Monday, August 31, 2020

Sri Vamana Stotram From Vamana Puranam

Dear All,

Greetings and Namaste. As tomorrow (Saturday, 29-Aug-2020) is Sri Vamana Jayanti, I am delighted to share yet another hymn on Lord Vamana taken from Sri Vamana Puranam and Chapter 26 by Sage Kashyapa. This stotra is in Gadya (prose) format.

I had shared a few other hymns on Lord Vamana from the same Purana over the last several years.

May We Pray To Lord Vamana with this beautiful prayer!

With best regards and pranams,
K. Muralidharan Iyengar (Murali)

Water born from Lotus -Sanskrit Subhashitam

|| *ॐ* ||
    " *सुभाषितरसास्वादः* " 
------------------------------------------------------------------------------------
    " *अर्थवैचित्र्य* " ( १२९ )
---------------------------------------------------------------------------------
   *श्लोक*----
    "  अम्बुजमम्बुनि  जातं ,  न हि  दृष्टं  जातमम्बुजादम्बु ।
      अधुना  तद्विपरीतं  चरणसरोजाद्विनिर्गता  गङ्गा " ।।
------------------------------------------------------------------------------------
*अर्थ*----
   जल  में  कमल  उगता  है , पर  कमल  से  जल  का  उद्गम ,  कभी  देखने  में  नही  आया !  किन्तु ,  अब  यह  कैसा  उलटा  हो  गया ?
---------------------------------------------------------------------------------------
*गूढ़ार्थ*--- 
  यह  कैसे  हो  गया  कि  -- कमल  से  जल  का  उद्गम?
  श्रीविष्णु  के  *पदकमलसे* गङ्गा  के  जैसे  ( प्रचंड )  जलौघ ,  का  उगम हुआ  यह  कितना  बडा  आश्चर्य  है  न ! !
---------------------------------------------------------------------------------------
*卐卐ॐॐ卐卐*
---------------------------------
डाॅ. वर्षा  प्रकाश  टोणगांवकर 
पुणे  /  महाराष्ट्र 
---------------------------------------
🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚

Ganesha - sanskrit poem

श्रीगणपतये नमः
*************
मन्दं मन्दं पदाब्जं पतति रणरणैर्मोदते दर्शनार्थी
मन्दं मन्दं महास्ये मधुमयहसनं राजते यस्य नित्यम्।
मन्दं मन्दं सुतत्त्वं वदति हितकरं देवताद्याः प्रहृष्टा
मन्दं मन्दं भजे तं मृदुतममनसा पातु मां विघ्नराजः।।
(रचयिता-श्रीव्रजकिशोरः)

Tattvabodha of Shankaracharya

Tattvabodha  of Shankaracharya                                                                                                         http://svbf.org/wp-content/uploads/tattvabodha/5_Tattvbodha_Atman_Srushtivichara.pdf

Tattva Bodha of Adi Sankaracharya  -
A Vedantic Primer: Part 2 (contd.)

(Lecture Notes compiled by Venkat Ganesan from the series of
SVBF Lectures given by Dr. S. YEGNASUBRAMANIAN)


2. Analysis of the Individual - jIva vicAraH
(continued)

In the discussion on the Analysis of the
Individual - jIvavichAraH, in the previous issue, the
Author showed how the Atman is the witness
or illuminator of the three states of experience
(avasthA) and is different from the five
sheaths (panca koSA) of the body. The Author
proceeds to explain the qualities or attributes
of the Atman, which will be discussed now.

2.6.

 madIya.n sharIraM madIyAH prANAH madIyaM manashcha
 madIyA buddhirmadIya.n aj~nAnamiti
 svenaiva j~nAyate tadyathA madIyatvena j~nAta.n
 kaTakakuNDala gR^ihAdika.n tadyathA madIyatvena j~nAta.n
 kaTakakuNDalagR^ihAdika.n svasmadbhinna.n tathA
 pa~nchakoshAdika.n svasmadbhinnaM
 madIyatvena j~nAtamAtmA na bhavati ..

(As bangles, ear-ornaments, homes etc. are
known as "mine", but are different from the
owner, so also, the five sheaths which are known
by the Self as "my body, my mind, my prANas,
my mind, my intellect and my ignorance", are
different from the knower and so cannot be the
Atman).

yathA - just as

kaTakakuNDalagR^ihAdika.n - bangles, ear-ornaments,
homes etc.

madIyatvena j~nAta.n - are known as "mine "

svasmadbhinnaM - and different from the owner

tathA - likewise

pa~nchakoshAdika.n - the five sheaths (and three bodies
and three avasthAs - which are known by the
Self) as

madIya.n sharIraM - My body - annamaya
madIyAH prANAH - My prANas  -  prANamaya
madIyaM manashcha - My  mind  (also)  - manomaya
madIyA buddhiH  - My intellect - vijnAnamaya
madIya.n aj~nAnam - My  Bliss (due to ignorance) - aanandamaya

svenaiva tat j~nAyate - (by oneself - these) are known

svasmadbhinna.n - as different from oneself

AtmA na bhavati - Therefore that does not be-
come the Atman. Why? Because of moha (delusion),
they appear to be mine.

Then the question arises, what is Atman?


(Continued in next post)

Simple hindi sentences in Sanskrit

लगना/लगाना
-----------------
(१)उम्र के हिसाब से वह कमसिन लगती है=आयुर्दृष्ट्या सा अल्पवयस्का प्रतीयते।

(२)उम्र के हिसाब से वह सही उम्र की लगती है=आयुष: अनुसारेण तस्या: आयु:  वास्तविकम् प्रतीयते।

(३)उम्र के हिसाब से वह जरा अधिक लम्बी लगती है=आयुष: अपेक्षया सा किंचित् अधिका दीर्घतरा प्रतिभाति  ।

(४)वह लम्बी लगती है=सा लम्बिनी प्रतीयते।

(५)वह जरा अधिक लंबी लगती है=सा किञ्चिदधिकं लम्बिनी प्रतीयते।

(६)वह लम्बी लगने के लिए हाइहील के जूते पहनती है=सा उन्नता दृश्येत तदर्थं सा उन्नते उच्चपादुके धरति।

(७)वह देखने में कैसी लगती है=सा दर्शने कथं प्रतीयते?

(८)वह देखने में चांद-सी लगती है=सा द्रष्टुं चन्द्रवत् प्रतीयते।

(९)वह देखने में गुड़िया-सी लगती है=सा द्रष्टुं पुत्तालिका इव प्रतीयते।

(१०)वह देखने में परी-सी लगती है=सा द्रष्टुं अप्सरावत् प्रतीयते।

(११)वह घबराई-सी लगती है=सा भीता इति प्रतीयते।

(१२)वह स्थान बीरान-सा लगता है=तत् स्थानं निर्जनवत् प्रतीयते।

Who is vijayshree-Sanskrit joke

*कविः*- 
_स्वप्नेऽपि समरेषु त्वां विजयश्रीर्नमुञ्चति।_
_प्रभावप्रभवं कान्तं स्वाधीनपतिका यथा॥_
*विरस राजः*- विजयश्री वा ? सा का ?
*कविः* - 😳

Ayurdevi stotram in tamil

ஆயுர்தேவி ஸ்தோத்திரம்

இது மிகவும் சிறந்த ஸ்தோத்திரம். 

வியாச மஹா முனிவரால் இயற்றப்பட்டது. 

இதை குழந்தைகளுக்கு ஆயூஷ்ய ஹோமம் செய்கின்ற நாட்களிலும் ஷஷ்டியப்த பூர்த்தி நாட்களிலும் ஜபம் செய்யவேண்டும் 

(ஆயுஷ்ய ஸூக்தத்தோடு ஹோமங்கள் செய்யலாம்.

அவ்வாறு செய்தால் ஆயுர்தேவியின் அனுக்கிரகத்தால் நோயின்றி ஆயுர் அபிவிருத்தி ஏற்படும். 

எல்லா நலன்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்வது மிகவும் நல்லது.

1.த்யாயேத் ஹேமாம்புஜாரூடாம் வரதாபய பாணிகாம் | 
ஆயுஷா தேவதாம் நித்யாம்  ஆஸ்ரிதாபீஷ்ட ஸித்திதாம் ||

2.ஆயுர்தேவீ மஹாப்ராக்ஞ்யே ஸுதிகாக்ருஹவாஸிநீ |
பூஜிதா பரயா பக்த்யா தீர்க்கமாயுஹ் ப்ரயச்சமே || 

3.ஸிம்ஹஸ்கந்த கதாம்தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம் | 
ஸக்திசூல கதாபத்ம தாரிணீம் சந்த்ர மௌளிகாம் || 

4.விசித்ர வஸ்த்ர ஸம்யுக்தாம் ஸர்வாபரணபூஷிதாம் | 
ஸிம்ஹஸ்கந்த கதே தேவீ ஸுராஸுர ஸுபூஜிதே || 

5.ப்ரபவாத்யப்தகே ஸங்கே ஆயுர்தேவீ நமோஸ்துதே | 
ஆயுர்தேவீ நமஸ்துப்யாம் வர்ஷதேவீம் நமோஸ்துதே ||

6.ஆயுர்தேஹி பலம் தேஹி ஸர்வாரிஷ்டம் வ்யபோஹயா | 
ஆயுஷ் மதாத்மிகாம் தேவீம் 
கராள வதனோ ஜ்வலாம் || 

7.கோர ரூபாம் ஸதாத்யாயேத் ஆயுஷ்யம் யாசயாம்யஹம் | 
ஸுபம்பவது கல்யாணி ஆயுர் ஆரோக்ய ஸம்பதாம் || 

8.ஸர்வ சத்ரு விநாசாய ஆயுர்தேவி நமோஸ்துதே | 
ஷஷ்டாம்ஸாம் ப்ரகிர்தைர் ஸித்தாம் ப்ரதிஷ்டாப்யச ஸுப்ரபாம் ||

9.ஸுப்ர தாம்சாபி சுபதாம் தயாரூபாம் ஜகத்ப்ரஸும் | 
தேவீம் ஷோடச ஷ்ருஷாம்தாம் சாஸ்வதஸ்திர யௌவனாம் || 

10.பிம்போஷ்டீம் ஸுததீம் சுத்தாம் சரத்சந்த்ர நிபன்னாம் | 
நமோ தேவ்யை மஹாதேவ்யை ஸித்யை ஸாந்த்யை நமோ நம: || 

11.சுபாயை தேவஹேனாயை ஆயுர்தேவ்யை நமோ நம: | 
வரதாயை புத்ர தாயை  
தனதாயை நமோ நம: || 

12.ஸ்ருஷ்ட்யை ஷஷ்ட்டாம்ச ரூபாயை ஸித்தாயைச நமோ நம: | 
மாயாயை ஸித்த யோகின்யை ஆயுர்தேவ்யை நமோ நம: || 

13.ஸாராயை சாரதாயைச பராதேவ்யை நமோ நம: | 
பாலாரிஷ்டார்ரு தேவ்யைச ஆயுர்தேவ்யை நமோ நம: || 

14.கல்யாண தாயை கல்யாண்யை 
பலதாயைச கர்மணாம் | 
ப்ரத்யக்ஷாயை ஸ்வபுக்தானாம் ஆயுர்தேவ்யை நமோ நம: || 

15.பூஜ்யாயை ஸ்கந்த காந்த்யை ஸர்வேஷாம் ஸர்வகர்மஸு | 
தேவரக்ஷண காரிண்யை ஆயுர்தேவ்யை நமோ நம: || 

16.ஸூத்த தத்வ ஸ்வரூபாயை வ்நதிதாயை த்ருணாம்ஸதா | 
வர்ஜித க்ரோத ஹிம்ஸாயை ஆயுர்தேவ்யை நமோ நம: ||

ध्यायेत् हेमांबुजारूढां वरदाभय पाणिकाम्।
आयुष्यदेवतां नित्यां आश्रिताभीष्ट सिद्धिदाम्॥१॥

आयुर्देवि महाप्राज्ञे सूतिका गृहवासिनि
पूजिता परया भक्त्या दीर्घमायुः प्रयच्छ मे॥२॥

सिंहस्कन्धगतां देवीं चतुर्हस्तां त्रिलोचनाम्।
शक्तिशूल गदापद्म धारिणीं चन्द्रमौलिकाम् ॥३॥ 

विचित्रवस्त्रसंयुक्तां स्वर्णाभरण भूषिताम्।
सिंहस्कन्धगतां देवीं चतुर्हस्तां त्रिलोचनाम् ॥४॥

सिंहस्कन्धगते देवि सुरासुर सुपूजिते।
प्रभवात्यब्दके संघे आयुर्देवि नमोऽस्तु ते॥५॥

आयुर्देवि नमस्तुभ्यं वर्षदेवि नमोऽस्तु ते।
आयुर्देहि बलं देहि सर्वारिष्टं व्यपोहय॥६॥

आयुष्मदात्मिकां देवीं कराल वदनोज्ज्वलाम्।
घोररूपां सदा ध्यायेत् आयुष्यं याचयाम्यहम्॥७॥

शुभं भवतु कल्याणि आयुरारोग्य संपदाम्।
सर्वशत्रुविनाशाय आयुर्देवि नमोऽस्तु ते ॥८॥

षष्ठांशां प्रकृतैर्सिद्धां प्रतिष्ठाप्य च सुप्रभाम्।
सुप्रदां चापि शुभदां दयारूपां जगत्प्रसूम्॥९॥

देवीं षोडशवर्षां तां शाश्व तस्थिरयौवनाम्।
बिम्बोष्ठीं सुदतीं शुद्धां शरच्चन्द्र निभाननाम् ॥१०॥

नमो देव्यै महादेव्यै सिद्ध्यै शान्त्यै नमो नमः।
शुभायै देवसेनायै आयुर्देव्यै नमो नमः ॥११॥

वरदायै पुत्रदायै धनदायै नमो नमः
सृष्ट्यै षष्ठांशरूपायै सिद्धायै च नमो नमः॥१२॥

मायायै सिद्धयोगिन्यै आयुर्देव्यै नमो नमः।
सारायै शारदायै च परादेव्यै नमो नमः ॥१३॥

बालारिष्टहरे देवि आयुर्देव्यै नमो नमः।
कल्याणदायै कल्याण्यै फलदायै च कर्मणाम् ॥१४॥

प्रत्यक्षायै स्वभक्तानां आयुर्देव्यै नमो नमः।
देवरक्षणकारिण्यै आयुर्देव्यै नमो नमः॥१५॥

Amma will not do Aayaa work in USA-Thrilling story

*திக்கற்றவனுக்க்கு தெய்வம் துணை*

சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில், உள்ள ஒரு பிரசித்திபெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர். சுந்தரி மாமிக்கு வயது 51.

அவர்களின், ஒரே மகன் தான் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்சாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான்.

சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவன் பரத்வாஜ். குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது தெரிந்து, தான் நன்றாக படித்தால் தான் குடும்பம் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து, எப்போதும் பாட புத்தகமும் கையுமாக அலைவான். வகுப்பில் எப்போதும், அவன் தான் முதல் மாணவன்.

பிளஸ் 2வில், பள்ளி மாணவர்கள், முதல் மதிப்பெண்ணும், மாவட்ட அளவில் மூன்றாவது, இடத்திலும் வந்தான்.

இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்து விட்டாலும், அந்த நான்கு ஆண்டுகள் படிப்பு முடிவதற்குள், சுந்தரம் குருக்கள் மிகவும் திண்டாடி தான் போய்விட்டார்.

பேங்க் லோன் கிடைத்திருந்தாலும், கல்லூரி கட்டணம் போக, மீதி செலவுகளான புத்தகம், உணவு, விடுதி கட்டணம் என மற்றவற்றுக்கெல்லாம், பல இடங்களில் கடன் வாங்கியும், இருந்த ஒரே ஒரு ஓட்டு வீட்டையும் விற்றும் சமாளித்தார்.

எப்படியோ ஒரு வழியாக நல்ல மதிப்பெண்ணுடன் பரத்வாஜ் இன்ஜினியரிங் முடித்தான்.

அதற்குப் பின், சென்னையில் உள்ள, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், "அப்ரென்டிஸ்' ஆகசேர்ந்தான். 

இரண்டு வருட பயிற்சிக்குப்பின், பணி நிரந்தரம் செய்யப்பட்டு, நிறுவனத்தின் டெக்ஸாஸ் கிளைக்கு, பணி மாற்றம் செய்யப்பட்டான்.

கண்காணாத இடத்திற்கு போய், மகன் சாப்பாட்டிற்கு கஷ்டப்படக்கூடாது.
படிக்கும் காலத்தில், பரத்வாஜுக்கு பெரும்பாலும் ரசம் சாதம், தயிர்சாதம் தான். பல நேரங்களில குருக்களும், அவர் மனைவியும், தாங்கள் சாப்பிடாமல் கூட இருந்து விடுவர் ஆனால், மகனுக்கு எப்படியாவது, எதையாவது மூன்று வேளையும் சாப்பிடக் கொடுத்து விடுவர்.

சுந்தரம்  குருக்களுக்கும், சுந்தரி மாமிக்கும் ஒரே எண்ணம் தான். ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று.

மருமகள் பவித்ரா ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். அவள் அப்பா ஒரு ஓட்டலில் சமயகாரர், பிளஸ் 2 முடித்து   இருந்தால்

வரதட்சணை, நகை, சீர் எதுவும் கேட்காமல், இவர்களே திருமண செலவுகளை செய்து, திருமணத்தை முடித்தனர்.

திருமணமான ஒரே வாரத்தில், பரத்வாஜ், மனைவி பவித்ராவுடன் டெக்ஸாஸ் சென்று விட்டான்.

போன புதிதில், அவ்வப்போது போன் செய்து பேசிக் கொண்டிருந்த மகனும், மருமகளும், அதன் பின், மாதம் ஒரு முறை... இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்று பேசலாயினர்.

டெக்ஸாஸ் சென்ற பின், பரத்வாஜ் ஒரு முறை கூட பணம் அனுப்பவில்லை.
அதற்குப் பின், பரத்வாஜிடமிருந்து பணம் பற்றி எந்தப் பேச்சும் வந்தது கிடையாது.

சுந்தரம் குருக்களுக்கும், சுந்தரி மாமிக்கும், மகன் பணம் அனுப்பவில்லையே என்ற கவலையெல்லாம் இல்லை. அவன் நன்றாக இருந்தால், அதுவே போதும். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மகன் இதோ இப்போது தான் சொந்த ஊர் வருவதாக போன் செய்திருந்தான்.

அதற்கு தான் சுந்தரி மாமி தடபுடலாக பட்சணங்கள் எல்லாம் செய்து அமர்க்களப்படுத்தி கொண்டிருக்கிறாள்.

சுந்தரி மாமியிடம் மகன் போனில் பேசும் போதெல்லாம், "அம்மா இங்க சொர்க்கம் மாதிரி இருக்கும்மா.பெரிய வீடு, தோட்டம் எல்லாம் இருக்கு. வீடு பெருக்க, பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க எல்லாவற்றிருக்கும் மிஷின் இருக்கு. 

நீங்க ரெண்டு பேரும் இங்கேயே வந்து, எங்க கூடவே தங்கிடுங்கம்மா... அங்கே என்ன இருக்கு?' என்று அடிக்கடி கூப்பிடுவான்.

"அப்பா கோவிலை விட்டுட்டு வருவார்ன்னு தோணலைப்பா, நீ இங்கு வரும்போது, அது பற்றி பார்க்கலாம்...' என்று கூறி வந்தாள் சுந்தரி மாமி.

மகன் சொல்லிச் சொல்லியே சுந்தரி மாமிக்கு, அந்த ஆசை அடி மனதில் தங்கி விட்டது.

எப்போதும் சுந்தரம் குருக்களிடம் வாய் ஓயாமல் கூறத் தொடங்கி விட்டாள், ஒரு மாதமாவது அங்கே டெக்ஸாஸ் போய் மகனுடன் அக்கடாவென்று இருந்து விட்டு வர வேண்டுமென்று.

இப்போது மகன் வரும் தகவல் கிடைத்ததிலிருந்து அவளுக்கு கை, கால் ஓடவில்லை. எப்போது மகன் வந்து, தங்களை அவர்களுடன் கூட்டிப் போவான் என்றே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

பரத்வாஜ் வரும் அன்று,  மீனம்பாக்கம் விமானநிலையம் சென்று, அவர்களை கூட்டி வர வேண்டும் என்று தான் சுந்தரி மாமிக்கு ஆசை.

ஆனால் பரத்வாஜ், " அம்மா நீங்க சிரமப்பட வேண்டாம். கஸ்டம்ஸ் கிளியரன்ஸ், மற்ற பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிய நேரமாகும். அதனாலே, நாங்களே வந்துடறோம்...' என்று கூறி விட்டதால், வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்து கொண்டிருந்தாள்.

காலையிலிருந்து சாப்பிடாமல் இருவரும் காத்திருக்க, ஒருவாறு மாலை மூன்று மணிக்கு வந்து சேர்ந்தனர் பரத்வாஜும், பவித்ராவும்.ரெடியாக வைத்திருந்த ஆரத்தியை சுற்றி, வீட்டுக்குள் அழைத்தாள் சுந்தரி மாமி

சுந்தரம் குருக்கள், ""காலையில் இருந்து அம்மா சாப்பிடாம உங்களுக்காக தான் காத்திருக்காள். வாப்பா, ஒரு வாய் சாப்பிடலாம்.''""இல்லைப்பா, நாங்க பவித்ரா வீட்டுலியே சாப்பிட்டுட்டோம். அம்மா, உன் கையாலே, ஒரு வாய் காபி குடும்மா. அது போதும்.''

அப்போது தான், அவர்களுக்கு உறைத்தது, அவர்கள் இருவர் கையிலும் லக்கேஜ் எதுவும் இல்லாதது. மகனையும், மருமகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த ஆனந்தத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டனர். பெத்த மனமல்லவா! 

பவித்ரா தன் கையில் வைத்திருந்த துணி பையை மாமியாரிடம் கொடுத்தாள். அதில் சில சாக்லேட் வகைகளும், ஒரு புடவை ஜாக்கெட், வேட்டி துண்டும் இருந்தது.

சுந்தரி மாமிக்கு பசியில் மயக்கமே வரும் போலிருந்தது.

பார்த்து பார்த்து சமைத்து வைத்திருந்த அத்தனை உணவு வகைகளும் சீண்டுவாரற்று, அங்கே கிடந்தது.

காபி சாப்பிட்ட சிறிது நேரத்தில், ""சரிப்பா நாங்க கிளம்பறோம். அங்கே பவித்ரா வீட்டுல தங்கிக்கிறோம். நான் அடிக்கடி வந்து பார்த்துக்கறேன். ஒரு மாசம் லீவு இருக்கு இல்ல,'' கூறியவாறே கிளம்பி விட்டான் பரத்வாஜ். 

மறக்காமல், மாமியார் செய்து வைத்திருந்த பட்சணங்களை ஒன்று விடாமல் உரிமையுடன், "பேக்' செய்து கொண்டு கூடவே கிளம்பி விட்டாள் பவித்ரா. சாமர்த்தியகாரியாக மாறிவிட்டவள்  அல்லவா!

இவர்கள் இருவரும், அதை ருசி கூட பார்த்திருக்கவில்லை.

இருவருக்கும் மிகவும் வருத்தமாக இருந்தாலும், சுந்தரம் குருக்கள் வெளியில் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை.

சுந்தரி மாமி, அவர்கள் கிளம்பியவுடன் மனம் தாளாமல் புலம்பி தள்ளி விட்டாள்.""ஒரே பையன்னு ஆசையா வளர்த்தோம். இப்ப அவன் யாரோ மாதிரி வந்து அரைமணி நேரத்துல ஓடறான். எனக்கு மனசு சங்கடமா இருக்குங்க.''சுந்தரம் குருக்கள் தான் அவளை பலவாறு தேற்றி, சாப்பிடவைத்தார். 

இரண்டு நாட்கள் கழித்து, மறுபடியும் வந்த பரத்வாஜ், அப்பாவிடம் மற்றும் பேசினான்.

""அப்பா, பவித்ராவுக்கு, அவ அம்மாவை டெக்ஸாசுக்கு கூட்டிக்கிட்டு போய், ஒரு மாசம், கூட தங்க வைச்சுக்க ஆசைப்பா. 

அவ அம்மாவும் பாவம், சின்ன வயசிலிருந்து குடும்பம், குழந்தைகள்ன்னு உழைச்சு ஓடாயிட்டா. 

அதனால, அவங்களை நாங்க இப்ப கூட்டிக்கிட்டு போகப் போறோம்.

நீங்க எல்லாத்தையும் சரியா புரிஞ்சிப்பீங்க. அதனால தான், உங்ககிட்ட சொல்றேன்.

அம்மாவுக்கு எப்படியாவது சொல்லி புரிய வைக்கறது உங்க பொறுப்புப்பா.

""அப்புறம்... பவித்ராவுக்கு தனி ஒரு இருக்கிறது தான் பிடிச்சிருக்குப்பா. 

அம்மாவுக்கும், பவித்ராவுக்கும் ஒத்துப் போகாதுப்பா. 

அதனால, நீங்க போன் கூட செய்யாதீங்க. நானே, அப்பப்ப சமயம் கிடைக்கும் போது, உங்களுக்கு போன் செய்றேன்.''

அத்தோடு டெக்ஸாசுக்கு கிளம்பும் அன்று தான் இருவரும் வந்து ஐந்து நிமிடம் இருந்து, விடை பெற்றுக் கிளம்பினர்.

அன்று இரவு, ""என்னங்க நான் உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு வந்ததிலிருந்து, எதுக்கும் ஆசைப்பட்டதில்லை.

ஆனால், நம்ம பையன் வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம், ஒரு மாசமாவது அங்கே போய் இருக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். 

அது நிராசையாயிடுச்சு சரி, வாங்க தூங்கலாம். நீங்க நாலு மணிக்கு எழுந்து குளிச்சு கோவிலுக்கு போகணும்.''

ஆறு மாதங்கள் உருண்டோடிய பின், டெக்ஸாசில் ஒரு நாள்...
என்னங்க, நான் கர்ப்பமாக உள்ளேன் என்று டாக்டர் சொல்லி விட்டார்.. பேசாம உங்க அம்மாவை வரவழைச்சா என்னங்க? பிரசவம் முடியற வரை, இங்கேயே இருந்து, எனக்கு வேண்டியதை சமைச்சு போடட்டுமே.'' என்று பவித்ரா தன் கணவன் பரத்வாஜிடம் கூறுகிறாள்.

""நீ தானே நமக்கு பிரைவசி தேவை, அவங்க... இங்கே வந்தா சரிப்படாதுன்னு சொன்னே. இப்பக் கூப்பிட்டா எப்படி வருவாங்க?'' என்று பரத்வாஜ் கூறுகிறான். சரி, எனக்கு மனசு சரியில்லை.
இங்கு புதுசா கட்டப்பட்ட அம்மன் கோவிலுக்கு போன வாரம் கும்பாபிஷேகம் நடந்தது இல்ல... அங்கு சென்று வரலாம்

இவர்கள் போன போது அந்த கோவிலில் சற்றுக் கூட்டமாக இருந்தது. அப்போது தான் அம்மனுக்கு அலங்காரம் முடித்து, திரை விலகி தீபாராதனை காட்டப்பட்டது.

கண்களை மூடி கை குவித்து இறைவனை வணங்கி, கண்களை திறந்தால், தீபாராதனை தட்டுடன் அருகில் வந்த குருக்களைப் பார்த்து, அதிர்ந்தான் பரத்வாஜ். 

அங்கே நிற்பது யார்? அப்பாவா? கண்களை கசக்கி விட்டுக் கொண்டு மீண்டும் பார்த்தான்.

"அப்பா...' அவனை அறியாமல் வாய் முணுமுணுத்தது.

 ""கொஞ்சம் இருப்பா. இதோ வரேன்.'' அங்கிருந்த வேறொரு குருக்களிடம் ஏதோ சொல்லி விட்டு வந்த அப்பா, ""அதோ, அது தான் நம்ம குவார்ட்டர்ஸ் வாங்க, போகலாம்,'' சுந்தரம் குருக்கள் முன்னே வந்து நடக்க, பேச்சற்று பின் தொடர்ந்தனர் பரத்வாஜும், பவித்ராவும். போனவுடன் வீட்டை பார்த்து அசந்து போய் விட்டான். 2 பெட் ரூம் ஹால் பிளாட்.

வீட்டில் இவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற சுந்தரி மாமி, ""சென்னையில் அப்பா வேலை பார்த்த கோவில் தர்மகர்த்தாவின் பொண்ணும், மாப்பிள்ளையும் இங்கே தான் இருக்காங்க.

அவர்கள் கட்டிய கோவிலுக்கு, பூஜை விதிமுறைகள் தெரிஞ்ச தலைமை குருக்கள் வேணும்ன்னு, அப்பா கிட்ட கேட்டுகிட்டாங்க.

 தர்மகர்த்தாவும், "நீங்க டெக்ஸாசுக்கு கிளம்புங்க.நான், இங்கே வேறு ஆளை பார்த்துக்கறேன்"'னு சொல்லிட்டார்.

""அப்பாவும் சென்னையில நமக்கு யாரிருக்கா... தெய்வ கைங்கரியத்தை எங்கேயிருந்து செய்தா என்னன்னு புறப்பட சொல்லிட்டார். 

இங்கே அப்பாவுக்கு மாத சம்பளம், ஐந்து  லட்சம் ரூபாய்,'' கட கடவென கூறி முடித்தாள் சுந்தரி மாமி.

""அம்மா, இப்ப உங்க மருமகள் தாய்மை அடைஞ்சிருக்கா. அவளுக்கு வாய்க்கு ருசியா சாப்பிடணும்ன்னு தோணுதாம்; அவ அம்மா, இப்ப வர முடியாத சூழ்நிலை. நீங்க ரெண்டு பேரும் எங்க கூட பிரசவம் வரை இருந்தா நல்லாயிருக்கும்மா" பரத்வாஜ் கூறுகிறான். 

""அது சாத்தியப்படாதுப்பா, அப்பா பூஜை முடிச்ச மீதி நேரத்துல, இங்கே இருக்கிற வேத பாடசாலையில் வேதம் சொல்லிக் கொடுக்கிறார். அதுக்கு இங்கே இருக்கிறது தான் சவுகரியம்.''

""அம்மா... அப்பா வரமுடியலைன்னா பரவாயில்லை. நீ மட்டுமாவது வாம்மா.''

""இல்லைப்பா அப்பாவுக்கும் வயசாகிறது.அவரை பார்த்துக்கறது தான், என் முதல் கடமை.

அது மட்டுமில்லாம, தினமும் கோவில் பிரசாதங்களை செய்கிற வேலையும் எனக்கு கொடுத்திருக்காங
வேதம் கத்துக்கறவங்களுக்கும், கடவுளை தரிசிக்க வர்றவங்களுக்கும், மதிய உணவு செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கு. 
இதுக்காக எனக்கு 
இரண்டு லட்சம் ரூபாய கிடைக்கிறது.

""பரத்வாஜ், இவ்வளவு நாள் உனக்காகவே நாங்க ரெண்டு பேரும் வாழ்ந்தோம், பசியும் பட்டினியுமா இருந்து, உன்னை ஆளாக்கி, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தோம். இது உனக்கு நன்கு தெரியும். ஆனால், கல்யாணம் ஆனவுடன் உனக்கு நாங்க தேவையற்று போயிட்டோம்.!

""கலங்கி நின்ன எங்களுக்கு தொப்புள் கொடி உறவு போனா என்ன, வேற புதிய உறவுகளை ஏற்படுத்தி தர்ரேன்னு, கடவுள் புதிய பந்தங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.இனிமேல், அந்த பந்தங்களை எங்களால விட முடியாது. மேலும் பூஜை பண்டிகை என்று நாங்கள் இருவரும் அடிககடி நியூ ஜெர்சி கலிஃபோர்னியா செல்வோம். அங்கு உள்ளவர்கள் இவரை அழைப்பார்கள். இதில் எங்களுக்கு நல்ல வருமானம். எங்கள் சேமிப்பு போக மீதம் உள்ளதை சென்னையில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லததிற்கு அனுப்புகிறோம். பணத்திற்கு இப்போது எங்களுக்கு  பஞ்சம் இல்லை.  சென்னையில் வளசரவா்கத்தில் ஒரு வீடு வாங்கி உள்ளோம். ஒரு காலத்தில் உன் அன்புக்காக ஏங்கி கொண்டு இருந்தோம். மூன்று வேளை உனக்கு சாப்பாடு போட்டு விட்டு நாங்கள் பட்டினி கிடப்போம். ஆனால் இப்போது உன்னை பற்றி  நினக்க எங்களுக்கு நேரம் இல்லை.
 உனக்கு உதவ முடியாது.

இப்ப மதிய உணவு நேரம் நெருங்கிடுச்சு. நான் போய் பரிமாறணும் என்று கூறி அரக்க பறக்க கிளம்பினாள் சுந்தரி மாமி.  இப்போது பவித்ரா விடம், எங்களுக்கு பல பணக்கார பெண்களின் ஜாதகம் வந்தது.  ஆனால் நீ எழை குடும்பத்தில் பிறந்த வள் , எங்களை எல்லாம் கை விட மாட்டாய் என்று நினைத்து ஏமாந்து போய் விட்டோம். என் மகனை இப்படி மாற்றி விட்டாய். அவனை உனக்கு அடிமையாக்கி விட்டாய். நாளைக்கு உனக்கும் ஒரு மகன் பிறப்பான், பிற்காலததில் உங்களையும் இப்படி நடத்துவான். கடவுள் உனக்கு தக்க தண்டனை கொடுப்பார். மாமியாரின் அனல் பறக்கும் பேச்சு அவளை ஈட்டியால் குத்துவது போன்று இருந்தது.
 மகனிடம் "போகும் போது அப்பாவிடம் எதுவும் பேசாதே, அவர் எரி மலைபோல் வெடித்து விடுவார். எதுவும் பேசாமல் கிளம்பு". அப்புறம் நீ அடிக்கடி இங்கு வருவது அவருக்கு பிடிக்கவில்லை.  என்னை பார்ப்பது என்றால் மதிய உணவு வேளையில் கோவிலில் பார். சாப்பாடு போட்டு  அனுப்புகிறேன்
மாமி பொரிந்து தள்ளி விட்டு கிளம்பி விட்டாள். அவளிடம் அப்பா ராம்ஜியை 5 மணிக்கு கார் எடுத்து கொண்டு வர சொல் புரோபாசர் பாலுவை ஒரு பூஜை விஷயமாக பார்க்க வேண்டும்.

பெற்றவர்களின் அன்பை உணர முடியாமல், மனைவியின் சுயநல போக்கிற்கு அடிமையாகி, அவர்களை உதாசீனப்படுத்தி இப்போது, அதே அன்பிற்கு ஏங்கிய பரத்வாஜ், சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அப்பாவின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க கூசி, அங்கிருந்து தன் மனைவியுடன், தளர்ந்த நடையுடன் வெளியேறினான்....பரத்வாஜுக்கும், பவித்ராவுக்கும் தலை சுற்றுகிறது. பவித்ராவுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. அம்மாவின் பேச்சு அவர்கள் இருவருககும் சாட்டை அடி அடிப்பது போல் இருந்தது.  வைராககியம் உள்ள
அப்பா அவர்களை பார்க்காமல், கண்டு கொள்ளாமல் பேப்பர் படித்துi கொண்டு இருந்தார்.

                விதி

"வினை விதைத்தவன் வினை அறுப்பான்!"

"தினை விதைத்தவன் தினை அறுப்பான்!"  
   
"For every action, there is always an equal and Opposite Reaction"

Learn Sanskrit in Narayaneeyam through whatsapp

Namaste

Glad to see your interest for Narayaneeyam class

As mentioned, this class will be  in Samskritam only, and our aim is not to learn slokas, but the Samskritam of this kaavyam

Please open this email in your MOBILE PHONE and click the below link to join our whatsapp group for the class.




all soochanas related to the class will be posted in the whatsapp group.

Dhanyawada:



जयतु  संस्कृतम्         जयतु  भारतम्

Which Shiva temple for your star?

*உங்கள்* *நட்சத்திரப்படி* *சிவவழிபாடு* செய்ய உதவும் தேவாரப்பாடல்!!!

கீழே அவரவர் *பிறந்த* *நட்சத்திரத்திற்குரிய* ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.நீங்கள் உங்களது *பிறந்த* *நட்சத்திரத்தின்* *பாடலை* ஒவ்வொரு நாளும் *மூன்று* *தடவை* பாடி,சிவபெருமானை வணங்கி வந்தால்,நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.

1. *அசுவினி* :
தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.

2. *பரணி* :
கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே.

3. *கார்த்திகை* /கிருத்திகை:
செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே.

4. *ரோகிணி* :
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே.

5. *மிருகசீரிஷம்* :
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

6. *திருவாதிரை* /ஆதிரை:
கவ்வைக் கடல் கதறிக் கொணர் முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார் குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே.

7. *புனர்பூசம்* :
மன்னும் மலைமகள் கையால் வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள் ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான் தன் இணை அடியே.

8. *பூசம்* :
பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

9. *ஆயில்யம்* :
கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய வல்லானைச் செந்நீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்கோன் என்று வாழ்த்துவனே

10. *மகம்* :
பொடி ஆர் மேனியனே! புரிநூல் ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர் கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே! எனக்கு ஆர்துணை நீ அலதே.

11. *பூரம்* :
நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச் சேய்ன்ஞலூர் மேயவனே.

12. *உத்திரம்* :
போழும் மதியும் புனக் கொன்றைப் புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளே.

13. *அஸ்தம்* :
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

14. *சித்திரை* :
நின் அடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடர்கூற்று உதைத்த
பொன் அடியே இடர் களையாய்நெடுங்களம் மேயவனே.

15. *சுவாதி* :
காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.

16. *விசாகம்* :
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

17. *அனுஷம்* :
மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

18. *கேட்டை* :
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே

19. *மூலம்* :
கீளார் கோவணமும் திருநீறும்மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவாஎனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா!மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

20. *பூராடம்* :
நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.

21. *உத்திராடம்* :
குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

22. *திருவோணம்* /ஓணம்:
வேதம் ஓதி வெண்நூல் பூண்ட வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே.

23. *அவிட்டம்* :
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே.

24. *சதயம்* :
கூடிய இலயம் சதி பிழையாமைக் கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

25. *பூரட்டாதி* :
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின் நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித் தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக் கூத்தன் குரை கழலே.

26. *உத்திரட்டாதி* :
நாளாய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.

27. *ரேவதி* :
நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய் நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி நீ அருள் செய்வாயே.

Peeriyazhwar & Goda

courtesy:Smt.Saroja Ramanujam

தந்தையும் மகளும்-3

பெரியாழ்வார் கண்ணன் திருவிளையாடல்களைக் கூற ஆரம்பிக்கிறார்.

"கண்ணன் ஆயர்பாடியில் பிறந்ததாகக் கருதிய 
ஆயர்கள் அவன் பிறப்பை சிறப்புடன் கொண்டாடினர். மணமிகுந்த தைலங்கள் மஞ்சள் இவை ஒருவருக்கொருவரும் கண்ணன் மாளிகை முற்றத்திலும் தூவி அந்த இடம் சேறானது. "

'வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் 
எண்ணை சுண்ணம் எதிரெதிர் தூவிட 
கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே.'

"சிலர் மகிழ்ச்சிபெருக்கால் இங்கும் அங்கும் ஓடினர். சிலர் உவகை மிஞ்சி விழுந்தனர். வேறு சிலர் எங்கிருக்கிறான் கண்ணன் என்று தேடினர். ஆனந்தம் மேலிட்டு பாடுபவர்களும் ஆடுபவர்களும் கொண்டு ஆய்ப்பாடி விளங்கிற்று."

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் 
நாடுவார்நம்பிரான் எங்குத்தான் என்பார் 
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று 
ஆடுவார்களும் ஆயிற்று ஆயர்பாடியே'

என்ற பெரியாழ்வாரின் சொற்களைக் கேட்டு கோதையும் மனதால் ஆயர்பாடிக்கே போனவளாக ஆட ஆரம்பித்தாள்.

பிறகு , " இவனைப்போல் பிள்ளை வேறில்லை , திருவோணத்துப் பிறந்த இப்பிள்ளை உலகை ஆள்வான் என்று அவனைக் கண்டவர் எல்லாம் ஒருமித்து ,
'ஆணொப்பார் இவன் நேர் இல்லை காண், திரு
வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே.' 
என்று கூறினர்," என்ற தந்தையின் சொல் கேட்ட கோதை ,

"திருவோணமா? கண்ணன் பிறந்தது ரோகிணிஅல்லவா" என்றாள்.

"ஆம் குழந்தாய் , ஆனால் பரம்பொருளான அவன் தன் ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு ஓர் இடைப்பிள்ளையாய் அவதரித்தானே தவிர பிற்காலத்தில் அவன் தன மகிமையை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தான் அல்லவா?

அதைக் கண்ட எனக்கு 'இப்பிள்ளை உலகை ஆள்வான்' என்ற சொற்களால் அவன் முன்னோர்காலத்தில் வாமனனாய் வந்து த்ரிவிக்ரமனாய் உலகை ஆண்டது நினைவுக்கு வந்தது. வாமனமூர்த்தியின் நக்ஷத்ரம் திருவோணமல்லவா?" என்றார்.

"நீங்கள் யசோதையாய் மாறி அவனைப் பாடினாலும் அவன் நாராயணன் என்ற உணர்வு உங்களை ஆட்கொண்டதல்லவா? அதனால்தான் உங்கள் யசோதையும் ஆழ்வாராகவே காட்சி அளிக்கிறாள்.".என்றாள் கோதை.

மேலும் சொல்கிறார் பெரியாழ்வார் .

'உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார் 
நறு நெய் பால் தயிர்நன்றாகத தூவுவார் 
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே '

"ஆய்ப்பாடி மக்கள் பித்துக்கொண்டவர் போல உறியில் உள்ள நெய் பால் தயிர் எல்லாவற்றையும் உருட்டி அவற்றை எங்கும் இறைத்தனர். அவர் கூந்தல் அவிழ ஆடிக் களித்தனர்"என்று கூற கோதை ,

" ஆலிலை மேல் ஒரு பாலகனாய் துயின்றவன் , உலகெல்லாம் தன்னுள்ளே அடக்கியவன், இங்கு ஒரு உள்ளம் கொள்ளைகொள்ளும் கள்ளமறியாப் பிள்ளை போல கிடப்பதைக்கண்டு யார்தான் பித்தாக மாட்டார்கள் ." என்றாள்கோதை.

அடுத்து பன்னிரண்டாம் நாளில் கண்ணனை நீராட்டி தொட்டில் இடும் காட்சியைக் காண்போமா?

Tenkalai Nama Pillaiyarkovil -Periyavaa

*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - கருணையின் வடிவம் காஞ்சி மஹான்*

_அனுபவம் பகிர்வு - மேச்சேரி பட்டு சாஸ்த்ரிகள்_

"மகா பெரியவா தனக்கு நெருக்கமா இருக்கறவாகிட்டயும், தன்னைச் சுத்தி இருக்கறவாகிட்டேயும்தான் கருணை காட்டுவார்னு நினைச்சா, அது தப்பு. அவருக்கு எப்பவுமே ஜனங்கமேல அபரிமிதமான அன்பு உண்டு. அவங்க கஷ்டப்படறதைப் பொறுத்துக்கவே மாட்டார். அவரால அதை சகிச்சுண்டு இருக்கமுடியாது!" என்ற பீடிகையுடன், பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி ஒன்றை விவரித்தார் பட்டு சாஸ்திரிகள்.

"திருமழிசைஆழ்வார் பிறந்த க்ஷேத்திரம் திருமழிசை. அந்த ஊருக்குப் பக்கத்திலேயே நூம்பல்னு ஒரு கிராமம் இருக்கு. இங்கே, மகா பெரியவா ஒருமுறை முகாமிட்டிருந்தார்.

ஒருநாள்… திருக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, பக்கத்திலேயே இருக்கிற பெருமாள் கோயிலுக்கு வந்தார் பெரியவா. அப்போ மணி 11 இருக்கும்; சுள்ளுனு வெயில் அடிச்சிண்டிருந்தது. சூடுன்னா அப்படியொரு சூடு!

கோயில் வாசல்ல பெரிய கதவும், அதுலேயே சின்னதா ஒரு கதவும் இருக்கும். அதைத் திட்டிவாசல்னு சொல்லுவா! அந்த வழியா உள்ளே போன பெரியவா, மதிலை ஒட்டி கொஞ்சம் நிழல் இருந்த இடத்துல போய் அப்படியே சாய்ஞ்சு உட்கார்ந்துட்டார். அவருக்கு எதிரே அடியேன்; பெரியவா கேக்கறதுக்கு எல்லாம் பதில் சொல்லிண்டு இருந்தேன்.

வெயில் நெருப்பா கொதிச்சிண்டு இருந்த இடத்துல நின்னுண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நின்னுண்டிருந்தா, காலே பொசுங்கிடும்போல இருந்துது. அப்படியொரு சூடு! பெரியவாகிட்டே பேசிண்டிருந்த அதே நேரம், தரையோட சூடு பொறுக்கற வரைக்கும் ஒரு கால், அப்புறம் சட்டுன்னு அடுத்த கால்… இப்படியே கால்களை மாத்தி மாத்தி வெச்சு நின்னு சமாளிச்சுண்டிருந்தேன்!

மகா பெரியவா, நம்மோட மனசுல என்ன இருக்குங்கறதையே தெரிஞ்சுக்கற மகான். எதிர்ல நிக்கற என்னோட நிலைமை அவருக்குத் தெரியாம இருக்குமா? சட்டுன்னு பேச்சை நிறுத்தின பெரியவா, "வெளியில என்னவோ பேச்சு சத்தம் கேக்கற மாதிரி இருக்கு. என்னன்னு போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லு!"ன்னார்.

விறுவிறுன்னு வெளியே வந்தேன். வாசல்ல நின்னு எட்டிப் பார்த்தேன். அங்கே ஒரு நூத்தம்பது, இருநூறு பேர் நின்னுண்டிருந்தா. எல்லாரும் மகா பெரியவாளை தரிசிக்கிறதுக்காகத்தான் நிக்கறாங்கன்னு தோணுச்சு. பெரியவாகிட்ட வந்து விவரத்தைச் சொன்னேன்.

ஆனா மகா பெரியவாளோ, "அவா எதுக்கு வந்திருக்கா? ஸ்வாமி தரிசனத்துக்குதானே வந்திருக்கா?! சரியா கேட்டுண்டு வா!"ன்னு மறுபடியும் என்னை அனுப்பினார்.

'அடடா… பெரியவா சொல்றதுபோல, வெளியில நிக்கறவா எல்லாரும் ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கலாம், இல்லையா? நமக்குத் தோணாம போச்சே! பெரியவாளை தரிசனம் பண்ணத்தான் வந்திருக்கானு நானாவே எப்படி நினைச்சுக்கலாம்?' என்று யோசிச்சபடி, வாசல் பக்கம் நகர்ந்தேன்.

"அப்படியே கையோட, அவாள்லாம் வெயில்ல நிக்கறாளா, நிழல்ல நிக்கறாளானு பார்த்துண்டு வா"ன்னார் பெரியவர்.

'நீ மட்டும்தான் கால் சூட்டோட என்கிட்ட பேசிண்டு நிக்கறதா நினைக்கறியோ?! உன்னைப்போல எத்தனை பேரு வெயில்ல கால்கடுக்க நின்னுண்டிருக்கானு உனக்குத் தெரியவேணாமா?'ன்னுதான், மகா பெரியவா என்னை அனுப்பிவைச்ச மாதிரி தோணிச்சு எனக்கு.

ஜனங்க கூட்டமா நின்னுண்டிருந்த இடத்துக்கு வந்தேன். "எல்லாரும் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கேளா… இல்ல, மகா பெரியவாளை தரிசிக்க வந்திருக்கேளா?"ன்னு கேட்டேன்.

"பெரியவாளை தரிசனம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்குறதுக்குதான் வந்திருக்கோம்"னு கோரஸா பதில் சொன்னா. ஓடி வந்து பெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னேன்.

அவர் உடனே எல்லாரையும் உள்ளே அனுப்பிவைக்கச் சொன்னார். "இங்கே மதிலோட நிழல் விழறது. எல்லாரும் அப்படியே நிழல்ல உட்கார்ந்துக்குங்கோ"ன்னார்.

வெயிலின் உக்கிரத்தைத் தாங்கமுடியாம தவிச்ச என்னோட நிலைமையைக் கவனிச்ச அதே நேரம், வெளியே ஜனங்க நின்னுட்டிருக்கிறதையும், அவங்களும் வெயில்ல கஷ்டப் படுவாங்களேங்கிறதையும் பெரியவா யோசிச்சு, அவங்களை உடனே உள்ளே அனுப்பச் சொன்னார் பாருங்கோ, அதான் பெரியவாளோட பெருங்கருணை.

இதைக் கேட்கறதுக்கு ரொம்பச் சின்ன விஷயம்போலத் தெரியலாம். ஆனா, எந்த ஒரு சின்ன விஷயத்துலேயும் நுணுக்கமான பார்வையோடு, ஜனங்க மேல மகா பெரியவா காட்டின அன்பையும் அக்கறையையும்தான் நாம இங்கே முக்கியமா கவனிக்கணும்.

கூட்டத்தோடு பேசிண்டிருந்த நேரத்துல, "நீ போய் கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு வா"ன்னு என்னை அனுப்பினார். பெரியவா உத்தரவு ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது உள் அர்த்தம் ஒண்ணு இருக்கும்.

நான் பிராகாரத்தை வலம் வந்தப்ப, அங்கே பிள்ளையார் சந்நிதியைப் பார்த்தேன். ஆச்சரியமும் குழப்பமுமா இருந்தது. தென்கலை நாமத்தோட காட்சி தந்தார் பிள்ளையார். பெருமாள் கோயில்ல பிள்ளையார் எப்படி? தலையைப் பிய்ச்சுண்டேன். யோசிக்க யோசிக்க, பதிலே கிடைக்கலை.

கோயிலைச் சுத்தி முடிச்சு, மகா பெரியவா எதிரே வந்து நின்னேன். என்னை ஒருகணம் உத்துப் பார்த்தார்.

"என்ன… தென்கலை நாமம் போட்ட பிள்ளையார் இருக்காரேனு பிரமிச்சுட்டியோ? வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரை 'தும்பிக்கை ஆழ்வார்'னு சொல்லுவா!"னு விளக்கம் சொல்லிட்டுச் சிரிச்சார் பெரியவா.

*பெரியவா சரணம்!*

_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural

*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org*

Show me the GOD - Akbar & Birbal story

கடவுளைக் காட்டு J K SIVAN
டில்லி ராஜா அக்பரிடம் டிவி கம்பியூட்டர் , பத்திரிக்கை மொபைல் போன் எதுவும் இல்லாத நிலையில் அவருக்கு ஒரே பொழுது போக்கு பீர்பால் ஒருத்தன் தான். எப்போதும் அக்பருடனேயே இருப்பான் பீர்பால் . அக்பருக்கு ஒரு சந்தேகம் .
''பீர்பால் நீ அடிக்கடி சொல்கிறாயே கடவுள் எங்குமிருக்கிறார் என்று. காட்டுகிறாயா எனக்கு?'
''கடவுள் எங்கும் உள்ளார். சந்தேகமே வேண்டாம்''
ஹிரண்யகசிபு தூணைக்கட்டி இங்கே நாராயணன் இருக்கிறானா என்றானே அது போல் அக்பர் தனது விரலில் ஒரு மோதிரத்தை காட்டி ''இதிலேயும் இருக்கிறாரா கடவுள்?'' என்று கேட்டார்.
'' ஓ இருக்கிறாரே''
''áப்படி என்றால் எனக்கு காட்டுடா கடவுளை''
''கொஞ்சம் கால அவகாசம் வேணும் மஹாராஜா''
''ஆறுமாசம் டைம் எடுத்துக்கோ''
இதென்னடா புது பிரச்னை. இந்த விடாக்கொண்டனுக்கு நல்ல விடை சொல்லவேண்டுமே என்று பீர்பால் யோசித்து நாட்கள் ஓடியது.
ஒருநாள் பீர்பால் வீட்டு வாசலில் ஒரு இளம் துறவி பிக்ஷை கேட்டு நின்றான். கவலையோடு நின்ற பீர்பாலை பார்த்து
''ஐயா எப்போவும் சிரிச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கிறவரு , என்னவோ கவலையா இருக்கீங்களே?
"ஆமப்பா, என் மனசு திடமா நம்பறதை வார்த்தையிலே சொல்ல முடியாம தேடறேன்''
யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற ஆதங்கத்தில் அக்பருடன் நேர்ந்த சம்பாஷணையைச் சொல்கிறான் பீர்பால்.
''ஐயா இதுவா உங்களை தொல்லை பண்ணுது. இதுக்கு விடை நொடியிலே என்னாலேயே சொல்லமுடியுமே. ஆனா நான் எப்படி ராஜாவை பார்க்கிறது?''
''கவலைப்படாதே, நான் உன்னை கூட்டிக்கிட்டு போறேன்''
அக்பரிடம் இருவரும் சென்றதும் பீர்பால் ''மஹாராஜா நீங்க கேட்ட சந்தேகத்துக்கு இந்த பையன் பதில் சொல்வான்''
அக்பர் அந்த பிச்சைக்கார துறவிப்பையனை ஏற இறங்க பார்த்தார்.
''டேய் பையா, இந்த மோதிரத்தில் கடவுளை காட்டு பார்க்கலாம்''
''காட்டறேன் மஹாராஜா. அதுக்கு முன்னாலே ஒரு டம்பளர் தயிர் வேணும். அது தான் நான் சாப்பிடுவேன் ''
ஒரு ஆள் தயிர் கொண்டுவந்து கொடுத்தான். பையன் அதை நன்றாக கலக்கினான்.
''இந்த தயிர் வேண்டாம். இதில் வெண்ணையே இல்லையே. நான் சாப்பிடும் தயிரில் வெண்ணை இருக்கும்.''
''டேய் நான் சாப்பிடும் தயிர் ரொம்ப ஒஸ்தியானது. மிக சுத்தமான என் தேசத்திலேயே உயர்ந்த ரக கெட்டியான தயிர் இதில் வெண்ணெய் இல்லை என்கிறாயே?''
''மஹாராஜா என்ன இது, நீங்கள் ராஜாக்கள் சாப்பிடுவது வெண்ணெய் நிறைந்தது என்கிறீர்களே. எங்கே உங்கள் தயிரில் இருந்தால் அந்த வெண்ணையை எனக்கு காட்டுங்களேன். ''
அடே முட்டாளே, என்ன தைர்யம் இருந்தால் என் முன்னே வந்து இப்படி ஒரு அறிவில்லாத கேள்வி கேட்பாய். தயிரில் வெண்ணையை பார்க்கமுடியுமா. நன்றாக கடைந்தால் தான் தயிரிலிருந்து வெண்ணை வரும் என்பது கூட தெரியாதவன் எனக்கு கடவுளை காட்ட வந்தாயா?''
''மஹாராஜா நான் முட்டாள் இல்லை. உங்கள் கேள்விக்கு விடையைத்தான் சொன்னேன்.''
தயிரில் எப்படி வெண்ணையோ, அப்படி கடவுள் எதிலும் எங்கும் இருக்கிறவன். அவனைப் பார்க்க முடியாது. உணர முடியும். கண்ணை மூடி நினைத்தால் வேண்டினால் உள்ளே தெரிவான். ஞானம் கொஞ்சம் வேண்டும். தயிரை கடைந்து வெண்ணெய் தெரிகிறது போல், நமது பஞ்சகோசத்தையும் கடைந்தால் அதில் சிக்குவான்.
கிருஷ்ணன் நான் வெண்ணையைப் போல என்று காட்டுவதற்கு தான் வெண்ணெய் தின்று காட்டினான்.
அக்பர் கெட்டிக்காரர். விவேகி. பையன் சொன்னதை புரிந்துகொண்டார்.
''சரிடா பையா, கடவுள் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார் சொல்?''
''நமது புலன்களுக்கு சக்தி, மனதுக்கு பார்வை, புத்திக்கு எதை விளக்கவேண்டும் என்ற துணிவு, அங்கங்களுக்கு பலம், நம்மை வாழவைப்பதும், மறைய வைப்பதும் எல்லாமே அவர் சங்கல்பம். 'இது புரியாமல் மனிதன் ஏதேதோ கற்பனை, கனவுகளில் எல்லாம் தான் , தனது, தன்னால், என்ற நினைப்பில் வாழ்கிறான். கடவுள் எதிரில் மனிதன் ஒன்றுமே இல்லை. ஆட்டுவிக்கப்படும் வெறும் பொம்மை.
அக்பருக்கு இப்படி ஒரு பிச்சைக்கார பையனின்ஞானம் அதிசயிக்க வைத்தது. புது அனுபவம் அவருக்கு

16 upacharas in pooja

இன்னும் மறக்கவில்லையே? J K SIVAN 

வீட்டில் பூஜை பண்ணுகிறவர்களுக்கு தெரியும். மனதில் இனம்புரியாத ஒரு சந்தோஷம், நிறைவு இருக்கும். ஏன் தெரியுமா?

எந்த கடவுள்களை நாம் ஏற்று வரவேற்று உபசரித்து, அலங்கரித்து, ஆபரணம் வஸ்திரம் சமர்ப்பித்து, போற்றி, மலர் தூவி மந்திரம் சொல்லி நைவேத்தியம் படைத்து, ஆரத்தி காட்டுகிறோமோ அவர்கள் நம் சிறப்பு வி. ஐ .பி. விருந்தினர். அவர்களுக்கு உபசாரம் செய்வது நமக்கு சந்தோஷம் தருகிறது. அவர்களும் மகிழ்ந்து நமக்குத் தேவையா னதை அளிக்கிறார்கள். நாம் கேட்பதை அல்ல. நமக்கு என்ன கேட்கவேண்டும் என்றே இன்னும் தெரியவில்லையே?.

வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நமக்கு பரிசு கொண்டுவந்து தருகிறார்கள். அவர்களே இப்படி நடந்து கொள்ளும்போது சர்வ லோக நாயகன், நாயகி மனம் குளிர்ந்து, மகிழ்ந்து நம்மை ஆசிர்வதிக்க மாட்டார்களா?. அதனால் தான் நாம் உடலும் உள்ளமும் சுத்தத்தோடு பூஜை செய்வது.

இதன் மஹிமை அருமை தெரியாதவர்களை பற்றி சிந்திக்கக்கூட நான் தயாரில்லை. அப்புறம் தானே வாக்கு வாதம்.

நமது முன்னோர்கள் பகவானுக்கு நாம் அளிக்கும் பதினாறு உபசாரங்களை அழகாக சொல்லி இருக்கிறார்கள். ஷோடச என்றால் பதினாறு. . உபசாரம் என்றால் தெரியும். சும்மா ஒரு லிஸ்ட் தருகிறேன். அவை என்ன என்று ஞாபகம் வரட்டுமே.

1.த்யானம். ஆவாஹனம் : கண்ணை மூடிக் கொண்டு மனதில் நாம் வணங்கும் உபச ரிக்கும் பகவானை முன் நிறுத்துவோம். வாங்கோ இங்கே என்று வரவேற்போம். மஞ்சளிலோ விக்ரஹத்திலோ அவரை ஆவாஹனம் செயகிறோம்.

2 ஆசனம்: நமது வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ, வரவேற்பு அறை என்று சின்ன தாகவாவது ரெண்டு நாற்காலியோடு இருக்கும்.. வசதி இருக்கும் இடத்தில் பெரிய திண்டு திண்டு குண்டு குண்டு சோபாக்கள்.

எங்கள் வீட்டில் வெகுநாள் ஒரு ஸ்டூல் தான் இருந்தது. வந்தவர் அதில் உட்கார என் அப்பா நிற்பார்.

3.& 4. பாத்யம்:/அர்க்கியம்: வீட்டுக்கு வந்தவர்க்கு சூடா காப்பியா, ஜில்லுனு மோரா? எது சாப்பிடறேள்? என்று கேட்போம். இப்போது அவருக்கு கை கால் அலம்ப ஜலம் . கொரோனா காலமாச்சே ? பகவானுக்கு வீட்டுக்கு வந்தால் கை கால் அலம்ப அந்த காலத்திலேயே ஜலம் அர்ப்பணித்தார்கள்.

5. ஆசமனம்: மூன்று சிறு சொட்டுக்கள் அச்சுதன் பெயரைச் சொல்லி, வாயில் உதடுகளை துடைத்துக் கொள்ள அளிப்பது. இதுவும் சுகாதார அடிப்ப டையில் மட்டும் அல்ல. மந்திரங்கள் நல்ல வார்த்தைகள் சொல்லும் முன் நாக்கை, உதடை சுத்தப்ப டுத்திக் கொள்ள, ''சிலர் பேசும்போது ''டே அப்படி சொல்லாதே அவனைப்பத்தி, முதலில் வாயைக் கழுவு'' என்கிறோமே.

6. மதுபர்க்கம் - பருக இனிப்பாக ஏதாவது விருந்தாளிக்கு அளிக்கிறோமே . இனிப்பாக பாலோடு தேன் சேர்த்து பகவானுக்கு அளிப்பது.

7. ஸ்நானம்-- . பூஜை அறைக்குள் குளிக்காமல் செல்லும் பழக்கம் நிறைய வீடுகளில் இப்போது உள்ளது. கோவிலுக்கு குளிக்காமல் செல்வோமா? நமது பூஜை அறை சின்ன பிரத்யேக கோவில். பகவானுக்கு ஸ்னானம் செய்விக்க ஜலம் அர்பணிப்பது சம்ப்ரதாயம்.

8. வஸ்திரம், உபவீதம், -- புது வஸ்திரம், சுத்தமான வஸ்திரம், பூணல் ஆகியவற்றை அளிப்பது ஒரு உபசாரம். விசேஷங்க ளில் புது பூணல் நாம் மாற்றிக் கொள்வது பரிசுத்தமாக்கிக் கொள்ள.

9. & 10. கந்தம் /தூபம் --- நறுமண ஊதுபத்தி, தசாங்கம், அகில், சந்தனம் , சாம்பிராணி போன்ற வாசனை பொருள்களை அளித்தால் அந்த பக்கம் வந்தாலே ஒரு தெய்வீக மணம் வீசும். இது நம் உடம்பில் போட்டுக்கொள்ளும் அத்தர் புனுகு, ஜவ்வாது சென்ட் வாசனை அல்ல.

11. புஷ்பம் -- இருக்கவே இருக்கிறது துளசி, வில்வம், மல்லிகை, சாமந்தி, நந்தியாவட்டை, பவளமல்லி இதழ்கள். இவற்றால் அலங்கரித்து, அர்ச்சனை.

12. தீபம் --- பெரிய பூஜை அறை இல்லா விட்டா லும் ஒரு சிறு பிரையோ, ஒரு சிறு மேஜை, ஸ்டூல் மேலேயோ, ஒரு பலகை மேலேயோ, ஒரு சிறு படத்தை வைத்து மலர் அணிவித்து அகல் விளக்கு ஏற்றினாலும் போதும். சாந்நித்யம் வந்துவிடும் . நெய் தீபம் விசேஷம்.

13. நைவேத்தியம் --- நம் வீட்டுக்கு வந்தவருக்கு நாம் வெங்காயம், பாகற்காய், உருளை, பாயசம், அப்பளம், என்று ஏதாவது ருசியாக சமைத்து சாப்பிட வைக்கிறோம். அதை விருந்து என்கிறோம். பகவானுக்கு அதெல்லாம் ஒன்றுமே வேண்டாம், ஒரு காய்ந்த இ,்லை, ஒரு உத்ரணி, துளி சுத்த ஜலம், ஏதாவது ஒரு கனி, ஒரே ஒரு காய்ந்த திராக்ஷை கூட போதும். திருப்தியாக நாம் அளிப்பதை ஏற்றுக் கொள்வான். வீடுகளில் குளித்துவிட்டு சமைத்த சாதம், துளி பருப்பு, நெய்யுடன், நைவேத்தியம் செய்து விட்டு காக்கைக்கு போட்டுவிட்டு பிறகு சாப்பிடு கிறோம். சாதம் ப்ரசாதமாகிறது. காலையில் காப்பிக்கு சுடவைக்கும் பாலில் சிறிது தனியாக எடுத்துவைத்து நைவேத்யம் பண்ணிவிட்டு பிறகு காப்பி சாப்பிடும் பழக்கம் உண்டு. நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுவாக நாம் ஆகிவிடுகிறோம் என்பதால் தான் பலர் லாகிரி வஸ்துக்களை, பூண்டு, வெங்காயம், சில காய்கறிகளை உபயோ கிக்கவில்லை. சாத்வீக உணவு மனதை தெளிவாக்கும்.

14. தாம்பூலம் -- வீட்டுக்கு வந்தவர்களுக்கு சாப்பிட்ட பிறகு வெற்றிலை பாக்கு பழம் தட்டில் வைத்து அளிப்பது ராஜ மரியாதை. நம் வீட்டுக்கு நாம் அழைத்த சர்வேஸ்வரன், சர்வேஸ்வரிக்கு தாம்பூலம் அளிக்க வேண்டாமா?

15.ஆரத்தி -- கற்பூர ஹாரத்திக்காக காத்தி ருந்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பக்தர்கள் இன்னும் எண்ணிக்கையில் குறையவில்லை. வந்த விருந்தாளிக்கு உத்தரவு கொடுக்கவேண்டும். வந்தவரை வாசல் வரை சென்று வழியனுப்பு கிறோம். நாம் ஆரத்தி பாடல்கள் பாடி மனநிறைவோடு அவரிடம் இருந்து விடை பெறுகிறோம்.

16. மந்த்ரபுஷ்பம் --- மனித விருந்தாளிக்கு இல்லாத உபசாரம் இது. மந்த்ரங்களை புஷ்பங்களாக அளித்து வாழ்த்தி வணங்குவது. ப்ரதக்ஷிணம் வந்து நமஸ்கரித்து ஆசி வேண்டுதல், பெறுதல்.

எத்தனையோ தலைமுறைகளாக வந்த இந்த பழக்கம் நின்று போக விடக்கூடாது. நாளையே சிலர் ஆரம்பிக்கலாம். குடும்பத்தினர் அனை வரும் இந்த சிறு வழிபாட்டில் கலந்து கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் புஷ்பம் போட்டு வேண்டிக் கொள்வது.

மனசை சுத்தமாக்க இந்த வழிபாடு அவசியம். சித்தமலம் தெளிவித்து சிவமாக்கிவிடும். முன்னோர்கள் சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள். அவர்கள் அடிச்சுவட்டில் நடப்பது நல்லதே. கடவுள் நம்பிக்கை தன்னம்பிக் கையை வளர்க்கும். நமது சனாதன தர்மத்தில் ''லோகா சமஸ்தா சுகினோ பவந்து '' ஒரு அற்புதமான பரந்த மனப்பான்மை.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே''

இது வேறெந்த மத வழிபாட்டிலும் இருப்பதை அறியேன். இருந்தால் ரொம்ப சந்தோஷம்.


Vasanth & Co Annaachi

ஒரு குடும்பம் மாதத் தவணையில் டிவி வாங்கியது. மாதா மாதம் தவணையை வசூல் செய்ய ஒருவர் செல்கிறார். திடீரென ஒருநாள் எதிர்பாராத விதமாக, அந்தக் குடும்பத்தின் தலைவர் இறந்துவிடுகிறார். குடும்பம் நிர்கதியாகிறது. அக்குடும்பம் வாங்கியிருந்த டிவிக்கான தவணையை வசூல் செய்ய வந்தவர், வாடிக்கையாளர் இறந்தது குறித்து தனது முதலாளியிடம் தகவல் தெரிவிக்கிறார். அந்த முதலாளியும் கருணையுள்ளத்துடன் ஒரு கடிதம் அனுப்புகிறார்.
எங்களது நிறுவனத்தின் வாடிக்கையாளராகிய நீங்கள் படும் துயரை நாங்கள் அறிகிறோம். தங்களின் கணவர் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பாக்கி தவணைத் தொகையை இனிமேல் தாங்கள் செலுத்த வேண்டாம். தங்களின் துயரில் நாங்கள் பங்கேற்கிறோம் என கடிதம் எழுதி அந்தக் குடும்பத்திடம் சேர்ப்பிக்கப்படுகிறது.
கடிதம் எழுதிய முதலாளி வேறு யாருமல்ல வசந்த் & கோ உரிமையாளர் திரு. வசந்தகுமார் அண்ணாச்சிதான். அண்ணாச்சியின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், ஒன்று தவணைத் தொகையை கறாராக வசூலித்திருப்பார்கள். அல்லது டிவியை தூக்கி வந்திருப்பார்கள்.
இன்று நீங்களும் நானும் இரங்கல் தெரிவித்துக்கொண்டிருப்பது ஒரு நல்ல வியாபாரிக்கு மட்டுமல்ல; அவருக்குள் ஒளிந்திருக்கும் நல்ல மனிதருக்கும்கூட.
சென்னை தெற்கு உஸ்மான் ரோட்டில்
ராசியில்லாத கடையாக 1978-இல் கருதப்பட்ட ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, தனது கையாலேயே வசந்த் & கோ என போர்டு எழுதித் தொங்கவிட்டு நிறுவனத்தை துவக்கியுள்ளார்.
இதில் ஆச்சர்யம் என்னவெனில், ஆறு மாதம் கழித்து கடைக்கு வாடகை தந்தால் போதும் என அண்ணாச்சிக்கு கடையை வாடகைக்கு விட்டுள்ளார் அதன் உரிமையாளர். அந்த காலத்தில் பிஸ்கெட், சோப்பு ஆகியவற்றை மொத்தமாக மரப்பெட்டிகளில் பேக்கிங் செய்யப்பட்டிருக்கும். அந்த மரப்பலகையில்தான் வசந்த் & கோ என தனது கைப்பட தனது நிறுவனத்தின் பெயரை எழுதியுள்ளார். ஆச்சா, இப்பொழுது கடை இருக்கிறது, போர்டு இருக்கிறது விற்பதற்கு பொருள்கள் ஏதுமில்லை.
அந்தக் காலத்தில் ஒயர் பின்னப்பட்ட மர சேர்கள், நாற்காலிகள் மிகவும் பிரபலம். அவைகளை தயாரிக்கும் தனது நண்பரிடம் இருந்து ஒரு சேரை 25 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி 5 ரூபாய் லாபம் வைத்து 30 ரூபாய்க்கு விற்பாராம். கடையின் வழியாக போவோர் வருவோருடன் பேசிப் பழகி அவர்களில் நம்பிக்கையானவர்களிடம் ரூ. 1 என்ற வீதத்தில் தினசரி தவணை முறையிலும் சேர்களை விற்றுள்ளார். அப்படி விற்கும்போது 30 ரூபாய்க்கு பதிலாக 31 ரூபாயாக வசூலித்துள்ளார்.
பொருள்களின் உற்பத்தியாளர்களுக்கு சேர வேண்டியத் தொகையை சொன்ன தேதியில் சரியாக கொடுத்து விடுவார். ஒருவேளை அப்படி கொடுக்க முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில், அவர்களிடம் நேரில் சென்று தனது சூழலை தெரிவித்துவிட்டு, மேற்கொண்டு சில நாள்கள் அவகாசம் கேட்பாராம். இந்த அடிப்படை நேர்மையும் நாணயமும்தான் வசந்த் &கோ வின் வளர்ச்சிக்கு காரணம்.
அண்ணாச்சியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான மற்றுமொரு பாடம் இருக்கிறது.
விஜிபி நிறுவனத்தில்தான் அண்ணாச்சி ஆரம்பக்காலத்தில்
பணியாற்றினார். கடையை சுத்தமாக வைத்திருப்பது, கடிகாரம் துடைப்பது என விஜிபியில் பணியை ஆரம்பித்தவர், படிப்படியாக சேல்ஸ் மேன், மேனேஜர் என்னும் அளவுக்கு உயர்ந்தார். இடையிடையே கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டார். அப்பொழுது ஏற்பட்ட ஒரு பிரச்னைக்காக காவல் நிலையம் வரை செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதையறிந்த விஜிபி நிறுவனம் அண்ணாச்சியை மும்பை கிளைக்கு பணியிடமாற்றம் செய்கிறது.
மொழி தெரியாத மாநிலத்தில் பணிபுரிய மனமில்லாத காரணத்தால் மும்பைக்கு செல்லவில்லை. இதனால் விஜிபி நிறுவனத்திலிருந்து ராஜிநாமா செய்கிறார். அப்படி ராஜிநாமா செய்யும்போது விஜிபி நிறுவனம் குறித்து எந்தவொரு எதிர்மறை விமர்சனத்தையும் அண்ணாச்சி முன்வைக்கவில்லை.
அண்ணாச்சியின் இந்தக் குணத்தை இன்றைய தலைமுறையினர்
கற்றுக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
பிற்காலத்தில் வணிகத்தில் அண்ணச்சி உச்சம் தொட்டபோதும், விஜிபி நிறுவன உரிமையாளரைத்தான் தனது ஒரே முதலாளி என அண்ணாச்சி குறிப்பிடுவார். விஜிபி நிறுவன உரிமையாளரும் அண்ணாச்சியை இளவல் என்றே குறிப்பிடுவார்.
அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற சாலிடெர் டிவியை பட்டி தொட்டியெங்கும் பரப்பியதில் அண்ணாச்சியின் பங்கு மிகப்பெரியது. ஆனால் ஆரம்பத்தில் ஒரேயொரு சாலிடர் டிவியை அவர் சாலிடெர் ஷோரூமிலிருந்து வாங்கி தனது கடையில் வைத்து விற்ற கதையெல்லாம் பெரிய கேஸ் ஸ்டெடி அளவுக்கு செல்லும்.
விளம்பர மாடலாக நடிகர், நடிகள் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த காலத்திலும் சரி, மாடலிங் என ஒரு துறை கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும் சரி, எதன் மீதும் நம்பிக்கை கொள்ளாது, தன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து தனது முகத்தையே தனது கடையின் லோகோவாக, பிராண்டாக அறிமுகப்படுத்தினார். இந்த எளிய அணுகுமுறைதான், நடுத்தர மக்களை இவரது நிறுவனத்தை நோக்கி வரச் செய்தது.
சிறுவயதில் திருவிழாக்களில் சர்பத் விற்றுள்ளார். பலூன் வியாபாரியாக இருந்துள்ளார். பின்னாளில் சென்னை வந்தபோது விஜிபியில் பணி புரிந்தார். பின்னர் சொந்தமாக நிறுவனம் தொடங்கி சேர், டேபிள், டிவியில் ஆரம்பித்து இன்று அனைத்து வீட்டு உபயோகப் பொருள்களையும் விற்கும் மாபெரும் சாம்ராஜ்யமாக வசந்த் & கோ திகழ்கிறது.
விஜிபியில் இருந்து ராஜிநாமா செய்த பின்னர் 1978-இல் வசந்த் & கோ ஆரம்பித்ததும், முதல்முதலாக சிட்பண்ட் ஆரம்பித்தார். அதில் அவருக்கு கிடைத்த வருமானம் வெறும் 22 ரூபாய் என்றால், நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும்.
இன்று நாடெங்கும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் தனி சாம்ராஜ்யமாக விரிந்திருக்கும் வசந்த் & கோ வின் டர்ன் ஓவர் சுமார் 1000 கோடி ரூபாய் என்றால் ஆச்சரியமாக இருக்கும்.
வீட்டு உபயோகப் பொருள்களை நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு தவணை முறையில் விநியோகித்த அண்ணாச்சி அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பது பேரிழப்பாகவும் பெரும் வருத்தமாகவும் இருக்கும்.
நாணயமான வியாபாரி, தூய்மையான அரசியல்வாதி, எளியோருக்கு உதவும் தொண்டுள்ளத்துக்கு சொந்தக்காரர், அப்பழுக்கற்ற தேசியவாதி, இலக்கிய ஆர்வலர், சிறந்த பக்திமான், எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மையான மனிதர். அண்ணாச்சி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Friday, August 28, 2020

Sri Vamana Jayanti and Sri Bhuvaneswari Jayanti

*29th August 2020 Saturday* is a very special day. It is both *Sri Vamana Jayanti and Sri Bhuvaneswari Jayanti.* 

You all know the story of Vamana Avatara and we were just reminded of it so beautifully in the recent Bhagavata Saptaham. May Lord Trivikrama place His Lotus Foot on our head symbolising the elimination of our ego and give us what He thinks is best for us.

It is also the Jayanti of Bhuvaneswari Devi. The fourth of the ten Mahavidyas, Goddess Bhuvaneshwari is a nurturer. She is also known as Om Shakti or Adi Shakti. Goddess Bhuvaneshwari is the manifestation of Lord Shiva. She is the most radiant and gentle of all the Goddesses. She is a supreme Goddess who holds the moon on her forehead, creates everything and protects us from evils. Devotees who worship Goddess Bhuvaneshwari are blessed with strength, wisdom, and wealth. Bhuvaneshwari means the Goddess of the Universe. Worshipping the Goddess with devotion and dedication helps to get freedom from the fear of the cycle of birth and death and attain Salvation.

Both the auspicious events can be celebrated in any way that suits you like puja or Vishnu Sahasranamam and Lalitha Sahasranama parayanam and so on.

Sri Sankara TV is telecasting the Vamana Jayanti puja live from Sringeri starting at 9pm on Saturday.

Abhyasa Varga to enhance speaking in Sanskrit

Namaste

TOPIC :  *Abhyasa Varga:*

This is a language enhancement course, where methods to practice Samskrita Sambhashanam is the objective.

*ELIGIBILITY:*

 Those who have attended online sambhasna varga : / sambhashana shibiram (level 1) can attend this level 2 class.

Starting date:

*1st September 2020,  Tuesday*

Requirement:

*All 8 days attendance without fail*
Location- *Zoom*

*Class details:*

*Three batches* are arranged. Please *choose one or more* according to your convenience.

Batch 1 :
*10:30 AM - 12:30 PM (UAE time)*
*12:00 PM - 2:00 PM (IST)*

Batch 2:
*2:30 PM - 4:30 PM (UAE time)*
*4:00 PM - 6:00 PM (IST)*

Batch 3 :
*6:00 PM - 8:00 PM (UAE time)*
*7:30 PM -  9:30 PM (IST)*

 Request those who are ready to attend to *please click on the  google link to  register yourself.*

*Please enter a correct Email ID as further communication is through email only*


Class details will be informed to all registered participants by email *previous evening*. 

For any queries, please email to  sbsamskritavarga@gmail.com

Dhanyavada:

Jayatu Samskritam Jayatu Bharatam

Ganesh Gita

नमश्शिवाय। 🙏🏼 सर्वेभ्यः।

On this auspicious occasion, Interested people can please go through the following immortal verses from (teachings of gajānana) *श्रीमद्गणेशगीता*


*अहमेव महाविष्णुरहमेव सदाशिवः।*
*अहमेव महाशक्तिरहमेवार्यमा* प्रिय॥ २३

अहमेको नृणां नाथो जातः पञ्चविधः पुरा।
*अज्ञानान्मा न जानन्ति जगत्कारणकारणम्॥* २४

शिवे विष्णौ च शक्तौ च सूर्ये *मयि नराधिप।*
याऽभेदबुद्धिर्योगः स सम्यग्योगो मतो मम॥ २१ 

अहमेव परं ब्रह्माव्ययानन्दात्मकं नृप।
मोहयत्यखिलान्माया श्रेष्ठान्मम नरानमून्॥ २९

The above verses are from 1st chapter it's (सांख्ययोगा) 

अहमेव परो ब्रह्म महारुद्रोऽहमेव च ।
अहमेव जगत्सर्वं स्थावरं जङ्गमं च यत्॥ ८ (from 3rd chapter) विज्ञानप्रतिपादनयोगः (vijñānapratipādanayogaḥ)

यं यं देवं स्मरन्भक्त्या त्यजति स्वं कलेवरम् ।
तत्तत्सालोक्यमायाति तत्तद्भक्त्या नराधिप ॥ १७ (बुद्धियोगः 6th chapter) 

Same like Bg verses right! The vedānta is always the same! 💪🏼😎

अव्यक्तं व्यक्तिमापन्नं न विदुः काममोहिताः।
नाहं प्रकाशतां यामि अज्ञानां पापकर्मणाम्॥ १५ (6th chapter) 

अनन्यशरणो यो मां भक्त्या भजति भूमिप।
योगक्षेमौ च तस्याहं सर्वदा प्रतिपादये॥ २० (6th chapter) 

अहमेवाखिलं विश्वं सृजामि विसृजामि च।
औषधीस्तेजसा सर्वा विश्वं चाप्याययाम्यहम्॥ ३७

*क्षेत्रज्ञातृज्ञेयविवेकयोगः* 9th chapter.
..................................................................

न यज्ञैर्न व्रतैर्दानैर्नाग्निहोत्रैर्महाधनैः।
न वेदैः सम्यगभ्यस्तैः सहाङ्गकैः॥४३

त्रिविधवस्तुविवेकनिरूपणम् 

Last chapter (11th)

*BTW 8th chapter is विश्वरूप्रदर्शनयोगः।*

Some verses from *श्रीमद्गणेशगीता।* (श्रीमद्गणेशपुराणम्) 

*gajānana vareṇya samvādaḥ iti!* 👆🏼

short term course on Indian Epistemoloy i.e pramana shastra.

Good morning to everyone. We have invited applications for a short term course on Indian Epistemoloy i.e pramana shastra.  Candidates interested in knowing pramanas, but not able to spend two years or 3 years for that will be benefitted very much with this course.  This is a short term course only for three months with two hrs class in a week. No external exam for this course. Only continious assesment will be done. All the content related to pramanas such as their definitions classifications and difference of opinion in different darshanas  willl be taught in a lucid way with not stressing much on textual reading. Instead of that we will go by content. The main course instuctor will be me and i will be assisted by my Dept. staff. Anyone interested can log in to our website www.ksu.ac.in and fill the online application form. This message can be forwarded to your friend's circle.

Printing the upanyasam-periyavaa

*"என்னோட பேச்சை… எடிட் பண்ணு!"* - பெரியவா.

1964-ல் காஞ்சியில் சில்ப சாஸ்த்ரம், புராதனக் கலைகளின் ஸதஸ் மிகக் கோலாஹலமாக நடந்தது. மாநாட்டை ஆரம்பித்து வைத்த மைஸூர் மஹாராஜா ஸ்ரீ ஜெயஸாமராஜ உடையார்,(சென்னை மாகாணத்தின் கவர்னர் ஆக 1964 முதல் 1966 வரை இருந்தார்) அருமையான உரையாற்றினார். பெரியவாளும், ஸதஸின் நோக்கத்தையும், புராதன கலைகளின் மேன்மைகளையும் பற்றி விரிவான உபன்யாஸம் செய்தார். காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

மறுநாள் காலை… பெரியவா திரு பரணீதரனை அழைத்தார் …

"நேத்திக்கி மஹாராஜாவோட speech-ஐ கேட்டியா?.."

"கேட்டேன்…"

"அதுல… prepared text-டா இல்லாம, புதுஸ்ஸா நாலு வரி சேத்து பேசினாரே! அதக் கேட்டியோ?.."

"கவனிக்கல…"

"ரெண்டு, மூணு பேரைக் கேட்டுப் பாத்துட்டேன். ஒத்தருமே கவனிக்கலேன்னுட்டா..! ஒண்ணு பண்ணு! கைல printed speech-ஐ வெச்சிண்டு, tape recorder-ஐ போட்டுக் கேளு. ரெண்டையும் compare பண்ணி, அந்த நாலு வரி… என்னன்னு கண்டுபிடி. இப்போவே போ! கேட்டுட்டு வந்து எனக்கு சொல்லு…."

பரணீதரனும் பகல் பன்னண்டு மணி வரைக்கும் அந்த டேப்பை கேட்டு, பெரியவா கேட்ட அந்த extempore வரிகளை கண்டுபிடித்துக் குடுத்தார். மத்யான்ன பூஜை முடிந்ததும், அந்த extempore வரிகளை முக்யமான நாலு பேருக்கு படித்துக் காட்டச் சொன்னார்.

பரணீதரன், நமஸ்காரம் பண்ணிவிட்டு கிளம்பத் தயாரானார்….

"இங்க வா!…நீ… எனக்கு இன்னொண்ணு பண்ணணுமே…"

"சொல்லுங்கோ பெரியவா….."

"நேத்திக்கி….நா… வளவளன்னு ரொம்ப நா…ழி பேசிட்டேன். நீ முழுக்கக் கேட்டியோ?.."

"கேட்டேன்…."

"அதை ப்ரிண்ட் பண்ணி, கடஸீ நாள்ள… விநியோகம் பண்ணணுமாம்…அப்டியே போட்டா, ரொம்ப பெருஸ்ஸா இருக்கும்….சொன்னதையே சொல்லிருப்பேன்…சொல்ல வேண்டியதுக்கு மேல, கொஞ்சம் அதிகப்படியாவே சொல்லிருப்பேன்…நீ, அதை edit பண்ணிக் குடு! ப்ரிண்ட் பண்ண ஸௌகர்யமாயிருக்கும்…"

பரணீதரன் ப்ரமித்தார்!

"பெரியவா ரொம்ப சுளுவா சொல்லிட்டார். அவரோட உபன்யாஸத்தை, நா… எடிட் செய்யறதா!…."

அவர் எண்ணத்தை அறியாதவரா?

"என்ன? எப்டி பண்றதுன்னு ப்ரமிப்பா இருக்கோ? டேப் ரெக்கார்டுல போட்டுக் கேளு…..ஒனக்கு முக்யமா படறதெல்லாம் எழுதிண்டே வா.. repetition வந்தா விட்டுடு. மொத்த ஸ்பீச்சையும் மூணுல ஒரு பங்கா கொறைச்சுடு.! போ! பண்ணிண்டு வா!…"

அருகிலிருந்த மற்றொரு கார்யஸ்தரை அழைத்து  உத்தரவிட்டார்

"அவனுக்கு.. நிம்மதியா ஒக்காந்து எழுதறதுக்கான அத்தன கார்யத்தையும் பண்ணிடு…"

ஸதஸ்ஸுக்காக வந்த அன்று, 'தங்கறதுக்கு, ஏதாவுது எடம் கிடைக்குமா?' என்று கேட்டபோது "அதெல்லாம் முடியாது….all booked..!" என்று முகத்தை திருப்பிக் கொண்டு நிர்தாக்ஷிண்யமாக மறுத்த ஒருவர், "பெரியவா உத்தரவு" என்றதும், ஒரு வீட்டு மாடியில் தனியாக ரூம் ஒன்றை ஒழித்துக் குடுத்து, "ஸார்…இங்க.. ஒங்கள யாரும் வந்து தொந்தரவு பண்ணமாட்டா..! பெரியவா குடுத்த work முடிஞ்சதுக்கப்றம்கூட, நீங்க இங்கியே தங்கிக்கலாம்" என்று பரிவோடு கூறினார்.

நண்பர்கள் இருவர், கூட வந்து ஒத்தாஸை செய்ய, பக்கம் பக்கமாக எழுது எழுது என்று எழுதிக் கொண்டேயிருந்தார்.

இரண்டு நாட்கள் உண்மையாகவே "இரவும் பகலும்" பெரியவாளுடைய மதுரமான குரலில் உபன்யாஸம் கேட்பது, எழுதுவது….மட்டுந்தான்!

இப்போதுள்ளது போல் வஸதிகள் எதுவுமே இல்லாத அந்தக் காலத்தில், ஸ்ரீ பரணீதரன், ஸ்ரீ ரா.கணபதி இவர்கள் எல்லாம் எத்தனை கஷ்டப்பட்டு நமக்காக இவ்வளவு "அருள் ரத்னங்களை" வாரி வாரிக் குடுத்திருக்கிறார்கள்! கோடி கோடி நமஸ்காரங்கள்.

ஸரியாக ரெகார்ட் ஆகாத இடங்களில், என்ன வார்த்தை என்று கண்டுபிடிக்க முடியாத போது, மூணு பேரும் குழம்பிப் போவார்கள்.

முதுகு வலிக்கும், தலை வலிக்கும்…..கொஞ்சம் படுத்துக் கொள்வார்.

முதல் நாள் மடத்திலிருந்து ஒருவர் வந்து எட்டிப் பார்த்தார்.

"என்ன?.."

"எழுதிண்டிருக்கேளா..ன்னு பெரியவா பாத்துட்டு வரச்சொன்னா…" என்றதும், உடனே வாரிச் சுருட்டி எழுந்து கொண்டு, எழுத ஆரம்பிப்பார். ஸாப்பாடெல்லாம் ரூமுக்கே வந்துவிடும். ஸதஸ் நடக்கும் பக்கமே போகவில்லை. இதுவும் பெரியவா கார்யந்தானே!

ஒருவழியாக மொத்த உபன்யாஸத்தையும், பத்து full sheet-ல் சுருக்கி!! எழுதியாகிவிட்டது.

மூன்றாவது நாள், அடிக்கொருதரம் யாராவது வந்து, "எது வரைக்கும் முடிஞ்சிருக்கு?" என்று பெரியவா கேட்டதாக வந்து கொண்டேயிருந்தார்கள். அந்த படபடப்பும் சேர்ந்து கொண்டது.

கடைஸியாக ஒருவர் வந்து, "எழுதினதை எடுத்துண்டு பெரியவா ஒங்கள மடத்துக்கு ஒடனே வரச் சொல்றா…" என்றதும்,

'இன்னும் முடியல….ஜஸ்ட் பத்து நிமிஷத்ல ஆய்டும்…நீங்க போங்கோ…நா…கொண்டு வந்துடறேன்…"

"அதெல்லாம் முடியாது…ப்ரிண்ட் பண்ணப் போறவா, ரொம்ப நேரமா காத்துண்டிருக்காளாம்…எழுதினவரைக்கும் போறும்னு சொல்லி, கையோட ஒங்கள அழைச்சிண்டு வரச்சொல்லி உத்தரவு….பொறப்படுங்கோ !…"

ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னால் யாரோ இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். பரணீதரன் வந்ததும், பெரியவா லேஸான புன்னகையுடன் கூறினார்…..

"ஒருவழியா முடிச்சுட்டியா?…அத… இவா கைல குடுத்துடு….! நீ… வரதுக்காகத்தான் காத்துண்டிருக்கா" 

"பெரியவாட்ட…. ஒரு தரம் படிச்சு காட்டிடறேனே…"

"வேண்டாம்……வேண்டாம்..நாழியாறது…! அவாட்ட அதக் குடு"

"ஸெரியா வந்திருக்கான்னு தெரியல..! நா.. ஒருதரங்கூட படிச்சுப் பாக்கல…! இப்டியே ப்ரிண்ட் பண்ணிட்டு, அப்றம் தப்பு இருந்துதுன்னா?…"

"எல்லாம் ஸெரியாயிருக்கும்…குடுத்துடு"

[அப்பா! என்ன ஒரு கம்பீரம்? command !]

"வேகமா படிச்சுடறேனே…பெரியவா"

"முழுக்க படிக்க வேணாம்….ஒன்னோட ஆசைக்கு வேணா, எதாவுது ஒரு பக்கத்தைப் பொரட்டிப் படி!…"

சிரித்தார்.

[இப்போதும் 'தெய்வத்தின் குரல்" எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் நம்முடன் பேசும். நம்மை ஆத்திக் குடுக்கும்; அதட்டும்; அடம் பிடிக்கும்; ஆனந்தமாக வைக்கும்; மொத்தத்தில் நம்முடைய அத்தனை பாரத்தையும் அதுவே ஏற்றுக் கொண்டு, நம்மை வழி நடத்தும் என்பது என் அனுபவத்தில் ஸத்யமோ ஸத்யம்]

படித்ததும், ஏதோ ஒன்றை சொல்லி, திருத்தச் சொன்னார்.

"இன்னொரு page-ஐ படி..."

அதில் ஒரே ஒரு correction பண்ணினார்.

"இந்த ரெண்டு சின்னத் தப்புதான்….மத்ததெல்லாம் ஸெரியா இருக்கும்…அப்டியே குடுத்துடு…! அவாளுக்கு போணும்…! நாழியாறது..!"

எழுதியவரும், எழுத வைத்தவரும், எழுத்தும் அவர்தானே!

பரணீதரன், எல்லா பேப்பரையும் அவர்களிடம் குடுத்தார்

"ஒனக்கு….இவா யாருன்னு தெரியுமோ?…"

"தெரியல….பெரியவா"

"இவர்.. 'Indian Express' ராம்நாத் கோயங்கா……இவர்.. 'கலைமகள்' ராமரத்னம்… என் ஸ்பீச்சோட சுருக்கத்தை நாளன்னிக்கி ஸதஸ்ல distribute பண்றதுக்காக, இவாதான் ப்ரிண்ட் பண்ணிக் குடுக்கப் போறா!..."

பணிவுடன் ஒருவரையொருவர் வணக்கம் செலுத்திக் கொண்டு, பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு சென்றனர்.

ராஜராஜேஸ்வரி லலிதாம்பிகையின் ஸன்னதியில், ஶ்ரீதேவியும், ஸரஸ்வதியும் அம்பாளின் கட்டளைக்கு காத்திருப்பது போல் இருந்தது.

Vivadi swaras in carnatic music

Aadi Friday pooja

ஆடி ஸ்பெஷல்

ஆடி வெள்ளி_பூஜை

ஆடி வெள்ளிக்கிழமைகளில் அரச மரத்தடி அம்மன் நாகர் விக்கிரகங்களுக்குப் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். அரச மரத்தடி பூஜை அனைத்தையுமே காலை எட்டு மணிக்குள் செய்துவிட வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில்தான் மகாவிஷ்ணுவும் மகாலஷ்மியும் 
அரச_மரத்தில்_குடி கொண்டிருப்பார்கள் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மனுக்கு இனிப்புப் பண்டம் செய்து நிவேதிக்க வேண்டும். முதல் வெள்ளியன்று நல்ல பாகு வெல்லம், தேங்காய் சேர்த்த இனிப்புக் கொழுக்கட்டை குறைந்தபட்சம் பன்னிரெண்டாவது செய்ய வேண்டும். இரண்டாவது வெள்ளியன்று சர்க்கரைப் பொங்கல்... மூன்றாம் வெள்ளியன்று கேசரி செய்யலாம். நான்காம் வெள்ளியன்று பருப்புப் பாயசம் செய்ய வேண்டும். கொழுக்கட்டை தவிர அனைத்து இனிப்புகளிலும் நிறைய முந்திரி, திராட்சையை வறுத்துப் போட வேண்டும்.

செளந்தர்ய லஹரி, லலிதா சகஸ்ரநாமம், சூக்தம், பூ சூக்தம், நீளா சூக்தம், இந்திரன் கூறிய மகாலஷ்மி அஷ்டகம், ஆதிசங்கரர் அருளிய மகாலஷ்மி ஸ்தோத்திரம் ஆகியவற்றில் இயன்றதை இல்லத்தாரே சொல்லலாம். மேலும் இதனைச் சொல்ல வல்லாரைக் கொண்டு இல்லத்தில் பாராயணம் செய்யலாம்.

பூஜைக்குத்_தயாராகும்_முறை

ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளிக் கிழமைகளில் விடியற்காலையில் எழுந்து, தலைக்கு ஸ்நானம் செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு, செம்மண் இட வேண்டும்.

இல்லத்தில் பெண் குழந்தைகள் இருந்தால் எண்ணெய், சீயக்காய் தேய்த்து நன்கு ஸ்நானம் செய்விக்க வேண்டும். பின்னர் அழகிய தூய ஆடை உடுத்தச் செய்து, நன்கு உலர்ந்த பின் பின்னலிட்டு, பூச்சூட்டி, பொட்டிட வேண்டும்.

இதே போல் வீட்டில் உள்ள குத்து விளக்கை நன்கு துலக்கி, சந்தனம், குங்குமம் இட்டு, பூச்செருக வேண்டும். பின்னர் நெய்யிட்டு தீபம் ஏற்றவேண்டும். தீபம் முத்துப் போல் பிரகாசிக்க வேண்டும். இவள் தீபலஷ்மி. இவளது பாதங்களில் புஷ்பம் இட்டு ஆராதிக்க வேண்டும்..

தற்போது_இல்லம் தயார், இல்லத்தார் தயார்_தாயார்_தயார் என்ற நிலையில் ஸ்லோகங்கள் சொல்லி, நிவேதனம்_செய்ய_வேண்டும்.

பிரசாத_விநியோக_முறை

பிரசாதத்தை முதலில் இல்லத்தில் உள்ள பெண் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். பின்னர் ஆண் குழந்தைகளுக்கும், ஆண்களுக்கும் கொடுத்துவிட்டு இல்லத்தரசி உண்ணலாம்.

அதி முக்கியமாக அம்மன் ஆராதனைகளில் பிரசாத விநியோகம் பிரதானம். இல்லத்தில் வேலை செய்பவர்களுக்கு இப்பிரசாதங்களை நிறையக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள வெல்லம், தேங்காய், முந்திரி, திராட்சை போன்றவற்றை உண்டால் அவர்களும் மேலும் ஆரோக்கியமாக இருப்பார்கள். இந்து தர்மத்தின் முக்கியக் குறிக்கோள் `லோகா சமஸ்தா சுகினோ பவந்து' என்பதுதான். உலகிலுள்ளோர் அனைவரும் நன்கு வாழ வேண்டும் என்பதே இதன் பொருள்.

புஷ்பங்களால் அன்னையை ஆராதித்து அளவில்லா ஆனந்தம் பெற ஆடி அரிய தருணம்.

அம்பிகையின் திருவடிகளில் சரணம் !