Thursday, November 6, 2014

five

Courtesy: Sri.Tamilselvan

ஐந்தாய் அமைந்தவை
.
* பஞ்ச புராணம்:- தேவாரம், திருவாசகம், திரு விசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.

* பஞ்ச கங்கை:- ரத்ன கங்கை, தேவ கங்கை, கயிலாய கங்கை, உத்ர கங்கை, பிரம்ம கங்கை.

* பஞ்ச ரிஷிகள்:- அகத்தியர், புலஸ்தியர், துர்வாசர், ததீசி, வசிஷ்டர்.

* பஞ்ச குமாரர்கள்:- விநாயகர், முருகர், வீரபத்திரர், பைரவர், சாஸ்தா.

* பஞ்ச நந்திகள்:- போக நந்தி, வேத நந்தி, ஆத்ம நந்தி, மகா நந்தி, தர்ம நந்தி.

* பஞ்ச மூர்த்திகள்:- விநாயகர், முருகர், சிவன், அம்பாள், சண்டிகேசுவரர்.

* பஞ்சாபிஷேகம்:- வில்வ இலை கலந்த நீர், ரத் தினங்கள் இடப்பட்ட நீர், பச்சை கற்பூரம், குங்குமப்பூ, கிராம்பு, விளாமிச்சை வேர் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம், தர்ப்பைப்புல் இடப்பட்ட நீர், பழச்சாறு கலந்த நீர்.

* பஞ்ச பல்லவம்:- அரசு, அத்தி, வில்வம், மா, நெல்லி.

* பஞ்ச இலைகள்:- வில்வம், நொச்சி, விளா, மாவிலங்கு, கிளுகை.

* பஞ்ச உற்சவம்:- நித்திய உற்சவம், வார உற்சவம், பட்ச உற்சவம் (மாதம் இரு முறை), மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.

* பஞ்ச பருவ உற்சவம்:- அமாவாசை, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சதுர்த்தி, மாதப் பிறப்பு.

* பஞ்ச பூதங்கள்:- நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.

* பஞ்ச சபைகள்:- ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை. * பஞ்ச ஆரண்யம்:- உஷக் காலம், கால சந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம்.

* சிவபெருமானின் சிரசு:- தத்புருஷம், அகோரம், ஸத்யோஜாதம், வாமதேவம், ஈசானம்.

* பஞ்ச மாலைகள்:- இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.

* பஞ்சாங்கம்:- திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.

* பஞ்சாமயக்ஞம்:- பிரம்மயக்ஞம், பிதுர்யக்ஞம், தேவயக்ஞம், பூதயக்ஞம், மானுஷயக்ஞம்.

* பஞ்ச ரத்தினங்கள்:- வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

* பஞ்ச தந்திரங்கள்:- மித்திர பேதம், சுகிர் லாபம், சந்திவிக்கிரகம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.

* பஞ்ச வர்ணங்கள்:- வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

* பஞ்ச ஈஸ்வரர்கள்:- பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன். * பஞ்ச கன்னியர்கள்:- அகலிகை, திரவுபதி, சீதை, மண்டோதரி, தாரை.

* பஞ்ச பாண்டவர்கள்:- தர்மன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன்.

* பஞ்ச ஹோமங்கள்:- கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்.

* பஞ்ச சுத்திகள்:- ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி, லிங்க சுத்தி

* பஞ்ச கோசம்:- அன்மைய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.

* பஞ்ச கவ்யம் (கோமாதா):- பால், தயிர், கோமியம், சானம், நெய்.

* பஞ்சலோகம்:- தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்.

* பஞ்சாப்-ஜீவ நதிகள்:- ஜீலம், ரவி, சட்லெஜ், பீஸ்(பீயாஸ்), ரசனாப்.

* மஹாவிஷ்ணுவின் ஆயுதங்கள்:- சங்கு, சக்கரம், கதை, வாள், வில்.

* ஐவகை நிலங்கள்:- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.

* ஐம்பெரும் காப்பியங்கள்:- மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம்.

* பஞ்ச மகா பாதகங்கள்:- காமம், கள்ளுண்டல், களவு, கொலை, பொய்.

* பஞ்ச சயனம்:- அழகு, குளிர்ச்சி, வெண்மை, மென்மை, மணம்.

* பஞ்ச புராண ஆசிரியர்கள்:- (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்), மாணிக்கவாசகர், கரு ஆர்த்தேவர், சேத்தனார், சேக்கிழார்.

* காயத்திரியின் ஐந்து முகங்கள்:- பிரம்மன், விஷ்ணு, சதாசிவன், ருத்ரன், ஈஸ்வரன்.

No comments:

Post a Comment