Thursday, August 5, 2010

lalita sahasranama & dikshitar

 
Courtesy : Sri.Niranjhan kumar
======================
 
அம்பா, எத்தனை பெயர்
உனக்கு!<http://jeevagv.blogspot.com/2009/12/blog-post_22.html>
 
 
 
முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளைப் பார்த்தால், பல கீர்த்தனைகளில் -
பல்லவி, அனுபல்லவி, சரணம் - எனப் பல இடங்களில் அம்பாளின் லலிதா சஹஸ்ரநாமாவளிகள்
இடம் பெறுவதைப் பார்க்கலாம். அவற்றை இங்கே பட்டியலிடலாமா!
 
பாடல் : (இராகம்) : அம்பாளின் பெயர்
-----------------------------------------
1) சிவகாமேஸ்வரீம் சிந்தயேஹம்: (கல்யாணி) : சிதக்னிகுண்டஸம்பூதா (சித் எனும்
தன்னுள் - அக்னி குண்டத்தில் இருந்து வரும் தீ போல, எப்போதும் எழுந்து
கொண்டிருப்பவள் - இதுதான் பாரதி பாடும் அக்னிக்குஞ்சோ!)
 
2) மாதங்கி ஸ்ரீராஜராஜேஸ்வரி: (ரமாமனோகரி) : ரணதிங்கிணிமேகலா
 
3) பரதேவதா ப்ரஹத்குஜாம்பா : (தன்யாசி) மற்றும் நீலோத்பலாம்பிகாயே (கேதாரகௌளை)
மற்றும் காசி விசாலாக்ஷி (கமகக்கிரியா): கலிகல்மஷநாசினி
 
4) காமாஷி காமகோடி பீடவாசினி: (சுமத்யுதி) : சாம்ராஜ்யதாயினி
 
5) பஞ்சாசத்பீடரூபிணி : (தேவகாந்தாரம்) : பஞ்சாசத்பீடரூபிணி
இப்பாடலை திரு.மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
 
 
6) மதுராம்பாயாஸ் தவ தாஸோஹம் : (பேகடா) : மாத்ருகாவர்ணரூபிணி
 
7) ஸ்ரீமதுராபுரி : (பிலஹரி) : பாடலிகுசுமப்பிரியை
 
8) அவ்யாஜகருணா காமாக்ஷி : (சாலங்கநாடை) : சவ்யாபசவ்யமார்க்கஸ்தாயி
 
9) திரிபுரசுந்தரி சங்கரி குருகுஹ ஜனனி: (சாமா) : சாமகானப்பிரியகரி
 
10) ஏகாம்பரேஸ்வர நாயகீம் : (சாமா) : வாஞ்சிதார்த்த ப்ரதாயினி
 
11) ஸ்ரீமதுராம்பிகையா : (அடணா) : நாமாபாரயணப்பிரியா : (நாமத்தினைப் பாராயணம்
பண்ண வேறென்ன வேண்டும்!)
 
12) பாலாம்பிகாயை நமஸ்தே வர தாயை : (நாட குறிஞ்சி) : ஸ்ரீ ஹரித்ரான்னரசிகாயை
 
13) நீலோத்பலாம்பிகாயே : (கேதாரகௌளை) : மூலமந்திராத்மிகை
 
14) அபயாம்பிகாயை : (யதுகுலகாம்போதி) : குடகுல்பா
 
15) ஸ்ரீமாத சிவவாமாங்கே : (பேகடா) : ஸ்ரீமஹாராக்ச்ஜை
 
16) அம்ப நீலாயதாஷி : (நீலாம்பரி) : புவனேஸ்வரி
 
17) ஸ்ரீமதுராபுரி : (பிலஹரி) : நடேஸ்வரி
 
18) காமாஷி காமகோடி பீடவாசினி: (சுமத்யுதி) : காத்யாயினி
 
19) பரதேவதா ப்ரஹத்குஜாம்பா : (தன்யாசி) : சுவாசினி
 
20) பர்வதராஜகுமாரி : (ஸ்ரீரஞ்சனி) : கௌளினி
~~~~
<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgh8WKf0Jr3-pRoaoMVQS6wPrLrlsjo3UvCbHfY9PYyJ9RFsYtZfVBF6MbycDQFuiI6nk9Hmt8aGfVjeFjzGLw8QXo3H8rvflZSObzhSOrbK7Jd2hbF3sN_NEQOhNrHZWqfKpCsfeI9XDwR/s1600-h/rajarajeshwari.jpg>லலிதா
சஹஸ்ரநாமவளியில், அம்பாளை என்னவெல்லாம் பெயர்களில் பாடிப் பரவசம் கொள்கிறோம்!
நாமவளியின் தாக்கத்தில் விளைந்த பாடல், அடியேன் புனைந்தது:
 
எடுப்பு:
எத்தனை பெயர் உனக்கு - அம்பா,
எத்தனை பெயர் உனக்கு!
 
தொடுப்பு:
பக்தனும் சாக்தனாய் உனைப்பாட - ஓராயிரம்
பெயர் உனக்கே, சக்தியே!
(எத்தனை பெயர் உனக்கு!)
 
முடிப்பு:
இரும்பாய் இருந்திட்ட மனத்தையும், அம்பா,
கரும்பு வில்லாய் வளைத்திட்டாய்.
திரையாய் படிந்த வினையெல்லாம்
நுரையாய் பிரிந்திட வழிசெய், சச்சிதானந்தமே!
(எத்தனை பெயர் உனக்கு!)
knr
--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.

  Every moment, thank God

No comments:

Post a Comment