Tuesday, January 20, 2015

CHAPPAL & CROWN

Courtesy: Sri.GS.Dattatreyan

செருப்பு சிம்மாசனம் கேட்குதா ? என்று யதார்த்தமாக பேச்சுவழக்கில் நாம் சொல்வோம் !!!!

அது செறுக்குடனும், இறுமாப்புடனும், அறியாமையினாலும் சொல்லப்படும் பேச்சுவழக்கு தானே அன்றி அதன் உண்மையான கதை வைகுண்டத்திலிருந்து துவங்குகிறது .....

வைகுண்டத்தில் ஒரு நாள் பரந்தாமன் தமது பாதுகைகளை பள்ளியறைக்குள் விடுத்து பாம்பணையில் படுத்தார் :...

அதனை கண்ணுற்ற பரந்தாமனின் திருமுடிக்கு (கிரீடம்) கோபம் உண்டாயிற்று !

'' ஏ பாதுகையே !....கண்ட இடமெல்லாம் மிதிக்கும் நீ எப்படி பள்ளியறைக்குள் வரலாம் ?.....வெளியே போ ?'' என்றது :..

பதிலுக்கு பாதுகை , '' நானாக வரவில்லை ....பகவானின் திருப்பாதங்கள் தான் என்னை உள்ளே விட்டது !'' என்றது பரிதாபமாக :

'' நான் பகவானின் சிரசின் மேல் இருப்பவன் !...நான் சொல்கிறேன் ....வெளியே போ !'' என்று செருக்குடன் கூறியது திருமுடி.

இப்போது பாதுகை பொறுக்க முடியாமல் , '' திருமுடியே ....என்னை விரட்டாதே .....பகவானின் அடியார்கள் ஐயனின் பாதத்தையே தரிசிக்கிறார்கள் ! '' என்று கூற .....

இதனை கேட்டுக்கொண்டிருந்த சங்கும் , சக்கரமும் 
'' பாதுகையே வெளியே போ '' என்றன :...

வருத்தமுற்ற பாதுகை பகவானை பார்த்து ' '' கருணைக்கடலே !....இவர்கள் என்னை கேவலமாக பேசுவது தங்கள் செவிகளில் விழவில்லையா ?'' என்று கதறியது :

அப்போது பகவான் , '' பாதுகையே ....வருந்தாதே ...அவர்கள் உன்னை பூஜிக்கும் காலம் நெருங்கி விட்டது !..''என்றவர் திருமுடியை பார்த்து ,

'' திருமுடியே ....நீ தற்பெருமை பேசியதால் , அடுத்து நான் எடுக்கப்போகும் ராமாவதாரத்தில் 14 வருடங்கள் இந்த பாதுகையின் மீது இருப்பாய் !...

சங்கே ! சக்கரமே !..நீங்கள் பாதுகையை இகழ்ந்ததால் ...

ராமாவதரத்தின் போது பாரத , சத்ருக்கனராக பிறந்து பாதுகையை 14 ஆண்டுகள் வழிபடுவீர்கள் !'' என்றார் :

இது அப்படியே நிகழ்ந்தது !...பாதுகை சிம்மாசனம் ஏறி மணிமகுடம் தரித்தது !

பாரத , சத்ருக்கனர் 14 ஆண்டுகள் அந்த பாதுகையை பூஜித்து வழிபட்டனர் !

தலைமைப்பதவியில் இருப்பவர்களுக்கு ஆணவம் இருக்கக்கூடாது என்பதை இக்கதை நமக்கு அறிவுறுத்துகிறது....

No comments:

Post a Comment