Monday, May 18, 2015

Lingotbhava -Periyavaa

Courtesy: http://amrithavarshini.proboards.com/thread/948/#ixzz3V7BTjXWl
தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்

சிவராத்ரி

அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் கர்ப்பக் கிரஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். (சிலகோயில்களில் மட்டும் இந்த இடத்தில் மஹா விஷ்ணு இருக்கிறார்லிங்கோத்பவ மூர்த்தி என்பது பரமேசுவரனுடைய அறுபத்தி நான்குமூர்த்திகளுக்குள் ஒன்றுவிருஷபாரூடர்அர்த்தநாரீஸ்வரர்ஹரிஹரர்நடராஜர்காமாரிபைரவர்தக்ஷிணாமூர்த்திஸோமாஸ்கந்தர்,பிக்ஷாடனர்ஊர்த்வதாண்டவர்ஜலந்தராசுர சம்ஹாரர்கால ஸம்ஹாரர்இப்படி அறுபத்து நான்கு மூர்த்திகள் பரமசிவனுக்கு உண்டு.அவைகளுக்குள் ஒன்று லிங்கோத்பவ மூர்த்தி.

அந்த மூர்த்திதான் சிவாலயத்திலுள்ள லிங்கத்துக்குப் பின்புறம் காணப்படுவதுஅதில்லிங்கத்துக்குள் ஒரு திவ்விய மூர்த்தியிருக்கும்அதன்ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும்அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாதுஇந்தமூர்த்திக்குக் கீழே ஒரு வராக மூர்த்தி இருக்கும்மேலே ஹம்ஸ ரூபத்தில் ஒரு மூர்த்தி இருக்கும்.

இந்த லிங்கோத்பவர் யார்?

ஸ்ரீ ருத்ராபிஷகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டுஅப்புறம்தான் அபிஷகம் பண்ணுவது வழக்கம்அந்த சுலோகம்:

ஆபாதால நபஸ்தலாந்த புவன
ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்
ஜ்யோதிஸ்பாடிக லிங்க மௌலி விலஸத்
பூர்ணேந்து வாந்தாம்ருதை:
அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்
ருத்ராநுவாகான் ஜபன்
த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (த்ருதபதம்
விப்ரோ ()பிஷிஞ்சேத் சிவம் ||

இந்த ஸ்லோகத்தில் என்ன தெரியுமா சொல்லியிருக்கிறதுபாதாள முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப்பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணவேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் சொல்ல முட்யாதுஎந்த வஸ்துவை அதில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை அதுபிரதிபலிக்கும்குண-தோஷம் இல்லாதது அதுஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோஅப்படி அந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறதுஅதன்பின் பச்சை வில்வத்தை வைத்தால்லிங்கமேபச்சையாகத் தோன்றும்சிவப்பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும்அதுநிர்விகாரமானதுபரப் பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும்நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும்என்பதற்குத் திருஷ்டாந்தமாகஇந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறதுஅது எதையும் மறைக்காதுஅதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும்அதன் வழியாகப் பார்க்கலாம்பரம சுத்தமாக நிஷ்களங்கமாக இருக்கும்நிர்குணமான பரமாத்மா வஸ்துவுக்கு அது திருஷ்டாந்தம்நினைக்கிறரூபமாக அது தெரியும்.

மேலே சொன்ன சுலோகப்படிஅதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. "பூர்ணேந்துஎன்று சுலோகத்தில் வருவது, 'பூரண இந்து!'; இந்துஎன்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான்ஈசுவரன் ஜடையும்கங்கையும்கண்காதுமூக்குகைகால் முதலிய அவயவங்களும் கொண்ட"ஸகளரூபத்தில் வருகிறபோதுஅவர் மூன்றாம் பிறையை வைத்துக்கொண்டு சந்திர மௌலியாக இருக்கிறார்ரூபமே இல்லாத பரமாத்மா'நிஷ்களதத்வமாயிருக்கிற போதுஅங்கே சந்திரன்கங்கை எதுவும் இல்லைஅரூபமாயும் இல்லாமல்ஸ்வரூபமாயும் அவயவங்களோடுஇல்லாமல்லிங்கமாக சகள - நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூர்ண சந்திரனை உச்சியில் வைத்திருக்கிறார்அதிலிருந்து அமிருதமேகங்கை மாதிரி கொட்டுகிறது.

யோகிகள் தமது சிரசுக்குள் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள சந்திர மண்டலத்தில்ஜ்யோதி ஸ்வரூபத்தைத் தியானம் பண்ணுவார்கள்அந்தச்சந்திர பிம்பத்திலிருந்து அமிருத்தம் ஒழுகும்அதனால் அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறதுஸமஸ்த பிரபஞ்ச ஸ்வரூபமான ஜ்யோதிர்லிங்கம் குளிர்ந்தால்லோகமெல்லாம் குளிரும்இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்வதுருத்திர அபிஷேகம் செய்வது.ருத்திர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் ஸ்லோகம்இதை எல்லாம் அறிவுறுத்துகிறது.

ஸகல பிரம்மாண்டமும் சிவலிங்கம்தான்ஸ்ரீ ருத்ரத்தில் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறதுஸர்வ பதார்த்தங்களும்நல்லது கேட்டதுஎல்லாம் சிவா ஸ்வரூபம் என்று ஸ்ரீ ருத்ரம் சொல்லுகிறது.

லிங்கம் ஏன் வட்டவடிவமாயிருக்கிறதுவட்டமான ஸ்வரூபத்துக்குத்தான் அடி முடியில்லைஆதியில்லைஅந்தமுமில்லை.மற்றவர்களுக்கு உண்டுமுக்கோணத்துக்கு சதுரத்திற்கு உண்டுஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது.

சரியான வட்டமான (circle) இல்லாமல்லிங்கம் நீள வட்டமாக (ellipse) இருக்கிறது. "பிரபஞ்சமே 'எல்லிப்டிக்'காகத்தான் இருக்கிறதுநம் சூரியமண்டலத்தை (Solar System) எடுத்துக்கொண்டாலும் கிரஹங்களின் அயனம் நீளவட்டமாகத்தான் இருக்கிறதுஎன்று நவீன விஞ்ஞானத்தில்சொல்வதும்பிரம்மாண்டமும் "ஆவிஸ்புரத்என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறது.

யாராவது பந்துவை நினைக்கிறோம்சந்தோஷமாயிருக்கிறதுஆனால் அவருடைய உறுவத்தையும் பார்த்தால்தான் சந்தோஷம்பூரணமாகிறதுஅவ்வாறே உறுவமற்ற சிவமும் ஒரு உருவத்தோடு வந்து அநுக்கிரகம் பண்ணினால்தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவஉண்மை புரியும்உருவத்தைப் பார்த்து பார்த்து ஆனந்தம் அநுபவிக்கிறநமக்கு உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகும்அதற்காகத்தான் உறுவமற்ற பரமேசுவரன்அருவுருவான லிங்கமானதோடுநில்லாமல்அந்த லிங்கத்துக்குளேயே திவ்வியரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார்இப்படி ரூபத்தைக் காட்டினாலும்,வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லைமுடியும் இல்லைஅதாவது ஆதியும் அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தாம் என்றுஉணர்த்துவதற்காகமேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும்கீழே அந்த மாதிரித் தம் பாதம் அதற்குள் அடங்காமலும்இருப்பதாகக் காட்டுகிறார்.

அடிமுடி எல்லை இல்லாமல்அவர் ஜ்யோதி ஸ்வரூபமாக நின்றார்ஜ்யோதிர்லிங்கமாகஆகாயத்துக்கும் பூமிக்குமாக பரமசிவன் உத்பவித்தஇரவே சிவராத்திரியாகும்.

அப்படி ஜோதி ஸ்வரூபமாகப் பரமேசுவரன் நின்ற பொழுதுவிஷ்ணு அவரது பாதத்தைப் பார்க்க பாதாளத்துக்குப் போனார்பூமியைக் கல்லும்ஸ்வபாவம் வராஹத்துக்கு உண்டுஎனவேஅந்த ரூபத்தை எடுத்துக் கொண்டார்பிரம்மா ஹம்ஸ ஸ்வரூபமானவர்பட்சிக்குப் பறப்பதுஸ்வபாவம்பட்சியாகப் பறந்து ஜோதிர்லிங்கத்தின் முடி தேடிப்போனார்இரண்டு பேருக்கும் தேடிப் போனவை அகப்படவில்லைஹம்ஸம்வந்தது. 'நான் கண்டு விட்டேன்எனப் பொய் சொல்லியதுஅதனால்தான் பிரம்மாவுக்குப் பிரத்தியேகமாகப் பூஜை இல்லாமற் போய் விட்டது.பரிவாரமாக மட்டும் வைத்துப் பூஜை செய்வதுண்டுபுராண ஐதிஹ்யத்தில் இப்படி இருக்கிறது.

பிரம்மா ஹம்ஸரூபமாகப் போய்ப் பார்த்தும் சிவ பெருமானின் சிரஸ் அகப்படவில்லை என்றும்விஷ்ணு வராஹ ரூபமாகப் போயும் பாதம்அகப்படவில்லை என்றும் சொல்வதன் தாத்பரியம் என்னவென்றால்பரமாத்மர் ஆதி அந்த ஹீனமான வஸ்து என்பதுதான்சிருஷ்டி,பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து அது என்பதுதான்இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாத வரையே, 'என்சாமர்த்தியத்தால் அறிய முடியும்என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால்வெகு சுலபத்தில் அவர் நமக்குஅகப்பட்டுவிடுவார்அன்பினாலே மிகமிக விரைவில் திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதாலேயேஅவருக்கு 'ஆசுதோஷி'என்று ஒரு பெயர் இருக்கிறது. 'ஆஷுடோஷ் முகர்ஜிஎன்று ஒரு சீர்திருத்த (Reformist) முக்கியஸ்தரைச் சொல்வார்கள்ஆசுதோஷிதான்'ஆஷுடோஷ்என்றாயிற்று. 'ஆசுகவிஎன்றால் கேட்டவுனேயே கவி பாடுகிறவர் அல்லவாஇப்படியே ஸ்மரித்த மாத்திரத்தில் சந்தோஷித்துஅநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல்தான் ஆசுதோஷி.

சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில்அவரை அப்படியே ஸ்மரித்துஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும்அதைவிட ஆனந்தம் வேறில்லை.


No comments:

Post a Comment