Friday, February 24, 2012

சிவனுக்கு ஆபரணம்

Courtesy: Sri.Mayavaram Guru

சிவனுக்கு ஆபரணம் 

எந்த பக்தராவது கொன்றைப்பூ கொண்டு வந்து கொடுத்தால், பெரியவாள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் காரணம்; பரமேசுவரன் மிகவும் உவந்து ஏற்றுக் கொள்ளும் பூ-கொன்றைப்பூ.
... ஒரு பக்தர்,கூடை நிறைய கொன்றைப் பூ கொண்டு வந்து சமர்ப்பித்தார். பெரியவாள் கூடையையே ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தார்கள். "கூடையிலே வேறே என்ன கொண்டு வந்திருக்கே?" "கொன்றைப் பூ மட்டும்தான்" "இல்லே! பரமேசுவரனுக்கு உகந்த பூ மட்டும் கொண்டு வரலே. அவனுக்கு ஆபரணமும் கொண்டு வந்திருக்கே!"
யாருக்கும் விளங்கவில்லை. பூக்கூடையை சற்றுத் தள்ளி எடுத்துக் கொண்டு போய்,ஒரு மூங்கில் தட்டில் கவிழ்க்கச் சொன்னார்கள். தட்டில் கொட்டியவுடன், ஒரு சர்ப்பம் சர்ரென்று வெளிப்பட்டு நொடி நேரத்தில் ஓடி மறந்தே போயிற்று.
பரபரப்புடன் பெரியவாளிடம் வந்து சொன்னார்கள். பெரியவாள் புன்னகைக்கிற மாதிரி தரிசனம் கொடுத்துக் கொண்டு, அந்த பக்தரைப் பார்த்து,"இனிமேல் சந்திரமௌலீஸ்வரருக்கு பூ மட்டும் கொண்டு வா: ஆபரணம் எல்லாம் வேண்டாம்!" என்றார்கள்.

அலை அலையாய் சிரிப்பு.


No comments:

Post a Comment