Saturday, April 29, 2023

Shruti smruti puraananaam - meaning by HH Abhinava vidyateertha mahaswamigal

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

அனைத்துலகின் குருவான ஆதிசங்கரர்

பகவத்பாதரைப்பற்றி ஒரு ஸ்லோகம் கூறப்படுவதுண்டு.

ச்ருதி-ஸ்ம்ருதி-புராணானாம்
ஆலயம் கருணாலயம்  |

நமாமி பகவத்பாத சங்கரம்லோகசங்கரம் || 

(ச்ருதி-ஸ்ம்ருதி, மற்றும் புராணங்களின் ஆலயமாய் விளங்குபவரும், கருணையின் ஆலயமானவரும், பகவத்பாத சங்கரருமாகிய வையகத்திற்கு நன்மை செய்பவரை வணங்குகிறேன்.)

பகவத்பாதர் உலகத்திற்கு நன்மையைச் செய்தவர். அதனால் 'லோகசங்கரர்' என்று கூறப்படுகிறார்.  உலகில் ஜனங்கள் போய்க் கொண்டிருக்கிற போக்கைப் பார்த்த சங்கரர்  "இவர்கள் கடைசியாக சிரேயஸ்ஸை எவ்வாறு அடையப் போகிறார்கள்?  உள்ளத்தில் காமம் (ஆசை), கோபம் (சினம்), லோபம் (பேராசை), மோஹம் (மயக்கம்) , மதம் (அகந்தை), மாத்ஸர்யம் (வயிற்றெரிச்சல்), என்னும் எதிரிகளையெல்லாம் வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு வாழும் மனிதர்கள் சிரேயஸ்ஸை எவ்வாறு சம்பாதிக்கப் போகிறார்கள்?  என்ன தர்மத்தைச் செய்யப் போகிறார்கள்?  தர்மம் செய்யவேண்டும் என்று மனதில் எண்ணமிருந்தாலும் காமமும்,  கோபமும் தர்மம் செய்ய விடாமல் மனிதர்களை எங்கோ கொண்டு செல்கின்றனவே"  என பரிதாபம் கொண்டார்.  மனிதனுக்கு இருந்த அகந்தை, வயிற்றெரிச்சல் போன்றவற்றைப் போக்கி அவனை நல்வழியில் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் சங்கரருக்கு ஏற்பட்டது.  அந்த எண்ணத்தைத்தான் நாம் 'தயை' என்று சொல்வோம்.  யாராவது துன்பத்தில் மாட்டிக் கொண்டிருந்தால் அவனை அதிலிருந்து விடுவித்துச் சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு உண்டோ அவரை நாம் 'தயாசாலி' என்று சொல்வோம்.  பகவத்பாதர் அப்படிப்பட்ட தயாசாலியாக விளங்கினார். அதனால்தான் அவர் 'கருணாலயம்' என்று போற்றப்பட்டிருக்கிறார்.


"ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம்" என்று சுலோகத்தில் வருகிறது.  இந்த 'ச்ருதி ஸ்ம்ருதி' என்பதின் தாத்பர்யத்தை நாம் தீர்மானமாகத் தெரிந்துகொண்டிருந்தாலும், புராணம் என்பது நமக்குத் தெரியாது என்றால் வேதங்களின் பொருளை சுலபமாகப் புரிந்து கொள்வது முடியாது. புராணங்கள் வேதமோ–ஸ்ம்ருதியோ கூறும் சித்தாந்தத்தை  நமக்கு மிகத் தெளிவாக விளக்குகின்றன. வேதத்தின் பொருள் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தால் மஹாபாரதம் போன்ற இதிஹாசத்தையோ, விஷ்ணு புராணம் போன்ற பதிணெண் புராணங்களையோ தெரிந்துகொண்டு பிறகு வேதத்திற்கு அர்த்தம் சொன்னால் அது நலம் பயக்கும். அப்படியில்லாமல் போனால், மனிதன் மந்திரங்களுக்கு விபரீதமான பொருளைப் புரிந்து கொண்டு, அதையே வேதம் சொல்வதாக மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து, உலகத்தை அறியாமை என்னும் இருளில் மூழ்கடித்துவிடப் போகிறானே என்று வேதமே பயப்படுமளவிற்கு ஆகிவிடும்.  அதனால் தான் சங்கரர் ச்ருதி,  ஸ்ம்ருதி, புராணம் என்பவற்றிற்கு ஆலயமாக விளங்குவதாக வர்ணிக்கப்பட்டிருக்கிறார். ச்ருதி, ஸ்ம்ருதி புராணங்களின் இருப்பிடமாம் சங்கரருக்கு கருணையும் இருந்ததால், உலகிற்கு நன்மை செய்வதில் அவருக்கு என்னதான் இடைஞ்சல் இருந்திருக்க முடியும்?  அவர் பாரத நாடு முழுவதும் வேத சாஸ்திரங்களுக்கு வந்த எதிர்ப்புகளையெல்லாம் நீக்கி, வேத சாஸ்திரங்களைப் காப்பாற்றி வந்தார்.  வேத சாஸ்திரங்களைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்று சொல்லிக் கொடுத்தார்.  அதனால் தான் நாம் இன்றும் வேதத்தைக் கற்றுக் கொள்ள முடிகிறது.

ச்லோகத்தில் அவர் " பகவத்பாதசங்கரம் " என்று கூறப்பட்டுள்ளார்.  ( நாம் ) விரும்புவன எல்லாவற்றையும் தரச் சக்தி வாய்ந்த, மிகவும் உத்தமமாகக் கருதிப் பூஜிப்பதற்குரிய பாததாமரைகளைக் கொண்டவர் சங்கரர். 'பாதம் ' ஒரு மாமிசத் துண்டுதானே !  அது என்ன செய்ய முடியும்?  என்று யாராவது கேட்கலாம்.  பாதங்களுக்கு அபிமானியாயிருக்கப்பட்ட எந்த ஒரு சைதன்யம் இருக்கிறதோ அதுவே பூஜிக்கத் தகுந்ததாகும்.  அதனால்,  " நமாமி பகவத்பாதசங்கரம்" என்று கூறப்பட்டது.  

பகவத்பாத சங்கரரான ஆதி சங்கரர் லோகசங்கரர் (உலகிற்கு நன்மை செய்பவர்) ஆவார்.  அவர் வழி காட்டியதால் இன்றைக்கு நாம் இந்த நாட்டில் பழங்காலந் தொட்டு இருந்துவரும் வைதிகப் பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறோம்.  இனியும் நம்மால் காப்பாற்ற முடியும். அந்த வழியில் நாம் நடந்து கொண்டு சிரேயஸ்ஸை அடையவேண்டும்.

Friday, April 28, 2023

Short journey

நாம் சேர்ந்து பயணிக்கப்போவது 
மிகவும் குறுகிய காலமே....

இளம் வயது பெண் ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். 

அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன.

அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் 
இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். 

உடனே அந்த இளம் பெண்ணிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என ஆதங்கப்பட்டார்.

அப்பெண்ணோ புன்னகைத்தவாறு கூறினார்:

நாம் சேர்ந்து பயணிக்கப்போவது 
மிகக் குறுகிய நேரம்தான். எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார்.

அப்பெண்ணின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை!

அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. 

நாம் சேர்ந்து பயணிக்கப் போவது 
ஒரு குறுகிய காலமே.

இங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின், வாய்ச்சண்டை போடுவது, வீண் வாதத்தில் ஈடுபடுவது, பிறரை மன்னிக்க மறுப்பது, 
எதிலுமே அதிருப்தியும் குற்றமும் காணும் 
போக்கினைக் கொண்டிருப்பது நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் செயல் என்பது புரிந்திடும். 

ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டாரா? அமைதியாக இருங்கள், "பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே."

எவரேனும் உங்களுக்குத் துரோகம் புரிந்தாரா, உங்களை ஆக்கிரமவதை செய்தாரா(bully) ஏமாற்றினாரா, அவமானப்படுத்தினாரா? 
காலம் தகுந்த விளைவை தரும். 
அமைதியாக இருங்கள்.

பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே."

ஒருவர் நமக்கு எப்பேற்பட்ட தொல்லைகளை ஏற்படுத்தினாலும், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். 

செயல் விளைவு தத்துவம்.

பயணிக்கப் போவது 
ஒரு குறுகிய காலமே

இப்பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் இறங்க வேண்டிய இடம் எப்பொழுது என்பதும் ஒருவருக்கும் தெரியாது. பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே.

உறவையும் நட்பையும் போற்றுவோம். ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம், மன்னிப்போம் மறப்போம். நன்றி பாராட்டி மகிழ்ச்சியாக வாழும் வழியைப் பார்ப்போம்.

நான் எப்பொழுதாவது உங்களைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். 

நீங்கள் எப்பொழுதாவது என்னைப் புண்படுத்தியிருந்தால், நானும் 
உங்களை மன்னித்துவிடுகிறேன். 

ஏனெனில், 

நாம் பயணிக்கப் போவது 
ஒரு குறுகிய காலமே....

Last minute difficulties .... Mukkoor

🙏
அந்திமக் காலத்தில் நாம் படும் சிரமங்கள்

முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்

எருதைப் போலவே நாமும் பிறர்க்கென உழைத்து ஓடாய்த் தேய்ந்து சிரமப்படுகிரோம்.அந்திமக் காலத்தில் எழுந்திருக்க முடியாமல் போய்விடுகிறது.

அப்போது என்ன சிரமப்படுகிறோம் என்று சாஸ்திரம் சொல்கிறது பாருங்கள்.

வயதான காலம். உட்கார முடியவில்லை. எழுந்திருக்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. கண் தெரியவில்லை. இன்னொருத்தருடைய தயவிலே எப்போதும் இருக்க வேண்டியதாயிருக்கிறது. அந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டுப் போய்விடுகிறது. ஆதி சங்கர பகவத் பாதாள் சொல்கிறார்.

'எல்லாம் இவரை விட்டுப் போய்விடுகிறது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் போக மாட்டேன் என்கிறது: ஆசை!"
அந்த அந்திமக் காலத்திலேயும் சிரமப்படுத்துகிறதே! உடல் கூனி, கேள்விக்குறி போல் போய்விடும் – அந்த மாதிரி ஒரு நிலை ஏற்படுகிறது.

இதுவே கஷ்டம் தான். இன்னொரு கஷ்டம் பாருங்கள்.
அந்திமக் காலத்திலே பத்தினி கூட இருக்க வேண்டும். ஆனால் பத்னியையும் இழந்து விட்டவர் கதி என்ன! அது இன்னமும் கஷ்டமான நிலை!

கல்யாணத்திலே பாணிகிரஹணத்திலே அதற்கு முன்னால் வருகிற சப்தபதி மந்திரத்தில், ' இந்த இளமையிலே உன்னைக் கை பிடித்தேன். பிடித்த இந்தக் கையை, எழுந்திருக்க முடியாமல் தொண்டு கிழம் ஆனாலும் நான் விடமாட்டேன். ஜீவிதாந்தம் நீயும் நானும் அப்படியே இருக்க வேண்டும்' என்று அமைந்திருக்கிறது.
ஆகவே அந்திமக் காலத்தில் பத்னியை இழந்து தவிப்பது இருக்கிறதே… அந்தச் சிரமத்தை சொல்லி முடியாது!
என்ன சிரமத்தைப் படுவார் அவர்?

அடுத்து அதைச் சொல்கிறது சாஸ்திரம்:

எல்லாவற்றுக்கும் பிள்ளைகளிடத்திலேயே கேட்க வேண்டும்! ஒரு தடவை கேட்டால் கொடுப்பார்கள். மறுதடவை கேட்டால் என்ன நினைப்பார்களோ என்று தயக்கம் வரும். பத்னியுமில்லை. உடம்பும் ஒத்துழைக்க மாட்டேனென்கிறது. மருமகள் ஏசுகிறாள். அந்த நச்சுப் பேச்சுக்களைத் தாங்கவே முடியவில்லை.

இப்படி விவரித்துக் கொண்டே வருகிற சாஸ்திரம் கடைசியாய்ச் சொல்கிறது.

இப்படி ஜீவித்துக் கொண்டேயிருப்பதை விட 'போய் சேர்ந்து விடுவதே நல்லது!'

அந்த மாதிரி ஒரு நிலை!

இப்படிப்பட்ட நிலையை அடையலாமா? அந்த மாதிரி நிலையை அடைந்தாலாவது விவேகம் வரவேண்டாமா?
அப்போதாவது கிருஷ்ணா, ராமா, கோவிந்தா என்று சொல்லக் கூடாதா?

சொல்லமாட்டார்! அந்த சமயத்திலேயும் விவேகம் வருவதில்லை. சாமான்ய விஷயத்தையே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகையினாலே அந்திமக் காலம் என்பது ரொம்ப சிரமம்.
அதையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதிரி ஒரு காலம் வரும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதிரி நிலையில் பகவான் நம்மை வைக்கக் கூடாது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதற்கு நாம் என்ன பண்ண வேண்டும் என்பதையும் இப்போதே நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

நமது நரம்புகளெல்லாம் நன்கு முறுக்கேறி மிடுக்குடன் இருக்கையிலேயே நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

எல்லாம் போன பிற்பாடு என்ன பண்ணுவது? ஒன்றும் பண்ண முடியாது!

அப்போதைக்கிப்போதே சொல்லி வைக்க வேண்டும்.
'பிறர்க்கே உழைத்து' என்பதில் இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. 'பிறர்' என்பது பந்து மித்ரர்களைக் குறிக்கிறது போலவே 'தான்' அல்லாத தன் 'சரீரத்துக்கே' என்றும் குறிக்கும்.

இந்த சரீரம் நாமல்லவே! ஆத்மா தானே நாம். சரீரம் வெறும் உபகரணம். நாம் உயர்ந்து மேலே போய் உத்தம கதியை அடைவதற்காக இந்த கர்ண களேபரங்களையெல்லாம் பரமாத்மா நமக்குக் கொடுத்திருக்கிறான். இதைப் போய் நாம் சாச்வதம் என்று நினைக்கலாமா?

மாமிசத்தாலும் ரத்தத்தாலும் பிசைந்து கடையப்பட்ட சுவர் இது! இது நிற்பதற்கு உள்ளுக்குள்ளே ஸ்தம்பங்கள் எலும்புக்கூடு! அதற்கு மேல் கூரை வேயப்பட்டிருக்கிறது – ரோமங்களைக் கொண்டு! அதற்கப்புறம் வாஸ்து சாஸ்திர ரீதியாக நவத்வாரங்கள்!

பெரியாழ்வார் – இதை – உடலைப் பெரிய பட்டிணம் என்று சொல்கிறார்!

இந்த நகரத்துக்கு ஒன்பது வாயிற்படிகள் பரமாத்மா வைத்திருக்கிறான்.

இந்த வீட்டை நமக்குக் கட்டிக் கொடுத்து க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லக் கூடிய ஆத்மாவைக் கொண்டு வந்து இந்த வீட்டிலே உட்கார வைக்கிறான். க்ருஹப் பிரவேச சுபமுகூர்த்தம்!

வந்து உள்ளே உட்கார்ந்ததும் இது ஒரு தடவை உடலைப் பார்க்கிறது. பார்த்தவுடனே 'இதுதான் சாச்வதம் – இதுதான் நம்மை ரக்ஷிக்கிறது' என்று இந்த சரீரத்துக்கே உழைக்கிறது.

ஒருநாள், ஒவ்வொன்றாகக் குறைய ஆரம்பிக்கிறது. சரீரத்திலே இருப்பது ஒவ்வொன்றும் சொன்ன வார்த்தை கேட்காமல் வேறான திக்கிலே போகவே, இது நமக்கு சாச்வதமில்லை என்று தெரிந்து போகிறது. அப்போது 'வந்து திருவடியை அடைந்தேன்' என்று விழுகிறான்!

பகவானுடைய காருண்யத்தைப் பாருங்கள். நன்றாயிருக்கும் போது வரவில்லை. எல்லாம் போய்விட்ட பிறகு இப்போது 'உன்னிடத்திலே வந்தேன்' என்று சொன்னால் அவன் 'இப்போதாவது வந்தாயே' என்று ஏற்றுக் கொள்கிறான்.

'ஏன் முந்தாநாள் வரவில்லை; ஏன் நேற்று வரவில்லை; ஏன் முன்பே வரவில்லை? என்று அவன் கேட்கமாட்டான். வந்ததைக் கொண்டாடி அனுக்ரஹம் பண்ணுகிறான்!

இந்தக் குழந்தை நம்மிடத்திலே வந்ததே என்று அனுக்கிரஹம் பண்ணுகிறான்.

அதனாலே நினைத்து நினைத்து, நினைத்து நினைத்து வருந்த வேண்டும். பச்சாதாபப்படவேண்டும். கண்ணீர் விட்டுக் கதற வேண்டும்.

கண்களிலிருந்து விழக்கூடிய நீரைக் கைகளால் இரைத்து, வாரி வாரி விட வேண்டும்.

அது தான் நிர்வேதம்!

அந்த நிர்வேதம் யாருக்கு வரும்?

விவேகமுடையவனுக்குத்தான் வரும். 

விவேகமுடையவனுக்குத்தான் நிர்வேதம் வருமேயொழிய அவிவேகிகளுக்கு வருமா!

ஆகவே விவேகம் என்கிற முதல் படிக்கட்டை ஏறினால் தான் நிர்வேதம் என்கிற இரண்டாவது படிக்கட்டை ஏற முடியும்.

விவேகம் வரவில்லையானால் நிர்வேதம் வராது.

THANKS SRI Muralidharan Rajagopalan sir

Brahmachari should have these always....

कटिसूत्रं कौपीनं च परिकल्पनीयम्, तदुभयं यद्यप्यत्र सूत्रस्मृत्यादौ नोक्तं तथाऽपि ब्रह्मचारिधर्मप्रकरणे--

"मेखलामजिनं दण्डमुपवीतं च सर्वदा ।
कटिसूत्रं च कौपीनं ब्रह्मचारी तु धारयेत्" ॥

 इति वक्ष्यमाणयमवचन उपनयनीयमेखलाजिनदण्डोपवीतानां सर्वदा ब्रह्मचारिकर्तृकधारणविधानवत्कटिसूत्रकौपीनयोरपि सर्वदा धारणविधानेनोपनयन आक्षेपतस्तत्प्राप्तिसिद्धेः ।

Friday, April 21, 2023

Kallidaikurichi - The village of Brahmins

கல்லிடைக் குறிச்சி

தமிழகத்தின் தென்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் , தென்பொதிகையின் அடிவாரத்தில் உள்ள ஒரு அழகான கிராமம் கல்லிடைக்குறிச்சி. 

அது வற்றாத ஜீவ நதி தாமிர பரணியின் செல்லக் குழந்தை .

 பசுமையான வயல் வெளிகளும், தோட்டங்களும் , தென்னந் தோப்புகளுமானச் செழிப்பான பூமி.

 பதினெட்டு அக்ரஹாரங்கள். அந்தக் காலத்தில் , அதுதான் 1950களில்  அக்ரஹாரம் முழுவதும் பிராமணர்களே குடியிருந்தார்கள்.

 தவிர செட்டிப் பிள்ளைமார் தெரு, முதலிமார் தெரு, பள்ளிவாசல் தெரு,  மாதாகோவில் தெரு என்று அனைத்து மக்களும் அன்போடு இன்றும் வாழ்கின்ற ஊர். 

ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கோவிலும் உண்டு.  

ஸ்ரீ ஆதிவராஹப் பெருமாள் கோவில்தான் மிகப் பழமையானதும் , குபேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான புகழ் மிக்க ஒன்று.

 தவிர டுண்டிவினயகர், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ வாழ உகந்த அம்மன், ஸ்ரீ வடக்கு பார்த்த செல்வி, ஸ்ரீ அகஸ்தியர், ஸ்ரீ குமாரன், ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி, ஸ்ரீ தர்மசாஸ்தா, ஸ்ரீ காமாக்ஷி, ஸ்ரீ வடிவாம்பிகை உடனுறை ஸ்ரீ மானேந்தியப்பர் , ஸ்ரீ காந்தாரி அம்மன் இவை தவிர சிறு சிறு பிள்ளையார் கோவில்களும் உண்டு.

 சித்திரை மாத ஸ்ரீ ஆதிவராகர் தேரோட்டம் மிகப் பிரபலம். 

எந்த ஊரில் இருந்தாலும் இந்தத் தேரோட்டம் பார்ப்பதற்காகவே விடுமுறையில் வந்துவிடுகின்ற   ஊர்ப் பைத்தியங்கள் இன்றும் இருக்கிறார்கள்.

 வேதம் நிறைந்த ஊர்
ஒவ்வொரு அக்ரஹாரத்திலும் குறைந்தது இரண்டு தீஷிதர்கள், நான்கு கனபாடிகள், மற்றும் வேதம் கற்ற பண்டிதர்கள் என்று இருந்ததால் இந்த ஊரை வேதக் கல்லிடைக்குறிச்சி என்றும் அழைத்தனர். 

கார்த்திகை மாத முதல் தேதியில் இருந்து முப்பதாம் தேதி வரையில்  கந்தப்பபுரம் தெருவில் உள்ள "ஸ்ரீ முருகன்" கோவிலிலும், ஸ்ரீ வராகபுரம் தெருவின் கடேசியில் உள்ள ஸ்ரீ சாஸ்தா கோவிலில் மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து பதினொன்றாம் தேதி வரை பதினோரு தினங்களும் "வாரம்" என்று அழைக்கக் கூடிய வேத பாராயணம் நடக்கும். 

அதில் வேதத்தில் மிகுந்த பாண்டித்தியம் உள்ள தீஷிதர்கள், கனபாடிகள் மற்றும் பண்டிதர்களும் (சாஸ்திரிகள்) கலந்துகொண்டு தாங்கள் கற்ற வித்தையை மற்றவர்களோடு சுவாமியின் சன்னதியில் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கக் கண்கள் கோடி போதாது.

 தவறு இல்லாமல் சொன்ன வேத பண்டிதருக்கு சன்மானமும், கௌர்வமும் கிடைக்கும்.

 இரவில் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானமும் உண்டு. 

பொதுவாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வேதியர்கள் தங்களது வேதக் கல்வியறிவை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புவர். 

தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு சமஸ்கிருத கல்லூரியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வந்திருக்கிறது. 

பின்னாளில் அங்கு காசி விசுவநாதர், விசாலாக்ஷி பூஜையும் , வருடா வருடம் ஐந்து தினங்கள் ஸ்ரீ சங்கர ஜயந்தி உற்சவமும் நடைபெற்று வந்தது. 

கரந்தையார் பாளைய பிராமண சமூகத்துக்குச் சொந்தமான இந்த இடம் இப்பொழுது பாழ்பட்டுக் கிடக்கிறது.  

இதன் மேற்குப் புறத்தில், நதிக்குச் செல்லும் பாதையில் நிறைய அதிஷ்டானங்கள் இருப்பதை இப்போதும் காணலாம்.

                                              
சங்கீதத்திலும் மிகச் சிறந்த வித்வான்கள் இந்த ஊரில் இருந்தார்கள். அதில் சங்கீத கலாநிதி வேதாந்த பாகவதர் (இவர் ஒரு தேவி உபசகரும் கூட)  அவருடைய சகோதரர் இராமலிங்க பாகவதர் மிக முக்கியமானவர்கள். 

இவர்களைத் தவிர வி. ராமலிங்க பாகவதர் என்று இன்னொருவரும் வடக்கு ரத வீதியில் வசித்து வந்தார்.

 வேதாந்த பாகவதரின் சீடர்கள்தான் மகாதேவ பாகவதர், கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர். 

 இவர்களுக்கு சென்னையில் உள்ள மியூசிக் அகாதமி "சங்கீத கலா ஆசார்யா" என்ற விருது கொடுத்துச் சிறப்பித்தது. 

இவர்களைப் போல ஹரிஹர பாகவதர், எம்.ஆர்.ஆதிவராகன் போன்ற சங்கீத வித்வான்களும் இருந்தனர்.

எம். சங்கரநாராயணன் (அம்பிச்சா..என்று அழைக்கப் படுபவர்) GNB அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்.

 தஞ்சாவூர் கல்யாணராமன் அவர்களிடமும், TMT அவர்களிடமும் சங்கீதம் கற்றவர். இன்றும் தியாகராஜர் ஆராதனை உற்சவத்தை ஊரில் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார். 

அதேபோல சிலேடைப்புலி சுப்பையா பாகவதரும் தெற்கு மாடத் தெருவின் முதல் வீட்டில் குடியிருந்தார்.

 கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, கல்கத்தா குருமூர்த்தி  ஆகியோர்களிடம் சங்கீதம் கற்ற கல்கத்தா கலா, சித்ரா சகோதரிகளுக்கும் இவ்வூர்தான்.

முதலியப்பபுரம் தெருவில் வசித்து வந்த ஸ்ரீ ஐயாஸ்வாமிகள் பக்தி பஜனையின் மூலமாக ஆன்மிகச் சிந்தனையை மக்களிடம் பரப்பி வந்தார். 

துவாதசி தோறும் உஞ்சவிருத்தி பஜனை செய்வார். 

ஒவ்வொரு வருடமும் மாசி மாத சிவராத்திரி அன்று "முருகன்" அகண்ட நாம உத்சவம் நடத்துவார். அதில்  பிரபல வித்வான்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு பாடுவார்கள்.

 பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் ஸ்ரீ ஐயாஸ்வாமிகளின் முருகன் அகண்ட நாம நிகழ்ச்சிகளில் விரும்பிக் கலந்துகொண்டு பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். 

ஸ்ரீ ஐயாஸ்வாமிகள் ஆடி அம்மாவசை அன்று பாபநாசத்துக்கு மேல் இருக்கக் கூடிய பாணதீர்த்தத்தில் மிகப் பெரிய அளவில் அன்னதானம் செய்வதைக் கடமையாகவே கொண்டிருந்தார்.

 வடக்கு மாடத்தெருவில் இருக்கிற பஜனை மடத்தில் நடைபெறும் கோகுலாஷ்டமி உற்சவத்தின் போது மிகப் பிரபலமான தமிழகத்தின் சங்கீத வித்வான்கள் பலர் கச்சேரிகளும், உபந்யாசங் களும் செய்திருக்கிறார்கள். 

 வெங்கட்ராமையர் , பண்ணை சுந்தரம் ஐயர் இருவரும் காலாருமினியம் வாசிப்பதில் சிறந்து விளங்கினர். 

இருவருமே மிராசுதார்களாக இருந்தவர்கள். சங்கீத பிரியர்கள்.  பஜனை பாடுவதில் சஞ்ஜீவி பாகவதரைப் போலவே நம்பி ஐயங்கார், எம்.ஆர். ராமநாராயணன் போன்றவர்கள் செவிக்கு விருந்து வைத்த செம்மல்கள். 

பொதுவாகவே இந்த கிராமத்து ஜனங்களுக்கு சங்கீதத்தில் நல்ல ரசனை  உண்டு.  

மாடுகளை மேய்த்துக் கொண்டு போகும் பொன்னன் ," எலே அங்கன தெக்கநீக்கி மாட்டப் பத்திக்கிட்டு போலே" என்று இழுத்துச் சொல்வதிலும்,

 "கத்தரி, வெண்டை, கரணை, பாவக்காய்" என்று வியாபாரக் குரல் கொடுக்கும் மூக்கனின் குரலிலும் சங்கீதம் இருக்கத்தான் செய்கிறது.

                                                       
 செய்யும் தொழிலே தெய்வம்

அப்பளத் தொழிலில் இருந்து சிமின்ட் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் வரை இந்த கிராமம் திறமைசாலிகளைப் பெற்றிருந்தது. 

 இந்தியா சிமின்ட் நிறுவனர் எஸ்.என்.என். சங்கரலிங்க ஐயர், ஈசன் நிறுவனத்தின் ஈஸ்வர கிருஷ்ண ஐயர், ராயால் என்பீல்ட் கே.எஸ். சுந்தரம் ஐயர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

 பிற்காலத்தில் அவர்களது தலைமுறையில் வந்த இந்தியா சிமின்ட் கே.எஸ்.நாராயணன் (இவர்தான் பின்னாளில் "கெம்பிளாஸ்ட்" நிறுவனத்தை உருவாக்கினார்), என்பீல்ட் எஸ். விஸ்வநாதன், ஈஸ்வர கிருஷ்ண ஐயரின் மகன் ஹரி ஈஸ்வரன், கிருஷ்ணா மைன்ஸ் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (கிட்டா மணி ஐயர்) என்று தொடர்ந்தது.

 "உண்டியல் கடை" என்று வைத்து வட்டிக்குப் பணம் கொடுத்து வந்த செல்வந்தர்களால் சிறப்புப் பெற்றதும் இந்த ஊர்தான்.

அப்பளத் தொழிலில் கொடி கட்டிப் பறந்த அம்மாமி அப்பளம் டெப்போ , கணபதிலிங்கம் அப்பளம் டெப்போ, சந்திரா அப்பளம் டெப்போ, 
சக்தி அப்பளம் டெப்போ, செல்லவிலாஸ் அப்பளம் டெப்போ, ஆதிவராஹா அப்பளம் டெப்போ, லக்ஷ்மிவிலஸ் அப்பளம் டெப்போ, 
ஸ்ரீ சீதாராமன் அப்பளம் டெப்போ, காந்திமதி அப்பளம் டெப்போ  
என்று எங்கு திரும்பினாலும் அப்பளக் கம்பெனிகளே கிராமத்தில் குடிசைத் தொழிலாக நிரம்பி இருந்தது .

 சுவைக்கும், தரத்திற்கும் பெயர் பெற்று விளங்கியது. "வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும்" நினைத்தாலே சுவைக்க வைக்கும் அனுபவத்தை இந்த ஊர் தந்தது.

 போகப் போக இந்தத் தொழில் நலிவடையத் தொடங்கியது. இப்பொழுது சங்கர் அப்பளம், ஸ்ரீ சீதாராமன் அப்பளம், ஸ்ரீ ஆஞ்சநேயா அப்பளம் என்று ஒரு சில அப்பள டெப்போக்கள்தான் இருக்கின்றன.

 ஆனாலும் இப்பொழுதும் அரிசி அப்பளம், புழுங்கல் அரிசி முறுக்கு, தட்டை, மாலாடு, முனகரம், சீடை மற்றும் இனிப்பு வகைகளின் தயாரிப்பில்  இந்த ஊர் பேர்சொல்லும் பிள்ளையாகவே  இருக்கிறது. 

சரித்திர ஆராச்சியாளர் நீலகண்ட சாஸ்திரி, சிறுகதை, நாவல் என்று முத்திரை பதித்த "ஆதவன்", பாரதிக்கு தொண்டு செய்துவரும் பாரதி காவலர் கு. ராமமூர்த்தி, திரைபடத் துறையில் குறிப்பாக "டப்பிங்" தொழிலில் சிறந்து விளங்கி , இராமாயணம், கிருஷ்ணா போன்ற சின்னத்திரை நீண்ட தொடர்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்த கவிமாமணி கு. தேவநாராயணன் போன்ற இலக்கிய வாதிகளையும் இந்த உலகத்துக்குத் தந்து மகிழ்தது இவ்வூர்.

 சிவராத்திரி காலத்தில் தெருவுக்குத் தெரு நாடகம் போடும் குழந்தைகளை ஊக்குவிப்பார்கள் இந்த ஊர் மக்கள்.

 வெங்கடாசலம் ஐயர் கதை, வசனம் , இயக்கத்தில் நடைபெற்ற "ஜெய் பவானி" என்ற நாடகத்தை என் சிறுவயதில் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவிலில் உள்ள தெற்குப் பிராகாரத்தில் வைத்துப் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது. 

அதில் பாரத மாதாவாக நடித்த சி. சங்கரசுப்ரமணினும்(சி.எஸ்.), அவ்ரங்கசீப்பாக நடித்த சங்கரராம சுப்பிரமணியனும் (இன்றும் அவரை அவ்ரங்கசீப் மாமா என்றல்தான் தெரியும்.), கையில் தடியுடன் போலீஸ் காரனாக நடித்த பேப்பர் ராமலிங்கம்,  H.கிருஷ்ணன் அவர்களையும் இன்றும் என் இதயம் நினைத்துக் கொண்டிருக்கிறது.

 இன்று நாடகத் துறையில் பிரபலமாக விளங்குகின்ற "நாணு" (ச. லெஷ்மி நாராயணன்) வுக்குப் பூர்வீகம் இந்த ஊர்தான்.

சுகந்திரப் போராட்ட காலத்தில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட கோமதி சங்கர தீட்ஷிதர், லக்ஷ்மி அம்மாள், சங்கர ஐயர், ய்க்யேஸ்வர சர்மா , தியாகி சுப்ரமணிய ஐயர் போன்ற தீரர்களையும் பெற்றது இவ்வூர்.

 அவர் களின் முயற்சியாலும் , தர்மசிந்தனையுள்ள ஆர்.எஸ்.ஏ. லக்ஷ்மண ஐயர், எஸ்.எஸ். சங்கர ஐயர், ஏ.விஸ்வநாத ஐயர்  போன்றவர்களின் ஆதரவாலும் ஜார்ஜ் நடு நிலைப் பள்ளியைத் துவக்கினர். 

இந்தப் பள்ளியில்தான் ஏ.என்.சிவராமன் எட்டாண்டு காலம் ஆசிரியர் பணிசெய்ததாக அவரே தன் கைப்பட அப்பள்ளிக்கு எழுதிய கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 அத்துடன் "வித்யா சங்கம்" என்ற அமைப்பையும் துவக்கினர். 

அதன் பலன்  இன்று "திலகர் வித்யாலய உயர் நிலைப் பள்ளி" என்ற பெயருடன் ஏழை எளிய குழந்தைகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கக் கூடிய  மிகப் பெரிய கல்விச் சாலையாக விளங்குகிறது. 

இந்த ஸ்தாபனம் கே.எஸ். ராமனைத் தலைவராகவும், கே.எஸ்.சங்கரசுப்ரமனியனைச் செயலாளராகவும்  கொண்டு சிறப்பாக நடந்து வருகிறது.

 மகாகவி பாரதியின் வாக்குப்படி தெருவுக்கு ஒரு பள்ளியாக ஸ்ரீ லக்ஷ்மீபதி ஆரம்பப் பள்ளி, மகாத்மா காந்திப் பள்ளி, லலிதா ஆரம்பப்பள்ளி என்று விரிந்து இன்றும் கல்விப் பணியில் சிறந்து நிற்கிறது  கல்லிடைகுறிச்சி

இப்படி எத்தனையோ சிறப்புகளைக் கொண்டதால்தான் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 33வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் ஆனந்தஸ்ரீ சச்சிதானந்தா சிவாபினவ ந்ருசிம்ஹ பாரதீ மகாஸ்வாமிகள் இந்த ஊரைக் கல்யாணபுரி என்று வாழ்த்தி  அழைத்தார்கள்.

Tuesday, April 18, 2023

What to do on Akshaya tritiya?

🕉️

*AKSHAYA TRITIYA – WHAT TO DO AS PER SANATANA DHARMA SHASTRA ?*

*22nd April 2023*

Namaskaram 🙏

*There isn't a single reference in Dharma Shastra which says that on Akshaya Tritiya we need to buy gold or buying gold will increase our gold savings in the locker. If you would like to follow the real way to practise austerities associated with Akshaya tritiya exactly as per Dharma Shastra, then read on.*

Akshaya Tritiya is the first day of Treta Yuga, in our Vedic calendar. After Krita Yuga (also called Satya Yuga), comes Treta Yuga, then Dwapara Yuga and now we are in the final and last yuga for this cycle which is Kali Yuga. We are in the 5125th year of Kali yuga and we have more than 4,27,000 years for Kali yuga to end. The only way to ensure that we and our future generations survive the onslaught of Kali yuga which distracts people from path of dharma is to follow our Nitya Karma anushtana and Vratas mentioned in Dharma Shastra. *In fact Akshaya tritiya is a Vratam to be followed by men and women.* So what to do on this day as mentioned in our Dharma Shastras which are Rishi Vaakyaas?

1. Have an early morning usual bath at home. Then later Sea bath (Samudra Snanam) is recommended during punyakala in the timings given in the article and is considered to be highly meritorious on this day. It will give benefits of Sahasra Go Danam (1000 cow donation) and Bhumi Danam (donating a land) in Kurukshetra as per shastras. If you cannot go to sea, then river bath, temple theerta (temple holy tank) bath is also meritorious. If not, then have a bath at home. While having bath, keep some akshata (rice mixed with turmeric) on head and have a bath.

2. Men should perform Sandhyavandanam after bath, while women should take bath and prepare for Sri Laxminarayana Pooja on this day. Preparing neivedhyam and doing the necessary arrangements for the Pooja - While women do this, men should start preparing for tarpana.

3. Men who don't have their respective fathers should perform tarpana, as doing tarpana on this day will satisfy the pitrus (ancestors) for 2000 years immensely and they would bless you with a long life to perform more Dharma Karyas. 

4. Then as a couple both husband and wife (if both not available, then at least either one) should perform Lord Laxminarayana Pooja with with Chandan (sandalwood paste) and flowers and lot of Akshata (raw rice mixed with turmeric). If you don't know elaborate or even short Pooja rituals, then just chant 'Om Laxminarayanaya namaha' either 11, 21, 51, 108 or 1008 times, offer flowers and Akshata at the feet of Laxminarayana. You can do archanai with Ashottaram (108 names) for Vishnu and Laxmi too if you know. Show neivedhya, camphor and finish the Pooja. One who know Vishnu Sahasranama can chant it. *Pooja Muhurtham for this day is from 07:49am to 12:37pm*

5. This day, a special, highly meritorious act is mentioned in Dharma Shastra which is *Jalakumbhadana* or donating 1 or 2 water-filled pots to a Vedic Brahmin. So how this should be done? One water filled pot for satisfying Devatas and another water filled pot for satisfying Pitrus (ancestors) should be given to same/different Vedic Brahmin/s. Pot should be made of Bronze/Brass/Copper/Mud. Procedure for giving both as per Shastra is written below.

6. Water Pot for satisfying Devatas – Fill the pot with water, tie thread around it, apply chandan/kumkum on pot. Along with the pot keep fruits, pan(betel) leaves, flowers, chandan, turmeric, kumkum, coconut, barley, some money, dhoti etc and give it to the Vedic Brahmin by chanting the below mantra. Before giving the pot to Brahmin do this Sankalpa *Mamopatta samasta durita kshya dvara Sri Parameshwara Preetyartam udakumbha-dana-kalpokta-phalam-avaptyartam brahmanaya udakumba danam karishye*. 

Below is the mantra to be chanted while giving this water pot with other items mentioned to the Brahmana. Face east while giving danam. This danam can be done by ladies also. 
*Yesha Gharmaghato dato, brahma-vishnu-shivatmakaha,*
*Asya pradanat-sakala, mama santu manorataha*

एष घर्मघटो दत्तो ब्रह्मविष्णुशिवात्मकः ।
अस्य प्रदानात्सकला मम सन्तु मनोरथाः ।।

By doing this, all your desires in your heart (manorataha) will get fulfilled as signified in the mantra.

7. Water pot for satisfying Pitrus (manes/ancestors) – This daanam should be done only by men who don't have their respective fathers alive.  Fill the pot with water, add in the pot water, sandal wood paste or powder, flowers, black til. Keep along with the pot, some sugarcane, raw rice, fruits, curd rice, umbrella, hand fan etc and donate it to a Vedic Brahmin. The sankalpa for donation is *Mamopatta samasta durita kshya dvara Sri Parameshwara Preetyartam kalpokta-prakarena pitrunam-akshyya-truptyartam-bramhanaya udakumba danam karishye*. 

Then chant the below mantra and give the above items with the water pot. This should be done only by men those who don't have their respective fathers alive. Face south while giving the danam. This danam cannot be done by ladies.

*Yesha gharmaghato datto, brahma-vishnu-shivatmakaha*
*Asya pradana truptyantu, pitharopi-pithamahaha,*
*Gandhodhaka tilairmishram sannam kumbha phalanvitam,*
*Pitrubhya sampradasyami akshyyam-upathishtatu*

एष घर्मघटो दत्तो ब्रह्मविष्णुशिवात्मकः ।
अस्य प्रदानात्तृप्तयन्तु पितरोपि पितामहाः ।।
गन्धोदकतिलैर्मिश्रं सान्नं कुम्भंं फलान्वितम् ।
पितृभ्य: संप्रदास्यामि अक्षय्यमुपतिष्ठतु ।।

By chanting this mantra and donating all the above items with the water pot , you will satisfy your ancestors/pitrus forever.

8. If doing all these Daanams physically is not possible due to lack of vaadhyar or Vedic Brahmins coming home, then whatever is the cost of all these items and some additional dakshina can be transferred online to one who works for good cause of upliftment of Sanatana Dharma or your family priest 

9. After this have lunch in the afternoon as you will be fasting from morning all this time. Night time meals should be skipped and liquids can be consumed. On this day only one meal - lunch should be had and no dinner. 

This would complete 'Akshaya Tritiya' austerities and Vrata for ladies/gents/both. *Dharma Shastra says the more you give/donate in Akshaya Tritiya the more will come back to you. If you buy things for yourself due to self-interest like gold bars, jewellery etc then your punya will decrease. This is a day of giving danam / donating to Vedic brahmins. Dharma Karya is the most important karma on this day and it is not a day for buying things for self. So giving danam on this day will help increase your punyas and give you manifold in return for your good deeds.*

Veda Ghosham is a unique center of Vedic knowledge which aims to revive Sanatana Dharma and its practices in the true, original way as written by our ancient Rishis. All our sufferings today are because we have left out Nitya Karmas (daily duties) as recommended by Dharma Shastras and are indulging in what is not recommended at all and which are of no use or are of temporary happiness. If you need the path to permanent happiness and want to return to the path of Sanatana Dharma and protect your future generation and children from the bad effects of Kali yuga then reach out to us. Feel free to share this article with your like-minded friends ad family in your social circle.

*Website*: www.vedaghosham.com 


_Dharmo Rakshati Rakshitaha!_

#AkshayaTritiya

🕉️

Tuesday, April 11, 2023

Very Rare Sankata Devi Sahasranama Stotram from Mahakala Samhita

Dear All,

Greetings and Namaste. As the Hindu New Year (Shobhakrit) as per solar calendar is on 14-Apr-2023 (Friday), may I seize this opportunity to wish you all a very happy and prosperous Hindu Samvatsara! May Lord shower you with health, wealth, fame, comforts, achievements, and everything you rightfully desire.

In this connection, I am delighted to share a very rare and potent Sahasranama titled Sri Sankata Devi Sahasranama said to be from Sri Mahakala Samhita and 4th Kalpa/Patala. Sri Sankata Devi is a form of Parashakti who protects her devotees from all troubles and difficulties. In some traditions, the eighth day of Navaratri is dedicated to the worship of Sankata Devi (Mahagauri in some traditions). 

There seems to be only one temple dedicated to Sankata Devi viz. Sankata Devi Temple in Varanasi. I presume this Sahasranama is not referring to that temple as it was constructed only a couple of centuries ago and there is no reference of any kshetra within the Sahasranama. 

Please refer to the preface within the Sahasranama on the elaborate Phalashruti. I forgot to add that the last shloka mentions that one who worships Sankata Devi on Ashtami/Chaturdashi/Tuesday/Saturday with red sandal, red akshata and red flowers will be relieved of all difficulties.

There is a reason I thought I will share this on the occasion of New Year. Though the name of the year Shobhakrit hints that the new year is likely to be an auspicious one, the practical outlook and the predictions by Hindu astrologers suggest not-so-rosy picture, at least until November 2023 for the following reasons. 
a. The onset of New Year is immediately followed by 2 eclipses in Apr/May
b. Jupiter transit into Aries in Apr but combust for a month combining with Rahu already in Aries forming a special not-so-auspicious combination known as Guru-Chandala Yoga for 6 months
c. Saturn turning retrograde between Jun and Nov 2023
d. Rahu/Ketu transit about 6 months later in Oct. 

Given that the world is going through massive layoffs in tech sector, banking crisis, never-ending Ukraine-Russia war, etc. the horizon is cloudy.  But, at the personal level, we could pray to Goddess Sankata Devi to ward off all evils and difficulties!

Once again wishing you a very happy and prosperous new Year Shobhakrit with the blessings of Goddess Sankata Devi!

With regards and Pranams,
K. Muralidharan Iyengar (Murali)

Complete book of Mahabharata

Robbery - Story

During a robbery in Zimbabwe, the bank robber shouted to everyone in the bank: "Don't move. The money belongs to the State. Your life belongs to you." Everyone in the bank lay down quietly. This is called the "Mind Changing Concept" Changing the conventional way of thinking.

When a lady lay on the table provocatively, the robber shouted at her: "Please be civilized! This is a robbery and not a rape!" This is called "Being Professional" Focus only on what you are trained to do!

When the bank robbers returned home, the younger robber (MBA-trained) told the older robber (who has only completed Year 6 in primary school): "Big brother, let's count how much we got." The older robber rebutted and said: "You are very stupid. There is so much money it will take us a long time to count. Tonight, the TV news will tell us how much we robbed from the bank!" This is called "Experience." Nowadays, experience is more important than paper qualifications!

After the robbers had left, the bank manager told the bank supervisor to call the police quickly. But the supervisor said to him: "Wait! Let us take out $10 million from the bank for ourselves and add it to the $70 million that we have previously embezzled from the bank". This is called "Swim with the tide." Converting an unfavourable situation to your advantage! The supervisor says: "It will be good if there is a robbery every month." This is called "Killing Boredom." Personal Happiness is more important than your job.

The next day, the TV news reported that $100 million was taken from the bank. The robbers counted and counted and counted, but they could only count $20 million. The robbers were very angry and complained: "We risked our lives and only took $20 million. The bank manager took $80 million with a snap of his fingers. It looks like it is better to be educated than to be a thief!" This is called "Knowledge is worth as much as gold!" The bank manager was smiling and happy because his losses in the share market are now covered by this robbery. This is called "Seizing the opportunity." Daring to take risks!

So who are the real robbers here?