Thursday, October 23, 2014

Interesting spiritual facts

Courtesy: smt.Uma Balasubramanian

          தாய்க்கு ஐந்து பெயர்கள்  : ---

1     ஜநநீ----  தகப்பனால் தன் சரீரத்தில் சேர்க்கப்பட்டதற்குக் கருவாக உயிர்  கொடுப்பவள்.
2     மாதா :--  கருவைத் தன்னுள்அடக்கி வைத்து அடைகாப்பவள்.
3     ஸவித்ரி :--  கருவாகத் தாங்கியதை வெளியில் வளர்க்கத் தருணம் வந்ததும் வெளியிடுபவள்.
4.     தாத்ரீ :---  சிசுவைப்  போஷித்து வளர்ப்பவள்.
5     அம்பா:---  ஆபத்து வேளையில் தானே வந்து காப்பவள்.
 
           திருமால் படுக்கை எட்டு வகை
1.       வடபத்ர சயனம்----------------------------------              திருவில்லிபுத்தூர்
2.       வீர சயனம்    -----------------------------------             திரு இந்தளூர்
3.       தல சயனம்    ----------------------------------              திருக்கடல்மல்லை
4.       உத்தான சயனம் ---------------------------------             திருக்குடந்தை
5.       தர்ப்ப சயனம்   ----------------------------------             திருப்புல்லாணி
6.       புஜங்க சயனம் ---------------------------------------            திருவரங்கம், திருக்கோட்டியூர்
7.       போக சயனம்  --------------------------------------            தில்லை திருச் சித்திரகூடம்
8.       மாணிக சயனம்-------------------------------------            திருநீர்மலை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                     வியாசர் துதி
வ்யாசம் வஸிஷ்ட நப்தாரம் சக்தோ பௌத்ரம் அகல்மஷம்!
பராசராத்மஜம் வந்தே சுகநாதம் தபோநிதிம்    -------
என்ன அர்த்தம் தெரியுமா?-----
வஸிஷ்டருக்குக் கொள்ளுப் பேரரரும், சக்தி மகரிஷிக்குப் பேரரும் , பராசரருக்குப் புத்திரரும் , சுகருக்குத் தந்தையும் , தவச் செல்வரும் தோஷமற்றவருமான வியாசரை வணங்குகிறேன் . -------
 
                  மாதங்களின் வடமொழிப்  பெயர்கள்
சைத்ரம்                                   சித்திரை
வைசாகம்                                 வைகாசி
ஜியேஷ்டகம்                               ஆனி
ஆஷாடீ                                   ஆடி
ச்ராவணி                                  ஆவணி
ப்ரௌஷ்டபதீ                              புரட்டாசி
ஆஸ்வயுஜம்                              ஐப்பசி
கார்த்திகம்                                 கார்த்திகை
மார்க்கசீரிஷம்                             மார்கழி
தைஷீ                                    தை
மாசம்                                     மாசி
பால்குநம்                                 பங்குனி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
                    மனிதனுக்கு  இரண்டு
1.       வருவதும் போவதும் இரண்டு            இன்பமும் துன்பமும்
2.       வந்தால் போகாதது இரண்டு              புகழும், பழியும்
3.       போனால் வராதது இரண்டு               மானமும், உயிரும்
4.       தானாக வருவது இரண்டு                இளமையும்,முதுமையும்
5.       உடன் வருவது இரண்டு                  புண்ணியமும் , பாவமும்
6.       அடக்க முடியாதது இரண்டு               ஆசையும் , துக்கமும்
7.       தவிர்க்கமுடியாதது இரண்டு              பசியும் ,தாகமும்
8.       பிரிக்க முடியாதது இரண்டு               பந்தமும் , பாசமும்
9.       இழிவைத் தருவது இரண்டு              பொறாமையும் , கோபமும்
10.    அனைவருக்கும் சமமாவது இரண்டு       பிறப்பும் , இறப்பும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------                         
   இராமாயணத்தில் நவ பக்தி  
 
சிரவணம்                   அனுமான் 
கீர்த்தனம்                   வால்மீகி
ஸ்மரணம்                  சீதை
பாதசேவனம்                பரதன்
அர்ச்சனம்                        சபரி
வந்தனம்                   விபீடணன்
தாஸ்யம்                   லக்ஷ்மணன்
ஸக்யம்                    சுக்ரீவன்
ஆத்ம நிவேதனம்           ஜடாயு  

No comments:

Post a Comment