Courtesy: smt.Uma Balasubramanian
தாய்க்கு ஐந்து பெயர்கள் : ---
1 ஜநநீ---- தகப்பனால் தன் சரீரத்தில் சேர்க்கப்பட்டதற்குக் கருவாக உயிர் கொடுப்பவள்.
2 மாதா :-- கருவைத் தன்னுள்அடக்கி வைத்து அடைகாப்பவள்.
3 ஸவித்ரி :-- கருவாகத் தாங்கியதை வெளியில் வளர்க்கத் தருணம் வந்ததும் வெளியிடுபவள்.
4. தாத்ரீ :--- சிசுவைப் போஷித்து வளர்ப்பவள்.
5 அம்பா:--- ஆபத்து வேளையில் தானே வந்து காப்பவள்.
திருமால் படுக்கை எட்டு வகை
1. வடபத்ர சயனம்---------------------------------- திருவில்லிபுத்தூர்
2. வீர சயனம் ----------------------------------- திரு இந்தளூர்
3. தல சயனம் ---------------------------------- திருக்கடல்மல்லை
4. உத்தான சயனம் --------------------------------- திருக்குடந்தை
5. தர்ப்ப சயனம் ---------------------------------- திருப்புல்லாணி
6. புஜங்க சயனம் --------------------------------------- திருவரங்கம், திருக்கோட்டியூர்
7. போக சயனம் -------------------------------------- தில்லை திருச் சித்திரகூடம்
8. மாணிக சயனம்------------------------------------- திருநீர்மலை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வியாசர் துதி
வ்யாசம் வஸிஷ்ட நப்தாரம் சக்தோ பௌத்ரம் அகல்மஷம்!
பராசராத்மஜம் வந்தே சுகநாதம் தபோநிதிம் -------
என்ன அர்த்தம் தெரியுமா?-----
வஸிஷ்டருக்குக் கொள்ளுப் பேரரரும், சக்தி மகரிஷிக்குப் பேரரும் , பராசரருக்குப் புத்திரரும் , சுகருக்குத் தந்தையும் , தவச் செல்வரும் தோஷமற்றவருமான வியாசரை வணங்குகிறேன் . -------
மாதங்களின் வடமொழிப் பெயர்கள்
சைத்ரம் சித்திரை
வைசாகம் வைகாசி
ஜியேஷ்டகம் ஆனி
ஆஷாடீ ஆடி
ச்ராவணி ஆவணி
ப்ரௌஷ்டபதீ புரட்டாசி
ஆஸ்வயுஜம் ஐப்பசி
கார்த்திகம் கார்த்திகை
மார்க்கசீரிஷம் மார்கழி
தைஷீ தை
மாசம் மாசி
பால்குநம் பங்குனி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
மனிதனுக்கு இரண்டு
1. வருவதும் போவதும் இரண்டு இன்பமும் துன்பமும்
2. வந்தால் போகாதது இரண்டு புகழும், பழியும்
3. போனால் வராதது இரண்டு மானமும், உயிரும்
4. தானாக வருவது இரண்டு இளமையும்,முதுமையும்
5. உடன் வருவது இரண்டு புண்ணியமும் , பாவமும்
6. அடக்க முடியாதது இரண்டு ஆசையும் , துக்கமும்
7. தவிர்க்கமுடியாதது இரண்டு பசியும் ,தாகமும்
8. பிரிக்க முடியாதது இரண்டு பந்தமும் , பாசமும்
9. இழிவைத் தருவது இரண்டு பொறாமையும் , கோபமும்
10. அனைவருக்கும் சமமாவது இரண்டு பிறப்பும் , இறப்பும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இராமாயணத்தில் நவ பக்தி
சிரவணம் அனுமான்
கீர்த்தனம் வால்மீகி
ஸ்மரணம் சீதை
பாதசேவனம் பரதன்
அர்ச்சனம் சபரி
வந்தனம் விபீடணன்
தாஸ்யம் லக்ஷ்மணன்
ஸக்யம் சுக்ரீவன்
ஆத்ம நிவேதனம் ஜடாயு
No comments:
Post a Comment