Thursday, January 24, 2013

ருத்ராட்சம் – 1 of 10



Courtesy: Sri.Mayavaram Guru



சைவ சித்தாந்தப்படி இறைவன் புரியும் ஐந்து திருச்செயல்கள் "பஞ்ச கிருத்யம்" என்று அழைக்கப்படுகிறது. அவை

சிருஷ்டி
ஸ்திதி 
சம்ஹாரம்
திரோபவம் 
அனுக்கிரஹம்

என்பவையாகும்.

சிவபெருமானே ஐந்தொழில்களையும் புரிகிறான்.
பஞ்சாட்சர மந்திரமாகிய நமசிவய மந்திரத்தில் ஒவ்வொரு அட்சரமும் ஐந்தொழில் ஒவ்வொன்றையும் உணர்த்துகிறது.

சி - படைத்தல்
ய - காத்தல் 
ந - அழித்தல் 
ம - மறைத்தல்
வ - அருளல் 

ஆகும். 

சிவ திருச் சின்னங்களில் ஒன்றான ருத்ராட்சம் என்பதைப் பார்த்தால் , ருத்ர அட்சமே ருத்ராட்சம் ஆகும்.

ருத்ரன் அட்சம் = ருத்ராட்சம் 
அட்சம் அல்லது அக்க்ஷம் என்பது கண்களைக் குறிக்கும். ஆக ருத்ராட்சம் என்பது ருத்ரனின் கண்களைக் குறிப்பதாகும்.

ருத்ரனின் திருக் கண்களில் இருந்து விழுந்த நீர்த் துளிகளில் இருந்து ருத்ராட்ச மரங்கள் முளைத்தன. அம்மரத்தில் தோன்றிய மணிகளுக்கு ருத்ராட்சம் என்ற பெயரே உண்டானது.

சாந்தமும் கருணையும் தயாளமும் நிறைந்த ருத்ரனின் கண்களுக்கு நிகரான ருத்ராட்சம் நம் இன்னல்கள் அனைத்தையும் நீக்கும் என்பதில் அய்யமில்லை.

ருத்ராக்ஷம் தாரே யேந் யஸ்து 
ருத்ர நேத்ர ஸமுத்பவம் 
ஸர்வ வ்யாநிஹரம் புண்யம் 
ஸவர்வதா ஆரோக்ய மாபீனுயாத் 

என்ற சம்ஸ்கிருத ஸ்லோகம், 
ருத்ராட்சதைக் கழுத்தில் அணியும் பக்தர்கள், 
இவ்வுலகில் மீண்டும் பிறக்கும் பிறவித் துன்பத்தை அனுபவிக்க மாட்டார்கள் என்னும் கருத்தினைத் தெரிவிக்கிறது.

அடுத்த மின்னஞ்சலில் தொடருவோமே ..
.

No comments:

Post a Comment