Tuesday, May 19, 2020

Free upanayanam by Veda bharati

வேதபாரதியில் அங்கம் வகிக்கும் அன்புக்குரிய சகோதரர்களுக்கு ஆசிகள்.
*நம் வேதபாரதி சார்பாக வருடந்தோறும் உபநயனம் ஆன அந்தனச் சிறுவர்கள், பெரியவர்களுக்கு சந்த்யாவந்தன முகாம் நடத்துவது வழக்கம்*. அம்முகாமில் சந்த்யாவந்தன பயிற்சி , யோகா, ஸ்லோகங்கள், பக்தி பாடல்கள், நல்லொழுக்கம் குறித்தெல்லாம் வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு சாகைக்கும் தனித்தனி ஆச்சார்யர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப் படும். முகாமில் பங்கு கொள்ளும் சிறுவர்கள், பெரியவர்கள், வாத்யார்கள் அனைவரும் ஒரே இடத்திலேயே தங்க
 வைக்கப் பட்டு வகுப்புகள் நடத்துவது வழக்கம்.
*இவ்வருட முகாம் புதுச்சேரியில் வரும் மே மாதம் 1,2,3 தேதிகளில் நடத்த திட்ட மிட்டு அதற்கான ஏற்பாடுகளை* *வேதபாரதி சார்பாக செய்து வந்தோம்.* *எதிர்பாராத வகையில் கொரொனா வைரஸ் தாக்குதல் காரணமாக முகாமில் பங்கு கொள்வோர்,  அவரவர்* *இருப்பிடத்திலிருந்து புதுச்சேரி வருவதற்கு முடியாத காரணத்தால்,*
*இவ்வருட சந்த்யாவந்தன முகாம் நடத்தும் முறையில் மாற்றம் செய்துள்ளோம்.*
*அதன்படி  அனைவரும் அவரவர் இல்லத்தில் இருந்த படியே முகாமில் பங்கு கொள்ளலாம். அந்தந்த சாகைக்குரிய வாத்யார் மூலம் அவர்களுக்கான வகுப்பு நடத்தப் படும்.*
*ஏப்ரல் 30ந் தேதி துவங்கி மே மாதம் 1,2,3 தேதி வரை வகுப்புகள் காணொலி காட்சி ( Video conference) மூலம் நடைபெறும்.* முகாமில் பங்கு கொள்ள ஏற்கனவே பதிவு செய்தவர்கள், புதிதாக பதிவு செய்து விரும்புவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ளவும்.
அவர்களுக்கு வகுப்பு குறித்த தகவல்கள் அனுப்ப படும்.
எனவே முகாமில் பங்கு கொள்ள விரும்பும் உபநயனம் ஆன அந்தனச் சிறுவர்கள், பெரியவர்கள் இணைக்கப் பட்டுள்ள Google Form link ல் விபரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் அல்லது கீழே உள்ள ஏதேனும் ஒரு அலைபேசி எண்ணில் பதிவு செய்து கொள்ளவும்.

7397546333
9842607476
9443284439
9443495950
9994923537
9445102193 (voice only)

நன்றி வணக்கம்.

இங்ஙனம்
மாநிலச் செயலாளர்
வேதபாரதி, தமிழ்நாடு.

No comments:

Post a Comment