யன் மனதில் ஒரு முடிவுக்கு வந்தான். 78.காலத்தை வீணாகக் கழிப்பது புத்திசாலித்தனம் அல்ல. வளரும் ரோகத்துக்கும் சத்ருக்களுக்கும் இடம் தரலாகாது. காசீ காண்டம் 79.க்ரஹம் நக்ஷத்ரங்களுடன் ஸூர்யபகவான் இந்த ஸுமேருவை அதிக பலசாலி என்று நினைத்துக் கொண்டல்லவா வலம் வருகிறார். 80.ஸீமேருவிடம் கோபம் கொண்ட விந்த்யன் இவ்வாறு எண்ணி எண்ணி எல்லீயில்லாத ஆகாச மார்க்கத்துக்கு இருட்டை உண்டுபண்ணும்படித் தனது சிகரங்களை வளரவிட்டான். 81.எங்கும் யாருடனும் விரோதம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் விரோதம் வைத்துக் கொண்டுதான் தீரவேண்டும் என்று வந்தால் அது பிறர் பரிகசிக்கும் படி இருக்கக் கூடாது. 82.பிறகு இந்த மகாபர்வதம் ஸூர்யனுடைய கதியைத் தடுத்து உயர்ந்து அக்கடா என்று சந்தோஷமாக இருந்தது. ப்ராணிகளின் வருங்காலம் இறைவன் கையில் அல்லவா இருக்கிறது? 83.இன்று யமராஜனுடைய பிதா இன்று யாருக்கு வலப்பக்கமாகத் திரும்பிச் செல்கிறாரோ, அவனே எல்லா பர்வதங்களிலும் ச்ரேஷ்டன், ஸ்ரீமான்! மஹான் பூஜிக்கத் தகுந்தவன். 84.இந்த விதமாக விந்த்யன் மனதிலிருந்த வ்யாகுலமெனும் பெரியபாரத்தை இறக்கிவிட்டு- 85.பிராம்மணன் காலீயில் ஸூர்ய பகவானை எதிர்பார்ப்பது போல், பார்த்துக் கொண்டிருந்தான். 86.எங்கு ஆதிசக்தி விந்த்யேஸ்வரி இருக்கிறாளோ, அந்த விந்த்யாசலம் தனது சொந்த சக்தியை, கச்சை கட்டிக்கொண்டு காட்டவேண்டாமா? ஸ்ரீ ஸ்காந்த புராணம் நான்காவதான காசீகண்டத்தில் பூர்வார்த்தத்தில், விந்த்ய பர்வதத்தின் வர்ணனம் என்ற முதல் அத்யாயம் ஸம்பூர்ணம். அத்யாயம்–2 அத்யாயம் 2 வ்யாஸர் கூறுகிறார்:- இந்த ஜகத்தின் ஆத்மா அமர்ந்திருக்கும் அந்தகாரத்தின் சத்ரு சூரியத் தேவன் தனது பவித்ரமான கிரணங்களைப் பரப்பினான். 1. ஸன்மார்க்க காமியின் தர்மத்தை வளரச் செய்து கொண்டு தமஸான நிலீயைத் தூர விரட்டிக் கொண்டு இரவில் சோகத்தால் வாடி மூடியிருக்கும் தனது ப்ரேயஸீக் கமலினியை மலரச் செய்தான். 2. தேவ பித்ருக்களுடைய ஹவ்ய கவ்ய பூதபலி ஆதிகர்மங்களில் ப்ரஜையை ப்ரவர்த்திக்கச் செய்தான். 3. காலீ மதியம் மாலீ மூன்று வேளைகளும் ஸந்தி காயத்ரி முதலிய க்ரியைகளை வ்ருத்தி செய்தான். துஷ்டர்கள் மூடர்கள் இவர்களுடைய இதயத்தில் அந்தகாரத்தை ஸ்தாபித்தான். 4. நிசி என்ற அசுரனால் விழுங்கப்பட்ட ஜகத்துக்குத் திரும்பவும் ப்ராண தானம் செய்து கொண்டு உதயகிரியில் தோன்றினான். ஸூர்ய உதயம் ஆனவுடனேயே எல்லா தார்மிக ஜனங்களுடைய மனமும் உதயமாயிற்று. பாருங்கள். பரோபகாரத்துக்குப் பலன் கைமேலே. 5. ஸூர்யன் ஸாயங்காலம் அஸ்தமித்துவிடுகிறான். பிறகு தினமும் காலீயில் பூர்வ திசையில் உதிக்கிறான். பிறகு தன்னால் கண்டனம் செய்யப்பட்ட பூர்வதிசை என்னும் நாயகியை கரஸ்பர்சத்தால் ஆச்வாஸம் செய்தான். 6. பிறகு விரஹானலத்தால் தஹித்துக் கொண்டிருக்கிற அக்னிதிசை என்ற நாயகியை முஹுர்த்த காலம் ஸம்போகித்தான். பிறகு கிராம்பு, ஏலம், கஸ்தூரி, கற்பூரம், சந்தனம் இவைகளைப் பூசிக் கொண்டிருப்பவளும் 7. வெற்றிலீக் கொடியினால் அதன் இலீகளைத் தரச்செய்து தாம்பூலம் தரித்துத் தனது உதடுகளை சிவப்பாக்கிக் கொண்டிருப்பவளும், திராக்ஷைக் யாத்திரை விதி கொத்துகளைப்போல் ஸ்தனபாரத்தின் நுனியை உடையவளும், லவலி லதையைப் போன்ற கைகள் என்னும் கொடியினாலும் அசோகத்தளிர் போன்ற கரங்களினாலும் சோபிப்பவளும்; 8. மலயாசலத்தினுடைய வாயு ரூபமான ஶ்வாஸத்தை இழுப்பவளும் க்ஷீரஸாகரத்தையே வஸ்த்ரமாகத் தரித்தவளும், சித்ரகூட பர்வதத்தின் தங்கத்தையும், ரத்னங்களையும் தனது அணிகளாகப் பூண்டிருப்பவளும், ஸுமேரு கிரியையே தனது நிதம்பஸ்தானமாகக் கொண்டவளும், 9.காவேரீ, கோதாவரீ ஆகிய துடைகளையுடைவளும் சோழதேசம் என்னும் ரவிக்கையை அணிந்தவளும், ஸஹ்யம், துர்துரம் ஆகிய பர்வதங்களை மார்பில் அலங்கரித்திருப்பவளும், காஞ்சிபுரம் என்னும் வங்கியால் சோபிப்பவளும் 10. மிகவும் கோரமான மஹாராஷ்டிரமெனும் வாக்கு விலாஸத்தால் பரம மனோஹரமாக இருப்பவளும், ஸத்குண சாலினி கோலாபுராதீஸ்வரி 11. மஹாலக்ஷ்மிக்குப் பீடபூமி மிகவும் சாதுர்யம் உடையவளும் அதை தக்ஷிண திசைக்கு இப்பொழுது திக் எனும் கன்னிகைகளின் ஸ்வாமியான ஸூர்யதேவன் செல்லத் தொடங்கினார். அவருடைய ரதக்குதிரைகள் ஸமஸ்த ஆசாச மண்டலத்தை விளையாட்டாகத் தாவிக்குதித்துக் கொண்டு செல்கையில், 12. மேலே செல்ல முடியவில்லீ. இதற்குள் சூரிய தேவருடைய ஸாரதி அருணன் கைகூப்பி வணங்கினான். 13. அருணன் கூறினான், ஹே பானுதேவா! விந்த்யாசலம் கர்வத்துடன் ஆகாச மார்க்கத்தை அடைத்துக் கொண்டு நின்றுக்கொண்டிக்கிறது. தாங்கள் வழங்கும் பிரதக்ஷிணத்தைப் பெறுவதற்கு விரும்பி, ஸுமேருவுடன் போட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது. அத்யாயம்–2 15. ஸாரதியின் வார்த்தையைக் கேட்டுக் கதிரவன் மனதுக்குள், ஆலோசனை செய்யத் தொடங்கினார். என்ன பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது. ஏன் இவன் ஆகாச மார்க்கத்தை அடைத்துக் கொண்டிருக்கிறான்; வ்யாஸர் கூறுவார்; ஸூர்யன் ஸமர்த்தன்தான்; ஆனால் பாதி மார்க்கத்தில் தடைப்பட்டு அவன் என்ன செய்வான்? 16. மிகவும் வேகசாலிதான், உண்மை, தநியாக வழியைத் தடைப்படுத்தி ஒருவன் நிற்கும்போது அவர் என்ன செய்வார்? ஸூர்யன் ராஹுவினால் பீடிக்கப்பட்டும் கூட க்ஷணமாத்திரம் கூட வழியில் தங்கமாட்டார். சூன்ய மார்கத்தில் தடைப்படுத்தி நிறுத்தினால் அவர் என்னதான் செய்வார்? 17. விதி வலிது, எந்த ஸூர்யன் இரண்டாயிரத்து இருநூற்றிரெண்டு யோஜனை தூரம் நமது மனிதர்களுடைய இரண்டு நிமிஷங்களில் கடக்கிறானோ அவருக்குகூட இன்று வெகு நேரம் வரைத்தாமதமாக நிற்க வேண்டி வந்தது. 18. மிக நேரம் கழிந்து விட்டது, கிழக்கு, வடக்குத் திசையில் உள்ளவர்கள் ப்ரசண்டமார்த்தாண்டனுடைய கிரணங்கள் விழும் தருவாயில் உள்ளதைக் கண்டு மனக்லேசம் அடைந்தார்கள். 19. மேற்கு தெற்கு திசையில் உள்ளவர்கள் கண்களை மூடித்தூங்கிவழிந்து கொண்டே க்ரஹநக்ஷத்ரங்களுடைய ஆகாசத்தைப் பார்த்தார்கள். 20. சூரியனைக் காணவில்லீயே, இது பகலும் இல்லீ, இரவும் இல்லீ. சந்திரனையும் காணவில்லீயே; ஆகாசத்திலேயும் அநேகமாக எல்லா நக்ஷத்ரங்களும் மறைந்துக் கொண்டு வருகின்றன. இது என்ன காலம்? ஒன்றும் புரியவில்லீயே. 21. காலம் வரும் முன்பே ப்ரம்மாண்டங்கள் லயமாகிவிடுமா? அப்படியும் இல்லீ. அப்படியிருந்தால் யாத்திரை விதி இதற்குள் ப்ரளய அலீகள் ப்ரம்மாண்டங்களை மூழ்கடித்து விடும் அல்லவா? 22. ஸ்வாஹா, ஸ்வதா, வஷட்காரம் என்றும் மூன்று கிரியைகளையும் செய்யாமல் உலகில் பஞ்சயக்ஞங்கள் செய்யாமல், மூன்று உலகும் நடுங்கத் தொடங்கியது; 23. கதிரவன் உதித்ததும் உலகில் யக்ஞம் முதலிய காரியங்கள் ஆரம்பிக்கப்படும். அந்தக்ரியைகள் மூலமாக யக்ஞ அதிகாரிகளான தேவர்கள் திருப்தி அடைவார்கள். இதெல்லாவற்றிற்கும் காரணம் ஸூர்யநாராயணர்தான். 24. சித்ரகுப்தன் முதலியவர்கள் ஸூர்ய பகவானிடம் இருந்தே காலத்தை அறிந்து கொள்கிறார்கள். அதனால் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ப்ரளயம் முதலிய கார்யங்களுக்கு ஒரே காரணம் ஸூர்யன்தான். 25. அந்த ஸூர்யனுடைய கதி தடைப்பட்டதும் மூன்று உலகங்களினுடைய கதி தடைப்பட்டதாகின்றன. யார், யார் எங்கு இருந்தார்களோ, அங்கங்கு சித்திரத்தில் எழுதியதுபோல் நின்றுவிட்டார்கள். 26. ஒருபுறம் கோரமான ராத்ரியின் அந்தகாரம், மறுபுறம் பகலினுடைய ப்ரசண்ட உக்ரமான வெய்யில். எத்தனையோ இடங்களில் ப்ரளயமே ஏற்ப்பட்டு விட்டது; உலகம் பயத்தினால் திகில் அடைந்தது. 27. இந்த விதமாக ஸுர, அஸுர, நர, நாக எல்லா ப்ராணிகளும் அநாயாஸமாக இது ஏதோ ஒன்று விபரீதம் நேர்ந்துவிட்டதே, என்று கூறிக் கொண்டு, 'அம்மா, ஐயோ' என்றெல்லாம் அழவும் தொடங்கி இங்குமங்குமாக ஓடவும் தலீப்பட்டார்கள். 28. இதன் பிறகு தேவதைகள் இதையெல்லாம் பார்த்துவிட்டு, ப்ரம்மாவைச் சரணம் அடைந்தார்கள். 'ரக்ஷிக்க வேண்டும்' 'ரக்ஷிக்க வேண்டும்' என்று கூறிக்கொண்டே அநேக விதமாகத் துதிக்கத் தொடங்கினார்கள். அத்யாயம்–2 29. விராட் ரூபரும் ஹிரண்ய கர்ப்பரும், அறியக்கூடாத ஸ்வரூபரும், மோக்ஷரூபரும் ஆனந்த ரூபரும் ஆன ப்ரும்மதேவருக்கு நமஸ்காரம். 30. யாரை தேவதைகள் கூட நன்றாக அறியவில்லீயோ எவரை நினைக்க முடியாத படி மனமும் சிறுத்துப் போகிறதோ, எங்கு பேச்சும் தடைபடுகிறதோ, அப்படிப்பட்ட சைதந்யத்துக்கு நமஸ்காரம். 31. 32. எவர் ஸத்வ குணத்தை ஆச்ரயித்து, விஷ்ணு உருக்கொண்டு பாலனமும், ரஜோ குணத்தை ஆச்ரயித்து ப்ரம்மரூபமாகி ஸ்ருஷ்டித் தொழிலும், தமோ குண ரூத்ர ரூபமாக ஸம்ஹாரத் தொழிலீச் செய்கிறாரோ அவருக்கு நமஸ்காரம். 33. யோகிகள் நிஶ்சலமான மனதுடன் ஏகாக்ரமாக ஆகாசத்தைப் போல் சுத்த அந்த: கரணத்துடன் யாரை ஜோதி ரூபமாகப் பார்க்கிறார்களோ, அந்த ஸ்ரீ ப்ரம்ம தேவருக்கு நமஸ்காரம். எவர் காலத்துக்கு வேறானவரானாலும், காலஸ்வரூபரோ, தனது இச்சைப்படியே நரரூபம் எடுத்துக் கொள்ள வல்லவரோ மூன்று குணங்களையுடைய ப்ருக்ருதி மூர்த்தியும் ஆகின்றாரோ, அவருக்கு நமஸ்காரம். புத்திஸ்வரூபமாயும், வைகாரிகராயும் தேஜஸ், தாமஸ் முதலான மூன்று வித அஹங்கார ரூபராயும், பஞ்ச தன்மாத்ர ஸ்வரூபராயும், பஞ்ச கர்மேந்த்ரிய ரூபராயும் இருப்பவருக்கு நமஸ்காரம். 34. ஐந்து ஞானேந்த்ரிய ரூபமாயும், பஞ்ச பூதஸ்வரூபரும், ஸ்தூல விஷயாத்மக ரூபராகவும் உள்ள ப்ரம்ம ஸ்வரூபருக்கு நமஸ்காரம். 35. எவர் ப்ரம்மாண்ட ஸ்வரூபராகவும் இருந்தும் அதன் மத்தியில் கார்ய ரூபமாகவும் பரிணமித்து இருக்கிறாரோ அவருக்கு நமஸ்காரம். கால தேசவர்த்த ப்ராசீன ரூபரோ அவருக்கு நமஸ்காரம். 36. அநித்ய நித்ய ரூபராகவும், ஸத் அஸத்துக்குப் பதியாகவும் இருப்பவருக்கு நமஸ்காரம்; ஸமஸ்த 100 யாத்திரை விதி பக்தர்களுக்குக் க்ருபை செய்யதத் தன்னிச்சைப்படி சரீரம் எடுப்பவருக்கு நமஸ்காரம். 37. தங்களுடைய ரேசகமான மூச்சு வேதம். தங்களுடைய வியர்வையினாலேயே இந்த ஸமஸ்த ஜகத்தும் உண்டானது. எல்லா பூதகணங்களும் தங்களுடைய பததலம்; ஸ்வர்கம் தங்களுடைய மஸ்தகத்திலிருந்து உண்டாயிற்று. 38,39 தங்கள் நாபியிலிருந்து ஆகாசம் வந்தது. தங்களுடைய ரோமம் வனஸ்பதிகளாயின. ஹே ப்ரபோ ! தங்களுடைய மனதிலிருந்து சந்திரன் உதித்தான். ஹே தேவா! நேத்ரங்களிலிருந்து ஸூர்யன் உதித்தான். தாங்களேதான் எல்லாம். 40. இந்த ஸமஸ்தமும் தங்களுக்குள் அடங்கினவையே; ஸ்துதி செய்பவனும், ஸத்தோத்ரமும், ஸ்துதிக்கு லக்ஷ்யமும் தாங்களே, இந்த ஸமஸ்த லோகங்களும் தங்களிடமே வஸிக்கின்றன. தங்களுக்கு அடிக்கடி நமஸ்காரம் செய்கிறோம். 41. தேவர்கள் இந்த விதமாக ப்ரம்மாவைத் துதித்துப் பூமியில் தண்டத்தைப்போல் விழுந்தார்கள். அப்பொழுது ப்ரம்மா ஸந்தோஷமடைந்து கூறினார். 42. ஹே விநயரூபமான தேவக் கூட்டங்களே! உங்களுடைய யதார்த்தமான இந்த ஸ்துதியினால் மிகவும் ஸந்தோஷமடைந்தேன். நீங்கள் எழுந்திருந்து கொள்ளுங்கள். நாம் சந்தோஷமடைந்தோம். இஷ்டமான வரங்களைக் கேளுங்கள். 43. எந்த மனிதனோ தேவனோ பவித்ரமாக சிரத்தையோடு கூட இந்த ஸ்துதையைப் பிரதி தினமும் எனக்காவது விஷ்ணுவுக்காகவாவது, மஹா தேவருக்காவது அர்ப்பணம் செய்தால் நாங்கள் மூவரும் அவனிடம் ஸந்தோஷப்படுவோம். அத்யாயம்–2 101 44. அவனுக்கு அவன் மனம்போல் புத்ர, பௌத்ர, பசு, தளம், ஸௌபாக்யம், ஆயுள் பயமிம்மை, யுத்தத்தில் வெற்றி இவைகளை அளிப்போம். 45. அவன் லௌகிக, பாரமார்த்திக யோகமும் அக்ஷயமான மோக்ஷமும், அவன் இச்சித்தயாவையும் அடைவான். 46. அதனால் ப்ரயத்தனத்துடன் இந்தத் துதியை ஒவ்வொருவரும் கூற வேண்டும். இந்த ஸர்வஸித்திப்ரத ஸ்தோத்ரம் அபீஷ்டத என்னும் பெயருடன் பிரஸித்தமாக விளங்கும். 47. தேவதைகள் வணங்கி எழுந்ததும் திரும்பவும் ப்ரம்மா கூறினார்- நீங்கள் ஸந்தோஷமாக இருங்கள். இங்கு வந்த பின்னும் ஏன் பயப்படுகிறீர்கள்? 48.49. பாருங்கள் இங்கு நான்கு வேதங்களும் மூர்த்திகரித்து இருக்கின்றன. பதினாறு வித்தைகளும், இந்த தக்ஷிணைகளுடன் பூர்த்தியான அக்னிஷ்டோமாதி யக்ஞங்களும் இருக்கின்றன. இதோ ஸத்யம், இதோ தர்மம், இதோ தபஸ், இதோ ப்ரம்மசர்யம், இதோ கருணை, இதோ பாரதிஸ்ருதி, ஸ்ம்ருதி புராணங்கள் அர்த்தத்துடன் படித்தவர்கள் இருக்கிறார்கள். 50. இங்கு காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம் மாத்ஸர்யம், கோழைத்தனம் (அதீரதா) பயம், ஹிம்ஸை, துஷ்டத்தனம், அஹங்காரம், நிந்தை, அஸூயை, அபவித்ரம் இவைகள் கொஞ்சம் கூடக் கிடையாது. 51. எந்தப் ப்ராம்மணன் வேதாத்யாயியாகவும், தபோநிஷ்டனாகவும், தபோத்யானவானாகவும் ஒரு மாதம், ஆறு மாதம் சாதுர்மாஸ்யம் முதலிய உத்தம வ்ரதங்களை அனுஷ்டித்தவனாகவும் இருக்கிறானோ- 52.53 எங்கு பதிவ்ரதா தர்ம வழியைப் பின்பற்றுகிறவர்கள் ஆகிய பெண்கள் இருக்கிறார்களோ, 102 யாத்திரை விதி மற்ற ப்ரம்மசாரிகள் இருக்கிறார்களோ, பரபெண்களைக் கண்டால் எங்கு நபும்ஸகர்களாக நடந்து கொள்கிறார்களோ பாருங்கள் அவர்களெல்லோரும் இங்கு இருக்கிறார்கள். 54. இங்கு இருக்கிறவர்கள் மாதாபிதாக்களுக்கு பக்தர்கள்; இவர்கள் பசுவிற்காக ப்ராணத்யாகம் செய்பவர்கள்; இவர்கள் வ்ரதம், தானம் ஜபம், யக்ஞம் ஸ்வாத்யாயம், ப்ராம்மணார்ப்பணம், ஸமாராதனை தீர்த்தயாத்ரைகள், தபஸ், பரோபகாரம் முதலிய ஸத்கர்கர்மங்களைப் பலனில் அபிலாஷை இல்லாமலேயே செய்தவர்கள். 55. காயத்ரீ ஜபம் செய்வதில் தத்பரர். அக்னி ஹோத்ரத்தில் த்ருடநியமம், கன்று போட்ட பசுக்களை ரக்ஷிப்பவர்; கபிலபசுக்களை தானம் செய்பவர்கள். 56. ஆசையில்லாமலேயே ஸோமபானம் செய்தவர்கள்; ப்ராம்மணர்களுடைய சரணோ தகத்தைப்பானம் செய்பவர், புண்யதீர்த்தங்களில் மரணமடையும் ப்ராம்மணோத்தமர்களுக்கு ‡ஶ்ரூஷை செய்தவர்கள். 57. தானம் வாங்கத் தகுதியுடையவராயினும் தானத்தில் இச்சையில்லாதவர்கள், தீர்த்தக் கரையில் பரிஹாரம் வாங்குவதிலிருந்து விலகி நிற்பவர்கள், இவர்கள் மிகவும் அன்பானவர்கள். 58. எவர்கள் நிர்மலமான மனஸோடும் ஹ்ருதயத்தோடும் சூர்யனுடைய மகரராசி ஸஞ்சாரத்தில் தீர்த்தராஜ் ப்ரயாகையில் ஸ்னானம் செய்கிறார்களோ, அவர்களெல்லோரும் ஸூர்யனுக்கு ஸமமான தேஜஸ்ஸுள்ள பவித்ர வான்கள்; 59. வாராணஸிபுரி பஞ்ச கட்டத்தில் கார்த்திகை மாதத்தில் மூன்று நாட்களாவது ஸ்னானம் செய்வார்களானால் அவர்கள் பரம நிர்மலமான பவித்ர சரீரமுடைய புண்ய சீலர்கள் ஆவார்கள். அத்யாயம்–2 103 60. எவர்கள் மணிகர்ணிகா கட்டத்தில் ஸ்னானம் செய்து மிகுந்த தனராசியினால் ப்ராம்மணர்களை ஸந்தோஷப்படுத்துகிறார்களோ அவர்கள் பூர்ண போகம் அனுபவித்து கல்பகாலம் வரை எனது லோகத்தில் வஸிப்பார்கள். 61. அதன் பிறகும் புண்ணிய ப்ரபாவத்தினால் காசியை அடைந்து விஸ்வேஸ்வரருடைய தயையினால் மோக்ஷமடைவார்கள். 62. ஆஹா! விஸ்வநாதருடைய நரகத்தில் மரணமடைபவர்களுக்கு பயமே இல்லீ. 63. அங்குள்ளவர்கள் மரணதேவனை தங்கள் ப்ரியமான அதிதியைப்போல் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆஹா சம்புவின் நகரில் மரணமடைந்தால் பயமில்லீ. 64. எவர்கள் குருக்ஷேத்ரத்தில் சுத்த தனத்தை தானம் செய்கிறார்களோ, அந்தப் பவித்ர சரீரம் உள்ளவர்கள் எனது பக்கத்திலேயே இருக்கிறார்கள். 65. எவர்கள் கயா தீர்த்தத்தில் பிதா மஹேஸ்வரரை அடைந்து, ப்ராம்மண முகமாகத் தங்கள் பிதாமஹருக்கு ச்ராத்த ரூபமான த்ருப்தியைக் கொடுக்கிறார்களோ, அவர்கள் என் பக்கத்தில் இருப்பவர்கள் அந்த பிதாமஹருடைய ஜனங்களே. 66. இந்த எனது லோகம் தானத்தினாலேயும், ஸ்நானத்தினாலேயேயும், ஜபத்தினாலேயும், பூஜையினாலேயும் அடைய முடியும்; கேவலம் பிராம்மணனை ஸந்தோஷப் படுத்தினாலேயே போதும். 67. எவர்கள் குடித்தன ஸாமான்களுடன் ஓரு க்ருஹத்தைத் தானம் செய்தனரோ, இங்கு எனது உலகத்தில் காணப்படும் மாளிகையெல்லாம் அவர்களுடையதே; 68. பள்ளிக்கூடம் கட்டுபவர்களும், வேதம் சொல்லிக் கொடுப்பவர்களும், வித்யாதானம் 104 யாத்திரை விதி செய்பவர்களும், புராணம் படித்துக் கூறுபவர்களும் 69. புராணக்ரந்தத்தைத் தானம் செய்பவர்களும், தர்மசாஸ்திரங்களை தானம் செய்பவரும் மற்ற புஸ்தகங்களை தானம் செய்கிறவர்களும், எனது லோகத்தில் வஸிக்கிறார்கள். 70. ப்ராம்மணர்களுக்கு யக்ஞத்திற்காகவும், விவாஹத்திற்காகவும், வ்ரதங்களுக்காகவும் பூர்ணமான செலவுகளுக்குப் பணம் கொடுக்கிறார்களோ - அவர்கள் இங்கு அக்னிபோல் ஜ்வலித்துக் கொண்டு வஸிக்கிறார்கள். 71. யார் வைத்தியத் தொழிலீ மேற்கொண்டு ஆஸ்பத்திரிகட்டி தானம் செய்கிறார்களோ, அவர்கள் பூர்ண போகம் அனுபவித்து கல்பகாலம் என் கூடவே வஸிக்கிறார்கள். 72. எவர்கள் முதலீ முதலான கெட்ட தடங்கல்களிலிந்து தீர்த்தங்களை விலக்குகிறார்களோ, அவர்கள் எனது அந்தப்புறத்தில் எனது சொந்தபிள்ளைகள் போல் வஸிக்கிறார்கள். 73. ப்ராம்மணர்கள் எனக்கும், விஷ்ணுவிற்கும், சிவனுக்கும் ப்ரியமானவர்கள். அவர்கள் உருவிலேயே பூமியில் நாங்கள் ஸஞ்சரிக்கிறோம். 74. ப்ராம்மணனும், பசுவும் ஒரு குலம். இரண்டாகப் பகிர்ந்திருக்கிறது. ப்ராம்மணனிடம் மந்திரம் இருக்கிறது. பசுவிடம் யக்ஞத்துக்கு இன்றியமையாத நெய் இருக்கிறது. ஒரே குலத்தின் இரண்டு பிள்ளைகள் ப்ராம்மணனும் பசுவும். 75. ப்ராம்மணர்களே ஸார்வ பௌம ஜங்கம தீர்த்த ரூபிகள் ஆக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுடைய ஸம்பாஷனையாகிய ஜலத்தில் பாமரர்கள் முழுகி சுத்தமாகிறார்கள். 76. பசுக்கள் பரம பவித்ரமானவை, பசுக்களைப் போல பரம மங்களத்தைக் கொடுக்கும் பிராணி வேறில்லீ. அத்யாயம்–2 105 அவைகளினுடைய குளம்புகள் எழுப்பும் தூளி கங்க ஜாலத்தைப் போல் பவித்ரமானது. 77. அவைகளுடைய கொம்புகளில் எல்லாத் தீர்த்தங்களும், குளம்புகளுடைய முன் பாகத்தில் ஸமஸ்த பர்வதங்களும் இருக்கின்றன. இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் மஹேஸ்வரி கௌரிதேவி வாஸம் செய்கிறாள். 78. பசுக்களை தானம் கொடுக்கும் ஸமயத்தில் ஒருவனுடைய பித்ருக்கள் ஸந்தோஷத்தால் தாண்டவ மாடுகிறார்கள். ரிஷிகள் ஸந்தோஷமடைகிறார்கள். எல்லாத் தேவதைகளுடன் கூட நாமும் ஸந்தோஷம் அடைகிறோம். 79. ஆனால் தரித்ரமும் வ்யாதியும் பிடித்த பாப கணங்கள் அழத் தொடங்குகிறார்கள். எல்லா ஜனங்களையும் ரக்ஷிக்கும் பசு தாய்க்கு ஸமானம். 80. யார் பசுக்களைத் துதித்து நமஸ்கரித்து ப்ரதக்ஷினம் செய்கிறார்களோ அவர்களுக்கு ஏழு தீவுகளுடன் கூடிய பூமி தேவியை ப்ரதக்ஷிணம் செய்த பலன் கிடைக்கிறது. 81. யார் எல்லாப் பிராணிகளுக்கும் லக்ஷ்மியோ, யாரை தேவதைக்கு ஸமமாக எண்ணுகிறோமோ, அந்தப் பசு ரூபமான தேவி என்னுடைய பாபங்களை விலக்கட்டும். 82. எந்த லக்ஷ்மி விஷ்ணுவின் மார்பில் அமர்ந்திருக்கிறாளோ, யார் அக்னி தேவனுக்கு ஸ்வாஹாவோ, யார் பித்ரு தேவனுக்கு ஸ்வதாவோ, அந்தக் காமதேனு தேவி எனக்கு வரமளிக்கட்டும் 83. அவளுடைய சரணம் யமுனைக்கு ஸமம், சிறுநீர் நர்மதைக்கு ஸமம். அவளுடைய பால் கங்கையேதான். இவைகளை விடப் பவித்ரமான வஸ்து எங்கேயிருக்கிறது? 84. எந்தக் காரணத்தினால் பசுவின் அங்கங்களில் பதினாலு புவனமும் வஸிக்கின்றனவோ, அதனால் இந்த லோகமும் பரலோகமும் எனக்கு மங்களத்தைக் கொடுக்கட்டும். 106 யாத்திரை விதி 85. எவன் மேற்கூறிய மந்திரங்களைக் கூறிக்கொண்டு அநேகம் பசுக்களை அல்லது ஒரு பசுவையாவது உத்தம ப்ராம்மணனுக்கு தானம் செய்தானானால் அவன் எல்லா ஜனங்களையும் விட வெகுமானிக்கத்தகுந்தவனாகக் கருதப்படுகிறான். 86. நாம் விஷ்ணு, சிவன் மூவரும் மஹர்ஷிகளுடன் கூடப் பசுக்களின் குணங்களை வர்ணிக்கும் இந்தப் பிரார்த்தனையை தினமும் சொல்கிறோம். 87. பசுக்கள் எனது முன்னால் இருக்கட்டும், பசுக்கள் எனது பின்னால் இருக்கட்டும், பசுக்கள் எனது ஹ்ருதயத்தில் இருக்கட்டும், நான் பசுக்களின் மத்தியில் இருப்பேனாகவும். 88. எந்த பாக்யவான் பசுவின் வாலினால் தன் சரீரத்தைத் தடவிக் கொடுக்கிறானோ, அவனிடமிருந்து, தரித்ரம், கலஹம், ரோகம் ஆகியவை தூர விலகி விடுகின்றன. 89. பசு, ப்ராம்மணன், வேதம், கற்புடைய மங்கை, உண்மை பேசுபவன், லோபம் இல்லாதவன், தானசீலன் இந்த ஏழு பேருடைய நம்பிக்கையினால்தான் பூமிதேவி ஸ்திரமாக இருக்கிறாள். 90. என்னுடைய இந்த லோகத்துக்கு மேலே வைகுண்டம் இருக்கிறது. அதற்கு மேலே குமார லோகம் இருக்கிறது; அதற்கு மேலே உமா லோகம்; 91. அதற்கு மேலேதான் சிவலோகம்; அதற்குப் பக்கத்திலேயே பூலோகம் இருக்கிறது. அங்கு ஸு‚லா ஆகிய கோமாதாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மஹாதேவனுக்கு மிகவும் பிரியமானவர்கள். 92. பசுக்களுக்கு ஸேவை செய்பரும், பசுக்களை ரக்ஷிப்பவரும், இந்த லோகங்களின் மத்தியில் ஏதாவது ஒரு லோகத்தில் பரிபூர்ண நிறைவுடன் வஸிக்கிறார்கள். அத்யாயம்–2 107 93. அங்கு பாலே நதியாக இருக்கிறது. பாலினால் செய்த பாயஸமே சகதியாக இருக்கிறது. அங்கு ஒருவரையும் வயோதிகத்தன்மை வருத்துவதில்லீ. கோதானம் செய்பவர்கள் அங்கு வஸிக்கிறார்கள். 94. ஸ்ருதி, ஸ்ம்ருதி, புராணம் இவைகளில் தேர்ந்துள்ளவர்கள், அதையனுசரித்து நடப்பவர்களே, உண்மையான ப்ராம்மணர்கள். மற்றவர்கள் பெயருக்கே ப்ராம்மணர்கள். 95. வேதமும் தர்ம சாத்திரங்களும் இரண்டு கண்கள். புராணம் இதயம் என்று கூறப்படுகிறது. அதனால் எந்த ப்ராம்மணன் ஶ்ருதி, ஸ்ம்ருதி இரண்டும் படிக்காமல் ஹீனனாக இருக்கிறானோ, அவன் குருடன். அதில் ஒன்று படித்தவனானாலும் ஒரு கண் குருடன். 96. ஸ்ருதியும், ஸ்ம்ருதியும் எதைக் கூறுகிறது, அந்த தர்மத்தையே புராணம் விரிவாகக் கூறுகிறது. புராணம் படியாத இதய ஹீனனானவன் கண் இருந்தும் குருடனேயாவான்; ஆனால் அவன் இந்தக் கண் தெரியாதவர்களைவிட மோசமானவன். ஏன் என்றால் ஸ்ருதி; ஸ்ம்ருதி இரண்டும் கூறும் விஷயங்களையே புராணம் கூறுகிறது. 97. அதனால் என்றும் எங்கும் ஸுகம் விரும்பும் ஒருவன் ஸ்ருதி, ஸ்ம்ருதி புராணம் அறிந்த ஒருவனுக்கே கோதானம் செய்ய வேண்டும்; பெயர் மாத்திரம் ப்ராம்மணன் என்று இருப்பவனுக்கு தானம் கொடுக்கக்கூடாது. அப்படிச் செய்தால் கொடுத்தவனும் அதோகதியடைகிறான். 98. யார் தர்மத்தை அறிய விரும்புகிறார்களோ, எவனுக்குப் பாபத்தில் பயமிருக்கிறதோ, அவன் எல்லா வேண்டும். 108 யாத்திரை விதி 99. பதினான்கு வித்தைகளிலும் தீபம் போன்றது புராணம்; அந்தத் தீபப்ரகாசத்தினால் குருடன்கூட ஸம்ஸார ரூபமான ஸமுத்ரத்திலிருந்து கரையேறுகிறான். 100. எவர்கள் எனது லோகத்தை அடைய விரும்புகிறார்களோ, அவர்கள் புராண ஶ்ரவணம், கங்கைக்கரைவாஸம், ப்ராம்மணர்களை ஸந்தோஷப்படுத்துதல், இவைகளை அவசியம் செய்ய வேண்டும். 1. ஹே தேவதைகளே ! ஏதோ ஒரு வாய்ப்பாக ஸத்ய லோகத்தின் நிலீமையை உங்களுக்கு எடுத்துக் கூறினேன். இது பயத்தால் பீடிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிர்பய ஸ்தானம், நீங்கள் கொஞ்சம்கூட பயப்பட வேண்டாம். 2. விந்த்யபர்வதம் ஸுமேருவுடன் போட்டி போட்டுக்கொண்டு ஸூர்ய பகவானை மறைத்துக் கொண்டிருக்கிறது. அந்த விஷயமாகவே நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். இதற்கு நான் ஒரு உபாயம் கூறுகிறேன். 3. ப்ரம்மா கூறுகிறார்:- எங்கு விஸ்வேஸ்வரர் தாரக மந்திரத்தை உபதேசம் செய்வதற்குத் தானே தயாராக உட்கார்ந்து கொண்டிருக்கிறாரோ, எல்லாருடைய முக்திக்கு ஒரே காரணமான அந்த அவிமுக்த க்ஷேத்ரத்தில் மித்ரா வருணருடைய புத்ரன் பரமதபஸ்வி அகஸ்தியமுனி விசுவேஸ்வரர் மேல் சித்தத்தை வைத்துக் கொண்டு கோரமான தபஸ் செய்து கொண்டு இருக்கிறார். 4. அங்கு சென்று அவரைப் ப்ரார்த்தியுங்கள். அவரால்தான் உங்கள் காரியத்தை நிறைவேற்ற முடியும். 5. ஒருமுறை வாதாபி, இல்வலன் எனும் இருஸஹோதரர்களையும் பூஜித்து எல்லா உலகங்களையும் காப்பாற்றி இருக்கிறார். 6. அந்த இடத்தில் மித்ராவருணனின் புத்ரனான அகஸ்த்யமுனி மஹாநேஜஸ்ஸுடன் இருக்கிறார். அதனால் லோகத்தில் அகஸ்திய முனிவரிடம் பயம் இல்லாமல் எல்லாரும் நெருங்கலாம். அத்யாயம்–3 109 7. இவ்விதம் கூறிவிட்டு ப்ரம்மா அங்கேயே மறைந்து விட்டார். அப்பொழுது அந்த தேவதைகள் ஸந்தோஷமடைந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். ஆஹா நாம் தன்யரானோம். 8. பேச்சுவாக்கில் காசீ, காசீபதி மஹாதேவர், பார்வதி இவர்களுடைய தரிசனம் நமக்குக் கிடைக்கும். ஆஹா வெகு நாளைக்குப் பிறகு நமது மனோரதம் பூர்த்தியாயிற்று. காசிக்குப் போவதற்காக எந்தக்கால்கள் கிளம்புகின்றனவோ அந்தக் கால்கள் தன்யமானவை, இன்று நான் ப்ரம்மாவினால் சொல்லப்பட்ட கதையைக் கேட்டோம். 9. நாம் இப்பொழுது காசிக்குப் போகிறோம். எப்பொழுது அதிகமாகப் புண்ணியம் சேருகிறதோ அப்பொழுது ஒரு கார்யத்தில் இரண்டு ப்ரயோஜனங்கள் ஏற்படுகின்றன. 10,11. இவ்விதமாக காசி யாத்திரைக்காகத் தீவிர ஸங்கல்பம் செய்து கொண்டு மலர்ந்த மலர்விழிகளுடன் சிரித்த முகத்துடன் பூர்வ புண்ணியத்தினாலே தேவர்கள் பரஸ்பரம் வார்த்தையாடிக் கொண்டு, காசிவந்து சேர்ந்தார்கள். 12. வ்யாஸர் கூறுகிறார். இந்தப் பரம பவித்ரமான கதையை எந்த மனிதன் கேட்கிறானோ, அவன் இந்த லோகத்திலே எல்லா ஸுகங்களையும் அனுபவித்துத் தங்கள் வம்சாந்தர பந்து; ப்ரிய புத்ரனுடன் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபட்டுக் கடைசியில் வெகுகாலம் வரை ஸத்யலோகத்தில் வாஸம் செய்து அதன் பிறகு ஸாயுஜ்யபதவியை அடைகிறான். இவ்விதம் ஸ்கந்த புராணத்தில் காசீகண்டத்தில் ஸத்யலோக வர்ணனம் என்ற இரண்டாவது அத்யாயம் ஸம்பூர்ணம். 110 யாத்திரை விதி அத்யாயம் 3 1. ஸூதர் கூறுகிறார்:- ஹே பகவான்! தாங்கள், இறந்த, நிகழ்காலங்களை அறிந்தவர். ஸமஸ்த ஞானிகளினுடைய கஜானா; தாங்கள் ஸாக்ஷாத் அச்சுதரூபமானவர். தேவர்கள் காசி சென்று என்ன செய்தார்கள்; கூறுவதைச் செய்ய வேண்டும். இந்த திவ்ய கதையைக் கேழ்ப்பதனால் எனக்கு த்ருப்தியே ஏற்படவில்லீ. தேவதைகள் தபோதநரான அகஸ்திய முனிவரிடம் எந்த விதமாக ப்ரார்த்தித்துக் கொண்டார்கள். 2. பிறகு விந்த்யாசலம் தனது உயர்ந்த உருவத்தை எந்த விதமாகத் தன் இயற்கை உருவமாகத் தணித்துக் கொண்டது! எனது சித்தம் தங்களுடைய வசனாம்ருத ஸாகரத்தில் எப்பொழுதும் ஸ்னானம் செய்ய ஆவலாக இருக்கிறது. 3. பராசர புத்ரர் பகவான் வேதவ்யாஸர் இந்த விதமான எல்லா கேள்விகளுக்கும் தனது பரமசிஷ்யரான ஸூதமுனிவருக்குப் பதில் கூறத்தொடங்கினார். 4. ஹே அறிவாளியான ஸூதரே! நீர் பக்தி ஶ்ரத்தை நிரம்பியவராய், நான் சொல்லப் போவதைக் கேளும். ஸுதேவர், வைசம்பாயனர் ஆகிய எல்லாப் பிள்ளைகளும் கேட்டு வைக்கட்டும். 5. அதன் பிறகு தேவதைகள் மஹர்ஷிகளுடன் காசிபுரிவந்து முதலில் வேகமாக மணிகாணிகையில், 6. வஸ்திரத்துடன் விதிபூர்வமாகஸ்னானம் செய்து பிறகு ஸந்த்யா முதலிய நித்யகர்மங்களை முடித்து, தர்ப்பை, சந்தநம், எள், ஜலம் இவைகளினால் தேவ பித்ருக்குளுக்குத் தர்ப்பணம் செய்து 7,8. ரத்னம் தங்கம், வஸ்த்ரம், ஆபரணங்கள், குதிரைகள், பசுக்கள், தங்கம் வெள்ளியினாலான அநேகவிதமான பாத்திரங்கள், அம்ருதம் போன்ற, ருசியுள்ள பக்வான்னங்கள், கற்கண்டு கலந்த பால் அத்யாயம்–3 111 கோவாவினால் செய்த மிட்டாய்கள், பால் அன்னம். 9. அநேகவிதமான தான்யங்கள், சந்தணம், வாஸனை த்ரவ்யங்கள், கற்பூரம், அழகான சாமரங்கள், விதவிதமான கட்டில்கள், தீபங்கள், கண்ணாடிகள் மெத்தைகளுடன் ஆஸனம், பல்லக்கு விமானங்கள், தாஸாதாஸிகள், பசுக்கள், வீடுகள்; 10. படங்கள், த்வஜங்கள், படங்கள், சந்திரன் மாதிரி அழகான மேல்கட்டில், க்ருஹஸ்தர்களுக்கு வேண்டிய சாமக்ரியைகளுடன் ஒரு வருஷத்துக்காக வேண்டிய உணவு பதார்த்தங்கள். 11. காலணிகள், பாதுகைகள் முதலான ஸகல வஸ்துக்களின் தானத்தினால் தீர்த்தவாஸிகளைத் தனியே ஸந்தோஷப்படுத்தி, ஸந்யாஸி தபஸ்விகளையும் கூட அவர்களுடைய தகுதிப்ரகாரம் 12,13. நானாவிதமான கம்பளங்கள், கம்புகள், கமண்டலம், மான்தோல், கௌபீனம், உயர்ந்தபீடம்; ஸேவகர்களின் சம்பளத்துக்கு வேண்டிய ஸ்வர்ணமுத்ரைகள். 14. மடம்ப இவைகளும் மாணாக்கர்களுக்கு அன்னம், அதிதிகளுக்கு நிரம்பப்பணம், புத்தகக் குவியல்கள், எழுத்தாளர்களுடைய வாழ்க்கைக்குரியன; இது தவிர எத்தனையோ ஆஸ்பத்திரிகள்; 15. அநேக அன்னசாலீகள், வேனிற்காலத்துக்கு வேண்டிய- தண்ணீர் சாலீகளுக்கு வேண்டிய தனங்கள், குளிர்காலத்துக்கு வேண்டிய அடுப்புகள், விறகுகள், இவைகள் வாங்குவதற்கு பணங்கள்; 16. மழைக்காலத்துக்கு வேண்டிய சாவடிகள், குடைகள், மழை நனையாத போர்வைகள், ராத்திரி படிப்பதற்கு வேண்டிய தீபங்கள், கால் வைக்கும் முக்காலிகள் (ஸ்டூல்கள்) இவைகளைக் கொடுத்து ஸந்தோஷப்படுத்தி, 112 யாத்திரை விதி 17. ஒவ்வொரு தேவமந்திரங்களிலும் புராணம் படிக்கிறவர்களை அதிகதனத்தினால் ஸந்தோஷப்படுத்தினார்கள். தேவாலயங்களில் அநேக விதமான நாட்டியம் முதலியவைகளுக்குப் பணம், 18. அநேகம் தேவஸ்தானங்களுக்குச் சுண்ணாம்பு அடித்தல், அநேகக் கோவில்களுக்கு ஜீர்ணோத்தாரணம் செய்தல், முதலியவைகள் செய்தனர். அநேக இடங்களில் சித்திரங்கள் எழுதுவதற்குண்டான தொகையைக் கொடுத்தனர். வர்ணமாலீகளினால் அலங்கரித்தனர்; 19. ஹாரத்தி, குக்குலு, முதலாகிய தஶாங்க தூபம், கற்பூரம், வத்தி, அநேகவிதமான தேவ பூஜைக்குள்ள ஸாமக்ரிகள். 20. பஞ்சாம்ருதம், வாசனைத்ரவ்யங்கள், சேர்ந்த ஸ்னானத்துக்குணடான ஜலம்; தேவதைகளுக்கு முகர்வற்கான வாஸனை அத்தர்கள், பூஜைக்கு வேண்டிய புஷ்பத் தோட்டங்கள். 21.மூன்றுகால பூஜைக்கு வேண்டிய மாலீகள் முதலியவை தொடுப்பதற்கான தானம், சிவாலயங்களுக்கு சங்கம், நகரா, ம்ருதங்கம், முதலியவாத்யக் கருவிகள். 22. மணி, உடுக்கை முதலியவைகள், ஸ்னான ஜலம், கொண்டுவர பாத்திரங்கள், அபிஷேகமானதும் ஸ்வாமி துடைப்பதற்குண்டான வெள்ளை வஸ்த்ரம், யக்ஷகர்தமம் என்று சொல்லக்கூடிய கற்பூரம், கஸ்தூரி, அகர், கோரோஜனை இவைகளால் ஆன வாசனை த்ரவ்யம். 23. ஜபம், ஹோமம், ஸ்த்தோத்ரம், உயர்ந்த குரலில் மஹாதேவ நாமோச்சாரணம் ருத்ர தாண்டவத்துடன் நடந்து ப்ரதக்ஷிணம், 24. இந்த விதமாக அநேகப்ரகாரமான ந்ருத்யதாண்டவங்களுடன் ஐந்து இரவுகள் வசித்து, அநேகப்பிரகாரமான தீர்த்தயாத்திரையை முடித்தார்கள். அத்யாயம்–3 113 25. இதன் பிறகு விஸ்வநாதரை நமஸ்கரித்து விட்டு. தீனர்களுக்கும் அநாதைகளுக்கும் தானங்கள் செய்து விதிப்படிக்கு ப்ரம்மச்சர்யம் அனுஷ்டித்து, அடிக்கடி 26. விஸ்வேஸ்வரரைத் தரிசனம் செய்தும் ஸ்தோத்ரம் செய்தும், நமஸ்கரித்தும் ஜனங்களின பரோபகாரத்திற்காக அகஸ்திய முனிவர் வஸிக்குமிடத்திற்குச் சென்றார்கள். அங்கு அகஸ்திய முனி தன் பெயருக்கேற்ப சிறிய லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, அதற்கு முன்னால் தன்பெயரால் ஒரு குண்டம் ஏற்படுத்தி, த்ருட சித்தத்துடன் சதருத்ர ஸூக்தத்தை ஜபித்துக் கொண்டு எழுந்தருளியிருந்தார். 27, 28. தேவதைகள் தூரத்திலிருந்து இரண்டாவது சூரியனைப்போலவும் ஜ்வலிக்கும் அக்னியைப் போலவும், அங்கங்களில் காந்தியுடன் கூடிய அகஸ்தியரைக் கண்டு யோசிக்கத் தொடங்கினார்கள். 29. என்ன! இவர் வடவானலே மூர்த்திகரித்து வந்தமாதிரி மரத்தின் அடித்தடிபோல் ஸத்துக்களுடைய நிர்மலமான மனம் போல் ஸ்திரமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாரா? 30. அல்லது எல்லாப் ப்ரகாசங்களும் இந்தப் ப்ராம்மண சரீரத்தை ஆச்ரயித்து, மோக்ஷத்தை அடையும் பொருட்டு பரம சாந்தமான ப்ரம்மத்தைத் தியானம் செய்து கொண்டிருக்கிறாரா? 31. இவருடைய தபஸ்ஸினுடைய தேஜஸ்ஸினால் சூரியனே ஸந்தாபம் அடைவானோ, அக்னிதேவனே தஹிக்கப் படுகிறானோ, மின்னலே தன்னுடைய சபலத் தன்மையை விட்டு விட்டு சாந்தியாக இருக்கிறதோ! 32. இங்கு இவருடைய ஆச்ரமத்தின் நான்கு பக்கமும் துஷ்ட ஜந்துக்களும், தங்கள் ஸ்பாவத்தை விட்டுவிட்டு ஸத்வ குணத்தோடு ஸஞ்சரிக்கின்றனவே; 33. அங்கு பாருங்கள்! யானை பயமில்லாமல் தன்னுடைய துதிக்கையால் சிங்கத்தைத் தடவிக் 114 யாத்திரை விதி கொடுக்கிறது; சிங்கமோ தன்னுடைய பிடரி மயிரைப் பரப்பிக் கொண்டு சரபத்தின் மடியில் உறங்குகின்றது; 34. ரோமங்கள் குத்திட்டு நிற்கும் காட்டுப் பன்றிகளும் மஹா பலம் பொருந்தியவையாயிருந்தும் கூட இளம் புற்களை முகர்ந்து கொண்டு காட்டு நாய்களுக்கு நடுவில் வளைய வருகின்றன. 35. அது பூமியைத் தோண்டும் ஸ்பாவம் உடையதாக இருந்தும் கூட இங்குள்ள பூமியை மற்ற இடங்களில் தோண்டுவது போல் தோண்டுவதில்லீ. ஏனென்றால் காசிபூமிமுழுவதும் லிங்கமயமாகவே இருக்கின்றன. 36. அதனால் அது தடுத்தாற்போல் நிற்கின்றது. 'புலி' தந்துவா என்னும்விலங்கு, பன்றியின் குட்டிகளை மடியின் மேல் வைத்துப் பால் கொடுத்துக் கொண்டிருக்கிறது; 37. மான் குட்டிகள் புலிக்குட்டிகளை தாயினிடமிருந்து நீக்கிவிட்டுப் புலியினிடம் வாலீ ஆட்டி ஆட்டிக் கொண்டு தங்கள் நுரைவழியும் முகத்தால் பால் குடிக்கின்றன. 38. வானரங்கள் அடர்ந்த மயிரையுடைய கரடிகள் தூங்கும் பொழுது மயிர்களைத் தங்கள் கைகளால் புரட்டி, புரட்டிப் பேன்களைப் பார்த்து, பார்த்து தங்கள் முன்பற்கலால் கடித்து எடுக்கின்றன. இந்த எல்லா சிகப்பு முகமுள்ள குரங்குகளும் பெரிய பெரிய வாலுள்ள கறுப்புக் குரங்குகளும்- 39. தங்கள் தங்கள் ஜாதிக்குண்டான சு பாவமான பொறாமையை விட்டுவிட்டு ஒரேயிடத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. சிறு சிறு முயல்கள் ஓநாய்களுடைய முதுகில் அடிக்கடி ஏறி விளையாடுகின்றன. 40. எலிகள்கூட முகத்தை ஆட்டி ஆட்டிக்கொண்டு பூனையின் காதுகளைச் சொறிந்து கொடுக்கின்றன. பூனையும் மயிலின் இறகில் ஸ úகமாகப்படுத்து, நித்திரை செய்கின்றது. அத்யாயம்–3 115 41. அந்தப் பாம்பு மயிலின் கழுத்தில் உரசிக் கொண்டிருக்கிறது? கீரியும் தன் ஸ்பாவமான விரோதத்தை மறந்துவிட்டு, படமெடுத்த பாம்பின் தலீமேல் குதித்துக் குதித்து விளையாடுகின்றது. ஸர்பமும் பசியினால் துடித்துக் கொண்டிருந்தாலும் முகத்துக்கு முன்னால் ஓடிக்கொண்டிருக்கும் எலிகளைப் பிடிப்பதில்லீ; எலிகளும் அதைக் கண்டு பயப்படுவதில்லீ. குட்டிபோட்ட மானைப் பார்த்துவிட்டுப் புலி தயையுடன் விலகிச் செல்கிறது. ஆஹா! புலி தன்னுடைய நடத்தையையும், மான் தன்னுடைய சேஷ்டையையும் மறந்துவிட்டு ஒன்றுக்கொன்று அளவளாவுகின்றன. 42.45. கோணல் புத்தியுடைய கவரி மானுடைய கவரியுடன் கூடப் பெரிய வில்லீக் கொண்டுவரும் வேடனைப் பார்த்துவிட்டு வழியிலிருந்து நகருவதில்லீ. 46. நோய் கொண்ட மானும் கவலீயில்லாமல் காட்டு எருமையுடன் மோதுகிறது. 46. மான்கள் கவரிமானுடைய கவரியுடன்கூடத் தங்கள் வால்களை வைத்து அழகு பார்க்கிறது. 47. பார், மானும் புலியும் தங்களுடைய பொறாமையை மறந்துவிட்டு, முனிராஜருடைய தேஜஸ்ஸுக்குக் கட்டுப்பட்டு அவருக்கு முன்னால் படுத்துக் கொண்டிருக்கின்றன. 48. நரியும் மான்குட்டிகளைத் தடவிக் கொடுக்கின்றன. 49. மாம்ஸ போஜனம் இழிவு. அது இஹலோகத்தையும், பரலோகத்தையும் கெடுக்கிறது. எல்லா ஆ பத்துகளுக்கும் அதுவே காரணம். இப்படி எண்ணி மாம்ஸ பக்ஷிணி புலி முதலியவைகள் மாம்ஸத்தை விட்டுவிட்டுப் புற்களை மேய்கின்றன. 50. யார் பாபத்தின் மோஹத்தால் மாம்ஸம் சாப்பிடுகிறானோ: அவன் கொல்லப்பட்ட அந்த ம்ருகத்தின் உடலில் எத்தனை ரோமம் இருக்கிறதோ, அத்தனை காலம் நரகத்தில் உழலுகிறான். 116 யாத்திரை விதி 51. துர்புத்தியுள்ளவர்கள் பிறருடைய ப்ராணனால் தன்னுடைய ப்ராணனைப் போஷிக்க நினைக்கிறார்கள். அவர்கள் கல்பகாலம் நரகத்தில் உழன்று உழன்று திரும்பவும் தங்களால் கொல்லப்பட்ட ம்ருகங்களுக்கே இரையாகின்றனர். 52. ப்ராணன் போவதாயிருந்தாலும் மாம்ஸ போஜனம் செய்யலாகாது; அப்படிச் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் தனது மாம்ஸத்தையே சாப்பிடவேண்டும். 53. மித்ரா வருணருடைய புத்திரர் அகஸ்த்யருடைய ஸங்கத்தினால் எல்லா ம்ருகங்களும் பிற ஹிம்ஸையில் பராமுகமாக இருக்கின்றன. பரஹிம்ஸையில் ஈடுபட்டிருக்கும் மனிதர்களைவிட அவைகள் மேலானதே. 54. கொக்குகள் கூடக் குண்டத்தில் கண் எதிரில் விளையாடும் மீன்களைப் பிடிப்பதில்லீ. பெரிய பெரிய மீன்களும்கூடச் சிறிய சிறிய மீன்களைத் தின்பதில்லீ. 55. ஒரு தராசில் ஒரு தட்டில் எல்லா ம்ருகங்களுடையவும் மாம்ஸம். மற்றொரு தட்டில் மீன் என்றால் - மீன் மீன் சாப்பிடுவதால்தான் அத்தனை தோஷங்களும்; இந்த சாஸ்திரம் கொக்குகளுக்குக் கூட தெரிந்திருக்கிறது போலும்! அதனால் அவைகள் மீன் பிடிப்பதை விட்டு விட்டன. 56. இந்தக் கழுகு முதலிய பக்ஷிகளும் சிறு குருவி முதலிய பக்ஷிகளைப் பிடிப்பதில்லீ. ஆனால் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் இழிவான எண்ணம் உள்ள வண்டுகளும் இங்கு பறக்கின்றன. 57. எவர்கள் மது அருந்துவதில் பழக்கம் உள்ளவர்களோ, அவர்கள் அநேகம் நாட்கள் நரக போகம் அனுபவித்து விட்டு வண்டுகளாகப் பிறக்கிறார்கள். 58.அதனால் எல்லாப் புராணங்களிலும் மாம்ஸ போஜனம் எங்கே, சிவ பக்தி எங்கே! என்னும் பழமொழி அத்யாயம்–3 117 அடிக்கடி கூறப்படுகிறது. மஹா தேவர் மத்யபானம் செய்பவர்களிடமிருந்து தூர விலகியிருக்கிறார். 59. மஹாதேவருடைய அருள் இல்லாமல பிராந்தி ஒருநாளும் ஒழியாது. 60. அதனாலேயே இந்த வண்டுகள் மகா தேவருடைய தத்வ ஞானம் அறியாமலேயே இங்கு பறந்து திரிகின்றன. 61. இந்த ப்ராந்தியினால் ஆச்ரமவாஸி பசு, பக்ஷிகளை முனிவருக்கு ஸமமாக இருப்பதை பார்த்து விட்டு இது இந்த க்ஷேத்ரத்தின் மஹிமை என்று கண்டுகொண்டார்கள். 62. இங்கு வஸிக்கும் பசு, பக்ஷிகளுக்குக்கூட மஹாதேவர் மரண ஸமயத்தில் தாரக மந்திரத்தை உபதேசிக்கிறார். 63. எவர்கள் க்ஷேத்திரத்தின் மஹிமையை அடைந்து த்ருடஸங்கல்பத்துடன் இங்கு வாஸம் செய்கிறார்களோ அவர்களை உயிருடன் இருக்கும்போதே கடைத்தேற்றுகிறார் என்றால் மரண ஸமயத்தைப் பற்றி என்ன சொல்ல? 64. ஞானி ஜனங்கள் இந்த க்ஷேத்ர ரஹஸ்யத்தை அறிந்து எப்படி முக்தியையடைகிறார்களோ அதுபோல் பசு, பக்ஷி, ம்ருகங்களும் காசி மாகாத்ம்யத்தை அறியாமலேயே இங்கு சரீரத்தை விடுவதனால் முக்தியடைகின்றன. 65. தேவதைகள் இந்தவிதமாக ஆச்சர்யமடைந்து முனிவருடைய ஆச்ரமத்தின் அருகில் வரும்போது பின்னும் அதி ஆச்சர்யமடைந்தார்கள். 66. ஏன் என்றால் ஸாரஸப் பறவைகள் ஸாரஸியின் கழுத்துடன் தன் கழுத்தை வளைத்துக் கொண்டு மெய்மறந்து அசைவற்றிருப்பதைப் பார்த்தார்கள் - அவைகள் தூங்காமல் விஸ்வநாதருடைய த்யானத்தில் அமர்ந்திருக்கின்றனவோ என்று நினைத்தார்கள். அவர்களுக்கு அப்படித் தோன்றியது. 67. அன்னபக்ஷிகள் காமம் மிகுந்து கோபத்தினால் சிறகை அடித்துக் கொள்ளும் ஆண் அன்னத்தை - தங்களது 118 யாத்திரை விதி சிறகினால் கோதிக் கோதிக் கொடுத்துக் கொண்டு அவைகளை சாந்தமாக்குகின்றன. 68. சக்ரவாக பக்ஷிகள் ஒன்றையொன்று தழுவி முடித்தபின் தங்களுடைய பாஷையில் இங்கு வந்தும் காமபுத்தி போகவில்லீயே என்று பரிஹஸித்துக் கொள்ளுகின்றன. 69. குஞ்சவனத்தில் இருக்கும் குயில்கள் மனோஹரமாகக் கூவுகின்றன. ஆனால் ஆண் குயில்கள் இந்த இனிமையான சப்தத்தினால் முனிவருக்கு த்யானம் கெட்டுவிடும் என்று கூறுகின்றன. 70. மயிலும் முனிவரின் த்யானம் கெட்டுவிடும் என்று கூவுவதில்லீ. சகோரங்கள் நிலவை அருந்திக் கொண்டு வ்ரதமிருப்பது போல் இருக்கின்றன. 71. மைனாவும் இந்த ஸாரம் மிருந்த வசனத்தினால் கிளிக்கு கூவுகிறது. எந்த ஸம்ஸார ஸாகரத்துக்குக் கங்கு கரையில்லீயோ, அதைச் சரிவரக் காட்டுவது. 72. மஹாதேவர் ஒருவரே - என்று; மாடப்புறா தங்களுடைய சப்தத்தால் கூறுகிறது. கலியும் காலனும் காசிவாஸிகளை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுவதுபோல இருக்கிறது 73. தேவதைகள் பசு, பக்ஷி இவைகளுடைய சேஷ்டைகளைப் பார்த்துவிட்டு ஸமயம் இல்லாத ஸமயத்தில் ஸ்வர்க்க போகத்திலிருந்து நழுவும் கஷ்டங்களை நினைத்து மிகவும் நிந்தித்தார்கள். 74. ஏனென்றால் தேவதைகளைவிட இந்தக் காரிய காசிவாஸிகளான பசு, பக்ஷி, ம்ருகங்கள் மனிதர்கள் இவர்கள் மிகவும் மேலானவர்கள். ஏனென்றால் இவர்களுக்குப் புனர் ஜன்மம் கிடையாதே; ஆனால் தேவதைகளுக்கு புனர் ஜன்ம கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அத்யாயம்–3 119 75. நாம் ஸ்வர்க வாஸிகள்தாம். ஆனால் காசி வாஸிகளான பதிதர்களுக்கு ஸமானமாகக்கூட ஆகமாட்டோம். ஏனென்றால் காசியிலிருந்து வழுக்கிவிழும் பயம் கிடையாது. ஆனால் ஸ்வர்க்கத்திலிருந்து எப்பொழுது விழுந்து விடுவோமோ என்று பயம் எப்பவும் இருந்துகொண்டேயிருக்கிறது. 76. வேறு இடங்களில் ஆடம்பரமான ராஜஸுக போகங்களை ஒரு குடைநிழலின் கீழ் அனுபவிப்பதைவிட இடையூரில்லாமல் காசியில் ஒருமாதம் வரையிலும் கூட பட்டினி கிடந்துகொண்டு இருந்தாலும் உத்தமம். 77. காசியில் கேவலம் சிறு முயல் என்ன கொசுவுக்குக்கூட அனாயாஸமாக பரமபதம் கிடைக்கிறது. 78. காசி வாஸியான தரித்திரன் கூட நம்மைவிட எவ்வளவோ மேல்; ஏனென்றால் யமராஜனுக்குகூட பயப்படுவதில்லீ. 79. ஆனால் நாமோ முக்காலத்தை வென்றவர்கள் என்று பெயர் இருந்தும்கூட கேவலம் ஒரு பர்வதத்தின் காரணமாக துக்கத்தை அனுபவிக்கிறோம்; ப்ரம்மாவின் ஒரு பகலில் லோக பாலர்கள்,ஸூர்யன், சந்திரன், க்ரஹ நக்ஷத்ரங்கள்கூட இந்த்ர பதவியும் அழிந்து விடுகிறது. 80. ஆனால் ப்ரம்மாவின் ஆயுள் நூறு வருஷங்கள் கழிந்த பிறகுகூடக் காசி வாசிகள் நாசமடைய மாட்டார்கள். ஆனால் எந்தவித ப்ரயத்நத்தினாலாவது கடும் முயற்சி செய்து காசியில் உத்தம கர்மங்கள் செய்து கொண்டு வஸிக்க வேண்டும். 81. காசி வாசம் செய்வதில் என்ன ஸுகம் ஏற்படுகிறதோ அது ஸமஸ்த ப்ரம்மாண்டங்களில் எங்கும் கூடக்கிடையாது. அப்படியிருந்ததால் காசி வாசம் என்று ஜனங்கள் அடித்துக் கொள்கிறார்களே. 82. ஆயிரக் கணக்கான ஜன்மங்களில் செய்த புண்யத்தின் பலனாக ஒருவனுக்கு இந்தக் காசி வாசம் கிடைக்கிறது. 120 யாத்திரை விதி 83. ஆனால் ஒன்று காசியில் வசித்தாலும்கூட பகவான் த்ரிலோசனர் ஸந்தோஷமடையாவிட்டால் ஸித்தி கிடையாது. அதனால் எல்லாதேவர்களும் எப்பொழுதும் சரணமடையும் சரணாகத வத்ஸலர் ஸ்ரீ விஸ்வேஶ்வரருடைய பாதங்களில் எப்பொழுதும் சரணமடையுங்கள். 84. தர்மார்த்த, காம மோக்ஷ இந்நான்கு புருஷார்த்தங்களும் பூர்ணமாகக் காசியில் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு வேறு எங்கும் இல்லீ. 85. சோம்பலாக இருந்தும்கூட எவனோருவன் வீட்டிலிருந்து விசுவநாதர் கோவில் வரைக்கும் போகிறானோ, அவனுடைய ஒவ்வொரு அடிவைப்புக்கும் அச்வமேத யாகம் செய்வதைவிட அதிக பலன் கிடைக்கிறது. 86. உத்தரவாஹினியான கங்கையில் ஸ்னானம் செய்து எவன் விஸ்வநாதருடைய தரிசனத்துக்கு மிகவும் ச்ரத்தையாகப் போகிறானோ, அவனுடைய புண்யத்திற்கு அளவேயில்லீ. 87. கங்கையின் தரிசனம், ஸ்பர்சம், ஸ்னானம் ஆசமனம், ஸந்தியோபாஸனை, ஜபம் தர்ப்பணம், பூஜை; 88. பஞ்ச தீர்த்தங்களின் தர்சனம், இவைகளை முடித்துக் கொண்டு பிறகு விச்வேஸ்வரரின் தர்சனம், சிரத்தையோடு ஸ்பரிசனம், பூஜை, தூபதீபம் இவைகளின் தானம், ப்ரதக்ஷிணம், ஸ்த்தோத்திரம், ஜபம், நமஸ்காரம், நர்தனம் பிறகு, தேவதேவ மஹாதேவசம் சம்போ சிவ, சிவ, 89,90,91. தூர்ஜடே! நீலகண்ட! ஈச, பீனாகி! ச‡சேகர! த்ரிசூலபாணே! விஸ்வேஸர! ரக்ஷிக்க வேண்டும்; என்று புலம்பிக் கொண்டு; பிறகு முக்தி மண்டபத்தில் அரை நிமிஷமாவது உட்கார வேண்டும்; தர்மக் கதைகளைப் பற்றிக் கொஞ்சம் பேச வேண்டும். அத்யாயம்–3 121 92. புராண ச்ரவணம்; நித்யகர்மானாஷ்டானம்; அதிதிபூஜை பரோபகாரம் இவைகளைச் செய்வதினால் மேலும் மேலும் தர்மம் வ்ருத்தியடையும். 93. சுக்லபக்ஷத்தில் சந்த்ரன் ஒவ்வொரு கலீயாக வ்ருத்தியடைவது போல் காசிவாசிகளின் தர்மராசியும் பதத்திற்குப் பதம் வ்ருத்தியடையும். 94. தர்ம ரூபமான வ்ருக்ஷத்தை எல்லோரும் ஆச்ரயிக்க வேண்டும்; தர்ம வ்ருக்ஷத்தின் விதை ச்ரத்தை. அது ப்ராம்மணர்களின் சரணோதகத்தினால் வளருகிறது. அதன் சாகைகள், அதனுடைய- கிளைகள் பதினான்கு கலீகள் இதனுடைய புஷ்பம் ஞானாவழியில் ஸம்பாதித்தவை; இந்த வ்ருக்ஷத்தின் உள்ளும், வெளியும் காமம் மோக்ஷம் இரண்டினுடைய பலன், காசி க்ஷேத்ரத்தில் நான்கு புருஷார்த் தங்களையும் வாரிவழங்கும் பவானி அன்னபூரணி இருக்கிறாள். 95. எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும் டுண்டிராஜர் கணபதி இருக்கிறார்; பகவான் விஸ்வநாதர் அந்திமக் காலத்தில் எல்லா ஜந்துக்களுடையவும் காதில் தாரக மந்த்ரத்தை உபதேசித்து பவபந்தனங்களிலிருந்து முக்தியளிக்கிறார். 96. காசியில் தர்மம் நான்கு கால்களிலும் நிற்கிறது. அர்த்தமும் காசியில் அநேகவிதமாகக் கிடைக்கிறது; காமமோ காசியில் ஸமஸ்த ஸௌக்யஙகளையும் ஒருங்கே கொடுக்கும் ஆச்ரயமாக விளங்குகிறது. காசியில் அல்லாமல் சிறந்த பொருள் வேறெங்கே கிடைக்கிறது? 97. எங்கு, தர்ம, அர்த்த, காம மோக்ஷத்தையும் ஒருங்கே கொடுப்பதற்கு பகவான் விஸ்வேஸ்வரர் ப்ரத்யக்ஷமாக விளங்கும் போது அங்கு எல்லாம் கிடைக்குமென்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது; ஏனென்றால் அந்த விஸ்வநாதர் அகண்ட ஸச்சிதானந்த ஸாக்ஷாத் விஸ்வரூபர். அதனால் மூன்று உலகங்களிலும் காசிக்கு ஸமமான உலகம் கிடைாது. 122 யாத்திரை விதி 98. இந்த விதமாக தேவதைகள் பேசிக் கொண்டு ஹோமதூப வாசனையால் வியாபித்துக் கொண்டு அநேக ப்ரும்மச்சாரிகளால் நிறைந்து இருக்கும் அகஸ்திய முனியின் பர்ணசாலீயைப் பார்த்தார்கள். 99. பிறகு ஹவிஷ்யான்னத்தைப் பெறுதற்காக வாயில் உபக்ரஹங்களைப் போல் இருக்கும் தர்ப்பைகளைக் கடித்துக் கொண்டு ரிஷிகன்னிகைகளுக்குப் பின்னால் திரியும் மான்குட்டிகளினால் அலங்காரமானதும், 100. மரக்கிளையில் தொங்க விடப்பட்டிருக்கின்ற மரவுரி, கௌபீனம் இவைகள் விக்னரூபி மான்களை சிக்கவைப்பதற்காக நான்கு பக்கங்களிலும் வலீகளைப் போல சூழ்ந்து கொண்டிருப்பதும் 1. மேலும் பதிவ்ரதாசிரோமணி லோபாமுத்திரையினுடைய சரணரூபமான முத்திரையினால் முத்தரிக்கப்பட்ட பர்ணசாலீயையுடைய உத்தமமான அங்கணத்தைப் பார்த்து நமஸ்கரித்தனர். 2. ஸமாதியினின்றும் எழுந்திருநது ஜெபமாலீயைக் காதில் சொருகிக் கொண்டு, யோகாசனத்திலமர்ந்து, ஸாக்ஷாத் ப்ரம்மாவைப் போல் இருக்கும் முனிவரர். 3. அகஸ்த்யருடைய எதிரில் இந்த்ராதி தேவர்கள் ஸந்தோஷமடைந்து உயர்ந்த குரலில் 'ஜய ஜய;, என்று கோஷம் செய்தனர், 4.அபிமானமும் ஸந்தோஷமும் கொண்ட யதிராஜர் அவர்களை உபசரித்து யதாஸ்தானத்திலமர்த்தி ஆசீர்வதித்து அவர்கள் அங்கு வந்த விபரத்தைப் பற்றிக் கேட்கத் தொடங்கினார். 5. வியாஸர் கூறுகிறார்: பக்தி நிரம்பிய இந்தப் பரமகதையைக் கேட்பதனாலும், படிப்பதனாலும் பக்திமான்களுக்குப் படித்து சொல்வதினாலும் மனிதன் அக்ஞானத்திலோ, ஞானத்தினாலோ செய்த ஸமஸ்த அத்யாயம்–3 123 பாபங்களையும் தூரவிலக்கி ஹம்ஸ ரூபமான விமானத்திலேறிக் கொண்டு நிச்சயமாக சிவபுரத்துக்குப் போகிறான். இது ஸ்கந்த புராணத்தில் நான்காவதான காசீகண்டத்தில் பூர்வார்த்த பாஷாடீகாவான, தேவர்கள் அகஸ்த்யரிடம் வருகை என்னும் மூன்றாம் அத்யாயம் ஸம்பூர்ணம் 124 யாத்திரை விதி அத்யாயம் 4 1. சூதர் கூறுகிறார்: ஹே பகவன்! அகஸ்தியமுனி கேட்டவுடன் எல்லா ஜனங்களுக்கும் ஹிதத்துக்கு வேண்டி தேவதைகள் என்ன கூறினார்கள்? மஹா முநிவரரே, அதை விளக்கமாகக் கூறுங்கள் :- அப்பொழுது வேதவ்யாஸர் கூறுவார்; அப்பொழுது அகஸ்தியருடைய வார்த்தையைக் கேட்டு எல்லா தேவர்களும் மிக மர்யாதையுடன் ப்ருஹஸ்பதி பகவானுடைய முகத்தைப் பார்த்தார்கள். 2. ப்ருஹஸ்பதி கூறுவார் : அகஸ்திய முநியே! தேவதைகள் வந்த விவரத்தைக் கேளுங்கள்: தாங்கள் தன்யர், க்ருதக்ருத்யர், வெகு ஜனங்களால் மதிக்கப்பட்டவர். எத்தனையோ ஆச்ரமங்கள் இருக்கின்றன. 3. அவைகளில் எத்தனையோ தபஸ்விகன் இருக்கிறார்கள். ஆனால் தங்களுடைய பஹுமானம் வேறேதான். 4. தங்களிடம் தபோ பலமும், ப்ரம்ம தேஜஸ்ஸும் அமோகமாக இருக்கின்றது. 5. புண்ணிய லக்ஷ்மியும் ப்ரஸன்னமாகத் தீவிரமாக இருக்கிறாள். உதாரணமும், தாராள மனப்பான்மையும் குடிகொண்டிருக்கின்றன. யாருடைய கதையைக் கேட்பதினால் உலகம் புண்ணியம் அடைகின்றதோ அந்த உம்முடைய ஸஹதர்மிணி உத்தமி, கல்யாணமயீ, பதிவ்ரதா லோபாமுத்திரை தங்கள் சரீரத்தின் நிழல் போல் தங்களுடன் இருக்கிறாள். 6. அருந்ததி, ஸாவித்ரி, அனஸூயா, சாண்டில்யை, ஸதீ, லக்ஷ்மீ, சத ரூபை, மேனகை, நுநீதி, ஸம்க்ஞா, ஸ்வாஹா ஆகிய பதிவ்ரதைகளில் லோபாமுத்ரை உன்னதமாகக் கருதப்படுகிறாள். 7. இவளைப்போல் மற்றொருவள் இல்லீ. இது நிச்சயம். அத்யாயம்–4 125 8. முநிவரே! தாங்கள் உண்ட பின்தான் அவள் உண்கிறாள்; நீங்கள் அமர்ந்த பின் அவள் அமருகிறாள். தாங்கள் நித்திரை செய்தபின் அவள் தூங்குகிறாள். தாங்கள் எழு முன்பே எழுந்து விடுகிறாள். 9.அலங்காரம் இல்லாமல் தங்கள் முன்னால் வருவதில்லீ. ஏதாவது கார்யமாகத் தாங்கள் வெளியில் சென்றிருந்தால் அவள் ச்ருங்காரம் செய்து கொள்வதில்லீ. 10.தங்களுடைய வயது வ்ருத்தியாக வேண்டுமென்பதற்காகத் தங்கள் பெயரைக் கூறுவதில்லீ. வேறு புருஷர்களின் பெயரைக் கனவிலும் கூறுவதில்லீ. 11.தாங்கள் கோபம் அடைந்து திட்டினாலும் பதில் கூறுவதில்லீ. அடித்தாலும் ஸந்தோஷமாகவே இருக்கிறாள். தாங்கள் ஒரு கார்யத்தைச் செய் என்று சொல்வதற்கு முன்னாலேயே - ஸ்வாமி, அதை முடித்தாகி விட்டது என்கிறாள். 12.தாங்கள் அழைத்தால் தன் கைக்கார்யத்தை உடனேயே போட்டு விட்டுத் தங்கள் முன்னால் ஆஜராகி விடுகிறாள். தாங்கள் அடிமையை எதற்கு அழைத்தீர்கள் ஆக்ஞையிட்டு அனுக்ரஹம் செய்யுங்கள் என்கிறாள். 13.வெகு நேரம் வெளிவாசலில் நிற்பதில்லீ. அமர்வதும் இல்லீ. தாங்கள் கூறாமல் ஒருவருக்கும் ஒன்றும் கொடுப்பதுமில்லீ. 14.தாங்கள் கூறுவதற்கு முன்னாலேயே பூஜை உபகரணங்கள் எல்லாம் ஜோடித்து வைத்து விடுகிறாள். ஜலம், குஶம், புஷ்பம் அக்ஷதை முதலானவைகளைத் தயாராக வைத்து இருக்கிறாள். 15.பர்த்தாவின் உச்சிஷ்டத்தையே பரம ப்ரேமையுடன் புஜிக்கிறாள். எது எப்பொழுது அவசியமோ அதை அப்பொழுது பரம ஸந்தோஷத்துடன் ஜோடித்து விடுகிறாள். 126 யாத்திரை யாத்திரையாத்திரை விதி விதிவிதி 16.ஸ்வாமி கொடுத்த வஸ்துகளைப் பரமப்ரஸாதம் என்ரு ஏற்று மகிழ்கிறாள். 17.தேவதை, பித்ருக்கள், அதிதி, ஸேவகர்கள், பசு, பிச்சைக்காரர்கள் இவர்களுக்குக் கொடுக்காமல் தான் ஒருபொழுதும் உண்ண மாட்டாள். 18.க்ருஹகாரியங்களுக்குண்டான ஸாமக்ரியைகளையும், நகைகளையும் வஸ்த்ரம் முதலானவைகளையும் மிகவும் ஜாக்ரதையாகவும் அழகாகவும், பாங்காகவும் வைத்துக் கொண்டிருக்கிறாள். அதிகம் செலவு செய்யமாட்டாள், தங்கள் உத்தரவு இல்லாமல் வ்ரதம், உபவாஸம் முதலியவைகளை அனுஷ்டிக்க மாட்டாள். 19.கூட்டம், திருநாள் திருவிழாக் கூட்டம் மேளா இவைகளையெல்லாம் பார்க்கப்போவதை எப்பொழுதோ த்யாகம் செய்து விட்டாள். 20.தீர்த்தயாத்திரை கல்யாணங்கள் முதலியவைகளுக்குச் செல்வதில்லீ. பதி ஸுகமாகத் தூங்கும்பொழுதும் உட்கார்ந்திருக்கும் பொழுதும் ஸ்வதந்திரமாக கேளிக்கைகளில் ஈடுப்பட்டிருக்கும் போதும் எத்தனை அவசியக் காரியமானாலும் அவரை எழுப்ப மாட்டாள். 21.ரஜஸ்வலீயானால் தன் முகத்தையே நான்கு நாட்களும்வெளியில்காட்டமாட்டாள்.எதுவரைஸ்னானம் செய்து சுத்தமாகவில்லீயோ அதுவரைப் பேசவும் மாட்டாள் 22.ருது ஸ்னானம் செய்து வந்தபிறகு தன் பர்த்தாவின் முகத்தையே முதலில் பார்ப்பாள். வேரொருவர் முகத்தைப் பார்ப்பதில்லீ. பதி எங்காவது வெளியூர் சென்றிருந்தால் பதியின் முகத்தையே மனதில் த்யானித்துக்கொண்டு ஸூர்யனைத் தரிசனம் செய்வாள். அத்யாயம்–4 127 23.பர்த்தாவின் தீர்க்க ஆயுளுக்காக அந்தப் பதிவ்ரதை மஞ்சள், குங்குமம் ஆந்தூரம், மை, ரவிக்கை, தாம்பூலம், உத்தம பூஷணங்கள் இவைகளைத் தரிப்பதுடன், 24.தலீ வாருதல், கொண்டையிடுதல், கை, காதுகளில் நகையணிதல் இவைகளை ஒருநாளும் விடுவதில்லீ. 25.இந்த ஸதி, ரஜோகுணமுள்ளவர்கள், ஸத்கர்மாக்களுக்கு விரோதமாய் பேசுபவர்கள், நடப்பவர்கள், பாஷண்டி, துர்பாக்யவதி இவர்களுடன் ஸ்நேகமாக வைத்துக்கொள்ளமாட்டாள். 26.பர்த்தாவிடம் வித்வேஷம் வைத்துக் கொண்டிருப்பவளிடம் பேசவும் மாட்டாள். வஸ்த்ரம் இல்லாமல் ஸ்னானம் செய்ய மாட்டாள். 27.இவள் எப்பொழுதும் உரல், உலக்கை, அம்மி, பெறுக்கும் வாரியில் வாசற்படி இவைகள் மீது உட்காரமாட்டாள். 28.ஸௌபாக்யத்தைத் தவிர வேறொன்றிலும் அடம் பிடிக்க மாட்டாள். கணவன் விரும்புவதேதான் அவளுக்கும் விருப்பும், 29.பெண்களுக்கு இது ஒன்றே வ்ரதம். இதே பரமதர்மம்; இதே தேவபூஜை. கணவனின் பேச்சை உதாஸீனம் செய்யக் கூடாது, 30.பேடித்தனத்தை தூர விலக்க வேண்டும். பெரியவர்கள் இடையில் கேலி செய்வதோ சத்தம் போட்டுப் பேசவோகூடாது. பரிஹாசம் செய்யக் கூடாது. 31.கிழவன் நோயுற்றவன், அசடு, ஏழை, குருடன், செவிடு, கோபி, மிகவும் தீனமானவன் இப்படிப்பட்டவர்களை அவமதித்தால் நாரீ யமபுரம் செல்வாள். ஸ்வாமி ஸந்தோஷமாகயிருக்கும்போது தானும் ஸந்தோஷ ஸமாசாரம் சொல்ல வேண்டும். 128 யாத்திரை விதி வருத்தமாக இருக்கும்போது அவளும் வருத்தத்துடன் இருப்பாள். வஸ்திரம், ஸம்பத் விஷயத்தில் எப்போதும் ஒரே மாதிரியிருப்பாள். 32.நெய், உப்பு, எண்ணை இவைகள் தீர்த்துவிட்டால் பதிவ்ரதையான நாரீ ஒருபொழுதும் இல்லீயென்று சொல்லிப் பதியை ஆயாஸம் செய்யமாட்டாள். 33.ஸ்த்ரீ தீர்த்தஸ்னானத்தை விரும்பினால் பதியின் கால்களை அலம்பி அந்த ஜலத்தைப்ரோக்ஷத்து, பருகவேண்டும், ஸ்த்ரீ ஜாதிகளுக்கு பகவான் மஹாதேவர், விஷ்ணுவைவிட தன் பதியே தெய்வம். 34.பதியின் வார்த்தையை மீறி உபவாஸமோ வ்ரதமோ இருப்பான் பதியின் அபகரிக்கிறவளாவாள் கடைசியில் நாசத்தை அடைவாள். 35.எந்தப் பெண் பதியின் கடுமையான வார்த்தைகளைக் கேட்டு அதற்குத் தானும் கோபமாக எதிர்த்துக் கூறினால் அவள் க்ராமத்து நாயாகவும் காட்டு நரியாகவும் பிறக்கிறாள். ஸ்த்ரீகளுக்கு பர்த்தாவே, தேவதை, குரு, தர்மம், தீர்த்தம் எல்லாம். 36.பெண்களுக்கு எல்லாவற்றிலும் பெரிய நியமம் என்ன வென்றால் அவள் த்ருட ஸங்கல்பத்துடன் பதியின் ஸேவை செய்த பிறகே உண்ண வேண்டும். 37. ஸ்த்ரீகள் உயர்ந்த ஆஸனங்களில் உட்காருவது, பிற வீடுகளுக்குப் போவது, அல்லது வெட்கம் அடையும் வசனங்களைக் கூறுவது ஸர்வதா அநுசிதம். 38.ஒரு பொழுதும் யாரையும் அபவாதம் கூறக்கூடாது. கலகத்தை தூர இருந்தே விட்டுவிடுவது உசிதம். பெரியவர்கள் வயோதிகர்கள் முன்னிலீயில், உயர்ந்த குரலில் பேசுவது உரக்கச் சிரிப்பது இவைகள் சரியல்ல. 39.துர்புத்தியினால் காமவசப்பட்ட பெண் தன் பதியை விட்டு விட்டுக் கெட்ட காரியத்தில் பிரவேசிகிறாள். அத்யாயம்–4 129 இதனால் அவள் மறு ஜன்மத்தில் மரப்பொந்தில் விளங்கும் ஆந்தையாகப் பிறக்கிறாள். 40.எந்த ஸ்த்ரீ தனது புருஷன் அடித்தானானால் அவனைத் திரும்பவும் அடிக்க வேண்டும் என்று மனதில் நினைக்கிறாளோ அவள் புலியாகவோ, காட்டுப் பூùயாகவோப் பிறக்கிறாள். எவள் பரபுருஷனைக் கடைக் கண்ணில் வைத்தும் பார்க்கிறாளோ, அவள் மாறு கண்களுடன் அவலக்ஷணமமாகப் பிறக்கிறாள். 41.எந்த நாரீ புருஷனை விட்டுவிட்டு ருசியான உணவை உண்கிறாளோ அவள் கிராமப்பன்னியாகவோ, அல்லது தனது மலத்தைத் தானே தின்னும் வௌவாலாகப் பிறக்கிறாள். 42.எவள் தன் பர்த்தாவை நீ நான் என்று அலட்சியம் செய்கிறாளோ அவள் ஊமையாகக் பிறக்கிறாள். யார் தன் சக்களத்தியிடம் பொறாமைப்படுகிறாளோ, அவள் அடிக்கடி துர்பாக்யவதியாகிறாள். 43.எவள் பதியின் கண்களை ஏமாற்றிவிட்டு பரபுருஷனை நோக்குகிறாளோ அவள் மறு ஜன்மாவில், அவலக்ஷணமுள்ளவளாயும் ஆகிறாள். 44.எவள் தன் பதி வெளியில் சென்று வந்தவுடன் ஜலம், ஆசனம், தாம்பூலம், விசிறி இவைகளால் சைத்யோபசாரம் செய்து, கால்களைப் பிடித்துவிட்டு வருத்தத்தைப் போக்கும் இனிமை வசனங்களைக் கூறுகிறாளோ அவள் மூன்று லோகங்களையும் ஸந்தோஷப் படுத்துகிறவளாகிறாள். 45,46.பிதா, புத்ரன் இவர்களெல்லாம் ஒரு எல்லீவரை தான் ஸ்த்ரீகளுக்கு ஸுகம் தரமுடியும். அதனால் அபரிமிதமான ஸுகங்களைத் தரும் பர்தாவையே எப்பொழுதும் பூஜை பண்ண வேண்டும். 47.புருஷன் கெட்டகாலத்தையடைந்திருந்த போதும் நோய்வாய்பட்டவனாக இருந்தாலும் எப்படியிருந்தாலும் 130 யாத்திரை விதி ஸ்த்ரீ ஒரு பொழுதும் உல்லங்கனம் செய்யலாகாது. தரித்ரன் ஆனாலும் தீயவனானாலும், அலட்சியம் செய்யக் கூடாது. ஸ்வாமி ஸந்தோஷமாக இருந்தால் இவளும் ஸந்தோஷத்தைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவர் துக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும். ஸதி ரமணி ஸந்தோஷத்திலும் துக்கத்திலும் ஒன்று போலிருக்க வேண்டும். 48.ஜீவன் பிரிந்ததும் உடல் எப்படி அசுத்தமாகிறதோ அதுபோல் பர்த்தா இல்லாத ஸ்த்ரீ ஸ்நானம் செய்தாலும் அசுத்தமானவளே. 49.உலகத்தில் எல்லா அமங்களங்களையும் விடபூர்த்திகரித்த அமங்களம் விதவாஸ்த்ரீயே, ஒரு காரியம் ஆரம்பிக்குமுன் ஒரு விதவைஸ்த்ரீயைப் பார்த்தால் அந்தக் கார்யம் எங்கு நடந்தாலும் ஸித்தியாகாது. 50.பண்டிதர்கள் தனது தாய் அமங்களவதியானாலும் அவளை வணங்கலாமே தவிர வேறு எந்த விதவாஸ்த்ரீகளுடைய ஆசிர்வாதங்களையும் பாம்பைத் தவிர்ப்பது போல் தவிர்க்க வேண்டும். 51.ப்ராம்மணர்கள் கன்னிகைகளுக்கு விவாஹம் செய்யும் பொழுது இந்த மந்திரத்தைத்தான் ஓதுகிறார்கள் அதாவது பதி உயிருடன் இருந்தாலும் இறந்தாலும் அவருக்கு ஸஹதர்மிணியாக இரு என்பது. 52.எவ்விதம் தேகத்தை நிழல் பின்பற்றுகிறதோ, சந்திரனை நிலவு தொடருகிறதோ மின்னல் மேகத்தில் எவ்விதம் இருக்கிறதோ அதுபோல் ஸதி எப்பொழுதும் பதியைப் பின்பற்ற வேண்டும். 53.எந்தப் பெண் பதியுடன் ஸஹமரணம் செய்யும்பொருட்டு அதாவது ஸதியாக விரும்பி ஸந்தோஷமாக வீட்டிலிருந்து ஸ்மசானம் வரையில் பின்பற்றுகிறாளோ அவளுடைய ஒவ்வொரு அடி வைப்பிலும் அசுவமேத யாகத்தின் பலன் கிடைக்கிறது. அத்யாயம்–4 131 54.எப்படிப் பாம்புபிடாரன் பலவந்தமாகப் பாம்பை வளையிலிருந்து வெளியில் இழுக்கிறானோ அதுபோல் ஸதி யமராஜருடைய தூதர்களிடம் இருந்து பிடுங்கி ப்ராணநாதனை ஸ்வர்க்கத்திற்கு இட்டுச் செல்கிறாள். 55.யமகிங்கரஜனங்கள் ஸதியைப் பார்த்தவுடன் அந்தக் கணவன் கோரமான பாபம் செய்திருந்தாலும் விட்டுவிட்டு தூர விலகிவிடுவார்கள். 56.நாங்கள் யமதூதர்கள் பதிவ்ரதாஸ்திரீகளைப் பார்த்து விட்டு எப்படி பயப்படுகிறோமோ அதுபோல் அக்னிக்கும், மின்னலுக்கு கூட பயப்பட மாட்டோம் என்று யமதூதர்கள் கூறுகிறார்கள். 57.பதிவ்ரதையின் தேஜஸைக் கண்டுவிட்டு ஸூர்யனும் அக்னியும் கூடத் தவிக்கத் தொடங்குகிறார்கள். அவளுக்கு முன்னால் எந்த ப்ரகாசமும் நடுங்குகிறது. 58.பதிவ்ரதை தன் தேஹத்தில் எத்தனை ரோமங்கள் இருக்கின்றனவோ அத்தனை வருஷகாலம் (ஆயிரமகோடி) வர்ஷங்கள் வரைபதியுடன் ஸ்வர்க்கத்தில் ஸுகபோகம் அனுபவிக்கிறாள். 59.எவ்வீட்டில் ஸதியிருக்கிறாளோ அவ்வீட்டு மாதா, பிதா,பதி எல்லாரும் தன்யர்கள். 60.பிதாவின் வம்சத்திலும், மாதாவின் வம்சத்திலும் பூர்வ மூன்று மூன்று புருஷர்கள் ஸதியின் புண்ணிய பலத்தினால் ஸவர்க்க போகத்தையனுபவிக்கிறார்கள். 61.கெட்ட குணத்தையும் நாரீ தன் மாதா, பிதா, பதி இம்மூவருடைய குலத்தையும் தனது தீய குணத்தினால் பதிதமாக்குகிறாள். அவளும் இஹ, பரலோகங்களில் துக்கமே அனுபவிக்கிறாள். 62.பூமியில் எங்கெங்கு பதிவ்ரதையின் பதச் சின்னங்கள் படுகின்றனவோ அங்கங்கு பூமிமாதா தன்னைப் பவித்ரமாகவும் பாபரஹிதமாகவும் எண்ணுகிறாள். 132 யாத்திரை விதி 63.சூர்ய சந்திர வாயுக்கள் கூடப் பயந்து பயந்துத் தங்களை பவித்ரமாக்கிக் கொள்வதற்காக ஸ்பர்சிக்கிறார்கள். வேறு பிரயோஜனத்திற்காக வல்ல. 64.ஜலமும் எப்பொழுதும் பதிவ்ரதையின் உடம்பை ஸ்பர்சிக்க இச்சிக்கிறது. எதற்காக என்றால் இன்று நமது ஜடத்தன்மை விலகிவிட்டது. நாமும் மற்றொருவரை தூய்மையாக்க அருகதையாகி விட்டோம் என்று. 65.ரூப லாவண்யத்னால் கர்வப்படும் பெண்கள் வீட்டிற்கு வீடு இருக்கிறார்கள். ஆனால் பதிவ்ரதையான நாரீ விஸ்வேஸ்வரருடைய பக்தியினாலேதான் கிடைப்பாள். 66.மனைவியே க்ருஹஸ்தாசிரமத்தின் வேர். எல்லா ஸுகத்திற்கு மூலமும் அவளே. எல்லாப் பலன்களும் ஒருவனுக்குக் கிடைக்க மூலகாரணம் மனைவிதான். பார்யையினால்தான் வம்ச விருத்தியேற்படுகிறது. 67.ஒரு மனைவியின் ஸஹாயத்தினால்தான் ஒருவன் இஹலோகம் பரலோகம் இரண்டையும் ஜயிக்கிறான், ஏனென்றால் பார்வையில்லாதவன் தேவகார்யம், பித்ருகார்யம் அதிதிஸத்காரம், மேலும் அநேக ஸத்காரியங்கள் இவைகள் செய்வதற்கு அருகதையாக மாட்டாள். அதிகாரியாக மாட்டாள். 68.எவனுடைய வீட்டில் பதிவ்ரதா நாரீ இருக்கிறாளோ அவனே உண்மையான க்ருஹஸ்தன். இல்லாவிட்டால் மற்றொரு ஸ்திரீயானால் ராக்ஷஸிபோல் பதியை பதத்திற்குப் பதம் விழுங்குபவள். 69.கங்காஸ்நானம் செய்வதினால் எப்படி தேஹம் பவித்ரமாகிறதோ அதுபோல் பதிவ்ரதையின் சுபத்ருஷ்டிபட்டால் தேஹம் பவித்ரமாகிறது. 70.ஸ்த்ரீ ஏதோ தெய்வகாரணத்தினால் பதியுடன் ஸதியாக முடியாவிட்டால்கூட சுத்தரீதியாகத் தனது சீலத்தை அவள் பாதுகாக்க வேண்டும். அவள் சீலம் நஷ்டமடைந்துவிட்டால் அவள் பரமபதிதையாகிறாள், அத்யாயம்–4 133 அவள் தான் மட்டும் பதிதையாவதில்லீ, அவளுடைய மாதா, பிதா, பதி, ஸகோதரவர்க்கம், பந்துவர்க்கம் எல்லோரும் ஸ்வர்க்கத்திலிருந்து விழுகிறார்கள். இதற்கு ஸந்தேஹமேயில்லீ. 71. அதனால் பதி இறந்தபிறகு எந்த ஸ்திரீ யதாரீதியாக வைதவ்ய வ்ரதத்தை யனுஷ்டிக்கிறாளோ அவள் திரும்பவும் ஸ்வர்க்க லோகத்தில் தன் பதியுடன் ஸுகபோகம் அனுபவிக்கிறாள். 72.விதவை தலீவாரி முடிந்தால் பர்த்தாவிற்கு பந்தனம் ஏற்படும், அதனால் ஸ்த்ரீகள் விதவையாகிவிட்டால் தலீ முண்டனம் செய்துகொள்ளவேண்டும். 73.விதவை பகலும் இரவுமாக ஒரு நேரம்தான் போஜனம் செய்யவேண்டும். இரண்டு வேளையும் ஒரு பொழுதும் போஜனம் செய்யக்கூடாது. விதவாஸ்த்ரீகள் மூன்று இரவுகள், பஞ்சராத்ரி பக்ஷவிரதம். 74.மாஸோபவாஸம், சாந்த்ராயணம், ப்ராஜாபத்யம், பராகம், தநுக்ருச்ரம் இந்த விரதங்களைச் செய்து கொண்டிருக்கவேண்டும். 75.எதுவரை ப்ராணன் தன்னைத் தானே போகவில்லீயோ அதுவரை ஜவதான்யம், அல்லது பால் மட்டிலும் அருந்தி வாழ்வாகிய ப்ரயாணத்தை நிர்வஹிக்க வேண்டும். 76.கட்டிலில் படுத்துறங்கும் விதவை பதியைப் பதிதனாக்குகிறாள் . அதனால் பதிக்கு ஸுகத்தை விரும்புகிறவள் தரையில் படுத்துறங்க வேண்டும். 77.விதவை சரீரத்தில் எண்ணையோ வேறு எந்த ஸுகந்த பதார்த்தங்களையோ தேய்க்கக்கூடாது. 78.அவள் ப்ரதி தினமும் அவளுடைய பதி, பிதா , பிதாமஹர் அவர்களுடைய நாம கோத்ரங்களைக் கூறி 134 யாத்திரை விதி தர்ப்பை எள்ளு முதலியவைகளால் தர்பணம் செய்யவேண்டும். 79.பிறகு விஷ்ணு பகவானிற்குப் பூஜை செய்ய வேண்டும், விஷ்ணு ரூபஹரியைப் பதிதேவன் என்று எண்ணி த்யானம் செய்ய வேண்டும். 80.உலகில் தனக்கு எந்தெந்த வஸ்து ப்ரியமோ, தனது பதி எதை விரும்புவானோ அவைகளையெல்லாம் பதிக்கு ப்ரீதியாக குணவான்களான பிராம்மணர்களுக்கு தானம் செய்யவேண்டும். 81.விதவா நாரீ வைசாகம், கார்த்திகை, மாசி இந்த மாதங்களில் சில விசேஷ நியமங்களை அனுஷ்டிக்க வேண்டும். அதாவது ஸ்நானம், தானம், தீர்த்த யாத்திரை இவைகளைச் செய்ய வேண்டும். 82.வைசாகத்தில் ஜலம் நிரம்பிய குடம் தானம் செய்ய வேண்டும், கார்த்திகை மாதத்தில் தேவாலயத்தில் நெய் தீபம் போடவேண்டும்; மாக மாதத்தில் தான்யம் எள் முதலியவைகளைத் தானம் செய்தால் ஸ்வர்கத்தில் விசேஷஸுகம் ஏற்படும். 83.விதவாஸ்த்ரீ வைசாக மாதத்தில் தண்ணீர் பந்தல் தேவதைகளுக்கு ஜலதாரை விசிறி, குடை, மெல்லிய வஸ்த்ரம் சந்தனம், 84.கற்பூரத்துடன் கூடிய தாம்பூலம் புஷ்பம், விதவிதமான ஜல பாத்ரம், புஷ்ப மண்டபம், 85.குடிப்பதற்கு ரஸம் நிரம்பிய ஜல பதார்த்தம், திராக்ஷை, வாழைப்பழம் முதலிய இதர பழங்கள் இவைகளைத் தன்னுடைய பிராணபதி ஸந்தோஷமாக இருக்கவேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு பிராமணர்களுக்கு தானம் செய்ய வேண்டும். கார்த்திகை மாதம் ஒருவேளைதான் சாப்பிட வேண்டும், கத்திரிக்காய், சேனைக்கிழங்கு அவரை முதலிய காய்கறிகளைச் சாப்பிடக் கூடாது. அத்யாயம்–4 135 86.கார்த்திகை மாதம் எண்ணை, மது இவை உபயோகப்படுத்தக் கூடாது. பீங்கான் பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது. கார்த்திகை மாதம் ஊறுகாய் சாப்பிடக் கூடாது. 87.கார்த்திகை மாதம் மௌன விரதம் அனுஷ்டிக்க வேண்டும், மணிதானம் செய்யவேண்டும். ஒருவர் இலீயில் உண்பவரானால் அவருக்கு நெய் நிரம்பிய வெண்கலப் பாத்திரம் தானம் செய்ய வேண்டும். 88.பூமியில் படுத்துத் தூங்கும் விரதம் எடுத்துக்கொண்டால் ம்ருதுவான மெத்தை ஸஹிதம் படுக்கை தானம் செய்ய வேண்டும். பழத்தை விடுவதாக இருந்தால் நல்ல வகை பழ தானங்கள்; 89.ருசியான பான பதார்த்தங்கள் சாப்பிடுவதை விடுவதாக இருந்தால் அவைகளை தானம் செய்ய வேண்டும். 90.அப்படி தான்யங்களை தானம் செய்வதாக இருந்தால் அரிசி தானம் செய்ய வேண்டும். பிறகு மிகவும் சிரத்தையுடன் தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட பசு தானம் செய்ய வேண்டும். இவை ஒருபுறம் 91.மறுபுறம் தீபதானம், கார்த்திகை மாதம் எந்த தானமும் தீப தானத்திற்குப் பதினாறில் ஒரு பங்கு கூட ஆகாது. 92.சூர்யோதயத்திலேயே மாகஸ்நானம் பண்ண வேண்டும், மாகஸ்நானத்திற்குக் கூறிய எல்லா விதிகளையும் அனுஷ்டிக்க வேண்டும். 93.ப்ராம்மணன் சந்யாஸி, தபஸ்வி, இவர்களுக்கு சித்ரான் னங்கள், லட்டு, சேமியா கேஸரி, வடை, இண்டரி (போஜனம் செய்யும்போது தபஸ்விகள் நூலால் செய்த மெதுவான ஆசனம் போன்ற ஒன்றை தலீயில் வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்) இவைகள் 136 யாத்திரை விதி 94.நெய்யினால் செய்யப்பட்ட மரீசம் என்னும் ஒரு வகை பண்டத்தினால் நிரம்பிய சுத்த கற்பூரத்தினால் வாசனையூட்டி, அதன் மத்தியில் சர்க்கரையை நிரப்பிக் கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும், வாசனையுடன் கூடினதுமான பதார்த்தத்தை போஜனம் செய்விக்க வேண்டும். 95.குளிர் காலத்தில் உலர்ந்த விறகுக் கட்டுகள், பஞ்சு வைத்து தைத்த சட்டைகள், துப்பட்டாக்கள் மெத்தைகள், 96.மஞ்சளில் நனைத்த ஸுந்தர வஸ்த்ரங்கள், பஞ்சு நிரம்பிய ரஜாய், ஜாதிபத்ரி லவங்கத்துடன் கூடிய தாம்பூலம். 97.விசித்ரமான கம்பளங்கள், காற்றில்லாத அறைகள், ம்ருதுவான மோஜாக்கள், ஸுகந்நமான ஸ்நானப் பொடி. 98.பிறகு மஹாஸ்நான விதிப்படி (பதரீ நாராயணத்தில் பிரசித்தமான நெய்யில் நனைத்த கம்பளம்) பூஜையுடன் கூட காரகில் முதலியவைகளால் தேவாலயங்களுக்குள்ளே தூபதானம். 99.பருமனான திரியுடன்கூட தீபதானம், விதவிதமான நைவேத்யங்கள் இவைகளால் பதிரூபமான பகவான் ஸந்தோஷமடையட்டுமென்று; 1.இந்த விதமான நானாப்ரகாரமான நியமம்; தானங்கள் முதலியவைகளினால் விதவாநாரீ வைசாகம், கார்த்திகை, மாக மாதத்தைக் கடத்த வேண்டும், 2.ப்ராணன் தொண்டைக்கு வந்து விட்டால்கூட காளைமேல் ஏறாதீர்கள்; ரவிக்கை விதவிதமான வஸ்திரங்களை உடுத்தாதீர்கள். 3.பதிவ்ரதையானவள் பிள்ளைகளிடம் கேட்காமல் ஒன்றும் செய்யக்கூடாது. இந்த விதமாக வெல்லாம் நடக்கும் வேஶ்யா கூடஉத்தமமானவளாகக் கருதப்படுவாள் என்று சொல்லப்படுகிறது. அத்யாயம்–4 137 4. இந்த விதமான தர்மானுஷ்டானத்தில் ஈடுபட்டிருக்கும் விதவை பதிவ்ரதையேயாவாள். அவள் ஒரு பொழுதும் துக்கத்திற்கு ஸகோதரியாக மாட்டாள். அந்திம காலத்தில் பதியின் உலகத்திற்குச் செல்வாள். 5.எந்த நாரீ பதியைத் தேவதையாகக் கருதுகிறாளோ அவளுக்கும் கங்கைக்கும் கொஞ்சம்கூட பேதமில்லீ. அவள் ஸாஷாத் சிவபார்வதிக்கு ஸமானமானவள்தான், அதனால் வித்வான்கள் பதிவ்ரதையைப் பூஜிக்க வேண்டும். 6.பிறகு ப்ரு-ஹஸ்பதி மீண்டும் கூறுவார் :- லோபா முத்ரே! மஹாமாதாவே! நீ உன் பதியின் சரணாரவிந்தங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறாயே, ஏ தேவீ! இன்று உன் தரிசனம் ஆனதினால் கங்காஸ்நான பலன் கிடைத்தது. 7.தன்னலத்தில் வித்வானான தேவகுரு இந்த விதமாக பரம பதிவ்ரதை, மஹாபாக்கியவதி ராஜபுத்ரி லோபா முத்ரையைத் துதித்து நமஸ்கரித்து பிறகு அகஸ்த்ய முனிவரைப் பார்த்து கூறத் தொடங்கினார்: 8.ஹே மஹா முனியே, நீர் ப்ரணவ ரூபர், இந்த லோபாமுத்தை ச்ருதிரூபா; நீர் சாக்ஷித்தபஸ்; இவள் க்ஷமையே உருவானவள். இவள் ஸத்காரியங்கள்; தாங்கள் அவைகளின் பலன். மொத்தத்தில் நீர் பரம தன்யர். 9.இவள் ஸாக்ஷாத் பதிவ்ரதா தேஜஸ்வினீ, தாங்கள் ப்ரம்ம தேஜஸ்ஸே, இந்தத் தபஸ்ஸின் தேஜஸ்ஸினால் நீர் செய்யும் எந்தக் காரியம்தான் அஸாத்யமாகும்? 10.தங்களிடம் ஒன்றும் மறைக்க முடியாது என்றாலும், நான் விண்ணப்பித்துக் கொள்கிறேன். ஹே முநிவரே! இந்த தேவதைகள் என்ன காரியத்துக்காக வந்திருக்கிறார்களோ அதைக்கேளும். 11.இவர்கள் நூறு அச்வமேதங்கள் செய்தவர்கள், வ்ருத்ரா-ஸுரனைக் கொன்ற இந்திரன், இவருடைய ஆயுதம் வஜ்ராயுதம் இவருடைய வாயிலில் அணிமாதி 138 யாத்திரை விதி 15.ஆகையால் இவர்கள் யாவரும் உலகத்தின் அஷ்டஸித்திகளும் இவருடைய க்ருபாகடாக்ஷத்திற்காக காத்து நிற்கிறார்கள். 12.இவரது அமராவதிப் பட்டணத்திற்கு நார்புரமும் காமதேனுப் பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. கல்பக வ்ருக்ஷத்து நிழலில் படுத்துறங்குகின்றன. 13.இவருடைய புரியில் சாலீகளில் சிந்தாமணிக்கற்களை உடைக்கிறார்கள்; இவர் ஜகஜ்ஜோதியாகிய அக்னிதேவர்; இவரோ தர்மராஜர். 14.இவர்களோ நிருருதி, வருணன், வாயு, குபேரன், ருத்ரன் முதலிய தேவகணங்களும் ஆவார்கள். ஸமஸ்த விருப்பங்களும் நிறைவேறும் பொருட்டு இவரை உலகில் ஆராதிக்கிறார்கள். உபகாரத்தின் பொருட்டு தங்களைப் பிரார்த்திக்க இங்கு வந்திருக்கிறார்கள். அந்த உலகக் கார்யம் தங்களுடைய வரிக்கின்ற முயற்சியால்தான் ஸாத்யம் ஆகும். 16.ஒரு விந்த்ய பர்வதமானது ஸுமேரு பர்வதத்தின் மீதுள்ள பொறாமையினால் ஸூர்ய பகவானின் மார்க்கத்தை மறைத்துக் கொண்டு வளர்ந்து நிற்கிறது. அது மேலும் வளராமல் தடுக்க வேண்டியது தங்கள் கையில்தானுள்ளது. தயவுடன் அது செய்யவேண்டும். 17.யார் கடின ஸ்வபாவம் உள்ளவர்களோ அவர்களால் மார்க்கத்திற்குத் தடை ஏற்பட்டிருக்கிறது. கேவலம் பொறாமையினால் மேலும் வளர இருக்கிறது. அவருடைய இந்த வளர்ச்சியைப் பெருக விடுவது நன்மையல்ல. 18.ப்ரு-ஹஸ்பதியின் இந்த விதமான வார்த்தைகளைக் கேட்டு அகஸ்தியர், ஒன்றும் யோசிக்காமலேயே ஒரு நிமிஷம் மௌனமாக இருந்து பிறகு ததாஸ்து என்று சொன்னார். அத்யாயம்–4 139 19.'நான் உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவேன்' என்று கூறி அகஸ்தியர் தேவதைகளுக்கு விடைகொடுத்து அனுப்பினார். அவர் பிறகு சிந்தனையில் ஆழ்ந்து தியானத்தில் உட்கார்ந்து விட்டார். 20.வேதவ்யாஸர் கூறுகிறார்: இந்தப் பதிவ்ரதை பற்றிக் கூறும் அத்தியாயத்தை யாதொரு ஸ்த்ரீ புருஷன் கேட்கிறார்களோ, அவர்கள் பாம்பு, சட்டையைக் கழற்றுகிறது போல, தங்களது பாப சட்டையைக் கழற்றிவிட்டு இந்திரலோகம் அடைகின்றார்கள். ஸ்காந்த புராணத்தில் நான்காவதான காசீ கண்டத்தில் பூர்வார்த்த பாஷா மகாவான பதிவ்ரதாக்யானம் என்ற 4ம் அத்யாயம் ஸம்பூர்ணம். 140 யாத்திரை விதி அத்யாயம் 5 வேதவ்யாஸர் கூறுகிறார்: ஹே ஸூத முனிவரே! இதற்குப் பிறகு அகஸ்திய முனிவர் த்யானத்தில் விச்வேச்வரரைத் தரிசித்து அந்தத் தூய்மையான லோபாமுத்ரையிடம் கூறத்தொடங்கினார்: 1. அடி வரருசே !எங்கிருந்து இந்தக் கார்யங்கள், எங்கு வந்து முளைத்தது பார். எங்கு நாம் முநிவ்ருத்தியை அனுஸரித்துக் கொண்டிருக்கிறோம்? 2. அந்த கிரிகளை உடைக்கும் இந்திரன் ஸமஸ்த பர்வதங்களுடைய இறகுகளையும் பிய்த்தெறிந்தான் . அவன் விந்த்யபர்வதத்தைத் தனியாக அடக்க ஸாமர்த்தியம் இல்லாதவனா? 3. அவனுடைய அரண்மனை அங்கணத்தில் கல்ப விருக்ஷம் இருக்கிறது. வஜ்ராயுதம் கையில் இருக்கிறது. அவனுடைய அரன்மணை வாசலில் ஸித்திப் பெண்கள் கைகட்டிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இந்திரன் பிராம்மணனிடத்தில் வந்து ஸித்திக்கு யாசிக்கிறான். 4. மிக ஆச்சர்யம். காட்டுத் தீயின் சேர்க்கையினால் ஸமஸ்த பர்வதங்களும் வியாகூல மடைந்திருக்கின்றன. இன்று விந்த்ய பர்வதத்தின் வளர்ச்சியைத் தடுக்க அந்தக் காட்டுத் தீயின் யஜமானனான அக்னிபகவானின் சக்தி எங்கே போயிற்று? 5. எல்லா பூதங்களுடையவும் அதிகாரி தண்டமேந்திய பிரபு யமராஜர் இருக்கிறாரே, அவர் இந்த ஒரு பர்வதத்திற்கு தண்டனையளிக்க சச்தியில்லாமல் போனாரா? 6. ஆதித்யர்கள், வஸுக்கள், ரிஷிகள், மருத்துக்கள், விச்வேதேவர்கள், அச்வினீ குமாரர்கள் வேறு தேவதைகள், 7. இவர்களுடைய கண்பட்ட மாத்திரத்திலேயே பதினான்கு புவனங்க-ளும் பட்டுப் போகாதா? அவர்கள் அத்யாயம்–5 141 அந்த பர்வதத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு ஸமர்த்தர்கள் இல்லீயா? 8.ஓஹோ காரணம் தெரிந்து கொண்டேன் ஒரு ஸமயம் காசியை உத்தேசித்து விட்டு தத்துவ தரிசிகளான முனிவர்கள் என்ன சொன்னார்களோ அந்த அழகிய வசனம் எனக்கு நினைவு வந்து விட்டது 9. முமுக்ஷுக்கள் ஒரு பொழுதும் காசியைத் தியாகம் செய்யக் கூடாது. அங்கு வஸிக்கும் ஸத்ஜனங்களுக்கு அநேகம் விதம் இடையூறுகள் ஏற்படும். 10.ஹே கல்யாணி! இப்படி முனிவர்கள் கூறுகிறார்களே அதன்படி என்னுடைய காசிவாஸத்தில் இந்தப் பெரிய இடையூறு நேர்ந்திருக்கிறது. ஏனென்றால் விச்வேச்வரரே எப்பொழுதும் பராமுகமாக இருக்கிறார். 11.பிராம்மணனுடைய ஆசீர்வாதத்தினாலேயே காசீவாஸம் கிடைத்திருக்கிறது. மோக்ஷத்தை விரும்புகிற எவன்தான் இதைத் தியாகம் செய்வான்? ஆஹா ஆச்சர்யம்! இந்த மூடபுத்தி கையில் கிடைத்த மனோஹரமான கவனத்தைத் தூர எறிந்து விட்டு கேவலம் கையை நக்க விரும்புகிறேனே! 12.அஹோ லோகங்கள் புண்ணியத்தின் குவியலாகிய இந்தக் காசியை மூர்க்கர்களைப் போல் எவ்விதம் விடமுடியும்? ஒவ்வொரு முழுக்கிலும் தாமரைக் கிழங்குகள் கையில் கிடைக்கிறது.அது போல் இந்தக் காசியும் ஸுலபமாக இருக்கிறதல்லவா? 13.ஆனபொழுதிலும் ஜன்-மாந்தரமாகக் குவித்து வைத்த ஸஞ்சித புண்யக் குவியலின் மூர்த்தியான இந்த வாராணசியுடைய தத்வம் தெரிந்த பிறகும் மிகவும் கஷ்டத்தோடுகூட இந்தக் காசியை யடைந்த பிறகு மோஹவசத்தால் துர்க்கதியை லாபமாகக் கொண்டு வேறு இடங்களுக்குப் போகும் இச்சையை எவன் கொள்வான்? 142 யாத்திரை விதி 14.பரமாத்ம பதத்தைச் சுட்டிக் காட்டுகிற காசி எங்கே? எல்லா விதத்திலும் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய அந்நியப் பிரகாரமான காரியங்கள் எங்கே? பண்டித ஜனங்கள் காசியை விட்டு விட்டு வெறெங்கும் போவார்களா? பூசணிப்பழம் எங்கேயாவது ஆட்டின் வாயில் புகமுடியுமா? 15.அதிநச்வர மனுஷன்கூடப் பரம புண்ணியப் பிரகாசிகையான இந்தக் காசியை ஏன் தியாகம் பண்ணுகிறான்? எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் யாருடைய புத்தி அன்னிய இடங்களில் வசிப்பதற்குப் பிரவர்த்திக்கிறதோ அவனுடைய புண்ணியம் க்ஷயமாகி விட்டது. எந்த மனுஷனுக்கு அந்நிய இடங்களில் வசிக்க மனம் போகவில்லீயோ அந்த மனுஷன் ஸமஸ்த ஜந்துக்களுக்கும் அடைக்கலமாகவுடைய நற்செய்கைகளின் குவியலான காசியை விட்டு வெளியில் செல்வதற்குப் பிரயத்தனம் செய்ய மாட்டான். 16.எவனோருவன் காசிவாசத்தை தியாகம் செய்ய மாட்டானோ அவன் ஸம்ஸார லோகத்திலிருந்து முக்திலாபத்தை அடைகிறான். மற்றவர்கள் இல்லீ. 17.பாபவினாசினி தேவகணங்களுக்குக்கூட துர்லபம். எப்பொழுதும் கங்கா ஸங்கம் ஸம்ஸார பாபச்சேதினீ. சிவ பார்வதியை விட நவஸ்த்ரிபுவனத்துக்கும் அதீதமான மோக்ஷஜனனீ காசிபுரியை முக்த ஜனங்கள் ஒருபோதும் விடமாட்டார்கள். 18.அஹோ மனிதர்களே நீங்கள்! நிச்சயமாகப் பாபக்குவியல்களினால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். புண்ணியஸம்பத்தின் லக்ஷ்யமான இந்தக் காசியை மிகப் பிரயத்னத்துடன் அடைந்துவிட்டுப் பின்னும் வேறெங்கேயோ போவதற்காக ப்ரயத்தனத்தைச் செய்கிறீர்களே? அத்யாயம்–5 143 19.ஓ ஜனங்களுடைய மடத்தனத்தை என்னவென்று கூற? அவர்கள் எல்லோரும் பவித்ர கங்கா ஜலத்தினால் மனோஹரமானதும் ப்ரளய காலத்திலும் கூட மஹாதேவருடைய சூலத்தின் முனையில் பத்திரமாக இருக்கும் இந்தக் காசியை தியாகம் செய்து விட்டு வேறு எங்கோ போவதற்கு விரும்புகிறார்களே, 20.ஜனங்களே! மோக்ஷ பதத்திற்கு விரோதி, பாபங்களை விலக்கவல்லதான காசி என்னும் படகை விட்டுவிட்டு சோகமென்னும் ஜலத்தால் நிரம்பிய இந்தப் பாபமய ஸம்ஸாரத்தில் விழுகிறீர்களே? 21.வேதவிஹிதமான கர்மங்களை ஆச்ரயித்துக் கொண்டு அல்லது யோகாப்யாசம் செய்து கொண்டு தானம் தபஸ் இவைகளைச் செய்து கொண்டிருப்பவர்களுக்குக்கூட காசி கிடைத்தலரிது, கேவலம் பிராம்மணஜனங்களுடைய ஆசீர்வாதம், விச்வநாதருடைய க்ருபாபாத்திரவான்களுக்கே இது ஸுலபமாகக் கிடைக்கிறது. 22.சில இடங்களில் நிறைய தனத்தைச் செலவழித்தால் தர்மலாபம் அடையலாம், சில இடங்களில் தான போகங்களினாலும் அர்த்த காமத்தின் ஸம்பத்து கிடைக்கலாம். சில இடங்களில் இவையனைத்தும் கிடைக்-க-லாம். ஆனால் மோக்ஷம் காசியைப் போல் வேறெங்கும் கிடைக்காது, 23.சுருதி, ஸ்ம்ருதி, புராணம் இவைகளின் அனுஸாஸனத்தின் படி இந்த அவிமுக்த க்ஷேத்ரத்தைப் போல் வேறு பவித்ரமான இடம் கிடையாது. அதனால் அவிமுக்த க்ஷேத்ரத்தில் சரணாகதியடைவதே பரம புருஷார்த்தம். ஜகத் பிரஸித்த 24.ருஷி கூறுகிறார்: அஸிநதி இடாவென்னும் நாடி, வருணா நதி பிங்களா நாடி என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த இரண்டிற்கும் மத்தியில் அவிமுக்த க்ஷேத்ரமான 144 யாத்திரை விதி காசியிருக்கிறது, இந்தக் காசீ ஸு-ஷும்னா நாடியாகும். 25.இந்த மூன்று நாடிகளும் சேர்ந்தே வாராணஸியாகும். இந்த வாராணஸியில் ஸ மஸ்த ஜீவர்களுடைய ப்ராண ப்ரயாண ஸமயத்தில் பகவான் விச்வேச்வரர் அவர்கள் காதுகளில் 26.தாரக நாம உபதேசம் செய்கிறார். அதனால் ஜீவர்கள் ப்ரம்மஸ்வரூபர்களாக ஆகிறார்கள். இப்படி ஒரு ஸ்லோகம் இருக்கிறது. அதை ப்ரம்-ம-வா-தி-கள் 27.இந்தக் காசீ க்ஷேத்ரத்தில் பகவான் பூதபாவனன் அந்திம காலத்தில் தாரகப் ப்ரம்ம உபதேசத்தைச் செய்து அவிமுக்த க்ஷேத்ரத்தில் இருக்கும் ஜந்துக்களுக்கு முக்தியளிக்கிறார். இதில் ஸந்-தே-ஹ-மில்-லீ. 28.அவிமுக்த க்ஷேத்ரத்திற்கு ஸமமான வேறு க்ஷேத்ரம் கிடையாது. அவிமுக்தத்திற்கு ஸமமான வேறு கதியும் கிடையாது. அவி-முக்-தேச்-வ-ர--ருக்கு ஸம-மான வேறு லிங்-க-மும் கிடை-யாது. இது முக்காலே மூன்று வீசம் ஸத்யம். 29.அவிமுக்தத்தை விட்டு வேறு அந்நிய இடங்களில் வசிக்க நினைக்கின்றவன் கைத்தலத்தில் கிடைத்த முத்திரையை விட்டுவிட்டு மற்றொரு ஸித்தியைத் தேடுகிறவன் ஆவான். 30.இந்தப் பி ரகாரம் ம காத்மா முநிசிரேஷ்டர் அகஸ்தியர் வேதபுராணம் முதலியவைகள் மூலமாக ஸ்ரீ விஸ்வநாதரைப் போன்ற சிவலிங்கமும் காசி ஸமானமானபுரியும் மூன்று உலகங்களிலும் மற்றொன்றும் கிடையாது. இந்த விதமாக க்ஷேத்ரத்தை நிச்சயம் செய்து 31.பிறகு காலபைரவரிடம் சென்று நமஸ்கரித்து ஹே காலராஜரே! தாங்கள் இந்தக்காசிபுரிக்கு ஸ்வாமி, இந்தக் காரணத்தினால் தங்களை ஒன்று கேட்க வந்தேன். 32.ஐயோ காலராஜரே! நான் சதுர்தசிதோறும் அஷ்டமி தோறும் ஒவ்வொரு மங்களவாரமும் ரவிவாரமும் அத்யாயம்–5 145 பழம் கிழங்கு புஷ்பம் முதலியவைகளினால் தங்களை ஆராதிக்கவில்லீயா? நான் ஒரு நிரபராதியல்லவா? இருந்த போதிலும் என்னை ஏன் அபராதி என்று ஸ்திரம் செய்கிறீர்கள்? 33. ஹே காலபைரவ! நீர் உத்கடபாபனாசனீ பயங்கர உருவை தரித்துக்கொண்டு பயப்படாதீர்கள் என்று கூறிக்கொண்டு கைகளை நீட்டி காசீவாஸியான பயந்த ஜீவகணங்களை ஸர்வ பாபத்துடன் ரக்ஷிக்கவில்லீயா? 34.பிறகு தண்டபாணியிடம் சென்று ப்ரலாபிக்கக் தொடங்கினார். ஹே யக்ஷராஜா சந்த்ரனைப் போல அழகான சரீரம் உடையவரே! ஏ பூர்ணபத்ரநந்தனா! ஏ நாயகா! ஏகாசிவாஸி வாசிரக்ஷகா !கோதண்டபாணி! தாங்கள் எல்லா தபஸ்ஸினுடையவும் க்லேசங்களை அறிந்தே இருக்கிறீர்கள். அப்பொழுது ஏன் என்னை வெளியில் தள்ளுகிறீர்கள்? 35.ஏ தேவா! தாங்களே காசிவாசிகளுக்கு அன்னதாதா! பிராணதாதா! ஞானதாதா! மோக்ஷதாதாவுமாக இருக்கிறீர்கள். தாங்களே சிறந்த ஸர்ப்பஹாரம், ஜடாகலாபம் முதலியவைகளால் ஜனங்களுக்கு அந்திம காலத்துக்குத் தகுந்த ஆபரணங்களை அணிவிக்கிறீர்கள். 36.தங்களுடைய ஸம்பிரமன், உத்ப்ரமன் என்னும் பெயருடைய அந்த இருகணங்களும் இங்கு வசிக்கும் எல்லா ஜனங்களுடைய விருத்தாந்தங்களை அறிவதில் நிபுணர்களாக இருக்கிறார்கள். இவர்கள் துர்ஜனங்களுக்கு மிகவும் மோஹத்தை உண்டுபண்ணி இந்த முக்தி க்ஷேத்ரத்திலிருந்து அப்பால் தள்ளி விடுகிறார்கள். 37.இதற்குப் பிறகு டுண்டிராஜ கணேச ஸ்வாமியின் முன்னால் நின்றுகொண்டு ப்ரலாபிக்கத் தொடங்கினார்- ஹேப்ரபோ! விநாயகா? எனது வார்த்தையைக் கேளுங்கள். நான் அனாதையைப் போல் தங்கள் முன்னால் புலம்புகிறேன். எல்லா இடையூறுகளும் தங்களுடைய 146 யாத்திரை விதி ஆளுகைக்குள்தான் இருக்கிறது. பாபி ஜனங்கள்தான் விக்னங்களினால் நிரம்பிருக்கிறார்களென்றால் நானும்தான் இங்கே இப்பொழுது நிற்கிறேனோ? 38.இப்பொழுது சிந்தாமணி விநாயகர், கபர்திவிநாயகர், ஆசாவிநாயகர், கஜவிநாயகர், ஸித்திவிநாயகர் இந்த ஐந்து விநாயகர்க-ளும் என்னுடைய பிராத்தனையைக் கேட்கட்டும். 39.கேளுங்கள்! நான் ஒருபொழுதும் ஒருவரையும் நிந்தித்ததில்லீ. ஒருவிதமான அபகாரமும் செய்ததில்லீ. பிறர் திரவ்யத்தை அபகரித்ததில்லீ. பரஸ்த்ரீகள் பேரில் புத்தி செலுத்தவில்லீ. பிறகு எந்த கர்மத்தின் பங்கிலிருந்து வந்திருக்கிறது? 40.நான் மூன்று வேளைகளும் கங்காஸ்நானம் செய்தேன். எப்பொழுதும் விஸ்வநாதரை தர்சித்தேன். ஒவ்வொரு பர்வத்திலும் எல்லாவிதமான யாத்ரைகளும் செய்து கொண்டேயிருக்கிறேன். பின் ஏன் எனக்கு விக்னத்திற்குக் காரணமான பாபம் உண்டாகியிருக்கிறது? 41.அம்மா! ஹே விசாலாக்ஷி! ஹே பவானீ! ஹே மங்களே! எல்லா ஸௌபாக்யங்களும் கொண்ட ஸுந்தரியே! ஜ்யேஷ்டேஸ்வரி-! சிவே! விதே! விஸ்வபுஜே! சித்ரகண்டே! விகடே! துர்கே! உங்களுக்கும் ஒவ்வொரு தேவீகணங்களுக்கும் என் நமஸ்காரம். 42.இந்தக் காசியில் எத்தனையெத்தனைத் தேவதைகள் உண்டோ அத்தனை பேர்களும் ஸாஷி. அவர்களெல்லாம் கேட்கட்டும், நான் தன்னலத்திற்காகக் காசியை விட்டு வேறெங்கும் போகவில்லீ, தேவர்களின் பிரார்த்தனைக்கு இசைந்து நான் போகிறேன். பின் என்ன செய்வது? பரோபகாரத்திற்கு வேண்டி பின் எதுதான் செய்யக் கூடாது? 43.பூர்வ காலத்தில் ததீசி முனிவர் மற்றவர்களுக்கு உபகாரத்திற்கு வேண்டித் தன் முதுகெலும்பைக் கொடுக்க அத்யாயம்–5 147 வில்லீயா? அஸுரேந்திரர் பலிசக்ரவர்த்தி யாசகர்களுக்கு மூன்று உலகங்களையும் கொடுக்கவில்லீயா? மது கைடபர் என்ற இரு அசுரர்களும் தங்கள் தலீயைக் கொடுப்பதற்கு அனுமதிக்கவில்லீயா என்று பிரார்த்தித்து விட்டு 44.பிறகு, காசியில் வசிக்கும் எல்லா முனிஜனங்களுக்கும், பாலவிருத்த ஜனங்களுக்கும், புல் வ்ருக்ஷங்கள் லதைகள் ஒன்று பாக்கியில்லாமல் இவைகளிடமெல்லாம் விடைபெற்றுக் கொண்டு காசீபுரியைப் பிரதக்ஷிணம் செய்து விட்டு அங்கிருந்து வெளியே கிளம்பினார். 45.ஒரு சுபலக்ஷணமும்கூட இல்லாத நீசத் தொழிலீச் செய்யும் ஒரு மனிதன்கூட சந்திரசேகரனைத் தரிசித்து விட்டு யாத்திரை செய்வானானால் அவசியம் அவனுக்கு ஸர்வாபீஷ்டமும் லாபமும் உண்டாகும். 46.காசியில் புல் பூண்டு, விருக்ஷமாகவும் இருப்பதும் மிகவும் உத்தமம், ஏனென்றால் அவைகள் பாபம் செய்வதில்லீ. அயலூர்களுக்கும் போவதில்லீ. ஆனால் ஐயோ சைதன்ய ஜீவர்களாய்ப் பிறந்து ஸர்வோத்தமர்களாயுமிருந்தும் நமக்கு ஐயோ! இழிவு, இழிவு நாமெல்லோரும் காசியை விட்டுவிட்டு எங்கெல்லாமோ போகிறோமே, 47.அடிக்கடி அஸி நதி ஜலத்தை ஸ்பர்சித்துவிட்டு காசீபுரியில் இருக்கும் பெரிய பெரிய மாலீகளைப் போல அலங்கரிக்கும் மாளிகைகளைப் பார்த்துவிட்டு அகஸ்தியரிஷி தன்னுடைய நேத்திரங்களைப் பார்த்துக் கூறுவர், "ஏ ஸகா நயனங்களே! காசி புரியை நீங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றைக்குப் பிறகு நீங்கள் எங்கேயோ, காசீபுரி எங்கேயோ ? 48.இன்று இந்தக் காசியின் எல்லீகளில் சூழ்ந்திருக்கும் பூத கணங்கள் கைகொட்டிக் கொண்டும், கைகளைக் கோர்த்துக்கொண்டும் யதேஷ்டமாக என்னைக் 148 யாத்திரை விதி கேலி செய்யட்டும். ஸுஹ்ருத்துக்களின் ஒரேயிருப் பிடமாகக் காசியை விட்டுப் போய்விடப்போகிறேனே. 49.ஹா, பத்தினியுடன் கூட அகஸ்திய முனிவர் க்ரௌஞ்ச பக்ஷிகளின் ஜோடிகளைப் போல மிகவும் பிரலாபித்துக் கொண்டு ஓ காசி! ஓ காசி! நீங்கள் மீண்டும் மீண்டும் வந்து தரிசனம் தரவேண்டும் என்று பெரிதாய் ஜனங்களைப்போல புலம்பிக்கொண்டு மூர்ச்சித்து விழுந்து விட்டார். 50.க்ஷணகாலம் மூர்ச்சித்திருந்து மூர்ச்சை தெளிந்ததும் அகஸ்திய முனி சிவ, சிவ, என்று உச்சரித்துவிட்டு பத்தினியைப் பார்த்து விட்டுக் கூறுவார், ப்ரியே, வா போவோம். பார் இந்தக் தேவதைகள் மிகவும் கடின ஹ்ருதயம் படைத்தவர்கள். மூன்று உலகங்களும் ஸுகத்தையளிக்கும் காமதேவனை த்ரயம்பக பகவானிடம் அனுப்பி இவர்கள் என்னென்ன செய்தார்கள் என்று உனக்கு நினைவில்லீயா? 51.முத்து முத்தாய் நெற்றியில் துளிர்த்த வேர்வையுடன் அகஸ்திய முனிவர் மிகவும் வேதனையுடன் நாலீந்து அடிகள் எடுத்து வைத்திருப்பார். அப்பொழுது பூமிதேவி இவரை நாம் நல்வரவு கூறாவிட்டால் வினாசத்தையடைவோம், என்று எண்ணி மிகவும் பயத்தினால் உடல் குறுகிப் போனாள். 52.முனிவர் தபஸ்ரூபமான விமானத்தில் ஏறிக்கொண்டு அரை நிமிஷத்தில் ஆகாச மண்டலத்தைக் கடந்து கொண்டு விந்த்ய கிரியை முன்னால் பார்த்தார். 53.அந்த விந்த்ய பர்வதமும் வாதாபி இல்வலனை நாசம் செய்தவரான அகஸ்திய முனிவரை ஸஹதர்மிணியுடன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து விட்டு, தபஸ்ஸினாலும், 54.க்ரோதத்தினாலும் காசியை விட்டுவந்து விரஹ தாபத்தினால் ஏற்பட்ட வருத்தத்தினால் மூன்றுவித அத்யாயம்–5 149 அக்னியைப் போல ஊழித்தீயைப் போல் ஜ்வ-லித்-துக் கொண்டு வரும் அகஸ்திய முனிவரைப் பார்த்து- 55.மிகவும் குறுகிய பூமிக்குள் பிரவேசித்து விடமாட்டோமா என்று விந்தய பர்வதம் சொல்லிற்று. பகவான், நான் தங்கள் வேலீக்காரன், நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லி விட்டு அனுக்ரஹம் செய்யுங்கள் என்றது. 56.அகஸ்திய முனி கூறுகிறார். ஹே அறிவாளியான விந்தியா! நீ ஒரு ஸஜ்ஜனன் அல்லவா? என்னை உனக்கு நன்றாகத் தெரியும். நான் உன்னைத் தாண்டி அப்பால் செல்கிறேன். நீ அது வரைக்கும் இப்படிக் குறுகியே இரு. 57.தபோதநராகிய அகஸ்திய முனி இப்படிக் கூறிவிட்டுத் தனது பதிவிரதையுடன் தனது சரண கமலத்தின் அடிககளினால் தக்ஷிண திசையை ஸனாதனனாக்கினார். 58.முனிவர் சென்ற பின் - அந்த நடுங்கும் விந்த்யன் மிகவும் கலவரமடைந்தான் - முனிவர் அம்மட்டுமாவது போனாரே க்ஷேமம் தான். 59.இன்று நான் மறுபடியும் பிறந்தவனாகிறேன். நல்ல வேளை ரிஷிஎன்னை சபிக்கவில்லீ. என்னைப் போல் தந்யன் ஒருவருமில்லீ என்று விந்த்யன் மனதில் எண்ணிக் கொண்டான். 60.அதே சமயம் காலத்தின் கதியை நன்கு அறிந்த சூரிய பகவானுடைய ஸாரதியான அருணன் குதிரைகளை நடத்தினான். பிறகு பழையபடி ஜகத்தானது ஸூர்யனுடைய ஸஞ்சாரத்தினால் க்ஷேமம் அடைந்தது. 61.இன்று அல்லது, நாளை, அல்லது அதற்கு மறுநாள் முநிநிச்சயமாக வருவார். இந்த விதமான சிந்தை பாரமாக அழுத்த அந்த விந்த்யாசலம் ஸ்திரமாக உட்கார்ந்திருந்தான். 62.இன்று வரை முனி திரும்பவில்லீ. அந்த கிரியும் 150 யாத்திரை விதி முன் போல் ஏங்கவில்லீ. துர்ஜனங்களுடைய எண்ணங்கள் நிறை வேறாததுபோல். 63.யாதொரு நீசன் மற்றவர்களிடம் பொறாமைப்பட்டு தனது வளர்ச்சியை விரும்புகிறானோ அவன் வளருவது இருக்கட்டும், பழைய நிலைமையாவது இருக்குமா என்பது ஸந்தேஹம் தான். 64.துஷ்ட ஜனங்களுடைய மனோரதம் முதலாவது நிறை வேறாது. தெய்வ யோகத்தினால் நிறைவேறினால் கூட சிக்கிரம் நஷ்டமாகிவிடும். அதனால்தான் விச்வேஸ்வரரால் ரக்ஷிக்கப்படும் இவ்வுலகம் பாதுகாப்புடன் இருக்கிறது. 65.பால விதவைகளுடைய ஸ்தனம் பெருத்து பிறகு நெஞ்சோடு நெஞ்சாய் ஒட்டிவிடுவது போல துஷ்டர்களுடைய மனோரதங்களும் இதயத்தில் உதித்து உதித்து இதயத்திலேயே ஒடுங்கி விடும். 66.சிறிய நதிகள் கொஞ்சம் மழை பெய்தவுடன் கரையை உடைத்துக் கொண்டு ஓடுவது போல் துஷ்ட ஜனங்களுடைய ஸம்பத்தும் சில வருஷங்களுக்குள்ளாகவே தனது குலத்தை நாசம் செய்துவிடும். 67.எவனோருவன் பிறருடையஸாமர்த்யத்தை அறியாமலேயே தனது பலத்தைக் காண்பிக்கிறானோ அவனைப் போல் இந்த விந்த்ய கிரியும் பரிஹாஸத்திற்குப் பாத்திரமாகியது. 68.வேதவ்யாஸர் கூறினார்: அகஸ்திய முனி ரமணீயமான கோதாவரிக் கரையில் வாஸம் செய்தும் கூட அவருடைய காசி விரஹத்தினால் ஏற்பட்ட தாபம் சாந்தமடையவில்லீ. 69.அந்த முனிவர் வடதிசையில் இருந்து வரும் காற்றைக் கூடக் கைகளை நீட்டி ஆலிங்கனம் செய்து கொள்வார். காசியின் குசலத்தை விசாரிப்பார். அத்யாயம்–5 151 70.ஹே லோபாமுத்ரே: காசியின் இந்த ஸ்ருஷ்டியின் பரிபாடி பூமியில் எங்கும் காணமுடியவில்லீ,. பிறகு எப்படி? ஜகத் ஸ்ருஷ்டி கர்த்தா ப்ரம்மாவினுடைய ஸ்ருஷ்டியில் இதுமாதிரி வேறு ஸ்ருஷ்டி தோன்றவேயில்லீ. 71.அகஸ்திய முனி எங்காவது தங்குவார்; தனக்குத் தானே பேசிக் கொள்வார். சில இடங்களில் ஓடுவார். இடங்கள் சிலதில் அமருவார். சில இடங்களில் திரிவார். சில இடங்களில் தடுமாறுவார். பாக்யவான். 72.ஸமபுத்தியை அடைந்ததுபோல், புண்ணியராசி தபோநிதி அகஸ்திய முனிவருக்கு உதயமாகும் சரத் சந்திரனைப்போல் விளங்கும் மஹாலக்ஷ்மி கண்முன் தென்பட்டார். 73.தனது பிரகாசமாகிய ஜோதியினால் சூரியனைத் தோற்கடித்துக் கொண்டு, பகலிலேயே பகலுக்கே பிரகாசமாக அகஸ்த்யரின் தாப புஞ்சத்தைக் தணித்துக் கொண்டு, 74.விளங்கும் மஹாலக்ஷ்மியை அகஸ்திய ருஷி கண்டார். 75.இரவில் தாமரை ஒடுங்குகிறது. அமாவாஸ்யையன்று சந்திரனும் எங்கேயோ சென்று விடுகிறான். க்ஷீரஸாகரமும் மந்தர பர்வதத்திற்கு பயப்படுகிறது. அதனால் லக்ஷ்மியானவள் தனக்கு முன்னால் கூறப்பட்ட நிவாஸஸ்தானங்களைத் திரஸ்கரித்துவிட்டு இங்கு வஸிக்க வந்தாள் போலும்! 76.எப்பொழுது பகவான் மாதவன் பூமியைத்தாரணம் செய்தாரோ அப்பொழுதிலிருந்து மானவதியாகிய லக்ஷ்மி தனது ஸகபத்னியான பூமிதேவியிடம் பொறாமைப்பட்டு இங்கு வந்து ஸ்திரவாஸம் செய்கிறாள் போலும்! 77.பன்றிரூபமான மஹாஸுரன் மூன்று லோகங்களையும் பயப்படுத்திக் கொண்டிருந்தான். அவனை 152 யாத்திரை விதி நாசம் செய்து மஹாலக்ஷ்மி இந்த அழகான கோல்ஹாபூர் என்ற நகரத்தில் வந்து தங்கியிருக்கிறாள். 78.இப்பொழுது அகஸ்தியமுனிவர் அந்த மஹாலக்ஷ்மியின் ஸமீபத்தில் ஸந்தோஷத்துடன் வந்து ஸகலாபீஷ்டங்களையும் தரும் லோகமாதாவாகிய மஹாலக்ஷ்மியை நமஸ்கரித்து வசனத் தொடர்களினால் ஸந்தோஷப்படுத்தத் தொடங்கினார். 79.அகஸ்திய முனி கூறுவார்: கமலத்தை நிகர்த்த விசாலநேத்ரமுடையவளே! ஸ்ரீ விஷ்ணு ஹ்ருதய கமலவாஸினி, ஜகஜ் ஜனனீ, மாதா, கமலே! உன்னை நமஸ்கரிக்கிறேன். க்ஷீரஸாகரத்தில் பிறந்தவளே! ம்ருதுவான கமலத்தின் மத்யபாகத்தைப் போன்ற வர்ணமுடையவளே ! சரணாகத ரக்ஷகி!. 80.லக்ஷ்மீ! தாங்கள் சந்தோஷப்படவேண்டும். ஏ மதனின் தாயே! விஷ்ணுவின் அரண்மனையின் லக்ஷ்மீகரம் தாங்கள்தான்.சந்த்ரனைப்போன்ற அழகானமுகத்தை உடைவளே! தாங்களே சந்த்ரனின் நிலவு. ஸூர்ய மண்டலத்தின் பிரபை. த்ரைலோக்யத்தின் சோபை; ப்ரணத பாலிநி! லக்ஷ்மி! தாங்கள் எப்பொழுதும் ப்ரஸன்னமாக இருக்கவேண்டும். 81.ஹே தேவி! தாங்களே அக்னியின் தஹிக்கும் சக்தி, ப்ரம்மா தங்கள் அருளினால்தான் இந்த விசித்ர உலகை (ஜகத்தை) ஸ்ருஷ்டி செய்கிறார். மஹாவிஷ்ணு தங்களுடைய ஸஹாயத்தினால்தான் ஸமஸ்த உலகங்களையும் காப்பாற்றுகிறார், ஹே ஸதா சரணார்த்தி ஹரே லக்ஷ்மி! தாங்கள் ஸந்தோஷமடைய வேண்டும். 82.ஹே அமலே! தாங்கள் இந்த ஜகத்தை வேண்டாமென்று தியாகம் பண்ணின பிறகுதான் ருத்ரதேவர் இதை ஸம்ஹாரம் செய்கிறார். அதனால் தாங்களே ஸ்ருஷ்டி, ஸ்திதி, வினாசம் செய்கிறவர். தாங்கள் கார்ய, காரணரூபிணீ. ஹே லக்ஷ்மி! தங்களைப் பெற்ற பிறகே நாராயணரும் பூஜிக்கத்தகுந்தவரானார். ஹே அத்யாயம்–5 153 சரணாகதவத்ஸலே ! தாங்கள் எப்பொழுதும் ஸந்தோஷமாக இருக்க வேண்டும். 83.ஹே சுபே! உன்னுடைய கருணாகடாக்ஷம் விழுந்த ஒருவன் சூரனாகவும், குணவானாகவும், பண்டிதனாகவும், தந்யனாகவும் மாந்யனாகவும், பவித்ரனாகவும், குலீனனாகவும், ஸுஜீவனாகவும், ஸமஸ்த கலாபங்களுடன் கூடியனனாகவும் ஆகின்றான். 84.ஹே! ஸர்வஸ்வரூபிணீ! அங்கு தாங்கள் க்ஷணநேரமாவது ஒரு இடத்தில் தங்கினீர்களானால் அந்த இடத்துப் புருஷர்கள், யானை, குதிரைகள், ஸ்த்ரீகள், புற்கள், ஸரோவரம், தேவகுலங்கள், வீடு, அன்னம், ரத்னம், பக்ஷி, பசு, படுக்கை, பூமி இவைகளெல்லாம் லக்ஷ்மீகரமாகிறது. மற்ற இடத்து ஜனங்கள் ஜகத்தில் ஸ்ரீமானாக இருக்க முடியாது. 85.ஹே லக்ஷ்மி! தங்கள் கரகமலம் பட்ட ஸகலவஸ்துகளும் உலகில் பவித்ரமாகின்றன. எதைத் தாங்கள் விட்டுவிடுகிறீர்களோ அப்பொருள் அசுத்தமாகின்றது. ஹேவிஷ்ணுபத்நி! கமலாலயே! ஸ்ரீ கமலே! பத்மே! ரமே! நளினஸமமான கரங்களையுடையவளே! இந்திரே, விஷ்ணுப்ரியே! உன்னுடைய பன்னிரண்டு நாமங்களையும் ஜபிப்பவர்களுக்கு துக்கம் எப்படி வரும்? எங்கு தங்கள் பெயர் ஒலிக்கின்றதோ அங்கு ஸர்வ மங்களங்களும் ஸாந்நித்யமாகின்றன. 86.லக்ஷ்மி! ஸ்ரீ கமலே! கமலாலயே! க்ஷீரஸாகரத்தில் பிறந்தவளே! அம்ருதகுடும்பத்தைக் கையில் ஏந்தியவளே! உன் நாமத்தை ஜபிப்பவர்கள் ஒருநாளும் துக்கத்தில் ஆழமாட்டார்கள். 87.இந்தப் பிரகாரமாக பத்னியுடன் கூட அகஸ்தியமுனிவர் ஹரிப்ரியை, பகவதி மஹாலக்ஷ்மியை ஸ்துதி செய்து ஸாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். 154 யாத்திரை விதி 88.லக்ஷ்மீ கூறுவாள்; மித்ராவருணபுத்ர, அகஸ்திய! எழுந்திருப்பா எழுந்திரு. உனக்கு மங்களமுண்டாகட்டும். சுபவ்ரதே! பதிவ்ரதே! 89.லோபாமுத்ரே! நீயும் எழுந்திரம்மா, உங்கள் ஹ்ருதயாபீஷ்டங்களை பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். ஹே மஹாபாகே! பவித்ரே! ராஜபுத்ரீ நீ. 90.இங்கு அமருவாய். உன்னுடைய பதிவ்ரதா லக்ஷணங்களை ஸூசிப்பிக்கும் உனது அங்கங்களினால், உனது பரம பவித்ர வ்ருத்தங்களினாலும் அஸுராஸ்திரங்களினாலும் ஸந்தாபம் அடைந்திருக்கும் இந்த சரீரத்தை சீதளமாக்கிக் கொள்ள விரும்புகிறேன். 91.விஷ்ணுப்ரியையான லஷ்மி! இவ்வாறு கூறிவிட்டு முனி பத்நியை ஆலிங்கனம் செய்து கொண்டு பரமஸந்தோஷத்துடன் அநேக ஸௌபாக்யங்களை அளிக்கும் ஆபரணங்களினால் அலங்கரித்து விட்டாள். 92.லக்ஷ்மி பிறகு கூறினாள்; முனீஸ்வரா! உன்னுடைய ஹ்ருதய தாபத்தின் காரணம் நானறிவேன். காசியினுடைய விரஹதாபம் சேதனத்துடன் இருக்கும் ஸகல பிராணிகளையும் துன்புறுத்தத்தான் செய்யும். 93.பூர்வகாலத்தில் தேவதேவர் விச்வேஸ்வரர் மந்த்ராசலத்திற்குச் சென்றிருந்தார். அச்சமயம் அவருக்கும் காசியின் வியோகத்தினாலே இந்த மாதிரி நிலீதான் ஏற்பட்டது. 94.சூலபாணி உடனே காசியின் நிலீமையை அறிவதற்காக முறையே, ப்ரம்மா, கேசவன், பூதகணங்கள், கணேசன் பாக்கி தேவதைகள் முதலானவர்களைக் காசிக்கு அனுப்பினார். 95அந்த எல்லா தேவதைகளும் அடிக்கடி காசியின் குண விசேஷங்களைப் பார்த்து ஆராய்ந்து இன்று வரை ஸ்திரமாக அங்கேயே தங்கி விட்டார்கள். உண்மையில் அது மாதிரி நகர் எங்குள்ளது? அத்யாயம்–5 155 96.இந்த வார்த்தையைக் கேட்டு பாக்யவானான அகஸ்தியர் பக்தியுடன் நமஸ்கரித்து மஹாலக்ஷ்மியிடம் கூறினார்- 97.நீங்கள் எனக்கு வரம் கொடுக்க விரும்பினீர்களானால் நானும் வரத்திற்குத் தகுதியுடையவனானால் எனக்குத் திரும்பவும் காசிவாஸம் கிடைக்கட்டும். அந்த வரத்தைத் தாருங்கள். 98.எவனோருவன் என்னால் துதிக்கப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைப் பக்தி பூர்வமாக ஸ்துதிக்கிறானோ அவனுக்கு ஒரு பொழுதும் ஸந்தாபம், தரித்ரம், 99.இஷ்டஜன வியோகம், ஸம்பத்துநாசம் இவைகள் ஏற்படக் கூடாது. எப்பொழுதும் எங்கும் அவனுக்கு ஜயம் உண்டாக வேண்டும். 100.வம்சச் தேசம் ஏற்படக்கூடாது. லக்ஷ்மி கூறினாள். ஹேமுனி ! நீ என்ன சொல்கிறாயோ அது நடக்கும். 101.இந்த ஸ்த்தோத்திரத்தைத் துதிப்பவர்கள் முன்னால் நானே ப்ரத்யக்ஷமாகிறேன். எந்த க்ருஹத்தில் இந்த ஸ்த்தோத்திரம் படிக்கப்படுகிறதோ அந்த இடத்தில் தரித்திரம் உள்ளே நுழையாது. யானை, குதிரை, பசு இவைகளின் சாந்திக்காகவும் இந்த ஸ்தோத்திரம் படிக்கப்பட வேண்டும். 102.இந்த ஸ்தோத்திரத்தை போஜபத்ரத்தில் எழுதி குழந்தைகளுக்குக் கட்டினால் பாலக்ரஹதோஷத்திற்கு சாந்தி ஏற்படும். அபவித்ரமானவர்களுக்கு இந்த ஸ்தோத்திரத்தைக் கொடுக்கக் கூடாது. 103.என்னுடைய இந்தக் கருவைப் போன்ற ரஹஸ்யத்தை மிகவும் ப்ரயத்தனத்துடன் ரக்ஷிக்க வேண்டும். ச்ரத்தை யற்றவர்களுக்கு இந்த (ரஹஸ்யத்தை) ஸ்தோத்திரத்தைக் கொடுக்கக் கூடாது. 156 காசீ காண்டம் 104.ஏ பிராம்மணோத்தமா! இதைக் கேள்; வருகிற 29வது த்வாபர யுகத்தில் நீ நிச்சயமாக வ்யாஸ பகவானாக ஆவாய். 105.அப்பொழுது வேதங்களை விபாகித்துப் புராண தர்ம சாஸ்திரங்களை உபதேசம் செய்து கொண்டு வாராணஸியை அடைந்து உன்னுடைய அபீஷ்ட ஸித்தியின் லாபத்தை நீ அடைவாய். 106.இப்பொழுது ஒரு ஹிதமான விஷயத்தைச் சொல்கிறேன். அதைச்செய்ய, இங்கிருந்து இன்னும் சற்று தூரம் முன்னேறிப் போவாயானால் அங்கு பகவான் கார்த்திகேயரை ஸந்திப்பாய். 107.ஏ ப்ரம்ம ஸ்வரூபரே, அங்கு ஷண்முகப்பிரபு சிவபிரானால் திருவாய் மலர்ந்தருளப்பட்ட வாராணசியின் ரஹஸ்யத்தைக் கேட்பாய். அதனால் உனக்கு ஸந்தோஷம் உண்டாகட்டும். 108.அகஸ்திய முனிவர் இந்தவிதமான வரத்தைப்பெற்று மஹாலக்ஷ்மியை வணங்கிவிட்டு எங்கு மயில் வாஹநர் குமாரஸ்வாமி வஸிக்கிறாரோ, அவ்விடத்தை நோக்கிப் பிரயாணம் ஆனார். இவ்விதம் ஸ்காந்த புராணம் நான்காவதான காசீகண்டம் பூர்வார்த்தத்தில் அகஸ்திய ப்ரஸ்தான வர்ணனம் என்ற ஐந்தாவது அத்யாயம் ஸம்பூர்ணம். அத்யாயம்–6 157 அத்யாயம் 6 வேதவ்யாஸர் கூறுகிறார் :- ஹே மஹாபாகரே, ஸூதரே! காதுக்கு இனிமையளிக்கும் கதையைக் கேளுங்கள். இதை மனதில் இருத்தி உலகில் மனிதர்கள் ஸமஸ்த புருஷார்த் தங்களையும் அடைகிறார்கள். 1. ஸஹதர்மிணியுடன் கூட அகஸ்திய முனிவர் மஹாலக்ஷ்மியின் தரிசனத்துக்குப் பிறகு அந்த ஆனந்தரூப அம்ருததாரா நதியில் ஸ்நானம் செய்து பரமானந்தம் அடைந்தார். 2. ஓ அக்னிகுண்டத்தில் பிறந்தவரே! நிர்மல ஹ்ருதயரே! சூதபுராதத்வத்தை அன்வேஷணம் செய்தவர்கள் கூறும் கதையைக் கேளுங்கள்- 3. எந்த ஸாதுக்களின் ஹ்ருதயத்தில் பரோபகாரம் விழித்தெழுகிறதோ அவர்களுடைய ஆபத்துக்கள் நசிக்கின்றன. நிமிஷத்துக்கு நிமிஷம் ஸம்பத்து விருத்தியாகிறது. 4. பரோபகாரச் செயல் தூய்மையான பலன் கிடைக்கிறது. அந்த சுத்தி தீர்த்த ஸ்நானத்தினால் கிடைக்காதது மிகுந்ததான தபஸ்ஸினாலும் கிடைக்காது. 5. பரோபகாரமான தர்மத்தையும் தானதபாதிகளினால் ஏற்படும் தர்மத்தையும் ப்ரம்மா தராசில் வைத்து நிறுத்த பரோபகார தர்மமே (தட்டு) தாழ்ந்தது. 6. ஸமஸ்த சாஸ்த்ரீய வாக்ஜாலங்களை கடைந்தெடுத்த பரோபகாரத்தைப் போன்ற பெரிய தர்மம் கிடையாது. பர அபகாரத்தைப் போன்ற பெரிய பாபமும் கிடையாது. 7. பார் உபகாரமே ஜீவநாடியாக விளங்கும் அகஸ்தியமுனிவர் இதற்கு உதாரணம். காசியைப் பிரிந்த துக்கமெங்கே? ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மி தரிசனம் எங்கே? 158 காசீ காண்டம் 8. வாழ்க்கையும் அதில் ஏற்படும் ஸுகபோக தனங்களும் யானையின் காதுகளின் நுனியைப் போல சஞ்சலமானவை. இதனால் புத்திமான்கள் பரோபகாரமே செய்ய வேண்டும். 9. மஹாலக்ஷ்மியின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் உலகில் மனுஷ்யர்கள் அளவிலா ஸம்பத்துகளை அடைகிறார்கள். அகஸ்திய முனி அதே மஹாலக்ஷ்மியை ப்ரத்யக்ஷமாகத் தரிசனம் செய்து க்ருதக்ருத்யர் ஆனார் என்றால் அது பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? 10.இதன் பிறகு அவர்கள் சுயேச்சையாக யாத்திரை செய்து கொண்டு வரும்போது தூரத்தில் வரும்போதே ஸ்ரீ சைலத்தைப் பார்த்தார்கள். அங்கு ஸாக்ஷாத் த்ரிபுராந்தகர் வாஸம் செய்கிறார். 11.சந்தோஷ சித்தராய் முனிவர் பத்தினியிடம் கூறினார்: காந்தே! நீ இங்கேயே சற்று நின்று மனோஹரமும் ஶோபையும் பொருந்திய 12.ஸ்ரீ சைலத்தின் சிகரத்தைப்பார். அதைத் தரிசனம் செய்தவர்களுக்குப் புனர்ஜன்மம் கிடையாது. 13.இந்தப் பர்வதம் இருபத்துநாலு யோஜனை விஸ்தாரம், இந்தப் பர்வதமே சிவலிங்கமயம். அதனால் இதைப் பிரதக்ஷிணம் செய்ய வேண்டும். 14.இதைக் கேட்டதும் லோபாமுத்ரை கூறினாள்- ஹேநாதா! நீங்கள் உத்தரவு தந்தால் நான் ஒன்று கேட்கிறேன். பதியின் உத்தரவு இல்லாமல் பேசும் பெண் பதிதையாகிறாள். 15.அகஸ்திய முனி கேட்கிறார்- தேவீ! என்ன சொல்ல விரும்புகிறாய்? தயக்கமில்லாமல் கேள். உன்னைப் போன்ற பெண்களின் வார்த்தையினால் பதிக்கு வருத்தம் ஏற்படாது. அதன்பிறகு, 16.லோபாமுத்ராதேவி முனிவரை வணங்கி எல்லோருக்கும் ஹிதத்தைக் கொடுக்கக்கூடியதும் மன அத்யாயம்–6 159 சஞ்சலத்தைப் போக்கக் கூடியதுமான கேள்வியைக் கேட்டாள். 17.லோபாமுத்ரை கூறுவாள்- ஸ்ரீ சைல சிகரத்தைத் தரிசனம் செய்வதால் புனர் ஜன்மம் கிடையாது என்பது உண்மையானால் காசி வாஸத்தை ஏன் விரும்ப வேண்டும்? 18.அகஸ்தியர் கூறுகிறார்: ஹே ஸுந்தரீ! நீ சரியான கேள்வியைக் கேட்டாய். ஹே நிர்மலே! இந்த விஷயத்தில் தத்துவ சிந்தனம் செய்யும் முனிவர்கள் அடிக்கடி எந்த முடிவைக் கூறுகிறார்களோ அந்த முடிவைக் கேள். 19.முக்தி க்ஷேத்ரங்கள் அநேகம் இருக்கின்றன. அவைகள் விஷயமாக முனிவர்கள் ஸ்திரப்படுத்திவைத்த உண்மைகளெல்லாம் நான் சொல்கிறேன். மனம் ஒன்றிக் கேள். 20.முதலாவது ப்ரம்மப் பிரஸித்தமான தீர்த்த ராஜ விரும்புவதைக் கொடுக்கும் தர்ம அர்த்த காம மோக்ஷதாதா. 21. நைமிசாரண்யம், குருக்ஷேத்ரம், ஹரித்வாரம், அவந்தி, அயோத்யா, மதுரா, த்வாரகை, கங்கா 22.ஸரஸ்வதி, ஸிந்து நதி ஸங்கமம், கங்காஸாகர ஸங்கமம், காஞ்சி, ப்ரம்மபுரி, ஸப்த கோதாவரி, 23.காலஞ்சர், பிரபாஸ், பதரிகாஸ்ரமம் மஹாலயம், அமரகண்டகம், ஜகந்நாத். 24.கோகர்ணம், ப்ருகு கச்சம், ப்ருது துங்கம், புஷ்கரம், ஸ்ரீ பர்வதம், தாராதீர்த்தம் இவைகள் பாஹ்யதீர்த்தங்கள். 25.ஸத்யம் முதலானவைகள் மானஸ தீர்த்தங்கள். ஏ! ப்ரியே! இந்தத் தீர்த்தங்கள் மோக்ஷத்தைக் கொடுக்க வல்லவை. 160 காசீ காண்டம் 26.சாஸ்திரமே கயையைப் பற்றிக் கூறியிருக்கிறது. அங்கு ச்ராத்தம் செய்தால் பித்ருக்களுக்குத் திருப்தியேற்படும். பிதா, பிதாமஹர்களுடைய ருணத்திலிருந்து அவர்களுடைய புத்திர பௌத்திரர்கள் விடுபடுவார்கள். ரிஷிபத்னி கூறுவாள்: 27.ஸத்யம் முதலிய மானஸ தீர்த்தம் என்றீர்களே அவை எவை? அவைகளையும் தயை செய்து கூறவும். 28.ஏ பாவமற்றவளே! எல்லா மானஸ தீர்த்தங்களையும் கூறுகிறேன் கேள். அவைகளில் ஸ்நானம் செய்தால் நரர்கள் மோஹமடைவார்கள். பரமகதி கிடைக்கும். 29.ஸத்யம், பொறுமை, இந்திரிய நிக்ரஹம் பிராணிகளிடத்தில் தயை, நிர்மல உள்ளம், நன்னடத்தை, தானம், சந்தோஷம், ப்ரம்மசர்யம், இனியபேச்சு, ஞானம், தைர்யம், தபஸ் இவைகள் ஒவ்வொன்றும் தீர்த்தங்கள். மனஸ் சுத்தி இந்தத் தீர்த்தங்களுக்கு மேலான தீர்த்தம். 30-33.கேவலம் ஜலத்தில் மூழ்குவது மாத்திரம் ஸ்நானம் அல்ல. பாஹ்யேந்த்ரியங்களை அடக்குவது என்ற ஸ்நானமே உண்மையில் ஸ்நானமாகும். எவனுடைய ஹ்ருதயம் நிர்மலமாக இருக்குமோ அவனே பவித்ரன். லோபி, பரநிந்தை செய்பவன், கொடூரமனமுள்ளவன், டம்பன், காமுகன் இவர்கள் எல்லாத் தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்தாலும் மலினமானவன்தான். 34-36.மனிதன் சரீரத்திலுள்ள அழுக்கைப் போக்கினால் மட்டும் சுத்தமாக மாட்டான். மன மாசு விளக்குபவன்தான் யதார்த்தத்தில் சுத்தனாவான். அட்டைகள் ஜலத்திலேயே பிறக்கின்றன. அங்கேயே சாகின்றன. அவைகள் ஸ்வர்கத்திற்கும் போவதில்லீ. அவைகளுக்கு சித்தசுத்தி இருக்கிறது என்று கூறமுடியுமா? விஷய போகங்களில் இருந்து நிர்மலமான மனதே சுத்த மனம். அத்யாயம்–6 161 37.சித்தம் என்பது நமது அந்தரங்கப் பொருள். அது கெட்டு விட்டால் தீர்த்தஸ்னானங்களினால் சுத்தமாகாது. நூறு முறை அலம்பினாலும் மதுக்குடம் எப்போதுமே அசுத்தமாக இருப்பது போல், 38.தானம், யக்ஞம்; தபஸ், சுத்தி, தீர்த்தயாத்திரை, தர்ம புராணங்களைக் கேட்டால் இவைகளெல்லாம் மனோபாவம் சுத்தமாக இல்லீயானால் தீர்த்தங்களினால் என்ன பலன்? 39.ஜிதேந்த்ரியனான புருஷன் ஒருவன் எங்கிருந்தாலும் அங்கேயே அவனுக்கு ஒரு க்ஷேத்ரமாகிறது, நைமிசாரண்யம், புஷ்கரம் எல்லாம் கிடைத்த மாதிரியே. 40.த்யானத்தினால் பவித்ரமாகி ராகத்வேஷமலத்தைத் தூர விலக்கிவிட்டு ஞானஜலம் நிரம்பிய மானஸ தீர்த்தத்தில் எவன் ஸ்நானம் செய்கிறானோ அவனே பரமகதியை அடைகிறான். 41.ஹே தேவி! நான் உன்னிடம் இந்த எல்லா மானஸ தீர்த்தங்களின் மகிமைகளையும் பற்றிக் கூறினேன். இப்பொழுது பூமியில் இருக்கும் தீர்த்தங்களின் மகிமைகளைப்பற்றிக் கூறுகிறேன் கேள். 42.சரீரத்தில் சில சில அங்கங்கள் பவித்ரமாக இருப்பது போல பூமியிலும் சிலசில இடங்கள் புண்ணியமானவைகள். 43.பூமியினுடைய விசித்ரப்ரபாவம் ஜலத்தினுடைய வேகம், முனிவர்கள் வசித்த இடமே, புண்ணிய தீர்த்தங்களின் மகிமைக்குக் காரணம். 44.அதனால் எவனோருவன் மானஸ தீர்த்தத்திலும், பூமியிலுள்ள இந்தப் புண்ணிய தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்கிறானோ, அவன் பரம உத்தம கதியை அடைகிறான். 45.எந்த மனிதன் மூன்று இரவு உபவாஸம் இருக்கும் விரதம், தீர்த்த யாத்திரை, ஸ்வர்ண தானம், கோதானம் 162 காசீ காண்டம் இவைகளைச் செய்யவில்லùயா, அவன் அடுத்த ஜன்மத்தில் தரித்ரன் ஆகிறான். 46.தீர்த்த ஸேவனத்தினால் என்ன பலன் கிடைக்குமோ, அதுபோல் பலன் அக்னிஷ்டோமாதி யக்ஞங்கள் செய்யினும் கிடைப்பதில்லீ. 47.எவனுடைய மனம், கை, கால்கள் நியமத்துடன் இருக்கின்றனவோ, எவன் வித்தை, தபஸ், கீர்த்தி இவைகளுடன் கூடியவனாக இருக்கிறானோ, அவன் தீர்த்தயாத்திரை செய்தால் அதன் பலனை அனுபவிக்கிறான். 48.எவன் தானம் வாங்கவில்லீயோ, எந்த வேளையிலும் ஸந்தோஷமாக இருக்கிறானோ, அஹங்காரம் இல்லாமல் இருக்கிறானோ, அவன் தீர்த்த பலனை அடைகிறான். 49.எவன் ஜம்பம் இல்லாமலும்; கர்ம ப்ரவ்ருத்தியில்லாமலும் அரைவயிற்று உணவிலும் திருப்தியாக இருக்கிறவனும் ஸம்பூர்ண ஸங்கங்களிலிருந்து விலகியிருக்கிறானோ, அவன் தீர்த்த யாத்திரை பலனையனுபவிக்கிறான். 50.கோபம் இல்லாதவன் நிர்மலபுத்தியுள்ளவன் உண்மை பேசுபவன்; த்ருடவ்ருதன், தங்களைப் போலவே பிராணிகளையும் த்ருடபுத்தியுடன் நோக்குகிறவன் எவனோ அவன் தீர்த்த பலனை அணுபவிக்கிறான். 51.தீரத்தன்மையுடனும், சிரத்தை,ஏகாக்ரசித்தம் இவைகளுடன் எவன் தீர்த்தாடனம் செய்கிறானோ அவன் பாபியானாலும் சுத்தனாகிறான். அப்படியிருக்கும் புண்ணியவானைப் பற்றி என்ன சொல்லவிருக்கிறது? 52.தீர்த்தாடனம் செய்பவன் பசு, பக்ஷி இவைகளாகப் பிறக்க மாட்டான். துக்கப்படவும் மாட்டான். ஆனால் ஸ்வர்கம் மோக்ஷம் இவைகளை அடைகிறான். அத்யாயம்–6 163 53.சிரத்தையில்லாதவன், இயற்கையாகவே பாபம் செய்பவன், நாஸ்திகன், ஸந்தேஹி, சாக்கு சொல்பவர்கள் தீர்த்த புண்ணிய பாகியாக மாட்டார்கள். 54.எவன் சீதம், உஷ்ணம் ஸுகம், துக்கம் ஆதி இரட்டைகளை ஸஹித்துக் கொண்டு உசிதமான விதியுடன் தீர்த்த யாத்திரை செய்கிறானோ அந்த தீரன் ஸ்வர்க லோகத்தையடைகிறான். 55. தீர்த்தயாத்திரை செய்ய விரும்பும் மனிதன் முதல் நாள் க்ருஹத்தில் உபவாஸம் இருக்க வேண்டும். பிறகு 56.கணேச பூஜை, பித்ரு சிராத்தம், ப்ராம்மண போஜனம், ஸாதுக்கள் சேவை, இவைகளை முடிந்த மட்டிலும் செய்யவேண்டும். பிறகு பாரணை செய்துவிட்டு நியமத்துடன் த்ருடசித்தத்துடன் யாத்திரை செய்யவேண்டும், திரும்பி வந்ததும் சிராத்தம் செய்ய வேண்டும். அப்பொழுது தீர்த்தயாத்திரையினுடைய ஸம்பூர்ண பலனும் கிடைக்கிறது. 57.தீர்த்த யாத்திரை ஸமயம் பிராம்மணர்களை பரீக்ஷிக்கக் கூடாது. அன்னத்தை விரும்புகிறவனுக்கு உணவு அளிக்க வேண்டும். ஸத்துமா, கஞ்சி இவைகள் இல்லாமல் அன்னம், பாயஸம், திரட்டுப் பால் இவைகளால் பிண்டதானம் செய்யவேண்டும். வெல்லம் எள்ளுருண்டையின் பிண்டதானம் ரிஷிகளுக்கு உகந்தது. 58.தீர்த்தத்தில் அர்க்யம் ஆவாஹனம் இல்லாமல் சிராத்தம் நிச்சயம் செய்யவேண்டும். 59.சாஸ்திரம் விதித்த நேரமோ, காலம் இல்லாதகாலமோ தீர்த்தஸ்தானத்தில் சென்ற போதிலும் ச்ராத்தம் தர்பணம் முதலியவைகள் செய்யவேண்டும். 60.எந்த பிரயோஜனத்தினாலும் தீர்த்த ஸ்தானத்திற்குப் சென்று தீர்த்த ஸ்னானம் செய்து கொண்டால் ஸ்னானம் செய்த பலன் கிடைக்கும். 164 காசீ காண்டம் 61.ஆனால் தீர்த்தியாத்திரையில் பலன் கிடைக்காது; தீர்த்த யாத்திரையில் பாபிகளுக்கும் பலன் ஏற்படும்; அப்படியிருக்க சிரத்தையுடன் தீர்த்த யாத்திரை செய்பவனுக்கு பலன் கிடைத்தே தீரும். 62.எவன் பிறருக்காக தீர்த்தஸ்தானத்திற்குப் போகிறானோ அவன் பதினாறில் ஒருபங்கு புண்ணியம் பெறுகிறான். எவன் ஏதாவது நிமித்தமாகப் போகிறானோ அவனுக்கு பாதிபலன் கிடைக்கிறது. 63.தர்ப்பையினால் பிரதிமூர்த்திசெய்து தீர்த்தஸ்தானத்து ஜலத்தினால் நீராட்டினாலும், அவனுக்கு ஒரு பங்கு பலன் கிடைக்கிறது. 64.தீர்த்தத்தில் சென்று உபவாசம் முண்டனம் செய்ய வேண்டும். ஏனென்றால் முண்டனத்தினால், சிரஸினால் செய்த பாபங்கள் சென்றுவிடும். 65.எந்த தினம் தீர்த்த ஸ்தானத்தில் போய் சேர வேண்டுமோ அதற்கு முதல்நாளே உபவாசம் இருந்து ச்ரார்த்தம் செய்ய வேண்டும். 66. தீர்த்தத்தைப் பற்றிச் சொல்லும்போதே தீர்த்த யாத்ரையில் சரீரத்தால் செய்யும் கார்யங்களைப்பற்றி முன்னாலேயே உனக்குக் கூறியிருக்கிறேன். அதே ஸ்வர்க்க ஸாதனம் மோக்ஷத்திற்கு உபாயம். 67.காசீ, காஞ்சீ, மாயாபுரி, அயோத்யா, த்வாரவதீ மதுரா, அவந்திகா, இந்த ஏழு ஊர்களும் உலகில் மோக்ஷம் தரவல்லன. 68.மேலும் ஸ்ரீ சைலம் மோக்ஷத்தைக் கொடுக்கவல்லது. கேதாரக்ஷேத்ரம் அதைவிட அதிகம். ஸ்ரீ சைலம், கேதாரம் இவைகளைவிட பிரயாகை அதிக முக்தி அளிக்கவல்லது. 69.தீர்த்தராஜ் ப்ரயாகையை விட காசியாகிய அவிமுக்த க்ஷேத்ரம் அதிகம் பலனைத் தரக்கூடியது. அத்யாயம்–6 165 அப்படியே ஸாயுஜ்யம் முதலிய முக்தி அவிமுக்த க்ஷேத்ரத்தில்தான் கிடைக்கும். வேறு எங்கும் இல்லீ இது நிச்சயம். 70.அந்நிய முக்தி க்ஷேத்ரங்களைவிட காசி, பிராப்தியைத்தரும். காசி கிடைத்தால் தான் நிர்வாணபதம் கிடைக்கும். அல்லாமல் கோடிதீர்த்தங்களை ஸேவித்தாலும் நிர்வாணபதம் கிடையாது. 71.இந்த விஷயமாய் விஷ்ணுவின் தூதர்கள் சிவசர்மா எனும் பிராம்மணருக்குக் கூறினார்கள். ஒரு பழமையான இதிஹாஸத்தைக் கூறுகிறேன். 72.எவனோருவன் இந்தத் தீர்த்த அத்யாயத்தை கவனமான மனதுடன் கேட்கிறானோ, அல்லது ச்ரத்தா பக்தியுடன்கூடிய ப்ராம்மணருக்கோ; தர்ம சீலனான க்ஷத்ரியனுக்கோ, ஸத்ய வழி செல்லும்வைச்யனுக்கோ, த்விஜாதி பக்த ப்ராம்மணனிடமோ க்ஷத்ரியனிடமோ பக்தியுள்ள சூத்திரனுக்கோ சொல்லுகிறானோ அவனுடைய பாபங்கள் அகன்று விடுகின்றன. 73.இந்த விதமாக லோபாமுத்ரைக்கு அகஸ்தியர் கூறத் தொடங்கினார், இவ்விதம் ஸ்ரீஸ்காந்த புராணத்தில் நான்காவதான காசீ கண்டம் பூர்வார்த்த பாஷாடீகாவான தீர்த்தயாத்திரை வர்ணனம் என்னும் ஆறாவது அத்யாயம் ஸம்பூர்ணம். 166 காசீ காண்டம் அத்தியாயம் 7 அகஸ்திய முனிவர் கூறுகிறார்: மதுராபுரியில் ப்ராம்மணோத்தமரான ஒரு பிராம்மணன் இருந்தார். அவருக்கு மஹா தேஜஸ்வியான சிவசர்மா என்று ஒரு புத்திரர் இருந்தார். 1. வேத அத்யாயனம் செய்து, அதன் தத்வார்த்தத்தை அறிந்து, தர்ம சாஸ்திரங்களைப் படித்து 2. புராணங்களை அறிந்து வேதத்தின் ஆ று அங்கங்களையும் அத்யாயனம் பண்ணி, தர்க்க சாஸ்திரத்தையும் அறிந்து, பூர்வம், உத்தரம் மீமாம்ஸாதிகளை ஆரார்ய்ந்து. 3. தனுர் வேதத்தில் தேர்ந்து ஆயுர் வேதத்தில் விசாரம் செய்து, கந்தர்வ வேதமான நாட்டிய வேதத்தில் பரிச்ரமித்து அநேக அர்த்த சாஸ்திரங்களையறிந்து - யானை, குதிரைகளைப் பற்றி அனுபவ பூர்வமாக ஆராய்ந்து, 4. அறுபத்தி நான்கு கலீகளிலும் நிபுணத்வம் வாய்ந்து மந்திர சாஸ்திரத்தில் விலக்ஷணமாகத் தேர்ந்து, அநேக தேச பாஷைகளில் நிபுணனாய் அநேக தேசத்து இலக்கிய ஞானங்கள் ஸம்பாதித்து விட்டு, பிறகு, 5. தர்ம பூர்வமாக பணம் ஸம்பாதித்து அநேக போகங்களை அனுபவித்தான். பிறகு, அழகும், குணமும் உள்ள புத்திரர்களைப் பெற்று அவர்களுக்கு ஸம்பத்துகளை பங்கிட்டுக் கொடுத்து விட்டு, 6. பின் யௌவனத்திற்குள்ள நிலீயில்லாமையை எண்ணி உலகப் பிரசித்தமான காதுகளின் அருகில் இருக்கும் கேசம் நரைத்து கிழத்தன்மை வெளிப்படுவதைப் பார்த்து பிராமணோத்தமனான சிவசர்மா மிகவும் சிந்தாகுலனானான். 7. ஐயோ! ஐயோ! படித்துப் படித்து பணம் சம்பாதித்து எனது காலம் கழிந்துவிட்டதே, ஆனால் கர்மக்ஷயம் செய்யும் மஹேஸ்வரனை ஆராதிக்கவில்லீயே. அத்யாயம்–7 167 8. எல்லா பாபங்களையும் நசிப்பிக்கும் ஸர்வவ்யாபி ஹரியையும் நான் ஸந்தோஷப்படுத்தவில்லீயே. மனுஷ்யன், மனுஷ்யர்களுடைய எல்லாக் காமங்களையும் அளிக்கின்ற கணேசனையும் நாம் பூஜை செய்யவில்லீயே. 9. அந்தகார ஸமூஹத்தை விநாசம் செய்யும் ஸூர்யனையும் நான் அர்ச்சிக்கவில்லீயே. ஸம்ஸார பந்த விமோசினி மஹா மாயையான ஜகத்தாத்ரியையும் நான் த்யானிக்கவில்லீயே. 10. செழிப்பைத் தரும் தேவதா கணங்களையும் ஸமஸ்த யக்ஞங்களின் மூலமாக த்ருப்திப்படுத்தவுமில்லயே. பாவங்களின் சாந்திக்காகத் துளசி வனத்தையும் ஸேவிக்கவில்லீயே. 11.இங்கு பரலோகத்திலும் ஏற்படும் ஆபத்துகளையெல்லாம் கடக்கக் கைதூக்கிவிடும் பிராம்மணர்களுக்கு அறுசுவையுணவளித்து ஸந்தோஷப்படுத்தவில்லீயே. 12. பாதை ஓரங்களில் புஷ்பங்களும் பழங்களும் மிகுந்திருக்கும் வழுவழுப்பான இலீகளின் தளிர்களையுள்ள நல்ல நிழலீத் தருகிற மரங்களையும் வரிசையாக நடவில்லயே. அவைகள் இந்த லோகத்திலும் அந்த லோகத்திலும் மிகப் பலன்களைத் தருகின்றன. 13. இவ்வுலகிலும், பர உலகிலும் அழகான வாழ்வையளிக்கிறது. கன்னிகைகள், ஸுமங்கலிகளுக்கு அவரவர் மனதுக்குகந்தபடி வஸ்த்ரங்கள், ரவிக்கைகள் இவையளித்து ஒவ்வொரு அங்கங்களையும் ஆபரணத்தினால் அலங்கரிக்கவில்லீயே. 14. நான் யம லோகத்தைப் போக்கடிக்கும் செழிப்பான நிலங்களை 15. பிராம்மணனுக்கு தானம் செய்யவில்லயே. பரம பாப ஹாரி ஸ்வர்ணமும் பிராம்மணோத்தமர்களுக்கு அளிக்கவில்லீயே. 168 காசீ காண்டம் 16. இந்த ஜன்மத்தில் சீக்கிரத்தில் பாபத்தைப் போக்கக் கூடிய ஏழு ஜென்மம் வரை ஸுகத்தை அளிக்கக்கூடிய அலங்கரிக்கப் பட்ட கன்றுகளோடு கூடிய பசுக்களை ஸத்பாத்திரங்களுக்கு அர்ப்பணிக்கவில்லயே. பிறகு மாதாவின் கடனிலிருந்து விடுபடக் கிணறு குளங்களை வெட்டவில்லீயே. ஸ்வர்க்க மார்கங்களைக் காட்டும் அதிதிகளுக்கு சந்தோஷம் அளிக்கக்கூடிய ஸாதனங்களைக் கொடுக்கவில்லீயே. 17. நான் யமபுரி யாத்திரையிலிருந்து ஸ்வர்க்கமார்கம் திரும்புவதற்கு நிழலளிக்கும் குடையையும், மிதியடிகளும், கமண்டலங்கலும் யாத்திரை செய்தவர்களுக்கு தானம் செய்யவில்லயே? 18. இங்கு ஸுகம் அடையும் பொருட்டும் பரலோகத்தில் ஸ்வர்க்க கதிகளையடையும் பொருட்டும் பெண்களின் விவாகத்திற்கான தனம் அர்ப்பணித்தது கிடையாது. 19. இரு உலகங்களிலும் ருசியான அன்னபானத்தையளிக்கக் கூடிய வாஜபேயயக்ஞத்தைச் செய்து, அவப்ருத ஸ்நானமும் லோபவசத்தால் பண்ணாமல் போனேன். 20. எந்த ஓர் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தால் ஓர் உலகத்தையே ஸ்தாபனம் செய்த பலன் கிடைக்குமோ அந்த லிங்கத்தை நான் தேவாலயம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்யவுமில்லீயே. 21. ஸகல ஸம்பத்தும் அருளும் விஷ்ணுவின் கோவிலும் கட்டவில்லீ. சூரியன் கணேசன் இவர்களது ப்ரதிமையும் நிர்மாணிக்க வில்லீ. 22. அந்த மூர்த்திகளை நிர்மாணித்தால் அவலக்ஷணம், துர் பாக்யம் நம் அருகே அண்டாது. அப்படிப்பட்ட பார்வதி மஹா லக்ஷ்மியின் சித்திரங்களையும் வரைந்ததில்லீயே. அத்யாயம்–7 169 23. பிராம்மணர்களுக்கு திவ்ய வஸ்த்ரங்கள் கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தினால் அதி சூக்ஷ்ம பிரகாசமான மெல்லிய விசித்ரமான வஸ்த்ரங்களையும் தானம் பண்ணவில்லீயே. 24. எல்லா பாபங்களும் க்ஷயமாகும் பொருட்டுஜ்வாலீவிட்டு எரியும் அக்னியில் மந்த்ரம் ஜபித்து பவித்ரமான தேனுடன் கலந்த எள்ளை ஹோமம் செய்யவில்லீயே. 25. ஸ்ரீ ஸூக்தம், பாபமானி மந்த்ரம், ப்ராம்மண மந்த்ரம், மண்டல மந்த்ரம், (புருஷ - ஸூக்தம்) சதருத்ரம், ஆகிய பாபத்தை நாசம் செய்யக்கூடிய வேத மந்த்ரங்களை க்ருஹஸ்த பிராமணனாக இருந்தும் ஜபிக்கவில்லீயே. 26. ரவி வாரம், சுக்ரவாரம், த்ரயோதசி, ராத்திரிவேளை, இவைகளைத் தவிர்த்து ஸர்வபாப நாசினியான அச்வத்த வ்ருக்ஷத்தை ப்ரதக்ஷிணம் செய்யவில்லீ. 27. மிகவும் செழிப்பைத் தரக்கூடிய மிருதுவான விரிப்பு, கொசுவலீ, கண்ணாடி படுப்பதற்கான படுக்கையும் தானம் செய்யவில்லீ. 28. வெள்ளாடு, குதிரை, எருமை, செம்மறியாடு, தாதி, கறுப்பு மான்தோல், எள், தயிருடன் கூடின சத்துமா, ஜலம் நிறைந்தகுடம், ஆஸனம், மெதுவான பாதுகை, 29. பாத ரக்ஷை, விசேஷ தீபஹாரத்தி, தண்ணீர் பந்தல்கள், விசிறி, வஸ்த்ரம், தாம்பூலம், வேறு வாஸனை திவ்ய பதார்த்தங்கள், 30. நித்ய ச்ராத்தம் பூதபலி, அதிதி பூஜை இவைகள், அந்நிய உத்தமதானங்கள், பல வேறு திவ்ய தானங்கள், கர்மானுஷ்டானங்கள், தேவதை பிராம்மண பூஜை நமஸ்காரங்களால் சந்தோஷமடைந்து, பாராயணம் செய்த பிறகு யாத்திரை செய்யவில்லீ. இவைகளைச் செய்த புண்யவான்கள் - யமபுரிப்ரவேசனம், யம தூதர்களைக் 170 காசீ காண்டம் காண்பது, யமயாதனை இவைகளையனுபவிக்க மாட்டார்கள். என்னால் இவைகள் ஒன்றும் செய்ய முடியவில்லீ. 31-32. க்ருச்ரம், சாந்த்ராயணம், நக்த வ்ரதம் முதலியவைகளான சரீரசுத்தி செய்யும் வ்ரதங்களையும் ஒரு பொழுதும் அனுஷ்டிக்கவில்லீ. 33. நான் தினமும் பசுக்களுக்கு கவளம் கொடுக்கவில்லீ. பசுக்களைத் தடவியும் கொடுக்கவில்லீ. கோலோகத்தில் ஸுகம் கொடுக்கும் பசுக்களை சகதியிலிருந்து விடுவிக்கவுமில்லீ. 34. பிராத்தனை செய்தும் பணம் கொடுத்துப்பணக் கஷ்டம் உடையவர்களை க்ருதார்த்தர்களாக்கவில்லீயானால் மறு ஜன்மத்தில் கொடு, கொடு என்று பிதற்றும் தீனபிக்ஷுவாக ஆகிவிடுவேன். 35. வேதம், சாஸ்திரம், தனம், ஸம்பத், ஸ்த்ரீ, புத்ரன், வீடு, மாளிகை ஒன்றும் பரலோக யாத்திரையில் எனது உற்ற துணையாகாது. 36. சிவசர்மா இந்த விதமாகச் சிந்தனை செய்து எல்லா விஷயங்களிலிருந்தும் புத்தியைத் திருப்பி ஏகாக்ர சித்தத்துடன் என்ன நிச்சயம் செய்தார் என்றால், இதே காரணத்தினால்தான் எனக்கு மங்களமுண்டாகும்:- 37. எதுவரை எனது சரீரம் நன்றாக இருக்கிறதோ எதுவரை இந்த்ரியங்கள் வலுவை இழக்கவில்லீயோ அதுவரை மங்களம் தரும் ஜடரூபமான தீர்த்தயாத்திரையை மேற்கொள்வேன். 38. அந்த அறிவாளியான பிராம்மணன் இவ்வாறு யோசித்து ஐந்தாறு தினங்கள் வீட்டில் இருந்துவிட்டு சுபதிதி, சுப வாரம், சுப லக்னத்தில் யாத்திரைக்கு பரஸ்தானம் ஆனான். 39. தீர்த்தாடனத்தில் நியாயபூர்வமாக வியவகாரம் செய்யும் எல்லா பிராணிகளுக்கும் முக்திக்குச் செல்லும் அத்யாயம்–7 171 ஏணிப்படி தீர்த்த யாத்திரையாகும். இப்படி முன்பே நிச்சயம் செய்து கொண்டு யாத்திரைக்கு முன்னால் ஒரு ராத்திரி உபவாசம் ஆக இருந்து காலீயில் ச்ராத்தம் செய்து கணேசர் முதலிய தேவதைகள், பிராம்மணர்கள் இவர்களைப் பூஜித்து நமஸ்கரித்து ஸந்தோஷப்படுத்தி யாத்திரை கிளம்பினான். 40,41. பிறகு கொஞ்சம் தூரம் சென்ற பிறகு ஒரு முஹூர்த்த நேரம் இளைப்பாறிவிட்டு அந்த பிராம்மணன் எண்ணத் தொடங்கினான். முதலாவது எங்கு செல்வது? 42. உலகில் அநேகத் தீர்த்தங்கள் இருக்கின்றன. மனிதனுடைய ஆயுளோ நிலீயில்லாதது. மனது மிகவும் சஞ்சலமானது; அதனால் முதலில் ஸப்தபுரி யாத்திரையை முடித்துக் கொள்வோம். ஏனென்றால் அங்கு எல்லா தீர்த்தங்களும் இருக்கின்றன. 43. இப்படியெண்ணி சிவசர்மா அயோத்யைக்குச் சென்று ஸ்னானம் செய்தான். ஒவ்வொருத் தீர்த்தத்திலும் ஸ்நானம், பிண்டதானம் முதலியவைகள் செய்துவிட்டு, 44. ஐந்து ராத்திரி அங்கு வஸித்துவிட்டு, பிராம்மண போஜனம் முதலிய கர்மங்கள் செய்து விட்டு, ஸந்தோஷமான மனமுடைவனாகி தீர்த்தராஜ் ப்ரயாகைக்கு வந்தான். 45. மாகஸ்னானத்திற்கு விரும்பி முதலாவது தீர்த்தராஜ்ஜுக்கு செல்லாமல் அயோத்தியாவிற்குச் சென்றான், பிறகு பிரயாகை சென்றான், எங்கு தேவதைகள் (ஸிதா, அஸிதா) கங்கை, யமுனை என்ற இரு நதிகளும் இருக்கின்றதோ அங்கு ஸ்னானம் செய்து பரப்ரம்மத்தை மனிதன் அடைகிறான். 46. அந்த ப்ரஜாபதியின் க்ஷேத்ரம் எல்லாருக்கும் கிடைப்பதரிது. பரம புண்ணியக்குவியல்களால் தான் கிடைக்கிறது. நிறை பணம் செலவழித்தாலும் தீர்த்தராஜருடைய ஸமாகமம் கிடைக்காது. 172 காசீ காண்டம் 47. கலி காலன் இருவரையும் அடக்கிவிட்டு சுபத்தைக் கொடுக்கும் காளிந்திபுத்ரி யமுனையுடன் பரம புண்ய ஜலாஸ்வர்க்கத்தரங்கிணியாகிற கங்கை வந்து சேருகிறது. 48. ஸமஸ்த யாகங்களால் நிரம்பியிருப்பதனால்தான் அதற்குப் பிரயாகை எனப்பெயர் வந்தது. அந்த ப்ரயாகைத் தீர்த்தத்தில் ஸ்னானமாகிய யக்ஞத்தைச் செய்தவர்களுக்குப் புனர் ஜன்மம் கிடையாது. 49. அங்கு அதிஷ்டான தேவதை சூலடங்கேஸ்வரர். அங்கு ஸ்நானம் செய்பவர்களுக்கு அவரே நேரில் வந்து மோக்ஷ மார்க்கத்துக்கு உபதேசம் செய்கிறார். 50. அங்கு அக்ஷய வடமும் இருக்கிறது.அதன் வேர் ஸப்த பாதாளம் வரை செல்கிறது. பிரளய காலத்தில் கூட அதை ஆதாரமாகப் பற்றி மார்க்கண்டேயர் ஜீவித்திருக்கிறார். 51.அதை, வடவ்ருக்ஷ ரூபத்தை ஹிரண்ய கர்பர் என்ற பெயருடைய (ப்ரும்மா) என்று கூறவேண்டும். அதன் சமீபத்தில் பிராம்மண போஜனம் பண்ணினால் அக்ஷயமான புண்ணிய பலன் கிடைக்கும். 52.அங்கு ஸாக்ஷாத் லக்ஷ்மீபதியான விஷ்ணு வைகுண்டத்தில் இருந்து வந்து மனிதர்களுக்கு வேணீமாதவஸ்வரூபத்துடன் பரமபதம் அளிக்கிறார். 53. இந்த ப்ரயாகையின் ஸம்பந்தமாய் வேதங்கள்கூடக் கூறுகிறது; (ஸிதாஸித்) (யமுனை - கங்கை) இரண்டு நதிகளும் எங்கு சேருகின்றனவோ அங்கு ஸ்நானம் செய்தால் நிச்சயமாக அம்ருதபதம் கிடைக்கும் என்று. 54. சிவலோகம், ப்ரம்மலோகம், தர்மலோகம், உமாலோகம், குமாரலோகம், வைகுண்டலோகம், ஸத்யலோகம், தபோலோகம், ஜனலோகம், மஹர்லோகம், ஸ்வர்கலோகம், புவர்லோகம், பூலோகம் அத்யாயம்–7 173 இவைகள் கிடைகின்றன. மேலும் நாகலோகம் அதிகம் கூறவேண்டாம். ஸமஸ்த ப்ரம்மாண்டத்திலும் நான்கு திக்குகளிலிருந்து ப்ரத்யேக புவன வாஸிகள், ஹிமாலயம் முதலான பர்வதங்கள், கல்பவ்ருஷங்கள் மாகமாஸத்தில் அருணோதய காலத்தில் ஸ்னானம் செய்வதற்காக ப்ரயாகைக்கு வருகின்றன. 55,56,57. திக்குகள் என்னும் கணங்கள் ப்ரயாகைக்ஷேத்ரத்தில் வீசும் வாயுவைக்கூட பிரார்த்திக்கின்றன. ஹே!வாயு பகவானே! நீ வந்து எங்களையெல்லாம் பவித்ரமாக்குவாயா; என்ன செய்வது? நாங்களோ முடமானவர்கள். 58. அச்வமேத யக்ஞத்தையும் ப்ரயாகைப் புழுதியையும் ஒரு ஸமயம் ப்ரம்மா நிறுத்துப் பார்த்தார். ஆனால் அந்த எல்லா யக்ஞங்களும் ப்ரயாகை தூளிக்கு ஸம எடையாகவில்லீ. 59. அநேக ஜன்மங்களாக ஸஞ்சிதமாகிய அஸ்தியின் உள்ளுக்குள் இருக்கும் பாப புஞ்சம் கூட ப்ரயாகையின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே மிகவும் கலவரமடைந்து நாசமடைகின்றன. 60. இந்த ப்ரயாகையே தர்ம தீர்த்தம், அர்த்ததீர்த்தம், காமதீர்த்தம், மோக்ஷதீர்த்தம். இது விஷயமாக ஸந்தேஹமில்லீ. 61. ப்ரம்மஹத்யாதி பாபங்களையும் போக்கும் ப்ரயாகைத் தீர்த்தத்தில் மாகஸ்நானம் செய்கிறவரையில் ப்ரம்மஹத்யாதி மஹா பாபங்கள் தேகதாரிகளிடம் ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். 62. விஷ்ணுவின் பரம பதத்தை ஞானிகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு மந்திரம் வேதத்தில் அடிக்கடி வருகிறது. அது ப்ரயாகை தான். 174 காசீ காண்டம் 63. ரஜோ குணரூபமான ஸரஸ்வதீ, தமோ குணரூபமான யமுனை, ஸத்வகுணரூபமான கங்கை இவைகள் அங்கு நம்மை நிற்குண ப்ரம்மத்தையடையச் செய்கின்றன. 64. இதே த்ரிவேணியில் ச்ரத்தையுடனோ அசிரத்தையாகவோ ஒரு தடவை ஸ்நானம் செய்தவர்க்குக்கூட பிராணிகளுடைய சரீரத்தை சுத்தமாக்கி ப்ரம்ம மார்கத்தை அடைவிக்கிற படிகளாகின்றன. 65. காசி என்று பெயருள்ள ஒரு ஸ்த்ரீ மூன்று லோகங்களுக்கும் தெரிந்தவள். லோலார்கம், கேசவம் இரண்டும் அவளுடைய சஞ்சல நயனங்கள். வருணையும், அஸியும் அவளுடைய இரண்டு கைகள். இந்தத் திரிவேணி என்று கூறினோமே - இது அக்ஷயமான ஸுகத்தைக் கொடுக்கக்கூடிய அவளுடைய தலீமயிர். 66. அகஸ்திய முனி பின்னும் கூறினார். ஹேஸுதர்மிணி! எல்லாத் தீர்த்தங்களாலும் ஸேவிக்கப்படும் தீர்த்தராஜர் ப்ரயாகையின் குணாதிசயங்களை உலகில் யாரால் வர்ணிக்க முடியும்! 67. பாபி ஜனங்கள் தங்கள் ஸஞ்சித பாபங்களை வேறு தீர்த்தங்களில் பலாத்காரமாக விடுகிறார்கள். ஆனால் எல்லா தீர்த்தங்களும் விசேஷமாகத் தங்களிடம் ஸகல மனிதர்களாலும் விடப்பட்ட அநேக பாபங்களை விலக்கும் பொருட்டு, ப்ரயாகையை ஸேவிக்கின்றன. 68. அந்த புத்திசாலியான பிராம்மணன் ப்ரயாகையினுடைய குணங்களை யோசனை செய்து, மாகமாசம் பூராவும் அங்கிருந்து விட்டுப் பின்பு வாராணஸியை வந்தடைந்தான். 69. காசியில் பிரவேசித்தவுடனேயே, காசிமுகத்துவாரத்திலிருக்கும் (துவார விநாயகர்) தேஹலி என்னும் விநாயகரைத் தரிசனம் செய்து விட்டு பக்தியுடன்கூட நெய்யில் குழைத்த ஸிந்தூரத்தை அவருக்குப் பூசினான். அத்யாயம்–7 175 70. பெரிய பெரிய கஷ்டங்களிலிருந்து தன் பக்தர்களை ரக்ஷிக்கும் கணேசமூர்த்திக்கு ஐந்து மோதகங்களை நிவேதனம் செய்து காசீக்ஷேத்ரத்திற்குள் பிரவேசனம் பண்ணினார். 71. மணிகர்ணிகைக்கு வந்து உத்தரவாஹினீ, ஸ்வர்க்க தரங்கிணீ கங்காமாதாவை, சிவகணங்களைப்போல பாப புண்ணிய கர்மங்கள் இல்லாத ஜனங்கள் நிறைந்திருப்பதையும் பார்த்தார். 72. ஏ நிர்மல உள்ளத்தையுடையவளே! நிர்மல சுத்த புத்தியுள்ள சிவசர்மா அந்தத் தெளிந்த ஜலத்தில் வஸ்த்ரத்துடன் நீராடிவிட்டு, தேவர்கள், ரிஷிகள், மனுஷ்யர்கள் திவ்யபித்ருக்கள், சொந்த பித்ருக்களான பிதா, பிதாமஹர் இவர்களுக்கும் தர்ப்பணம் செய்தார். பிறகு அந்தக்கர்ம காண்டத்தையறிந்த பிராமணன் 73. முதலாவது பஞ்ச தீர்த்தயாத்ரையைப் பண்ணினான். பிறகு வைபவத்துடன்கூட ஸ்ரீ விஸ்வேஸ்வரரை ஆராதித்தான். பிறகு அடிக்கடி த்ரிபுராந்தக பகவானுடைய காசீபுரியைப் பார்த்து இந்த இடத்தை நான் இதற்கு முந்தி பார்த்திருக்கிறேனோ இல்லீயோ என்று ஆச்சர்யப்பட்டார். 74. வாராணஸியைப் பார்த்து சிவசர்மா சொல்லிக் கொண்டார். தத்வவிசார த்ருஷ்டியிலும் சரி, விவகாரத்ருஷ்டியிலும் சரி, ஸ்வர்கபுரி காசிக்கு ஸமம் ஆகாது. எப்படியாக முடியும்? ஸ்வர்கபுரி ப்ரம்மா படைத்தது. காசி ஸ்வயம் ஈஸ்வரரின் ஸ்ருஷ்டி. ஸாமான்ய மனிதர்களினால் ஸ்வர்க நிர்மாணம் ஆகியிருக்கிறது. மிகவும் விலீ உயர்ந்த ரத்ன வரிசைகளினால் காசி நிர்மாணம் ஆகியிருக்கிறது. ஸ்வர்க்கத்தில் நானாவிதமான பவபத்தனங்கள் இருக்கின்றன. காசியில் இவையொன்றும் கிடையாது. அப்போ காசியை ஸ்வர்க்க புரிக்கு ஸமமாக எப்படிச் சொல்வது? அஸத்ய சாஸ்திரத்திற்கும் ப்ரம்ம நிரூபணம் செய்யும் 176 காசீ காண்டம் சாஸ்திரத்திற்கும் உள்ள பேதம் காசிக்கும் ஸ்வர்கத்துக்கும் உண்டு. சித்ரகுப்தனால் நெற்றியில் எழுதப்பட்டிருக்கும் அக்ஷரங்களைக்கூட காசி அழித்து விடுகிறது. ஏனென்றால் அங்கு புனர்ஜன்மம் கிடையாது. 75. இந்தக் காசியின் ஜலத்தினுடைய சக்தியை நினைக்கவே முடியாது. ஸ்வர்கத்தில் தேவர்கள் பண்ணும் அம்ருதபானம் வீணே. ஏனென்றால் காசியின் ஜலத்தை ஒருதரம் குடித்தால் போதும். பிறகு அவர்களுக்குத் தாயின் ஸ்தன்யபானம் செய்ய வேண்டாம். அம்ருத பானத்தினாலும் இந்தப்பலன் கிடையாது. 76. நீதி நெறி செலுத்தும் மஹாதேவனை நினைப்பதின்மூலம் மூன்றுவித தாபங்களும் அற்று, ஸத்கர்மங்கள் செய்பவர்கள் அல்பகாரியம்கூட விஸ்வேஸ்வரருக்கு ஸமர்ப்பணம் செய்யாமல் ஒரு காரியமும் செய்வதில்லீ. அதனால் அவர்கள் சிவனுடைய பாரிஷத கணங்களாகிய நந்தி, ப்ருங்கி, இவர்களைப் போலாகிறார்கள். 77. தான் பெற்ற பலனை தானம் செல்வதன் மூலம் ஏற்படும் புண்ணிய பலத்தினால் காசியின் வசிக்கும் பிராணிகளுடைய அந்திம காலத்தில் சந்திரசேகரர்மஹாதேவர் தானே வந்து ப்ரணவ மந்திரத்தை உபதேசிக்கிறார். அதனால் இந்தக் காசியின் மஹிமையை யார் தான் புகழமாட்டார்கள். 78. ஸம்ஸாரிகளுக்கு சிந்தாமணி ரூபமான பகவான் சிவன் அங்கிருக்கும் ஜனங்களுடைய கர்ணிகையில் (காதில்) திடீரென்று தாரக மந்திரத்தை உபதேசம் செய்கிறார். அதனால் இதற்கு மணிகர்ணிகை என்று பெயர் வந்தது. 79. இந்த இடம் மோக்ஷ லக்ஷ்மியின் மஹா பீடமான மணிஸ்ரூபமான காசியில் இருக்கிறது. மேலும் இதை மோக்ஷ லக்ஷ்மியின் சரண கமலத்தின் கர்ணிகையென்றும் கூறலாம். அதனால் மணிகர்ணிகையென்றும் கூறுகிறார்கள். அத்யாயம்–7 177 80. இந்தப்புரத்தில் வஸிக்கிறவர்கள் கருப்பையி லிருந்தும், முட்டையிலிருந்தும், அழுக்கிலிருந்தும் (உற்பவ) வியர்வையிலிருந்தும் (ஜராயுஜ, அண்டஜ, உத்பிஜ, ஸ்வேதஜ) இவைகளிலிருந்து உற்பத்தியான பிராணிகள்கூட தேவதைகளைவிட நன்றாகயிருக்கிறார்கள். ஏனென்றால் இவர்களுடைய முக்தி இவர்கள் கையிலேயே இருக்கிறது; தேவதைகளுக்கு அப்படியில்லீ, அவர்கள் முக்தி லாபத்திலிருந்து வஞ்சிக்கப்படுகிறார்கள். 81. நான் மிகவும் கெட்டகாரியம் செய்தவன், ஜடபுத்தி. இத்தனை நாட்கள் வரை எனது ஜன்மம் வீணாகக் கழிந்தது. இந்நாள் வரை முக்திப் பிரகாசிகையான காசியைத் தரிசனம் செய்யவில்லீ. 82. சிவசர்மா இந்த விசித்ரமும் பவித்ரமுமான க்ஷேத்ரத்தை அடிக்கடி கண்கூடாகக் கண்டும் கூட திருப்தியடையவில்லீ. 83. அவனுடைய மனதில் காசிதான் மிகவும் மேலான நிர்வாண பதத்தைக் கொடுக்ககூடிய ஏழு புரிகளிலும் மிக ச்ரேஷ்டமானது எனக் கண்டான். 84. ஆனாலும் மற்ற ஆறு புரிகளை நான் பார்த்ததில்லீ யாகையால் அப்புரிகள் எல்லாவற்றின் ப்ரபாவத்தையும் பார்த்து விட்டுத் திரும்பவும் நான் இங்கேயே வந்து வஸிப்பேன். 85. அந்தப் பிராம்மணன் ஒரு வருஷம் வரையில் காசியில் தீர்த்த யாத்ரை செய்தும்கூட காசியில் உள்ள எல்லாத் தீர்த்தங்களையும் அடைய முடியவில்லீ. ஏனென்றால் காசியில் எள் விழுவதற்குக்கூட இடமில்லாமல் தீர்த்தங்கள் நிறைந்து இருக்கின்றன. 86.அகஸ்திய முனி கூறுவார்:- தேவீ லோபாமுத்ரே! ஆச்சர்யத்தைப் பார். சிவசர்மா அநேக ப்ரமாணத்தால் காசீ க்ஷேத்ரத்தின் மஹிமையை அறிந்து உள்முகமாய்போன பின்கூட அங்கிருந்து கிளம்பியே விட்டான். 178 காசீ காண்டம் 87.ஹே ஸுந்தரீ! ஸகல ப்ரமாணங்களோடு கூட சாஸ்திரம் நிரூபித்தும் பலன் என்ன? மஹாமாயையி னுடைய பவிஷ்யத்தை யாரால் நீக்க முடியும்? 88. வேகத்துடன் குதித்து ஓடிக்கொண்டு வரும் நதி ஜலத்தை விபரீதமான வேறு பாதையில் யாரால் திருப்பமுடியும்? அதுபோல நிலீயில்லாது குதித்துக் கொண்டிருக்கும் சித்தத்தை அதற்கு நேர் விபரீத கதிக்கு யாரால் மாற்ற முடியும்? இரண்டும் தங்கள் தங்கள் இடத்தில் ஸ்திரமாக இருந்தும்கூட அந்த இரண்டின் ஸ்பாவமும் சஞ்சலமாகவேயிருக்கிறது. 89. பிறகு சிவசர்மா முறையே தேசாந்திரமெல்லாம் ஸஞ்சரித்து கலிகாலத்தின் செயல் இல்லாத மஹாகாலபுரம் (உஜ்ஜயினி) வந்து சேர்ந்தான். 90. யார் யுகயுகாந்தரமாகத் தன்னுடைய லீலீயினால் அகில ப்ரம்மாண்டத்தையும் லயமடையச் செய்கிறானோ, அந்தக் காலனையும் லயமடையச் செய்யும் மஹாதேவருடைய பெயர் காலகாலர். 91. பாபத்திலிருந்து ரக்ஷிப்பதினால் அந்நகர் அவந்தீ என்று கூறப்படுகிறது. யுகயுகமாக மஹாகாலபுரியினுடைய பெயர் மாறிக் கொண்டே வருகிறது. இப்பொழுது கலியுகத்தில் அதனுடைய பெயரை உஜ்ஜயினீ என்று கூறுகிறார்கள். 92. அந்த உஜ்ஜயினியில் பிராணிகள் மரணமடைந்து பிணமான பின்னும் துர்கந்தம் வீசுவதில்லீ. அழுகுவதும் இல்லீ. 93. அந்த ஊரில் யமதூதர்கள் வரவே மாட்டார்கள். அங்கும் கோடிக்கணக்கான அடிக்கொரு சிவலிங்கம் இருக்கின்றது. 94. ஒரே ஜ்யோதிர் லிங்கம், ஹாடகேசுவரர், மஹாகாலர், தாரகேஸ்வரர் என்று மூன்று உருவத்துடன் மூன்று உலகிலும் வியாபித்து ஸ்திரமாக இருக்கின்றன. அத்யாயம்–7 179 95. பிராம்மணர்கள் உஜ்ஜினியிலுள்ள ஸித்த வடவிருக்ஷத்தில் ஜ்யோதிர்லிங்கமான மஹா காலரை ஜ்யோதிரூபமாக தர்சனம் செய்கிறார்களோ அவர்கள் பரஞ்சோதியைப் பார்க்கிறார்கள். 96.ஸம்ஸாரத்தில் மஹாகாலரான அந்த லிங்கத்தைக் தரிசனம் செய்த தீனர், துக்கிகளை மஹாபாபம் தொடக்கூட மாட்டாது. 97. ஆகாசத்தில் சூரியனுடைய ரதத்தின் குதிரைகள், மஹாகாலருடைய கோவிலின் கொடியின் நுனிபாகம் (கொடி மரத்தின்) தங்கள் முதுகுகளில் பட்டபொழுது அவைகள் முதுகிலிருந்து ஸாரதியான அருணனுடைய சவுக்கடியினால் ஏற்பட்ட காயங்கள் க்ஷணமாத்திரத்தில் ஆறிவிடுகின்றன. 98.மஹாகாலா, மஹாகாலா என்று எப்பொழுதும் உச்சரித்துக் கொண்டிருக்கும் பிராணிகளை ஸ்மரன் என்னும் பெயருடைய மன்மதனின் பிதாவான விஷ்ணுவும், அந்த ஸ்மரனுக்கு சத்ருவான சிவனும் எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். 99. சிவசர்மா என்னும் பிராம்மணர் பகவான் பூதபாவனர் மஹாகாலரை ஆராதித்து, அதன் பிறகு த்ரிபுவநங்களிலும் கமனீயமாக இருக்கும் காஞ்சீபுரியை அணுகினார். 100. இங்கு லக்ஷ்மீகாந்தன் அங்கு வஸிக்கும் ஜனங்களுக்கு இங்கும் பர உலகத்திலும் அவர்களுக்குத் தன் உருவமாகிய ஸாரூப்ய பதவியை அளிக்கிறான். தேஜஸ்வியான மஹான்களால் ஸேவிக்கப்பட்ட 1. பரம காந்திமதியாகிய அந்த காஞ்சிபுரியைப் பார்த்து சிவசர்மா காந்தியுடன் பிரகாசித்தான். அங்கு தேஜஸ் இல்லாத மனிதர்களே இல்லீ. 2. கர்ம காண்டத்தை அறிந்தவனான சிவசர்மா அங்கு சில கர்மங்களைக் கடமை என்று எண்ணிச் செய்தான். ஏழு 180 காசீ காண்டம் நாட்கள் அங்கு தங்கிவிட்டு துவாரகாபுரிக்கு யாத்திரையாகக் கிளம்பினான். 3. தத்துவக்ஞர்களான வி த்வான்களால் சதுர்வர்ணாச்ரமிகளும் தத்துவக்ஞர்களாய் நான்கு பக்கங்களும் சூழ்ந்து இருப்பதால் அதற்குத் த்வாரவதீ என்னும் ஒரு பெயரும் உண்டு. 4. அங்கு இருக்கும் ஒவ்வொரு பிராணிகளுடைய எலும்பும் சங்கமுத்ரை பொறிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள ஆதிவாஸிகள் கையில் சங்க சக்ரமுத்ரைகள் பொறிக்கப்பட்டு இருந்தால் அதில் ஆச்சர்யமென்ன? 5. யமராஜர் அடிக்கடி தனது தூதர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார். எவர்கள் அடிக்கடித் துவாரவதீ என்று பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை விட்டுவிட்டு வாருங்களென்று. 6. த்வாரகாபுரி, கோபி சந்தநத்தின் வாஸனை சந்தநத்திலும் இல்லீ. அதன்நிறம் தங்கத்திலும்கூட இல்லீ. துவாரகையிலுள்ள கோபி சந்தநத்தின் பவித்ரம் அந்நியத் தீர்த்தங்கள் ஒன்றிலும் கிடையாது. 7. ஹே தூதர்களே! கேளுங்கள். எவருடைய நெற்றி கோபி சந்தநத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோ அவரை எரியும் நெருப்பாக எண்ணி ஜாக்கிரதையாக தூர இருந்தே விலக்கி விடுங்கள். 8. படர்களே! எவர்கள் துளஸிதளத்தினால் தன்னை. அலங்கரித்துக்கொண்டு ஹரி என்ற மந்திரத்தினால் அனவரதமும் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்களோ துளஸி வனத்தை ரக்ஷிப்பவனாக இருக்கிறானோ, அவர்களுக்கும் தூர இருந்தே வந்தனம் செய்யுங்கள். 9. ஸமுத்ரம் யுகயுகமாக துவாரகையினுடைய ரத்ன ஸமூகத்தைச் சேகரித்து சேகரித்து இன்றும் ஜகத்தில் ரத்னாகரம் எனும் பெயரை அடைந்திருக்கிறது. அத்யாயம்–7 181 10. எந்த ஜந்து காலவசமாக துவாரகையில் சாகிறதோ அது வைகுண்டத்தில் பீதாம்பரம் அணிந்து சதுர்புஜ உருவமாகிறது. 11. சிவசர்மா சோம்பலில்லாமல் துவாரகையிலும் மற்றும் பிரத்யேகத் தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்தும், தேவரிஷிகளுக்கும் பித்ருக்களுக்கும் தர்பணம் செய்தான். 12. பிறகு அவன் பாபகாரியங்களே அரிதில் கிடைக்கும் மாயாபுரியை அடைந்தான். 13. இங்கு வைஷ்ணவி மாதாவின் மாயாபாசம் இவர்களைக் கட்டுப்படுத்தாது. இந்தஸ்தானத்தை சிலர் ஹரித்வாரம் என்று கூறுகிறார்கள், சிலர் மோக்ஷத்வாரம் என்றும் மற்றும்சிலர் கங்காத்வார் என்றும் கூறுகிறார்கள். சிலர் மாயாபுரி என்ற பெயரால் கூப்பிடுகிறார்கள். 14. கங்கை இந்த இடத்திலிருந்து கிளம்பி பாகீரதீ என்ற பெயரினால் பிரஸித்தமடைந்தது. இதன் பெயரை மாத்திரம் உச்சாரணம் பண்ணினால் (ஆயிரம்தரம்) பாபராசி நிவ்ருத்தியாகிறது. 15. ஜனங்கள் இந்த ஹரித்வாரத்தை வைகுண்டத்துக்கு ஏகமாத்ரமானபடி என்று கூறுகிறார்கள். இங்கு ஸ்நானம் செய்யும் நரன் விஷ்ணுவின் பிரஸித்த பதம் அடைகிறான். 16. பிராம்மணோத்தமனான சிவசர்மா அங்கு தீர்த்த உபவாஸம், இரவு கண் விழித்தல், காலீயில் கங்காஸ்நானம், பித்ருக்களுக்கு குறைவில்லாமல் ஸம்பூர்ணமாக தர்பணம் முதலியன செய்துவிட்டு ப்ரயாணம் செய்ய விரும்பினான். 17. ஏனென்றால் சீதஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டு, அவன் மிகவும் ஆச்வாஸம் இல்லாமல் நடுங்கத் தொடங்கினான். 18. முதலாவதாக தனியாக விதேசத்திற்கு வந்திருக்கிறான். இரண்டாவது ஜ்வரத்தினால் மிகவும் 182 காசீ காண்டம் பீடிக்கப்பட்டு அந்தப் பிராம்மணன் மிகவும் கவலீப்பட ஆரம்பித்தான். மேலும் யோசிக்கத் தொடங்கினான். என்ன நேர்ந்துவிட்டது. 19. ஆழம் காணமுடியாத மஹா ஸமுத்ரத்தில் கப்பல் உடைந்து விட்ட ஸமுத்ர வியாபாரி மாதிரி கவலீயில் ஆழ்ந்து அந்தப் பிராம்மணன் உயிரைப் பற்றியும் தனத்தைப் பற்றியும் அவநம்பிக்கையடைந்தான். 20.எனது வயலும், களத்ரம், புத்திரர்கள், தனம் இவைகள் எங்கே, அந்த விசித்ர மஹால் எங்கே, எனது அநேக புஸ்தகங்கள் நிரம்பிய நூல் நிலீயம் எங்கே? 21. இதுவரை எனது ஆயுள் பூர்ணமாகவில்லீ. தலீகூட நரைக்கவில்லீ; ஆனால் இந்த பயங்கார ஜ்வரம் உபத்ரவப்படுத்துகிறதே. எனக்கு இது எத்தனை பயங்கரமாக இருக்கிறது. 22.தலீயில் ம்ருத்யு வஸிக்கிறான். எனது க்ருஹம் இங்கிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. எப்படியிருந்தாலும் வீட்டில் தீப்பிடித்தால் கிணறு வெட்டுவதால் காரியம் ஆகுமா? 23. மிகவும் தாபத்தைக் கொடுக்கும் இந்த விதமான கவலீயினால் எனக்கு என்ன பலன்? இந்த நாழிகையில் நான் ரிஷீகேஸ் சிவப்ரதமஹா தேவனை த்யானிப்பேன். 24. அல்லது உத்தமமான மோக்ஷத்தை அனுஷ்டானிப்பேன். இந்த ஏழு மோக்ஷப்ரதாயினி புரிகளை தரிசனம் செய்து விட்டேன். 25. வித்வான்கள் ஸ்வர்கம், அல்லது முக்திக்கு வேண்டிச் செய்கிறார்கள். இது இரண்டையும் ஸாதனம் செய்யாவிட்டால் பச்சாதாபத்தினால் பரிதபிக்க வேண்டிவரும். அத்யாயம்–7 183 26. அல்லது எனக்கு இந்த வீணான சிந்தாப்ரவாஹத்தினால் என்ன ப்ரயோஜனம்? (ஸங்கிராமம்) அதாவது யுத்தத்திலாவது ச்ரேயஸை அளிக்கும். பின்பும் எனது இப்படிப்பட்ட தீர்த்தத்தில் மரணம் ஸம்பவிக்குமானால் மிகவும் நல்லது. 27. நான் இன்று மந்தபாக்யவான் மாதிரி வழியில் மரணம் அடையவில்லீ அல்லவா? ஆனால் கங்கை மடியில் இறக்கிறேன். அப்பொழுது முட்டாளைப் போல ஏன் கவலீப்பட வேண்டும்? 28. அஸ்தி தோல் மயமான இந்த சரீரத்தை விடுவதால் எனக்கு நிச்சயமாக புதிதான ச்ரேயஸ் கிடைக்கும். 29. இந்த விதமாக சிந்தையினால் பீடிக்கப்பட்ட சிவசர்மனுக்கு அதிக பயங்கரமான துக்கம் ஏற்பட்டது. தேள் கொட்டினபோது எந்த நிலீ ஏற்பட்டதோ, சிவசர்மா அதே நிலீயடைந்தான். 30. நினைக்கத் தகுந்த எல்லா வார்த்தைகளும் மறக்கவில்லீ; நான் எங்கு இருக்கிறேன்? நான் யார்? - இந்த நினைவு கூட அவனிடமிருந்து சென்றுவிட்டது. பதினான்கு நாட்கள் இந்த விதமாக இருந்ததன் பின் சிவசர்மா பஞ்சத்வத்தை (முடிவை) அடைந்தான். 31. அதே ஸமயத்தில் வைகுண்டத்தில் இருந்த மிகவும் உயரமாக இருக்கும் கருடத்வஜத்தினால் சின்ன செய்யப்பட்ட சிறு மணிகளினால் சலசலக்கிற பெரிய விசாலமான விமானம் வந்து ஆஜராகியது. 32. அந்த திவ்ய விமானத்தில் சிவந்த பட்டு வஸ்த்ரம் தரித்து, சாமரம், விசிறி இவைகளைக் கையில் எடுத்துக் கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான தேவ ஸுந்தரப் பெண்களுடன் கூடிய புண்ணிய சீலன் ஸுசீலன் இவர்கள் இரண்டு விஷ்ணு பாரிஷதர்கள் ப்ரஸன்ன வதனம், நான்கு கைகளுடன் அந்த விமானத்தில் இருந்தார்கள். 184 காசீ காண்டம் 33,34. சிவசர்மா உடனே இந்த மண்ணினால் ஆன தேஹத்தை விட்டு அந்த விமானத்தில் ஏறி திவ்ய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பீதாம்பரம் அணிந்து சதுர்புஜத்துடன் ஆகாச மார்கத்தை அலங்காரம் செய்யத் தொடங்கினான். இது ஸ்கந்த புராணத்தில் நாலாவது கண்டமான காசி கண்டத்தில் பூர்வார்த்த பாஷாடீகாவான ஸப்தபுரி வர்ணனம் என்ற பெயருள்ள ஏழாவது அத்யாயம் ஸம்பூர்ணம். அத்யாயம்–8 185 அத்யாயம் 8 லோபாமுத்ரை கூறுவாள் : ஹே! பிராணநாதா! தங்களுடைய திருமுகத்திலிருந்து பொழிந்த இந்த புண்ணியபுரி விஷயமான பவித்ரமான கதையைக் கேட்டு எனது ஆவல் சாந்தமாயிற்று என்று கூறமாட்டேன். 1. ஹேப்ரபோ! ப்ராம்மணோத்தமனான சிவசர்மா முக்தியைக் கொடுக்கும் மாயாபுரியில் பிராணத்யாகம் செய்த போதிலும் மோக்ஷத்தை அடையவில்லீயே. இதற்குக் காரணம் என்ன? 2. அகஸ்த்யர் கூறுவார். ஹே! ப்ரியவாதினீ! இந்தப் புரியில் எல்லாம் மோக்ஷம் கிடைக்காது.இது விஷயமாகப் பழைய சரித்திரம் ஒன்று நான் கேட்டிருக்கிறேன். 3. ஹே! ப்ரியே! இப்பொழுது புண்யசீலன். ஸுசீலன் இவர்கள் மூலமாக சிவசர்மாவைக் பற்றிக் கூறிய விசித்ர அர்த்தம் மிகுந்த பாபநாசினி கதையைக் கேள். 4.சிவசர்மா கூறினான். ஓ கமலலோசனர்களே! பவித்ரமான விஷ்ணுகணங்களே! உங்களிடம் கைகூப்பி ஒன்று கேட்க விரும்புகிறேன். 5. எனக்கு உங்கள் பெயர் தெரியாது. ஆனால் உருவத்திலிருந்து தெரியவருகிறது. உங்களுடைய பெயர்கள் புண்ணியசீலன், ஸுசீலன் என்றுதான் இருக்க வேண்டும். 6. அவர்கள் கூறினார்கள்- தங்களைப் போன்ற பகவத் ஜனங்களுக்குத் தெரியாதது என்று ஒன்று உண்டா? தாங்கள் கூறிய இரண்டும் தான் எங்களுடைய பெயர்கள். 7. ஹே! மகாத்மா! தங்ளுக்கு மேலும் ஏதாவது கேட்க வேண்டுமானால் ஸந்தேஹம் கொள்ளாமல் கேளுங்கள். ப்ரேமையுடன் நாங்கள் பதிலளிப்போம். 186 காசீ காண்டம் 8. இந்த விதமாக ஹ்ருதயபூர்வமான வசனங்களைக் கேட்டு பிராம்மணன் கூறுவான். 9. இந்த அல்பமான சோபையுடன் கூடிய க்ஷீணபுண்ணிய ஜனங்கள் இருப்பதைக் காட்டிலும் பூர்ணரூபமான வேறு புண்யலோகம் இருக்கிறதா? அப்பா அதற்கு நேர் விக்ருதமாக இருக்கும் இவைகள் எல்லாம் என்ன? எனக்கு இவைகளைப் பற்றிக் கூறுங்கள். 10-11.கணங்கள் கூறுகிறார்கள். இது பிசாசலோகம் மாம்ஸம் புஜிக்கும் ஜனங்கள் இங்கு வசிக்கிறார்கள். எவர்கள் தானம் கொடுத்தபின் பச்சாதாபப்படுகிறார்களோ, எவர்கள் இல்லீ இல்லீ என்று கூறிக்கொண்டே தானம் கொடுக்கிறார்களோ, அதே அல்ப புண்ணியம் செய்த, அல்பசோபையுடன் கூடிய பிசாச கணங்கள் வசிக்கும் இடம் இது. இதை, அவர்களுக்கு எப்படிக் கிடைத்ததென்றால் - யதேச்சையாக ஒருதரம் சுத்தமில்லாத மனதுடன் மஹாதேவருடைய பூஜை செய்த அல்பபுண்ய பலன் இது. 12. பிறகு சிவசர்மா போய்க்கொண்டிருக்கும் போதே இன்னோரு உலகத்தைக் கண்டான். அங்கு பெரிய தொந்தியுடன் கூடிய பெரியமுகமும் கம்பீரநாதமும். 13. சியாமள வர்ணத்துடன் கூடிய லோபம் நிறைந்த கட்டு மஸ்தான தேகத்தையுடைய கணங்களால் நிறைந்ததொரு லோகத்தைக் கண்டான். இது என்ன லோகம்? இந்த லோகத்தின் பெயர் என்ன? எந்த புண்யத்தினால் இவர்கள் இங்கு வந்தனர் என்று கேட்டான். 14. இதற்குப் பெயர் குஹ்யலோகம் என்பது. இவர்களை குஹ்யர்கள் என்று கூறுவார்கள். இவர்கள் நியாய பூர்வகமாக சம்பாதித்துப் பூமியில் புதைத்து வைத்தவர்கள். 15. தர்ம மார்க்கத்தில் சம்பாதித்த பணம் இருந்தும் சூத்ரர்களைப் போல் வாழ்ந்தார்கள். ஆனால் தங்கள் குடும்பத்திற்கு பாகம் செய்து கொடுத்தார்கள். கோபமும் அத்யாயம்–8 187 16. திதி, வாரம், சங்கராந்தி, பர்வதினங்கள் இவைகளையொன்றும் அறியார்கள். தர்மம். அதர்மம் இவைகளொன்றும் தெரியாது. 17. எப்பொழுதும் ஸுகமாக இருந்தார்கள். தங்கள் குலத்து உபாத்யாயரை மாத்திரம் அறிவார்கள். அவருக்கு கோதானம் செய்வார்கள். அவருடைய வாக்யத்திற்கு மதிப்புக் கொடுத்து அதைப் ப்ரமாணமாக மதிப்பார்கள். 18. அந்தப் புண்ய பலத்தினால் இங்கும் நிறை வாழ்வு வாழ்ந்து கொண்டு, இந்த குஹ்யர்கள் தேவதைகளைப்போல் நிர்பயமாக ஸ்வர்க்க ஸுகம் அனுபவிக்கிறார்கள். 19. பிறகு கண்களுக்கு ஸுகமளிக்கும் இந்த லோகத்தைப் பார்த்துவிட்டு மற்றொரு லோகத்தைப் பார்த்து, சிவசர்மா இங்கு யார் வஸிக்கிறார்கள்? என்று கேட்டார். அந்த லோகத்தின் பெயரையும் கேட்டார். 20.கணங்கள் கூறுவார்கள்: இந்த லோகம் கந்தர்வலோகம்; இங்கு கந்தர்வர்கள் வசிக்கிறார்கள் என்றனர்; மேலும் இவர்கள் உத்தமதர்மவான்கள்; தேவதைகளுக்கும் பாடகர்கள். சாரணர்கள், ஸ்துதி பாடகர்கள். 21. ஸங்கீதத்தில் நிபுணர்கள் (மநிதயோநியில்) அழகான பாட்டினால் அரசர்களை ஸந்தோஷப்படுத்துகிறார்கள் தனத்தின் லோபத்தால் மோசமடைந்து பணக்காரர்களைத் துதிக்கிறார்கள். 22. அரசர்களின் சந்தோஷத்தால் அழகான வஸ்த்ரம், கற்பூராதி ஸுகந்ததிரவ்யங்களைப் பெற்று 23. பிராம்மணர்களுக்கு அளிக்கிறார்கள். எப்பொழுதும் பாடிக்கொண்டேயிருக்கிறார்கள். நாட்டிய சாஸ்திரத்தை சிரமத்துடன் கற்றுணர்ந்தவர்கள். ஸ்வரத்தில் மனம் லயித்தவர்கள். 188 காசீ காண்டம் 24. கான வித்தையினால் கிடைக்கும் பணத்தைப் பிராம்மணர்களுக்குக் கொடுக்கும் புண்ணியத்தினால் அந்த கந்தர்வ ஜனங்கள் இந்த கந்தர்வ லோகத்தில் வசிக்கிறார்கள். 25. கீத வித்யையின் பிரபாவத்தினால் நாரதர் விஷ்ணு லோகத்தில் மதிக்கப்பட்டார். 26. தும்புரு, நாரதர் இருவருமே தேவதைகளுக்கு மிகவும் பிரியமானவர்கள். ஏனென்றால் சிவன் நாதரூபமானவரே, இவர்கள் இருவரும் நாதாந்த தத்துவத்தை நன்றாக அறிந்தவர்கள், 27. விஷ்ணு, மஹாதேவர் இவர்கள் ஸமீபத்தில் பாடினார்களானால் அவர்களுக்கு மோக்ஷ பயன் கிட்டும், ஹரிஹர ஸாந்நித்ய பதவியும் கிட்டும். 28. உத்தம காயகன் பாட்டினால் பரமபதம் அடையமுடியாது. ஆனால் ருத்ரதேவருடைய அநுசரராக இருந்து ஆனந்தம் அனுபவிப்பார்கள். 29. இந்த லோகத்தில் எப்பொழுதும் ஒரு பழமொழி வழங்கப்பட்டு வருகிறது. கீதமாலீயினால் ஹரி, ஹரன் இருவரும் பூஜிக்கப்பட்டு வருகிறார்களென்று. 30. இப்படிப் பேசிக்கொண்டே க்ஷணப்பொழுதில் மற்றொரு இடத்திற்கு வந்தார்கள். இந்நகரின் பெயர் என்ன என்று சிவசர்மா கேட்டார். 31. விஷ்ணு தூதர்கள் கூறினார்கள் :- இது வித்யாதரர்களுடைய உலகமென்று. நானாவித வித்யையில் பண்டிதர்கள் இங்கு வசிக்கிறார்கள். இவர்கள் மாணவர்களுக்கு அன்னம், வஸ்த்ரம், கம்பளி மேஜோடுகள் அளித்து, 32. அவர்களுடைய பீடையைப் போக்கி சாந்தி தரக்கூடிய மருந்துகள் இவைகளையளிக்கிறார்கள். வித்யாகர்வமில்லாமல் நானாவிதமான வித்யைகளை பிறருக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். அத்யாயம்–8 189 33. சிஷ்யனைப் புத்திரனுக்கு ஸமமாகக் கருதுபவர்கள்; வஸ்த்ரம், போஜனம், தாம்பூலம் இவைகளையளித்து இந்த லோகத்தில் வசிக்கின்றார்கள். 34-35. இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டு இருக்கும்போது தேவதைகளுடைய நகரா சப்தம் கேட்கும் ஸம்யமநீபுரம் (ஸம்யமநீபுரம்) அதிகாரி தர்மராஜரை ஸந்தித்தார்கள். 36. அவர் சாந்தஸ்வரூபராய், தர்ம தாதாவாய் இருந்தார். மேலும் சேவை செய்வதில் மிகவும் நிபுணர்களான நாலீந்து வேலீக்காரர்கள்கூட விமானத்தில் அமர்ந்திருந்தார். 37. தர்மராஜர் கூறினார்- ஹே புத்திமான், சிவசர்மா, பிராம்மணோத்தமா, பேஷ் பேஷ் தாங்கள் பிராம்மண குலத்திற்கு உசிதமான தர்மத்தைச் செய்து முடித்தீர்கள். 38. முதலில் வேதாத்யயனம் செய்தீர்கள். பெரியவர்களை சந்தோஷப்படுத்தினீர்கள். பிறகு தர்ம சாஸ்திரம் புராணங்களிலுள்ள மரியாதைக்குரிய தர்மங்களைப் பார்வையிட்டீர்கள். 39. சீக்கிரமாகவே இந்த நச்வர தேஹத்தை முக்திபுரிகளின் ஜலத்தினால் கழுவினீர்கள். அதனால் தாங்கள் வாழ்வு, மரணம் இரண்டையும் நன்றாக அறிந்தவர். 40. எப்பொழுதும் துர்கந்தத்தினால் நிரம்பிய அபவித்ரபாத்ரமான சரீரத்தைத் தாங்கள் மேலான புண்ணிய தீர்த்தமாகிய திரவியத்தினால் பண்டமாற்று செய்து கொண்டீர்கள். 41. அதனால்தான் பண்டிதர்கள் பாண்டித்யத்தை மதிக்கிறார்கள். தங்களுக்கு ஹிதத்தைக் கொடுக்கக்கூடிய ஸாதனங்களில் அந்த அறிவாளிகள் ஒருக்ஷணம் கூடக் காலத்தை வீணாக அடிப்பதில்லீ. 190 காசீ காண்டம் 42. பூமியில் பிராணிகள் ஐந்தாறு நிமிஷங்களே ஜீவிக்கிறார்கள். இது ஸத்யம். அதில் கூட இழிவான ஈனகர்மங்களில் ப்ரவர்த்திக்கக் கூடாது. 43. சரீரம் எப்பொழுதும் நிச்சயமாக விநாசத்தையடையக் கூடியது. இதை தனத்தினால் மரணத்திலிருந்து காப்பாற்ற முடியாது. அப்பொழுது மூடபுத்தியான ஜனங்கள் மகத்தான மோக்ஷ ஸாதனத்தில் தங்களைப்போல எப்படி முயற்சி செய்யமுடியும்? 44. ஆயுளோ மிக சீக்கிரத்தில் கழிந்து கொண்டிருக்கிறது. அதனால் தார்மிகர்கள் தங்களைப்போலவே ஸத்கர்மத்தில் புத்தியைச் செலுத்த வேண்டும். 45. நல்ல காரியங்களின் பலன் என்னவென்றால் தங்களுக்கும் எனக்கும்கூட பூஜிக்கத் தகுந்த இரு பக்தர்களும் தங்களுக்கு மித்ர பாவத்தில் கிடைத்திருக்கிறார்கள். 46.நல்லது. நீங்கள் எனக்கு உத்தரவு கொடுங்கள். நான் உங்களுக்கு எந்தவிதமான ஸஹாயம் செய்ய வேண்டும்? ஏனென்றால் என் போன்றவர்கள் என்ன செய்யவேண்டுமோ அதைத் தாங்களே செய்து காட்டிவிட்டீர்கள். 47. இன்று நான் பரம தன்யனானேன். ஏனென்றால் இங்கேயே அந்த இரண்டு பகவத் ஜனங்கள் வந்திருக்கிறார்கள். ஸ்ரீமத் வைகுண்ட நாதனுடைய சரணங்களில் எப்பொழுதும் என்னுடைய சேவை சொல்லத் தகுந்தது. 48. இதற்குப் பிறகு இந்த இரு பக்த ஜனங்களிடம் விடை பெற்றுக்கொண்டு தர்மராஜர் தனது புரிக்குத் திரும்பினார். தர்ம ராஜர் போன பிற்பாடு அந்தப்பிராம்மணன் (சிவசர்மா) அந்தக் கணங்களிடம் கேட்டான். அத்யாயம்–8 191 49. இங்கே ஸாக்ஷாத் தர்மராஜர் மிகவும் சாந்தஸ்வரூபராகயிருக்கிறாரே; இவருடைய வார்த்தை மனதிற்கு ஸந்தோஷமாக இருக்கிறது. 50. பிறகு இவருடைய ஸம்யமநீபுரீ என்ற பட்டணமும் மிகவும் சுபலக்ஷணங்களுடன் விளங்குகிறது. இதன் பெயரைக் கேட்ட உடனேயே பாபி ஜனங்கள் பயப்படத் தொடங்குகிறார்கள். 51. ஆனால் பூலோகத்தில் யமராஜருடைய உருவத்தை வேறு விதமாக வர்ணிக்கிறார்கள். ஆனால் நான் இங்கு அவரை அதற்கு நேர் எதிராகப் பார்க்கிறேன். 52. யாரும் இந்த யமபுரியைப் பார்த்ததில்லீ, அங்கு யார் யார் வசிக்கிறார்கள்? அவர்களும் இவர் மாதிரி ஸௌம்யமூர்த்தியகளாக இருப்பார்களா? அல்லது வேறு விதமாக இருப்பார்களா? என்று அவைகளை எல்லாம் எனக்குச் சொல்ல வேண்டும். 53. கணங்கள் கூறுகிறார்கள். ஏ! ஸௌம்யா! கேளும்; யமராஜர் தங்களைப் போன்ற ஸந்தேஹிக்க முடியாத புண்ணிய குணங்களையுடையவர்களுக்கு இயற்கையாகவே பரம ஸௌம்ய தர்ம மூர்த்தியாகத் தென்படுகிறார். 54. ஆனால் இதே யமராஜர் செந்நிறக் கண்களும் கோபத்தால் சிவந்த கண்களும் பெரிய பெரிய பற்களுடன் கூடிய பயங்கரமான முகமும், மின்னலீப் போல் துடிக்கும் நாக்குடனும் , 55. பயங்கரமான குத்திட்டு நிற்கும் மயிர்களுடன் மிகவும் கறுத்த பிரளய காலத்து மேகத்துக்கு ஸமமான நிறமுடன் தூக்கிய கையினில் காலதண்டத்தை உடையவரும், நெறித்த புருவத்துடன் கூடின முகமுடையவராய். 56. ஏ அடக்கமுடியாதவர்களே! இவனைக் கொண்டுவாருங்கள் இவனை பூமியில் அறையுங்கள்; இவனைக் கட்டுங்கள், இந்ததுராத்மாவை சிரஸில் பெரிய 192 காசீ காண்டம் தீக்ஷண்யமான இரும்பு உலக்கையினால் அடியுங்கள். 57.அந்தப் பாவிகளுடையக் கால்களையும் தூக்கிக் கல்லில் அடியுங்கள், ஏய், நீ இவன் கழுத்தில் இரண்டு காலீயும் வைத்து அழுத்தி இருகண்களையும் வெளியில் எடு. 58. இவன் கழுத்தில் சுருக்குப் போட்டு மரத்தில் தொங்கவிடு. இவனுடைய உப்பியிருக்கும் கன்னங்களையும் கத்தியினால் குத்துங்கள். 59. இவன் தலீயை மரத்தைப் போல் ரம்பத்தினால் அறுங்கள். இவனது முகத்தைக் கடினமான குதிகால்களால் பொடிப் பொடி யாக்குங்கள். 60. இந்தப் பாபியிடைய பரஸ்த்ரீகளைத் தழுவின கையை வெட்டுங்கள். பரஸ்த்ரீயின் வீட்டிற்குச் சென்ற இவன் கால்களை ஒடியுங்கள். 61. பரஸ்த்ரீயின் அங்கத்தில் நகங்களைப் பதிக்கும் இந்த துராத்மாவினுடைய சரீரத்தினுடைய ஒவ்வொரு ரோமக்கால்களிலும் ஊசியைக் குத்துங்கள்; 62. பரஸ்த்ரீயின் முகத்தை முத்தமிடும் அந்தத் துஷ்டன் முகத்தில் காரிக்காரி உமிழுங்கள். இந்த பர நிந்தனை செய்பவனுடைய முகத்தில் கூரிய ஆணியை அடியுங்கள். 63. ஏ! பயங்காரமான முகத்தையுடையவனே; நீ, இந்த பிறருக்குத் தாபத்தைக் கொடுப்பவனை முட்செடிகளினால், கடலீயைப் போன்று வறுத்து, மண்டையோட்டில் வறுங்கள். 64. ஏ! கொடூரக் கண்களையுடையவனே! நிர்தோஷிகளிடம் எப்பொழுதும் குற்றம் கண்டு பிடிக்கும் இந்தப் பாபியை ரக்தமாம்ஸம் முதலான சகதியில் அமுக்குங்கள். 65. ஏ! பயங்கரமானவனே! ஒருவருக்கும் ஒன்றும் கொடாமல் பிறருடையதையே எப்பொழுதும் எடுத்துக் அத்யாயம்–8 193 கொள்ளும் இந்த அல்பனுடையக் கையை எண்ணையில் நனைத்து நனைத்து நெருப்பில் சுடுங்கள். 66. ஏ! பயங்கரமானவனே! குருவை நிந்திக்கிறவனும் தேவர்களை அபவாதம் செய்பவனுமான இவனுடைய முகத்தில் காய்ந்த இரும்புப் பாளங்களை சொருகுங்கள். 67. மற்றவர்களை அவர்களுடைய ரகசியங்களை பேதிக்கும் மற்றவர்களுடைய பலவீனத்தைப் பிரகாசப்படுத்தும் இவனுடைய எல்லா மூட்டுகளிலும் காய்ந்த இரும்பாணிகளைச் சொறுகுங்கள். 68. ஏ துர்முகா! பிறரைத் தானம் கொடாமல், தடுப்பவனும் மற்றவர்களின் பிழைப்பினைக் கெடுப்பவனுமான இந்தப் பாபியின் நாக்கையறுங்கள். 69.(கோவில் சொத்துக்களை அபகரிக்கும்) கோவில் சொத்துக்களையும் பிராம்மணருடையசொத்துகளையும் அபகரிக்கும் இந்தப் பாபினுடைய வயிற்றைக் கிழித்து விஷ்டையின் புழுக்களால் நிரப்புங்கள். 70. ஏ அந்தகா, எவன் எப்பொழுதும் தேவர்களுக்காகவும், பிராம்மணர்களுக்காகவும், அதிதிகளுக்காகவும் உணவு தயாரிக்க வில்லீயோ, அந்த தன்னலம் மிகுந்த பாபியை - கும்பீ பாகத்தில் தள்ளுங்கள். 71. ஏ! உக்ரமான முகத்தையுடையவனே! குழந்தைகளை ஹிம்ஸிப்பவனும், நம்பிக்கை துரோகியும் நன்றி கெட்டவர்களான இவர்களை சீக்கிரமாக ரௌரவம் மஹாரௌரவம் ஆன நரகத்தில் தள்ளவும். 72. இந்தப் பிராம்மணத் துரோஹியை அந்த கூபத்தில் மத்யபானம் செய்பவனை ஜலமும் ரத்தமும் நிறைந்த குழியில் தங்கத்தைத் திருடியவனை கால சூத்ரத்தில் - குருபத்னி கமனம் செய்தவனை அறுவாச்சி என்னும் நரகத்தில் 73. இந்தப்பாபிகளுக்கு உபகாரம் செய்தவர்களை, ஒரு வருஷம் வரை அஸிபத்ரவனம் என்னும் நரகத்தில் இந்த 194 காசீ காண்டம் மஹா பஞ்சபாதகம் செய்தவர்களை எரிகின்ற எண்ணைக் கொப்பரையில் 74,75. வறுவுங்கள். ஏ கோரமான பற்களையுடையவர்களே! ஸ்த்ரீயைக் கொலீ செய்தவன், கோஹத்தி செய்தவன், ஸ்நேகத் துரோஹம் செய்தவன் இவர்களைக் கருவேல மரத்தில் தலீகீழாக வெகுகாலம் தொங்க விடுங்கள். 76. ஹே! மஹாபுஜ! இந்த மித்ர பத்னியை ஆலிங்கனம் செய்தவனை, காலீவாரிப்பற்றி, தோலீ உரித்துக் கைகளை வெட்டி விடுங்கள். 77. பிறர் பூமியை, பிறர் வயலீ எரித்தவர்களை வாலசீலம் மகாநரகத்தில் தள்ளுங்கள். 78,79. விஷம் வைத்தவன், பொய் ஸாக்ஷி கூறினவனைக் கால கூடத்தில் தள்ளுங்கள்; கள்ள நிறுவை நிறுத்தவன், சாமான்களில் கல்லீக் கலந்தவன் இவர்களைக் கண்ட மோடம் என்னும் நரகத்தில் தள்ளுங்கள்; கர்ப்பத்தை அழித்தவளை, பிறருக்கு ஸந்தாபம் அளித்தவளையும் சூலபாக நரகத்திற்குக் கொண்டு போங்கள். 80. மதுரஸம் விற்பவனான பிராம்மணனை எண்ணை ஆட்டும் செக்கில் இட்டு ஆட்டுங்கள். பிரஜைகளைத் துன்புறுத்தும் அரசனை அந்தக் கூபத்தில் தள்ளுங்கள். 81. ஹே ஹலாயுத, பசு, எள், குதிரை இவைகளை விற்பவனை பங்க், அபினி, மது விற்கும் பிராம்மணனை. 82. மதுவிற்கும் வைச்யனையும் உரலில் போட்டு உலக்கையினால் இடைவிடாமல் இடியுங்கள். ப்ராம்மணர்களை அவமானம் படுத்துபவனை பிராம்மணனுக்கு முன்னால் கட்டிலில் உட்காருபவனை, அவன் சூத்ரனாக இருந்தால் 83. அதோமுக நரகில் அதிக வேதனையைக் கொடு; அத்யாயம்–8 195 84. பிராம்மணனை ஜயித்த சூத்ரன் விப்ராபிமானி வைச்யன், யக்ஞம் செய்யும் க்ஷத்ரியன், வேதம் தெரியாத பிராம்மணன்; 85. இரும்பு, உப்பு, மாம்ஸம், தைலம், விஷம் அம்ருதம், வெல்லம் கரும்பிலிருந்து செய்யும் மற்ற பதார்த்தங்கள் இவைகளை விற்கும் அதமனான பிராம்மணனை 86. இவர்களைக் கால்களை இறுகக்கட்டி சவுக்கினால் அடித்துக் கொதிக்கும் சகதியில் அமுக்குங்கள். 87. இந்தக் குலத்திற்கு அவமானம் தரும் வியபசார ஸ்த்ரீயை எரியும் இரும்பினால் செய்த இந்த வியபசார புருஷனைக் கட்டிக் கொள்ளச் செய்யுங்கள். 88. நியமங்களைப் பின்பற்றாமல் நடுவில்விட்ட அந்தத்துஷ்டனை வண்டுகள் நிறைந்திருக்கும் நரகத்தில் தள்ளுங்கள். 89. இந்த விதமாக யமன் கிங்கரர்களுக்கு ஆக்கினையிடுவதை நேரில் கேட்டிருக்கிறோம். இவர் தங்கள் கர்மங்களைப் பற்றி ஸந்தேஹிக்கும் பாபிகளுக்குப் பயங்கரமாகத் தென்படுவார். 90. இந்த உலகில் தனது சொந்த புத்திரர்களைப் போல் பிரஜைகளை ரக்ஷிக்கிற ராஜனை, தர்ம விதிப்படி சிக்ஷை கொடுக்கின்ற ராஜனை தனது ஸபாஸதர்களாக ஆக்குகிறார். 91. எந்த அரசனுடைய ராஜ்யத்தில் நான்கு வர்ணத்தவரும் தங்கள். தங்கள் கர்மங்களை விதிப்ரகாரம் அனுஷ்டிக்கிறார்களோ, காலக்ரமத்தில் மரணம் அடைந்தபின், அவர்களும் இந்தப் பிரஜைகளாகின்றனர். 92. யாருடைய தேசத்தில் தீனர்கள், துஷ்டர்கள், ஆபத்தில் ஆழ்ந்திருப்பவன், சோகப்படுவன் இவர்கள் காணப்படுவதில்லீயோ, அந்த தேசத்து அரசர்களும் யமராஜருடைய தர்பாரிகளாக ஆகின்றனர். 196 காசீ காண்டம் 93. எப்பொழுதும் தங்கள் கர்மத்தில் ஆழ்ந்து இருக்கிற நான்கு வர்ணத்தவரும் மற்றவரும் யமபுரத்துப்ப் பிரஜைகளாகின்றனர். 94. உசீனர், ஸுதன், வ்ருஷபர்வா, ஜயத்ரன், ராஜி ஸஹஸ்ரஜித், த்ருடதன்வா, ரிபும்ஜயன். 95. யுவனாஸ்வன், தந்தவக்த்ரன், தாபாகன், ரிபுமங்களன், கர்தமன், தர்மஸேனன், பரமாதகன், பராந்தகன். 96. முதலிய அரர்களும் மற்றும் நீதிமார்க்கத்தில் நடக்கிற தர்மம், அதர்மம் இவைகளை நன்கு தெரிந்தவர்களும், ஸ்வதர்மம் என்னும் யமராஜருடைய தர்பாரில் உட்காருகிறார்கள். 97. இன்னோரு விதமான ஜனங்கள் உள்ளனர், யமராஜரையோ, தண்டம், பாசம் இவைகளை ஏந்திய பயங்கர முகமுடைத்தான யமதூதர்களையோ பார்த்ததேயில்லீ. அவர்களையும் சொல்லுகிறோம். 98. ஹே கோவிந்தா, ஹே மாதவா, முகுந்தா ஹரேமுராரே, சம்போ; சிவ, ஈசா, சசிசேகரா, சூலபாணி, தாமோதரா, அச்யுதா, ஜனார்தனா, வாஸுதேவா; ஹே தூதுவர்களே, எவர்கள் இந்த நாமங்களை ஸதாமனனம் செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்களைவிட்டு விடுங்கள். 99. ஹே கங்காதரா, அந்தகரிபோ, ஹரா, நீலகண்டா, வைகுண்ட, கைடபரிபோ, கமடஅப்ஜபாணே, பூதேசா, கண்ட பரசோ, ம்ருடசண்டிகேச, ஹே கணங்களே, யார் இவ்விதம் எப்பொழுதும் ஜபிக்கிறார்களோ, அவர்களை விட்டுவிடுதல் உசிதம். 100. ஹே விஷ்ணு, நிருஸிம்ம, மதுசூதனா, சக்ரபாணி, கௌரீபதே, கிரீசா, சங்கர, சந்த்ரசூடா, நாராயணா, அக்ஷர; நிபர்கண, சாரங்கபாணி, இந்தவிதமாக நிரந்தரமாகச் சொல்லுபவரையும் விட்டுவிடுங்கள். அத்யாயம்–8 197 1. ஹே ம்ருத்யுஞ்ஜய, உக்ர, விஷமேஷண, காமசத்ரோ, ஸ்ரீகாந்தா, பீதவஸன, அம்புதநீல, சௌரே, ஈசான க்ருத்திவஸனா, த்ரிதசகநாதா, இப்படி எவர்கள் தினமும் ஜபம் செய்கிறார்களோ, ஏ! படர்களே! அவர்களையும் விட்டுவிடவேண்டும். 2. ஹே லக்ஷ்மீபதே, மதுரிபோ, புருஷோத்தமா, ஆத்ய, ஸ்ரீகண்ட, திக்வஸன, சாந்தபினாகபாணே, ஆனந்தகந்ததர, ஸ்ரீதர, பத்மநாபா, இப்படி சிந்தனைபண்ணுகிறவர்களையும் விட்டுவிடுங்கள். 3. ஹே ஸர்வேஸ்வர, த்ரிபுரஸூதனா, தேவதேவா, ப்ரம்மண்ய தேவா, கருடத்வஜ, சங்கபாணே, த்ரயக்ஷ, உரகாபணா, பாலம்ருகாங்கமௌலே, இப்படிக் கூறுகிறவர்களிடம் தூர விலகியே இருங்கள். 4. ஹே ஸ்ரீராமா, ராகவ, ராமேஸ்வர, ராவணாரே, பூதேசா, மன்மதரிபோ, ப்ரமதாதி நாத, சாணூரமர்த்தனா, ரீஷகபதே, முராரே, இந்த ப்ரகாரம் சொல்லிக்கொண்டு இருக்கிறவர்களையும் பரித்யாகம் செய்வதே உசிதம். 5. ஹே ஆலின், கிரீச, ரஜனீ கலாவதம்ஸ, கம்ஸப்ராண நாசன, ஸனாதனா, கேசிநாதா, பத்ரிநேத்ரா, பவ, பூதபதே, முராரே எவர்களிப்படி ஸந்ததம் மனனம் செய்கிறார்களோ அவர்களையும் த்யாகம் செய்ய வேண்டும். 6. ஹே கோபீபதே; யதுபதே, வஸுதேவஸுதா, கர்ப்பூர கௌர, வ்ருஷபத்வஜ, பாலநேத்ர, கோவர்த்தனோத்தாரணா, தர்மதுரீணா, கோப - இப்படி பஜனை செய்கிறவர்களிடம் இருந்தும் விலகி நில்லுங்கள். 7. ஹே ஸ்தாரிணோ, த்ரிலோசனா, பினாகதா, ஸ்மராரே, க்ருஷ்ண, அநிருத்த, கமலா காந்தா, கஸ்மபாகே, விச்வேச்வரா, த்ரிபதகார்த்ரா, ஜடாகலாபா, இந்தவிதமாக எவர்கள் த்யானம் செய்கிறார்களோ, இவர்களையும் எப்பொழுதும் விட்டுவிடுவது நல்லது. 198 காசீ காண்டம் 8. அஹோ பிராம்மணரே, சிவசர்மா இந்த ஸுந்தரமான நாமரூபமான நூற்றெட்டு லலிதமான பதங்களையுடைய ரத்ன கூட்டத்தைத் தொடுத்த பிரஸித்த ஹாரமத்ய மணியால் சோபிக்கப் பட்ட மாலீயை எவன் (கண்டஸ்திதி) பாராமல் சொல்லுகிறானோ, அவன் யமராஜனைப் பார்க்கமாட்டான். 9. இந்த விதமாக பூமிக்கு செல்லும் தனது தூதுவர்களை எப்பொழுதும் சொல்லியனுப்புவது வழக்கம்; மேலும் பூமியில் யாராவது சிவ விஷ்ணு சின்னங்களைத் தரித்திருந்தாலும் சரி, அவர்களை தூர இருந்தே விலக்குவது நல்லது. 10. யாதொரு தீரன் தர்மராஜாவினால் சொல்லப்பட்ட பல விதமான ப்ரபந்தங்களுடன் கூடிய இந்த ஸமஸ்த பாபவிநாசினி ஹரி ஹராத்மிகமான இந்த நாமாவளியை நித்யம் ஜபம் பண்ணுகிறவன் மறுபடியும் மாதாவிடம் ஸ்தன்ய பானம் செய்யமாட்டான். 11. ஹே! ப்ரியே! இந்த விதமான பாபத்தைப் போக்கும் மனோகரமான கதையைக் கேட்டுக் கொண்டே அந்த சிவசர்மா தனக்குமுன் அப்ஸரஸ் பெண்களைப் பார்க்கத் தொடங்கினான். 12. துர்ஜனருக்கு யமராஜர், ஸத்ஜனருக்கு தர்மராஜர். ஸ்ரீ ஸ்கந்தபுராணத்தில் நான்காவது காசீ கண்டத்தில் பூர்வார்த்த பாஷா டீகாவான பிசாச லோகம் ஆரம்பித்து யமலோக வர்ணனம் எட்டாவது அத்தியாயம் ஸம்பூர்ணம். அத்யாயம்–9 199 அத்தியாயம் 9 சிவசர்மா கேட்டான், ரூபலாவண்யரும், ஸௌபாக்யசாலியாகவும், திவ்ய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும் ஸ்வர்க போகத்தில் பரிபூர்ணமாகத் திளைக்கும் இவர்கள் யார்? 1. கணங்கள் கூறினார்கள், இவர்கள் அப்ஸரஸ்கள். இந்திரன் முதலான தேவ கணங்களுக்குப் ப்ரீதிக்கு பாத்ரமான கன்னிகைகள் கீதத்தில் நிபுணைகள், ஆட்டத்தில் கெட்டிக்காரிகள், வாத்யம் வாசிப்பதில் மிகவும் தேர்ந்தவர்கள், காமகேளி விளையாட்டில் நிபுணர்கள். 2. சதுரங்க விளையாட்டில் நிகரில்லாதவர்கள், ரஸிகத்தன்மையுடன் கூடிய மனோபாவத்தில் (புத்திசாலிகள்) ஸமயோசிதமாகப் பேசுவதில் சதுரர்கள். 3. அநேக தேச விசேஷங்களையறிந்தவர்கள். நானாவித பாஷைகளில் பாண்டித்யம் பெற்றவர்கள். ஸங்கேத பாஷையில் இங்கிதக்ஞைகள். இவ்வித குணம் நிரம்பிய இவர்கள் கட்டுப்பாட்டுடன் ஸந்தோஷமாக, ஸ்வதந்த்ரமாக உலாவி வருகிறார்கள். 4. அலங்காரம் செய்து கொண்டு, லீலாவிளையாட்டில் ஆவல் நிரம்பியவர்களாக மதுர பாஷிணிகளாக இருக்கிறார்கள்; இவர்கள் யாவரும் சைகைகளினாலும், நடிப்பினாலும் யுவர்களின் மனதை ஆகர்ஷிக்கின்றனர். 5. பூர்வ காலத்தில் அம்ருதம் கடையும் பொழுது இவர்கள் பாற்கடலிலிருந்து உற்பத்தியானவர்கள். மூன்று லோகங்களையும் ஜயித்தவர்கள், காமதேவனுடைய மோஹாஸ்த்ர ஸ்வரூபமானவர்கள் ஊர்வசீ, மேனகா, ரம்பா, சந்த்ரலேகா, திலோத்தமா. 6. வபுஷ்மதிகா, காந்திமதி, நீலாவதி, உத்பலாவதி. 200 காசீ காண்டம் 7. அலம்புஷா, குணவதி, ஸ்தூலகேசி, கலாவதி, குணநிதி, கற்பூர திலகா, உர்வரா 8. அனங்கலதிகா, மதன மோஹிநீ, சகோராக்ஷீ, சந்திரகலா, முனிமனோஹரா, த்ராவத்ராவா, தபோத் பேஷ்டரீ, சுருநாமா ஸுகர்ணிகா, வாரஸஞ்ஜீவிநீ, ஸுஸ்ரீ 9. க்ருதுசுக்லா, சுபாநநா. 10. தபசுக்லா, தீர்த்தசுக்லா, ஞானசுக்லா, ஹிமாவதீ, பஞ்சாஸ்வமேதிகா, ராஜஸூயார்த்தினீ, 11. அஷ்டானி ஹோமிகா, வாஜபேய ஸதோத்பவா, முதலிய ப்ரதான அப்ஸரஸ்கள் எட்டாயிரம். 12. அந்த அப்ஸரலோகத்தில் எப்பொழுதும் அழியாத அழகுடன் கூடின நிலீத்திருக்கிற யௌவன வனத்துடன் அநேகம் ஸுந்தரிகள் வஸிக்கிறார்கள். 13. அவர்கள் எல்லாரும் கூட திவ்ய வஸ்த்ரம், திவ்யமாலீ, திவ்யசந்தனம் இவைகள் தரித்துக்கொண்டு திவ்யமான போகங்களுடன் நிறைந்தவர்களாக இச்சைப்படி சரீரம் எடுக்கும் வல்லமை பொருந்தியவர்களாக இருக்கின்றனர். 14. எந்த ஸ்த்ரீகள் மாஸோபவாஸ வ்ரதம் இருந்துகொண்டு தெய்வாதீனத்தால் ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை ப்ரம்மசர்யத்திலிருந்து தடுமாறுகிறார்களோ, 15. அந்த ஸ்த்ரீகளே, இங்கு திவ்ய போகங்களுடனும் ரூபலாவண்யங்களுடனும், திவ்ய ஸம்பத்துகளுடனும், எல்லா இச்சைகளிலும் பரிபூர்ணர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த அப்ஸரலோகத்தில் வஸிக்கிறார்கள். 16. விதி பூர்வமாக ஸாங்கோபாங்கமாக காமவ்ரதத்தை அனுஷ்டித்ததினால் இந்த லோகத்தை யடைந்து, ஸ்வதந்த்ரர்களாய் தேவபோகத்துடன் இருக்கிறார்கள். அத்யாயம்–9 201 17. ஏ! ப்ராம்மணோத்தமரே! எந்தப் பதிவ்ரதா ஸ்த்ரீகள் பலவானான புருஷனால் பலாத்காரம் செய்யப்பட்டு பர்த்தாவிற்காகவே அவனுடன் ஸம்போகம் செய்கிறார்களோ, அவர்களே இங்கு வந்து வஸிக்கிறார்கள். 18. ஸ்வாமி அசலூருக்குப்போன போது எப்பொழுதுமே ப்ரம்மசர்யம் அனுஷ்டிக்கிறவள் தெய்வாதீனமாக ஒருமுறை ப்ரம்மசர்யத்திலிருந்து வழுவினவள். அந்த அழகிய பெண்மணிகள் அந்த அப்ஸரஸ்லோகத்தில் வஸிக்கின்றனர். எந்த வராங்கனைகள் விதவிதமான வாஸனையுள்ள சந்தனங்களைப் பூசிக்கொண்டு மிகவும் வெளுப்பான கற்பூரத்தைப் போன்ற 19. அதிசூக்ஷ்மமான வெளுத்த மேகலீயும், புராணகடம் நுனி பக்கமுள்ள 20. ஸ்வர்ண வர்ணமான கடம் நீலவர்ணமும், பருமனுமான கச்சை. 21. ஸுகதிரவ்யங்கள் சேர்த்தத் தாம்பூலம், விசித்ரமான அலங்காரங்களுடன் கூடிய ரதியின் மாளிகை மந்திரத்திற்குப் பொருத்தமான படுக்கைகள்; 22. அநேக நூதன வஸ்துக்கள் இவைகளினால் ப்ராம்மண தம்பதிகளுக்குப் பூஜை செய்து இந்தக் காம்யபோக தானத்தை, ஒவ்வொரு சூரிய ஸங்கராந்தி ஸமயத்திலும், 23. ஒவ்வொரு த்விதீய பாதத்தின் போதும் கோதாத் முதலிய மந்த்ரங்களைச் சொல்லி தானம் செய்கிறார்கள். 24. காம ரூபமுடைய தேவன் ஸந்தோஷமடையட்டும், என்று சொல்லுகிறார்கள். ஏ, த்விஜோத்தமா! இந்த அங்கனைகள், அப்ஸரஸ்த்ரீகள் மத்தியில் மதிப்புடையவர்களாய், கல்ப பர்யந்தம் இங்கு வஸிக்கிறார்கள். 202 காசீ காண்டம் 25. யாதொருபெண் கன்னிகையாக இருக்கும் பொழுது ஏதாவது ஒரு தேவதையினால் மோஹிக்கப்பட்டு, ஆனால் அதன் பிறகு ப்ரம்மசாரிணியாக இருந்து 26.அந்தப் பூர்வ விருத்தாந்தத்தை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, யதாசமயத்தில் மரணம் அடைந்தால் அவள் திவ்ய ரூபதாரிணியாக, அந்த அப்ஸரலோகத்தில் சேர்ந்து வஸிக்கிறாள். 27. ப்ராம்மணோத்தமரான சிவசர்மா அப்ஸரலோகத்தை அடைவதற்கான காரணத்தைக் கேட்டுக் கொண்டே, அதன் பிறகு க்ஷணமாத்திரத்தில் விமானமூலமாகவே விஷ்ணுவின் இரண்டு பாரிஷதர்களுடன் சூரியலோகமடைந்தார். 28.கதம்பபுஷ்பத்தின் மகரந்தப் பொடிகளால் எங்கும் வ்யாபிக்கப்பட்டிருப்பதுபோல ஸூர்யலோகம் ஸூர்ய கிரண ஸமூஹங்களினால் வியாபிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார். 29. அங்கு ஸூர்ய மண்டலம் எப்படி யிருக்கிறதென்பதையும் பார்த்தார். ஒன்பதாயிரம் யோஜனை சுற்றளவு இருக்கிறது; ஏழு குதிரைகள் பூட்டியிருக்கிற கடிவாளங்களைக் கையில் பிடித்துக் கொண்டு, அருணன் ஸூர்ய ரதத்தின் முகப்பில் உட்கார்ந்திருக்கிறான். அவன் முன்னால் அப்ஸரஸ்களும், முனீஸ்வரர்கள், கந்தர்வர்கள், ஸர்பங்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள் இவர்கள் ஆச்ரயித்து இருக்கிறார்கள். அதிவேகமாகச் செல்லக்கூடிய விசித்ரமான சக்ரத்துடன் கூடிய ரதத்தில் ஸூர்ய பகவான் வீற்றிருக்கிறார். இரண்டு கைகளிலும் இரு ரக்த நிறமுள்ள தாமரைப் பூக்கள் வைத்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டஸூர்ய பகவானை அறிந்து சிவசர்மா, கையைக் குவித்துக் கொண்டு ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். 30-31-32. ரவிதேவரும் அந்த நமஸ்காரத்தை ஒருசிறிது புருவத்தின் அசைப்பால் க்ரஹித்துக் கொண்டு அத்யாயம்–9 203 க்ஷணமாத்ரத்தில் மிகவும் அதிதூரம் ஆகாசமார்க்கத்தை ஆக்ரமித்துக் கொண்டார்; 33. பரம ஸந்தோஷமடைந்த சிவசர்மா, தினமணி ஆக்ரமித்துப் போனபிறகு தன்னுடன் இருக்கும் இரு பகவத்பக்தர்களையும் பார்த்துக் கூறினார்.எந்தப் புண்ணியத்தின் மூலமாக சூரிய லோகத்தின் ப்ராப்தி எனக்குக் கிடைத்தது? 34. நீங்கள் பந்துக்கள் என்றெண்ணி விஸ்தரித்துச் சொல்லுங்கள். ஏழடி ஒன்றாய் எடுத்து வைத்தால் ஸாதுக்களுக்குள் ஸ்நேகிதபாவம் ஏற்பட்டு விடுகிறது. 35. விஷ்ணுவின் இரண்டு பாரிஷதகணங்களும் கூறினார்கள், ஓ மஹாப்ராக்ஞரான ப்ராம்மணோத்தமரே! தங்களிடம் சொல்லக் கூடாத ஸமாசாரம் ஒன்றுமில்லீ. ஏனென்றால் ஸத் ஜனங்களுடைய ஸங்கத்தினால்தான் ஸாது மஹாத்மாக்களின் ஸத் கதை ஆரம்பமாகிறது. 36. எல்லா பூதங்களையும் ஒன்று சேர ஆள்பவன் எல்லாவற்றுக்கும் மூலகாரணமும் நாமரூபகோத்ரமில்லாதவரும் 37. ஜகத்தில் உற்பத்தியும் ப்ரளயமும் எவருடைய புருவ நெருப்பின் பலனோ, அவர்களுமான ஸர்வாத்மா வேத புருஷர்கள் ஸ்பஷ்டமாக என்ன சொல்கிறார்கள் என்று கேட்டால், 38. ஆதித்ய மண்டலத்தில் நானே எந்த ஜனங்கள் மற்றவர்களை உபாஸிக்கிறார்களோ, அவர்கள் அந்தகாரமாகிய தமஸ்ஸில் பிரவேசிக்கிறார்கள். 39. ஓ ப்ராம்மணோத்தமரே! இப்படி நிச்சயமாகக் கூறும் வேதத்தின் மூலமாகப் ப்ராம்மணர்கள் திரும்பத்திரும்ப நிச்சயம் செய்துகொண்டு இந்த ஆதித்யரூபமான ப்ரம்மம் ஒன்றையே உபாஸனை செய்கிறார்கள். 204 காசீ காண்டம் 40. எந்தப் பிராம்மணர்கள் காயத்ரீ உபதேசம் பெற்று மூன்று காலமும் ஜபம் செய்யவில்லீயோ, அவர்கள் ஒரு வாரத்திற்குள்ளேயே பதிதன் ஆகிறார்கள். இதற்குக் கொஞ்சமும் ஸந்தேஹமில்லீ. 41-42-43. அதிகாலீயில் ஸூர்யன் பாதி உதயமாகிற பரியந்தம் ஆதித்யனின் முன்னால் நின்று கொண்டு ஸாவித்ரி மந்த்ரத்தை ஜபிப்பவர்கள், ஸாயங்காலம் ஆஸனத்தில் அமர்ந்துகொண்டு நக்ஷத்ரங்கள் உதயமாகும்வரையில் ஸூர்யனுக்கு முன்னால் ஜபம் செய்கிறவர்கள் சரியாக மத்யான காலத்தில் அதாவது சூரியன் மறுபக்கம் சாயாமல் தலீக்கு நேராக நிற்கிரானோ அதுவரை மத்யான ஸந்த்யை என்று கூறப்படும். அந்தக் காலங்களில் ஸூர்யனுக்கு நேராகப் பார்த்து ஜபம் செய்கிறவர்கள் காலம் நழுவி விடாமல் சரியான காலத்தில் செய்ய வேண்டும். 44. சரியான காலத்தில்தான் எல்லா ஓஷதிகளும் பலனைத் தருகின்றன. எல்லா வ்ருக்ஷங்களும் காலமறிந்துதான் பூக்கின்றன. மேகங்களும் காலம் அறிந்துதான் மழை பொழிகின்றன. அதனால் காலத்தை ஒரு பொழுதும் அலட்சியம் செய்யக்கூடாது. மந்தேகம் என்னும் பெயருடைய ராக்ஷஸ கணங்கள் தேக நாசமடையும் நிமித்தம் ரவிதேவருடைய உதய அஸ்தமன ஸமயங்களில் ப்ராம்மணர்கள் மந்திரத்துடன் கூடக் கொடுக்கும் மூன்றுகை ஜலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 45. எவர்கள் காலகாலத்தில் காயத்ரீ மந்த்ரத்தினால் புனிதமாகப்பட்ட மூன்றுகை ஜலத்தை ஸூர்யதேவனுக்கு அர்ப்பிக்கிறார்களோ, அவர்களுக்கு மூன்று லோகங்களையும் தானம் செய்த பலன் கிடைக்கிறது. 46. ஸூர்ய நாராயணன் காலமறிந்து ஒழுங்காக உபாஸனை செய்கிறவர்களுக்கு எதைத்தான் கொடுக்கமாட்டான்? அவர் ஆயுள், ஆரோக்யம், ஐச்வர்யம், தனராசி, பசுக்கள். அத்யாயம்–9 205 47. புத்ரன், மித்ரன், களத்ரம் அநேக க்ஷேத்ர தர்சனம், சுகந்தம், ஸ்த்ரீ, வஸ்த்ரம், கீதம், தாம்பூலம், போஜனம், வாஹனம், தேவாலயம் இந்த அஷ்டவிதமான ஸ்வர்க மோஹங்களும் சொர்க்க மோக்ஷத்தையும் கொடுக்கிறார். 48-49. பதினெட்டு விதமான வித்தைகளில் மீமாம்ஸை மிகவும் ச்ரேஷ்டமானது. அதைவிட மேலானது தர்க்க சாத்திரம், தர்க்க சாஸத்திரத்தைவிடப் புராணம் மேலானது. தர்ம சாஸ்த்ரம் புராணங்களை விட மேலானது. தர்ம சாஸ்த்திரங்கள் விட வேதம் பரம ச்ரேஷ்டமானது. வேதங்களைவிட உபநிஷத் மேலானது. காயத்ரீ உபநிஷதங்களைவிட மேலானது. 50. ப்ரணவத்துடன் கூடிய காயத்ரீ எல்லா மந்த்ரங்களையும் விட துர்லபமானது. மூன்று வேதங்களும் காயத்ரியைவிட மேலானது ஒன்றுமில்லீ என்று கூறுகின்றன. 51. காயத்ரிக்கு ஸமமான மந்திரமில்லீ காசிக்கு ஸமமான புரியுமில்லீ. விச்வேச்வரரை ஒத்த லிங்கமும் இல்லீ. இது முக்காலும் ஸத்யம். 52. காயத்ரீ வேதத்தினுடைய மாதா, காயத்ரியே ப்ராம்மணர்களுக்குத்தாய்: தன்னை ஓதுபவர்களை கரை ஏற்றுவதால் காயத்ரீ என்று பெயர் வந்தது. 53. ஸூர்யனுக்கும் காயத்ரிக்கும் வாச்ய வாசக ஸம்பந்தமுண்டு; காயத்ரிக்கு ஸாக்ஷாத் வாச்யர் ஸவிதா; காயத்ரீ ஸவிதா (சூரியனுடைய) வாசகா. 54. ஜிதேந்த்ரியரான விச்வாமித்ரர் க்ஷத்ரியனாக இருந்த போதிலும் இந்த காயத்ரீ மந்திரத்தை ஜபித்து ராஜர்ஷியாக இருந்தவர் - ப்ரம்மர்ஷியானார். 55. மேலும் அவர் வாழ்க்கையினுடைய ப்ரபாவத்தினால் புதிதாக லோகம் ஒன்றை ஸ்ருஷ்டி பண்ணும் சக்தியையடைகிறார். ஒழுங்கான முறையில் காயத்ரியை ஜபித்து வந்தால் அவளுடைய 206 காசீ காண்டம் அனுக்ரஹத்தினால் என்னதான் கிட்டாது! 56. வேதத்தைப் பாடம் செய்வதினாலும் சாஸ்திரத்தை அத்யயனம் பண்ணுவதினாலும் ப்ராம்மணனாக மாட்டான், கேவலம் காயத்ரியை மூன்றுகாலம் அப்யாஸம் பண்ணுவதினாலேயே ப்ராம்மணனாகிறான். மற்றவிதமாக ஆகமுடியாது. 57. காயத்ரியே மஹாவிஷ்ணு, காயத்ரியே பரமசிவன், காயத்ரியே ப்ரம்மா; ஆகையினால் காயத்ரியே ப்ரம்மா விஷ்ணு சிவஸ்வரூபமான மும்மூர்த்திகளுமான வேதமும்கூட. 58. இந்தக்கிரண ஸமூகத்தினால் அலங்கரிக்கப்பட்ட திவாகர தேவனே ப்ரம்ம விஷ்ணு மஹேச்வரஸொரூபரும் ஆவார் ஸ்வரூபரும் ஸம்பூர்ண ஜ்யோதி ஸமூகமும். காலமும் அதை நடத்துபவரும் அவரேதான். 59. ஸாரம் அஸாரம் இவைகளை அறிந்த விவேகிகளாகிற தாங்கள் வஸிக்கின்ற வைகுண்ட லோக வாஸிகள் ஸூர்ய தேவனை உத்தேசித்து இந்தஸ்துதியைப் பாடுகிறார்கள். 60. ஏ மனிதர்களே! இதே தேவன் ஸமஸ்ததிக்குகளுக்கும், திக்குகளுக்கப்பாலும், உயரேயும் கீழேயும், பசு, பக்ஷி பகுதிகளிலும் வ்யாபித்து இருக்கிறார்- இவரே அனாதி நாதனாக உற்பத்தியாகியிருக்கிறார்- இவரே மாதாவின் கர்பத்தில் பிரவேசித்துப் பிறக்கிறார். பிறந்தார், பிறப்பார். ஒவ்வொரு பொருளிலும் இவரே வ்யாபித்திருக்கிறார், இவரே ஸர்வவ்யாபி. 61. ஏ! விப்ரா! யாதொரு ப்ராம்மணன் சோம்பலில்லாமல் மேற்கூறிய ஸூர்ய ஸூக்தத்தினால் ஜபம் செய்கிறானோ, அவன் எப்பொழுதும் ஸூர்யனுக்கு ஸமமாக ஆகிஸூர்ய லோகத்தில் வசிக்கிறான். 62. பிராம்மணா! புஷ்ய நக்ஷத்ரத்துடன் கூடிய ஞாயிற்றுகிழமை பூசம், ஹஸ்தம், மூலம், உத்தராடம், அத்யாயம்–9 207 உத்திர பங்குனீ, இந்த நக்ஷத்ரங்களுடன் கூடின ஆதித்யவாரத்தில் எது செய்கிறானோ அது கட்டாயம் பலனிக்கும். 63. சிரத்தையுடன் ஒருவேளை உணவுடன் காமக்ரோதம் இல்லாமல் வ்ரதம் இருந்து புஷ்யமாதத்து (தைமாதம்) ரவிவாரத்தில் ஸூர்யோதய காலத்தில் ஸ்நானம் செய்து ஸூர்யனை உத்தேசிந்து, தான, ஹோம ஜபம் பூஜைகளை ஒருவன் செய்தானேயானால் அவன் அதிக தேஜஸ்ஸுடன் போகங்களை அனுபவித்து அப்ஸரஸ்த்ரீகளுடன் ஸூர்ய லோகத்தில் வஸிக்கிறான். 64-65. மகர சங்க்ராந்தி, துலாம், மேஷம் - தனுர், மிதுனம், கன்யா மீனம், விருஷப விருச்சிகம், சிம்மம், கும்பம், இந்த சங்க்ராந்தி மஹாவ்ரதம் இருந்து மஹாதானம் செய்ய வேண்டும். 66. எண்ணை நெய்யுடன் ஹோமம் செய்ய வேண்டும். ப்ராம்மண போஜனம் செய்விக்கவேண்டும். பித்ருக்களை உத்தேசித்து அந்தந்த திதிகளில் ச்ராத்தம் செய்யவேண்டும். 67. மஹாபூஜை பண்ணவேண்டும், மஹாமந்திரங்களை ஜபிக்க வேண்டும். அப்படி செய்யும் அறிவாளிகள் ஸூர்ய லோகத்தில் ஸூர்யனுக்கு ஸமமாக வஸிக்கிறார்கள். 68. எவர்கள் ஸங்கராந்தியன்று ஸூர்ய தேவனை ஆராதிக்கிறார்களோ அவர்கள் ஒரு பொழுதும் தரித்ரனாகவோ துக்கியாகவோ, ரோகியாகவோ குரூபியாகவோ, துர்பாக்யனாகவோ ஆகமாட்டார்கள். 69. யார் ஸங்கராந்திகளில் புண்ணிய தீர்த்ததில் ஸ்நானம், தானம், கபிலபசுவின் நெய்யுடன் எள்ளைச் சேர்த்து விசேஷ ஹோமம் செய்யாதவர்கள் கண்ணில்லாமலும், 70. வாயில்லாமலும் நலிந்தவுடலும், மலினவஸ்திரமுமாக வாயில் வாயிலாக நுழைந்து கொடு, 208 காசீ காண்டம் கொடு என்று கேட்பவர்களாகக் காணப்படுகிறார்கள். 71. அறிவாளியானவன் ஸூர்யக்ரஹணத்தன்று குருக்ஷேத்ரத்தில் கடுகாகிலும் தங்கத்தை தானம் செய்வானானால் சூரிய லோகத்தில் புண்ணியசாலியாக வாஸம் செய்வான். 72. திவாகரனை ராஹு விழுங்கிய ஸமயத்தில் அதாவது க்ரஹண ஸமயத்தில் எல்லா ஜனங்களும் கங்கா ஜலத்திற்கு ஸமானமானவைகளாகவும், எல்லா பிராம்மணர்களும் சாக்ஷாத் ப்ரும்மாவிற்கு சமானமானவர்களாகவும், நம்மால் கொடுக்கப்படும் எல்லா வஸ்துகளும் தங்கத்திற்கு துல்யமாகவும் ஆகின்றன. 73. ஸூர்ய க்ரஹண ஸமயத்தில் கொடுக்கப்படும் தானம், ஜபம், ஹோமம், ஸ்நானம் முதலிய எந்தெந்த நற்கர்மங்கள் செய்கிறோமோ, அவைகள் எல்லாம் ஸூர்யன் உதயமாவதற்குக் காரணமாகின்றன. 74. ரவிவாரத்துடன் கூடிய ஸங்கராந்தியில். அல்லது க்ரஹணத்தில் நாம் ஸம்பாதிக்கும் புண்ணியமெல்லாம் அக்ஷயமாய் விளங்குகின்றன. 75. ஷஷ்டி ஸப்தமி திதிகளில் ரவிவாரமும் கூடியிருந்தால் அந்தத் திதியில் செய்யும் புண்ணிய காரியங்களின் பலன் ஸூர்யலோகத்தில் அனுபவிக்கப்படுகிறது. 76. ஹம்ஸம், பானு, ஸஹஸ்ராம்ஸு, தபனன், தாபனன், ரவி, விகர்த்தனன், விவஸ்வான், விஸ்வகர்மா, விபாவஸு: 77. விஸ்வரூபன், விஸ்வகர்த்தா, மார்த்தாண்டன், மிஹிரன்; அம்ஶúமான், ஆதித்யன், உஷ்ணபூ:, சூரியன், அர்யமா, ப்ரத்ந, திவாகரன். அத்யாயம்–9 209 78. த்வாதஶாத்மா, ஸப்தஹயன், பாஸ்கரன், அஹஸ்கரன், ககன், சூரன், ப்ரபாகரன், ஸ்ரீமான், லோகசக்ஷு, ககேஸ்வரன், 79. த்ரிலோகேசன், லோகாக்ஷீ, தமோரி, சாச்வதன், சுசி, கபஸ்திஹஸ்தன், தீவ்ராம்ஶú, தரணி, ஸீமஹோரணி: 80. த்யுமணி: ஹரிதஸ்வன், அர்க்கன், பானுமான், பயநாஸனன், சந்தோஷவான், வேத வேத்யன்: பாஸ்வான், பூஷா, உஷாகபி: 81. ஏகசக்ர ரதன், மித்ரன் மந்தேஹாரி, தமிஸ்ரஹா; தைத்யஹா, பாபஹர்த்தா, தர்மா, ப்ரும்மப்ரஹாஸகன் 82. ஹேலிகா, சித்ரபானு:, கலிக்ன: தார்க்ஷ்யவாஹன:, திக்பதி:, பத்மிநீநாதன்:, குசேசேகரன் ஹரி: 83. தர்மரஸ்மி: துர்நிரீக்ஷ்யன், சண்டாம்சு: கஸ்யபர்த்மஜன்; இந்த எழுபது பேர்களும் சூரியனுடைய பவித்ர நாமங்களாகும். 84. இந்த ஒவ்வொரு நாமங்களின்கூட நான்காவது விபக்தியை ஏகவசனமாக ஆக்கி முதலில் ப்ரணவமும், கடைசியில் நம: என்றும் சேர்த்து ஒவ்வொரு நாமம் சொல்லும் பொழுதும் சூரியனைப்பார்த்து பார்த்து 85. இரண்டு கைகளையும் சேர்த்து ஜலத்தை எடுத்துக்கொண்டு அதிநிர்மலமான செம்பாலான பாத்திரத்தின் மத்தியில் 86. செவ்வரளிப்பூ, ரக்தசந்தனம், அருகம்புல்லின் தளிர்கள், அக்ஷதை, தர்ப்பை, இவைகளை வைத்து, 87. பரம பூஜ்யனான சூரிய பகவானைக் குறித்து, தலீபக்கம் இரு கைகளையும் உயர்த்தி முழந்தாள் பணித்து, கண்களையும், மனத்தையும் ஒருமனப்படுத்தி அர்க்யம் கொடுக்க வேண்டும். 210 காசீ காண்டம் 88. உதயத்திலும் அஸ்தமனத்திலும் பிரத்யேக மந்திரங்களை உச்சாரணம் செய்து கொண்டு, எழுபது எண்ணிக்கை வரை பரம ரஹஸ்யமான மஹா மந்திரங்களை உச்சரித்து நமஸ்காரம் பண்ண வேண்டும். 89. இம்மாதிரி அனுஷ்டானம் பண்ணுகிறவன் ஒரு பொழுதும் துக்கமனுபவிக்கமாட்டான், தரித்ரனுமாகமாட்டான். 90. ஜன்ம ஜன்மாந்திரங்களில் சேர்த்து வைத்த பாபத்துடைய பலனாகப் பீடித்த பயங்கரமான வியாதிகளிலிருந்து ஔஷதமில்லாமலும், வைத்யனில்லாமலும், பத்யமிருக்காமலும், விடுபடுகிறான். பிறகு காலகதியடைந்த பிறகு ம்ருத்யுவை அடைந்த பிறகு எப்பவும் கௌரவத்துடன் சூரிய லோகத்தில் வசிக்கிறான். 91. ஏ! உத்தமரே, உமக்கு சூரிய லோகத்தைப்பற்றி மிகவும் சில அம்சங்களே கூறியுள்ளேன். ஆச்சர்யம்! இந்த மஹா தேஜோ நிதியின் விசேஷங்களை யார்தான் அறியமுடியும்? 92. சிவசர்மா இந்த பவித்ரமான கதையைக் கேட்டுக் கொண்டே க்ஷணமாத்திரத்தில் இந்திரனுடைய மஹாபுரியைப் பார்க்கத் தொடங்கினான். 93. அகஸ்திய முனி கூறினார். அப்ஸரலோகம். சூரியலோகம், ஆகியகதைகளைத் கேட்பதால் மனுஷன் ஒருபொழுதும் தரித்ரத்தை அனுபவிக்க மாட்டான், அதர்மத்திலும் ப்ரவர்த்திக்க மாட்டான். 94. ப்ராம்மணர்கள் இக்கதையை அவசியம் கேட்க வேண்டும். வேதம் ஓதுவதினால் பெறும் புண்ணிய பலனைப்போல இக்கதையைக் கேட்பதினாலும் கிடைக்கிறது. 95. ப்ராம்மணன். க்ஷத்ரியன், வைச்யன் இவர்கள் இந்த உத்தம அத்யாயத்தைக் கேட்ட மாத்ரத்தில் இந்த அத்யாயம்–9 211 லோகத்தில் பாதகங்களிலிருந்து விடுபட்டு, அதி உத்தமகதியடைவார்கள். 96. இது ஸ்காந்த புராணத்தில் நான்காவது காசீ கண்டத்தில் பூர்வார்த்த பாஷா டீகாவான அப்ஸா, ஸூர்ய லோகவர்ணனம் என்ற ஒன்பதாவது அத்யாயம் முடிந்தது. 212 காசீ காண்டம் அத்யாயம் 10 சிவசர்மா கூறினார்: மிகவும் மனோபிராமம் ஆனதும் நேத்ரங்களுக்கு ஸுகமளிக்கக் கூடியதுமான இந்த உத்தமமான புரியின் பெயரென்ன? இதன் அரசன் யார் என்றான். 1. விஷ்ணு கணங்கள் கூறினார்கள்; பாக்யவானான சிவசர்மாவே, இது இந்திரனுடைய அமராவதிப் பட்டணமாகும். இங்கு நன்றாக ஜலம்விட்டதனால் வளர்ந்த விருக்ஷங்களுக்கு ஸமமான ஜனங்களே விஹரிக்கிறார்கள் 2. இதை விசுவகர்மா மிகவும் தபோபலத்தினால் கட்டி முடித்தான். இங்கு பகலிலுல் கூட சந்திரிகை மாளிகைகளின் சோபைகளை, 3. சந்திரன் அமாவாஸ்யை அல்லது வேறு சில விசேஷமான ஸமயங்களில் கண்களுக்குத் தென்படாமல் இருப்பானல்லவா? அப்பொழுதுகூட அவன் தன்னுடைய பிரியமான நிலவை இந்த மாளிகைகளில் ஒளித்து வைக்கிறான். 4. இந்த நகரத்தினுடைய நிர்மலமான சுவர்களில் தங்களுடையவே பிரதி பிம்பங்களைப் பார்த்து லயிக்கும் இந்திரனால் கொண்டு வரப்பட்ட அவனுடைய காதலிகள் தங்களுடைய நிழல்களையே இந்த்ரனால் கொண்டு வரப்பட்ட அந்நியக் காதலிகள் என்றே நினைத்து, சித்திரசாலீயில் பிரவேசிக்க மாட்டார்கள். என்ன ஆச்சர்யம்! 5. இந்தப் பட்டிணத்தில் அந்தகாரம் இந்த்ர நீலக்கற்களால் கட்டப்பட்ட அழகிய கோவில்களில் தங்களுடைய இருட்டாகிய நீலத்தை மறைத்துப் பகலில்கூட நிர்பயமாய் உட்கார்ந்திருக்கிறது. 6. இந்தப் பட்டணத்து ஜனங்கள் சந்திரகாந்த மணி என்ற பெயர் பெற்ற கற்களில் பெருகும் ஊற்றிலிருந்து அத்யாயம்–10 213 நிர்மலமான ஜலத்தைக் குடமாக நிரப்பி வைத்த பின் வேறு ஜலத்தை விரும்புவதில்லீ. 7. இந்த உலகத்தில் சிற்பிகள் ஒருவர் கூட இல்லீ. தட்டானுமில்லீ, ஏனென்றால் இங்கு கற்பக விருக்ஷங்களே வஸ்திரங்களையும், நகைகளையும் ஏராளமாக அளிக்கின்றன. 8. இந்த நகரத்தில் சித்த வித்யாப்ரவீணர்களான ஜனங்களும் இல்லீ, ஏனென்றால் இங்கு ஸாக்ஷாத் சிந்தாமணியே எல்லாருடைய கவலீகளையும் அறுத்து விடுகிறது. 9. இந்த இடத்தில் சமையல் கலீயில் தேர்ந்த சமையல் காரனும் கிடையாது. ஏனென்றால் காமதேனுவிடமிருந்து ஷட்ரஸங்களும் கறக்கப்படுகின்றன. 10. எதனுடைய உத்தமமானக் கீர்த்தி ச்ரவணம் செய்யப்படுகிறதோ, எது உத்தமமான சிறந்த குதிரைகளுக்குள் ரத்னமாகக் கருதப்படுகிறதோ, அந்த மஹாபலம் பொருந்திய உச்சைச்ரவம் என்ற குதிரையும் இந்தப் பட்டணத்தில் இருக்கிறது. 11. ஸ்படிகத்தைப்போல் உஜ்வலமானதும் நடமாடும் கைலாசமலீக்கு ஸமமானதுமான நான்கு தந்தங்களையுடைய ஐராவதம் என்ற யானையும் இங்கு தானியிருக்கிறது. 12. இந்த உலகத்தில் வ்ருக்ஷங்களுக்குள் ரத்னமான பாரிஜாதமும், ஸ்த்ரீ ரத்னங்களுக்குள் ப்ரஸித்தமான ஊர்வசியும், வனங்களுக்குள் பிரஸித்தமான நந்தனவனமும், ஜலத்துக்குள் ரத்னமான மந்தாகினியும் இருக்கின்றன. 13. வேதங்களில் குறிப்பிடப்பட்ட முப்பதுத்துமுக்கோடி தேவகணங்களும் இங்கேயே அனுதினமும் ஸேவை செய்யும் தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 214 காசீ காண்டம் 14. ஸ்வர்க்கத்தில் இந்த்ர பதவியைவிட மேலானது ஒன்றும் கிடையாது. மூன்று உலகங்களில் உள்ள ஸமஸ்த ஐஸ்வர்யங்களும் இதற்கு ஈடாக மாட்டாது. 15. ஆயிரம் அச்வமேத யாகங்களுடைய ஆவர்த்தனத்தினால் யார் லாபம் அடைகிறார்களோ அவர்களுக்கு ஸமமான பவித்ரமான மகான் உலகில் வேறு ஒருவரும் இருக்க முடியாது. 16.அர்ச்சிஷ்மதி, ஸம்யமினி, புண்ணியவதி, அமராாவதி, கந்தவதி, அனகா என்னும் திக் பாலர்களுடைய பட்டணங்கள் கூட நிறைசெல்வம் கொழிக்கும் இந்த அமராவதிக்கு ஈடாகாது. 17. ஸஹஸ்ராஜன், திவஸ்பதி, தேவராஜன், சதக்ரிது, ஆகிய பேர்கள் தேவராஜனைத் தவிர மற்றவர்களுக்கில்லீ. 18. மற்ற ஏழு லோக பாலர்களும் இவனையே பூஜிக்கிறார்கள். நாரதாதி முனீஸ்வரர்களும் ஆசீர்வாதத்தினால் இவரையே ஸ்துதிக்கிறார்கள். 19. இந்த இந்த்ரனுடைய உறுதியினால் மற்ற மூன்று லோகங்களும் ஸ்திரமாக இருக்கின்றன. இந்திரன் தோல்வியடைந்தால் மற்ற மூன்று லோகங்களும் தோல்வியடைந்த மாதிரி. 20. இந்த இந்த்ர பதவியை அடையும் அபிலாஷையுடன் தைத்யர்கள், தானவர்கள், மனிதர்கள் கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள் எல்லாரும் நியமத்துடன் உக்ரமாக தபஸ் செய்கிறார்கள். 21. அச்வமேத யக்ஞங்களுடன் கர்த்தாக்களான ஸகரர் முதலிய பூபாலர்கள் இந்த இந்த்ர பதவியை அடைவதற்காகப் பெரியபெரிய முயற்சிகள் செய்தார்கள். 22. எவனோருவன் உலகில் ஜிதேந்திரியர்களாக விதிபூர்வமாக நூறு அச்வமேத யாகங்களை விக்கினமில்லாமல் செய்து முடிக்கிறார்களோ, அவர்களே அமராவதியில் இந்த்ராணியை அடைய முடியும். அத்யாயம்–10 215 23. யார் இந்த நூறு அச்வமேத யக்ஞங்களைச் செய்து முடிக்க வில்லீயோ அந்த ராஜமஹாராஜர்கள், மேலும் ஜ்யோதிஷ்டோமம் முதலிய யாகங்களைச் செய்து முடித்த பிராம்மணோத்தமர்கள் இந்த அமராவதியில் வசிக்கின்றனர். 24, 25. துலாபுருஷர், ஹிரண்யகர்ப்பர், ப்ரம்மாண்ட கல்பதரு, கோஸஹஸ்ர, ஹிரண்யகாமதேனு ஹிரண்யாஸ்வ, ஹிரண்யாஸ்வரத, ஹிரண்யஹஸ்திரத, பஞ்சலாங்கலா, தராதரன், விஸ்வசக்ர, கல்பலதா, சப்தஸாஹர், ரத்னதேனு, மஹாபூத இந்த பதினைந்து மஹாதானங்களைச் செய்தவர்களான நிர்மலாத்மாக்கள் இந்த அமராவதியை அடைகிறார்கள். இன்பமான வசனங்களைப் பேசுகிறவர்கள், யுத்தத்தில் புறமுதுகிட்டு ஓடாதவர்கள், வீரப்படுக்கையில் படுத்தவர்கள், தீரர்கள், சூரர்களான அரசர்கள் இங்கு வசிக்கின்றனர். 26. மகத்தான யக்ஞ வித்யாயஜூகர்கள் (வித்யாவிசாரதர்கள்) இங்கு வஸிக்கின்றனர். பேச்சுவாக்கில் நாங்கள் உனக்கு இந்திர பதவியைப் பற்றி வர்ணித்தோம். 27. இப்பொழுதும் அர்ச்சிஷ்மதீ என்னும் பெயருடைய மங்கள கரமான அக்னிபுரியைப் பாருங்கள். அக்னி தேவரை உபாஸிக்கிற ஜனங்கள் இங்கு வஸிக்கிறார்கள். 28. ஸத்வ குணத்தில் த்ருடமாயிருக்கிறவர்கள் ஜிதேந்திரியர்கள் ஆகிய புருஷர்களும் திடமான ஸத்வ குணத்துடனும் அக்னிப்ரவேசம் பண்ணியவர்களும், அக்னிக்கு ஸமமான தேஜஸ் உள்ள பெண்களும் இந்த அக்னி லோகத்தில் வஸிக்கிறார்கள். 29. அக்னிஹோத்ரத்தில் தத்பரராய் உள்ள ப்ராம்மணரும், அக்னி உபாஸகர்களான ப்ரம்மசாரிகளும், 216 காசீ காண்டம் போல் தேஜஸ்ஸுள்ளவர்களும் இந்த அக்னிலோகத்தில் வஸிக்கிறார்கள். 30. குளிர் காலத்தில் குளிர் நீங்குவதற்குள் விறகு கட்டுகளை எவர்கள் செய்கிறார்களோ அவர்கள் இந்த அக்னிலோகத்தில் வஸிக்கிறார்கள். குளிர்காலத்தில் குளிர் காய அக்னிகுண்டங்கள் ஏற்படுத்துகிறவர்களும் அக்னிக்கு சமீபத்தில் இடம் பெறுகிறார்கள். 31. எவர்கள் ச்ரத்தையுடன் அநாதைகளுக்கு அக்னி ஸம்ஸ்காரம் செய்கிறார்களோ, தனக்கு முடியவில்லீயானால் யாரையாவது கொண்டு செய்யச் சொல்லிகிறார்களோ, அவர்கள் அக்னி லோகத்தில் பூஜிக்கப்படுகிறார்கள். 32. யார் ஜாடராக்னி மந்தமாகயிருக்கிறவர்களுக்கு நன்றாக ஜீரணிக்கக்கூடிய ஓளஷதம் கொடுக்கிறார்களோ, அவர்கள் வெகு காலம் வரை அக்னி லோகத்தில் வஸிக்கிறார்கள். 33. யக்ஞத்திற்கு வேண்டிய பொருள்கள் யக்ஞத்திற்கு வேண்டிய பணம் யதாசக்தி கொடுக்கிறார்களோ அவர்கள் இந்த அக்னிலோகமாகிய அர்ச்சிஷ்மதியில் வஸிக்கிறார்கள். 34. இந்த அக்னியே ப்ராம்மணர்களுக்குப் பரமபதத்தைக் கொடுக்கிறவர். அவரே பிராம்மணர்களுக்குக் குரு, தேவதை, விரதம், தீர்த்தம் எல்லாம். 35. எல்லா அபவித்ரமான வஸ்துக்களும் அக்னியைச் சேர்ந்ததனால் பவித்ரமாகின்றன. அதனாலேயே அக்னியின் பெயர் பகவான் எனப்படுகிறது. 36. வேதமறிந்த ப்ராம்மணனானாலும் அக்னியைத் தவிர்த்து வேறு இடங்களில் ச்ரத்தை வைப்பானானால் அவன் உண்மையில் வேத மறிந்தவனல்ல. அத்யாயம்–10 217 37.நிச்சயமாக அக்னியே ஸாக்ஷாத் அந்தராத்மா. அவனே நம்முடைய உதரத்தில் இருந்து கொண்டு மாமிச உணவைக்கூட ஜீரணிக்கச் செய்கிறான். ஆனால் ஸ்த்ரீயின் கர்ப்பத்திலிருக்கும் பாலகர்களுக்கு ஒருவிதக் கெடுதலும் செய்வதில்லீ. 38. இவனே ப்ரத்யக்ஷ ஸம்ஹார மூர்த்தி; ஈஸ்வரனுடைய தேஜஸ்மூர்த்தி. இவரே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ப்ரளயத்தின் அதிபதி. இவனில்லாமல் ஜகத்தில் வேறு என்ன காணப்படுகிறது? 39. இந்த சித்ரபானுவே ஸாக்ஷாத் மஹாதேவனுடைய அக்னி நேத்ரம் கோர அந்தகாரமான இந்த உலகத்தில் பிரகாசமளிப்பதற்கு வேறு யார் இருக்கிறார்கள்? 40. ஸ்வர்கத்தில் எல்லா தேவதைகளும் இந்த அக்னியினால் பூஜிக்கப்பட்ட தூபம், தீபம், 41,42. நைவேத்யம், பால், தயிர், நெய், கரும்புரஸம் இவைகளைப் புஜிக்கிறார்கள். சிவசர்மா கூறினார்- இந்த அக்னி தேவதை யார்? யாருடைய புத்ரர்? இவர் எந்த விதமாக அக்னி பதத்தை அடைந்திருக்கிறார்? அதை எனக்கு வர்ணியுங்கள். விஷ்ணு தூதர்கள் கூறினார்கள், ஓ புத்திமானே! கேளும். இவர் யார்? யாருடைய பிள்ளை? எந்த விதமாக இவர் ஜ்யோதிஷ்மதிபுரியை அடைந்திருக்கிறார் என்பதை க்ரமமாக வர்ணிக்கிறோம். சிவபக்தரான முனி ஒருவர் இருந்தார். 43. முன்காலத்தில் ஸுகமான நர்மதைக் கரையில் நர்மபுரம் என்ற நகரத்தில் சாண்டில்ய கோத்ரத்தில் பிறந்தவரான விச்வாநரன் என்ற சிவபக்தரான மு னி ஒருவர் இருந்தார். 44. வேதாத்யயனத்தின் ஸ்வரூபர். ப்ரம்மதேஜாமயர், ஜிதேந்த்ரியர், பவித்ரவான், ப்ரம்மசர்ய நிஷ்டர் ஆன இம்முனி 218 காசீ காண்டம் 45. எல்லா சாஸ்திர ஞானமும் அடைந்தவராய் லௌகிக ஆசாரத்தில் கெட்டிக்காரராய் இருந்தார். ஒருசமயம் மஹாதேவரே 46. ஹ்ருதயத்தில் த்யானம் செய்து கொண்டே சிந்திக்கத் தொடங்கினார். நான்கு ஆச்ரமங்களிலும் ஸஜ்ஜனங்களுக்குப் பரம கல்யாணத்தைக் கொடுக்கக்கூடிய ஆச்ரமம் எது? எதையனுசரித்தால் இஹலோகத்திலும், பரலோகத்திலும் ஸுகம் கிடைக்கும்? 47. இப்படி யோசித்து இது மிகவும் சிறந்ததா, இல்லீ, இல்லீ இது மிகச் சிறந்ததா? எது நன்மையைச் செய்யக் கூடியது? என்று இந்த விதமாக எல்லா ஆச்ரமங்களையும் பற்றித் தீவிரமாக எண்ணி எண்ணி கடைசியில் க்ருஹஸ்தாச்ரமமே எல்லாவற்றிற்கும் சிறந்த ஆதாரம், இந்த ஆச்ரமம் இல்லாமல் மற்ற ஆச்ரமங்களை நிர்வஹிக்க முடியாது. என்று க்ருஹஸ்தாச்ரமத்தை ஸ்த்தோத்ரம் செய்யத் தொடங்கினார். 48. ப்ரம்மசாரி, க்ருகஸ்தர், வானப்ரஸ்தர், ஸன்யாஸி இந்த நான்கு ஆச்ரமங்களில் வைத்து க்ருஹஸ்தாச்ரமமே எல்லாவற்றுக்கும் ஆதாரம். இந்த ஆச்ரமம் இல்லாமல் மற்ற ஆச்ரமங்களை நிர்வஹிக்க முடியாது. 49. தினந்தோறும் க்ருஹஸ்தனாலேயே தேவதைகள், பித்ருக்கள், மனுஷ்யர்கள், பசு, பக்ஷி ஜாதி இவைகளுடைய ஜீவனம் நடக்கிறது. அதனால் எல்லா ஆஶ்ரமங்களை விட க்ருஹஸ்தாச்ரமே மேலானது. 50. ஒரு க்ருஸ்தன் ஸ்நானம், ஹோமம், தானம் இவைகளைச் செய்யாமல் உணவு அருந்துவானானால் அவன் தேவதை முதலியவர்களுக்குக் கடன்காரனாகி நரகத்திற்குச் செல்கிறான். 51. ஒரு க்ருஹஸ்தன் ஸ்நானம் செய்யாமல் போஜனம் செய்வானானால் அவன் மலத்தை உண்பவனாகிறான். அத்யாயம்–10 219 ஜபாதிகள் செய்யாமல் சாப்பிடுகிறவன் ரத்தம், சீழ் இவைகளைச் சாப்பிடுகிறவனாகிறான். ஹோமம் செய்யாமல் சாப்பிடுகிறவன் புழுவைத்தின்பவனாகிறான். தானம் செய்யாமல் சாப்பிடுபவன் அது விஷ்டையைப் பூஜிப்பதற்கு ஸமானமாகும். 52. நினைத்த பொழுதிலேயே பரித்யாகம் செய்துவிட்டுச் செல்லும் ப்ரம்மசர்யம், க்ருஹஸ்தாச்ரமம் ஆகுமா? ஸ்பாவத்திலேயே சஞ்சல சித்தமுள்ள ப்ரம்மசாரியால் என்ன செய்ய முடியும்? 53. பிடிவாதத்தினாலேயோ அல்லது உலக பயத்திற்காகவோ அல்லது தன்னலத்திற்காகவோ ப்ரம்மசர்யம் எடுத்துக்கொண்டவன் ஆச்ரமத்திற்கு விரோதமான கர்மத்தை மனஸாலும் நினைப்பானானால் அவன் ப்ரம்மசர்யம் அனுஷ்டித்தாலும் அனுஷ்டிக்காதவனாகிறான். 54. பரஸ்த்ரீயை நினைக்காமல் தன் மனைவியிடமே திருப்தியுற்று ருதுகாலத்தில் மாத்திரம் அவளுடன் கூடுபவன் கர்மத்தினால் க்ருஹஸ்தன் ஆனாலும் ப்ரம்மசாரியே. 55. எவளிடம் ராகத்வேஷமில்லீயோ, காமக்ரோதங்கள் இல்லீயோ அந்த பத்னியுடன் கூடின அக்னிஹோத்ரியான க்ருஹஸ்தன் வாநப்ரஸ்தனைவிட உத்தமமானவன். 56. எவனோருவன் வைராக்கியத்தினால் ஜகத்தைத்தியாகம் பண்ணிவிட்டுப் போனாலும்கூட ஹ்ருதயத்தில் க்ருஹஸ்த தர்மத்தை நினைப்பானேயானால் அவன் வானப்ரஸ்தனும் அல்ல க்ருஹஸ்தனுமல்ல. இரண்டிலும் ப்ரஷ்டனுகிறான். 57. யாதொரு க்ருஹஸ்தன் ஒருவரிடமும் ஒன்றும் அபேக்ஷையில்லாமல் தன்னிடமுள்ள வரும்படியினாலே தன்னுடைய ஜீவிதம் நடத்திக்கொண்டு ஏதோ ஒருவிதம் 220 காசீ காண்டம் திருப்தியும் ஸந்தோஷமும் பெற்றுக்கொண்டு வாழ்வானானால் அவன் ஸந்யாஸியைவிட ச்ரேஷ்டனாகிறான். 58. ஸந்யாஸி துர்லாபமானது அல்லது எளிதான பொருளை ஒரு க்ருஹஸ்தனிடம் யாசித்தானேயானால், அவன் கொடுக்கும் பொருளில் திருப்தி அடையவில்லீயானால் அவன் ஸந்யாஸிபதிதனாகிறான். 59. இப்படியாக அந்த விஸ்வாநரன் என்னும் ப்ராம்மணன் நான்கு ஆச்ரமங்களின் குணதோஷங்களைப் பற்றி நன்கு ஆராய்ந்து தனக்கு ஸமமான ஒரு குலத்துப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து விதிப்ரகாரம் மணந்தார். 60. வேதம், யக்ஞம், அக்னிஹோத்ரம், பஞ்சயக்ஞம், படனம், பாடனம் (கற்றுக்கொடுத்தல்) இஷ்டி தானம் கொடுத்தல், தானம் வாங்குதல் ஆறு இந்த கர்மங்களை செய்து கொண்டுதேவதைகள் பித்ருக்கள் அதிதிகள் இவர்கள் ப்ரீதிக்குப் பாத்திரனாக இருந்தான். 61. அவன் தைரியமான மனதுடன் ஸமயா ஸமயங்களில் ஒருவருக்கொருவர் விரோதபாவமில்லாமல் தர்மார்த்த காமத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். 62. கர்ம காண்டத்தின் நிபுணனான அந்தப் பிராம்மணன் காலீயில் தேவகர்மமும், மத்யான்னத்தில் மனுஷ்யகர்மமும், ஸாயங்காலம் பித்ருகர்மமும் செய்துவந்தான். 63. இந்தப் பிரகாரம் வெகுகாலம் கழிந்தபின் ரதியைப்போல பதிவ்ரதையான அந்தப் ப்ராம்மணனுடைய பத்னி சுசிஷ்மதி 64. ஸ்வர்க பிராப்திக்கு ஸாதனமான வம்சத்துக்கான ஒரு முளையைக்கூடக் காணாமல் தனது பதியே தனக்கு மங்களத்தைச் செய்வாரென்று சொல்லி நமஸ்கரித்துக் கூறுவார்; அத்யாயம்–10 221 65. ஏ மஹாமதியே! ப்ரியவ்ரதரே! பிராணநாதா! ஆர்ய புத்ரா! தங்களுடைய ஸ்ரீ சரணங்களை பூஜிப்பதனால் இந்த உலகத்தில் எனக்குக் கிடைக்காதது ஒன்றுமில்லீ. 66. உயர்ந்த வஸ்திரங்கள் மற்றும் போகப்பொருள்களெல்லாம் தங்களருளால் கிடைக்கப் பெற்று அனுபவிக்கிறேன். பேச்சுவாக்கில் அவைகளைச் சொல்லுகிறேன் கேளுங்கள்- 67. உயர்ந்த வஸ்திரங்கள், ஸௌகர்யமான வீடு, மெதுவான படுக்கை, நல்ல வேலீக்காரிகள், புஷ்ப மாலீகள், தாம்பூலம், போஜனம், பானம், ஸ்வதர்ம நிஷ்டையுடன் கூடிய இவைகள் எல்லாவற்றையும் நான் அனுபவித்து வருகிறேன். நாதா! 68. வெகுநாட்களாக என்னுடைய ஹ்ருதயத்தில் க்ருஹஸ்தர்களுக்கு இன்றியமையாததான ஒரு பிரார்த்தனை இருந்தது. அதைத்தாங்கள் பூர்த்தி செய்யவேண்டும். 69. விஸ்வாநரன் கூறினார்: பதிக்குப்ரியமானவளே, அழகிய நிதம்பத்தையுடையவளே! ஏ மஹா பாக்யவதியே! உனக்கு இல்லாத வஸ்து எது இருக்கிறது? என்ன வேண்டுமோ அதைக் கேள். சீக்கிரத்தில் உன்னுடைய ப்ராத்தனையைப் பூர்த்தி செய்கிறேன். 70. ஏ கல்யாணி! ஸர்வ மங்களங்களையும் கொடுக்கக்கூடிய மஹாதேவனின் அருளினால் எனக்கு இந்த லோகத்திலும் பரலோகத்திலும் துர்லபம் ஒன்றுமில்லீ. 71. பதியே தெய்வம் என்று மதித்து சுசிஷ்மதி பதியின் வார்த்தையைக் கேட்டு ஸந்தோஷமுடன் சொல்லுவாள். எனக்கு வரதானம் செய்வீர்களானால், 72. நான் வரத்திற்குத் தகுதியுடையவளானால் நான் வரங்களொன்றும் விரும்பவில்லீ. தாங்கள் மஹேசனுக்கு ஸமமான புத்திரன் ஒருவனையளிங்கள் என்றாள். 222 காசீ காண்டம் 73. பவித்ரமான வ்ரதத்தையுடைய அந்த முனி சுசிஷ்மதியின் வார்த்தையைக் கேட்டுவிட்டு க்ஷணகாலம் சித்தத்தை ஸமாதி நிலீயில் நிறுத்தி யோசிக்கத் தொடங்கினான். 74. ஓ இந்தத்துடி இடையாள் என்னுடைய எண்ணத்திலிருந்து மிகவும் விலகியுள்ளாள். அதிதுர்லபமான ஒரு ப்ரார்த்தனையைக் கேட்கிறாளே. எப்படியோ அந்தப்பரம சிவனே எல்லாம் செய்வார். 75. அதே மஹேச்வரர் வாக்குரூபமாக இவளது நாக்கில் இருந்து கொண்டு இந்த வார்த்தையைப் பேசியிருக்கிறார். இதற்குப் புறம்பாகப் போக யாருக்கு ஸாத்யம்? இதே நடக்கட்டும். 76. அதற்குப் பிறகு ஏகபத்நீ வ்ரதரான விச்வாநரமுனி பத்னி சுசிஷ்மதியிடம் கூறினார் :- ஏ ப்ரியே, அப்படியேயாகட்டும் என்று. 77. இந்த விதமாகப் பத்தினிக்கு ஆறுதல் அளித்துவிட்டு, எங்கு காசி விச்வேச்வரர் ஸ்திரமாக இருக்கிறாரோ, அங்கு தவம் பண்ணும் பொருட்டுச் சென்றார். 78. அவர் சீக்கிரமாகக் காசியைடைந்து, மணிகர்ணிகையைப் பார்த்தவுடனேயே நூற்றுக்கணக்கான ஜன்மங்களாகச் சேகரித்து வைத்திருந்த மூன்று வகை தாபத்திலிருந்து முக்தியடைந்தார். 79. அங்கு விச்வேச்வரர் முதலான எல்லா லிங்கங்களையும் தரிசனம் செய்து, ஸகல குண்டங்கள் வாபிகள், கூபங்கள், ஸரோவரங்கள் இவைகளில் ஸ்நானம் செய்தார். 80. ஒருவர் பாக்கியில்லாமல் தேவிகளையும், கணேச மூர்த்திகளையும் நமஸ்காரம் செய்தார். பாபத்தை நசிப்பிப்பவரான பைரவரை ஒழுங்காகப் பூஜை செய்து நமஸ்கரித்தார். அத்யாயம்–10 223 81. தண்டபாணி முதலான முக்கிய கணநாதர்களை ப்ரயத்னபூர்வகஸ்தோத்ரம் செய்தார். ஆதிகேசவர் முதலிய விஷ்ணு மூர்த்திகளை ஆராதனையால் ஸந்தோஷப்படுத் தினார். 82. லோலார்க முதலான ஸூர்ய மூர்த்திகளையும் அடிக்கடி நமஸ்காரம் செய்தார், சோம்பலில்லாமல் எல்லாத் தீர்த்தங்களிலும் பிண்டப்ரதானம் செய்தார். 83. போஜனாதிகளால் ஆயிரக்கணக்கான ஸந்யாஸிகளையும் ஆயிரக்கணக்கான ப்ராம்மணர்களையும் த்ருப்தி செய்தார். 84. பக்தி பூர்வமாக மஹா பூஜோபசாரங்களால் எல்லா சிவலிங்கங்களையும் பூஜித்தார். இத்தனை லிங்கங்களிலும் மிக சீக்கிரமாகப் பலன் கொடுக்கக்கூடிய லிங்கம் எது? என்று யோசித்தார். எதைச் செய்தால் என்னுடைய இந்த புத்ரகாமனையான தபஸ் நிச்சயமாகப் பூர்த்தியடையும்? (அதாவது) எந்த லிங்கத்தின் முன் தபஸ்செய்தால் மற்ற லிங்கங்களுக்குமுன் தபஸ் செய்ய வேண்டாமோ? 85. ஸ்ரீமான் ஓங்காரேஸ்வரர், க்ருத்தி வாஸேஸ்வரர், காலேஸ்வரர், வ்ருத்தகாலேஸ்வரர், கலாசேகர், 86. கோதாரேசுவரர், காமேசுவரர், சந்திரசேகரர், த்ரிலோசனர், ஜ்யேஷ்டேச்வவரர், ஜயகிஷேஸ்வரர் ஜம்புகேசுவரர், 87. தஸாஸ்வமேதேஸ்வரர், த்ருமிசண்டீச்வரர், துர்க்கேசர், கோகர்ணேசுவரர், கணேசுவரர். ஈசானேஸ்வரர், கருடேஸ்வரர், 88. டுண்டிகணேசர், ஆசா கணேசர், ஸித்திகணேசர், தர்மேசர், தாரகேச்வரர், நந்திகேச்வரர், ஈசானேஸ்ஸ்வரர், நிவாஸேஸ்வரர், பத்ரீசர், ப்ரீதிகேசவர், பர்வதேசுவரர், பசுபதி நாதர், ப்ரும்மேசுவரர், மத்யமேசுவரர், ப்ருஹஸ்பதீஸ்வரர், தில்பாண்டீசுவரர். 224 காசீ காண்டம் 90.பாரபூதேசுவரர், மஹாலக்ஷ்மீஸ்வரர், மருத்தேரர், மோக்ஷேசர், கங்கேஸ்வரர், நர்மதேஸ்வரர். 91. மார்க்கண்டேசுவரர், மணிகண்டேசுவரர், ரத்னேஸ்வரர் (ஸாதன ஸித்தியையளிக்கக்கூடிய யோகினீபீடம்) 92. யமுனேஸ்வரர், லாங்குலீஸ்வரர், ஸ்ரீமான் விபுவிச்வேச்வரர், அவிமுக்தேஸ்வரர், விசாலாக்ஷீஸ்வரர், வ்யாக்ரேஸ்வரர், வாராஹீஸ்வரர், 93- 94. வ்யாஸேசர், வ்ருஷபத்வஜர், வருணேஸ்வரர், விதீசர், வஸிஷ்டேஸ்வரர், சனீஸ்வரேஸ்வரர், ஸோமேஸ்வரர், இந்த்ரேஸ்வரர், ஸ்வர்லினீஸ்வரர், ஸங்கமேஸ்வரர், ஹரிசந்தேஸ்வரர், ஹரிகேசேஸ்வரர், 95. த்ரிசந்தீஸ்வரர், மஹாதேவர், உபசாந்தி சிவம் பவானீசுவரர்; கபர்தீச்வரர், கந்தகீசுவரர், யக்ரேஸ்வரர், 96. மித்ராவருணேஸ்வரர் இவ்வளவு லிங்கங்களிலும் சீக்ரமாகப் புத்திரனையளிக்ககூடியவர் யார்? பரம புத்திமானான முனிவிச்வாநரர் க்ஷணமாத்ரம் இவ்விதம் யோசித்து, சொல்லிக் கொண்டார். 97. ஆம் இப்பொழுது நினைவு வந்தது. நான் மறந்தே போய் விட்டேனே, இத்தனை நாட்களுக்குப்பிறகு இன்று என் மனோரதம் நிறைவேறியது."ஸித்தகண ஸேவித ஸர்வ ஸித்திகர்த்தா", பரம உக்ரமான ஒரு லிங்கமிருக்கிறது. 98. அவரைத் தர்சித்துத் தொட்டாலும் சரி மனதில் மிகவும் ஆனந்தும் ஏற்படுகிறது. அந்த லிங்கத்தைப் பூஜிப்பதற்காகவே தேவதைகள் இந்தித்ரனுடைய அனுமதி பெற்று எப்பொழுதும் ஸ்வர்க்க வாசலீத் திறந்தே வைத்திருக்கிறார்கள். 99. எங்குப் பிரஸித்த விகடாதேவீ ஸித்தி ரூபமாக ஆவிர்பவித்திருக்கிறாளோ, எங்கு ஸாக்ஷாத் வித்யா விநாயகர் எழுந்தருளி இருக்கிறாரோ? அங்கு இருப்பவர்களுடைய ஸர்வ இடையூறுகளையும் அத்யாயம்–10 225 100, 101. நீக்கி ஸித்தி அளிக்கிறாரோ, அங்கேயே ஸர்வ பிராணிகளுக்கும் ஸித்திகளை அளிக்க வல்ல பஞ்சமுத்ராமஹா பீடத்தில் அந்த அவிமுக்த க்ஷேத்ரத்தில் பரம ஸித்தி க்ஷேத்ரம் இருக்கிறது. 102. அதாவது மிகவும் ரஹஸ்யமான வீரேச்வரலிங்கம் தான் இங்கு எழுந்தருளியிருக்கிறது. காசியில் எந்த இடத்திலும் ஒரு எள்ளளவு பூமிகூட லிங்கம் இல்லாமல் இருக்கவில்லீ. 103. ஆனாலும் வீரேஸ்வரரைப் போல சீக்கிரம் ஸித்தியளிக்க வல்ல வரும் ஒழுங்கான முறையில் தர்மார்த்த காமமோக்ஷங்களைத் தருபவர் வேறு லிங்கம் ஒருவருமில்லீ. 104. காசியில் இந்த வீரேசுவரருக்கு ஸமமான ஸித்தியைக் கொடுக்கக்கூடிய வேறொரு லிங்கமில்லீ, இது நிச்சயம். 105. பூர்வ காலத்தில் பஞ்சஸ்வரன் என்னும் பெயருள்ள ஒரு கந்தர்வன், ஸ்வச்சவித்யா என்று பெயருள்ள வித்யாதரன், வஸுபூர்ணன் என்ற பெயருள்ள யக்ஷராஜன் எல்லோரும் இந்த சிவலிங்கத்திடம் தானபரம ஸித்தியைப் பெற்றார்கள். இதற்கு வெகு காலத்திற்கு முன்பு கோகிலாலாபா என்னும் அப்ஸரஸ் பக்தி பாவத்துடன் நாட்டியமாடிக் கொண்டே சரீரத்துடன் இந்த லிங்கத்தில் ஐக்யமானாள். அதற்கு முன்னால் வேத சிரா என்னும் ரிஷி சதருத்ர மந்த்ரத்தை ஜபித்துக் கொண்டே 106, 107. இந்த ஜோதிர் லிங்கத்தில் சரீரத்துடன் ப்ரவேசித்தார். சந்திரமௌலி, பரத்வாஜர் என்னும் பெயருள்ள வீரசைவர்கள், 108. வீரேஸ்வரரைப் பூஜித்து, பாட்டுப்பாடிக் கொண்டே இங்கு லயமானார்கள். ஸர்ப்ப ராஜர் ஸங்கசூடர் ராத்திரி காலத்தில் தன் படங்களை விரித்து நாகரத்னங்களினால் இவருக்கு ஆரத்தி எடுத்து இந்த 226 காசீ காண்டம் இடத்தில் ஆற மாஸத்தில் ஸித்தியடைந்தார். இங்கேயே ஹம்ஸவதி என்னும் பெயருள்ள கிங்கரி தனதுபர்த்தாவான விஷ்ணுப்ரியனுடன் 110. ஸுஸ்வரமாகப் பாடிக் கொண்டே பரம முக்தி பதத்தையடைந்தாள். 111. இந்தக் காரணத்தினால் ஜகத்தில் வீரேஸ்வரர் பரமஸித்தி லிங்கம் என்று ப்ரஸித்தியடைந்தார். 112, 113. விதேஹ வம்சத்தைச் சேர்ந்தவரான ஜயத்ரதன் என்னும் அரசன் ராஜ்யத்தை யிழந்து இந்த வீரேஸ்வரலிங்கத்தை ஆராதித்துப் பூஜை செய்து, சத்ருக்களைக் கொன்று ஜயித்து இடையூறில்லாமல் இழந்த ராஜ்யத்தைத் திரும்பவும் பெற்றார். மகததேசாதிபதியான ஜிதேந்த்ரனான விதுரதன் என்னும் அரசன் புத்ரன் இல்லாததால் வீரேஸ்வரரை யாசித்துப் புத்ரவானானான். 114. வஸுதத்தன், ரத்னதத்தன் என்னும் இருவைச்யர்கள் ஒரு வருஷம் வரை இந்த இடத்தில் வீரேஸ்வரரை ஆராதித்து தேவ கன்னிக்கு ஸமமான கன்னிகையை அடைந்தார்கள். 115. நானும் மூன்று ஸந்தியும் வீரேஸ்வரரை ஆராதித்து பத்தினியின் விச்வாநரமுனி இச்சைப் படிக்கு புத்ரலாபத்தையடைவேன், 116. தைர்யகுண ஸம்பன்னரும், ஸத்காரியங்களைச் செய்பவருமான விச்வாநரமுனி இவ்விதம் தீர்மானித்து சந்த்ரகூப ஜலத்தில் ஸ்நானம் செய்து நியமங்களை கைக்கொண்டார். 117. ஒரு மாதபரியந்தம் ஒருவேளை ஆகாரம்; ஒரு மாதம் போஜனம் இல்லாமல்; ஒருமாதம் யதேச்சையாகக் கிடைத்ததைப் புஜித்தும்; ஒரு மாதம் இரவு போஜனம் மாத்திரம்; 118. ஒரு மாதம் பால் மாத்திரம்; ஒரு மாதம் கீரைகளும் அத்யாயம்–10 227 பழங்களும், ஒரு மாதம் ஒரு பிடி எள்ளு; ஒரு மாதம் கேவலம் ஜலம்; 119. ஒரு மாதம் பஞ்சகவ்யம், ஒரு மாதம் சாந்த்ராயண வ்ருதம்; ஒரு மாதம் தர்ப்பை துனியில் உள்ள ஜலம்: ஒரு மாதம் வாயுபக்ஷணம்; இவ்வாறு ஆஹாரநியமத்துடன் இருந்தார். 120. இதற்குப் பிறகு அந்த முனி பதிமூன்றாம் மாதம் முதல்தேதியன்று ப்ராத: காலத்தில் கங்கா ஜலத்தில் ஸ்நானம் செய்து, வீரேஸ்வரரை அடைந்தார். 121. அடைந்தவுடனே அந்தத் தபோதனன் லிங்கத்தின் மத்தியில் விபூதிபூஷிதராய், எட்டு வயது மதிக்கத்தக்க அழகான சிறுவனைக் கண்டார். 122. அவனுடைய கண்கள் காது வரை நீண்டு மிகவும் அழகான செவ்வரி படர்ந்திருந்தன. ரக்த வர்ணமான உதடுகள், மேன்மையான தங்க நிறத்தில் ஜடாபாரம், 123. சிரிக்கும் முகம், நிர்வாண தேஹம், பாலர்களுக்குத் தகுந்த நகைகளைப் பூண்டிருந்தான். மனோஹரமான வேதஸூக்தங்களைப் படித்துக் கொண்டு தன் இச்சைப்படி சிரித்துக் கொண்டிருந்தான் 124. இந்த விதமான பாலகனைப் பார்த்து ஸந்தோஷத்தினால் புளகாங்கிதமடைந்த முனி தழுதழுத்த குரலினால் ஸ்துதித்து அடிக்கடி நமஸ்காரம் செய்யத் தொடங்கினார். 125. ஸத்யம் அஸத்யம் இரண்டற்ற ப்ரம்மமே ஸத்யம், ஜகத்தில் நானாவிதமாக ஒன்றுமே கிடையாது. ஒரு ருத்ரனே உண்டு, அந்நியம் ஒன்றுமில்லீ. ஆதலால் தாங்களே ஒரு இரண்டற்ற மஹேஸ்வரப்ரம்மம், நான் தங்களை பஜிக்கிறேன். 126. ஹே சம்போ! உலகில் தாங்களே எல்லாவற்றுக்கும் கர்த்தா; சூரியன் ஒருவனாயிருந்தும் 228 காசீ காண்டம் நானாவிதமான ஜவாயங்களினால் ப்ரதிபலித்து பலவிதமாகத் தெரிகிற மாதிரி, நிராதாரமான தாங்களே ஒரு ரூபமாக இருந்தும் நானா ரூபமாகத் தோன்றுகிறீகள். அதனால் ஹே ஈசா! நான் தங்களைத் தவிர வேறு ஒருவரையும் பூஜிக்கமாட்டேன். 127. கயிறைப் பாம்பென்றும் சிப்பியை வெள்ளியென்றும் கானலீ நீரென்றும் ப்ரமையடைந்தவன் ஞானம் வந்தவுடன் கயிரைக் கயிரென்றும், சிப்பியை சிப்பியென்றும், கானலீக் கானலென்றும் அறிவதுபோல் அக்ஞானம் ஆகிய ப்ரமை நீங்கி, ஞானம் வந்தவுடன் ப்ரம்மாண்டமாகிய ப்ரபஞ்சத்தின் ப்ரமை நீங்குகிறது. அப்பேர்பட்ட ஞானஸ்வரூபமான மஹேஸ்வரனாகத் தங்களைச் சரணடைகிறேன். 128. தாங்களே ஜலத்தில் தன்மையாகவும், அக்னியின் எரிக்கும் சக்தியாகவும் சூரியனின் தபிக்கும் சக்தியாகவும் சந்திரனில் ஸந்தோஷமான நிலவாகவும், புஷ்பத்தில் வாசனையாகவும் பாலில் நெய்யாகவும் இருக்கிறீர்கள். 129. தங்களுக்குக் காதில்லீ ஆனால் சப்தங்களைக், கேட்கிறீகள். தங்களுக்கு மூக்கில்லீ, ஆனால் முகருகிறீர்கள், தங்களுக்குக் காலில்லீ, ஆனால் வெகு தூரத்திலிருந்து வருகிறீகள். தங்களுக்குக் கண்களில்லீ ஆனால் பார்க்கிறீகள். தங்களுக்கு நாக்கில்லீ ஆனால் ரஸத்தைச் சுவைக்கிறீகள். ஆனால் தங்களைப் பூர்ணமாக அறிந்தவர் யார்? நான் தங்களைச் சரண் அடைகிறேன். 130. வேதமும் தங்களுடைய உண்மை ஸ்வரூபத்தை அறியவில்லீ. விஷ்ணுவும் அறியவில்லீ, உலகை ஸ்ருஷ்டிக்கும் ப்ரம்மாவும் அறியவில்லீ. யோகீச்வரர்களும் இந்த்ராதி தேவகணங்களும் அறியவில்லீ. 131. கேவலம் பக்தர்கள்தாம் தங்களை அறிகிறார்கள். அதனால் தங்களைச் சரணடைகின்றோம். தங்களுக்கு அத்யாயம்–10 229 கோத்ரமில்லீ, நாமமில்லீ, ஜன்மமில்லீ, ரூபமில்லீ, ஸ்பாவம் இல்லீ, தேசம் இல்லீ. ஆனால் தாங்கள் த்ரிலோகத்திற்கும் ஈசர். பக்தர்களுடைய ஸகல காமனைகளையும் பூர்த்தி செய்கிறீகள். 132. ஏ ஸ்மராரே! தாங்களே எல்லாமாக இருக்கிறீர்கள். தங்களிடமிருந்தே எல்லாம் உற்பத்தியாகின்றன. தாங்கள் கௌரீசர்; தாங்கள் நிர்வாணமாக இருக்கிறீர்கள், தாங்கள் பரமசாந்தர்; தாங்களே விருத்தன், யுவன், பாலன், தாங்கள் இல்லீயென்றால் வேறு என்ன இருக்கிறது? அதனால் தங்களை நமஸ்கரிக்கிறேன். 133. இந்த விதமாக அந்தப் ப்ராம்மணன் விஸ்வாநரன் மிகவும் ஸந்தோஷத்துடன் ஸ்துதி செய்து பூமியில் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான். அப்பொழுது அந்த எல்லா விருத்தர்களின் விருத்தரான அந்த பாலகன் கூறினான்- பிராம்மணா! வரத்தை வேண்டிக் கொள் என்று. 134. அதன் பிறகு சாதுர்யவானான அந்த விஸ்வாநரமுனி ஸந்தோஷ அந்த: கரணத்துடன் கூறினான்- தாங்கள் ஸர்வக்ஞர். தங்களுக்குத் தெரியாதது என்ன இருக்கிறது? 135. பகவான் தாங்கள் ஸர்வாந்தர்யாமி, ஸர்வஸ்ரூபர், ஸர்வாபீஷ்டங்களையும் கொடுக்கும் தாதா; தாங்கள் ஈஸ்வரர், தீனனாக யாசிக்க என்னிடம் தாங்கள் ஏன் கட்டளையிடுகிறீர்கள். 136. பாலரூபமான அந்த தேவ பவித்ரனும், புண்ணிய வானான வ்ரதமிருக்கும் விஸ்வாநரனுடைய அந்த வசனத்தைக் கேட்டு பவித்ரமான சிரிப்புடன் உடனே பதில் கூறினான்- 137. ஏ! பவித்ரா! நீ சுசிஷ்மதிக்கு வேண்டி, நீ எந்த ஆசையை ஹ்ருதயத்தில் கொண்டாயோ? 230 காசீ காண்டம் 138. கொஞ்சம் நாட்களில் ஸந்தேகமில்லாமல் அந்த ஆசை பூர்த்தியாகும், ஏ! மஹாமதி! நான் சுசிஷ்மதியின் கர்ப்பத்தில் ஸர்வ தேவர்களுக்கும் ப்ரியனான பவித்ர க்ருஹபதி என்னும் பெயருடன் ப்ரஸித்தமாக உன் புத்திரனாக அவதரிக்கின்றேன். 139. நீ இப்பொழுது கூறிய அந்த அபிலாஷாஷ்டகத்தை (அபிலாஷா அஷ்டக ஸ்தோத்ரம்) ஒரு வருஷ பர்யந்தம் சிவனுடைய சமீபத்தில் தினமும் மூன்று காலம் பாராயணம் செய்து வந்தால் எல்லா எண்ணங்களும் நிறைவேறும். 140. உன்னால் சொல்லப்பட்ட இந்த அபிலாஷாஷ்டகம் ஒரு வருஷம் மூன்றுவேளையும் சிவனுக்கு முன்னால் படிப்பதனால் உன்னுடைய எல்லா மனோரதங்களும் பூர்த்தியடைகிறது. புஸ்தக பாராயணமும், புத்திரபௌத்திரதனங்களையும் வ்ருத்தி பண்ணக் கூடியது. எல்லா விதத்திலும் சாந்தியளிக்கவல்லது. ஸகல ஆபத்துக்களையும் போக்கடிக்க வல்லது. 141. ஸ்வர்க மோக்ஷ ஸம்பத்துக்களையும் அளிக்கவல்லது. இதில் ஸந்தேஹமில்லீ. புத்ரஹீனனான நான் ஒரு வருஷம் வரையில் ப்ராத: காலத்தில் தூங்கியெழுந்தவுடன் நிர்மலமாக நீராடி சிவனைப் பூஜித்து இந்த ஸ்துதியைப் படித்தால் அவன் புத்ரவானாவான். வைசாக, கார்த்திக மாகமாதங்களில் விசேஷ நியமத்துடன் விரதம் இருந்து, 142- 143. ஸ்நான ஸமயத்தில் இந்த ஸ்தோத்திரத்தைச் சொன்னால் அவனுக்கு ஸமஸ்தமான பலன்களும் கிடைக்கும். நான் நிர்குணன். ஆனாலும்கூட கார்த்திகை மாதத்தில் 144. உனக்குப் புத்ரனாக வந்து பிறப்பேன். வேறு யார் இதைப் படித்தாலும் அவனும் புத்ரவானாவான். இந்த அத்யாயம்–10 231 அபிலாஷாஷ்டகத்தைக் கண்ட பேருக்கெல்லாம் கொடுக்கக்கூடாது. 145. ஜாக்ரதையாக இதை ரகசியமாக வைத்துக்கொள்வது உசிதம். இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பதனால் மலடர்களுக்கும் குழந்தையுண்டாகும், ஸ்த்ரீயானாலும், புருஷனானாலும்- 146. ஒருவருஷகாலம் நியமத்துடனிருந்து, சிவனுக்கு ஸமீபத்தில் இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பதனால் நிச்சயமாகப் புத்ரபாக்யம் ஏற்படும். இவ்விதம் கூறிவிட்டு அந்த பாலகன் அந்த சிவலிங்கத்திற்குள்ளே மறைந்தான்.பிறகு அந்தப் பிராம்மணன் விஸ்வாநர முனியும் தன் வீட்டிற்குச் சென்றான். ஸ்ரீஸ்காந்த புராணத்தில் 4வது காசீகண்டத்தில் பூர்வார்த்த பாஷாடீகாவான அமராவதி, ஜோதிஷ்மதி (ஜ்யோதிஷ்மதி) வர்ணனம் என்னும் பத்தாவது அத்யாயம் ஸம்பூர்ணம். 232 காசீ காண்டம் அத்யாயம் 11 அகஸ்தியர் கூறினார்; ஏ! பாக்யவதி, கேட்பதில் ஆர்வமுள்ளவளே, புண்ணியசீலன், சுசீலன் என்னும் இரு விஷ்ணு பக்தர்களும் அக்னிபகவானுடைய உற்பத்திக் கதையை எப்படிக் கூறினார்களோ, அப்படியே நீ கேள் :- 1. அதன்பிறகு உசித சமயத்தில் ஹ்ருதய பூர்வமாக கர்ப்பாதான கர்மம் முடிந்து, விஸ்வாநரரின் பத்னி சுசிஷ்மதி கர்ப்பவதியானாள். 2. பிறகு பண்டிதனான விஸ்வாநரன் கருத்தரிப்பதற்கு முன்னாலேயே மூன்றாவது மாதத்தில் குழந்தையின் ஆண்மையின் விருத்தியின் பொருட்டு க்ருஹஸ்தர்களுக்குச் சொல்லப்பட்ட ஒழுங்கான முறையில் பும்ஸவன கர்மம் செய்து முடித்தார். 3. பிறகு சாதுர்யவானான விஸ்வாநரன் ஸுகபூர்வமான ப்ரஸவம் ஆகவேண்டும் என்றும் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் வளர்ச்சி பூர்ணமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் 4. எட்டாவது மாதத்தில் ஸீமந்த முஹூர்த்தத்தை நடத்தினார். அதன் பிறகு உத்தமமான நஷத்திரத்தில் ப்ருஹஸ்பதிகேந்த்ர ஸ்தானத்தில் இருக்கும் பொழுது மற்ற சுபகிக்ருஹங்கள் ஐந்து, ஒன்பது முதலிய மாறுபாடான இடங்களில் இருக்கும் பொழுது, சுபலக்னத்தில் விஸ்வாநரரின் பத்னி சுசிஷ்மதியின் கர்ப்பத்திலிருந்து, எல்லா இடையூறுகளையும் நீக்குபவனும்; சந்திரனைப் போல் அழகியமுகமுடையவனுமான ஒரு புத்திரன் பிறந்தான். அவன் பூமியில் விழுந்தவுடன் அவனுடைய ப்ரபையினால் ஸூதிகா க்ருஹம் ப்ரகாசம் அடைந்தது. 5,6. அதே ஸமயம் பூமியிலும் ஸ்வர்கத்திலும், புவர்லோகத்திலும் வஸிக்கும் ஜனங்கள் பூரண ஸந்தோஷமடைந்தனர். திக்குகளாகிய பெண்களுடைய அத்யாயம்–11 233 முகங்களை வாசனையடையச் செய்யக்கூடிய ஸுகந்த வாயு வீசியது. 7,8,9. மேக மண்டலத்திலிருந்து வாஸனை புஷ்பங்களின் வாஸனை வீசியது. தேவதுந்துபி முழங்கியது. எல்லாத் திசைகளும் ஸம்பூர்ண ஸந்துஷ்டியடைந்தது. எல்லா நதிகளும், ஜனங்களுடைய சித்தமும் நிர்மலமாயின. தமோகுண, அக்ஞான அந்தகாரம் நஷ்டமடைந்தது. ரஜோகுணப் புழுதிகள் அடங்கின. பிராணிகள் ஸத்வ குணங்களுடனும் வீரியத்துடனும் விளங்கினார்கள். பூமியும் அந்த சமயம் மங்களமயமானாள். எல்லா ஜனங்களுடைய ஸந்தோஷத்தை அதிகரிக்கச் செய்கிற மங்களமயமான பேச்சுகள் நிலவின. 10. திலோத்தமா, ஊர்வசி, ரம்பா, பிரபா, வித்ப்ரபா, ஸுபா ஸுமங்களா, ஸுபாலாபா, ஸுஸீலா முதலிய அப்ஸரஸ்கள், 11. சிறந்த முத்து மணிகளினால் நிறைந்த தட்டுகளுடன், கற்பூரம், கஸ்தூரி, அகர், இவைகளுடனும், 12. வைரம், வைடூர்யகரமான தீபங்களுடன் கூடியதும் மஞ்சள் பூசியதும், மரகதமணி போன்ற சங்கு, சிப்பி, தயிரினால் நிரம்பிய பாத்திரங்களும் 13. பத்மராகம், பவழம், கோமேதகம், புஷ்பராகம், இந்த்ர நீலம், குங்குமரத்னம் சிறந்த மணிமாலீகளினால் அலங்கரித்ததுமான சப்திக்கின்ற மணிகளினால் அலங்கரிக்கப்பட்டப் பாத்திரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு 14. ஆயிரக்கணக்கான வித்யாதரிகளும், கின்னரிகளும், தேவ மாதர்களும் சாமரங்களைச் சுழற்றிக் கொண்டு, மங்கள வாத்யங்களையும் கையில் எடுத்துக் கொண்டு அங்கு வந்தனர். 15.அழகான குரல் சம்பத்துள்ள கந்தர்வர்கள், நாக, யுக்ஷர்கள் அநேக ஸுமங்கலிகள் லலிதமான பாடல்களைப் 234 காசீ காண்டம் பாடிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். 16. மரீசி, அத்ரி, புலகர், புலஸ்தியர், க்ரது, அங்கிரஸ், வஸிஷ்டர், கச்யபர், நரன் விபாண்டகர், மாண்டவ்யர், 17. லோமசர், லோமசானர், பரத்வாஜர், கௌதமர், ப்ருகு, காலவர், கர்க்கர், ஜாது கர்கர்ணர், பராசரர், 18. ஆபஸ்தம்பர், யாக்ஞவல்க்யர், தக்ஷர், வால்மீகி, முத்கலர், சதாதபர், லிகிதர், சிலாதர், சங்கர், உஞ்சபுச் ஜமதக்னி ஸம்வர்த்தர், மதங்கர், பரதர், அம்சுமான் வ்யாஸர், காத்யாயனர், குத்ஸர், சௌனகர், ஸுச்ருதர், சுகர், 19,20. ருஷ்யச்ருங்கர், துர்வாஸர், ருசி, நாரதர், தும்புரு, உத்தங்கர், வாமதேவர், ச்யவனர் ஸீதா, தேவலர், 21. சாலங்காயனர், ஹாரீதர், விச்வாமித்ரர், பார்க்கவர், புத்ர மார்கண்டேயனுடன் ம்ருகண்டு, தாலப்யா உத்தாலகர் 22. தௌம்யர், உபமன்யு, வத்ஸப்ரப்ருதி, முனிஸமானும், முனிகன்னிகைகள் கூட்டம், அந்த பாலகனுக்கு சாந்தியளிக்க விச்வாநரருடைய ஆசிரமத்துக்கு வந்தார்கள். 23. ப்ருஹஸ்பதியுடன் ப்ரம்ம, தேவ ச்ரேஷ்டரான கருடத்வஜர், நந்தி, ப்ருங்கி, கௌரியுடன் மஹாதேவர் 24. இந்திரன் முதலானவர்கள், பாதளவாஸிகளான நாககணங்கள், நதிகளுடன்கூட ஸமஸ்த ஸமுத்ரங்கள், மிக ரத்னங்களை எடுத்துக்கொண்டு 25. அநேக ஆயிரக்கணக்கான ஸ்தாவரமான பர்வதக் கூட்டங்கள், ஜங்கம உருவெடுத்துக் கொண்டு அந்த மஹா மஹோத்ஸவத்திற்காக வந்தார்கள். அச்சமயம் அங்கு காலமில்லாக் காலத்தில் சந்த்ரிகை ப்ரகாசித்தது. 26. பிதாமஹரே தானே அந்தக் குழந்தைக்கு ஜாதகர்மா செய்தார். பிறகு ஜாதகர்மத்தை விளக்கும்படி அத்யாயம்–11 235 சிந்தித்துப் பார்த்து இந்தக் குழந்தைக்கு க்ருஹபதி என்ற யோக்யமான 27. பெயர், பதினோன்றாம் நாள் நாமகர்ம முறைப்படி அதன் அர்த்த பாவமான வேத மந்திரங்களை அனுசரித்து அக்குழந்தைக்கு பெயரிட்டனர். 28. அந்த வேதமந்த்ரம் அயமக்னி, க்ருஹ பதியென்றாகும் (க்ருஹபதி) 29. மேலும் இரண்டாவது சாகையுடன் அக்னேர் க்ருகபதே என்பதான நான்கு வேதங்களுக்கும் யுக்தமான ஆசீர்வாதத்துடன் அபிநந்தனம் செய்து 30. எல்லா ஜனங்களுக்கும் பிதாமஹரான ப்ரம்மா பாலகனுக்கு உசிதமான ரக்ஷாகார்யம் செய்த பிறகு ஹரி, ஹரன் இவர்கள் கூட ஹம்ஸத்தில் ஏறிக்கொண்டு சென்றார். 31. ஆஹா! அந்தக் குழந்தையின் ரூபத்தை என்னவென்று கூற? என்ன தேஜஸ்! என்ன ஸர்வாங்க லக்ஷணம்! சுசிஷ்மதியினுடைய பாக்யம்தான் என்னே! இங்கு ஸ்வயம் மஹேஸ்வரர் அல்லவா அவதரித்திருக்கிறார். 32. மேலும் சிவபக்தர்களுக்கு இதில் விசேஷம் என்ன இருக்கிறது, சிவனே ஸ்வயம் ஆவிர்பவிப்பதற்கு ஆச்சர்யம் என்ன இருக்கிறது. ஏனென்றால் சிவபக்தர்களே ஸ்வயம் ருத்ரர்களல்லவா! 33. க்ருஹஸ்தாச்ரம வாஸிகள் இதற்காக வல்லவா புத்திரர்களை யாசிக்கிறார்கள். ஸனாதனக்ருதி கூறுகிறது. 34. புத்திரனால் ஸகல உலகத்தையும் ஜயிக்கலாமென்று. 35. புத்ரனில்லாத வீடு சூன்யம்; புத்ரன் இல்லாதவன் ஸம்பாதிப்பது வீணே. அபுத்ரனுக்கு வம்சம் ஏது? புத்ரனில்லாது இருப்பதைவிட அபவித்ரம் கிடையாது. 236 காசீ காண்டம் 36. புத்ர லாபத்தைப் போன்ற ஸுகமளிக்கும் பொருள் வேறில்லீ. இந்த உலகிலும், பரஉலகிலும் சரி, புத்ரனைப் போன்ற மித்திரன் வேறில்லீ. 37. ஓளரஸ, க்ஷேத்ரஜ, க்ரீத, தத்தகன், ஸ்வயம்ப்ரத, புத்ரியுடைய புத்ரன், ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டவன் இந்த ஏழுவிதமான புத்ரன் இங்கு கூறப்பட்டுள்ளது. 38. பண்டிதனான க்ருஹஸ்தன் இந்த ஏழுவித புத்ரர்களில் ஏதாவது ஒரு புத்ரனை எடுத்துக் கொள்ளலாம். இவைகளில் வரிசைக்கிரமமாக ச்ரேஷ்டரிலிருந்து மேலும் மேலும் ச்ரேஷ்டர் வரை இருக்கிறது. 39. பிதா விஸ்வா நான். நான்காவது மாதம் (குழந்தையை) வீட்டிலிருந்து வெளியில் எடுக்கும் கர்மத்தைச் செய்தார். ஆறாவது மாதம் அன்னப் பிராசனம் செய்தார். 40. முதல் வயது முடிந்ததும், குடுமிக்கல்யாணமும் பண்ணினார்; இதற்குப் பிறகு அந்த கர்ம காண்டம் தெரிந்தவர் சிரவண நக்ஷத்திரத்தில் காதுகுத்துக் கல்யாணமும் செய்தார். ப்ரம்மதேஜஸ் வ்ருத்திக்காக ஐந்தாவது வயதில் யக்ஞோபவீத கர்மமும் நடத்தினார். 41. அதற்குப் பிறகு புத்திமானான விஸ்வாநரன் உபாகர்ம என்னும் சிரவணக்ரியைக்கு பின் வேதங்களைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். மூன்று வருஷங்களில் விதிமுறைப்படி அங்கம், பதம், க்ரமம், இவைகளுடன் நான்கு வேதங்களையும், 42. ஸமஸ்த வித்தைகளையும் அந்த சக்தி வாய்ந்த பாலகன் விநயம் முதலிய குணங்களுடன் அவைகளை வெளிக்காட்டிக் கொண்டு ஸாக்ஷிமாத்ரமான குருவிடம் இருந்து வித்தைகளை க்ரஹித்தான். 43. தத்வ ஞானியும் ஸுயேச்சையாகத் திரிபவரும் விஸ்வாநரருடைய புத்திரனுமான க்ரஹபதி ஒன்பதாவது அத்யாயம்–11 237 வயதில் மாதா பிதாக்களின் சிச்ருஷையில் தத்பரராய் இருப்பதைக் கண்டு நாரத மஹா முனி 44. விஸ்வாநரரின் ஆசிரமத்துக்கு வந்து அவர்கள் கொடுக்கும் அர்க்யம் ஆசமனீயம் முதலியவைகளைக் கிரமப்படி கிரஹித்துக் கொண்டு, குசலப்ரச்னம் செய்தார். 45. நாரதர் கூறினார் :- மஹாபாகா, விஸ்வாநரரே; ஹே ஸுபவ்ருதே சுசிஷ்மதி! இந்த உங்கள் புத்ரனான க்ரஹபதி உங்கள் இருவருடைய உத்திரவிற்குக் கீழ்படிகிறவன். 46, 47. மாதாபிதாக்களைக் கொண்டாடுவதைவிட வேறு அரிய தீர்த்தம் கிடையாது; தேவதைகள் கிடையாது; ஸத்கர்மம் இல்லீ, அந்யதர்மமும் இல்லீ. மூன்று உலகங்களிலும் புத்திரர்களுக்கு மாதாபிதாக்களைப்போல் வேறு ஒன்றுமே கிடையாது: கர்ப்பத்தில் சுமந்து மாதாவானவள் பிதாவைக் காட்டிலும் மேல். 48. ஜனனியின் பாதகமலங்களை அலம்பி, ப்ரோக்ஷணம் பண்ணிக் கொள்வானேயானால், அபிஷேகம் செய்துகொள்வானானால் கங்கையின் புண்ய ஜல ஸ்நானத்தைவிட அதிகப்புண்ணியமே. 49. ஸமஸ்த கர்மத்தையும் த்யாகம் செய்த த்யாகிஸந்யாசி பிதாவைவிட மேலானவர். வணங்கத் தகுந்தவர். எல்லோராலும் வணங்கத் தகுந்தவராகயிருந்தாலும்கூட யதியும் அன்னையைக் கட்டாயம் வணங்க வேண்டும். 50. மாதாபிதாக்களை சந்தோஷப்படுத்துவதே அதி உக்ர தபஸ் பரமவ்ருதம், மிகவும் மேலான தர்மம். 51. முகபாவத்திலேயே விநயத்தைக் காட்டும் இந்த கிரஹபதி உங்கள் இருவரையும் எப்படி வெகுமானிக்கிறானோ அப்படி ஒரு பாலகனும் செய்யமாட்டான்.எனக்கு இது நன்றாகத் தெரியும். 238 காசீ காண்டம் 52. ஹே வைச்வாநர வரா! எனது மடியில் உட்கார்; நான் உனது லக்ஷணங்களை பரீக்ஷிக்கட்டும்; வலது கையைக் கொஞ்சம் காட்டு; 53. தேவரிஷி அப்படிக் கூறியதும் அந்த ஸ்ரீ மான் பாலகன் மாதாபிதாவின் உத்தரவைப் பெற்று பக்தியுடனும் விநயத்தடனும் நாரதர் மடிமீதமர்ந்தான். 54. பிறகு நாரதர் அவனுடைய ஸமஸ்த அங்கங்களையும். உள்நாக்கையும், நாக்கையும், பற்களையும் கூடப்பார்த்துவிட்டு குங்குமத்தில் நனைத்த முப்புரி நூலீக் கொண்டு வரச்செய்து, 55. மஹாதேவர், கணேசர், பார்வதி இவர்களைத் தியானித்துக் கொண்டே, முனிவர் வடக்குப் பக்கமாகப் பார்த்து நின்று கொண்டு அந்தக் கயிற்றினால், காலிலிருந்து தலீ வரை அளந்தார். பிறகு கூறினார். 56. பாலகன் இரண்டு கைகளையும் நீட்டி அகலத்திலும், உயரத்திலும் சமமாக 108 அங்குலம் இருப்பானாகில் அவன் லோக பாலன் ஆகுவன். உமது பிள்ளை அப்படியிருக்கிறான். 57. யாருடைய 5 இடங்கள் சிறியதாகவும், 5 இடங்கள் பெரிதாகவும், 6 இடங்கள் ரக்தமாகவும், ஆறு உயரமாகவும், 3 பளுவாகவும், 3 லகுவாகவும், 3 ஆழமாகவும் இருக்குமோ அந்த புருஷன் 32 லக்ஷணங்களும் பொருந்தினவனாக இருப்பான். 58. உமது இந்தத் தீர்க்காயுஸ் புத்ரனின் இரண்டு நேத்ரங்களும் முகவாயும், மூக்கும். முழங்கால்களும் இந்த 5 அங்கங்களும் நீளமாக இருக்கின்றன. அது மி கவும் புகழத்தக்கது. 59. கழுத்து, தொடை, லிங்கம் இந்த மூன்றும் குட்டையாக இருக்க வேண்டும். ஸ்வரம் அந்தக்கரணம் நாபீ இவைகள் கம்பீர மாக இருக்க வேண்டும். அப்படியிருப்பதால் இந்த பாலகனுக்கு ஸுபலக்ஷணங்கள் இருக்கின்றன. 60. தோல், முடி, விரல்கள், பற்கள், விரல்களின் நுனிகள் இவைகள் இந்த பாலகனிற்கு சிறியதாகவும் மெல்லியதாகவும் இருக்கின்றன. 61. திக்பாலர்களுடைய பதங்களைப் போல பாலகனுடைய மார்பும், வயிறும், நெற்றியும் தோள்களும் அத்யாயம்–11 239 முகமும் இந்த ஆறு பாகங்களும் உயரமாக இருக்க வேண்டும். அதனால் இந்தப் பையன் மிகவும் ஐஸ்வர்யசாலியாக இருப்பான். 62. இரண்டு கை உள்ளங்கைகளும், இரண்டு கண்களின் ஓரமும், இரு உள்ளங்கால்களும், நாக்கும், கீழ் உதடும், நகங்களும் ஆன இந்த ரக்தவர்ணமாக இருப்பதனால் ராஜ்ய ஸுக லாபம் உண்டாகும். 63. இந்தப் பையனுடைய நெற்றியும் இடுப்பும், மார்பும் விசாலமாக இருக்கின்றன. அதனால் ஸர்வ தேஜஸ்ஸுகளையும் அளவு கடந்த ஐஸ்வர்யங்களையும் அடைவான். 64. இப்பாலகனுடைய இரண்டு கைகளும் ஒரு வேலீயும் செய்யாவிட்டாலும் ஆமையின் முதுகைப்போல் கடினமாக இருக்கின்றன. ஆனால் பார்ப்பதற்கும் நடப்பதற்கும் காரணமாக இருக்கும் கால்களும் மிருதுவாக இருக்கின்றன. அதனால் அரசாட்சி செய்யும் பாக்யம் ஏற்படலாம். 65. தீர்க்காயுளுக்கு அறிகுறியாக இரண்டு கைகளின் ரேகைகளும் ஆள்காட்டிவிரலின் அடியிலிருந்து சுண்டு விரலின் மறுபுறம் வரைக்கும் போயிருக்கிறது. 66. இரண்டு பாதங்களும் சதைப்பற்றுள்ளதாக சிவந்து அதிகம் பருமனில்லாமலும் வெளுப்பில்லாமலும் அழகாக, சமமான முட்டுகளுடனும் வழுவழுப்பாகவும் இருப்பது ஐஸ்வர்யத்தைக் குறிக்கிறது. 67. உன்னுடைய இந்த பாலகன் சிவந்த மிகச்சில கைரேகைகளுடன்கூட இருப்பதனால் எப்பொழுதும் ஸுகமாகவேயிருப்பான். குறி லேசாகவும் சிறியதாகவும் இருப்பதனால் ராஜாதி ராஜனாக இருப்பான். 68,69. இவனுடைய முழங்கால்களும், இடுப்புப்ரதேசங்களும் வழுவழுப்பாக இருக்கின்றன. இவன் உயர்ந்த ஆஸனத்தில் இருக்கத்தக்கவன். இவனுடைய தொப்புள் வட்டமாகவும் வலது பக்கம் சுழித்தும் ரக்தவர்ணமாக இருப்பது ஸகல ஐஸ்வர்யங்களையும் சூசிப்பிக்கிறது. இந்த பாலகனுடைய மூத்திரதாரை வலது பக்கமாக விழுந்தாலும், வீர்யம் மீன், தேன் இவைகளின் வாஸனையாக இருந்தாலும். 240 காசீ காண்டம் 70. இவனது அகலமானதும், சதைப்பற்றுள்ளதும், வழவழப்புள்ளதுமான கடிப் பிரதேசம் சுகத்தைக் கொடுக்கும். அழகான சரீர அமைப்பு, முழங்கால் வரை இடிக்கும் கைகள் இரண்டும் திக்பாலகனாவதைக் குறிக்கிறது. 71. மார்பிலுள்ள ஸ்ரீ வத்ஸம் என்னும் மரு, வஜ்ரம், மத்ஸ்யம், சக்ரம், கமலம், தனுஸ், தண்டம் இந்த சின்னங்களுடைய இரண்டு கைகள் ஸ்வர்க்காதிபதியாாவன் என்பதைக் குறிக்கிறது. 72. இவனுடைய 32 பற்களும்; யானையின் துதிக்கைப் போன்றும், சங்கைப் போன்றதும், மூன்று ரேகைகள் கூடின கழுத்தும் க்ரௌஞ்ச துந்துபி ஹம்ஸ மேகங்களைப் போன்றதுமான இவனுடைய சப்தம் எதைக் குறிக்கிறது. என்றால் - இந்தச் சிறுவன் சமஸ்த ராஜாதி ராஜாக்களுக்கும் மேலான விசேஷம் பொருந்தினவனாவான் என்பதை. 73. இவனுடைய விசேஷம் பொருந்திய கண்கள் தேனைப்போல சற்று பிங்கள வர்ணமாக உள்ளன. அதனால் லக்ஷ்மி இவனை ஒரு பொழுதும் கைவிடமாட்டாள். இவனுடைய நெற்றியில் ஐந்து ரேகைகள் இருக்கின்றன. வயிறும் சிம்மத்துடையதுபோல் இருக்கிறது. அதனால் இப்பாலகன் மிகவும் சுபலக்ஷணங்களுடன் இருக்கிறான். 74. இவனுடைய உள்ளங்கால்களில் ஊர்த்வ ரேகை இருக்கிறது. மூச்சு விடும்போது தாமரையின் வாசனை இருக்கிறது. எல்லா விரல்களையும் சேர்த்து வைத்துக் கையை விரித்தால் கையில் இடைவெளியில்லீ. நகங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. இந்த பாலகன் உயர்ந்த மஹாலக்ஷணங்களுடன் கூடி இருக்கிறான். 75. ஆனால் ஸர்வ குண ஸம்பன்னனாகவும், ஸமஸ்த லக்ஷணங்களுடன் கூடியும் இருந்த பொழுதிலும் நிர்மலமான பரிபூரணமான கலீகளுடன் கூடின சந்திரனைப் போல இந்த பாலகனுக்கு ஒரு குறையிருக்கிறது. ப்ரம்மா இந்தக் குழந்தையை நாசம் செய்யாமல் இருக்கவேண்டும். 76. அதனால் எல்லாவித பிரயத்தனங்களினாலும் இந்தக் குழந்தையை ரஷிக்க வேண்டும். ஏனென்றால் விதி வக்கரித்துக் கொண்டால் குணங்களும் தோஷமாகின்றன. அத்யாயம்–11 241 77. இந்த பாலகனுக்குப் பன்னிரண்டாவது வயதில் மின்னலாகிற அக்னியின் மூலம் தீங்கு ஏற்படக் கூடும் என்று எனக்கு ஸந்தேஹம் தோன்றுகிறது, என்று இப்படிச் சொல்லிவிட்டு புத்திமானான நாரதமுனி வந்ததுபோல் திரும்பிப் போய் விட்டார். 78. நாரதருடைய இவ்வாக்கியத்தைக் கேட்ட விஸ்வாநரமுனி பத்தினியுடன் அதே ஸமயத்தில் பயங்கரமான இடி விழுந்த மாதிரி துக்கித்தார். 79. விஸ்வநாதர் ஐயோ மோசம் போனேனே என்று மார்பில் அடித்துக் கொண்டார். வரப்போகும் புத்ர சோகத்தை நினைத்து வியாகுலத்தினால் வெகு நேரம் மூர்ச்சையாகிக் கிடந்தார். 80. சுசிஷ்மதியும் வியாகுலத்தினால் பரபரப்படைந்து இந்திரியங்களுடைய துக்கத்தினால் தீனையாகி ஐயோ! ஐயோ! என்று மிகவும் தீனஸ்வரத்துடன் அழத்தொடங்கினாள். 81. ஐயோ குழந்தையே, குணநிதியே! பிதாவின் ஆக்ஞையைத் தட்டாதவனே! என்னைப் போன்ற இந்த அபாக்யவதியின் வயிற்றில் ஏன் பிறந்தாய்? 82. குழந்தாய்! நீ எனக்கு ஒர÷ ஒரு புத்ரபாக்கியமல்லவா? உன்னுடைய குணங்களாகிற அலீயினால் நிறைந்து, சோகஸமுத்ரத்தில் விழுந்த என்னை உன்னையல்லாமல் வேறு யார்தான் காப்பாற்றுவார்கள்! 83. ஏ! பாலா! பவித்ரமான கமலத்தைப் போன்ற கண்களையுடையவனே, உலகத்துக்கண்களாகிய சகோதரத்து சந்திரனே! ஏ! அப்பனே ! உன் தகப்பனாருடைய நேத்ர கமலத்துக்குரிய சூரியனே! என்னுடைய ஆயிரக்கணக்கான விரதோத்ஸவத்திற்குக் காரணமானவனே! 84. பூர்ண சந்திரனைப் போன்ற முகத்தையுடையவனே! பிரிய வசனங்களைப் பேசுகிறசுதாஸாகரமே, ஐயோ! குழந்தையே! க்ரஹ பதியே! நான் எவ்வளவோ துக்கங்களை ஸஹித்துக்கொண்டு உன்னைப் பெற்றேனே, உன்னைப் பெறுவதற்காக நான் என்னதான் செய்யவில்லீ. 242 காசீ காண்டம் 85. ஐயோ குழந்தையே! உன்னைப் பெறுவதற்காக நான் எந்த தேவதையைத்தான் பூஜிக்கவில்லீ. எந்தத் தீர்த்தங்களில் தான் ஸ்நானம் செய்யவில்லீ. புண்ணியவசத்தால் கிடைத்த குழந்தையே, உனக்காக எத்தனை நியமாநுஷ்டானங்கள், மருந்துகள், மந்த்ரங்கள், யந்த்ரங்கள் இவையெல்லாம் பூஜை செய்யவில்லீ. ஸம்ஸார ஸாகரத்தைக் கடப்பதற்குத் துணையாக வந்த குழந்தையே! என்னுடைய துக்கத்தின் பாரத்தை நீக்குவாயா சுகசமுத்ரமே? உன்னுடைய முகசந்திரனைக் காட்டப்பா குழந்தாய், 86. நீ தான் எங்களுடைய புத் என்னும் நரகமாகிய ஸமுத்ரத்தை வற்றவைக்கிற வடவானல், உன்னுடைய வசனமாகிற அம்ருதத்தைப் பொழிந்து உன்னுடைய பிதாவிற்கு உயிரூட்டு. 87. இந்த வரப்போகும் அமங்களத்தைத் தெரிந்திருந்தும், இந்த தேவதைகள் உன்னுடைய ஜன்மோத்ஸவத்திற்கு ஏன் வந்தார்கள்? ஒரேயிடத்தில் சகல குணங்கள், ஸ்வபாவங்களும் கலீகளும் சௌந்தர்யமும் நல்ல லக்ஷணமும் ஒன்று சேர்ந்து, இருப்பது கண்டு சந்தோஷமடைந்தார்கள். 88. ஹே சம்போ, மஹாதேவா, கருணாகரா, சூலபாணே! உங்களை வேதமறிந்த ஞானிகள் ம்ருத்யுஞ்ஐயன் என்று கூறுகிறார்களே, உங்களால் கொடுக்கப்பட்ட இந்த பாலகன் காலனுக்கு இறையாவானானால் உலகத்தின் யார்தான் இரையாகமாட்டார்கள்! 89. ஐயோ! ஏ படித்தவனே! நீ மிகவும் முயற்சியுடன் இந்த உலகத்தின் தாபத்தைப் போக்க வந்த பாலகனுக்கு ஆழமான மத்யமும் உத்தமமும் ஆன ரத்னஸாரத்தையும், ப்ரபலமானதும் விசாலமானதுமான குணஸாகரத்தை ஏன் கெடுத்தாய்? 90.காலனே! உன்னுடைய ராணிக்குக் குழந்தைகள் இல்லீயா? இல்லீ அவள் புத்ரவதியாக இருந்தும்கூட புத்ரனுடைய முகசந்திரனைப் பார்க்க ஒட்டாமல் உன்னுடைய நாச வேலீயான அந்தகாரம் மறைக்கிறதா? வஜ்ராயுதத்தைப்போல் நிஹ்டூரமானவனே! கமலநாளத்தைப்போல அதிகக் கோமளமாயுள்ள இந்த அத்யாயம்–11 243 பாலகனின் சரீரத்தின் மேல் கடினமான கோடாரியைப் போன்ற உன் கோரைப்பற்களை ஏன் பதிக்கிறாய்? 91.சுசிஷ்மதி அநேகவிதமாய் இவ்விதம் வெகு நேரம் பிரலாபித்துத் தன்னுடைய கண்ணிரின் தாரையினால் பொங்குகின்ற அலீகளினால் நிரப்பப்பட்ட மிகவும் சூடான பெருமூச்சு விட்டுவிட்டு அவள் உலர்ந்தே போய்விட்டாள். 92 அவளுடைய இந்த தீனமான பிரலாபத்தைக் கேட்டு மரங்களும் வாயுவின் அசைவாகிய வ்யாஜத்தினால் அடிக்கடி தலீயையாட்டி, புஷ்பரூபமான கண்ணீர்த்துளிகளைச் சிதறியது பக்ஷிகளுடைய கலமாகிய தீனஸ்வரத்தினால் அவை அழ ஆரம்பித்தன. 93. சுசிஷ்மதி வாய்விட்டுக் கதறி அழ ஆரம்பித்தாள். அதனால் பர்வதங்களிலுள்ள குகைகளாகிற முகம் மிருகங்கள் பக்ஷிகளுடைய வருகையில்லாமல் சூன்யமாயின. அதனால் அவைகள் இவளுடைய துக்கத்தினாலே பரிதவித்து, எதிரொலி என்னும் வ்யாஜத்தினால் அவைகளும் உயர்ந்தகுரலில் அழ ஆரம்பித்தன. 94. விஸ்வாநரமுனியும் இந்த அழுகைப் பிரலாபத்தைக் கேட்டு மூர்ச்சை தெளிந்து, எழுந்து என்ன என்ன என்னுடைய அந்தராத்மாவிலும் சரீரத்திலும் நிரம்பியிருக்கிற என்னுடைய உயிர் என்னுடைய இந்திரியங்களுக்கு ஸ்வாமியான க்ரஹபதி எங்கே என்று கத்திக் கொண்டே எழுந்திருந்து உட்கார்ந்தார். 95. இப்பொழுது அகஸ்தியமுனி கூறுவார்:- இதற்கு பிறகு கிரஹபதி மாதா பிதாக்கள் மிகவும் சோகத்தினால் துடிப்பதைக் கண்டு சிறிது புன் சிரிப்புடன் கூறினார், ஏ அம்மா, 96. சிவனுடைய சரண தூளியாகிற கவசத்தை அணிந்தபிறகு அந்தக் காலனால் கூட என்னைக் கொல்லமுடியாது. அதிக்ஷுத்ரமான அந்த மின்னல் என்னை என்ன செய்யும்? 97. நீங்கள் இருவரும் நான் இப்பொழுது செய்யும் சபதத்தைக் கேளுங்கள்; நான் தங்களுடைய புத்ரனாக இருந்தால் எல்லாமறிந்த ஸத்ஜனங்களுககு ஸர்வாபீஷ்டத்தைக் கொடுப்பவரும் காலகூடமெனும் பயங்கர விஷத்தைப் 244 காசீ காண்டம் பருகினவரும் காலனுக்கு காலனான அத்தமஹாகாலலான ம்ருத்யுஞ்ஜயனை ஆராதித்து இப்படி ஒரு கர்மத்தைச் செய்வேன். அதனால் மின்னலும் என்னைப் பார்த்து பயப்படும். 98,99. வ்ருத்தர்களான பிராம்மண தம்பதிகள் பஞ்ச காலத்தில் பெய்த மாரிக்கு சமமான புத்ரனுடைய வசனத்தைக் கேட்டு, ஸந்தாபத்தை விட்டு விட்டுக் கொஞ்சம் சாந்தமாகி அப்பொழுது கூறுவார்கள். 100. இந்த மேகமில்லாத மழையைப் போன்றும் க்ஷீரஸாகரத்தின் அம்ருதத்தின் உற்பத்தியைப் போன்றும், ஆன இந்த வசனங்கள் எங்கிருந்து வந்தன? எங்களுக்கு மிக்க சந்தோஷத்தை அளிக்கின்றன. 1. என்ன சொன்னாய், என்ன சொன்னாய்! இன்னும் ஒருமுறை சொல்லு. காலனே கொல்லமாட்டானென்றால், அற்பமான மின்னல் என்ன செய்யும்? என்று கூறினாயல்லவா? 2. உண்மையிலேயே எங்களுடைய தாபம் சாந்தியடையும் பொருட்டு தேவ தேவனான ம்ருத்யுஞ் ஜயனின் ஆராதனையென்னும் மகத்தான உபாயத்தை நீ கூறினாயல்லவா? 3. அப்பனே மேலும் மனோரதத்தை விட அதிக பலன் கொடுப்பவரும், காலத்தையே நாசம் செய்பவரும், ஆன மஹாதேவருடைய சரணாகதியைப் போய் அடைய அவரைவிட ஹிதம் செய்பவர் வேறு ஒருவரும் கிடையாது. 4. அப்பனே! பூர்வ காலத்தில் கால பாசத்தால் கட்டுண்ட ஸ்வேத கேதுவே எப்படிக் காப்பாற்றினார் என்பதை நீ கேட்டதில்லீயா? 5. எட்டு வயது புத்ரனான சிலாத முனிவரின் புத்ரனின் மரணத்தின் வாயில் விழுந்தவுடன் அந்த சிவன் அவனை ரக்ஷித்து ஜகத்துக்கு ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடிய நந்தியின் ரூபமாக தனது பாரிஷதராக வைத்துத் கொண்டார். 6.க்ஷீர ஸமுத்ரத்தைக் கடைந்தவுடன் உண்டான ப்ரளயாக்னிக்கு ஸமமான கோர ரூபமான ஹாலாஹலத்தை (விஷத்தை) குடித்து மூன்று உலகங்களையும் ரக்ஷித்தார். 7. த்ரை லோக்யத்தின் சம்பத்தையும் அபகரிக்கின்ற மிகவும் கர்வியான ஜாலந்தர் என்னும் அஸுரனைத் தனது கால் அத்யாயம்–11 245 பெருவிரல் ரேகையிலிருந்து உண்டான சக்கரத்தினால் வெட்டி எறிந்தார். 8.பின்னம் தூர்ஜடி தேவன் விஷ்ணுவை பாண ரூபமாகக் கொண்டு அந்தப் பாணம் வீழ்ந்ததால் உண்டான அக்னி மூலமாக த்ரிபுரத்தையும் எரிந்தார். 9. த்ரைலோக்யத்திலும் உள்ள ஐஸ்வர்யத்தினால் மதர்த்த அந்தகன் என்னும் அசுரனை த்ரிசூலத்தின் முன் பாகத்தில் கோர்த்துக் கொண்டு பதினாயிரம் வருஷங்கள் சூரியனுடைய வெய்யிலில் உலர்த்திக் கொண்டேயிருந்தார். 10. மூன்று உலகங்களையும் ஜயித்து கர்வத்துடன் இருந்த மன்மதனை ப்ரம்மாதி தேவகணங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது தனது நெற்றிக் கண்ணால் பஸ்மமாக்கி சரீரமற்றவனாக்கினார் (அனங்கன்). 11. தேவர்களையும் படைக்கக் கூடிய மேகவாகநன் அச்சுதன் ஸம்ஸாரத்தை ரக்ஷிக்கக் கூடிய மஹா மணியான சிவனை சரணமடைவாய். ஏ புத்ரா! சிவனையே சரணமடைவாய். 12. மஹா க்ரஹபதி மாதா பிதாக்களின் ஆக்ஞையைப் பெற்று அவர்கள் சரணங்களில் வணங்கி அவர்களை ப்ரதக்ஷிணம் செய்து மிகவும் ஆறுதல் கூறிக் கிளம்பினான். 13. ப்ரம்மா, நாராயணன் முதலிய தேவதைகளுக்கு துர்லபமான இயற்கையாக உண்டா ப்ரளயத்தினால் ஏற்பட்ட ஸந்தாபத்திலிருந்து விச்வேச்வரர் எவரை ரக்ஷிக்கிறாரோ அந்த விசித்ர குணங்களுடன் கூடிய பணியினால் செய்த பணியே மாலீக்கு சமானமாகியும் வெள்ளை வர்ணமாகிய கங்கை புஷ்பமாலீயைப் போன்று யாருடைய கழுத்தில் பிரகாசிக்கிறதோ 15. ஸம்ஸாரத்தின் ஸந்தாபத்தினால் க்லேசமடைந்து ஜனங்களுடைய பூர்வ ஜன்மத்தை வருணா நதி மூலமாக நிவாரணம் செய்கின்றதோ, அஸியின் தாரையினால் சேதனம் செய்கின்றதோ மிகவும் த்ருடமான அஷ்டாங்க யோகத்தின் மூலம் எங்கு முக்தியடைகிறதோ, 16. அதை ஸ்பஷ்டமாக வெளிப்படுத்தும் பெயர் காசி என்று பண்டிதர்கள் சொல்கிறார்கள். 246 காசீ காண்டம் 17.அதே காசியில் வந்து க்ருஹபதி ஸம்ஸார துக்கத்தினால் தஹித்துக் கொண்டிருக்கும், காதுவரை நீண்டிருக்கும் விழியினால் தர்சனம் செய்து முதலாவது மணிகர்ணிகையை அடைந்தான். 18. அங்கு அவன் விதிப்படி ஸ்நானம் செய்து மூவுலகத்துப் பிராணிகளையும் ரக்ஷிக்கும் விபு விஸ்வேஸ்வரரைத் தரிசனம் செய்து நமஸ்காரம் செய்தான். 19. கிரஹபதி அந்த லிங்கத்தைப் பார்த்துப் பார்த்து ஹ்ருதயத்தில் மிகவும் ஆனந்தத்தையடைந்தான். அவன் தீர்மானித்தான் அதாவது ஆனந்தத்தின் மூலமே இங்கேதான் பிறந்ததென்று. 20. மூன்று உலகங்களிலும் சராசரங்களிலும் என்னைப்போல் பாக்யசாலி யாருமில்லீயென்று, காரணம் இன்று நான் விபு விஸ்வநாதனை தரிசனம் செய்யப் பெற்றேன். 21.இது த்ரைலோக்யத்தின் ஸாரமே இங்கு லிங்க ரூபமாக விளங்குகிறது 22.அது தீர்மானம் அல்லது ப்ரம்மானந்தத்தின் உத்தமமான வேர் இதுதானோ? இது என்ன ப்ரம்மாரஸாயனமா? 23. யோகி ஜனங்களுடைய இதயகமலத்தில் இருக்கும் ஆனந்தரூபமான நிராகார ப்ரம்மம் என்றும் கூறுகிறார்களே, அது இதுதானா? லிங்க ரூபமாக உருவாகியிருக்கிறது? 24. அல்லது இது ப்ரம்மாண்டத்தின் ஆதாரஸ்வரூபமான அநேக விதமான ரத்னங்கள் நிரம்பிய பாண்டமா? அல்லது இந்த லிங்கம் மோக்ஷ வ்ருக்ஷத்தின் பலமா? அப்படித்தான் இது விஷயத்தில் கொஞ்சமும் ஸந்தேஹமில்லீ. 25. அல்லது மோக்ஷ லக்ஷ்மியின் புஷ்பத்தினால் அலங்கரிக்கப்பட்ட கேசபாகமா? அல்லது இது கைவல்ய ரூபமான மல்லிகை லதாவினுடைய புஷ்பக் கொத்தா? ஸ்துதியில் ஆழ்ந்திருக்கும் ஜனங்களுக்கு அபீஷ்ட பலனைக் கொடுக்கக்கூடியதா? 26. இல்லீ, இது மோக்ஷலக்ஷ்மி ஆனந்தமாக விளையாடும் பந்தலா? அல்லது ஸ்வர்க்கரூபமான உதயாசலத்தில் உதித்த சந்திரனா? அத்யாயம்–11 247 27. அல்லது ஸம்ஸாரத்தின் மோகரூபமான இருட்டைப் போக்கடிக்கும் ஸூர்யனா? அல்லது கல்யாணமய ரமணியுடைய அழகான சிங்காரக்கண்ணாடியா? 28. ஓ சரி சரி, இப்போது புரிந்தது. இது வேறு ஒன்றுமல்ல. எல்லா தேஹதாரிகளுடைய கர்ம விதைகளையும் சேகரித்து வைத்திருக்கிற அற்புதமான பீஜபுரி என்ற பழமேதான். 29. ஏனென்றால் இந்த நிர்வாண முக்தியைக் கொடுக்கக்கூடிய லிங்கத்தில் உலகத்தில் உள்ள கர்மம் என்ற பெயருள்ள வித்துகளெல்லாம் லயமாகின்றன. அதனாலேயே விஸ்வலிங்கமென்று சொல்லப்படுகிறது. 30. என்னுடைய மகத்தான பாக்யத்தினால் நாரதர் வந்து இந்த விஷயத்தைக் கூறினார். அவராலேயே நான் க்ருதார்த்தனானேன். 31. இந்த விதமாக ஆனந்த ரூபமான அம்ருத ரஸத்தைப் பானம் செய்துகொண்டு இந்த கிருஹபதி ஒரு சுபதினத்தில் அனைவருக்கும் ஹிதத்தையளிக்கும் லிங்கத்தை ஸ்தாபித்து, 32. இந்த்ரியங்களை ஜயிப்பதற்கு ஜனங்கள் கஷ்ட ஸாத்யமான எந்தக் கடூர வ்ரதங்களை அனுஷ்டிப்பார்களோ அவைகளை அனுஷ்டிக்கத் தொடங்கினான். அந்த பவித்ராத்மா நூற்றெட்டு குடங்களில் கங்கா ஜலத்தை நிரப்பி வஸ்திரத்தினால் வடிக்கட்டி சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். 33. நூற்றெட்டு நீலக்கமல புஷ்பங்களை மாலீயாகத் தொடுத்து அணிவித்தான். பிறகு ஆறு மாதபர்யந்தம் ஏழு தினங்களுக்கு ஒரு தரம் கந்தமூல பலங்களை புஜித்திருந்தான். 34. 35. பிறகு ஆறு மாதத்திற்கு, பக்ஷத்திற்கு ஒருநாள் உலர்ந்து விழுந்த இலீகளைப் புஜித்துக் கொண்டிருந்தான். பிறகு மாதத்திற்கு ஒருமுறை வாயுபக்ஷணம். பிறகு ஆறுமாதம்வரை ஜலத்தின் ஒரு துளியாகச் சாப்பிட்டு வந்தான். 36. இந்தப் பிரகாரம் தபஸ் செய்து கொண்டு வருஷங்கள் இரண்டு கழிந்தன. க்ருஹபதியுடைய ஜன்மத்தில் பன்னிரண்டாவது வருஷம் வந்தது. நாரதர் சொன்ன வார்த்தையை. 248 காசீ காண்டம் 37. பூர்த்தி செய்வதைப் போல வஜ்ராயுதபாணியான இந்திரன் அவனிடம் வந்து சொன்னான். வரம் கேள், உன் மனத்தில் என்ன தோன்றுகிறதோ அந்த வரம் தருகிறேன் என்றான் 38. ஓ ப்ராம்மணா! நான் ஸாக்ஷாத் இந்திரன், உன்னுடைய சுபக்ருதத்தினால் நான் மிகவும் ஸந்தோஷம் அடைந்தேன் என்றான். அந்த தீரனான முனிகுமாரன் மஹேந்திரனுடைய இந்த வார்த்தையைக் கேட்டு 39. கிளியைப் போன்று மதுர அக்ஷரங்களினால் ஆன இனிமையான வார்த்தைகளைப் பேசத் தொடங்கினான். ஏ! வ்ருத்ராஸுரா சத்ருவே, ஏ! ம கவன்! தாங்கள் தான் வஜ்ராயுதன் என்றறிந்தேன். 40. ஆனாலும் நான் தங்களிடம் வரம் வாங்குவதற்கு விரும்பவில்லீ. எனக்கு வரமளித்கக் கூடிய தாதா சங்கரர். 41. இந்திரன் கூறினான்; ஏ! பாலகா, என்னைத் தவிர வேறு சங்கரர் என்று ஒருவர் இல்லீ. நான்தான் எல்லா தேவதைகளுக்கும் ஸ்வாமி. அ தனால் நீ சிறுபிள்ளைத் தனத்தைவிட்டு என்னிடம் வரத்தைக் கேள். 42. பிராம்மணச் சிறுவன் கூறினான். ஏ! அகல்யையை ஏமாற்றியவனே! துஷ்டனே, கோத்ர சத்ருவே! பாகசாஸனனே, நான் ஸ்பஷ்டமாகக் கூறுகிறேன். நான் பசுபதியைத் தவிர வேறு எந்த தேவதைகளிடமும் பிரார்த்தனை செய்ய விரும்பவில்லீ. 43. இந்திரனுக்கு, இவ்வாறு சொல்லப்பட்ட பாலகனுடைய வார்த்தைகளை் கேட்டவுடன் அவனுடைய கண்கள் கோபத்தினால் ரத்தப்பிழம்பாயின. பயங்காரமான வஜ்ராயுதத்தைத் தூக்கி பாலகனை பயமுறுத்தினான். 44. அதன்பின், பாலகன் நூற்றுக்கணக்காக மின்னல்கள் ஒரே சமயத்தில் வீசினால் போல் உள்ள ஜ்வாலீகள் உடைய வஜ்ராயுதத்தைப் பார்த்து நாரதரின் வசனங்களை நினைத்துக் கொண்டு பயத்தினால் அதிர்ந்து மூர்ச்சித்து வீழ்ந்தான். அத்யாயம்–11 249 45. அதன் பிறகு அக்ஞானமாகிய இருட்டை விநாசிக்கும் கௌரீபதி பகவான்சம்பு ப்ரஸன்னமானார். எழுந்திரு! எழுந்திரு! உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று கூறிக்கொண்டு கைகளால் தடவி அவனை எழுப்பினார். 46. பாலன் இரவில் தூங்கி எழுவதுபோல், கமலத்திற்கு ஸமமான கண்களைத் திறந்து எழுந்து உட்கார்ந்து கொண்டான். முன்னாலேயே நூற்றுக்கணக்கான ஸூர்யர்களைவிட அதிகமான பிரகாசத்துடன் கூடிய பகவான் சம்புவை தரிசித்தான். 47. நெற்றியில் கண்ணும், நீல கண்டனும், வ்ருஷபத்வஜனும் ஜடாபாரத்துடன் அடர்ந்த முகமும்; பிறைசந்திரனைத் தலீயில் தாங்கியும், விசாலமான த்ரிசூலமும், பினாகி என்ற பாணம் முதலானவைகளைத் தாங்கினவரும், ஜ்வலிக்கின்ற கற்பூரம் போன்ற வெண்மையான தேஹமும் யானைத்தோலீ அணிந்துகொண்டு இடப்பக்கம் பார்வதிதேவியுடன் பகவான் சம்பு, பாலகனின் எதிரில் வந்து நின்றார். 48,49. குரு வாக்யங்களினாலும், சாஸ்திரங்களினாலும் மஹாதேவனை அறிந்துகொண்டு, ஸந்தோஷத்தினால் ஆனந்தக் கண்ணீர் பெருக, அடைப்பட்ட குரலுடன் புளகாங்கிதனாய், 50. சிறுவன் தன்னையே மறந்து ஒரு க்ஷணமாத்ர நேரம் பொம்மையைப்போல் அசையாமல் நின்றான். 51. அந்தச் சிறுவன் ஸ்துதிக்கவோ, வணங்கவோ ஏதாவது வேண்டிக் கொள்ளவோ முடியாமல் நின்றதைப் பார்த்து சங்கரர் சற்று புன்சிரிப்புடன் கூறினார். 52. அஹோ குழந்தாய்! 'கிரஹபதி' வஜ்ராயுதபாணியாக இந்திரன் வந்து நின்றவுடன் நீ பயந்து விட்டாய் அல்லவா? நான் அறிவேன் பயப்படாதே; நான் உன்னை பரீட்சித்துப் பார்த்தேன். 250 காசீ காண்டம் 53. என்னுடைய பக்தன் மேல் இந்திரன் வஜ்ராயுதத்தை விடுவது இருக்கட்டும். யமராஜருக்குக்கூட அதிகாரம் கிடையாதே நான்தான் இந்திரரூபமாக வந்த உன்னைச் சோதித்தேன். 54. ஹே மங்களமானவனே! உனக்கு நான் வரம் கொடுக்கிறேன். இன்றிலிருந்து நீ அக்னி பதவியில் இருக்கப்போகிறாய். ஹே பாலகா! நீ தான் எல்லா தேவதைகளுக்கும் வாயாக இருக்கப்போகிறாய். 55. ஹே அ க்னி! நீ எல்லா பிராணிகளுடைய தேகத்திற்குள் ஸஞ்சரிப்பாய், தர்மராஜன், இந்திரன் இவர்களுக்கு மத்யஸ்தானத்தில் அமர்ந்து நீ ஒரு திக்பாலனாகி ராஜ்யத்தைப் பங்கிட்டுக் கொள்வாய். 56. உன்னால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த லிங்கம் எல்லா தேஜஸ்களையும் வளர்த்துக்கொண்டு உனது பெயரால் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுவார். அந்தப் பெயரால் பிரஸித்தமடைவார். 57. எவன் அக்னீஸ்வரரின் பக்தன் ஆவானோ அவனுக்கு மின்னலாலும் அக்னியினாலும் பயம் கிடையாது. மந்தாக்னியாகவும் இருக்கமாட்டான். அவனுக்கு அகால ம்ருத்யுவும் ஏற்படாது. 58. காசியில் ஸமஸ்தஸித்தியையும் கொடுக்கவல்ல அக்னீஸ்வரரைப் பூஜை பண்ணிய பின் தெய்வச் செயலால் அவன் வேறு எங்காவது சென்று மரித்தாலும் அக்னி லோகத்தில் மரியாதையுடன் வாழ்வான் 59. அந்த கல்பம் முடிந்தவுடன் அவனுக்குக் காசி பிராப்தி ஏற்படும். அங்கேயே முக்தியடைவான் . வீரேஸ்வரருக்குக் கிழக்கே கங்கையின் மேற்கு பக்கத்தில் 60. இருக்கும் அக்னீஸ்வரரை ஆராதனை செய்தாலும் மனிதன் அக்னி லோகத்தையடைவான். ஹே திக் பால! நீ அத்யாயம்–11 251 மாதா, பிதா, மித்ரன், பந்து சொந்த ஜனங்களுடன் இந்த விமானத்திலேறிக் கொண்டு இப்பொழுதே செல். 61. சிவன் இப்படிச் சொல்லிவிட்டு அவனுடைய பந்து பாந்தவர்களை அழைத்து வந்து மாதா பிதாவையும் க்ருஹபதியையும் திக்பாலர் பதத்தில் அபிஷேகம் செய்து வைத்து அதேலிங்கத்தில் மறைந்துவிட்டார். 62. விஷ்ணு தூதர்கள் கூறினார்கள், ஹே சிவசர்மா! உனக்கு நாங்கள் அக்னியின் ஸ்வரூபத்தை வர்ணித்தோம் இன்னும் என்ன கேட்க விரும்பினாலும் நாங்கள் சொல்லத்தயாராக இருக்கிறோம். ஸ்ரீஸ்காந்த புராணத்தில் காசிகண்டத்தில் பூர்வார்த்த பாஷாடீகாவான அக்னி உத்பத்தி வர்ணனம் என்ற 11வது அத்யாயம் ஸம்பூர்ணம். 252 காசீ காண்டம் அத்யாயம் 12 சிவசர்மா கூறினார்' ஹே விஷ்ணுவின் சரணதூளி படிந்த கேச பாசத்தையுடையவர்களே! இரு புருஷோத்தமர்களே! நிர்ருதி முதலிய ÷ லாகங்களைப் பற்றிய விருத்தாந்தங்களைக் கூறுங்கள்;- 1. விஷ்ணு பகவானுடைய இரண்டு பாரிஷதர்களும் கூறினார்கள்:- கேளும்! ஸம்யமநீ புரிக்குப் பிறகு புண்ணிய ஜனங்கள் வசிக்கும் திக்பாலனின் நைர்ருதி யெனும் பவித்ரமான நகரம் இருக்கிறது. 2. பரத்ரோகம் செய்யாத ராக்ஷஸர்கள் எப்பொழுதும் இங்கு வஸிக்கிறார்கள். இவர்கள் ஜாதியில் மாத்திரம்தான் ராக்ஷஸர்கள். ஆனால் ஸதாசாரத்தில் தார்மிக புருஷர்கள். 3. எவர்கள் நீச ஜாதியில் பிறந்து ச் ருதிஸ்ம்ருதி காட்டிய வழியில் செல்லுகிறார்களோ தர்ம சாஸ்திரத்தில் கூறாத அன்ன பானாதிகளை வெறுக்கிறார்களோ, 4. அதம ஜாதியில் பிறந்தாலும் பிற த்ரவ்யத்தை அபஹரித்தல், பரத்ரோகம் இவைகளைச் செய்யாமல் தர்மத்தை அனுஸரித்து நடக்கிறார்களோ? 5. எந்த ஜனங்கள் பிராம்மண, க்ஷத்ரிய, வைச்யர்களின் ஸேவை மூலமாகக் கிடைத்த பணத்தைக் கொண்டு வாழ்வை நடத்துகிறார்களோ, இரு பிறவிக்காரர்களுடன் பேசும்போதும் ஸங்கோசத்தினால் அங்கத்தைக் குறுக்கிக் கொள்கிறார்களோ, 6. அவர்கள் அழைத்தபோது வாயை வஸ்த்ரத்தினால் மூடிக்கொண்டு, ஜெய, சிவ, பகவன், நாத, ஸ்வாமின் ஆதி சப்தங்களை உச்சரித்துக் கொண்டு பிராம்மணர்கள் ஆகிய மூன்று வர்ணத்தார்களிடமும் பேசுகிறார்களோ? 7. எவர்கள் தினமும் தீர்த்தங்களில் ஸ்நானமும் பூஜையும் செய்கிறார்களோ, தங்களுடைய பெயரைக் கூறிக்கொண்டு த்விஜர்களுக்கு வந்தனம் செய்கிறார்களோ, மேலும், அத்யாயம்–12 253 8. தபம், தானம், தயை, க்ஷமை, சௌசம், இந்திரிய நிவாசம், இந்திரிய நிக்ரஹம், ஸத்யம், அஹிம்ஸை இவைகள் எல்லா ஜீவர்களுக்கும் தர்மத்துக் காரணமாக அமைகின்றன. 9. எவர்கள் அவசியமான கடமையென்றும் தர்மத்தில் எப்பொழுதும் முயற்சியுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் நீச ஜாதியில் எங்கு ஜன்மம் எடுத்தாலும் அவர்கள் யாவரும் ஸம்பூர்ண போகங்களை அனுபவித்துக் கொண்டு இந்த உத்தம நகரத்தில் வஸிக்கிறார்கள். 10. மிலேச்சர்களும் முக்தி தாயினி காசியை விட்டு விட்டு மற்ற ஏதாவது ஒரு உத்தம தீர்த்தத்தில் ஆத்ம ஹத்தி செய்து கொண்டு இறந்தாலும் அவர்களும் இங்கு பரிபூர்ண போகம் அனுபவிக்கிறார்கள். 11. யார் தற்கொலீ பண்ணிக் கொள்ளுகிறார்களோ அவர்கள் அந்த மஹா நரகத்தில் பிரவேசிக்கிறார்கள்; ஆயிரக்கணக்கான நரகத்தை அனுபவித்துவிட்டு பட்டிக்காட்டுப் பன்றியாகப் பிறப்பார்கள். 12. அதனால் வித்வான்கள் ஒரு பொழுதும் தற்கொலீ பண்ணிக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் ஆத்மஹத்தி பண்ணிக் கொள்கிறவர்களுக்கு இஹலோகத்திலும் பரலோகத்திலும் கூட நற்கதி கிடையாது. 13. சில சில தத்வ ஞானிகள் எல்லாத் தீர்த்தங்களுக்கும் ராஜாவும் எல்லாருடைய விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் தாதாவுமான ப்ரயாகையில் இச்சைப்படி மரணம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். 14. தயா தர்மத்தைப் பின்பற்றி வரும் பரோபகாரத்தில் தத்பரனாய் இருப்பவனுமான ம்லேச்சர்கள் கூட நல்ல கீர்த்தியுடன் இந்த உலகத்தில் வசிக்கிறார்கள். 254 காசீ காண்டம் 15. இப்பொழுது இந்த திக்பாலனுடைய விருத்தாந்தத்தைக் கூறுகிறோம். க்ஷணநேரம் கேளும்- பூர்வகாலத்தில் விந்த்யாசலத்தின் காட்டில் நிர்வித்யா என்னும் பெயருள்ள நதிக்கரையில் ஜனங்களுடைய முக்ய தளபதி மிகவும் பராக்ரமசாலியான பிங்காக்ஷன் என்று ஒருவன் கீர்த்தி வாய்ந்தவனாக இருந்தான். அவன் வீரனானாலும் கெட்ட காரியங்களில் வெறுப்புடையவனாக இருந்தான். 16, 17. அவன் காட்டில் தூர இருந்தாலும் வழிப் போக்கர்களுக்கு இடையூறாக இருந்த புலி சிங்கம் முதலியவைகளை வேட்டையாடிக் கொன்று விடுவான். 18, 19. அவன் தனது ஜீவிதத்தை வேடுவர்கள் தர்மப்படி நடத்தி வந்த போதிலும் அந்தக் கர்மத்திலும் தயையுடையவனாவே இருந்தான். விசுவாசத்தோடுகூடிய வளர்த்த மிருகங்கள், ஜலம் குடிக்கும் குட்டிமிருகங்கள், கர்ப்பமாக இருக்கும் பசு, பக்ஷி இவைகளை அந்நிய வேடர்களைப் போல் தயாதாக்ஷிண்யம் இல்லாமல் தர்மத்துக்கு விரோதமாகக் கொல்லமாட்டான். 20. அந்த வேடன் களைப்புடன் வரும் வழிப்போர்களுக்கு களைப்பாற்றி உதவி செய்வான். பசியுடன் வந்தவர்களுக்கு உணவளிப்பான். பாதரக்ஷையில்லாமல் வந்தவர்களுக்கு பாதரக்ஷையளிப்பான். 21. வஸ்த்ரம் இல்லாவிட்டால்அவைகளை அளிப்பான்; அவர்களுக்கு ம்ருதுவான மான்தோல் அளிப்பான். அங்குக் கடக்க முடியாத இடையூறுள்ள வழிகளைத் தானேக் கூடச் சென்று அவர்களைக் கடத்திவிடுவான். 22. அவர்கள் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளமாட்டான். அவர்களுக்கு அபயதானம் செய்து நீங்கள் விந்த்யாசலத்தில் எந்தப் பகுதியில் இருந்தாலும் அத்யாயம்–12 255 எனது பெயரைக் கூறினால் துஷ்டர்கள் தொந்திரவு செய்யமாட்டார்கள் என்பான். 23. அவன் வழியில் வரும் கோஸாயிகளை புத்ரனைப்போல் பார்த்துக் கொள்வான். அவர்களும் ஒவ்வொரு தீர்த்தஸ்தானத்தை தரிசிக்கும்போதும் அவனை ஆசீர்வதிப்பார்கள். 24. பிங்காக்ஷனுடைய இப்படிப்பட்ட நடத்தையினால் அந்தக் காடு நகரம் போலவே ஆயிற்று. பிங்காக்ஷனைப் பற்றின பயத்தால் துஷ்டர்கள் அந்நிய யாத்ரிகர்களை ஆக்ரமிக்கமாட்டார்கள். 25. ஒருதரம் பிங்காக்ஷனுடைய சிறிய தந்தை நிறைய பணம் எடுத்துக் கொண்டு வரும் மரவுரி உடுத்தி வரும் தபஸ்விகளின் கோலாஹலமான சப்தத்தைக் கேட்டான். 26. நீசனும், குரூபியான அவன், பணத்தின் பேராசையினால் அந்த ஸாதுக்களின் கூட்டத்தைக் கொல்லுவதற்கு யத்தனித்தான். அவன் ஸாதுக்களின் கூட்டத்திற்குச் சற்று முன்னால் சென்று அவர்களைக் கொல்லுவதற்கு முயற்சித்தான். அதற்காக மறைவாக இருந்து அவர்கள் செல்லும் மார்கத்தைத் தடுத்தான். 27. அந்த யாத்ரிகளுக்கு ஆயுள் கொஞ்சம் பாக்கியிருந்தது. அதனால் பிங்காக்ஷன் அதே ராத்ரியில் அதே வனத்தில் அந்த மார்க்கமாகவே வந்து தங்கியிருந்தான். 28. பிறருடைய பிராணனை அபஹரிக்கும் புருஷர்களுடைய மனோரதம் ஒருபோதும் நிறைவேறாது. ஏனென்றால் ஜகதீச்வரனால் பாதுகாக்கப்பட்ட இந்த இடம் அவருடைய க்ருபையினாலேயே பாதுகாப்பாக அமைந்திருக்கிறது. 29. அதனால் வித்வான்களே! ஒரு பொழுதும் மற்றவர்களுக்குத் தீங்கை நினைக்காதீர்கள், ஏனென்றால் படைத்தவன் ஒன்று யோசித்து ஸ்திரமாக வைத்திருப்பான். அதுவே நடக்கும்; பிறகுக்குத் தீங்கைச் 256 காசீ காண்டம் செய்வதினால் நாம் பாபத்தைச் சேர்த்து வைத்துக் கொள்கிறோம். 30. அதனால் தனக்கு சுகத்தை விரும்பும் ஜனங்கள் தனக்கு இஷ்டம், அனிஷ்டம் என்பது பற்றி யோசிக்கக் கூடாது. ஆனால் மனது சிந்தனை தான் செய்யும் என்றிருந்தால் மோக்ஷத்திற்கு ஏது உபாயம்? என்று சிந்தியுங்கள்- வேறு ஒன்றும் யோசிக்காதீர்கள். 31. இரவு கழிந்து பொழுது புலரும்போது பெரிதானதொரு சப்தம் ஏற்பட்டது, 'ஏ வீரர்களே! கீழே தள்ளுங்கள், கொல்லுங்கள், எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு நக்ன(நிர்வாண)மாக்குங்கள், என்ற வேடுவர் குரலும், 32. அடுத்தாற்போல் "ஏ! வேடுவர்களே, நாங்கள் மரவுரி உடுத்தும் ஸாதுக்கள், எங்களை அடிக்காதீர்கள், கொல்லாதீர்கள், எங்களை ரக்ஷியுங்கள், பிரயாஸையில்லாமல் எங்களைக் கொள்ளையடிக்கலாம், எங்களிடம் என்ன இருக்கின்றதோ அதை நீங்கள் எடுத்துக் கொண்டு போகலாம். 33. நாங்கள் விஸ்வநாதருடைய வேலீக்காரர்கள். விஸ்வநாதரே எங்களுக்கு நாதன். 34. எங்களுடைய அத்ருஷ்டம் இந்த ஸமயம் அவரும் எங்களை விட்டு விலகி விட்டாரோ, ஐயோ! இந்தக் காட்டு வழியில் எங்களுக்குப் பிராண ரக்ஷையளிப்பதற்கு வேறு யார் இருக்கிறார்களோ? 35. நாங்கள் பிங்காக்ஷன் பேரில் நம்பிக்கை வைத்தே எப்பொழுதும் இவ்வழியாக வந்து போவது வழக்கம். ஆனால் அவனும் இவ்வனத்திலிருந்து எங்கு போய் விட்டானோ! என்று புலம்பினார்கள். 36. அந்த க்ஷணமே அவ்வார்த்தைகளைக் கேட்ட பிங்காக்ஷன் தூரத்திலிருந்து வந்து கொண்டே 'நீங்கள் பயப்படாதீர்கள்!' என்று சொல்லி கொண்டே ஓடோடி அத்யாயம்–12 257 வந்து சேர்ந்தான். அந்த தபஸ்விகளின் ப்ரியனான அவ் வேடன் அவர்களுடைய கர்ம ஸூத்ரத்தில் தன்னை பந்தப் படுத்திக் கொண்டு, மூர்த்திகரித்துவந்த அவர்களுடைய ஆயுளைப் போல க்ஷண நேரத்தில் அவர்கள் முன்னால் வந்து நின்றான். 37. அடே யாரடா, எந்த துஷ்டனடா, இந்த பிங்காக்ஷன் உயிருடன் இருக்கும்போதே என்னுடைய பிராணனுக்கு ஸமமான இந்த வழிப் போக்கர்களுடைய தனத்தைக் கொள்ளையடித்து அவர்களை ஹிம்ஸை செய்யப் பார்க்கிறீகள்? 38. பிங்காக்ஷனுடைய சிறிய தந்தையாகிய அந்தபாபிஷ்டன் தாராக்ஷன் பிங்காக்ஷனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு பிங்காக்ஷனையே பாப சிந்தனைக்கு உள்ளாக்கத் தொடங்கினான். 39. "இந்தக் குலத்துரோகி தன்னுடைய குலதர்மத்தை விட்டுவிட்டு இருக்கிறான். மிக நாட்களாக இவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன். இன்று அவனை நிச்சயமாகக் கொல்வேன். 40.இந்தப் பிரகாரம் எண்ணி அந்த துஷ்டாத்மா கோபத்துடன் கூடத் தன்னுடைய ஏவலாட்களுக்கு ஆக்ஞையிட்டான். "முதலாவது நீங்கள் இந்த பிங்காக்ஷனைக் கொல்லுங்கள். பிறகு அந்த மரவுரி உடுத்த ஸந்யாஸிகளைக் கொல்லலாம்." 41. இந்த வார்த்தையைக் கேட்டுத் தாராக்ஷனுடைய வேலீக்காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு இந்த பிங்காக்ஷனுடன் யுத்தம் செய்யத் தொடங்கினார்கள். அந்த பிங்காக்ஷனும் யுத்தம் செய்து கொண்டே ஒரு விதமாக அந்த ஸந்யாஸிப் பிரயாணிகளைத் தன் கிராமத்துக்கு ஸமீபமாகக் கொண்டு வந்து விட்டான். 42. அநேகருடன் ஒருவன் எத்தனைக் காலம் தான் யுத்தம் செய்ய முடியும்? அதனால் தனித்திருக்கும் 258 காசீ காண்டம் வீரனுடைய தனுஸ், பாணம் கவசம் இவைகளை அந்த தாராக்ஷனுடைய ஆட்கள் அம்புக் கூட்டத்தினால் தகர்த்தெறிந்து விட்டார்கள். நான் மாத்திரம் ராஜாவாக இருந்தால் இவர்களை நிர்மூலமாக்கி விடுவேனே. 43. இவ்வாறு எண்ணிக் கொண்டு அந்த வேடன் ஸாதுக்களின் பணத்தைத் தன் பிராணனைக் கொடுத்துக் காப்பாற்றினான். அந்த மரவுரி ஸந்யாஸிகளும் பிங்காக்ஷனின் கிராமத்தையடைந்து நிர்பயமானார்கள். 44. அந்திமக் காலத்தில் எப்படி புத்தியிருக்கிறதோ அதுபோல் அவர்களுக்குப் பரலோகத்தில் கதி கிடைக்கிறது. இந்தக் காரணத்தினால் அந்தப் பிங்காக்ஷனுக்கு நிர்ருதர்களுக்கு அரசனாக, தென்திசையிலுள்ள நிர்ருதிப் பட்டணத்தின் திக்பாலனாகப் பதவி கிடைத்தது. 45. நாங்கள் இருவரும் இந்த நிர்ருதேஸ்வரரின் வரலாற்றைச் சொன்னோம். இதற்கு வடக்கில் வருணனுடைய அற்புதமான லோகம் இருக்கிறது. 46. நியாய வழியில் ஸம்பாதித்த பணத்தினால் கிணறு தடாகம் இவற்றை நிர்மாணிப்பவர்கள் இந்த வருணலோகத்தில் வருணனுக்கு நிகரான அந்தஸ்து உடையவர்களாகி மரியாதையுடன் வாழ்கிறார்கள். 47. எவர்கள் ஜலம் கிடைக்காத இடத்தில் ஜலதானம் செய்கிறார்களோ, மற்றவர்களுடைய ஸந்தாபத்தைப் போக்கடிக்கிறார்களோ, யாசகர்களுக்குக் குடைசெம்பு இவைகளை தானம் செய்கிறார்களோ, 48. போஜன ஸாமக்ரியைகளையும், சுவாஸிதமான ஜலத்தால் நிரம்பிய குடத்தையும் தானம் செய்கிறார்களோ, அவர்கள் இந்த லோகத்தையடைகிறார்கள். 49. அரச மரத்திற்குத் தண்ணீர் விடுபவர்களும், சாலீயில் மரங்கள் நடுபவர்களும் மார்கத்தில் வழிப்போக்கர்களுக்கு இளைப்பாற மடங்கள் கட்டிவைத்து, அத்யாயம்–12 259 சிரமப்பட்டு வருபவர்களுடைய தாபத்தை நீர்குகிறவர்களும், 50. வேனிற்காலத்தில் உஷ்ணத்தைப் போக்குவதற்கு மயில் இறகுகள் முதலியவைகளால் செய்த விசிறி, முதலானவற்றை தானம் செய்பவர்கள், 51, 52. வேனிற் காலத்தில் நல்ல ரஸமான வாஸனையுடன் கூடிய சீதளபானகம், மரியாதையுடன் த்ருப்திபடும் வரையில் தானம் செய்தல்; கரும்பு பயிரிட்டு வயல்களை ஸங்கல்பித்துப் பிராம்மணர்களுக்குத் தானம் செய்பவர்கள், பலவிதமான கரும்பினால் செய்த பண்டங்களைத் தானம் செய்பவர்கள், 53. நெய், பால், தயிர் முதலிய கோ-ரஸத்தைத் தானம் செய்கிறவர்கள், பசு, எருமை, இவற்றை தானம் செய்கிறவர்கள், ஊற்று பெருகும் ஜலதாரைகளை ஏற்படுத்துபவர்கள், நிழல் தரும் மண்டபம் அமைத்தவர்கள், 54. தேவாலயத்தில் தாராபிஷேகத்திற்கு (பகவானுக்கு) (தாராபாத்திரம்) ஜலதாரை ஏற்படுத்தியவர்கள், தீர்த்தஸ்தாநங்களில் வரியை விலக்கினவர்கள், தீர்த்தஸ்தானங்களை சுத்தப்படுத்தி வழி ஏற்படுத்தியவர்கள், 55, 56. பயம் அடைந்தவர்களைக் கையைத் தூக்கி அபயம் அளித்தவர்கள்; அவர்கள்யாவரும் இந்த வருண லோகத்தில் நிர்பயமாய் வஸிக்கிறார்கள். கெட்ட புத்தியினால் தூக்குப் போட்டுக் கொண்டு சாகிறவர்களை - அவர்கள் தூக்கு போட்டுக் கொள்ளும் போது காப்பாற்றியவர்கள் - இந்த பாசபாணியாகிய வருணனுடைய லோகத்தில் வஸிக்கிறார்கள். 57.ஓ பிராம்மணா! யாத்ரிகர்களுக்கு ஆற்றைக் கடக்க ஓடம் விடுகிறவர்கள், துக்கஸாகரத்திலிருந்து காப்பாற்றியவர்கள் இவர்கள் வருணபுரி ஜனங்களாக வஸிக்கிறார்கள். 260 காசீ காண்டம் 58. ஜலம், தீர்த்தம் இவைகளை ஏற்படுத்தியவர் களுடைய சிலீகளை நதி, குளம் இவைகளின் படிகளில் ஸ்தாபிப்பவர்களும் வருண லோகத்தையடைகிறார்கள். 59. புண்ணியாத்மாக்கள் குளித்த ஜலத்தினால் தாஹத்துடன் வந்தவர்களுக்கு தாஹத்தைத் தணிக்கிறார்கள், அதனால் வருண லோகத்தில் அவர்கள் ஸுகமாக வஸிக்கிறார்கள். 60. இந்த வருணன் ஜல ஜந்துக்களுக்கு ஸ்வாமி, பிரசேதா என்ற பெயர் பெற்றவர். நீர் நிலீகளுக்கு முக்யமான அதிபதி, எல்லாக் கர்மங்களுக்கும் ஸாக்ஷி மாத்ரம். 61. நண்பரே! இந்த மஹாத்மாவான லோக பாலன் வருணனுடைய ஜன்மத்தைப் பற்றிக் கேளுங்கள். கர்த்தம ப்ரஜாபதிக்கு சுசிஷ்மா என்ற கியாதி பெற்ற ஒரு புத்ரன் இருந்தான். அவன் அபரிமிதமான புத்திசாலி, விநயமும், உறுதியும், இனிமையும் தீரத்தன்மையும், எப்பொழுதும் நல்லதையே விரும்பும் குணங்களுடன் கூடினவனாக இருந்தான். 62,63. ஒரு சமயம் பாலகர்களுடைய அச்சோதனம் என்ற ஸரோவரத்தில் ஸ்நானம் செய்யச் சென்றான். ஜலக்ரீடை செய்து கொண்டிருந்த அந்த முநிகுமாரனே சும்சுமார் என்று ஜலஜந்து விழுங்கியது. 64. அந்த முனிபுத்ரன் அபஹரிக்கப்பட்டவுடன் எப்பொழுதும் அநிஷ்டமே பேசும் அவர்களுடைய தோழர்களான ரிஷிகுமார்கள் வந்து அவனுடைய பிதாவான கர்தமரிடம் விவரம் சொன்னார்கள். 65. அந்த சமயம் சிவபூஜையில் அமர்ந்திருக்கும் அந்த ரிஷி நிச்சலமாசன மனதுடன ஸமாதியில் இருந்தார். குழந்தையின் ஆபத்தைக் கேட்ட பிற்பாடுகூட மனதைச் சிவனிடமிருந்து திருப்பவில்லீ. அத்யாயம்–12 261 66. இந்த ஸமாசாரத்øத் கேட்டு ஸர்வஞரும், த்ரிலோசனருமாகிய பகவானிடத்தில் மேலும் மனத்திடம் செய்து கொண்டு தியானம் செய்யத் தொடங்கினார். 67. அவர் சிவனுடைய சமீபத்தில் சென்றுவிட்டார். அங்கு பதினான்கு உலகங்களும், அநேக கோடிப்ரம்மாண்டங்களும், அவைகளுக்குள் நானாவிதமான பிராணி ஸமூஹங்ளும், சந்திரன், சூரியன், கிரஹங்கள் நக்ஷத்ரங்கள் பர்வதங்கள், நதிகள், விருக்ஷங்கள், 68. சமுத்ரங்கள், தீவுகள், காடுகள், ஸரோவரங்கள், அநேக தேவபுரிகள் கிணறுகள், குளங்கள், 69. தடாகங்கள், சிறுசிறு செயற்கைக் கால்வாய்கள் புஷ்கரிணிகள் முதலியவைகளைப் பார்த்தார். அவைகளுக்கு மத்தியில் ஒரு ஸரோவரத்தின் மத்தியில் முனி குமாரர்களைப் பார்த்தார். 70. குழந்தைகள் முழுகுவதும், எழுவதும் ஒருவர் மீது ஒருவர் மற்றவர் கையிலுள்ள பீச்சாங்குழலினால் ஜலத்தைப்பீச்சிக்களிப்பதும், 71. ஜலத்தைக் கையால் அறைந்து, அறைந்து திக்குகளில் எதிரொலிக்கும் சப்தத்தைச் செய்வதும் கண்டார். 72, 73. அந்த ஸமாதியில் இருக்கும் ப்ரஜாபதி அந்த பாலகர்களுக்கு மத்தியில் தன்னுடைய புத்திரனை இழுத்துக் கொண்டுபோகும் சும்சுமாரத்தைக் கண்டார். அந்த சும்சுமாரத்துக்குப் பின்னால் ஒரு ஜலதேவி அந்தக் கொடூரமான ஜலஜந்துவிடமிருந்து பிள்ளையைப் பிடித்து இழுத்துக் கடலில் சேர்த்து வந்ததையும் கண்டார். அதற்குப் பிறகு. 74. ஒரு த்ரிசூலத்தைத் தாங்கித் கொண்டிருக்கும் ருத்ர ரூபியாக ஒருவர் ரோஷத்தினால் சிவந்த கண்களை யுடையவராய் ஸமுத்ரராஜனை அதட்டிக் கொண்டு கூறினார்- 262 காசீ காண்டம் 75. ஏ ஜலாதிபனே! மஹாபாஹோ! புத்திமானே! சிவபக்தனான கர்த்தமப்ரஜாபதியுடைய புத்திரனை இத்தனை நேரம் வரையில் ஏன் வைத்துக் கொண்டிருக்கிறாய்? உனக்கு சிவனுடைய ஸாமர்த்யம் தெரியாதா? என்றால் அவருடைய வார்த்தையைக் கேட்டு பயத்தினால் நடுங்கும் ஸமுத்ரராஜன் 76,77. அந்த பாலகனை ரத்னாபரணங்களினால் அலங்கரித்து அந்த சும்சுமாரத்தையும் கட்டி மஹாதேவருடைய சரணகமலங்களில் ஸமர்ப்பித்தான், 78. பிறகு நமஸ்கரித்துக் கூறினான், ஏ ! விபோ! அனாதிகளுக்கு நாதரே! விஸ்வநாதா! தாங்கள் பக்தர்களின் விபத்துக்களைப் போக்கடிப்பவர். இந்த விஷயமாக என் குற்றமொன்றுமில்லீ. 79. பக்தர்களின் கல்ப விருக்ஷமே! சம்போ! இந்த ஜலஜந்து பிள்ளையை இழுத்துக் கொண்டு போயிற்று. நாதா! சிவபக்தர்களுடைய குழந்தைகளை என்னிடம் மூழ்கவிட மாட்டேன் என்றார். 80. அந்த ருத்ரர் மஹேசருடைய மனோபாவத்தையறிந்து ஜலஜந்துவைப் பாசத்தால், கட்டி அந்தப்பிள்ளையின் கையில் கொடுத்தார். 81. ஏ குழந்தாய்? நீ உன் வீட்டிற்குப் போ! முனிவரே! நீர் உமது பிள்ளையை ஏற்றுகொள்ளும். இவ்வாறு மஹாதேவருடைய ஆக்ஞையால் அத்த ருத்ரர் சொல்லவே உதாரகுணமுடைய கர்தமரிஷி- 82. சமாதி காலத்தில் நிகழ்ந்ததையும், கண்டதையும் கேட்டதையும் அறிந்து 83. கண்களைத் திறந்து பார்க்கவே பிள்ளை நிற்பதையும் சும்சுமாரத்தை பிடித்துக்கொண்டிருப்பதையும் பார்த்தார். அவனுடைய இருகாதுகளும் ஆபரணங்களினால் நிறைந்து இருந்தன. அத்யாயம்–12 263 84. அவனுடைய குடுமியின் முன்புறம் ஜலத்தால் நனைந்திருந்தது. கண்கள் ஓரங்களில் சிவந்திருந்தன. சரீரம் உலர்ந்திருந்தது. தோல் சுருங்கியிருந்தது. சித்தம் திகிலடைந்திருந்தது. 85. அவரை நமஸ்காரம் செய்து வணங்கினான். ரிஷி பாலகனை உச்சி முகர்ந்து, பிறகு அடிக்கடி பார்த்துக் கொண்டு பிள்ளைப் புனர்ஜன்மம் எடுத்ததாக எண்ணினார். 86. சிவபகவானுடையப் பூஜையைச் செய்து, செய்து ஸமாதியில் ஆழ்ந்த அந்த கர்த்தம ப்ரஜாபதிக்கு ஐநூறு வருஷங்கள் ஓடி விட்டன. 87. ஆனால் அவருக்கு ஒரு க்ஷணமே கழிந்தது போலத் தோன்றிற்று. ஏனென்றால் மஹாகாலருடைய காலத்துக்கு முன்னால் ம்ருத்யு லோகத்தில் அற்பகாலம் என்ன எண்ணிக்கை. 88. இதற்குப் பிறகு புத்ரனான சுசுஷ்மான் பிதாவை வணங்கி அவருடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டு காசீபுரியை அடைந்தான். 89. அங்கு ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து ஐயாயிரம் வருஷங்கள் வரைக்கும் கல்லீப்போல் நிச்சலமாக நின்று கொண்டு தபஸ் செய்தான், 90. அதன்பிறகு தபஸ்ஸினால் ஸந்தோஷமடைந்த மஹாதேவன் அவன் முன்னால் ப்ரஸன்னமானார். கர்தம நந்தனா! உனக்கிஷ்டமான வரத்தைக்கேள் என்றார். 91. பாலகன் கூறினான். பக்தர்களிடம் கருணைக் காட்டும் நாதரே! தாங்கள் என்மீது ஸந்தோஷமடைவீர்களானால் எனக்கு எல்லா நீர் நிலைகளுக்கும், நீரில் வாழும் ஜந்துகளுக்கும் தலீவனாக இருக்கும் வரத்தையளியுங்கள். 92. எல்லாருடைய மனோரதங்களையும் பூர்த்தி செய்யும் பரமேஸ்வரர் அவனுடைய வார்த்தையைக் 264 காசீ காண்டம் கேட்டு அவனை மிகவும் மேலான வருண பதவியில் அமர்த்தினார். 93. மேலும் கூறினார்: கடலில் உண்டாகும் ஸகல ரத்னங்களும், ஸாகரங்களும், நதிகளும், குளங்களும், குட்டைகளும், கிணறுகளும், ஜல ஊற்றுக்களுமான எல்லா நீர் நிலீகளுக்கும், மேற்கு திசைக்கும் அதிபனாவாய். 94. நீ ஸமஸ்த தேவதைகளுக்கும் பிரியமுள்ளவனாக இருப்பாய். பாசமே உன் கைக்கு அஸ்த்ரமாக இருக்கும். 95. மேலும் எல்லோருக்கும் ஹிதத்தைச் செய்யும் மற்றொரு வரத்தையும் அளிப்பேன். உன்னாலேயே ஸ்தாபிக்கப்பட்ட இந்த லிங்கம் உன் பேரை அனுசரித்துக் காசியில் வருணேஸ்வரர் என்ற பெயருடன் பிரஸித்தமாய் விளங்கும். 96. மிகவும் ஸித்திகளை வழங்கும் தென்மேற்குத் திக்கில் அதாவது மணிகர்ணிகேஸ்வரரின் தென்மேற்கு பக்கத்திலிருக்கும் 97. இந்த லிங்கத்தை நிரந்தரமாக ஆராதனை செய்வதால் புருஷர்கள் முதலியவர்களுக்கு ஜடத்தன்மை முதலியவை விலகும். இப்படி நினைத்து எவர்கள் வருணேச்வருடைய பக்தர்களாவார்களோ, அவர்களுக்கு ஜலத்தினால் ஒரு போதும் தீங்கு ஏற்படாது. 98. ஒரு பொழுதும் ஸந்தாபத்தினால் கஷ்டபடமாட்டார்கள். மார்க்கத்தில் மரணமேற்படாது. ஜலோதாரோகம் (மஹோதரம்) ஏற்படாது; 99. தாகத்தினால் தாபமடையமாட்டார்கள். அன்னபானாதிகள் வருணேஸ்வரரை ஸ்மரித்த மாத்திரத்திலேயே ருசிகரமாகி விடும். 100. ஓ பிராம்மணரே! சம்பு இந்த விதமாக வரங்களைக் கொடுத்துவிட்டு அந்தர்தானமாகி விட்டார். அதன் பிறகு கர்தமரின் புதல்வனான சுசுஷ்மான் வருணனாக ஆனார். அத்யாயம்–12 265 தனது பந்து பாந்தவர்களுடன் இந்த லோகத்தை சோபையாக்கிக் கொண்டு இங்கேயே நிரந்தரமாக வஸிக்கிறார். இந்த வருண லோகத்தைப் பற்றி நாங்கள் உமக்கு வர்ணித்தோம். இதைக் கேட்ட ஒருவரும் அகாலமரணத்திற்குட்படமாட்டார்கள். இது ஸ்கந்த புராணத்தில் நாலாவதான காசீகண்டத்தில் நிர்ருத வர்ணனமான பன்னிரெண்டாம் அத்யாயம் ஸம்பூர்ணம். 266 காசீ காண்டம் அத்யாயம் 13 விஷ்ணுவின் இரண்டு பாரிஷர்தகளும் கூறினார்கள்: ஓ! மஹா பாக்ய நிதியான ப்ராம்மணரே! வருண லோகத்துக்கு வடக்குப் பக்கத்தில் (வாயுவின்) கந்தவதி என்னும் பெயருள்ள நகரத்தைப் பாருங்கள்:- 1. இந்த ஊரில் ப்ரபஞ்சன் என்னும் பெயரையுடைய திக்குகளுக்கெல்லாம் ஈசனான வாயு இருக்கிறார். அவரும் மஹா தேவரை ஆராதித்து திக்பால பதவியைப் பெற்றிருக்கிறார். 2. பூர்வகாலத்தில் கச்யப முனிவரின் புத்ரனான பூதாத்மா என்று ஒருவர் இருந்தார். அந்த மஹாபாக்யசாலி சிவனுடைய ராஜதானியான வாராணஸி புரியில் மிகவும் பவித்ரமான புவனேஸ்வரர் என்னும் லிங்கத்தை ஸ்தாபித்தார். அதன் முன்னால் பத்துலக்ஷம் வருஷங்கள் வரைக்கும் மகத்தான தவம் புரிந்தார். 3, 4. அந்த சிவலிங்கத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே பூதாத்மா பவித்ரவான் அவன் பாபமாகிய சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு அந்த புவனபுரியில் வசிக்கப் பெறுகிறான். 5. பிறகு அளவில்லாத தவத்தின் பலனைக் கொடுக்கக்கூடிய மஹேஸ்வரர் (சிவன்) 6. பூதாத்மாவின் உக்ரமான தபோபலத்தினால் அந்த சிவலிங்கத்தில் ஜ்யோதி ரூபமாகத் காக்ஷி கொடுத்தார். தயாம்ருத ஸாகரரான சிவன் ஸந்தோஷ சித்தராய் கூறினார். ஹே பூதாத்மா! 'எழுந்திரு! எழுந்திரு' மஹா வ்ருதனே! வரத்திற்குப் பிராத்தனை செய். 7. ஹே பூதாத்மா! அந்த உக்ரமான தபஸ்ஸினாலும் லிங்கத்தின் ஆராதனையினாலும் சராசரங்களுடன் கூடிய மூன்று லோகத்திலும் உனக்குக் கொடுக்கக் கூடாத வஸ்து ஒன்றுமில்லீ. அத்யாயம்–13 267 8. பூதாத்மா கூறினார்: ஹே! தேவதைகளுக்கு அபயம் அளிப்பவரே, தேவ தேவா! மஹா தேவா! தாங்களே ப்ரம்மா, விஷ்ணு, இந்த்ராதி ஸமஸ்த தேவதைகளுக்கும் பதவி அளிப்பவர். தேவதேவா! 9. ப்ரபோ! வேதாந்திகள் நேதி நேதி (ந+இதி) என்று சொல்லிக் கொண்டு தங்களுடைய ஸ்வரூபத்தைப் பிரார்த்தித்துக் கொண்டுபரமபதத்தையடைகிறார்கள் ஆனாலும் தாங்கள் யார் என்று அறியவில்லீ. 10. ப்ரபோ! தாங்கள் ப்ரம்மா, விஷ்ணு, வாக்பதிக்கும் எட்டாதவர். அப்பேர்ப்பட்ட ஆதிநாதரான உங்களுடைய ஸ்துதியைச் செய்வதில் என்னைப்போல் ஸாமான்ய ஜீவன் எப்படி ஸமர்த்தன் ஆகமுடியும்? 11. ஏ! ஈசா! பக்தியே என்னைப்பலவந்தமாக ஸ்துதி செய்ய ஏவுகிறது. ஜகந்நாதா! என் செய்வேன்? என்னுடைய இந்திரியங்கள் என் வசத்தில் இல்லீ. 12. விச்வத்துக்கும் தங்களுக்கும் துளிக்கூட பேதமில்லீ. ஏனென்றால் தாங்கள் எங்கும் நிறைந்தவர், ஆனால் ஒருவர். துதிக்கத் தகுந்தவர், துதி செய்பவர், ஸ்தோத்ரம், மூன்றும் தாங்களே. ஸகுணம், நிர்குணம் இரண்டும் நீங்களே. 13. ஸ்ருஷ்டிக்கு முன்னாலும் நாம ரூபமற்றுத் தாங்களே இருந்தீர்கள்; யோகிகளும் உண்மையில் யதார்த்த ரூபமாகத் தங்கள் தத்வத்தை அறியவில்லீ. 14. ஏ! தனியாக விகாரிப்பவரே! நீர் தனியாக லீலீ புரிய முடியாதபோது தங்களுடைய இச்சையே ஒரு பெண் ரூபமாக உற்பத்தியாயிற்று. அவளே தங்களை ஸேவிக்கத் தகுந்த பராசக்தியாவள். 15. தாங்கள் ஒருவரே, ஆனால் சிவசக்தியென்ற பேதத்தினால் இரண்டாக ஆனீர்கள். தாங்களே ஞானரூபமான பகவான். தங்களுடைய இச்சையே சக்திஸ்ரூபிணி. சிவசக்தி ஸ்வரூபமாக 268 காசீ காண்டம் 16. தாங்கள் இரண்டு பேருமே தங்களுடைய லீலையினால்! க்ரியா சக்தியைப் பிறப்பித்தீர்கள். அவளாலே ஸமஸ்த ஜகத்தும் ஏற்பட்டது. 17. ஏ ஈசா; தாங்களே ஞானசக்தி, உமையே இச்சாசக்தி. தங்களால் படைக்கப்பட்ட விஸ்வமே க்ரியாசக்தி அதனால் தாங்களே இந்த ஸமஸ்த ஜகத்துக்கும் காரணமாகிறீர்கள். 18. தங்களுடைய வலது பக்கள் ப்ரம்மாவும், இடது பக்கம் விஷ்ணுவும் இருக்கின்றவர். சூரியன், சந்த்ரன், அக்னி இம்மூன்றும் தங்களுடைய நேத்ரங்கள். தங்களுடைய நிச்வாசமே நான்கு வேதங்களும்; 19. தங்களுடைய வியர்வையே இந்த ஸமுத்ரம்; வாயு தங்களுடைய காது; பத்து திக்குகளும் தங்களுடைய புஜங்கள்; ப்ராம்மணர்கள் தங்களுடைய முகத்திலிருந்து வந்தவர்கள். 20. தங்களுடைய இரு புஜங்களிலிருந்து க்ஷத்ரியர்கள் தோன்றினார்கள். துடைபாகத்திலிருந்து வைச்யர்கள் தோன்றினார்கள். தங்களுடைய இரண்டு சரணங்களிலிருந்தும் சூத்ரர்கள் வந்தனர். மேகக் கூட்டம் கலாபம். 21. பூர்வ காலத்தில் தாங்களே ப்ருக்ருதி புருஷ ரூபமாக ப்ரம்மாண்டத்தையும், அதற்குள் அடங்கியிருக்கும் சராசர உலகத்தையும் ஸ்ருஷ்டித்தீர்கள். 22. ஏ! ஜகன்மயா! அதனால் தங்களிடமிருந்து வேறாக ஒன்றுமில்லீ. தாங்களே இறந்த காலம், நிகழ்காலம் ஸர்வ பூதங்களும் தாங்களே. இப்படி நான் எண்ணுகிறேன் 23. தங்களுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்; அடிக்கடி வணங்குகிறேன் - திரும்பவும் திரும்பவும் தங்களை வணங்குகிறேன். தங்களிடம் என் புத்தி நிலீத்திருக்கும் படியான வரத்தைக் கொடுங்கள். அத்யாயம்–13 269 24. பூதாத்மா இவ்விதம் கூறியவுடன் தேவேச்வரனான ப்ரபு அவரைத் தன்னுடைய அஷ்டமூர்த்திகளில் ஒருவராய் திக்பால பதவியில் அமர்த்தி அருளினார். 25. என்னுடைய உருவுடன் எங்கும் ஸஞ்சரிப்பாய். எல்லாத் தத்வங்களையும் அறிந்து கொள்வாய். எல்லாருடைய ஆயுள் ரூபமாகவும் ஆவாய். 26. மனிதர்கள் உன்னால் ப்ரதிஷ்டக்கப்பட்ட திவ்ய லிங்கத்தைத் தரிசனம் செய்வார்களேயானால் இந்த லோகத்தில் ஸமஸ்த போகங்களையும் பரிபூர்ணமா அனுபவித்து உன்னுடைய ஸுகத்தில் பங்கு கொள்வார்கள். 27. மனிதன் ஜன்மாவில் ஒரு தடவையாவது இந்த பவமானேஸ்வரலிங்கத்துக்கு வாஸனை கலந்த ஜலத்தால் அபிஷேகம் செய்து ஸுகந்த சந்தன புஷ்பாதிகளினால் விதிப்ரகாரம் பூஜை செய்தால் என் லோகத்தில் வெகுமானத்துடன் வஸிக்கிறான். ஜ்யேஷ்டேஸ்வரருக்கு மேற்கு பாகத்தில் வாயுகுண்டத்திலிருந்து வடக்கில். 28, 29. பவமான லிங்கேஸ்வரரை ஆராதனை செய்பவன் இந்த லோகத்தில் அந்த க்ஷணமே பவித்ரவானாகிறான். மஹா தேவர் இந்த எல்லாவரங்களையும் அளித்து அதே லிங்கத்தில் மறைந்தார். 30. இரண்டு விஷ்ணு கணங்களும் கூறினார்கள், கந்தவதி புரியைப் பற்றி இதுவரைக்கும் கூறினோம். இதற்குக்கிழக்கு திசையில் குபேரனுடைய சோபை பொருந்திய அளகாபுரி இருக்கிறது. 31. இந்த நகரின் நாதனான குபேரன் தன்னுடைய பக்தியின் பிரபாவத்தினால் மஹாதேவனோடு தோழமை பூண்டான். சிவனை ஆராதித்து பிறகுதான் பத்மம் முதலிய நிதிகளுக்கு தாதா வாகவும் போக்தாவாகவும் ஆனான். 270 காசீ காண்டம் 32. சிவசர்மா கேட்டார்- இந்த பாக்யவான் யாருடைய பிள்ளை? ஸதாசிவனிடம் இவனுக்கு எத்தனை பக்தி? தேவ தேவ ஸகாவான தூர்ஜடியாக எப்படியானான்? 33. தங்களுடைய வசனாம்ருத்தை அருந்தும் த்ருப்தியினால் ஸ்திரத்தன்மையடைந்த என் மனது இவருடைய கதையைக் கேட்கும் ஆவலினால் காதுத்வாரங்களில் புகுந்து காத்துக் கொண்டிருக்கிறது என்றார். 34. ஏ மஹா ப்ராக்ஞா! சுத்தாத்மாவே! பவித்ர தீர்த்தங்களில்ஸ்நானம் செய்து அநேக ஜன்மங்களால் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த பாபங்களைப் போக்கடித்துக் கொண்ட சிவசர்மாவே, 35. நீர் எங்களுக்கு நேசமுள்ள தோழராவீர். நல்லது உங்களுக்குச் சொல்லகூடாதது ஒன்று உண்டோ, விசேஷமாக ஸஜ்ஜனங்களுடன் கூட ஸம்பாஷிப்பதால் ஸகலவிதமான மங்கள ஸித்தியும் ஏற்படுகிறது. 36, 37. காம்பில்ய நகரத்தில் யக்ஞவித்யை விசாரதனான ஸோமயாஜியின் குலத்தில் பிறந்த யக்ஞதத்தன் என்ற தீக்ஷிதர் ஒருவர் இருந்தார். அவர் வேதத்தின் ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்தவர். வேதத்தில் கூறின ஆசாரங்களையனுஷ்டிப்பதில் நிபுணர். ராஜ ஸபையில் மதிக்கத் தகுந்தவர். பெருந்தனவான். உதார குணசீலர்; தாதா என்ற கீர்த்திகளைப் பெற்றிருந்தார். 38. அவர் எப்பொழுதும் அக்னியை ஆச்ரயிப்பதில் ஈடுபட்டு வேதாத்யயனத்தில தத்பரனாய் இருந்தார்.அவருக்கு சந்திரபிம்பம் போன்ற குணவானாய் ஒரு புத்ரன் இருந்தான். 39. அவன் யக்ஞோபவீதம் ஆனவுடன் அநேக வித்தைகளை அப்யஸிக்கத் தொடங்கினான். ஆனால் சில நாட்கள் சென்ற பிறகு பிதாவிற்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகச் சூதாடுவதில் ஈடுபட்டான். அத்யாயம்–13 271 40. அவன் மாதாவிடமிருந்து பணம் வாங்கி வாங்கி சூதாடிகளுக்குக் கொடுத்து வந்தான். அவர்களுடன் நெருங்கின தோழமை பூண்டு வந்தான். 41,42. மெல்ல மெல்ல அவன் ப்ராம்மண ஆசாரங்களை விடத் தொடங்கினான். வேதம், சாஸ்திரம் தேவதைகள், ப்ராம்மணர்கள் இவைகளையெல்லாம் நிந்திக்கத் தொடங்கினான். தர்மாசாரங்களோ அவனிடம் இருக்கவேயில்லீ. எப்போதும் வாத்யம் வாசிப்பது, பாடுவது முதலிய கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். நடர்கள், பாஷண்டிகள் இவர்களிடம் இவனுக்கு நேசம் அதிகமாயிற்று. 43. அன்னையனுப்பினால் கூட அவன் பிதாவை ஸந்திப்பதில்லீ. வீட்டில் அந்நிய காரியங்களில் ஈடுபட்டிருக்கும் தீக்ஷிதாயினி ஸ்திரீயிடம் ஒரு நாள் அவள் கணவர் கேட்டார்- 44. எப்போது பார்த்தாலும் புத்ரன் குணநிதியை வீட்டில் பார்க்க முடியவில்லீயே, ஏன்? அவன் எங்கு போகிறான்? என்ன செய்கிறான்? என்று அடிக்கடி கேட்பார். அவள் ஸ்நானம் செய்யப் போயிருப்பான் என்பாள்; 45. இவ்வளவு நேரம் தேவதைகளுக்குப் பூஜை செய்தான், என்பாள். வேதாத்யயனம் செய்வதற்காக இரண்டு மூன்று ஸ்நேகிதர்களுடன் அடுத்த ஊருக்குப் போயிருக்கிறான் என்றும் சொல்வாள்; ஒரே புதல்வனாக இருந்தபடியால் எப்போதும் அவனைப் புகழ்ச்சி யாகவே தன் கணவனிடம் சொல்வாள். 46,47. தீக்ஷிதர் புத்ரனுடைய காரியங்களைப் பற்றியோ நடத்தையைப் பற்றியோ அறியவேயில்லீ. அவனுடைய பதினாறாவது வயதில் அவனுக்கு முடி எடுக்கும் வைபவத்தைச் செய்து க்ருஹத்திற்கு உசிதமான வழியுடன் அவனுக்கு விவாஹத்தைச் செய்தார். 272 காசீ காண்டம் 48. அன்பினால் இளகிய மனமுடைய அவன் அன்னை தினமும் புத்ரனை மென் சொல்லால் அறிவுறுத்துவாள். 49. அவர் உன் நடத்தையைப்பற்றி அறிந்தால் என்மீது மிகவும் கோபம் கொள்வார். 50. நான் தினமும் உன் வெறுக்கத்தக்கதாயுள்ள நடவடிக்கைகளைப்பற்றி அவரிடம் மறைத்தே வைத்திருக்கிறேன். உன் பிதா தன்னுடைய நன்னடத்தையின் காரணமாகவே உலகத்தாரால் வெகுமானிக்கப்பட்டவர்; பணத்தினால் அல்ல. 51. அப்பா, உத்தம வித்தையும், ஸாது ஜனங்களின் சேர்க்கையுமே ப்ராம்மணர்களுக்குத் தனம். உன்னுடைய பிதாமஹன் முதலிய முன்னோர்கள் வ்யாக்யானங்களோடும் அங்கங்களோடும் வேதத்தை அத்யயனம் பண்ணினவர்கள். ஸத்ச்ரோத்தியர்கள். ஸாமயாகங்கள் பண்ணி ஸோமயாஜி தீக்ஷிதர் என்று பேர் ப்ரஸித்தி பெற்றவர்கள். நீ துஷ்டர்களின் ஸங்கத்தை விட்டு ஸாது ஸங்கத்தில் ஈடுபடு. 52,53. உத்தமமான வித்தையில் மனதை லயப்படுத்து, ப்ராம்மணர்களுக்குள்ள ஆசாரங்களைக் கைக்கொள், புத்திரனே! உனக்குப் பத்தொன்பது வயது பூர்த்தியாகிறது. மதுரபாஷிணீ, அதி ஸாத்வீயான உனது மனைவிக்கு வயது பதினாறு. ரூபம், வயது, குலம், குணம், ஸ்பாவம் எல்லாவற்றிலும் அவள் ஏற்றவள்தான். 54,55. இந்தப் பண்பாடு உள்ள இவளிடம் நீ ஸுகமாக இரு. பிதாவிடம் பக்தியாக இரு. உன்னுடைய மாமனாரும் தன்னுடைய பணத்தினாலும், ஸ்பாவத்தினாலும் எல்லோராலும் மதிக்கப்பட்டவர். 56. அவரையும் நீ வெட்கமடையச் செய்கிறாய். குழந்தாய்! இப்பொழுதாவது நீ கெட்ட நடத்தையை விட்டுவிடு. பிள்ளாய்! உன்னுடைய அம்மாவின் குலமும், அத்யாயம்–13 273 வித்தையும், சீலமும், ஸ்பாவம் இவற்றில் தன்னிகர் இல்லாதது. 57. அவர்களுக்காகவாவது நீ பயப்பட வேண்டாமா? நீ இரண்டு வம்சத்தாலும் சுத்தமாக இருக்க வேண்டியவன். பின் ஏன் இப்படியிருக்கிறாய்? வீட்டுக்கு வீடு இருக்கும் ப்ராம்மணச் சிறுவர்களைப்பார். 58. அவ்வளவு தூரம் போவானேன்? உன்னுடைய பிதாவிடம் பாடம் சொல்லிக் கொள்ளும் விநயமுள்ள பிள்ளைகளைப்பார். ராஜாவும் உன்னுடைய இந்தக் கெட்ட நடவடிக்கைகளைக் கேழ்ப்பாரானால் உன் அப்பாவிடம் அவருக்குள்ள மதிப்பு குறைந்து போகும். 59. பிறகு அவர் உன் அப்பாவிற்கு அளிக்கும் மான்யத்தை நிறுத்திவிடுவார். இதுவரை எல்லாரும் சிறுபிள்ளைத்தனம் என்று உன்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 60. ஆனால் இனிமேல் சிரிப்பார்கள், கேலி செய்வார்கள். தீக்ஷிதர் குடும்பம் நன்றாகத் தான் இருக்கிறது என்று உன்னைக் குத்திக் காட்டுவார்கள். என்னையும் உன் அப்பாவையும், இதற்கெல்லாம் மூலகாரணம் நீங்களே என்று குற்றம் சாட்டுவார்கள். 61. புத்ரன் அம்மாவின் நடத்தையைத்தான் பின்பற்றுவான், அவனுடைய அப்பா ஸ்ருதி, ஸ்ம்ருதிகளையும் பின்பற்றுவராயிருந்தாலும் கூட அவர் பாபிஷ்டர் என்று திரஸ்கரிப்பார்கள். 62. உன்னுடைய பிதாவின் சரணங்களே கதி என்று நானிருக்கிறேன். இதற்கு மகேசுவரனே ஸாஷி. நான் ருதுஸ்நானம் பண்ணின அன்றுகூட துஷ்டர்களின் முகத்தில் விழித்ததில்லீயே. என்னுடைய விதி வலிது. 63,64,65. உன்னைப்போல் குலத்ரோஹியைப் பெற்றேன். மாதா நிமிஷத்திற்கு நிமிஷம் இப்படி புத்தி கற்பித்தும்கூட அந்த துர்புத்தியும் நீசனுமான குணநிதி 274 காசீ காண்டம் தன்னுடைய அஸத்கர்மத்தை ஒரு ஒருபொழுதும் விடவில்லீ. துர்நடத்தையில் பழக்கம் ஏற்பட்டு விட்டால் பின் யார் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். வேட்டையாடுதல், குடித்தல், கோள் சொல்லுதல், வேசியாகமனம், திருட்டு, சூது, பரஸ்த்ரீகமனம் இந்தக் கெட்ட நடத்தைகளினால், உலகில் யார்தான் அழிந்து போகாமல் இருந்தார்கள்? அந்தத் துஷ்டன் வீட்டில் பாத்ரம் பண்டம் இவைகள் கண்டால் போதும் அவைகளை எடுத்துப் போய் சூதாடிகளிடம் கொடுத்து விடுவான். 66. ஒரு ஸமயம் தகப்பனாருடைய நவரத்ன மோதிரத்தைத் தூங்கும் அன்னையின் கையிலிருந்து கழற்றிக் கொண்டுபோய்க் கொடுத்து விட்டான். அதன்பின் ஒருநாள் தீக்ஷிதர் ராஜபவனிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். 67,68. அப்பொழுது, தற்செயலாகச் சூதாடி ஒருவன் கையில் மோதிரத்தைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். அவனிடம் அப்பனே இந்த மோதிரம் உனக்கு எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டார். மிகவும் நயத்துடன் அடிக்கடி கேட்டதும் அந்தச் சூதாடி கூறினான்- 69. ஏ! ப்ராம்மணா! என்னிடம் நீ ஸந்தேஹப்படுகிறாயா? நான் இந்த மோதிரத்தைத் திருடினேன் என்கிறாயா? அட உமது பிள்ளை தானய்யா என்னிடம் கொடுத்தான் என்று கூறினான். 70. நேற்றுதான் உமது பிள்ளை என் தாயாரிடமிருந்து நான் கொண்டு வந்திருந்த சேலீகளை ஜயித்துக் கொண்டு போனான், அவன் எனக்கு மாத்திரம்தான் மோதிரத்தை தந்தான் என்று நினைக்காதீர்கள். 71. இன்னும் அநேக சூதாடிகளுக்கு த்ரவ்யங்களும், ரத்னங்களும் ஸுவர்ணங்களும் வெள்ளியினால் செய்த பாத்திரங்களும் அத்யாயம்–13 275 72. வெண்கலம், செம்பு இவைகளாலான பாத்திரங்களும் கொடுத்திருக்கிறான், அவனைப்ரதி தினமும் சூதாடிகள் அம்மணமாக்கி விட்டு ஸகல வஸ்துக்களையும் மூட்டை கட்டிக்கொண்டு போகிறார்கள். 73. இந்த பூமண்டலத்தின் அவனைப்போல் பகடைப்பாய்ச்சி விளையாடுகிற சூதாடிகள் ஒருவரும் கிடையாது. ஒ! விப்ரரே! உமது பிள்ளையைப் போன்ற மரியாதையில்லாதவனும், துராசாரங்களில் பண்டிதனும் சூதாடிகளுக்கு சிரோமணியான ஒருவரும் கிடையாது. 74. உமது பிள்ளையை நீர் அறிந்து கொள்ளவில்லீயே என்றான். தீக்ஷிதர் இதைச் கேட்டுவிட்டு மிகுந்த லஜ்ஜையினால் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு, 75. துணியினால் தலீயை மூடிக்கொண்டு வீட்டிற்கு வந்து தனது மஹாபதிவ்ரதையான பத்தினியைக் கோபத்துடன் அழைத்துக் கூறினார்: 76. அடீ நீ எங்கு இருக்கிறாய்? உனது பிள்ளை குணநிதி எங்கே? அவனால் எனக்கொன்றும் ஆக வேண்டாம். எனது உத்தமான மோதிரம் எங்கே? 77. அதை நீ எனக்கு எண்ணெய், தேய்க்கும் போது என்னுடைய விரலிலிருந்து கழற்றினாயே, அது எங்கே? அந்த நவரத்ன மோதிரத்தை இப்பொழுது என்னிடம் கொடு என்றார். 78. தீக்ஷிதர்பத்னி அவருடைய இவ்வார்த்தைகளைக் கேட்டு மிகவும் பயந்து கொண்டே கூறினாள், இப்பொழுது நீங்கள் உங்களது மத்யானக் காரியங்களை முடித்துக் கொள்ளுங்கள். 79, 80. தேவ பூஜைக்குரிய ஸாமக்ரிகளைச் சேகரித்து வைத்துக் கொண்டிக்கிறேன். அதிதிகளுக்குப் பிரியமானவரே! அதிதிகள் வரும் ஸமயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நான் சமைப்பதில் முனைந்துள்ளேன். நான் மோதிரத்தை எங்கோ பாத்திரத்தில் 276 காசீ காண்டம் போட்டு வைத்திருக்கிறேன். எங்கு வைத்தேன் என்று நினைவில்லீ. 81,82. தீக்ஷிதர் இடக்காகப் பேசினார். ஓஹோ! நற்குணவானுடைய அன்னையோ அல்லவோ, அதனால் நிச்சயம் உண்மையேதான் பேசுவாய், பிள்ளை எங்கே என்றால், நாதா! இங்கு தான் இத்தனை நேரம் படித்துக் கொண்டிருந்தான், இப்பொழுதுதான் இரண்டு மூன்று ஸ்நேஹிதர்களுடன் படிப்பதற்காக வெளியில் சென்றிருக்கிறான், என்றெல்லாம் சொல்வாய். அடீ! அந்த குங்குமக் கலர் சேலீ உனக்கு நான் வாங்கித் தந்தேனே, அதை இந்தக் கொடியில் மாட்டி வைத்திருப்பாயே, அது எங்கு போயிற்று, 83. பயத்தை விட்டு விட்டு உண்மையைக் கூறு. 84. அந்த ரத்னங்கள் பதிந்த வெள்ளிக் கூஜா எங்கே? அதையும் காணோம், அந்த அரசனளித்த பட்டு நூலினால் செய்த போர்வை எங்கே? 85. அந்தத் தென் தேசத்து வெண்கல லோட்டா எங்கே? கன்னட தேசத்துப் பாத்திரமான செப்புக் குடமெங்கே? ஸந்தோஷத்தையும் குதூஹலத்தையும் தரக்கூடிய அந்த யானை தந்தத்தினால் செய்த சிறிய ஊஞ்சல் எங்கே? 86. அந்த மலீநாட்டிலிருந்து வந்த சந்திரகாந்த மணியினால் செய்த கையை உயர்த்தி உள்ளங்கையில் தீபத்தை வைத்திருக்கும் ஆபரணங்களணிந்த அலங்காரப் பதுமை எங்கே? 87. ஏ சீலே! மிகவும் உளறுவதிலும் என்ன பலன்? உன்னிடம் கோபித்துக் கொள்வதிலும் பயன் இல்லீ. நான் உன்னை நீக்கி இரண்டாவது விவாஹம் செய்து கொள்வேன். இனி இங்கு போஜனம் கூடச் செய்யமாட்டேன். 88, 89. குலத்தைக் கெடுக்கும் அந்த துஷ்டன் எனக்குப் பிள்ளையுமில்லீ. நான் மலடன். எழுந்திரு. எள்ளும் ஜலமும், அத்யாயம்–13 277 தர்ப்பமும் கொண்டு வா, அவனுக்கு தர்பணம்பண்ணி விடுகிறேன். குலத்தைக் கெடுக்கும் துஷ்டனான பிள்ளை இருப்பதைவவிட மனுஷ்யன் பிள்ளையில்லாமலேயே இருக்கலாம். அதுவே மேல். ஸநாதன தர்மத்தில் இந்த நீதி வெகுகாலமாக இருக்கிறது. ஒரு குலத்தின் நன்மைக்காக ஒருவரைத் த்யாகம் செய்யலாம் என்று கூறி 90. தீக்ஷிதர் ஸ்நானம், பானம் நித்யகர்மங்கள் எல்லாம் முடித்துக் கொண்டு ஒரு வேதமறிந்த ப்ரம்ம நிஷ்டரின் மகளை கல்யாணம் செய்து கொண்டு விட்டார். 91. தீக்ஷிதரின் புத்ரனான குணநிதி இந்த எல்லா ஸமாசாரங்களையும் கேள்விப்பட்டுவிட்டுத் தன்னுடைய அத்ருஷ்டத்தை நிந்தித்துக் கொண்டு மிகவும் கவனத்துடன் ஸாவதானமாக ஏதோ ஒரு திசையை நோக்கிச் சென்று விட்டான். 92. அவன் மிகவும் கவலீயுடனே யோசித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான். என்னசெய்வேன்? எங்கே செல்வேன்? நான்படிக்கவுமில்லீயே? பணமும் இல்லீயே. 93. பரதேசத்தில் ஒன்று பணம் வேண்டும் அல்லது வித்தை வேண்டும். அவர்கள் தான் ஸுகப்படுவார்கள். மேலும் பணமிருந்தால்கூட திருடர்களுக்குப் பயப்பட வேண்டிவரும். பண்டிதர்கள் நிர்ப்பயமாய் எங்கும் ஸஞ்சரிக்கலாம் 94. நான் யாகம் செய்த ப்ராம்மணர்குலத்தில் ஜனித்தது எங்கே? இந்த ஈனத் தொழில் செய்தது எங்கே! இரண்டிற்கும் ஆகாசத்திற்கும் பாதாளத்திற்கும் உள்ள வித்தியாஸம் அல்லவா! வரப்போகும் ஆபத்துக்களுக்கு விதி அல்லவோ பலமாக இருக்கிறது. 95. பிச்சைஎடுக்கவும் தெரியாது, வேறு ஊரில் அறிமுகமானவர்களும் இல்லீ. கையில் பணமும் இல்லீ. இந்த நிலீமையில் வேறு யார்தான் என்னை ரக்ஷிப்பார்கள்? 278 காசீ காண்டம் 96. ஸூர்யோதயத்திறற்கு முன்னாலேயே எனது அன்னை சிற்றுண்டியும் பானமும் எனக்குத் தருவாளே! இனி இதை இங்கு யாரிடம் போய் யாசிப்பேன்? இனிமேல் எனக்கேது அன்னை? 97. குணநிதி இவ்வாறு சிந்தித்துக் கொண்டு நடக்கும்போது ஸூர்யன் அஸ்தமனமடைந்தான். அதே ஸமயம் ஒரு சிவபக்தர் - சிவராத்திரியில் மஹாதேவருக்குப் பூஜை செய்வதற்கான த்ரவ்யங்களை எடுத்துக்கொண்டு நகரத்திலிருந்து வெளியெ போய்க் கொண்டிருந்தார். 98,99. பசியோடு செல்லும் குணநிதி அவர் கொண்டு செல்லும் பக்வான்னங்களின் வாசனையை முகர்ந்துவிட்டு யோசித்துக் கொண்டே அவர் பின்னால் சென்றான். ராத்திரியில் சிவ நிவேதமான பின் இந்த அன்னத்தை வாங்கி புஜிப்பேன். 100. அவன் இந்த எண்ணம் கொண்டு சிவாலயத்தின் நிலீப் படியில் உட்கார்ந்து கொண்டு அந்த பக்தர் செய்யும் மஹா பூஜையைப் பார்த்துக் கொண்டிருந்தான். 1. பூஜை முடிந்த பிறகு சிவபக்தரும், மற்ற பக்தர்களும் ஆட்டம் பாட்டம் எல்லாம் செய்து முடித்தபின் சில நிமிஷ நேரம் உறங்கி விட்டனர். இதுதான் தக்க ஸமயம் என்று நிவேதனத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தீக்ஷிதரின் புதல்வன் கோவிலுக்குள் சென்றான். 2. அங்கு விளக்கு மிகவும் சிறிதாக எரிந்தபடியினால் பக்வான்னங்களைக் காணும் பொருட்டு தனது அங்க வஸ்த்ரத்தைக் கிழித்து அதைத் திரியாகத் திரித்து விளக்கிட்டு விளக்கைப் பிரகாசப் படுத்தினான். 3. பிறகு நைவேத்யங்களை எடுத்துக் கொண்டு சீக்கிரமாக வெளியில் வந்தான். வரும் அவஸரத்தில் அவனுடைய கால் ஒரு மனிதனின் மேல் இடரவே அந்த மனிதன் எழுந்துவிட்டான். அத்யாயம்–13 279 4. அட இது யார்? வேகமாக ஓடுகிறானே', திருடன், பிடி, பிடி என்றெல்லாம் அவன் கத்தினவுடன் நகர் வலம் வரும் காவல்காரன் காதில் அது விழுந்தது. அவன் உடனே 5. ஓடி வந்ததுமல்லாமல் வேகமாக ஓடி வரும் குணநிதியின் தலீயில் கம்பால் ஓங்கி ஒரு அறை அறைந்தான். அந்தக் கணமே அவன் பிணமாகிக் கீழே விழுந்தான். அன்று சிவராத்திரி புண்ணிய வ்ரதம்; சிவனுடைய நிவேதனத்தை எடுத்தும் அவனால் சாப்பிட முடியவில்லீ. 6. பிறகு பாசமும், உலக்கையும் கையுமாக வந்த யமதூதன் அவனை யமபுரிக்கு அழைத்துச் செல்வதற்காக பாசத்தால் கட்ட முயன்றான். 7. அதற்குள் சிவனுடைய பாரிஷதர்கள் குணநிதியைக் கொண்டு செல்வதற்காக கிங்கிணி ஜாலர்களினால் அலங்கரிக்கப்பட்ட திவ்யவிமானத்துடன் வந்து சேர்ந்தார்கள். அந்த யமகிங்கரர்கள் சிவகணங்களைப் பார்த்து பயந்துபோய் கைகூப்பிக்கொண்டு கூறினார்களாம். ஏ! சிவகணங்களே! இந்தப் ப்ராம்மணன் மிகவும் துர்நடத்தையுள்ளவன். 8,9. இவன் குலாசாரத்துக்கு விபரீதமாக நடந்தவன். மாதாபிதாக்களின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவன். ஸத்யம் என்பது இவனிடம் லவலேசமும் இல்லீ. சௌசஆசாரங்களும், ஸந்தியாஸ்னாதிகளும் கிடையாது. 10. இவனுடைய இந்தக் கர்மங்கள் எல்லாவற்றையும் விட்டுத் தள்ளுங்கள். ப்ரத்யக்ஷமாகப் பாருங்கள். இவன் சிவ நிர்மால்யத்தைத் திருடியிருக்கிறான் பாருங்கள். இப்பேர்பட்டவர்களை தொடக்கூட யோக்யதையில்லீ. 11-14. சிவநிர்மால்யத்தைச் சாப்பிடுபவன், சிவநிர்மால்யத்தை எடுத்துச் செல்பவன், சிவநிர்மால்யத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பது இவைகளைச் செய்தாலே புண்ணியம் நசித்துவிடும். 280 காசீ காண்டம் விஷத்தைக் குடித்தாலும், பட்டினி கிடந்தாலும் பரவாயில்லீ. ப்ராணன் போவதாக இருந்தாலும்கூட சிவநிர்மால்யத்தை ஒரு பொழுதும் சாப்பிடலாகாது. தர்மத்தின் விஷயத்திற்குத் தாங்கள் தான் ப்ரமாணம். ஆதலால் ஏ சிவ கணங்களே! இவன் சிறிதளவாவது தர்மம் செய்து இருந்தானானால் எங்களுக்கும் சொல்லுங்கள். யமதூதற்களின் வார்த்தையைக் கேட்டுவிட்டு சிவ கணங்கள் சொல்லலானார்கள் யமதூதர்களே சூக்ஷ்மசிவதர்மம். 15. உங்களுக்கு எப்படித் தெரியும்? சூக்ஷ்மதர்சிகளுக்குத்தான் புலப்படும். இந்த பாபமில்லாத பிராம்மணன் ஒரு நல்ல கர்மத்தை செய்திருக்கிறான் கேளுங்கள்- 16. இவன் சிவராத்திரியில் தன்னுடைய வஸ்த்ர்ததைக் திரியாகக் கிழித்து தீபத்தில் இட்டு தூண்டியிருக்கிறான். அதனால் லிங்கத்தின் தலீயில் பரவியிருந்த நிழலீ நிவர்த்தி செய்திருக்கிறான். 17. இவனுக்கு இதைவிட மேலான ஒரு கர்மம் சிவாலயத்தில் கிடைத்திருக்கிறது. யம கிங்கரர்களே! பக்தர்களுடைய முகத்திலிருந்து கிளம்பிய சிவநாமங்களைக் கேட்கிறான். 18. இவன் விதி பூர்வமாய் பக்தர்கள் செய்யும் பூஜையைப் பார்த்து இருக்கிறான். 19. இவன் பாபக்குழியிலிருந்து ரக்ஷிக்கப்பட்டு கலிங்கதேசத்து அரசனாகப் போகிறான். நீங்கள் வந்த வழியே திரும்பிச் செல்லுங்கள். 20. சிவகணங்கள் மூலமாக இவ்வாறு யமதூதர்கள் விரட்டப்பட்டு, இந்தப் பிராம்மணன் கலிங்க தேசாதிபதி அரிந்தமனுடைய புத்ரனாகப் பிறந்தான், தமநாமன் என்ற பெயரும் பெற்றான். அத்யாயம்–13 281 21. முறையே யுவாவான பின்பு பிதாவின் அவஸானத்திற்குப் பிறகு ராஜ்யத்தை யடைந்தான். இந்த அடங்காத துஷ்ட குணங்களுடைய பூபதி தமன் என்பவன் எல்லா சிவாலயங்களிலும் தீபங்கள் போடுவதற்கு உத்தரவு கொடுத்தான். இதைத் தவிர அவனுக்கு வேறு ஒரு தர்மமும் தெரியாது. அவன் ராஜ்யம் பெற்றவுடன் ராஜ்யத்திலுள்ள ஸமஸ்த பிரதிநிதிகளையும் அழைத்து ஒரு உத்தரவு போட்டான். உங்களுடைய ஆளுகைக்குள் எத்தனை சிவாலயங்கள் இருக்கின்றனவோ அவைகளில் ப்ரதி தினமும் விளக்கேற்ற வேண்டும். இது விஷயமாக நீங்கள் யோசிக்க வேண்டியது அவசியமில்லீ. எவன் எனது உத்தரவை மீறுகிறானோ அவன் தலீயை வெட்டி விடுவேன் என்றான். 22,23,24. இதனால் எல்லா சிவாலயங்களிலும் அரசன் மீதுள்ள பயத்தினால் தீபங்கள் எரியத் தொடங்கின. 25. இந்தச் தர்மத்தின் பிரபாவத்தினால் ஜீவன் முடியும் வரை அந்த ராஜா தமன் 26. தர்மம் வழுவாத ஸம்பத்தையே அனுபவித்து விட்டு உசிதமான ஸமயத்தில் காலதர்மன் வசப்பட்டான். இந்த தீபதான ஸம்ஸ்காரத்தினால் ராஜா தமன் அடுத்த ஜன்மத்திலும் அநேக சிவாலயங்களில் அநேக தீபங்கள் ஏற்றி வைத்து அந்த புண்ணிய பலத்தினால் 27. ரத்னங்களினால் ஆன தீபங்கள் சுடர் விட்டெரியும் அளகா புரிக்கு அரசனானான். சிவ நிமித்தமாக அதி அல்ப தர்மம் செய்தாலும் காலக்ரமத்தில் அதிமகத்தான பலனையடைகிறான். 28. இதை நன்கு யோசித்த ஆத்ம ஸுகத்தை விரும்பும் ஜனங்கள் சிவனை ஸேவிக்க வேண்டும். எல்லா தர்மங்களையும் விட்ட தீக்ஷிதருடைய அந்த மகன் எங்கே? பசியின் காரணமாக வஸ்த்ரத்தைக் கிழித்து தீபத்திற்குத் திரிபோட்டு லிங்கத்தின் மீதுள்ள அந்தகாரத்தை விலக்கின 282 காசீ காண்டம் ஒரு புண்ணிய ப்ரபாவத்தினால் தர்மநிஷ்டனான கலிங்கத்து அரசனானவன் 29,30. அதற்குமேல் பூர்வ ஜன்மத்தின் வாசனையின் காரணமே அடுத்தடுத்த ஜென்மங்களில் சிவாலயங்களில் தீபங்கள் எரியும்படி ஏற்றியவன் சிவசர்மா, அதே குணநிதி மனுஷ்யர்களுள் மிகச் சிறந்த தர்ம நிஷ்டரான குபேரனாகி இப்பொழுது திக்பால் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். எப்படி இருந்தவன் எந்தப் பதத்திற்கு வந்து விட்டான்! 31. விஷ்ணு கணங்கள் திரும்பவும் கூறினார்கள். ஏ! ப்ராம்மணா! இந்தக் குபேரன் எந்த விதமாகச் சிவனுடன் எப்பொழுது தோழமையை யடைந்தான்? அதையும் சொல்கிறோம். ஒரு மனதுடன் கேளுங்கள். 32. ப்ராம்மணா! பூர்வ காலத்தில் பத்ம கல்பத்தில் ப்ரம்மாவினுடைய மானஸ புத்ரரான புலஸ்த்யருக்கு விஸ்வரா என்ற புத்திரன் இருந்தான். 33. அதி உக்ர தபஸ்ஸினால் த்ரிலோசனரை ஆராதித்து அந்த வைச்ரவணன் அதற்கு முன்னாலேயே விஸ்வகர்மாவினால் ஏற்படுத்தப்பட்ட இந்த அளகாபுரியை ஆண்டு வந்தான். 34. அதற்குப் பிறகு பத்ம கல்பம் கழிந்த பிறகு மேகவாகன கல்பம் ஆரம்பித்துவுடன் அந்த வைச்ரவணனே யக்ஞதத்தனுடைய புத்ரனான குணநிதியாகப் பிறந்தான். 35. முன்பு தீபத்தைத் தூண்டி விட்டபலனால் பூர்வ ஜன்ம நினைவு வந்து காசியில் சென்று கடின தபஸ் செய்தான். 36. குபேரன் தன் பூர்வ ஜன்மத்தில் மாஹாத்மியத்தை எண்ணி ஸத்பாவனை என்னும் புஷ்பத்தினால் சிவலிங்கத்தை ஸ்தாபித்து அதன் ஸமீபத்திலேயே தன் சித்தத்தை தீபமாக வைத்து மஹாப்ரகாசப்படுத்தினான். அத்யாயம்–13 283 இந்த தீபத்தில் சிவனே வட்டிலாகவும், சிவநேத்திரியாக, சிவபக்தியே எ ண்ணையாகவும், சி வனே நிச்சலமாக த்யானிப்பதையே ஜ்யோதியாகவும் கொண்டான். 37. சிவனுடன் கூட ஸோஹம்பாவ ஞானமே தீபத்தினுடைய பெரிய பாத்திரம். அந்த தீபம் தமஸ்ஸாகிற இந்த அக்னியினால் ஏற்பட்டது. இந்த தீபம் காமக்ரோதாதி மஹாவிக்ன ரூபமான விட்டில் பூச்சிகள் வந்து விழுவதிலிருந்து காப்பாற்றுகிறது. 38. ப்ராணவாயுவை ஸதம்பனம் பண்ணினதினால் வாயுவும் இந்த தீபத்தை அணைப்பதில்லீ. பாவனையாகிற சுடர் தட்டாததினால் நிர்மலமாக எரிந்தது. 39. அவன் இந்த விதமாக தீப தபஸ்ஸினால் பத்து லக்ஷம் வருஷம் வரைக்கும் தியானம் செய்து சரீரத்தினால் கேவலம் எலும்பு மாத்திரமே இருந்தவனாக ஆனான். 40. பிறகு தேவி வி சாலாக்ஷியுடன் கூட விஸ்வேஸ்வரதேவர் ஸ்தாணு ரூபமாக அந்த லிங்கத்தில் ஆவிர்பவித்து ஸந்தோஷ மனதுடன் கூறினார்கள். ஏ! அளகாதீஸ்வ்ரா! தபஸ் போதும். வரம்கேள் என்றார். 41, 42. அந்தக் தபோதனன் கண்ணைத் திறந்து பார்த்தான் உற்றுப் பார்க்க விரும்பினான். ஆனால் உதிக்கும் ஸஹஸ்ரஸூரியனுடைய ப்ரகாசம்பொருந்திய உமாபதி சந்திரசேகர் ஸ்ரீகண்டபகவான் பேரில் அவனுடைய த்ருஷ்டி பட்டதுமே மின்னல் வீசியதைப் போல அவனுடைய கண்கள் தானாக மூடிக்கொண்டன. 43,44. அப்பொழுது மனோரதம் செல்லக்கூடிய வழிக்குள் எட்டாதவரான மஹாதேவரைப் பார்த்துக் கூறினான், ஓ ஸ்வாமி! உங்கள் சரணங்களை தரிக்கும் பாக்யத்தைத் தாங்களே எனக்கருள வேண்டும். 45. இவ்வரங்களை எனக்களியுங்கள். ஈசா! உங்கள் ஸாக்ஷாத் தரிசனம் எனக்குக் கிடைத்து விட்டால் பிறகு எனக்கு எந்த வரம் தேவை? சசிசேகரா! உமக்கு நமஸ்காரம். 284 காசீ காண்டம் 46. தேவ தேவரான அந்த மஹா தேவர் குபேரனுடைய அந்த வார்த்தையைக் கேட்டு விட்டு அவனைக் கரகமலங்களால் ஸ்பர்சித்ததால் தம்மைப் பார்க்கக்கூடிய பாக்யமாகிய வரத்தையளித்தார். 47. அப்பொழுது குபேரன் கண்களைப் பரவவிட்டதுமே முதலில் உமா தேவியைத் தான் தரிசித்தான். 48. சிவனுடைய ஸமீபத்திலேயே இருக்கும் இந்த ஸர்வாங்க ஸுந்தரியான ரமணி யார்? இவளென்ன நம்மை விட அதிகம் தபஸ் செய்திருக்கிறாளா? என்ன உருவம்! என்ன தேஹம்! அஸாதாரண ரூபவதியாக ஸௌபாக்யவதியாக இருக்கிறாளே. 49. இவ்விதம் கூறிக்கொண்டு தனது இடது கண்ணின் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டேயிருந்தான். அப்பொழுது அவனது இடது கண் பட்டென்று வெடித்துக் குருடாயிற்று. தேவி கூறினாள். 50. இந்த துஷ்ட தபஸ்வி அடிக்கடி என்னைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறானே. என் தபஸ்ஸின் பிரபாவத்தைப் பற்றி அஸூயையால் அடிக்கடி ஏதோ கூறுகிறானே, பிதற்றுகிறானே; 51. என் ரூபத்தையும் ப்ரியத்தையும் ஸௌபாக்ய ஸம்பத்தையும் பார்த்துக் பெருமையடைந்து, இப்பொழுது தனது வலது கண்ணாலும் அடிக்கடி பார்க்கிறானே. தேவியினுடைய வார்த்தையைக் கேட்டு பிரபு சிரித்துக் கொண்டே கூறினார்- 52. ஏ உமே! இவன் உன் பிள்ளை, கெட்ட எண்ணத்துடன் உற்றுப் பார்க்கவில்லீ. மேலான உன்னுடைய தபோலக்ஷ்மியை வர்ணிக்கிறான். ஈசன் பார்வதியிடம் இவ்வாறு வர்ணித்துவிட்டு குபேரனிடம் சொல்கிறார். அத்யாயம்–13 285 53,54. ஏ குழந்தாய்! உன் தபஸ்ஸினால் ஸந்தோஷமடைந்தேன். உனக்கு அதிகமாக வரங்கள் தருகிறேன். எல்லா நிதிகளுக்கும் அதிபதியாய் குஹ்யர்களுக்கும் அரசனாவாய். 55. ஏ வ்ரதசாலியே! யக்ஷ கின்னரர்களுக்கும், அரசர்களுக்கும் அரசனாய் ராக்ஷஸர்களுக்கும் அதிபதியாவாய், யாவர்க்கும் தனத்தை வழங்குபவனாக இருப்பாய். 56. என்னுடன் கூட உனக்கு நட்புத்தன்மை ஏற்பட்டு விட்டது. அதனால் ஏ மித்ரா! உன்னுடைய ப்ரீதியை அதிகரித்துக் கொண்டு உனக்கு சமீபத்திலிருக்கும் ஸ்தானத்திலேயே அளகா புரிக்கு சமீபத்திலேயே எப்பொழுதும் வசிப்பேன். 57. இந்த உமையின் சரணங்களில் விழு. இவள் உனது அன்னை' என்று சொல்லி, மஹாதேவர் இந்த விதமாகக் குபேரனுக்கு ஸகல வரங்களையும் அருளித் திரும்பவும் பார்வதியிடம் கூறுவார். தேவேஸ்வரீ! இந்த புத்ரனை சந்தோஷத்துடன் கடாக்ஷிப்பாய். 58. பகவதி கூறினாள். புத்ரா! உன்னுடைய பக்தி சிவனிடம் உறுதியாக இருக்கட்டும், குருடாய்ப் போன உனது இடதுகண் காரணமாக எல்லோரும் உன்னை ஒற்றைக்கண்ணன் என்று அழைப்பார்கள். 59. தேவர்தேவர் எந்தெந்த வரங்களையெல்லாம் அளித்தாரோ - அவையெல்லாம் உனக்கு ஸித்தியாகட்டும். என் ரூபத்தைப் பார்த்துப் பொறாமைப் பட்டதினால் குபேரன் என்ற பெயரால் கீர்த்தியடைவாய். 60. உன்னால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த சிவலிங்கம் ஸாதகர்களுக்குப் பரம ஸித்தியைக் கொடுப்பதாயும் பாபத்தைப் போக்கக் கூடியதாயும், உன்னுடைய பெயருடன் விளங்கட்டும். 286 காசீ காண்டம் 61. குபேரேஸ்வரருடைய லிங்கத்தை எவனோருவன் தினமும் தரிசனம் செய்கிறானோ அவனுக்குத் தனத்திற்கு ஒரு போதும் குறைவு இருக்காது. நண்பர்களிடமிருந்து வியோகம் ஏற்படாது, உறவினர்கள் பிரியமாட்டார்கள். 62. விஸ்வேஸ்வரருக்குத் தென்பக்கத்தில் இருக்கும் இந்த லிங்கத்தை எவன் ஒருவன் தரிசனம் பூஜை செய்கிறானோ அவனை பாபமும் தரித்திரமும் அண்டாது. 63. இந்த விதமாக உமாதேவியுடன் கூ ட மஹேஸ்வரர் குபேரனுக்கு எல்லா விதமான வரங்களையும் அளித்துவிட்டுத் தன்னுடைய பதத்திற்கேகினார். 64. இவ்விதமாக தனேசனான குபேரன் இந்த உருவத்துடன் மஹாதேவருக்குப் பிரியமான உத்தமமான பதவியை யடைந்தான். 65. யக்ஷேஸ்வரனின் குபேரபுரியிலுள்ள வ்ருத்தாந்தத்தை முறையாக வர்ணித்தோம். இந்த வைச்ரவணனுடைய கதையைக் கேட்ட மாத்திரத்திலேயே மனிதன் எல்லா விதமான பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான். ஸ்காந்த புராணத்தில் நான்காவதான காசீ கண்டத்தில் பூர்வார்த்த வாயு லோக குபேர வர்ணனமான பதிமூன்றாவது அத்யாயம். ஸம்பூர்ணம். அத்யாயம்–14 287 அத்யாயம் 14 பிறகு, திரும்பவும் விஷ்ணு கணங்கள் இருவரும் கூறத் தொடங்கினார்கள். இந்த அளகாபுரியுடைய முன்பாகத்தில் மஹா புண்ணிய புரியான 'ஈசானபுரி' இருக்கிறது. இதில் எப்போதும் தபோதனர்கள் சிவபக்தர்களாக வஸிக்கிறார்கள். 1. சிவத்யானத்தில் ஆழ்ந்திருப்பவர்களும், சிவ வ்ரத தீக்ஷை எடுத்துக் கொண்டவர்களும், தங்கள் தர்மங்களை சிவார்ப்பணம் செய்தவர்களும், எப்போதும் சிவபூஜையில் ஆழ்ந்தவர்களும் இங்கு வஸிக்கின்றனர். 2. நமக்கு ஸ்வர்க போகம் இங்கேயே கிடைக்குமென்று இச்சையோடு தபஸ் செய்பவர்களான ருத்ரரூபிகள் இந்த ரம்யமான ருத்ரபுரியில் வஸிக்கிறார்கள். 3. அஜன், ஏக பாத, அஹிர் புத்னி முதலிய ஏகாதச ருத்ரர்கள் கையில் த்ரிசூலம் தரித்துக் கொண்டு இந்த ஸ்தானத்திற்கு யஜமானர்களாக இருக்கிறார்கள். 4, இந்த ஏகாதச ருத்ர கணங்கள் மேற்சொன்ன அஷ்டபுரிகளிலும் துஷ்டர்களிடமிருந்தும் தேவத்ரோகிகளிடமிருந்தும் எப்போதும் ரக்ஷிக்கிறார்கள். சிவபக்தர்களுக்கு வரமளிக்கிறார்கள். 5,6. இந்த ருத்ர கணங்கள் வாராணஸியைடைந்து மங்களகரமான ஈசானேஸ்வரர் என்ற மஹாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து தபஸ் செய்திருக்கிறார்கள். 7. இவர்களுக்கெல்லாம் நெற்றியில் கண் உண்டு. நீலகண்டர்கள். வெண்மை சரீரம் படைத்தவர்கள். ரிஷபக் கொடியையுடைவர்கள். பூமியில் எண்ணிக்கையற்ற ஆயிரக் கணக்கான ருத்ர கணங்கள் இருக்கிறார்கள். 8. அவர்களெல்லாரும் ஸமஸ்த போகங்களுடன் திருப்திகரமாக இந்த ஈசானபுரியில் வஸிக்கிறார்கள். இவர்கள் காசியில் ஈசானேஸ்வரரைப் பூஜித்தவர்கள். 288 காசீ காண்டம் 9. தேசாந்தரங்களில் மரணமடைந்தாலும் கூட இந்த லோகத்தையடைந்து புண்ணிய பலத்தினால் இங்கு புரோகிதர்களாக இருக்கிறார்கள். அஷ்டமியிலும் சதுர்தசியிலும் ஈசானேஸ்வரரைப் பூஜிப்பவர்கள், 10. இவர்கள் இங்கேயும் பரலோகத்திலும் ருத்திர ஸ்ரூபமாக ஆகிறார்கள். ஈசானேஸ்வரர் சமீபத்தில் சதுர்தசி இரவில் உபவாசத்துடன் கண் விழித்துக் கொண்டிருப்பவர்கள் மறுபடியும் கர்ப்பவாஸம் பண்ணமாட்டார்கள். இப்படியாக சொர்க்க மார்கத்தில் விஷ்ணு கணங்களால் சொல்லப்பட்ட இந்தக் கதையைக் கேட்டுக்கொண்டு 11,12. சிவசர்மா எல்லா இந்திரியங்களுடன் மனதையும் ஆனந்தப்படுத்திக் கொண்டு வரும்போது பகலிலும் சந்திரனின் நிலவு, 13. மிகவும் சோபையாக பிரகாசிப்பதைப் பார்த்துக் கேட்டார்' விஷ்ணு கணங்களே! இது எந்த லோகம்? என்று கேட்டான். அப்போது அவர்கள் பிராம்மணர்களிடம் கூறினார்கள், 14. ஏ சிவசர்மன்! யாதொரு அம்ருதம் வர்ஷிக்கின்ற கிரண ஸமூகத்தினால் உலகம் த்ருப்தியடைகின்றதோ அந்த சந்திரனுடைய உலகமிது. 15. ஏ, விப்ரரே! அக்காலத்தில் பிரஜைகளை ஸ்ருஷ்டிக்கிற முறையில் இச்சை கொண்டவரான ப்ரம்மாவினுடைய மனதிலிருந்து இந்த சந்த்ரனுடைய பிதா, அத்ரி மகரிஷி உத்பவித்தார். 16. அந்த தேவரிஷி தேவ வர்ஷங்களில் மூவாயிரம் வருஷங்கள் அனுத்தரம் என்ற பெயருள்ள மேன்மையான தபஸ்ஸை செய்தார். என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். 17. அச்சமயத்தில் அவருடைய ஊர்த்வ கதியாகப் போகின்ற ஸோமாம்ருதத்தை அடைந்து, திக் அத்யாயம்–14 289 மண்டலங்களைப் பிரகாசிக்கச் செய்கிற அவருடைய இரண்டு கண்களிலிருந்து ஆறு தடவைகள் அம்ருதம் பெருகிற்று. 18. அதன் பிறகு ப்ரம்மாவின் ஆக்ஞைபடிக்கு பத்து திக் தேவிகளும் ஒன்று சேர்ந்து அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் வைத்துக்கொள்ள முடியவில்லீ. 19, 20. எப்பொழுது அந்த பத்துதிக்குகளினால் அந்த கர்ப்பத்தைத் தரிக்க முடியவில்லீயோ அவர்கள் எல்லோருடனும் கூட அந்த கர்ப சிசுவான சந்திரன் பூவுலகில் வந்தான். லோக பிதாவான ப்ரம்மா அந்த சந்திரன் இவ்வாறு வந்ததைப் பார்த்து மூன்று உலகுக்கும் ஹிதத்தைச் செய்ய விரும்பி, அவனை ஒரு ரதத்தில் ஏற்றி வைத்தார். 21. இப்படிப் ப்ரம்மா சந்திரனை ரதத்தில் ஏற்றி வைத்துக் கொண்டு இருபத்தி ஒருமுறை ஸமுத்ரத்தை எல்லீயாகக் கொண்ட பூமி முழுவதையும் பிரதக்ஷிணம் செய்தார். 22. அப்படி அவனைச் சுற்றும் பொழுது பூமியில் எங்கெல்லாம் அவனுடைய தேஜஸ் விழுந்ததோ அங்கெல்லாம் ஓஷதிகள் வளர்ந்தன. அவைகளால் ஜகத்திற்கு க்ஷேமம் உண்டாயிற்று. 23. ஏ! மஹா பாகா! இப்படிப்ரும்மாவினால் விருத்தி செய்யப்பட்ட சந்த்ரனின் தேஜஸ்ஸினால் சந்த்ரன் முக்தியடைந்து, பரம பாவனமான அவிமுக்த க்ஷேத்திரத்தையடைந்து, தன்னுடைய பெயருள்ள சந்திரசேகரன் என்ற அம்ருத லிங்கத்தை பிரதிஷ்டித்து பத்மம் என்ற எண்ணிக்கைப்படிக்கு ஒருகோடி வருஷம் தவம் செய்தான். 24,25. தேவ தேவரான, பினாகி விஸ்வேஸ்வரருடைய ப்ரஸாதத்தால் விதைகள், ஓஷதிகள், ஜலம் இவை களுக்கும், பிராம்மணர்களுக்கும் அதிபதியானார்கள். 290 காசீ காண்டம் 26. சந்திரன் தபஸ் பண்ணிக்கொண்டிருக்கும்போது காசியில் அம்ருதோதயம் என்ற கிணறு வெட்டினான். அந்த ஜலத்தில் ஸ்நானம் பானம் பண்ணுபவர்கள் அக்ஞானத்திலிருந்து விடுபடுவார்கள். 27. மஹாதேவர் சந்தோஷமடைந்து ஜகத் சஞ்சீவினி என்ற ஒரு கலீயை தலீயில் இருத்திக் கொண்டிருக்கிறார். 28. அந்த சந்திரன் தக்ஷப்ரஜாபதியின் சாபத்தினால் மாதக் கடைசியில் ஒவ்வொரு கலீயாக இழந்து வருகிறான். ஆனால் பரமசிவன் தலீயில் தரித்துக் கொண்டிருக்கும் ஜகத்சஞ்சீவினி என்ற ஒரு கலீயினால் மறுபடியும் பதினைந்து நாட்களில் பூரணத்வம் பெற்று விடுகிறான். 29, 30. ஸோமயாகம் செய்கிறவர்களில் தலீசிறந்த சந்திரன் இந்த விதமாக சங்கரருடைய பெரிய ஸாம்ராஜ்யத்தைப் பெற்று ஆயிரம் நூறு தக்ஷிணைகளினால் பூர்த்தியாகிற ராஜஸூய யாகத்தை ஆரம்பித்தான். ஓ! பிராம்மணரே! நாங்கள் பெரியவர்களிடமிருந்து கேள்விப் பட்டிருக்கிறோம். அதாவது சந்திரதேவன் ஸபையோர்களுக்கு மூன்று உலங்களையும் தக்ஷிணையாகக் கொடுத்து விட்டான் அந்த யக்ஞத்தில் - 31. ப்ரம்மாவே ஸுயம் ப்ரம்மாவாக இருந்தார். அத்ரி, ப்ருகு, மரீசி ஆகியரிஷிகள் ரித்விக்குகளாக இருந்தார்கள். ரிஷி மண்டலத்தினால் சூழப்பட்ட பகவான் ஹரி ஸபாநாயகனாக இருந்தார். 32. வாலி, குஹு, த்யுதி, புஷ்டி, ப்ரபா, வசு, கீர்த்தி, ருதி, சோபாலக்ஷ்மி இந்த ஒன்பது தேவியர்களும் சந்திரனுக்கு ஸேவை செய்தார்கள். 33. சந்த்ரன் உமாஸஹிதரான ருத்ரதேவரை, யக்ஞங்களினால் திருப்தி செய்வித்து உமையுடன் கூடின சிவனால் கொடுக்கப்பட்ட ஸோமனென்னும் பட்டத்தைப் பெற்றார். அத்யாயம்–14 291 34. ஸோமன் காசியில் சந்திரசேகரருக்கு முன்னால் மிகவும் கஷ்ட ஸாத்யமான தவத்தைச் செய்து ராஜஸூய யக்ஞத்தை முடித்தார். 35. அந்த இடத்திலேயே பிராம்மணர்கள் மிகவும் ஸந்தோஷமடைந்து மூன்று லோகங்களையும் தக்ஷிணையாகக் கொடுத்த தாதாவான சந்திரனை (ஸோமனை) தாங்கள் பிராம்மணர்களுக்கு ராஜா என்று கூறி ஆசிர்வதித்தார்கள். 36. சந்திரன் அந்த இடத்திலேயே (பகவானுடைய) இடக்கண்ணாக இருக்கும் பேற்றையடைந்தான். அத்யந்த ஸந்தோஷ ஸஹிதரான பரமசிவன் மூன்று உலகங்களும் ஆனந்திக்கும் பொருட்டு 37. சந்திரனிடம் கூறினார்: உன்னுடைய தபோபலத்தினால் நீ என்னுடையவே பிரதிரூபமாகிவிட்டாய். உலகம் உன்னுடைய உதயத்தினால் ஸுகப்படும். 38. உன்னுடைய அமுதமயமான கிரண ஸமூஹங்கள் பட்டவுடனேயே சூரியனுடைய தாபத்தினால் மிகவும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சராசர ஜகத்தானது தங்களுடைய தாபம் நீங்கி ஸுகமடையும். 39. மஹேஸ்வரர் இவ்விதம் கூறிப் பின்னும் ஸந்தோஷமடைந்தார்; சந்திரனுக்கு மேலும் மேலும் அதிக வரங்களை வழங்கினார். பிராம்மணர்களுக்கு அரசே, நீ இந்தக் காசியில் பெரும் தபஸ் பண்ணினாய். 40. நீ செய்த யாகத்துடைய பலனை எனக்களித்தாய்; அர்ப்பணம் செய்தாய். சந்திரசேகரன் என்ற மஹாலிங்கத்தையும் ஸ்தாபித்தாய். 41. இந்த எல்லாக் காரணங்களினால் உமையுடன் கூடிய நான் (இங்கு தன்னை அர்த்தசந்த்ரன் என்று கூறுகிறார்) (அதாவது உமைபாதி சந்த்ரன், தான் பாதி சந்த்ரன்) அர்த்த சந்த்ர ரூபதாரியான நான் எங்கும் 292 காசீ காண்டம் நிறைந்திருந்த போதிலும் உன்னுடைய பெயரைக் குறிக்கும் (இந்த சந்த்ரசேகர லிங்கத்தில் ஒவ்வொரு மாதத்துப் பூர்ணிமையன்றும் 42. மூவுலகத்து ஐச்வர்யங்களின்கூட இரவும் பகலும் விசேஷரூபமாக இதில் ஸாந்நித்யமாக இருப்பேன். ஆனால் பூர்ணிமாதிதியன்று இந்த லிங்கத்துக்கு முன்னால் ஜபம் ஹோமம் பூஜை தானம் த்யானம் ப்ராம்மண போஜனம் முதலிய ஸத்கர்மங்களைச் சிறிய அளவில் செய்தால் கூட அதை ஒரு மஹாபூஜையாக எண்ணி ஒப்பற்றபலனைக் கொடுப்பேன்.) 43,44. கோவில் ஜீர்ணோத்தாரணம், நாட்டியம், வாத்யகோஷம். 45. த்வஜாரோஹணம். தபஸ்வி யதிகளுக்கு திருப்தியளிக்க கூடிய ஸாதனங்கள் இவைகளெல்லாம் சந்திரசேகரலிங்கத்திற்கு முன்னால் நடந்தால் அதிக பலனைக் கொடுக்கும். இன்னும் ரஹஸ்யமான வார்த்தை கூறுகிறேன் கேள். 46. பக்தியில்லாதவன், நாஸ்திகன், வேதத்ரோஹி, அவர்களுக்கு அதைக் கூறக் கூடாது. ஸோமவாரத்தன்று அமாவாசை திதி வந்தால் அப்போது நல்ல பக்தர்கள். 47. ச்ரத்தையுடன் சதுர்த்தசியன்று உபவாசம் இருந்து த்ரயோதசி நித்ய கர்மத்தை முடித்து 48. அதே த்ரயோதசி சனிக்கிழமை இருந்ததானால் சந்திர சேகரருக்குப் பூஜை பண்ண வேண்டும். அன்று பகலில் உபவாஸம் இருந்து இரவில் சாப்பிட வேண்டும். பிறகு 49. சதுர்தசியில் உபவாஸம் இருந்து இரவில் கண்விழிக்க வேண்டும். மறுநாள் காலீயில் ஸோமவாரத்தோடு கூடிய அமாவாஸை யோகத்தில் சந்திர கூபம் என்ற கிணற்றில் ஸ்நானம் செய்வது, அத்யாயம்–14 293 50. விதிபூர்வமாக ச்ராத்தத்தைப் பண்ண வேண்டும். பிறகு விதிப்ரகாரம் தேவருணம், ரிஷிருணம், பித்ருருணம் இவைகளைச் செய்ய வேண்டும். 51. தீர்த்த ச்ராத்தத்தில் அவர்கள் அர்க்கியம் செய்ய வேண்டாம், வஸு ருத்ர, ஆதித்யஸ்வரூப பிதா பிதாமஹர் ப்ரபிதாமஹர் இவர்கள் மூவருக்கும் ச்ரத்தையுடன் பிண்டதானம் செய்ய வேண்டும். 52. இந்த விதம் மாதாமஹர் முதலியவர்களுக்கும் மூன்று வம்சத்துக்கும், மேலும் ஸகோத்ரர், குரு மாமனார் மற்ற பந்துக்கள் இவர்கள் நாமத்தை உச்சரித்துக் கொண்டு பிண்டத்தைக் கொடுக்கவும் 53. இந்தக் தீர்த்தத்தில் ச்ரத்தையுடன் ச்ராத்தம் செய்வதினால் எல்லோரும் கடைத்தேறுகிறார்கள். கயையில் பிண்ட ப்ரதானம் செய்வதால் முன்னோர்களுக்கு எந்தவிதமான த்ருப்தி ஏற்படுகிறதோ அது, 54. இந்த சந்திர கூபத்தில் ச்ராத்தம் செய்வதினால் பூர்ண திருப்தி கிடைக்கிறது. மனிதன் கயையில் பிண்டதானம் செய்வதனால் ஸமஸ்தபித்ருக்களிடமிருந்து விடுபடுகிறான். 55. அதுபோல் சந்திர கூபத்தில் பிண்டதானம் செய்து பித்ருகடனிலிருந்து விடுபடலாம். எப்பொழுது ஒரு உத்தமமான நரன் சந்திரேஸ்வரனுடைய தர்சனத்திற்காகச் செல்லுகிறானோ, 56. அவன் அதே நிமிஷம் அவனுடைய பூர்வபுஷருர்கள், பிதா, பிரபிதாமஹர் முதலியவர்கள் ஸந்தோஷத்தினால் நர்த்தனம் செய்கிறார்கள். இந்த சந்திர கூபத் தீர்த்தத்தில் நமக்குத் தர்ப்பணம் செய்வான் என்று ஸந்தோஷிக்கிறார்கள். 57. நம்முடைய துர்பாக்யத்தினால் தர்பணம் செய்யாமல் சென்று விட்டால் என்ன ஆகும், அந்தத் தீர்த்தத்தின் ஜலத்தையாவது தொடுவார் அல்லவா? அதனால் கூட நமக்குத் திருப்தி கிடைக்கிறது. 294 காசீ காண்டம் 58. முட்டாள் தனமாக ஜலத்தையும் தொடாவிட்டால், அதைப் பார்க்கவாவது செய்வார்களல்லவா? பின் அதனாலேயே ஸந்தோஷம் ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் மேற்கூறிய விதிபூர்வமாக ச்ராத்த ஸம்பன்னம் செய்து பிறகு சந்திரேசுவரர் தரிசனம் செய்து பிறகு பிராமணன், யதி, இவர்களை போஜனங்களினால் திருப்திப் படுத்தினால் அப்பொழுது தனது வ்ரதத்தைக் காத்துப் பாரணை செய்யலாம். 59. ஹே மிருகாங்க! காசியில் தீர்த்த விதியினால் ஸோமவதி அமாவாஸையன்று விரதம் இருந்தால் எனது அனுக்ரகத்தினால் தேவருணம், பித்ருருணம், ரிஷிருணம் இவைகளிலிருந்து விடுபட்டு முக்தர்களாகலாம். 60. காசி க்ஷேத்ரத்தில் வஸிப்பவர்கள் சித்ரா நக்ஷத்ரத்துடன் கூடிய சித்ரமாத் பூர்ணிமையில் தாரக ஞானம் கிடைப்பதற்காக, க்ஷேத்ரத்தில் ஏற்படும் இடையூறுகளை அழிக்கும் பொருட்டு, மஹாயாத்ரை அவசியம் செய்ய வேண்டும். 61. ஒருவன் சந்திரேஸ்வரர் லிங்கத்தைப் பூஜை செய்துவிட்டு, வேறு எங்காவது சென்று மரணமடைந்தாலும், பாபஸமூஹமாகிய திசையைக் கிழித்துக் கொண்டு சந்திரலோகத்தையடைகிறான். 62. கலிகாலத்தில் அத்ருஷ்ட ஹீனர்களான ஜனங்கள் சந்திரேஸ்வர லிங்கத்தின் மஹிமையைஅறிகிறார்களில்லீ. ஏ! நிசாபதி இன்னும் ஒரு முக்யமான ரஹிஸ்யத்தைக் கூறுகிறேன் கேள். 63. இந்த ஸ்நானம் ஸித்த யோகீஸ்வரபீடம்; ஸாதகர்களுக்கு ஸித்தியளிக்கவல்லது, ஸுரர், அஸுரர், நாகர், வித்யாதரர் கந்தர்வர், 64. ராக்ஷஸர்கள் குஹ்யர்கள், யக்ஷகின்னரர்கள், மனுஷ்யர்கள் இவர்களில் ஏழுகோடி ஸாதகர்கள் எனக்கு அத்யாயம்–14 295 முன்னால் (எனது ஸந்நிதானத்தில்) ஸித்தியடைந்திருக் கிறார்கள். 65. ஆறுமாத பரியந்தம் நியமமான ஆஹார விஹாரத்துடன் விஸ்வேஸ்வரரைத் தியானம் பண்ணினால் சந்திரேஸ்வர பூஜைக்காக வரும் ஸித்த கணங்களைப் பார்க்கலாம். 66. ஸாக்ஷாத் ஸித்த யோகீஸ்வரிதேவி அவர்களுக்கு வரம் கொடுக்கிறாள். ஸித்த யோகீஸ்வரி தரிசனத்தினால் உனக்கும் பெரிய ஸித்திகள் கிடைத்திருக்கின்றன. 67. உலகத்தில் ஸாதகர்களுக்கு ஸித்தியைக் கொடுக்கக்கூடிய அநேக ஸித்த பீடங்கள் இருக்கின்றன. இந்த யோகீஸ்வரி பீடத்தைப் போல வெகு சீக்கிரத்தில் ஸித்தி கொடுக்கும் மற்றொரு பீடம், ஏ! சசியே இந்த உலகில் வேறெங்கும் இல்லீ. 68. ஏ! சசியே! எங்கு நீ இந்த சந்திரேஸ்வர லிங்கத்தைப் பிரதிஷ்டித்து இருக்கிறாயோ அது அஜிதேந்த்ரியர்களுக்கு (இந்த்ரியங்களை ஜெயிக்காதவர்களுக்கு) கண்களுக்குப் புலப்படாது. 69. கோபத்தை ஜயித்தவர்கள், காமத்தை ஜயித்தவர்கள், லோபம், ஆசை இவைகளையும் ஜெயித்தவர்கள் ஆகியவர்களே இந்தப் பரம சக்தி வாய்ந்த யோகீஸ்வரி தேவியை தரிசிக்க முடியும். 70. எவர்கள் ஒவ்வொரு அஷ்டமியன்றும், ஒவ்வொரு சதுர்தசியன்றும் கண்ணுக்குத் தெரியாதவளும், பாக்கியசாலியும் ஸகல ஸித்திகளையும் கொடுக்க வல்லவளான, இந்த பிங்களா 71. தேவியை இந்த ஸித்த யோகீஸ்வரி பீடத்தில் தியானித்து தூப, தீப, நைவேத்யம் முதலிய உபசாரங்களுடன் பக்தி பூர்வமாகப் பூஜித்தால் அவர்களுக்கு முன்னால் அந்த தேவி ப்ரத்யக்ஷமாகிறாள். 296 காசீ காண்டம் 72. ஏ பிராம்மணோத்தமரே! மஹாதேவர் இந்த விஸ்வேஸ்வர நகரில் எல்லா வரங்களையும் கொடுத்துவிட்டு அந்த இடத்திலேயே மறைந்தார். 73. அப்பொழுதிலிருந்து பிராம்மணர்களுக்கு அரசனான சந்திரன் தன்னுடைய கிரணங்களைப் பரவச் செய்துகொண்டு, திக்மண்டலத்திலுள்ள அந்தகாரத்தைப் போக்கிக் கொண்டு இவ்வுலகத்தில் ஆதிபத்யம் செலுத்திக் கொண்டிருக்கிறார். 74. ஸோமவார வ்ரதம் இருப்பவர்களும், ஸோமயாகம் செய்து ஸோமபானம் பண்ணினவர்கள் ஆகியவர்கள் ஸோமப்ரபையொடு கூட விமானத்திலேறி ஸோம லோகத்தையடைகிறார்கள். 75. எவர் சந்திரனுடைய உற்பத்தியையும் தபஸ்ஸையும் பற்றிப் பக்தி பூர்வமாகக் கேட்கிறார்களோ, அவர்கள் சந்திரலோகத்தில் பூஜிக்கப்படுகிறார்கள். 76. அகஸ்தியர் கூறுகிறார்: விஷ்ணுவின் இரு பாரிஷதர்கள் இந்த ஸ்வர்க்க மார்க்கத்தில் சிவசர்மாவிற்கு மங்களமானதும் ச்ரமங்களைப் போக்கடிக்கக் கூடியதும் சுபத்தைக் கொடுக்கக் கூடியதுமான நக்ஷத்ர லோகத்தை யடைந்தார்கள். 77. ஸ்கந்த புராணத்தில் நான்காவதான காசீ கண்டத்தில் பூர்வார்த்த பாஷாடீகாவான சந்திரலோக வர்ணனம் ஈசான லோக வர்ணனமான 14வது அத்யாயம் முற்றிற்று. அத்யாயம்–15 297 அத்தியாயம் 15 அகஸ்தியமுனி கூறினார். மஹாபாகே! ஸஹதர்மிணி! பத்னீ லோபாமுத்ரே! விஷ்ணுலோகத்து இரண்டு பாரிஷதர்களும் இப்பொழுது எந்தக் கதையைக் கூறுகிறார்களோ அதை நீ கேள். 1. சிவராமன் கேட்டார்- ஓ கணங்களே அந்தச் சந்திரனின் கதை கேட்பதற்கு மிகவும் விசித்ரமாக இருக்கிறது. தாங்கள் எல்லாக் கதைகளிலும் பாண்டித்யம் அடைந்திருக்கிறீர்கள். அதனால் இந்த நக்ஷத்ர லோகத்தைப் பற்றி வர்ணித்துக் கூறுங்கள் என்றார். 2. அவர்கள் கூறுகிறார்கள் :- பூர்வ காலத்தில் ப்ரஜைகளை ஸ்ருஷ்டிப்பதற்கு அதிகம் விருப்பமுள்ள ஸ்ருஷ்டிகர்த்தாவான அயனின் கட்டைவிரலின் மேல் பாகத்திலிருந்து ப்ரஜைகளை ஸ்ருஷ்டிப்பதில் நிபுணரான தக்ஷப்ரஜாபதி உற்பத்தியானார். 3. அந்த தக்ஷருடைய தபோ ரூபமான லாவண்யத்திலிருந்து மங்களகரமான ரோஹிணி முதலிய அறுபது கன்னிகைகள் பிறந்தார்கள். 4. இவர்களெல்லாரும் விச்வநாதபுரீ (காசி) யில் வந்து தீவிர தபஸ்ஸினால் உமாஸஹித சந்திரபூஷண மஹாதேவரை ஆராதிக்கத் தொடங்கினார்கள். 5. அப்பொழுது மஹேச்வரர் ஸந்தோஷமடைந்து வரங் கொடுப்பதற்காகப் பிரஸ்ஸன்னம் ஆனார். ஸந்தோஷ சித்தத்துடன் கூறினார்- நீங்கள் உத்தமமான வரங்களைக் கேளுங்கள் என்றார். 6. அப்பொழுது அந்தக் குமாரிகள் சிவவாக்யத்தைக் கேட்டுக் கூறினார்கள். ஏ சங்கரா! எங்களுக்கு வரம் கொடுப்பீர்களானால் 7. மஹாதேவா! தங்களைவிட அதிகமாக ஸந்தாபத்தைப் போக்கடிக்கக் கூடியவரும், தங்களுக்கு 298 காசீ காண்டம் ஸமமான அழகுடையவரான ஒருவரும் எங்களுக்கு பர்த்தாவாக ஆகவேண்டும் என்றார்கள். 8. அவர்கள் எல்லோரும் வருணா நதியின் ரம்யமான கரையில் ஸங்கமேஸ்வரருக்கு ஸமீபத்திலேயே நக்ஷத்ரேஸ்வரர் என்ற ப்ரதிஷ்டையைப் பண்ணினார்கள். 9. தேவ வருஷத்தை அனுஸரித்து ஒரு புருஷ ஆயுஸ் வரைக்கும் மஹா தபஸ் செய்தார்கள். ஒரு புருஷனால் கூடச் செய்ய முடியாத தபஸ். அதன்பிறகு ஸந்தோஷமடைந்து விச்வேச்வரர் அவர்கள் எல்லோரையும் ஒரேயிடத்தில் நாட்டமுடையவர்களாகவும் ஒருவருக்கே ஏகபத்நீ விரதராய் அபிலாஷையிருக்கக்கூடிய அந்த உத்தம வரத்தைக் கொடுத்தார். 10,11. விச்வேச்வர தேவர் கூறினார்: பூர்வ காலத்தில் மற்றொரு அபலீ இங்கு மற்றொரு உக்ரமான தபஸ்ஸை ஸஹிக்க முடியாமல்போனாள் (ந க்ஷாந்தா) என்றால் ஸஹிக்க முடியவில்லீயென்று அர்த்தம். அதனால் உங்களுக்கு நக்ஷத்ரம் என்று அதே பெயரைக் கொடுக்கிறோம். 12. இந்த ஸமயம் நீங்கள் எல்லோரும் புருஷாயுஸில் செய்யக் கூடிய புருஷாயுத என்ற தபஸ்ஸைச் செய்திருக்கிறீகள். அதனால் நீங்கள் எல்லோரும் உங்கள் இச்சைப்படிக்கு புருஷரூபம் தரித்துக் கொள்ளலாம் என்ற வரத்தை கொடுக்கிறேன். 13. ஜோதிஷ் சக்கரத்திலே நீங்கள் அகர பாகத்தில் இருப்பீர்கள். மேஷம் முதலிய ராசிகளில் உற்பத்தி ஸ்தானமாகவும், நீங்கள் இருப்பீர்கள். 14. ஏ ஸுமுகிகளே! ஒஷதிகளுக்கும், அம்ருதத்திற்கும் ப்ராமணர்களுக்கும் பதியான சந்திரனால் நீங்கள் பதியையுடையவர்கள் ஆவீர்கள். 15. உங்களால் ஸ்தாபிக்கப்பட்ட நக்ஷத்ரேஸ்வரர் என்ற லிங்கத்தை பூஜிப்பதனால் மனிதர்கள் உங்கள் லோகத்தையடைவார்கள். அத்யாயம்–15 299 16. சந்திரலோகத்திற்கு மேலே நீங்கள் இருப்பதற்கு ஒரு லோகம் தயாராகும். எல்லா நக்ஷத்ரங்களினாலும் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். 17. ஜனங்கள் நக்ஷத்ரங்களை முன்னிட்டு வ்ரத நியமங்களை அனுஷ்டித்து வந்தார்களேயானால், அவர்கள் எல்லோரும் நக்ஷத்ரத்திற்கு ஸமமான ஒளியுடன் உங்கள் உலகத்தில் வஸிப்பார்கள். 18. காசியில் நக்ஷத்ரேஸ்வரரைத் தரிசனம் செய்பவர்களுக்கு ஒருபொழுதும் நக்ஷத்ரங்களினாலோ ராசிகளினாலோ, க்ரஹங்களினாலோ உபத்ரவங்கள் உண்டாகாது. 19. அகஸ்தியர் கூறுகிறார்- விஷ்ணு தேவரை பூஜிப்பவர்களான இந்த இரண்டு கணங்களும் நக்ஷத்ர லோகத்தை வர்ணித்த பிறகு சில க்ஷண நேரத்திற்குப் பிறகு சிவசர்மாவின் கண்ணிற்கு புதலோகம் தென்பட்டது. 20. சிவசர்மா கூறினார்- பகவானுடைய பக்தர்களே! ஒப்பில்லாத இந்த லோகம் யாருடையது? இந்த லோகம் சந்திர லோகத்தைப்போல வெகு அழகாக இருக்கிறதே. 21. விஷ்ணு கணங்கள் கூறினார்கள். ஸ்வர்க மார்கத்தை ஸந்தோஷமாகக் கழிக்கும் பொருட்டு பாபத்தைப் போக்குவதும் தாபத்ரயத்தை நீக்குவதுமான இந்தக் கதையை நீங்கள் கேளுங்கள். 22. நாங்கள் சற்று முன்னால் ஸாம்ராஜ்ய பதவியை அடைந்த மஹா காந்திமான் ஆன த்விஜராஜன் (சந்திரன்) கதையை உங்களுக்குக் கூறுகிறோம்- 23. அவர் ராஜஸூய யாகத்தில் மூன்று உலகங்களையும் தக்ஷிணையாகக் கொடுத்தார். ஒரு சதபத்ம வருஷம் வரைக்கும் அதி உக்ரமான தபஸ் செய்தார். 24. அவர் அத்ரி மகர்ஷியின் கண்களிலிருந்து பிறந்தார். அவர் ப்ரம்மாவிற்கு பௌத்ரர். எல்லா ஒஷதிகளுக்கும் நாதன்; ஸகல ஜோதிகளுக்கும் அதிபதி. 300 காசீ காண்டம் 25. அவர் அகில நிர்மலமான கலீகளுக்கும் பொக்கிஷம் என்று கூறுகிறார்கள். அவர் உதயமானவுடன் மற்றவர்களுடைய ஸந்தாபத்தைக் கழுத்தைப் பிடித்து வெளியேற்றிவிடுகிறார். 26. அவர் உதயமானவுடன் ஜகத்தினில் குமுதினி முதலியவைகளுக்கு ஆனந்த தானம் முதலியவைகள் பண்ணுகிறார். அவர் திக்குகளாகிய ஸுந்தரிகளின் 27. இப்படி குணாதிசயங்களை வர்ணித்துக் கொண்டே போவதினால் என்ன ப்ரயோஜனம்? ஸர்வக்ஞனான மஹா தேவரே அவருடைய கலீயை நெற்றியில் தரித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது சந்திரனுக்கு ஸமானமான யாரைக்கூற முடியும்? 28. அந்த ஸௌந்தர்யமான சந்திரன் தன்னுடைய ஐச்வர்ய மதத்தினால் மோஹித்து குருவும், புரோஹிதரும், சிறிய தந்தையின் புத்திரனான ஸஹோதரனும், அங்கீரஸ ருஷியின் புத்திரனுமான ப்ருஹஸ்பதியின் பார்யையான பரமரூபவதி தாராவை - தேவர்ஷிகளும் அநேகம் தரம் தடுத்த போதிலும் பலாத்காரமாக இழுத்துச் சென்று விட்டார். 29,30. இவர் இந்தக் கலாவதியைக் குற்றம் சொல்வதில் ஒன்றுமில்லீ. த்ரிலோசன மஹாதேவரைத் தவிர காமன் யார் மனதையும் தூண்டிக் கொண்டிருக்கவில்லீ. 31. விசேஷமாக நான்கு பக்கமும் பரவிவரும் இருட்டை விலக்குவதற்காக ப்ரம்மா, தீபமும், ஸூர்யகிரணமும் ஆகிய ஓஷதிகளை அளித்தார். ஆனால் அதிகாரப்பதவியிலிருந்து பிறக்கும் மதமாகிய அந்த இருட்டை விலக்கவில்லீ. 32. ஏனென்றால் அதிகாரப் பதவிமோஹத்தில் இருக்கும் ஜனங்களை ஹிதவார்த்தைகளோ, ஹிதத்தைச் அத்யாயம்–15 301 சொல்லும் ஹரி கதைகள்கூட ஒன்றும் செய்ய முடியாது. விபரீத புத்தியுள்ள ஜனங்கள் தீர்த்த ஸ்நானங்கள் பண்ணினால்கூட சுத்தபுத்தி அவர்களை ஸ்பர்சிக்காது. அதைப்போல இதையும் நினைத்துக் கொள்ளுங்கள். 33. ஏனென்றால் விபரீத புத்தியினால் மதமடைந்த துர்ஜனங்களுடைய நேத்ரங்கள் க்ஷணமாத்ரமயக்கத்தினால் சுழலும் விழிகளுக்கு எல்லாம் சுற்றுவது போல எல்லாம் விபரீதமாகவே தெரியும். இப்படி அஹிதத்தையே ஹிதமாக எண்ணக்கூடிய காரணமான பெரும் ஸம்பத்தைப் பெருக்குவது மிகவும் இழிவு, இழிவு. 34. ஆச்சர்யம்! காமதேவன் புஷ்பங்களையே ஆயுதமாகக் கொண்டு மூன்று உலகங்களிலேயும் யாரைத்தான் ஜெயிக்காமல் வைத்திருக்கிறான்? எவன் க்ரோதத்திற்கு வசமாவதில்லீ? லோபம் யாரைத்தான் மோஹிக்கச் செய்வதில்லீ? காமனைகளுடைய கண் பார்வையினால் கிழிக்கப்படாத இதயம் யாருக்குத்தான் இருக்கிறது? ராஜஸ்த்ரீயை அடைந்து அழகான கண்களைப் படைத்தாலும் யார் தான் குருடனுடைய பதவியில் இருக்கவில்லீ. 35.அதிகாரமும் ஐச்வர்யமுமான லக்ஷ்மி மிகவும் சஞ்சலமானவள். அவளைப்பெற்று உலகில் நல்லது கெடுதல் எவ்வளவு வேண்டுமோ அவைகளைப் பெற்றுக் கொள்ளலாம், பலனும் அதற்குத் தகுந்தபடி கிடைக்கும். அதனால் நன்னடத்தையுள்ள ஜனங்கள் தங்களுக்கு எது ஹிதமோ அதைச் செய்ய வேண்டும். 36. எப்பொழுது சந்திரன் ப்ருஹஸ்பதிக்காகத் தாராவை விடமாட்டேனென்றானோ அப்போது ருத்ரதேவர் பிநாகம் என்ற தநுஸ்ஸை எடுத்துக்கொண்டு ப்ருஹஸ்பதிக்கு ஸஹாயமாகச் சென்றார். 37. அப்பொழுது சந்திரன் ப்ரம்மசிரஸ் என்ற அஸ்திரத்தை மஹாதேவர் மீது பிரயோகித்தார். 302 காசீ காண்டம் மஹாதேவர் அந்த அஸ்திரத்தை நாசமடையும் படிச்செய்து விட்டார். 38. பரஸ்பரம் இருவருக்கும் மஹா பயங்கரமான யுத்தம் நடந்து. இதைப் பார்த்து விட்டு பிதாமஹர் காலமில்லாக் காலத்தில் ப்ரம்மாண்டம் அழிவதைப் பார்த்து மிகவும் பயந்தார். 39. அப்பொழுது பிதாமஹர் ப்ரளயகாலத்து அக்னிபோல் ஜ்வலிக்கும் மஹாதேவரைச் சரண் அடைந்து மஹாதேவரைச் சண்டையிலிருந்து விலக்கிக்கொண்டே தாராவை ப்ருஹஸ்பதியிடம் சேர்த்தார். 40. அதற்குப் பிறகு ப்ருஹஸ்பதி தாரா கர்ப்பவதியாக இருப்பதைக் கண்டு அதை வெளியாக்கி விட்டு இங்கு வா, மற்றொருவருடைய கர்பத்தைத் தரித்துக் கொண்டு என்னிடம் வரக்கூடாது என்றார். 41. அப்பொழுது தாரை ஒரு மூங்கில்புதர்கடியில் தனது கர்ப்பத்தைத் விழச் செய்துவிட்டு வந்துவிட்டாள். அந்தக் குழந்தை உற்பத்தியானவுடன் எல்லாத் தேவதைகளுடைய சரீரமும் சாந்தியிழந்து போயிற்று. 42. பிறகு ப்ரதான தேவதைகளெல்லாம் ஒன்று கூடி தாரையையழைத்து உண்மையைச் சொல்லும்படிக் கேட்டனர். அதாவது அந்த கர்ப்பம் ஸோமனுடையதா? அல்லது ப்ருஹஸ்பதியினுடையதா என்று கேட்டனர். 43. இப்படி தேவர்கள் கேட்ட பிறகும் கூட தாரை லஜ்ஜையினால் பேசாமல் தலீ குனித்து கொண்டாள். 44. அப்பொழுது அந்த அதிதேஜஸ்ஸுள்ள குமாரன் அவளுக்கு சாபம் கொடுக்கத் தொடங்கினான். அப்பொழுது ப்ரம்மா அந்தக் குமாரனைத் தடுத்து அந்த ஸந்தேஹத்தை விளக்கக் கூறினார். 45. அப்பொழுது தாரா அந்த கர்ப்பம் சந்திரனுடையது என்பதை உரைத்தாள். இதற்குப் பிறகு அத்யாயம்–15 303 ப்ரம்மாவும் சந்திரனுமாகத் தாரையின் கர்ப்பத்திலுதித்த அந்தக் குழந்தையின் புத்திசாலித் தனத்தைப் பார்த்து வியந்து புதன் என்று பெயரிட்டனர். 46.பிறகு புதன் எல்லா தேஜஸ்ஸுடன் (எல்லா தேவதைகளை விட) பலமும் புத்தியுமாக இருப்பதைக் கண்டு எல்லாரும் அதிசயித்தனர். அப்பொழுது அந்த புதன் தபஸ் செய்ய வேண்டும் என்ற நிச்சயத்துடன் சந்திரனிடத்தில் அனுமதி கோரி வந்தான். 47. விஸ்வேஸ்வரரால் பாலிக்கப்பட்ட நிர்வாண முக்தியையளிக்கவல்ல காசியையடைந்தான். அங்கு தனது பெயரால் புதேஸ்வரலிங்கம் என்று ஒரு லிங்கத்தை ஸ்தாபநம் செய்தான். 48. பாலசந்திரனைத் திலகமாக அணிந்தவருமான உமாபதியை ஹ்ருதயத்தினால் த்யானித்துக் கொண்டு பதினாயிரம் வருஷம் கோர தபஸ் செய்தான். 49. பிறகு விச்வபாவனனான விஸ்வநாத பகவான் புதேஸ்வரர் என்ற மஹாலிங்கத்தில் ஆவிர்பவித்தார். 50. அந்த ஜ்யோதிரூபமான மஹேச்வரர் புதனிடம் ஏ மஹா புத்திசாலியே! தேவதோத்தமனான புதனே; வேண்டும் வரத்தைக் கேள் என்றார். 51. ஏ! ஸௌம்யா! உன்னுடைய தபஸ்ஸினாலும், இந்த லிங்கத்தைப் பூஜித்ததினாலும் நான் மிகவும் ஸந்தோஷமடைந்தேன். உனக்குக் கொடுக்கக் கூடாதது என்று என்னிடம் ஒன்றுமில்லீ. வேண்டும் வரம் தருகிறேன் என்றார். 52. புதனும் வாடும் பயிருக்குப் பெய்யும் மழையைப் போன்ற அமுதசுரபியை வர்ஷிக்கும் மேகத்திற்கு சமானமான அந்த கர்ஜனையைக் கேட்டு 53. கண்களைத் திறந்து பார்க்கும்பொழுது லிங்கத்தில் சந்திர சேகர பகவான் ஆவிர்பவித்திருப்பது கண்டான். 304 காசீ காண்டம் 54,55,56. உடனே புதன் இவ்வாறு ஸ்துதி செய்யத் தொடங்கினான். ஏ பவித்ரா! ஆத்ம ஸ்ரூபா! உமக்கு நமஸ்காரம். ஜ்யோதி! உமக்கு நமஸ்காரம்; விஸ்வரூபா! விஸ்வஸ்வரூபா! உமக்கு நமஸ்காரம். ரூபாதீதரே! உமக்கு நமஸ்காரம், ஹே ப்ரணதார்த்திஹர! உமக்கு நமஸ்காரம், ஏ சிவஸ்வரூபா! ஏ ஸர்வ சாரணஸ்வரூபா! உமக்கு நமஸ்காரம், ஏ தயாளோ! உமக்கு நமஸ்காரம். ஏ! பக்தி மாத்ரமே லக்ஷ்யமாக உடையவரே! உமக்கு நமஸ்காரம். ஏ! தபஸ்ஸின் பலனையளிக்கும் தபோரூபா! உமக்கு நமஸ்காரம்; 57. ஏ சம்போ! சிவா ஹே சிவாகாந்தா! ஸ்ரீகண்டா, சூலபாணே! சசிசேகரா! ஸர்வேசா! ஈசா! சங்கரா! ஈஸ்வரா! தூர்ஜடே!, 58. பினாகபாணே! கிரீசா! சிதிகண்டா! ஸதாசிவா! தேவ தேவா! உங்களுக்கு நமஸ்காரம். 59. ஏ ஸ்துதிப்ரிய! எனக்கு ஸ்துதிக்கத் தெரியாது. ஏ மஹேஸ்வர! உமது சரணாரவிந்தங்களில் எனக்கு இடையூறில்லாத பக்தியைத் தாருங்கள். 60. ஹே ஈஸ்வர! தாங்கள் என்னிடம் க்ருபையுடையவராக இருப்பீர்கள். இந்த வரத்தைத் தாருங்கள், ஏ கருணாம்ருத ஸாகர! நான் தங்களிடம் வேறு வரங்கள் கேட்கவில்லீ. 61. மஹாதேவர் புதன் இவ்வாறு துதிப்பதைப் பார்த்து ஸந்தோஷமடைந்து கூறினார் :- ஏ ரோஹிணீ புத்ர! (சந்திரனுக்குப் புதனே முதலாவது குழந்தை. (சந்திரனுடைய மனைவிகளான இருபத்திஏழு பேரில் ரோஹிணிக்கு மாத்திரம்தான் குழந்தை பிறந்திருக்கிறது. அதைப் புஷ்டியாக்குவதற்காகத்தான் ரோஹிணீ புத்ரா! என்றார். ஏ மஹாபாகா, ஸௌம்யா, மதுரமாகப் பேசுபவனே புதனே! அத்யாயம்–15 305 62. நக்ஷத்ர லோகத்திற்கப்பால் உன்னுடைய லோகமிருக்கும்; அதில் மற்ற க்ரஹங்களைவிட அதி உத்தமமான பூஜையைப் பெறுவாய். 63. உன்னால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த லிங்கம் எல்லோருக்கும் அதிபுத்தியைக் கொடுக்கக் கூடியதாயும், துர்புத்தியை நாசம் செய்வதாயும் உன்னுடைய லோகத்தில் வஸிக்கும் யோக்யதையைக் கொடுக்கட்டும். 64,65. இவ்விதம் சொல்லி சம்புபகவான் லிங்கத்திலேயே மறைந்தார். புதனும் தன்னுடைய உலகத்துக்குச் சென்றான். காசியில் புதேஸ்வர மஹாலிங்கத்தைப் பூஜித்தால் அடையும் புத்தியினால், நரர்கள் ஆழம் காணமுடியாத ஸம்ஸார ஸாகரத்தில் வீழ்ந்து மூழ்கமாட்டார்கள். ஸாதுஜனங்களுடைய நேத்ரத்தில் சந்திரனுக்குத் துல்யமான காந்தியடைந்து, அழகிய உடலோடு கூட புதலோகத்தில் வஸிப்பார்கள். சந்த்ரேச்வரருடைய கிழக்குப் பக்கத்தில் இருக்கும் புதேச லிங்கத்தைத் தரிசனம் பண்ணினால் ஒருவரும் அந்திமகாலத்தில் புத்தியை இழக்கமாட்டார்கள். இப்பொழுது விஷ்ணு பக்தர்கள் புத லோகக் கதையைச் சொல்லி கொண்டிருக்கும் பொழுது விமானம் அதி உத்தமமான சுக்ர லோகத்தைப் போய்ச் சேர்ந்தது. இவ்விதம் கந்தபுராணத்தில் நான்காவதான காசி கண்டத்தில் பூர்வார்த்த பாஷாடீகாவான நக்ஷத்ரலோகம், புதலோக வர்ணனம் ஆகிய பதினைந்தாம் அத்யாயம் முற்றிற்று. 306 காசீ காண்டம் அத்யாயம் 16 மஹாபுத்திசாலியான சிவசர்மாவுக்கு, விஷ்ணுகணங்கள் கூறினார்கள்-- இந்த சுக்ரலோகம் மிகவும் அற்புதமானது, இங்கு தைத்ய தானவர்களாகிய கவிஞர்களின் குரு வஸிக்கிறார். இந்த சுக்ர பகவான் அதிக கஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய வைக்கோலின் ஈகையை மாத்திரம் குடித்துக்கொண்டு ஆயிரம் வருஷ பர்யந்தம் மஹாதேவனை ஆராதித்து ம்ருத ஸஞ்ஜிவிநீ என்ற மஹாவித்யையை அடைந்தார். மிகவும் கடினமான இந்த வித்யையை தேவாசார்யரான ப்ருஹஸ்பதி பகவான் கூட அறியமாட்டார், இந்த வித்தையை மஹாதேவரும், பார்வதியும், கணேசனும், கார்த்திகேயனும் மாத்திரம்தான் அறிவார்கள். சிவசர்மா கேட்டார், இவர் யார்? சுக்ரர் என்று ப்ரசித்தி பெற்றவரா? அவருடைய உத்தம லோகமா இது? அவர் எதற்காக ம்ருத்யுஞ்ஜயரிடம் இருந்து ம்ருதஸஞ்ஜீவினி வித்தையைக் கற்றார்? இரண்டு பேர்களுக்கும் என்னிடம் ப்ரீதியிருந்தால் சொல்லுங்கள் என்றார். பிறகு அந்த விஷ்ணு தூதர்களிருவரும் சுக்ரதேவனின் மேன்மையான கதையைச் சொல்லத் தொடங்கினார்கள். இதை ச்ரத்தையோடுக் கேட்டால் அகால மரணம் ஏற்படாது. கணங்கள் கூறினார்கள் :- எளிதில் பிளக்க முடியாத கிரிவ்யூஹம், வஜ்ரவ்யூஹம் ஆகிய இரண்டிற்கும் யஜமானர்களான அந்தகன், அந்தகாரி இருவருக்கும் யுத்தம் ஏற்பட்டது. ஒரு தடவை அந்தகன் ரணபூமியிலிருந்து ரதத்தில் கிளம்பி சுக்ரதேவரைப் பார்க்க வந்தான். அவரை வணங்கிவிட்டுக் கூறினான்- அத்யாயம்–16 307 பகவன்! நாங்கள் தங்களை ஆச்ரயித்தவர்கள், தங்களுடைய க்ருபையினால் ருத்ரர், உபேந்திரர் ஆகிய கணங்களை அவர்களுடைய அநுசரர்களுடன் கூட துரும்புக்கு ஸமமாய் மதித்து வந்தோம். குருவே! தங்களுடைய அனுக்ரஹத்தினால் தேவதைகள் ஸிம்மத்தைக்கண்ட யானையைப் போலும் கருடனைக் கண்ட ஸர்ப்பம் போலும் பயப்படுகிறார்கள். தாபத்தால் தவிக்கும் ஜனங்கள் குளத்தில் இறங்குவதைப் போல தைத்யதானவ கணங்கள் தேவர்களுடைய முதற்படையைக் கலங்கச் செய்து விட்டு பேதிக்க முடியாத வஜ்ரவ்யூஹம் வஹித்து அதனுள் ப்ரவேசித்தார்கள். பிராம்மணேந்த்ரா! நாங்கள் எல்லோரும் தங்களை ரக்ஷகராக அடைந்து பர்வதங்களைப் போன்ற சலியாத மனதோடு கூடி கோரயுத்தத்தில் ப்ரவேசித்து சங்கையில்லாமல் உலாவிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எல்லோரும் புத்திரர்களுடன் கூடவிச்வாசத்துடனும் ச்ரத்தையுடனும் ஸுகத்தைக் கொடுக்கக் கூடிய தங்கள் சரணங்களின் சிச்ரூஷையில் இரவும் பகலுமாக ஈடுபட்டிருந்தோம். ஏ! விப்ரா! தங்களைச் சரண் அடைந்த எங்களை எல்லாவிதத்திலும் ரக்ஷியுங்கள். பாருங்கள், குண்டன், ததுண்டன், குஜம்பன், ஜம்பன், பாக்கன், கார்த்தஸ்வரன், விபாகன், பாகஹாரி, சந்த்ரதமனன், சூரன், வீரன், அமரவிதாரணன்-15. இவர்களை ம்ருத்யுவை ஜயித்த கோரமான (ப்ரமதகணங்கள்) சிவகணங்கள் ஆக்கிரமித்து பாமர ஜனங்கள் சந்தனமரத்தை எப்படி அனாயாஸமாக வெட்டி வீழ்த்துகிறார்களோ,அப்படி எங்களை வீழ்த்துகிறார்கள். பூர்வ காலத்தில் தாங்கள் புகையை மாத்திரம் குடித்து ஆயிரம் வருஷம் எந்த மேலான தபஸ்ஸைச் செய்து பலன் 308 காசீ காண்டம் அடைந்தீர்களோ அதனை வெளியிடும் ஸமயம் வந்துவிட்டது இப்பொழுது அந்த வித்தையினுடைய பலனை உபயோகித்து காயமடைந்த அசுரர்களை, எழுப்புவதை ஸகல பூதகணங்களும் தைத்யர்களின் உருவில் பார்க்கட்டும். ஸ்திரபுத்தியுடைய பார்க்கவமுனி அந்தகனுடைய இந்த வசனத்தைக் கேட்டுக் கொஞ்சம் சிரித்துக்கொண்டே அந்த தானவேசனிடம் கூறினார்- ஏ! தானவராஜன்! நீ கூறியது முற்றிலும் உண்மை. தானவர்களுக்கு வேண்டியே நான் இவ்வித்தையைக் கற்றேன் ஆயிரம் வருஷ காலங்கள் மிகவும் ஸஹிக்க முடியாததான உமிப்புகையைப் பானம் செய்து நான் பந்து ஜனங்களுக்கு மிகவும் ஸுகத்தைக் கொடுக்கக்கூடிய இந்த வித்தையை மஹா தேவரிடமிருந்து அடைந்தேன். நான் இந்த வித்தையினால் ரணஸ்தலத்தில் ப்ரமத (பூத) கணங்களினால் காயமடைந்த அசுரர்களை வாடியபயிருக்கு உயிரூட்டும் மேகத்தைப்போல எழுப்பி நிற்க வைப்பேன். ராஜன்! இதே வேளையில் நாளை நீங்கள் தூங்கி எழுந்தவுடன் இந்த இறந்த தானவர்களைக் காயமில்லாமலும் வேதனையில்லாமலும் ஆரோக்யமாக எழுந்து நிற்பதையும் காண்பீர்கள். கவி தைத்ய அரசரிடம் இவ்வாறு கூறிவிட்டு ஒவ்வொரு இறந்து போன அரசர்களையும் உத்தேசித்து மந்திரித்து ஜபிக்கத் தொடங்கினான். ஸம்பிரதாயங்கள் சிதில மடைந்து மறதி உண்டானவுடன் திரும்பவும் எப்பவும் அப்யாஸம் செய்வதனால் வேதம் எப்படி ஸ்பஷ்டமாக வருகிறதோ, அத்யாயம்–16 309 மற்ற காலங்களிலெல்லாம் மறைந்திருக்கிற மழைத் துளிகள், ச்ரத்தையுடன் பிராம்மணர்களுக்குக் கொடுத்த தானம் பெரிய பெரிய ஆபத்துக் காலங்களில் பலனைக் கொடுக்கும் ரூபமாக வருகின்றனவோ, அதுபோலவே இறந்து கிடந்த அஸுரர்கள் தங்கள் தங்கள் அஸ்திரங்களுடன் எழுந்து நின்றார்கள். துகுண்டன் முதலான மஹா அஸுரர்கள் எழுந்திருப்பதைப் பார்த்துவிட்டு மற்ற அஸுரர்கள் ஜலம் நிறைந்த மேகத்தைப்போல் கர்ஜிக்கத் தொடங்கினார்கள். சிவகணங்கள் இந்த இறந்ததானவர்கள் சுக்ரனால் மறுபடியும் பிழைத்து எழுந்திருப்பதைப் பார்த்துவிட்டு தங்களுக்குள் ஆலோசனை செய்தார்கள். இந்த ஸமாசாரத்தை நமது மஹா தேவரிடம் கூறவேண்டும் என்று நினைத்தார்கள். அதன் பிறகு ப்ரமதாதிபதிகள் (சிவகணங்கள்) ஆச்சர்யமான இந்த யுத்த யக்ஞத்தை ஆரம்பித்த பிறகு பார்கவன் என்னும் சுக்ராசாரியரின் இந்த வேலீயைப் பார்த்துவிட்டு சிலாதரின் புத்ரனான நந்தி மஹோசரிடம் சென்றார்கள். அப்பொழுது நந்தி 'ஜெயஜெய' என்று கோஷமிட்டுக்கொண்டு மஹாதேவனிடம் சொன்னார்- மஹாதேவா! இந்த்ராதி தேவர்களை விட மலீ போன்ற இந்த சுத்த கர்மத்தை நாங்கள் எல்லா கணநாயகர்களும் செய்தோம். இதை பார்க்கவன் திடீரென்று ம்ருத சஞ்ஜீவினீ மந்த்ரத்தை ஜபித்து யுத்தத்தில் வீழ்ந்த அஸுரர்களை (சத்ருக்களை) உயிர்ப்பித்து விளையாடி வீணாகச் செய்கிறார். துகுண்டன், குண்டன், குஜம்பன், ஜம்பன், விபாகன், பாகன் முதலிய மஹா அசுரர்கள் இமாலயத்திலிருந்து திரும்பி வந்து இன்று ப்ரமதகணங்களை மிகவும் உபத்ரவித்துக் கொண்டு திரிகிறார்கள். 310 காசீ காண்டம் பார்க்கவன் இப்படியாகத் திரும்பத் திரும்ப அசுரகணங்களை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தாரானால், மஹேசா! எங்களுக்கு எப்படி ஜெயம் கிட்டும்? கணநாயகர்கள் எப்படி இளைப்பாறுவார்கள்? ப்ரமதகணங்களின் நாயகரான நந்தித்தேவர் இவ்வாறு கூறினவுடன் ப்ரமதாதி மஹாராஜ் மஹேச்வரன் சிரித்துக்கொண்டு இவ்வாறு கூறினார்- ஏ! 'நந்தி' விரைவாகச் சென்று, கழுகு, மாடப்புறாவை எப்படி விரைவாகப் பிடிக்கிறதோ - அப்படி அஸுரர்களுக்கு மத்தியில் இருக்கும் அந்த ப்ராம்மணோத் தமரைத் தூக்கி வாரும் என்றார். வ்ருஷபத்வஜர் இவ்வாறு கூறினதும் வ்ருஷபசிம்மமான நந்த கர்ஜனை செய்து கொண்டு வெகு வேகமாக எங்கு ப்ருகு வம்ச குலவிளக்கான சுக்ரர் இருக்கிறாரோ - அந்த ஸேனையின் மத்தியில் நுழைந்து சென்றார். ஸகல அசுரர்களினாலேயும், பாசம், கட்கம், வ்ருக்ஷம், கற்கள், பர்வதம் இவைகளைக் கையில் எடுத்துக்கொண்டு பாதுகாத்துக் கொண்டிருக்கிற அந்தக் காவிய மணியை தைத்ய கணங்களை அதிரச் செய்து விட்டு பலவானான நந்தி சரபக்ஷியானையைத் தூக்கிச் செல்வதுபோல வேகமாக தூக்கிக் கொண்டு வந்து விட்டார். நழுவும் ஆடையுடனும் சிதறும் ஆபரணங்களுடனும் அவிழ்ந்த தலீமயிருடன் நந்தியால் பிடிக்கப்பட்ட சுக்கிரனை விடுவிக்கும் பொருட்டுத் தானவர்கள் சிம்மநாதம் செய்து கொண்டு நந்திக்குப் பின் ஓடத் தொடங்கினார்கள். அப்பொழுது அந்த தானவக் கூட்டம் மேகமண்டலத்தைப் போல் நந்திகேஸ்வரரின் நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்டு அவர் மேல் வஜ்ரம் கட்கம், கோடாரி அநேகவிதமான சக்ரங்கள் பாஷாணம், அத்யாயம்–16 311 கம்பனாஸ்திரம் இவைகளை வேகமாக வர்ஷிக்கத் தொடங்கினர். அந்த கணாதிபனான நந்தி நடந்து கொண்டிருக்கும் இந்த மஹா யுத்தத்தில் சத்ரு ஸைன்யங்களை வருந்தச் செய்து முகத்திலிருந்து அக்னியை வர்ஷித்து நூற்றுக்கணக்கான அஸ்திரங்களை எரித்துவிட்டு பார்கவரைத் தூக்கிக் கொண்டு மஹாதேவருக்கு முன்னால் வந்தார். உடனே சிவனிடம் விண்ணப்பித்துக் கொண்டார். இதோ அந்த சுக்ரன் என்றார். அப்பொழுது தேவதேவன் பவித்ரமான பக்தர்களின் நைவேத்யத்தை க்ரஹிப்பதுபோல் சுக்ரனை வாங்கிக் கொண்டார். அப்பொழுது அந்த பூதபதி ஒன்றுமே கூறாமல் பழத்திற்கு சமானமாக அந்த சுக்கிரனை வாயில் போட்டுக் கொண்டார். அப்பொழுது அந்த எல்லாதைத்யர்களும் 'ஆஹா ஹீ ஹீ, ஹோ ஹோ, என்று உச்ச ஸ்வரத்தில் கத்தத் தொடங்கினார்கள். கிரிஜாபதி சுக்ரனை விழுங்கியவுடன் அசுரகணங்கள் ஜயத்தில் நம்பிக்கையிழந்தனர். அப்பொழுது தும்பிக்கையில்லாத யானை போலவும், கொம்பில்லாத ரிஷபத்தைப் போலவும் சரீரம் இல்லாத உயிர்கூட்டத்தைப் போலவும் அத்யயனம் இல்லாத பிராம்மணர்களைப் போலவும் முயற்சி இல்லாத பிராணிகள் எப்படி பாக்யமில்லாமல் போகிறதோ; அதைப் போலவும். பதியையிழந்த ரமணியைப் போலவும் இறகை இழந்த பாண ஸமூஹங்களைப் போலவும், புண்ணியம் க்ஷீணித்த ஆயுளைப் போலவும் நடத்தை கெட்டவனுடைய சாஸ்த்ராதி படனத்தைப் போலவும், ஒரு வைபவ சக்தியில்லாவிட்டால், அதாவது பாக்யமில்லா விட்டால் செய்யும் காரியமெல்லாம் நிஷ்பலமாகுமே அது போல் அந்த அஸுரக் கூட்டம் பிராம் 312 காசீ காண்டம் மணோத்தமரில்லாத (சுக்ரனில்லாமல்) ஜயித்ததால் நம்பிக்கையிழந்தவர்களானார்கள். நந்தி சுக்ரனைத் தூக்கி வந்ததும் ஹாலாஹல விஷத்தைக் குடித்தவரான பரமசிவன் அவரை விழுங்கியதும் யுத்தத்தில் உற்சாகம் இழந்த அசுரகணங்கள் வருத்தத் தொடங்கினார்கள். அவர்கள் அப்படி உற்சாகமிழக்கவே, அந்தகன் கூறினான்- மிகுந்த பராக்ரமம் உள்ள நந்தியால் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். இப்பொழுது நாம் எல்லோரும் சரீரத்தை இழந்த ப்ராணனைப்போல தைர்யம், வீர்யம், உற்சாகம், பராக்ரமம் இவைகளெல்லாவற்றையும் ஒரேடியாக பார்க்கவனுடன் இழந்து விட்டோம். நமது குலத்துக்கு பூஜ்யரானவரும் விப்ரகுலச்ரேஷ்டரும், ஸர்வ ஸமர்த்தரும் ஆபத்து ஸமயங்களில் ரக்ஷிப்பவருமான, நமது ஒரே ஒரு குருவான அவரை நம்மால் பாதுகாக்க முடியவில்லீயே - ஐயோ இழிவு இழிவு. எது நடந்ததோ அது நடந்து விட்டது. இப்போது தைரியத்தைக் கையில் பிடித்துக்கொண்டு சத்ருக்களுடன் கூட யுத்தம் செய்வோம். நான் நந்தியுடன்கூட ஸகலப்ரமத கணங்களையும் கொல்லுவேன். இன்று இந்த்ராதி தேவர்களெல்லோரையும் அவர்களுக்கு வேறுவழியிலாலாமல் ஆக்கி விட்டு, அவர்களைக் கொன்று, சுக்ர பகவானை - யோகியர்கள் ஜீவனை கர்ம பந்தனத்திலிருந்து விடுவிப்பது போல நாம் சுக்ர பகவானை விடுவிப்போம். ஒரு கால் அந்தப்பிரபு யோகியானவர் யோக பலத்தினால் சிவனுடைய சரீரத்திலிருந்து வந்து விட்டாரானால் மீதியிருக்கும் நம் எல்லோரையும் காப்பாற்றுவார். அந்தகனுடைய இந்த வார்த்தைகளைக்கேட்டு தானவ கணங்கள் மேகத்தைப்போல கர்ஜித்துக் கொண்டு நமக்கு அத்யாயம்–16 313 மரணம் நிச்சயம் என்ற உறுதி கொண்டு சிவகணங்களை உபத்ரவிக்கத் தொடங்கினார்கள். ஆயுள் இருக்கும் மட்டிலும் ப்ரமதகணங்கள் நம்மைக் கொல்ல முடியாது. பின் நமது ஆயுள் குறைந்து விட்டால் நமது ஸ்வாமியை யுத்தகளத்தில் விட்டுவிட்டு ஓடுவதில் என்ன பிரயோஜனம்? மதிக்கக் கூடிய ஜனங்கள் தங்கள் யஜமானரை ரணகளத்தில் விட்டு விட்டு ஓடிப் போவார்களானால் அந்ததாமிஸ்ர நகரத்தில் விழுவார்கள். நமக்குக் கிடைக்கும் சுகீர்த்தியை அபகீர்த்தியாக மலினமாக்கி விட்டு நாம் யுத்த களத்திலிருந்து ஓடுவோமானால் இந்த லோகத்திலும், பரலோகத்திலும் நமக்கு ஸுகம் கிடையாது. புனர் ஜன்மமாகிற மறுபிறவி அழுக்கை நீக்கும் ரணக்ஷேத்ரத்தில் அஸ்த்ரதாரை, (சரவர்ஷம்) என்னும் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வோமானால் அவர்களுக்கு வேறு தீர்த்த ஸ்நானத்தினால் என்ன பிரயோஜனம்? அஸுர கணங்கள் இப்படி யோஜித்து யுத்தத்திற்கு ஆயத்தமாக தனுஸ்ஸை டங்கார சப்தம் செய்து யுத்தத்தில் சிவகணங்களை நசுக்க ஆரம்பித்தார்கள். அங்கு சிவகணங்களும் தைத்யகணங்களும் ஒருவருக்கொருவர் பாணம், வாள், வஜ்ராயுதங்கள், கடகட என்னும் சப்தம் செய்யும் பீரங்கிகள், புசுண்டில கேடயங்கள் சக்தி (வேல்) ஈட்டி, கோடரி கட்கம், பட்டீசம், சூலம், தடிகள், உலக்கைகள் இவைகளால் அடிக்கு ப்ரதி அடிகொடுத்துக்கொண்டு கோரமான யுத்தம் செய்தார்கள். வேகமாய் இழுக்கப்பட்ட தனுஸ்ஸின் சப்தம், விர்ரென்று இழுக்கும் பாணங்களுடைய சப்தம், பிண்டி, பாலம் புசுண்டி இவைகளின் சப்தமும், சிம்மநாதமுமாக கோரமாக சப்தம் போட்டனர். 314 காசீ காண்டம் தனுஷ்களின் டங்காரமும் யானைகளின் கர்ஜனையும் குதிரைகளின் கனைப்பும் ஒரே கோலாகலமாக சப்தத்தை எழுப்பின. ஆகாயத்துக்கும் பூமிக்கும் மத்தியில் எதிரொலி எழும்பிற்று. கோழைகளுக்கும், வீரர்களுக்கும் மயிர் சிலிர்ப்பு உண்டாயிற்று. இரண்டு பக்கத்து ஸைன்யங்களுடைய காதுகளும் குதிரைகள், யானைகள் இவைகள் போடும் சப்தத்தினால் பிளந்தன. கொடிகள் ஆலவட்டங்கள் எல்லாம் விழத் தொடங்கின. கொஞ்சம் நஞ்சம் அஸ்திரங்கள் எல்லாம் பொடிந்தும், தகர்ந்தும் விழுந்தன. குதிரை, யானை, ரதம் இவைகளெல்லாம் ரதத்தார் வீழ்ந்தனால் சித்திரத்தில் எழுதியதுபோல் விளங்கின. எல்லோரும் தாஹத்தினால் மூர்ச்சையடையத் தொடங்கினார்கள். அப்பொழுது அந்தகன் பார்த்தான். சிவகணங்களால் தன்னுடைய சேனைகள் இங்கும் அங்கும் ஓடுவதைப் பார்த்துவிட்ட, தானும் ரதத்தில் ஏறி விரட்டத் தொடங்கினான் அப்பொழுது சிவகணங்கள் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட பர்வதங்கள் போலும், கொடுங்காற்றினால் ஜலம் இல்லாத மேகம் போலவும், அந்தகாசுரனுடைய பாணங்களினால் நஷ்டமடையத் தொடங்கின. அந்த சமயத்தில் அந்தகன் போகிறவர்களையும் வருகிறவர்களையும், தூரத்தில் இருப்பவர்களையும், அருகில் இருப்பவர்களையும் ஒவ்வொருவரையும் நன்றாகப் பார்த்து ஒவ்வொருவருடைய ரோமக்காலுக்கு சரியாக ஒவ்வொரு பாணமாக விடத் தொடங்கினான். மஹாபலசாலிகளான கணேசர், கார்த்திகேயர். நந்தி, ஸோம நந்தி, நைகமேயர், ஸாஹகன், விசாகன் ஆகிய உக்ர வீரர்களும் த்ரிசூலங்களினாலும், பாணங்களினாலும் வர்ஷ தாரையைாகப் பொழிந்து அந்த அசுரனை அந்தகன் ஆக்கிவிட்டார்கள். அத்யாயம்–16 315 அதன் பிறகு இருதரப்பு சைன்யங்களுடைய கோலாஹலமான சப்தங்கள் வானையளாவின. அந்தப் பெரிய சப்தத்தினால் சிவனுடைய உதரத்தில் இருக்கும் சுக்ரன் வெளியில் போவதற்கு விரும்பி எங்கேயாவது த்வாரம் இருக்கிறதா என்று சுற்றி சுற்றிப் பார்த்து ஆச்ரயமில்லாதக் காற்றைப் போல சுற்றி சுற்றி வந்தார். அப்படி வரும்பொழுது அந்த ருத்ரருடைய வயிற்றில் பாதாளத்ததையும் சேர்த்து ஏழு லோகத்தையும் கண்டார். ப்ரம்மா, நாராயணன், ஆதித்யன், இந்திரன் அப்ஸரஸ்ஸுகளுடைய சித்ர விசித்ரமான உலகங்களையும், இப்பொழுது நடக்கும் அசுரசிவ கணங்களுடைய யுத்தத்தையும் பார்த்தார். இந்த விதமாக மஹாதேவரின் வயிற்றில் நூறு வருஷ பரியந்தம் - சுற்றிச் சுற்றி நான்கு பக்கங்களில் பார்த்தும் கூட வெளியில் செல்வதற்கு ஒரு சிறு த்வாரம் கூட அவனால் கண்டுபிடிக்க முடியவில்லீ. பாறையுள்ள துளையைப் பார்க்க முடியுமா? கபடனின் நெஞ்சை எப்படி ஆழம் காண முடியாதோ, அதுபோல மஹாதேவரின் வயிற்றிலிருந்து வெளிவர ஒரு துவாரம் கூட சுக்ரனால் பார்க்க முடியவில்லீ. அதன் பிறகு பார்க்கவன் சிவயோக பலத்தினால் சிவனுடைய விர்யமாகப் பரிணமித்து; மஹாதேவனை நமஸ்கரித்தார். ஏ ப்ருகு நந்தனா! நீ சுக்லரூபமாக வந்தாய். அதனால் உன் பெயர் இனிசுக்ரன் என்றிருக்கட்டும். நீ இப்பொழுது எனது வீர்யத்திலிருந்து வந்ததால் எனது புத்ரனாகிறாய் நல்லது. இப்போது நீ போ, சுக்ரன் வயிற்றிலிருந்து வெளி வந்தபொழுது மஹாதேவன் மிகவும் ஸதோஷப்பட்டார். ஏனென்றால் இந்தப் பிராம்மணன் வயிற்றில் சுற்றி சுற்றி வந்து தன் வயிற்றிலேயே இறந்து விட்டால் ப்ரம்மஹத்தி தோஷமாகுமே. மஹாதேவர் இப்படிக் கூறியவுடன் சூரியனைப்போல் பிரகாசிக்கின்ற சுக்ர பகவான் இருண்ட 316 காசீ காண்டம் மேகத்தினுள் சந்திரன் ப்ரகாசிப்பதுபோல் தைத்ய சேனை மத்தியில் ப்ரவேசித்தார். தானவ ஸேனைகள் அதிகாலீயில் சூர்யோதயம் ஆனது போலவும், சந்திரன் உதயமானதும் அலீகள் மாலீகளாகவுடைய ஸமுத்ரம் கோஷிப்பது போல் கோஷமிட்டார். அந்தகனும் அந்தகாந்தகனும் சிவகணங்களுடன் யுத்தம் பண்ணின சமயம் பார்க்கவநந்தனன், இந்த விதமாக சுக்ரன் என்ற பெயர் பெற்றான். ஓ 'ப்ராம்மணா'!! எந்த விதமாக சுக்ரன் சிவனுடைய அனுக்ரஹத்தினால் ம்ருதஸஞ்ஜீவினி என்ற வ்ருத்தாந்தத்தைச் சொல்கிறோம் என்று விஷ்ணு பக்தர்கள் கூறினார்கள். பூர்வ காலத்தில் ப்ருகு நந்தனன் என்ற சுக்ரபகவான் அண்டஜம், ஸ்வேதஜம், உத்பிஜம், ஜராயுஜம் இந்த நான்குவித பிராணிகளுக்கும் கதியைக் கொடுக்கக்கூடிய வாராணஸிபுரி சென்று சிவலிங்கத்தைப் ப்ரதிஷ்டை செய்து அதற்கு முன்னால் கிணறும் தோண்டி வைத்து அதற்கு முன்னால் பிரபு விஸ்வேஸ்வரரைத் தீவிரமாக த்யானம் செய்து கொண்டு நெடுநாட்கள் வரை தபஸ் செய்தார். ராஜ செம்பகம், செம்பகம், அரளி, இருவாக்ஷி பிச்சி வெண்தாமரை, செந்தாமரை, முல்லீ, கதம்பம், வில்வம், ஸிந்தூரபுஷ்பம், பலாசபுஷ்பம், அசோக புஷ்பம், புன்னாகபுஷ்பம், நாககேசரபுஷ்பம், சிறுமல்லிகை, பாடலிபுஷ்பம், ரோஜா, கொடிசம்பகம், நவமல்லிகை, இருவாக்ஷி, மந்தாரம், துளஸி, மகிழம்பூ, தமனகம், பாரிஜாதம், மாம்பூ; தேவகாந்தாரி, பெரிய வில்வம், அருகம்புல், தமகம், ஸால புஷ்பம், தேவதாரு புஷ்பம், அரளி முதலியன அன்னிய விதமான நூற்றுக்கணக்கான விதம்விதமான புஷ்பங்கள், தளிர்களினால் ஒவ்வொன்றாகப் போட்டு சங்கரரை அர்ச்சித்துப் பூஜை புரிந்தார். அத்யாயம்–16 317 அருகம்புல், ஜலம், பஞ்சாம்ருதம், சந்தனம் இவைகளால் மஹாதேவருக்கு லக்ஷம் தரம் அபிஷேகம் செய்தார். பிறகு தேவேசருக்கு வாசனைத்ரவ்யங்கள் ஸமர்ப்பித்து சந்தநாக முதலிய த்ரவ்யங்களை மிகவும் பயபக்தியுடன் ஆயிரம் தடவை தடவினார். பிறகு நிருத்யம், கீதம் முதலியவைகளை ஸமர்ப்பித்து, வேதோக்த ஸ்துதிகளாலும், அன்னிய ஸஹஸ்ரநாமங்கள் முதலிய நானாவித ஸ்துதிகளினாலும் மிகவும் போற்றினார். சுக்ரன் இந்தவிதமாக மஹாதேவனை ஐயாயிரம் வருஷங்கள் வரை ஆராதித்தார். இவ்வளவு செய்தும் கூட மஹாதேவர் ப்ரஸன்னமாகி தரிசனம் கொடுக்கவில்லீ. இதைப் பார்த்துவிட்டு வேறுவிதமான கஷ்ட ஸாத்யமான கோர நியமத்தை அனுஷ்டிக்கத் தொடங்கினார். இந்திரியக் கூட்டங்களுடன் கூட சித்தத்தை சஞ்சலம் என்னும் ஜலத்தினால் பாவனாரூபமாகக் கரைத்துவிட்டு அடிக்கடி அலம்பி, நிர்மலசித்த ரூபமான ரத்னத்தைப் பினாகி தேவருக்கு அர்ப்பணித்து ஸஹஸ்ரவருஷம் வரைக்கும் உமிப் புகையைக் குடித்துக் கொண்டு விரதம் இருந்தார். அப்பொழுது மஹாத்மா பார்க்கவரிடம் மிகவும் ஸந்தோஷமடைந்தார். ஸாக்ஷாத் தாக்ஷாயணியின் பதி விரூபாஷர் ஆயிரம் சூரியர்களுடன் அதிக தேஜஸ்ஸுடன் அந்த லிங்கத்தில் ஆவிர்பவித்து ஏ பார்க்கவா, 'நான் ஸந்தோஷமடைந்தேன். வேண்டியவரம் கேள்' என்றார். கமலத்தைப் போன்ற அழகிய கண்களையுடைய அந்தப் பிராம்மணன் சிவபெருமானின் இந்த வார்த்தைகளைக் கேட்டு புளகாங்கிதமடைந்து, மலர்ந்த கண்களுடையவராய், 318 காசீ காண்டம் சென்னிமேல் கரங்குவித்து ஜெயஜெய என்ற ஸந்தோஷத்துடன் அஷ்டமூர்த்தியான மஹா தேவரைஸ்தோத்திரம் செய்யத்தொடங்கினார். ப்ருகு நந்தன் கூறினார். 'ஏ ஜகதீசா' உங்களுடைய இந்த ஜோதிப்ரகாசத்தினால் அந்தகாரத்தை விலக்கி நிசாசரர்களுக்கும் இஷ்ட வஸ்துக்களை த்வம்ஸம் பண்ணினீர்கள். த்ரிபுவனத்துக்குள் ஹிதம் செய்யும் பொருட்டு தினமணியின் உருவமாக ஆகாச மண்டலத்தில் ஜ்வலிக்கிறீர்கள். ஆதலால் தங்களுக்கு நமஸ்காரம். ஹே அம்ருதத்தினால் பரிபூர்ணமான சந்திர ஸ்வரூபரே, தாங்களே உலகின் அந்தகாரத்தை விலக்கி எல்லீயில்லா தேஜஸ் மூலமாக குமுத மலருக்கும் ஸமுத்ரத்திற்கும் ஸந்தோஷத்தையளிக்கிறீர்கள். அதீதமான சோபையுடன் கூடினவரே! உமக்கு நமஸ்காரம். ஏ புவனஜீவனா! தாங்களே எப்பொழுதும் சலிக்கும் வாயுஸ்வரூபமாக வேதமார்கத்தில் உபாஸிக்கப்படுகிறீகள். தாங்களில்லாமல் உலகில் எப்படி ஜிவிக்க முடியும்? ஏ அனம்ர ப்ரபஞ்சத்தை உத்தண்டமாக அழிக்கும் தொழில் செய்பவரே! ஸர்வப்பிராணிகளையும் வர்த்திக்கச் செய்பவரே! ஸர்ப்ப குலத்துக்கும் ஸந்தோஷம் அளிப்பவரே, தங்களுக்கு நமஸ்காரம். உலகத்தின் ஒரே பாவன மூர்த்தியே! ஏ அம்ருதமே, ஜகத்தின் அந்தராத்மாவே! தங்களுடைய அக்னி சக்தியில்லாமல் இந்த தேவதைகளின் இந்திரியங்களும், பஞ்ச பூதங்களும் ஜதரக்ஷணைகளையடைய முடியாது. அதனால் ஏ அக்னிஸ்வரூபா, அக்னியை அளிப்பவனே தங்களுக்குப் பிரதக்ஷிண நமஸ்காரம். ஏ ஜகத் பவித்ரா! விசித்ரமான அழகான சரித்ரா, தீர்த்தஸ்வரூபா, ராமேஸ்வரா, விஸ்வநாதா! தாங்களே இந்த அத்புத ஸம்ஸாரத்திற்கு, ஸ்நானத்திற்குமம், பானத்திற்குமாக உள்ளேயும் வெளியேயும் இருந்து அத்யாயம்–16 319 கொண்டு பவித்ரமாகவும் தூய்மையாகவும் ஆக்குகிறீகள். அதனால் தங்கள் முன்னிலீயில் தங்கள் காலடியில் வணங்குகிறேன். ஹே தயாநிதியே, ஆகாச ஸ்வரூபா, தாங்களே உள்ளும் வெளியுமாக ஆகாசத்தையளிக்கிறீர்கள், வெளியிடம் அளிக்கிறீர்கள். அதனாலேயே ஜகத்தானது விகஸித்து இருக்கிறது. தங்களாலேயே இந்த உலகம் மூச்சுவிடுகிறது. தங்களோடு சுபாவத்தினாலேயே இது சுருங்கவும், விரியவும் செய்கிறது. ஆதலால் தங்களுக்கு நமஸ்காரம். தமோ விநாசகா, ப்ருத்வீஸ்வரூபா விஸ்வநாதா, தாங்களில்லாமல் வேறு யார் இந்த உலகை பாலித்து ரக்ஷிக்கிறார்கள். ஏ கௌரீ பூஜிதா, புஜகபூஷணா, நன்று. சாந்திப்ரதான புருஷர்களில் வேறு யார் ஸ்துதிக்கு பாத்திரராக இருக்கிறார்கள்? அதனால் பராத்பரா, உங்களுக்கு நமஸ்காரம். யஜமானஸ்வரூபா, எங்கும் ஆத்ம ரூபமாய் இருப்பவனே, தங்களுடைய இந்த உருவம் தொடர்ச்சியாக சராசார உலகில் வ்யாபித்திருக்கிறது. ஒவ்வொரு லிங்க சரீரத்திலும் தாங்கள் சிதாபாஸ ரூபமாக வசிக்கிறீர்கள். அதனால் பரமாத்ம ரூபா! அஷ்ட மூர்த்தியான தங்களை நான் தினமும் நமஸ்கரிக்கிறேன். பார்வதியால் வந்திக்கப்படுவரே, வந்தனையாயிருப்பவரே! ஸர்வ ஜனங்களுக்கும் ஹிதத்தைக் கொடுப்பவரே! பக்த ஜனங்களுக்கு மாத்திரம் எளிதாய் கிடைக்கக் கூடியவரே! ஏ பவா, தாங்கள் ஒவ்வொரு வாக்கின் பொருளுக்கு மத்தியில் அப்பொருள்களுக்கும் அர்த்தத்தைக் கொடுக்கும் பரம் பொருளாக இருக்கிறீர்கள். தங்களுடைய இந்த அஷ்டமூர்த்தி ஸ்வரூபம் ப்ரம்மாண்டங்களிலும் வ்யாபித்து இருக்கிறது. ஆதலால் தங்களுக்கு நமஸ்காரம். பார்கவர் இந்த அஷ்டமூர்த்தி அஷ்டகஸ்தோத்திரத்தினால் மஹாதேவருக்கு பிடித்த 320 காசீ காண்டம் விதமாக ஸ்துதிசெய்து பூமியில் தலீ படும்படி வணங்கினார். மீண்டும் மீண்டும் வணங்கினார். மஹாதேவர் இவ்வாறு வணங்கிய ப்ராம்மணனைத் தன்னுடைய இரு கர கமலங்களிலும் பூமியிலிருந்து தூக்கி நிறுத்தினார். தன்னுடைய சிரிப்பில் தன்னுடைய பற்களின் காந்தியினாலே திக்கு, எல்லீகளையும் பிரகாசப்படுத்திக் கொண்டு கூறினார். மற்றெவராலும் செய்யமுடியாத இந்த உன்னுடைய உக்ரமான தபஸ்ஸும் லிங்கஸ்தாபனமும், புண்ணியலிங்கத்தின் ஆராதனையும், நிர்மலமான சித்தஸ்வரூபமான காணிக்கையாகக் செலுத்தியது ஆகும். இந்த அவிமுக்த மஹாக்ஷேத்திரத்தில் உன்னுடைய பவித்ரமான நடத்தையும் உன்னை எனது இரண்டு புத்திரர்களுக்கு ஸமமாக ஆக்கி விட்டன. நீ இந்த சரீரத்தோடு கூடவே என்னுடைய வயிற்றில் பிரவேசித்து, என்னுடைய புருஷேந்திரிய மார்க்கமாக வெளியில் வந்து புத்ரனாகக் கடவாய். என்னை அண்டியவர்களுக்கு அடைய ஸாத்யப்படாத மற்றொரு வரம் உனக்கு அளிக்கிறேன். இதை ப்ரம்மா, விஷ்ணு இவர்களிடமிருந்துகூட மறைத்து வைத்திருக்கிறேன். நானே கடுந்தபஸ் பண்ணி அடைந்த "ம்ருதஸஞ்ஜீவிநீ" என்ற வித்தை என்னிடம் இருக்கிறது. மந்த்ரரூபமாக அந்த வித்தையை உனக்குத் தருகிறேன் ஏ பவித்ர தபோநிதி! அந்த வித்தையை ஏற்றுக் கொள்ளும் தகுதி உனக்குத்தான் இருக்கிறது. விஸ்வேசனிலும் ஸ்ரேஷ்டமானவனே! யார் யாரை உத்தேசித்தும் இந்த மந்த்ரரூபமான வித்தையை ஒழுங்கான முறையில் ஜ பாவ்ருத்தி செய்வாயானால் அவர்கள் அவசியம் பிழைத்தெழுவார்கள். ஆகாச மண்டலத்தில் உன்னுடைய பிரகாசம் சூரியன், அக்னி மேலும் நக்ஷத்ர கணங்களையும் பின்னடையச் செய்து அத்யாயம்–16 321 கொண்டு மிகவும் பிரகாசமாக ஜ்வலிக்கும். அதனால் நீ எல்லா க்ரஹங்களிலும் ச்ரேஷ்டமாக விளங்குவாய். உன்னுடைய உதயத்தை முன்னிட்டுக் கொண்டு ஸ்திரீ புருஷர்கள் யாத்திரை செய்வார்களேயானால் உன்னுடைய த்ருஷ்டிபட்ட மாத்திரத்தில் அவர்களுடைய எல்லாக் காரியங்களும் நஷ்டமாகிவிடும். ஏ ஸுக்ருதா! ஆனால் உன்னுடைய உதயத்தில் உலகத்தில் மனிதர்கள் செய்கிற விவாஹாதிகள் முதலான ஸம்ஸ்த சுபகாரியங்களும், அனுஷ்டிக்கும் தர்மங்களும், கர்மங்களும் சுப பலனையடையும். ஸகல க்ரஹங்களும் மந்தமாகும்பொழுது அந்த க்ரஹங்களில் உன்னுடைய சேர்க்கையால் சுப பலனையளிக்கும். உன்னுடைய பக்த கணங்கள் வீரியமுள்ளவர்களாகவும், ஸந்தான ஸம்பத்தடனும் இருப்பார்கள். உன்னால் ஸ்தாபிக்கப்பட்ட சுக்ரேஸ்வரர் என்ற நாமம் உள்ள இந்த லிங்கத்தை பூஜிப்பவர்களுக்கு எல்லா ஸித்திகளும் கைகூடும். ஒரு வருஷம் வரை தக்க வ்ரதம் இருந்து, சுக்ர கிணற்றில் எல்லா க்ரியைகளும் செய்து சுக்ரேஸ்வரரைப் பூஜை பண்ணுகிறவர்கள் அடையும் பலனைக் கேள். அவர்கள் வீர்யம் ஒருக்காலும் மலடாகாது; புத்தர ஸம்பத்துடன் வீர்யவானாகவும், புருஷத்வத்துடன் ஸகல ஸௌபாக்யங்களும் அனுபவிப்பான். அவர்களுக்கு ஒரு விக்னமும் ஏற்படாது. கடைசியில் ஸுகமாக சுக்ரலோகத்தில் வசிப்பார்கள். இந்த வரங்கள் எல்லாம் அளித்துக் கடைசியில் மஹாதேவர் அதே லிங்கத்தில் மறைந்தார். விஷ்ணு தூதர்கள் கூறினார்கள்: சுக்ரேஸ்வரருடைய பக்தர்கள் சுக்ரலோகத்தில் வஸிப்பார்கள். ஓ பார்க்கவா விஸ்வேஸ்வரருக்குத் தெற்கு பக்கத்தில் 322 காசீ காண்டம் சுக்ரேஸ்வரலிங்கம் இருக்கிறது. அதை தரிசித்த மாத்திரத்தில் மனிதர்களுக்கு சுக்ரலோகத்தில் ஸகல மரியாதைகளுடன் வசிக்கும் பாக்யம் கிடைக்கிறது. ஹே மஹாமதே! இப்பொழுது சுக்ரலோகத்தைப் பற்றிக் கூறினோம். அகஸ்தியர் கூறுவார்: அந்த ப்ராம்மணன் சிவசர்மா இந்த விதமாக சுக்ரலோகத்தின் கதையைக் கேட்டார். அங்கிருந்து செவ்வாய் க்ரஹம் தென்பட்டது. இப்படி ஸ்காந்த புராணத்தில் நான்காவதான காசி கண்டத்தில் பூர்வார்த்த பாஷா டீகாவான சுக்ரலோக கதாவர்ணனமான பதினாறாவது அத்யாயம் ஸம்பூர்ணம். அத்யாயம்–17 323 அத்யாயம் 17 சிவ சர்மா கூறினார்: இரட்டையர்களான தேவர்களே. சுக்ர ஸம்பந்தமான கதையைக் கேட்டேன். இதைக் கேட்ட மாத்திரத்திலேயே எனது இரு காதுகளும் ஸந்தோஷத்தால் நிரம்பின. இப்பொழுது இந்த நன்றாக கண்ணுக்குப் புரிகின்ற நிர்மலமான லோகம் எந்த புண்ணியவானுடையது? இதை எனக்குக் கூறுவதற்கு நீங்கள் முயற்சியுங்கள். தங்கள் முகத்திருந்து வருகிற அம்ருத துல்யமான வசனங்களை கர்ண ரூபமான தொன்னைகளில் ஏந்திப் பானம் பண்ணும்போது இன்னும் திருப்தி ஏற்படவில்லீயே என்று இருக்கிறது. இரு தூதர்களும் கூறினார்கள் ஹே சிவசர்மன்: லோஹிதாங்க பிராம்மணனுடைய லோகம் என்று கூறுவார்கள். இதை மங்கள கிரகம் என்றும் கூறுவார்கள். இவர் எப்படி பூமிதேவியின் புத்ரனாக பிறந்தாரரென்னும் விருத்தாந்தத்தை கூறுகிறோம் கேளும். பூர்வ காலத்தில் தாக்ஷாயணீ (ஸதி) தேவியின் பிரிவினால் தபஸ் செய்யும் சம்புவின் நெற்றியிலிருந்து ஒரு வேர்வைத் துளி பூமியில் விழுந்தது. அதிலிருந்து பூமியில் இந்த லோஹிதாங்க குமாரன் பிறந்தான்.பூமிதேவி செவிலித்தாயாக - அன்பாக இந்தக் குமாரனை வளர்த்தாள். அதனால் லோஹிதாங்கனுக்கு பௌமகுமாரர் என்ற ஒரு கீர்த்தி வாய்ந்த நாமமும் உண்டு. இதற்குப் பிறகு அந்தக் குமாரன் சிவபுரியில் கடினமான தபஸ் செய்தான். அந்த இடத்தில் ஜகத்துக்கு ஹிதத்தைச் செய்யும் அஸி, வருணை என்ற இரு நதிகளும் உத்தரவாஹினியான கங்கையில் கலக்கிறது. 324 காசீ காண்டம் ஸர்வ வியாபகமான பகவான் குறிப்பாக நியமித்த ஸமயம் மரணம் அடைந்தவர்களை முக்தியளிக்கும் பொருட்டு நித்யமே விசேஷ ரூபத்துடன் ஸாந்நித்யமாக இருக்கிறார். எந்த இடத்தில் விசுவநாதருடைய அனுக்ரஹத்தைப் பெற்று தேஹமெடுத்த எல்லாப் பிராணிகளும் மரணமடைந்தவுடனே. அம்ருதபதத்தை அடை கின்றனவோ? எந்த அவிமுக்த க்ஷேத்திரத்தில் ஸாங்க்ய யோகம் மற்றும் நானா ரூபமான வ்ரதாதிகள் இல்லாமலேயே சரீரத்தை விடுபவர்கள் பிறகு ஜன்மம் எடுத்து சரீரத்தைப் பெறமாட்டார்களோ, இதே காசியில் பஞ்சமுத்ரை என்னும் பெயருள்ள மஹா மஹா பீடத்தில் கம்பலன், அசுவதரன் என்னும் இரண்டு நாகங்களுக்கு வடக்கு பக்கத்தில் அங்காரகன் தன் பெயரால் விதி பூர்வமாக அங்காரக லிங்கத்தை ஸ்தாபித்திருக்கிறார். எதுநாள் வரை அவர் சரீரத்திலிருந்து எரிகிற நெருப்பு ஜ்வாலீ வெளிப்படவில்லீயோ அதுவரை அந்த மகாத்மா தபஸ் செய்து கொண்டிருந்தார். இதனால் எல்லா உலகங்களிலும் அவர் அங்காரகன் என்னும் பெயருடன் பிரஸித்தியடைந்தார். விஸ்வேஸ்வரர் மகிழ்ந்து அவருக்கு மஹாக்ரகம் என்னும் பதவியைக் கொடுத்தார். உத்தமமான நரர்கள் சதுர்த்தி திதியன்று உத்தரவாஹினி கங்கையில் ஸ்நானம் செய்து பிறகு அங்காரகேஸ்வரருடைய பூஜை செய்து பிறகு நமஸ்கரித்தார்களானால் அவர்களுக்கு ஒரு பொழுதும் க்ரஹங்களுடைய பீடை ஏற்படுவதில்லீ. செவ்வாய்க் கிழமையன்று சதுர்த்தி திதியும் வந்தால் க்ரஹத்தின் கால நிலீயறிந்த பண்டித அத்யாயம்–17 325 கணங்கள் அதை க்ரஹணத்திற்கு ஸமமான புண்ணிய காலம் என்கிறார்கள். அன்று தானம், ஜபம், ஹோமம் இவைகள் அக்ஷய பலனைக் கொடுக்கின்றன. அங்காரக சதுர்த்தியன்று சிரத்தையுடன் ச்ராத்தம் செய்தால் அவர்களுடைய பித்ரு கணங்கள் இந்த ஒரே ஒரு ச்ராத்தத்தினால் 12 வருஷங்கள் வரை திருப்தியடைகிறார்கள். அந்தக் காலத்தில் அங்காரக சதுர்த்தியன்று விநாயகர் உத்பவித்தார், இந்தக் காரணத்தினாலும் அந்தநாள் புண்ணியம் நிறைந்த திதியாக எண்ணப்படுகிறது. இந்த அங்காரக சதுர்த்தியன்று ஒரு பக்தன் வ்ரதமிருந்து கணநாயகனைப் பூஜித்து கணபதியை உத்தேசித்து அற்பமாகிலும் தானம் செய்தால் விக்னங்களினால் ஒரு பொழுதும் பீடிக்கப்படமாட்டான். வாராணஸியில் அங்காரகேஸ்வர லிங்கத்தைப் பூஜிப்பதினால் அங்காரகேஸ்வரரிடமிருந்து பரம இது மங்கள உலகத்தின் கதை. அகஸ்தியர் மேலும் கூறுவார். விஷ்ணு பக்தர்கள் இருவரும் இந்த ரமணீயமான புண்ணியம் நிரம்பிய கதையைக் கீர்த்தனம் செய்து கொண்டே ப்ருஹஸ்பதியின் நகரைத் தங்கள் நேத்ரங்களுக்கும் விருந்தாக அளித்தார்கள். அதற்குப் பிறகு சிவசர்மா அந்த நேத்ரானந்தத்தை அளிக்கும் ஆசார்யபுரியைப் பார்த்துவிட்டு இது யாருடைய உத்தமபுரி என்று கேட்டார். விஷ்ணு பாரிஷதர்கள் கூறினார்கள்- ஹே ஸகே! உனக்குச் சொல்லக் கூடாதது ஒன்றுமில்லீ. வழிப்பிரயாணத்தினால் ஏற்படும் களைப்பை நீக்க நாங்கள் இந்தப் புரியின் கதையை ஸந்தோஷமாக உரைப்போம். முன்காலத்தில் ஆனந்தமாக த்ரிபுவனங்களையும் படைத்த ப்ரம்மாவிற்கு மரீசி, அங்கிரஸ் அத்ரி ஆகிய 326 காசீ காண்டம் ஆத்மாவிற்கு ஸமமான மானஸிக புத்ரர்கள் பிறந்தார்கள். அவர்கள் முறைப்படி ஸ்ருஷ்டித் தொழிலில் இறங்கினார்கள். அவர்களில் அங்கிரஸருக்கு அங்கீரஸ் என்ற பெயருடைய தேவனுக்குத் துல்யமான ஒரு புத்ரன் பிறந்தான். அவன் தேஹம் தரித்தவர்களிலெல்லாம் புத்திசாலித்தனத்தில் ப்ரதானமாக இருந்தான். சாந்தி, தாந்தி ஜிதேந்த்ரியன் கோபம் இல்லாதவன், ம்ருதுபாஷி, நிர்மல உள்ளம் படைத்தவர். மேலும் ஸகல வேத வேதார்த்தி தங்களுடைய தத்துவத்தையறிந்தவர், அறுபத்து நான்கு கலீகளிலும் குசலன், அக்ஞான ரூபமான மலம் நீங்கிய ஸகல சாஸ்திரங்களிலும் கரை கண்டவர், நீதி தெரிந்தவர்களின் முதல்வர். ஹிதோபதேசம் செய்வதில் தலீவர், நன்மையையே செய்பவர், அதிஹிதத்தை, அதிக்ரமணம் செய்பவர், ரூபவான், குணவான், தேசகால குணநிலீயறிந்தவர். இவரிடம் ஸமஸ்த சுபலக்ஷணங்களும் பரிபூர்ணமாகப் பொருந்தியிருந்தது. குருவுக்கு மிகவும் பிரியமானவர். திவ்ய தேஜஸ்வி. மஹா தபஸ்வியுங்கூட. அங்கீரஸ்கா காசியில் அநேக சிவலிங்கங்களை பிரதிஷ்டித்தான். மிகவும் மேன்மையான தபஸ்விருத்தியைக் கொண்டு ஏகாக்ரசித்தத்துடன் திவ்ய பரிமாணமாக 6 ஆயிரம் வருஷ பர்யந்தம் தபஸ்செய்தான். அதற்குப் பிறகு விசுவபாவனரான விஸ்வநாதர் ப்ரஸன்னமடைந்து அதேலிங்கத்தில் ஜோதிஸ்வரூபராக ஆவிர்பவித்தார். பிறகு கூறினார்- உன்னிடம் ஸந்தோஷமடைந்தேன். என்ன வரம் வேண்டுமானாலும் கேள். அங்கீரஸ் சம்புவை தரிசித்தமாத்ரத்தில் ஆனந்தமடைந்து இவ்விதமாகத் துதிக்கத் தொடங்கினார். அத்யாயம்–17 327 ஹே சங்கரா, ஹே சாந்த, ஹே சந்திரப்ரபா, இஷ்டவரம் தருபவரே, ஹே சர்வ, நான்கு புருஷார்த்தமும் தருபவரே, ஹே ஸர்வஸசியே, தாங்கள் பவித்ரமான ஜனங்கள் கொடுக்கும் மகத்தான காணிக்கையையும் ஏற்றுக் கொண்டீர்கள். பக்தர்களுடைய பெரிய ஸந்தாபங்களையும் தீர்த்து வைக்கிறீர்கள். தங்களுக்கு வெற்றி. வரத கணங்களால் வணங்குபவரே! தாங்கள் எல்லா ஜனத்தினுடையவும் இதயாகாசத்தில் வஸிக்கிறீர்கள். வணங்கும் ஜனங்களுடைய பாபரூவமான வனத்தை அக்னியாகப் பொசுக்குகிறீர்கள். விதவிதமான குணங்களையுடைய சரீரதாரிகளுக்கு நீரே கர்த்தா. அழகிய சரீரம் உடையவரே, தைரிய நிதியான தாங்களே அனங்னுடைய பாண விசேஷங்களாக இருக்கிறீகள். தங்களுக்கு ஜயம். ஹே சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டவரே, தங்களை வணங்கும் பண்டித ஜனங்களுடைய, மனோவாஞ்சித பலனைக் கொடுக்கிறீகள். ஸர்பம் தரிப்பவரே! தாங்கள் கிரிஜா தேவிக்குத் தங்கள் இடது பக்கத்தைக் கொடுத்தருளினீர்கள். தாங்களே எட்டு மூர்த்திகளாய் வடிவம் தாங்கி ஸமஸ்த லோகங்களையும் பரிபூர்ணமாக ஆக்குகிறீகள். தங்களுக்கு ஜெயம். ஏ மூவுலகஸ்வரூபமே, ஹே விரூப, அழகான கண்களையுடையவரே, தங்கள் நேத்ரங்களைத் திறந்து ப்ரளய அக்னியை உற்பத்தி செய்கிறீர்கள். ஹே பவ, ஹே பூதபதே! ப்ரமதகணங்களுக்குப் பதி! தாங்கள் பதித பதியே! ஜனங்களுக்குக் கைகொடுத்து ஆதரவு அளிக்கிறீர்கள். ஜய விஜயீ பவ. ஸகல பூதலத்திலும் வ்யாபகமாக இருப்பவரே, ப்ரணவத்வனி கூடத் தங்களையே ஆச்ரயித்து இருக்கிறது ஹே சந்திரதரா! சித்ரூப கிரிஜாகுமாரி தங்களை எப்பொழுதும் ஸந்தோஷப்படுத்துகிறாள். ஹே கல்யாணஸ்வரூபா, தங்களை வணங்குகிறேன். 328 காசீ காண்டம் ஹே சிவ, ஹேதேவா, ஹே கிரீசா! ஹே மஹேச, ஹே விபோ, ஹே விபவப்ரத, ஹே கைலாசவாஸி, ஹே பார்வதீபதே, ஹே, ம்ருட, தாங்கள் காமக்ரோத ரூபமான த்ரிபுராந்தகர்களுக்கு பீடையைக் கொடுத்தவர்! ஹே!தாராபதியைத் தரித்தவரே, மூவுலகையும் ஸுகமாக்குங்கள். ஹே ஆசையில்லாதவர்களுக்குப் பதியே, நான் யம ராஜனுக்குக் கூட பயப்படமாட்டேன். ஹே ஹரா, தாங்கள் சீக்கிரமாக எனது பாபங்களை நாசம் செய்யும். நான் மஹாதேவருடைய சரணங்களை சரணமடைகிறேன், வேறு மதவாதிகளை மங்களம் தருபவர்கள் என்று நினைக்கமாட்டேன், அதனால் தங்களுக்கு நமஸ்காரம். இந்த விஸ்தாரமான அகில ப்ரம்மாண்டங்களிலும் சிவனை ஸந்தோஷப்படுத்துவதே பாபத்தைப் போக்கும் பரம முக்யமான குணங்களையளிக்கும். அதனால் ஈஸ்வரா, நிர்குணா, நாகராஜனைக் கங்கணமாக அணிந்தவனே - ப்ரளய காலத்தில் ஸர்வ ஸம்ஹாரம் செய்பவனே! அங்கீராவின் புத்ரன் இந்த ப்ரகாரம் மஹாதேவனை ஸ்துதி செய்து விட்டு மௌனமானார். மஹாதேவனும் ஸ்துதியினால் ஸந்தோஷப்பட்டு வேண்டிய வரங்கள் அருளினார். மஹாதேவர் கூறினார்- இந்த மஹா தபஸ்ஸினுடைய ப்ரபாவத்தினால் நீ மஹத்துக்களான இந்த்ராதி தேவர்களுக்கும் ஸ்வாமியாக ஆவாய். இந்தக் காரணங்களினால் ப்ருஹஸ்பதியென்னும் பெயரால் பூஜிக்கப்படுவாய். நீ இந்த லிங்க பூஜையினுடைய ப்ரபாவத்தினால் நீ என்னுடைய ஜீவஸ்வரூபமாகவே ஆகிவிட்டாய். அதனால் மூன்று லோகங்களிலும் ஜீவன் என்னும் பெயரினால் பிரஸித்தி பெறுவாய். ப்ரபஞ்சம் இல்லாத என்னை அழகிய வாக்சாதுர்யம் என்ற ப்ரபஞ்சத்தினால் ஸ்துதிசெய்து விட்டாய். அதனால் நீ அத்யாயம்–17 329 இந்த வாக்பிரபஞ்சத்திற்கு அதிபதியாகிய வாசஸ்பதி என்னும் பெயரைப் பெற்றாய். இந்த ஸ்தோத்திரத்தை மூன்று வருஷங்கள் பக்தியுடன் பாராயணம் செய்வர்களும் கேழ்ப்பவர்களுமாகிய இருவருக்கும் வாக்சுத்தமேற்படும். யார் ஒருவர் இந்த வாயவ்யம் என்ற பெயருள்ள ஸ்தோத்திரத்தைப் பிரதிதினம் படிக்கிறார்களோ அவர்கள் பெரிய பெரிய காரியங்கள் செய்ய வேண்டி வரினும் புத்தி கலங்கமாட்டார்கள். எனது ஸந்நிதியில் இந்த ஸ்தோத்திரத்தை நியமத்துடன் பாராயணம் செய்வதினால் அவிவேகிகளுக்குக்கூட இழிவான செயல்களில் புத்தி செல்லாது. நரர்கள் இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பதினால் க்ரஹபீடைகள் அவர்களை அணுகாது. அதனால் இந்த ஸ்தோத்திரத்தை எனது ஸந்நிதியில் பாராயணம் செய்யவேண்டும். எந்த மனிதன் நித்யம் அதிகாலீயில் எழுந்து இந்த ஸ்துதியைப் பாராயணம் செய்கிறானோ அவனுடைய அதி பயங்கரமான இடையூறுகளையும் நான் போக்கடிக்கிறேன். விதி வழுவாது உன்னால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த லிங்கத்தைப் பூஜித்து இந்தஸ்தோத்திரத்தைப் படித்தால் அவனுடைய மனோகாமனைகளெல்லாம் பூர்த்தியாகும், பரமேஸ்வரன் அங்கிரஸுக்கு இந்த எல்லா வரங்களையும் அளித்து விட்டுப் பின் இந்த்ராதி தேவதைகள் யக்ஷர், கின்னரர்கள் புஜங்கர்கள் இவர்களுடன் ப்ரம்மாவையும் அழைத்தார். மஹாதேவன் எல்லோரும் தன்னைச் சூழ்ந்திருப்பதைக்கண்டு ப்ரம்மாவிடம் கூறினார் - ஏ! விதியே! தனது குணாதிசயங்களினால் ச்ரேஷ்டகுருவான இந்த வாசஸ்பதி முனியை என் வார்த்தைப்படி ஸமஸ்த தேவதைகளுக்கும் குருவாக ஆக்குவாய். எல்லோரும் 330 காசீ காண்டம் ஸந்தோஷிக்கும் பொருட்டு விதிபூர்வமாக தேவாசார்ய பீடத்திலமர்த்தி அபிஷேகம் செய்வாய். என்னுடைய ப்ரேமைக்கு பாத்திரமான முனி மிகவும் புத்திசாலிகளுக்கு அதிபதியாய் விளங்குவான். ப்ரம்மாவும் மஹாப்ரசாதம் என்று மஹாதேவருடைய ஆக்ஞையை சிரமேற் கொண்டு அந்த பிதாமஹர் அந்த க்ஷணமே அங்கீராவுடைய புத்திரனை தேவர்களுக்கு ஆசார்யராக ஆக்கினார். தேவதுந்துபி முழங்கிற்று. அப்ஸரஸுகள் ஆடினார்கள். வஸிஷ்டர் முதலிய மஹரிஷிகள் மந்திரத்தினால் பரிசுத்தமான ஜலத்தால் ப்ருஹஸ்பதிக்கு அபிஷேகம் செய்தார்கள். பிறகு கிரீசர் வாசஸ்பதிக்கு மேலும் மற்றொரு வரம் அளித்தார். ஏ தர்மாத்மா! குல நந்தனா! தேவர்களால் பூஜிக்கப்பட்ட அங்கீரஸா! கேள். உன்னால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஸுபுத்தி பரிவர்த்தக லிங்கம் காசியில் ப்ருஹஸ்பதீஸ்வரர் என்னும் பெயரால் ப்ரசித்தமாவார். மனிதர்கள் பூச நக்ஷத்ரத்தோடு கூடிய ப்ருஹஸ்பதிவாரத்தில் இந்த லிங்கத்தைப் பூஜித்து எந்தக் காரியங்களைச் செய்கிறார்களோ அவைகள் ஸித்தியாகும். கலியுகத்தில் இந்த ப்ருஹஸ்பதீஸ்வர லிங்கத்தை நான் மறைத்து விடுவேன். இந்த லிங்கத்தைத் தரிசனம் பண்ணின மாத்திரத்திலேயே மேதஸ் ஏற்படும். சந்திரேஸ்வர லிங்கத்துக்குத் தென் பக்கத்தில் வீரேச்வர லிங்கத்துக்கு வடமேற்குப் பக்கத்தில் நிர்ருதிகோணத்தில் இருக்கும் ப்ருஹஸ்பதீச்வர லிங்கத்தைப் பூஜை செய்வதினால் ப்ருஹஸ்பதி லோகத்தில் மர்யாதையுடன் வசிப்பார்கள். ஆறுமாதம் தொடர்ந்தாற்போல் இந்த லிங்கத்தைத் தரிசித்தால் குருபத்நீகமனம் ஆன பாபம் கூட ஸூர்யனைக் கண்ட பனி போல் மறைந்துவிடும். இந்த மகா பாதக நாசம் அத்யாயம்–17 331 செய்யும் ப்ருஹஸ்பதிலிங்கத்தைப் பூஜிக்கும் பலனை ரஹஸ்யமாக வைத்துக் கொள்ள வேண்டும். யாரிடமும் சொல்லக் கூடாது. தேவதேவர் இந்த எல்லா வரங்களையும் அளித்துவிட்டு அந்த லிங்கத்திலேயே மறைந்தார். ப்ரம்மா விஷ்ணு இந்த்ராதிகளும் ப்ருஹஸ்பதியுடன் கூட இந்த லோகத்திற்கு வந்து, இந்த ப்ருஹஸ்பதிக்கு அபிஷேகம் செய்வித்த பின் இந்த்ராதி தேவர்களை அனுப்பி விட்டு விஷ்ணுவின் உத்தரவைப் பெற்று தனது லோகத்தில் ப்ருஹஸ்பதி இனிது வஸித்திருந்தார். அகஸ்தியர் கூறினார் :- லோபா முத்ரே! சிவசர்மா ப்ருஹஸ்பதி லோகத்தைத் தாண்டி ப்ரபாமண்டலம் சூழ்ந்த சனீஸ்வர பகவான் லோகத்தைப் பார்க்க ஆரம்பித்தார். ஹே அழகான புன்னகையுடைய பிராம்மணனே! கேட்பாயாக. இரு விஷ்ணு தூதர்களும் இந்தப் புரியின் விவரம் சொல்ல என்று ஆரம்பித்தார்கள். இருவரும் கூறினார்கள்- மரீசியின் புதல்வரான கச்யபர் தாக்ஷயணியின் கர்பத்தில் ஸூர்யனைப் பிறப்பித்தார். த்வஷ்டா ப்ரஜாபதியின் பெண் ஸம்க்ஞா அவருக்கு மனைவியானாள். தேஜோ மயமான தபஸ்ஸினால் பின்னும் தேஜஸ்ஸை அடைந்த ஸம்க்ஞாபதிக்கு மிகவும் ப்ரியமானவளாக விளங்கினாள். அவள் ஸூர்யமண்டலத்தின் தேஜஸ், ஆதித்யனுடைய உஷ்ணம் இரண்டையும் தேஹத்தால் பொறுத்துக் கொண்டாள். இதனால் இவளுடைய தேஹம் மெள்ள மந்தமாக க்ஷீணிக்கத் தொடங்கியது. இந்த மண்டலத்திலுள்ள தன் புத்ரன் இறந்து போகக் கூடாது என்று பிதா கச்யபர் சொன்னார். அதிலிருந்து சூரியனுக்கு மார்த்தாண்டன் என்று பெயர் உண்டாயிற்று. தீக்ஷ்ணகிரணங்களுடைய மார்த்தாண்டனுடைய தேஜஸ்ஸினால் மூன்று லோகங்களும் தபித்தன. இந்த 332 காசீ காண்டம் அதிக தீக்ஷ்ணத்தை (அதிப்ரகாசம்) ஸம்க்ஞா தேவியினால் தாங்க முடியவில்லீ. ஹே பிராம்மணா! ஆதித்யன் இந்த ஸம்க்ஞாவினிடத்தில் ஆண்கள் இரண்டும், பெண் ஒன்றுமாக மூன்று குழந்தைகளை உற்பத்தி செய்தான். பெரிய புதல்வன் வைவஸ்வதமனு, இளைய புத்ரன் யமராஜன், இதற்குப் பிறகு யமுனா என்னும் பெயருள்ள புத்ரி. இதற்குப் பின்னும் ஸம்க்ஞா ஸூர்யனுடைய தேஜஸை (தீக்ஷ்ணத்தை) மேலும் மேலும் தாங்க முடியாதவளானாள். அப்பொழுது அவள் தன் சரீரத்திலிருந்து மாயாமயியான ஒரு பெண்ணை ஸ்ருஷ்டித்தாள். அவளைச் சாயா தேவீ என்பார்கள். அவள் øகூகூப்பி வணங்கி ஸம்க்ஞாவிடம் கூறினாள். தேவி! நான் தங்களுடைய ஆக்ஞைக்குக் கீழ்ப்படிபவள். அப்பொழுது ஸம்க்ஞா கூறுவாள்- என்னைப் போலவே உள்ள ஸுந்தரியே! கேள். நான் என் பிதா விச்வகர்மாவினுடைய வீட்டிற்குப் போகிறேன். ஹே! ஸுந்தரீ! நீ என் உத்தரவின்படி ஸங்கோசப்படாமல் எனது வீட்டில் வஸி. இந்த மனுவையும் இரட்டையர்களான தர்மன் யமுனை இருவரையும் நீ உனது குழந்தைகளைப் போலவே கவனித்து வர வேண்டும். ஏ அழகான புன்சிரிப்பையுடையவளே! இந்த விஷயத்தை எனது ஸ்வாமியிடம் சொல்லிவிடாதே. இதைக் கேட்டதும் சாயாதேவீ விச்வகர்மாவினுடைய புதல்வியிடம் கூறினாள். "தேவீ! எனது தலீமுடி நரைக்காமல் இருக்கும் வரை, அல்லது ஸ்வாமி உண்மையையறிந்து சாபம் கொடுக்காமல் இருக்கும்வரை, நான் உனது விஷயத்தை வெளியிடாமல் இருக்கும் வரை, நான் ஸுகமாக இருப்பேன். நீங்கள் ஸந்தோஷமாகச் சென்றுவாருங்கள்," அத்யாயம்–17 333 இந்த விதமாக ஸம்க்ஞா தேவி சாயாதேவிக்கு ஆக்ஞையிட்டு, சாயாதேவி ஸம்மதித்தவுடன் ப்ரயாணப்பட்டு விச்வகர்மாவின் வீட்டிற்கு (அவள் தகப்பனாரிடத்தில்) சென்று கூறினாள். தந்தையே! வணக்கம். மகாத்மா தேஜோநிதி,கச்யபபுத்ரரான ஸூர்ய தேவனுடைய தீவ்ர தேஜஸ்ஸை என்னால் ஸஹிக்க முடியவில்லீ என்றாள். அவளைப் பார்த்த அவளுடைய பிதா அவளை அடிக்கடி கடிந்து, இகழ்ந்து, நீ உன் பர்த்தாவிடமே திரும்பிச் செல் என்று ஆக்ஞாபித்தார். அந்த சமயம் ஸம்க்ஞாவானவள் மிகவும் கவலீயில் ஆழ்ந்தாள். ஸ்த்ரீகளுடைய முயற்சி மிகவும் இழிவானது என்று சொல்லித் தனது பெண் ஜன்மத்தையே நிந்தித்துக் கொண்டாள். ஸ்த்ரீ ஜன்மத்திற்கு ஒருபொழுதும் ஸ்வதந்த்ரம் கிடையாதா? இப்படி பராதீனப்பட்டிருப்பது எப்பொழுதும் இழிவு. பிள்ளைப் பிராயத்தில் பிதா, யௌவனத்தில் பர்த்தா, கிழப்பருவத்தில் பிள்ளை. இப்படி இவர்களுக்கு பயந்து சாக வேண்டுமா? ஓ! நான் தீர ஆலோசியாமல் பதியின் க்ரு-ஹத்தைத் தியாகம் செய்து விட்டு வந்தேன். இது இப்பொழுது பதிக்குத் தெரியாது. இப்பொழுது பதியின் க்ரு-ஹத்திற்குத் திரும்பச் சென்றால் அங்கு என் பரிபூர்ண மனோரதத்துடன் நான் வைத்திருக்கும் என்னுடைய சாயா இருக்கிறாள். பிதா அவமானமாகக் கூறினாலும், நான் இங்கேயே இருந்தாலோ, அப்பொழுது அது என் பதிக்குத் தெரியவந்தால் அந்த அதிப்ரசண்டசண்டாம்சு, எனது மாதா பிதாக்கள் மேல் பயங்கரக்கோபம் கொள்வார். ஜனங்கள் கூறும் பழமொழி முற்றிலும் உண்மை. நான் இன்று அதை ஸ்பஷ்டமாகப் பார்த்து விட்டேன். 334 காசீ காண்டம் நானே என் மேல் நெருப்பை வாரிப் போட்டுக் கொண்டேன். எனது காலில் நானே கோடரியைப் போட்டுக் கொண்டேன். முட்டாள் தனத்தால் பதியின் க்ருஹத்தையும் இழந்தேன். இனி பிதாவின் வீட்டில் இருப்பது க்ஷேமம் இல்லீ. ஸுந்தர யௌவனப் பருவம், மூன்று உலகமும் விரும்பும் உருவம்; யாரும் லோபப்படும் ஸ்திரீ ஜன்மம் மிகவும் நிரவலமான குலம். இதற்குமேல் ஸர்வக்ஞரும் உலகத்துக்குக் கண் (லோகசக்ஷு) என்ற பெயர் பெற்றவரும் இருட்டை நாசம் செய்பவரும், எல்லாக் கர்மங்களுக்கு ஸாக்ஷியும் ஸர்வ ஸ்வரூபரும் எங்கும் செல்லும் சக்தி வாய்ந்தவரும் ஆன என் கணவரே துணை. பின் எனக்கு நல்லது வேறு எந்த விதத்தில் முடியும்? நிந்திக்கத் தகாத ஸம்க்ஞா ஆனவள். இப்படிச் சிந்தித்துக் கொண்டு தபஸ் செய்வதற்காக வடவை என்ற பெண் குதிரை ரூபமாக (காட்டிற்கு) சென்றாள். உலர்ந்த புற்களைத் தின்றுகொண்டு உத்தர குருப்ரதேசம் சென்று இதயத்தில் பதியை நன்றாகத் தியானம் செய்து கொண்டு தீவிர தபஸ் தொடங்கினாள். அவளுடைய தபஸ்ஸின் குறிக்கோள் என்னவென்றால் தன்னுடைய பதியின் தேஜஸ்ஸை ஸஹிக்கக்கூடிய சக்தியைக் கொடுக்க வேண்டும் என்பதே. அங்கு ஸூர்யன் ஸம்க்ஞா தேவினுடைய சாயையை ஸம்க்ஞா என்று நினைத்து முறையே அவளிடமிருந்து எட்டாவது மனுவான ஸாவர்ணி இரண்டாவது குழந்தையாக சனைஸ்சரன், மூன்றாவது குழந்தையாக பத்ரை (தபதி) யென்னும் புத்ரியையும் அடைந்தான். சாயா தன்னுடைய குழந்தைகளை எவ்விதம் நேசித்தாளோ, அவ்விதமே ஸம்க்ஞாவின் குழந்தைகளை நேசிக்கவில்லீ, அது சக்களத்தி ஸ்வபாவமோ அல்லது ஸ்திரீகளிடம் உண்டான குற்றமோ தெரியாது, தன்னுடைய மூத்-த-வ-ளின் குழந்-தை--க-ளின் மீது அத்யாயம்–17 335 ப்ரே-மை வைக்-க-வில்லீ. மூத்தவனான மனு இந்தக் கஷ்டங்களை ஸஹித்துக் கொண்டான். ஆனால் சிறியவனான யமன், உணவு, நகைகள், சீராட்டல், போஷித்தல் இவைகளில் இளையவளின் மகனான ஸாவர்ணி. முதலியவர்களிடம் மாற்றாந் தாய் அதிக ப்ரேமை செலுத்துவதைக் கண்டு ஒருநாள் சிறுபிள்ளைத் தனத்தினாலோ அல்லது தனது வருங்கால கௌரவத்தையறிந்தோ ரோஷத்தினால் ஸம்க்ஞா ப்ரதிநிதிரூபமாக இருக்கும் சாயையை எட்டி உதைத்தான். அப்பொழுது ஸாவர்ணியின் மாதாவான சாயா கோபத்தால் யமனுக்கு சாபம் கொடுத்தாள். அவள் மிகவும் துக்கமடைந்து அடபாவி என்னை உதைப்பதற்காக எந்தக் காலீத் தூக்கினாயோ அந்தப் பாதம் சீக்கிரத்தில் வீழ்ந்து விடட்டும். மாதாவின் சாபத்தினால் பீதியடைந்த யமன், "காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என்று கூறிக்கொண்டே சென்று ஓடி தன் பிதாவினிடம் சென்றான். மாதா எல்லாபிள்ளைகளிடமும் சமமாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இவள் அப்படி நடக்கவில்லீ. அதனால் நான் அவளை உதைப்பதற்காகக் காலீத் தூக்கத்தான் செய்தேன். ஆனால் உதைக்கவில்லீ. இந்த அபராதம் எனது சிறுபிள்ளைத் தனத்தினாலும் மோகத்தினாலும் ஏற்பட்டு விட்டது. அதனால் என்னை மன்னிக்க வேண்டும். அம்மாவின் சாபத்தினால் எனது இந்தக் கால் விழுந்து விடாமல் இருக்க வேண்டும். ஏ! குழந்தாய்! ஆயிரம் குற்றங்கள் செய்தாலும் ஒரு தாய் தன் குழந்தைகளை சபிக்க மாட்டாள். இந்த விஷயத்தில் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். எதனால் அவள் உன்னைப் போன்ற தர்மம் அறிந்த உண்மை பேசுபவனைக் கோபத்தால் சபித்தாளோ? தாயின் சாபத்தை வேறு ஒருவராலும் நீக்கமுடியாது. 336 காசீ காண்டம் உன்னுடைய இந்தக் காலின் மாம்ஸத்தைப் புழுக்கள் எடுத்துக் கொண்டு பூமிக்குள் செல்லட்டும். இதனால் உன் தாயாரின் சாபமும் வீணாகப் போகாது. உனக்கும் ஆபத்து நேராது. இந்தப் பிரகாரமாக புத்ரனுக்கு ஆறுதல் கூறிவிட்டு ரவி அந்தப்புறத்திற்குச் சென்றார். சிறிது நேரம் கழித்து மெதுவாகவேத் தன் பத்னியை நோக்கி ஸவிதா இந்த வார்த்தையைக் கூறினார்- ஏ பாமினீ! உனக்கு எல்லாக் குழந்தைகளும் ஸமம்தானே! பின் ஏன் இந்த ஸாவர்ணீ முதலியவர்களை அதிகமாக நேசிக்கிறாய்? சூரியன் இவ்வாறு கேட்ட பிறகும் சாயா பதில் கூறவில்லீ: அப்பொழுது அவர் ஆத்மாவில் மனதை லயித்து எல்லா விஷயங்களையும் அறிந்து கொண்டார். அப்பொழுது சூரியபகவான் சாபம் கொடுப்பதற்குத் தயாரானார். சாயா பயந்து எல்லா வ்ருத்தாந்தங்களையும் அப்படியே ஒப்புவித்தாள், பகவானும் ஸந்தோஷமடைந்தார். எல்லா விஷயங்களையும் உண்மையாகச் சொன்னதினால் சாயாவை குற்றமற்றவள் என்றறிந்து சாபம் கொடுக்கவில்லீ. ஆனால் கோபித்துக் கொண்டு மாமனாரான விச்வகர்மாவிடம் சென்றார். தன்னை எரித்துவிட விரும்பும் தீக்ஷண்யமான தேஜஸ்ஸுடன் வரும் ஸூர்யபகவானைப் பார்த்து அவர் சற்று சாந்தம் அடையும் பொருட்டு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அவருக்கு அதிதி பூஜை செய்தார். பிறகு அவருடைய அபிப்ராயத்தையறிந்து உடனேயே கூறினார். விச்வகர்மா கூறினார்: ஏ ரவே! உங்களுடைய தீக்ஷண்ய தேஜஸ்ஸினால் பயமடைந்து ஸம்க்ஞா உத்தர குருப்ரதேசத்தில் சென்று வடவை உருவில் உலர்ந்த புற்களைத் தின்று கொண்டு வனத்தில் ஸஞ்சரிக்கிறாள். அத்யாயம்–17 337 அவளுடைய தேஜஸ், நியமம் இவைகளின் பலத்தில் ப்ராணிகளின் கண்களுக்குத் தென்படாமல் ஆர்யர்களின் விதியை அனுஸரிக்கும் தங்கள் மனைவியை இன்று பார்ப்பீர்கள். விச்வகர்மா ஸூர்யனுடைய அனுமதியைக் கேட்டுக் கொண்டு மிகவும் கவனமாக ஒரே கல்லில் ஏற்றி அவருடைய தேஜஸ்ஸைக் சிறிதளவு குறைத்து விட்டார். இதனால் அவர் மேலும் அழகாக விளங்கினார். பிறகு மாமனாரின் ஆக்ஞையைப் பற்றி ஸவிதா உடனேயே உத்தர குருப்ரதேசத்திற்குச் சென்று கடுமையான தபஸ்ஸைச் செய்பவளும் தவமே உருக்கொண்ட ஸாக்ஷாத் லக்ஷ்மியைப் போன்றவளும், வடவானலீயே போன்ற தேஜஸ்ஸுள்ளவளும் பெண் குதிரையின் உருவில் உள்ள அவளை யோக மாயையின் க்ருபையினால் - உலர்ந்த புற்களைத் தின்று கொண்டிருக்கும் ஸம்க்ஞாவைக் கண்டார். ஸூர்யன் பெண்குதிரை வடிவில் இருக்கும் அந்த விசுவகர்மாவின் புத்ரியைக் குற்றம் செய்யாதவள் எனக் கண்டு தானும் அச்வ ரூபத்தை எடுத்துக் கொ-ண்டு அந்தப் பெண்குதிரையு-டன் ஸங்கமித்தார். அந்தப் பெண்குதிரை வடிவில் இருக்கும் ஸம்க்ஞா நான்கு பக்கங்களிலும் அவஸரமாகப் பார்த்துவிட்டுப் பரபுருஷன் என்று ஸந்தேஹித்து, ஸூர்யனின் வீர்யத்தை மூக்கு த்வாரத்தின் வழியாகக் கசக்கிவிட்டாள். அதிலிருந்துதான் தேவதைகளின் சிறந்த வைத்யர்களான அச்வினீ குமாரர்கள் தோன்றினார்கள். பிறகு ஸூர்யன் தன் நிஜ ரூபத்தைக் காட்டினார். அப்பொழுது அந்தப் பதிவ்ரதையும் ஹ்ருதய தாபத்தை ஒழிக்கும் கண்களுக்கு ஆனந்தத்தைத் தரும் அழகான உருவம் தரித்தாள். தன்னுடைய பதியைப் பார்த்து மிகவும் ஸந்தோஷமடைந்தாள். பரமானந்தமடைந்தாள். 338 காசீ காண்டம் உண்மையே. தபஸ்ஸின் மூலமாக எதுதான் துர்லபம்? தபஸ்ஸே பரம மங்களத்தைத் தருவது. தபஸ்ஸே உத்தம தனம். தபஸ்ஸே தேவதைகளாக ஆவதற்கு முக்கிய காரணம். ஏ, சிவசர்மா! ஆகாயத்தின் மேலேயும் கீழேயும் அந்த ஜாஜ்வல்யமாக ஜ்வலிக்கின்ற ஜோதி ஸ்வரூபத்தைப் பார்த்திதீரா? அந்த தபஸ்ஸே தேஜஸ் ஸ்வரூபம். இந்த விதமாக அந்த ஸம்க்ஞா தேவியிடமிருந்து உண்டாகிய சாயா தேவியின் கர்ப்பத்திலிருந்து ஸூர்யனின் புத்ரரான சனைஸ்சரர் பிறந்தார். பிறகு எல்லா தேவர்களும் வணங்கும் வாராணஸிபுரீ சென்று தபஸ் செய்து சிவலிங்கத்தைப் ப்ரதிஷ்டை செய்து மஹாதேவரையும் அர்ச்சித்ததினால் உயர்ந்த லோகமான இந்த க்ரஹ பதத்தையடைந்தார். காசியில் சுப சோபனமான சனைச்சர லிங்கத்தை தர்சித்து, சனி வாரத்தன்று இந்த லிங்கத்தைப் பூஜை செய்தால் சனிக் க்ரஹத்தினால் ஏற்படும் பீடை நீங்கும். விச்வேவரருக்குத் தெற்குப் பக்கத்தில் ஸுகரேஸ்வரருக்கு வடக்குப் பக்கத்தில் இருக்கும் சனைஸ்வர லிங்கத்தைப் பூஜை செய்வதால் மனிதன் இந்த சனி லோகத்தை ஆனந்தமாக அடையலாம். காசியில் வசிப்பவர் யாராக இருந்தாலும் சரி இந்தப் புண்யமய அத்யாயத்தைக் கேட்டால் அவர்களுக்கு சனிக்ரஹத்தினால் பீடைகள் ஏற்படாது. அது ஸம்பந்தமான வ்யாதிகளும் இருக்காது. இந்த விதமாக ஸ்காந்த புராணத்தில் நான்காவதான காசீ கண்டத்தில் பூர்வார்த்த பாஷா டீகாவான மங்களம், ப்ரு-ஹஸ்பதி, சனிலோகம் இவைகளின் வர்ணனை பூர்ணம். பதினேழாம் அத்யாயம் ஸம்பூர்ணம். அத்யாயம்–18 339 அத்யாயம் 18 அகத்தியர் கூறினார்: முக்திபுரியான காசியில் ஸ்நானம் செய்துவிட்டு ஹரித்வாரத்தில் ப்ராணத்யாகம் செய்த மதுர வாஸியான சிவசர்மா விஷ்ணுபுரியை தரிசிக்கும் ப்ரபாவத்தினால் இந்தக் கதைகளைக் கேட்டுக் கெண்டே கடைசியில் விஷ்ணு லோகத்திற்குப் போய்க் கொண்டிருக்கும்போது, ஸப்தரிஷி மண்டலம் கண்ணுக்குத் தென்பட்டது. சாரணர்களும் மாகதர்களும் சிவசர்மாவைப் புகழ்ந்து துதிக்கத் தொடங்கினார்கள். தேவகன்னிகைகள், இவ்விடத்தில் தயவு செய்து கொஞ்சம் நில்லுங்கள், நில்லுங்கள் என்று பிராத்தனை செய்தார்கள். இந்த விதமாக அவர்கள் எல்லோரும் நெடுமூச்செறிந்து நாங்கள் எல்லோரும் மிகவும் குறைவாகப் புண்ணியம் செய்திருக்கிறோம். இந்த நரன் மிகவும் புண்ணியம் செய்துள்ளவன். இவன் பாக்கியசாலி, பரம பவித்ர லோகத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறான் பாருங்கள் என்று எல்லோரும் வழிநெடுக நின்று கூறிக் கொண்டிருக்கும்போது விமானத்தில் இருக்கும் சிவசர்மா அவர்கள் கூறும் இம்மொழிகள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு விஷ்ணுவின் பக்தர்களிடம் "இந்தக் தேஜஸ்ஸுடைய உவமையற்ற சுப லோகம் யாருடையது?" என்று கேட்டார். அந்தப் பிராம்மணர்களிடம் இரண்டுதூதர்களும் கூறினார்கள்" ப்ரம்மாவினால் ஸ்ருஷ்டி பண்ணின இவ்வுலகில் அவர்கள் வஸிக்கிறார்கள். அவர்கள் மரீசி, அத்ரி, புலகர், வஸிஷ்டர் புலஸ்தியர், க்ரது. அங்கிரஸ் முதலிய ஏழு மஹாபாக்யசாலிகளும் ப்ரம்மாவின் மானஸ புத்திரர்கள். இவர்களை ஸப்தப்ரம்மா என்றும் கூறுகிறார்கள்." "அநஸுயா, ஸம்பூதி, க்ஷமா, ப்ரீதி, உன்னதி, ஸ்ம்ருதி, அருந்ததி இவர்கள் முறையே அந்த ஸப்தரிஷிகளுக்கும் தர்ம பத்னிகள். இவர்களை ஸப்த லோக 340 காசீ காண்டம் மாதாக்கள் என்றும் கூறுவார்கள். இந்த ஸப்தரிஷிகளின் தவ மஹிமையினால் மூன்று புவனங்களும் ரக்ஷிக்கப்படுகின்றன." பூர்வ காலத்தில் ப்ரம்மா இவர்களை ஸ்ருஷ்டித்துக் கூறினார்- 'ஹே புத்ரர்களே! கவனமாக நானாவித ஜீவராசிகளை ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்யுங்கள் என்றார். பிறகு தபஸ் செய்வதற்கு த்ருட நிச்சயம் கொண்ட ஸப்தரிஷிகள் ப்ரம்மாவை நமஸ்கரித்து எல்லாப் பிராணிகளுக்கும் முக்தியளிக்கும் சிவபிரான் எங்கு ஸாந்நித்யமாக இருக்கிறாரோ, அந்த க்ஷேத்ரமாகிய காசீபுரியை அடைந்து பெயருள்ள லிங்கங்களை ஸ்தாபித்து சிவபிரானிடம் ஆழமான பக்தியுடையவர்களாய் உக்ரமான தபஸ் செய்யத் தொடங்கினார்கள். சிவபிரான் அவர்களுடைய தபஸ்ஸை மெச்சி அவர்களுக்கு ப்ரஜாபதியென்னும் பட்டத்தைக் கொடுத்தருளினார். காசியில் அத்ரீச்வராதி லிங்கங்களை யத்ன பூர்வமாகக் காணலாம். அவர்கள் இந்த ப்ராஜாபதி லோகத்தில் (ஸப்தரிஷி மண்டலத்தில்) ஸுகமாக வஸிக்கிறார்கள், கோகர்ணேச்வர ஸரோவரத்துக்கு மேற்குக் கரையில் ப்ரதிஷ்டிக்கப்பட்டிருக்கும்- இந்த அத்ரீஸ்வர லிங்கத்தைத் தரிசித்த மாத்ரத்திங் ப்ரம்ம தேஜஸ் விருத்தியாகிறது. கார்க்கோட கிணறுக்குக் கிழக்குப் பக்கத்தில் மரீசியின் உத்தமமான தடாகம் இருக்கிறது. இங்கு பக்தி பூர்வமாக ஸ்னானம் செய்யும் மனிதன் ஸூர்யனைப் போல் ப்ரகாசவானாகிறான். அதே இடத்தில் மரீசீஸ்வரர் என்ற பெயருள்ள லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அந்த லிங்கத்தைத் தரிசனம் செய்தால் மரீசீ லோகம் கிடைக்கிறது. அந்த புருஷச்ரேஷ்டன் மரீசிமாலி என்ற பெயரோடு ஸூர்யனுக்கு ஸமானமாகிறான். அத்யாயம்–18 341 புலகேஸ்வரர், புலஸ்தேஸ்வரர் என்ற இரண்டு லிங்கமும் ஸ்வர்-கத்வாரத்தின் மேற்குப் பக்கத்திலிருக்கின்றன. மனிதர்கள் அவைகளைத் தரிசனம் செய்வதால் ப்ரஜாபதி லோகத்தில் வெகுமானமாக வஸிக்கிறார்கள். ரம்யமான ஹரிகேஸ் என்னும் வனத்தில் அங்கீரேஸ்வரர் என்னும் லி ங்கத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே தேஜஸ் பரிபூர்ணமாக நிரம்பியவர்களாக இந்த லோகத்திலேயே வஸிக்கிறார்கள். க்ரத்லீஸ்வரர் வருணா நதியின் கரையில் ரமணீயமான சோகாவன வனத்தில் இருக்கும் வஸிஷ்டேச்வரர் க்ரத்லீஸ்வரர் இவர்களைத் தரிசனம் செய்தாலும் ப்ரஜாபதி லோகத்தில் வஸிக்கும் பாக்யம் கிடைக்கிறது. மங்களத்தை விரும்பும் யாராயிருந்தாலும் சரி அந்த எல்லா ஸேவகர்களுக்கும் இரண்டு விதமான மனோ வாஞ்சைகளும் பரிபூர்ணமாகும். கணங்கள் கூறினார்கள். மஹாபாக்யசாலியான சிவசர்மாவே! இங்குதான் அந்த மஹாபுண்யவதி பதிவ்ரதை பாராயணை அருந்ததி வசிக்கிறாள். அவளை நினைத்த மாத்திரத்திலேயே பலன் கங்காஸ்னானம் கிடைக்கிறது. தனது அந்த: புரத்திலுள்ள இரண்டு மூன்று பவித்ரவான்களோடு கூட விபுவாகிய நாராயண தேவர் பதிவ்ரதா தர்மத்தினால் பரமஸந்தோஷமடைந்து எப்பொழுது தேவி அருந்ததியின் கதையைப்பரம ஸந்தோஷத்துடன் கூட லக்ஷ்மிதேவிக்குக் கூறுகிறார். ஏ! கமலே! பதிவ்ரதைகளுக்குள் அருந்ததிøப் போல் நிர்மலமான நடத்தையும்: சீலமும் குலாசாரமும் கலீகளின் பதிஸேவையும் மாதுர்யமும், கம்பீரமும் பெரியவர்களை ஸந்தோஷப்படுத்தும் விதமும், இந்த எல்லா நற்குணங்களும் அருந்ததியிடம் பொருந்தியிருப்பதுபோல் வேறு ஒருவரிடமும் இல்லீ. 342 காசீ காண்டம் எந்தப் பெண்கள் ஸம்பாஷணையின் மத்தியிலாவது அருந்ததியின் பெயரைக் கூறுகிறார்களோ அந்த சுத்த புத்தி ஸௌபாக்யவதி பெண்கள் பாக்யசாலிகள். எவருடைய வீட்டில் எப்பொழுது பதிவ்ரதைகள் பற்றிய சர்ச்சைகள் எழும்புகின்றனவோ அப்பொழுது ஸதி அருந்ததியும் நாமும் எல்லாவற்றுக்கும் முன்பாக அலங்காரமாக இருப்போம். இந்த விதமாக ஸந்தோஷத்தைக் கொடுக்கிற கதைகளையும் உபகதைகளையும் சொல்லிக் கொண்டு இரண்டு விஷ்ணு கணங்களும் கற்பகங்கள் முழுவதும் ஸாந்நித்யமாக விளங்கும் துருவ லோகத்தைப் பார்க்கத் தொடங்கினார்கள். இப்படி ஸ்காந்த புராணத்தில் நான்காவதான காசீ கண்டத்தில் பூர்வார்த்த பாஷா டீகாவான ஸப்ரிஷி லோக வர்ணனமான பதினெட்டாவது அத்யாயம் ஸம்பூர்ணம். அத்யாயம்–19 343 அத்யாயம் 19 சிவசர்மா கூறத் தொடங்கினார். "உத்தமர்களே! இவ்விடத்தில் ஒற்றைக் காலில் நின்று கொண்டும் வாயுமயம் போல் மெல்லியதான அநேகக் கயிறுகளால் கட்டி இழுப்பதால் வ்யாகுலமடைந்த கைகளும் சஞ்சலமான நேத்ரங்களும் உடைய இவர் யார்? ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறார்? தேஜஸ்ஸினால் சூழ்ந்த த்ரைலோக்ய மண்டபத்தின் ஸ்தம்பம் போல நிற்கும் புருஷன் தராசை வைத்துக் கொண்டு ஒப்பிட முடியாத ஜ்யோதி ராசியை நிறுத்துக் கொண்டிருப்பவர் யார்? ஸூத்ரதாரியைப் போல ஆகாசத்தை அளந்து கொண்டிருப்பவர் ய ார்? த்ரிவிக்ரம அவதாரமான மஹாவிஷ்ணுதான் இவ்விதம் அளந்து கொண்டிருக்கிறாரா? ஒருவேளை இது ஆகாச ரூபமான ஸரோவரத்தினுடைய அஸ்திவாரமான ஸ்தம்பமாக ஆகியிருக்கிறாரா? தேவா? மிகவும் க்ருபை செய்து எனக்குச் சொல்லுங்கள். விமானத்தில் இருக்கும் இரண்டு தேவதூதரும் மித்ரனாகிய சிவசர்மாவின் வசனத்தைக் கேட்டு துருவனுடைய, சீரஞ்ஜீவியான கதையைக் கூறுகிறார்கள். ஸ்வாயம்புவ மனுவிற்கு உத்தானபாதன் என்று ஒரு புத்திரர் இருந்தார். உத்தானபாதருக்கு இரு மனைவிமார்கள் இருந்தனர். அவர்கள் ஸுநீதியும், ஸுருசியும் ஆவர். ஸுநீதிக்கு துருவனும்; ஸுருசிக்கு உத்தமனும் பிறந்தார்கள். ஒரு ஸமயம் மஹாராஜா தர்பாரில் இருந்தார். ஸுருசி தன் புத்திரனை வஸ்திராபரணங்கலால் அலங்காரம் செய்து இருந்தாள். விநயமே வடிவாயுள்ள (துருவன்) அப்பொழுது 344 காசீ காண்டம் செவிலித்தாயின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது துருவன் ஸுருசியின் மகனான உத்தமன் ராஜ ஸபைக்குச் செல்வதைப் பார்த்துத் தானும் சென்று தந்தையான ராஜா உத்தானபாதரை நமஸ்கரித்தான். அந்த ஸமயம் ஸுநீதியின் புத்ரன் த்ருவன் - மஹாராஜாவின் மடியில் உத்தமன் அமர்த்திருப்பதைப் பார்த்தான். அவனும் குழந்தையாதலால் சஞ்சல மனதுடையவனாய் தானும் மஹாராஜாவான தனது பிதாவின் மடியில் உட்கார ஆசைப்பட்டான். அப்பொழுது அங்கிருந்த ஸுருசியானவள் பிதாவின் மடியில் உட்காரப்போன த்ருவனைப் பார்த்து "ஏ! அபாக்யவதியின் மகனே! நீ குழந்தை புத்தியினால் மஹாராஜாவின் மடியில் அமரப் பார்க்கிறாய் அல்லவா? அபாக்யவதியின் கர்ப்பத்தில் பிறந்தவனே! நீ இந்த ஸிம்மாஸனத்தில் அமருவற்குப் புண்ணியம் பண்ணவில்லீ. கொஞ்சம் புண்ணியம் செய்திருந்தாயானால் ஏன் அந்த அபாக்யவதியின் வயிற்றில் பிறக்கிறாய்? இதிலிருந்தே நீ உன் புண்ணியத்தை அறிந்துகொள். ராஜகுமாரனாய் இருந்தும்கூட நீ என்னுடைய கர்பத்தை அலங்கரிக்கக் கொடுத்து வைக்கவில்லீ. மஹீபதியின் மடியில் உட்கார்ந்து மரியாதையும் கௌரவமும் பெருகும்படி இந்தச் சிறந்த ஸிம்மாஸனத்தில் வீற்றிருக்க விரும்புவாயானால் சுருசியின் சோபனமான கர்ப்பத்தை விட்டு மற்றவளுடைய கர்ப்பத்தில் போய் ஏன் பிறந்தாய்? இவ்விதமாக ராஜஸபையின் மத்தியில் துருவனை மிகவும் இழிவாக ஏசினாள், துருவன் கண்களின் (தளும்பும்) ஜலத்தை அடக்கிக்கொண்டு பேசாமல் இருந்தான். பட்டமஹிஷி ஸுருசியின் ஸௌபாக்ய கர்வத்தில் ஊறிப்போயிருந்த அரசனும் இது உசிதம் அநுசிதம் என்று ஒரு வார்த்தையும் கூறாமல் இருந்தான். துருவன் ஸபையை விட்டு குழந்தைகளுக்குண்டான சேஷ்டைகள் மூலமாக அத்யாயம்–19 345 சோகத்தை மறைத்துக் கொண்டு ராஜாவை மறுமுறை வணங்கிவிட்டுத் தன்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பினான். ஸுநீதியும் குணசீலனானத் தன் புதல்வனைப் பார்த்துவிட்டு குழந்தையின் முகத்திலிருந்தே அவன் அவமானப்பட்டு வருவதை அறிந்து கொண்டாள். உடனே அவள் குழந்தையின் ஸமீபம் சென்று வருத்தத்தால் வாடியிருக்கும் மகனுக்கு ஆறுதல் கூற விரும்பினாள். முத்தமிட்டு இதயத்துடன் அணைத்தாள். பிறகு அந்தப்புரத்தில் ஸுநீதி தனியாக இருக்கும் ஸமயம் பார்த்து, துருவன் நெடுமூச்செறிந்து தன் மாதாவின் முன்னால் அழத் தொடங்கினான். மாதாவும் கண்ணீர் வடிக்கும் புத்திரனை ஸமாதானப்படுத்தினாள். மென்மையான கைகளினால், மிருதுவான வஸ்திரத்தின் முந்தாணையினால், அவன் முகத்தைத் துடைத்துக் கொண்டே கூறினாள். மகனே! ஏன் அழுகிறாய் அப்பா? ராஜா அங்கிருக்கும் போது உன்னை யார் அவமானப்படுத்தினார்கள்? இதன் பிறகு ஜலத்தை எடுத்து வாய் கொப்பளித்து ஆஹாரம் உட்கொள் கொள் என்று வற்புறுத்திக் கேட்டவுடன் துருவன் சொல்ல ஆரம்பித்தான். தாயே! நான் உன்னிடம் ஒன்று கேட்பேன், நீ சரியாக பதில் சொல்ல வேண்டு, நீயும், ஸுருசியும் மஹாராஜாவிற்கு ஒரே மாதிரி தானே மனைவியாக இருக்கிறீகள். அப்படியிருக்கும்போது ஸுருசியிடம் மாத்திரம் ஏன் பிதா - மிகவும் அன்பாக இருக்கிறார்? நீ மாத்திரம் ஏன் பூபதிக்கு அன்பானவளாக இருக்கவில்லீ? நானும், உத்தமனும் இருவருமே ராஜகுமாரர்கள் தானே - நான் அநுத்தமனா? நீ அபாக்கியவதியா? பின் ஏன் ஸுருசி அவ்விதம் கூறுகிறாள்? ராஜாவின் ஸிம்மாஸனம் உத்தமனுக்குத் தான் ஏற்றது என்றும், நான் அதில் உட்காரப் புண்ணியம் பண்ணவில்லீ என்றும் கூறி. உன்னையும் அபாக்யசாலி 346 காசீ காண்டம் என்கிறாளே, நான் செய்த புண்ணியம் துச்சமானதா? என்றான். மிகவும் புத்திசாலியான, ராஜநீதிகளை யறிந்த ஸுநீதி நியாயமாகப் பேசும் துருவனுடைய வார்த்தைகளைக் கேட்டு நெடுமூச்செறிந்து மெல்ல மெல்ல மகனை சாந்தப்படுத்தும் பொருட்டு ஸாமான்யமாக இருக்கும் சக்களத்திப் பொறாமையை விட்டு விட்டு இயற்கையான மதுரவசனத்தில் சொல்லத் தொடங்கினாள். ஸுநீதி கூறினாள்- அப்பனே அதிபுத்திமானான குழந்தாய்! நான் நிர்மலமான உள்ளத்துடன் உனக்கு எல்லாம் கூறுகிறேன். மனதில் கூட அவமானமாக நினைக்காதே. ஸுருசி கூறியதெல்லாம் உண்-மையே ஒன்றும் பொய்-யல்ல. அவள் தான் அர-ச-ரின் பட்-டமகிஷி. மற்ற ராணிகளையெல்லாம் விட அரசருக்கு மிகவும் பிரியமானவள். அவள் முன் ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறாள். அதனாலேயே அதை இந்த ஜன்மத்தில் அனுபவிக்கிறாள். அரசரும் அவளிடம் அதிப்ரியமாக இருக்கிறார். நான் அபாக்யவதி. அரசரின் எத்தனையோ மனைவிகளில் ஒருவளாகக் கருதப்படுபவள். ராஜ பத்னியை ராஜமாதா என்று கூறுவார்கள். மற்றவர்கள் பெயருக்குதான் ராஜபத்னிகள். இவர்கள் எல்லாரிடமும் ராஜாவிற்கு அதிகம் ப்ரியம் கிடையாது. உத்தமன் மிகவும் புண்ணியம் சேர்த்து வைத்திருப்பதால் புண்ணியவதியான மாதாவின் கர்பத்தில் பிறந்திருக்கிறான். அதனால் அவனே ஸிம்மாஸனத்திற்குத் தகுந்தவன். சந்திரப்ரபை, சத்ரம், சாமரம், அத்தனை உயரமான ராஜ ஸிம்மாஸனம், மதமத்தமான யானைகள், வேகமுடைய குதிரைகள், நிஷ்கண்டகமான ராஜ்யம், ஸர்வச்ரேஷ்டமாக ஹரிஹரன் இவர்களுக்குப் பூஜை. அத்யாயம்–19 347 விபுலமான கலீஞானம், அத்யயனம், ஒருவராலும் ஜயிக்க முடியாத வீரம், காமக்ரோதங்களாகிய ஆறு சத்ருக்களிடத்தும் ஜயம், ஸ்வாபிமானம், நிறைந்த புத்தி கருணையோடு கூடிய பார்வை, மதுரமான பேச்சு, காரியங்களில் நிபுணத்வம், குருஜனங்களிடத்து விநயம் எப்பொழுதும் தூய்மை, எப்பொழுதும் பரோபகாரம், தேஜஸ்ஸுடன் கூடின மனோவ்ருத்தி, நிரந்தரமான அதீனமான வாத ஸபாவில் பேசக் கூடிய சாதுர்ய புத்தி, யுத்தத்தில் தைர்யம், பந்துவர்கத்தில் ஸரளத்தன்மை, கொடுக்கல் வாங்கல்களில் கடினத்தன்மை. ஸ்த்ரீகளிடத்தில் ம்ருதுத்தன்மை, ப்ரஜைகளிடத்தில் வாத்ஸல்யம், ப்ராம்மணர்களிடம் பக்தி, ஸதாசார வ்ருத்தியில் வாழ்க்கை. பாகீரதீ தீரத்தில் வாஸம், தீர்த்தக்ஷேத்ரத்திலேயே, ரணக்ஷேத்ரத்திலேயே மரணம் யாசகர்களிடம் பராமுகமாக இல்லாதிருத்தல், விசேஷமாக சத்ருக்களிடத்தில் கவனம். குடும்ப ஜனங்களுடன் போஜனம், தானாதிகளினால் நரர்களைப் பலனுள்ளதாகச் செய்வது, தினம் வித்யாப்யாஸம் எப்பொழுதும் மாதா பிதாக்களுக்கு ஸேவை. ப்ரதி தினமும் கீர்த்தியை சேகரித்து வைத்துக் கொள்ளுதல், ஸத்ய தர்மத்தை சேகரித்தல், ஸ்வர்கம், மோக்ஷம் இவைகளை அடைய ஸித்தி பண்ணுதல், எப்பொழுதும் நன்னடத்தையுடனன் இருப்பது தினம் இதிஹாஸ புராணாதிகளைக் கேட்டல், ஸாது ஸங்கம், தகப்பனின் நண்பர்களுடன் தோழமை; ஆபத்து சமயத்தில் தீரம், உறுதியான மனப்பான்மை, வாக்விலாஸத்தில் ஆழம், பாத்ரம் ஏந்தி பிக்ஷை எடுப்பவர்களிடம் உதாரம். தபஸ்ஸினாலும், நியமத்தினாலும் ஒருவித ஆர்வம். அதனால் சரீரத்தைப் பெருக்க விடாமல் வைத்துக் கொள்ளுதல் முதலான தபஸ்யாரூபமான வ்ருக்ஷத்தில் மனோரதங்களான பழம் பழுக்கும். 348 காசீ காண்டம் அதனால் மஹாதேவரிடம் நீயும் நானும் அதிக தபஸ் பண்ண முடியவில்லீ. ராஜஸாந்தித்யம் கிடைத்தும் ராஜலக்ஷ்மியிடம் நமக்குப் பங்கில்லீ. அதனால் மானமும் அவமானமும் நமது கர்ம வசத்தினாலேயே ஏற்படுகிறது. ப்ரம்மாவினால்கூட நமக்கு ஏற்பட்டிருக்கும் விதியின் பலனைக் குறைக்க முடியாது. அதனால் எனது குழந்தாய்! நீ வருத்தப்படாதே. முன் ஜன்ம பாக்கியமே இஷ்ட வஸ்துக்களைக் கொடுக்கிறது. ஸுநீதியின் இந்த நீதிமயமான வாக்யங்களைக் கேட்டு துருவன் பதில் கூ ற ஆரம்பித்தான். ஏ ஜனனீ! எ னது வார்த்தைகளை உறுதியுடன் கேள். ஹே! தபஸ்வினீ! கஷ்டம் ஸஹிப்பவளே! என்னைப் பாலன் என்று நினைத்து அவமானப்படுத்தாதீர்கள். அம்மா! நான் பவித்ரமான மநு வம்சத்திலேயே பிறந்திருப்பது நிஜமானால், உத்தானபாதருடைய சொந்த பிள்ளையானால் உன்னுடைய கர்ப்பத்தில் பிறந்தது நிச்சயமானால், தபஸ்தான் எல்லா ஸம்பத்துக்களுக்கும் காரணமானால் மற்றவர்களால் அடைய மிகவும் கஷ்ட ஸாத்யமான பதவியை அடைந்ததாகவே நினைத்துக் கொள். அம்மா! பாச பந்தந்தை நீக்கி விட்டு எனக்கு தபஸ்ஸிற்கு செல்ல அனுமதி கொடு. உன்னுடைய ஆசீர்வாதத்தினால் என்னை ஸந்தோஷப்படுத்து போதும். இந்த ஒரு உதவி மாத்திரம் எனக்குச் செய். தனது குமாரனை அதிக புத்திசாலியும், பரம உத்தமனாகவு-ம் எண்ணின போதும்கூட அவள் சொன்னாள்- பால் மணம் மாறாத பாலகனே! இப்பவும் உன் வயது ஒன்பதைத் தாண்ட வில்லீயே, அப்பா, இந்த விஷயத்தில் உனக்கு ஸம்மதம் கொடுக்க முடியுமா? ஆனால் கூறுகிறேன். சக்களத்தியின் வசனரூபமான ஈட்டியினால் துளைக்கப்பட்ட உன்னுடைய ஹ்ருதயத்தில், உன்னுடைய கண்ணிலிருந்து விழுந்த கண்ணீர் ஒரு நிமிஷம் நேரம் தங்கவில்லீயே. நான் என்ன செய்யட்டும்! அத்யாயம்–19 349 குழந்தாய் அந்தக் கண்ணீர் பெருக்கே என் ஹ்ருதயத்திலிருந்து என் கண்களின் மூலமாக எப்பொழுதும் பெருகிக் கொண்டேயிருக்கிறதே. அந்த துக்கக் கண்ணீர் பெருக்கானது ஒரு பூரண நதியாகும் போலிருக்கிறதே. அப்பா! நீ எனக்குப் புதல்வனல்லவா? என் வாழ்விற்கு ஒரே ஆதாரமல்லவா? நீயே குருடியான எனக்குக் கோலல்லவா? என்னுடைய கண்கள் உனது முகத்திலேயே பதிந்திருக்கிறனவே. இஷ்ட தெய்வத்திடம் எத்தனைக் காலமோ ப்ரார்த்தித்த பிறகு மிகவும் கஷ்டத்துடன் உன்னைப் பெற்றேன். அப்பா! உன்னுடைய முக சந்திரனைப் பார்த்த என்னுடைய ஹ்ருதய ரூபமான க்ஷீரஸமுத்ரம் ஆனந்தப் பெருக்கான அலீகளைப் பெருக்கி எனது ஸ்தன ரூபமான கரையை உடைத்துக் கொண்டு கிளம்புகிறதே. உன்னுடைய அங்க ஸம்ஸர்கம் எவ்வளவு தன்மையாக இருக்கிறது. அதனால் ஏற்பட்ட புளகாங்கிதரூபமான வஸ்த்ரத்தை இருத்திக் கொண்டு நான் கட்டிலில் ஸுகமாகத் தூங்குகிறேன். ஏ! சந்திரவதனா! உன்னுடைய அதரரூபமான க்ஷீரஸாகரத்தை மதித்து வந்த அமுதமென விளங்கும் உமிழ்நீரை பானம் பண்ணின பிறகும் கூட எனது அபிலாஷை தீரவில்லீயே. உனது குளிர்ந்த குரல் எனது செவியில் விழும்பொழுது சக்களத்தியின் கடும் சொல்லின் வேதனை சற்று நேரத்திற்குக் குறைந்து போகிறது. குழந்தாய்! நீ சற்று நேரத்திற்கு தாமதித்து எழுந்திருந்தாயானால், நான் எண்ணுவதுண்டு- சூர்ய உதயம் ஆகிவிட்டதே, எனது குழந்தையின் முககமலம் இன்னும் மலரவில்லீயே என்று, நீ உன் தோழர்களுடன் விளையாடிவிட்டு வந்தவுடன் உனக்கு அர்க்யம் கொடுக்க வேண்டும் என்று 350 காசீ காண்டம் எண்ணுவதுபோல் எனது ஸ்தனங்கள் பாலீப் பொழிகின்றன. நீ மாளிகையிலிருந்து இறங்கி வெளியில் போகும்போது உனது கால்களின் பத்ம ரேகைகளைப் பார்த்துவிட்டு எனது ப்ராணன் ஒரு ஆதாரம் கிடைத்த மாதிரி ஸந்தோஷப்படும். நீ இரண்டு அடி நடந்து வெளியில் சென்றாயானால் எனது ப்ராணன் நீ வரும்வரை முள்ளில் விழுந்ததுபோல் தவிக்கிறது. அம்ருதம் பொழிகிற மேகத்தைப் போல் நீ சற்று வெளியில் சென்றாயானால் எனது இதயம் சாதகபக்ஷி மாதிரி வெகு ஆச்சர்யமாக வெளியே சென்றுவிடுகிறது. அல்லது உனது சந்திரனை நிகர்த்த முகம் சற்று நேரம் காணாவிட்டால் இந்த ஹ்ருதய ரூபமான சகோரம் - பறந்து உன்னிடம் வரத் தவிக்கிறது. நீ தபஸ்ஸிற்காகச் சென்றாயானால் எனது கடினமான உயிரும் தவித்துக் கொண்டு முள்கள் நிறைந்த வனத்திற்குப் போய்த் தவியாய் தவிக்கும் என்றாள். கடைசியில் துருவன் மாதாவிடம் இருந்து ஆக்ஞையை அரிதில் பெற்று அவளது சரண கமலங்கள் இரண்டையும் தனது கேச பாசமாகிற சகதியில் பதித்து எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அவளும் தனது கண்ணீர் நிரம்பிய கமலபுஷ்பங்களைத் தைர்யமாகக் கயிற்றில் கோர்த்து மாலீயாக அணிவித்தாள். 

Request readers to read from the source further as google is putting restriction to paste here.

No comments:

Post a Comment