Tuesday, September 16, 2014

Ashta Veerattanam

Courtesy: Sri.GS.Dattatreyan

சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.

இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட(அஷ்ட) வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.

1. திருக்கண்டியூர் - தஞ்சை மாவட்டம் 
பிரம்மனின் தலை கொய்யப்பட்ட தலம்

2. திருக்கோவிலூர் - விழுப்புரம் மாவட்டம் 
அந்தகாசூரன் அழிக்கப்பட்ட தலம்

3. திருவதிகை - கடலூர் மாவட்டம் 
திரிபுரம் தகனம் செய்யப்பட்ட தலம்

4. திருப்பறியலூர் - நாகை மாவட்டம்
தட்சனின் தலை கொய்யப்பட்ட தலம்

5. திருவிற்குடி - நாகை மாவட்டம்
சலந்திராசூரன் அழிக்கப்பட்ட தலம்

6. திருவழுவூர் - நாகை மாவட்டம் 
யானையை கொன்று தோலை அணிந்த தலம்

7. திருக்குறுக்கை - நாகை மாவட்டம் 
மன்மதன் எரிக்கப்பட்ட தலம்

8. திருக்கடவூர் - நாகை மாவட்டம்
காலனை காலால் உதைத்த தலம்

No comments:

Post a Comment