Tuesday, July 6, 2010

Dhanam,Anna Dhaanam

தானம் செய்வதால் வரும் பலன்கள்.

நாம் தானம் தரும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...

அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.
வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும்.
பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.
கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.
தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.
நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும்.
தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.
வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.
தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்.
நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.
அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.
பால் தானம் - துக்கம் நீங்கும்.
தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும்.
தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.
பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.
அன்னதான மகிமை
கர்ணனைப் பற்றி பல கதைகள் கேட்டிருக்கலாம், படித்திருக்கலாம்
இதோ ஒன்று :-
கர்ணன்வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட தான் செய்தபுண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன்.
தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.
அங்கு சென்று சகலவசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும்வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டுஅலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான்எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் எனக்கு ஏன் இக்கொடிய தண்டனைஎனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.
தலைவனோ கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும்தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல்எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயாஎனக் கேட்டான்.
கர்ணனுக்குஅன்ன தான செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுதுவயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்குஎன்ன தான் வழி எனக் கேட்ட போது தலைவன் கூறினான் உனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் பசி அடங்கி விடும் என்றான்.
கர்ணனுக்குஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா என்ன இது எனஐயப்பாடு இருந்தாலும் வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலைவாயில் வைத்து சப்ப பசி உடனே அடங்கிற்று.
ஒன்றும் புரியாத கர்ணன்இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க தலைவன் கூறினான் அன்பின் கர்ணாநீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்குஅன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க நீயும் உனது வலது கை ஆள்காட்டிவிரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல்நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான்.

முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள், அனாதைஇல்லங்களில் வாழ்பவர்கள், வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கும் மகிழ்ச்சியினையும் புண்ணியத்தைனையும் தரும் .
வாருங்கள் அன்ன தானம் செய்வோம்
knr

--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.

 Every moment, thank God

No comments:

Post a Comment