Wednesday, July 29, 2020

Prasadam without curry leaves

கறிவேப்பிலைஇல்லாதபிரசாதம்.

நாம் கறிவேப்பிலையை சர்வ சாதாரணமாக சாப்பாட்டிலிருந்து எடுத்து தனியே வைத்து விடுகிறோம். ஆனால் இந்த கறிவேப்பிலைதான் ஏழுமலையானையும், பத்மாவதி தாயாரையும் தனித்தனியாக திருமலையிலும், திருச்சானூரிலும் பிரித்து வைத்துள்ளது என்று சொன்னால் நம்ப முடியவில்லை அல்லவா?

ஆகாச ராஜன் தன் மகளான பத்மாவதி தாயாரை ஏழுமலையானுக்கு திருமணம் செய்து கொடுத்தான்.இந்த திருமண நிகழ்ச்சி சித்தூர் மாவட்டம் நாராயணவனத்தில் முக்கோடி தேவர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் திருமாலும் பத்மாவதி தாயாரும் திருமலை நோக்கிச் சென்றனர். அங்கு ஸ்ரீனிவாச மங்காபுரம் என்னும் ஊரில் கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் சிறிது காலம் தங்கினார்.

இந்த நிலையில் பத்மாவதி தாயார் தனது தாய் வீட்டு சீதனத்தில் உலகில் உள்ள அனைத்து பொருட்களும் பெருமாளுக்கு கொடுத்து உள்ளதாகவும், ஏதேனும் குறைகள் இருந்தால் கூறும்படியாகவும் திருமாலிடம் வேண்டினார். இதற்கு திருமால் கறிவேப்பிலை தவிர அனைத்து பொருட்களும் சீதனமாக வந்திருப்பதாகக் கூறினார்.

இதனால் பத்மாவதி தனது தாய் வீட்டிற்கு சென்று கறிவேப்பிலை எடுத்து வருவதாக திருமாலிடம் தெரிவித்தார். அதற்கு திருமால் சூரிய உதயத்திற்கு முன் திரும்பி வருமாறும் இல்லையேல் தான் தனியாக திருமலை சென்று விடுவதாகவும் கூறினார்.

தாய் வீட்டிற்குச் சென்ற பத்மாவதித்தாயார் கருவேப்பிலை எடுத்து வருமுன் சூரிய உதயம் தொடங்கிவிட்டது.

சூரிய உதயத்தைக் கண்ட பத்மாவதி தாயார் திருச்சானூர் அருகே தனியேநின்று விட்டார். பத்மாவதி சூரிய உதயத்திற்குள் வராததால் ஸ்ரீனிவாசனும் தன்னந்தனியே திருமலைக்குச் சென்று தங்கி விட்டார். இதன் காரணமாக இன்றுவரை ஏழுமலையானின் நைவேத்தியத்தில் கறிவேப்பிலை சேர்ப்பதில்லை.
#ஓம்நமோவெங்கடேசா

No comments:

Post a Comment